Monday 23 November 2015

சென்னையில் அடைமழை - கவிதை

கூடையில் குழந்தையோடு
குறுக்கே ஒருவன் சென்றான்
கூடவே குடைபிடித்தவர்க்கே
குளித்தே சேடனும் சென்றான்
பாடவோ புலவர் இல்லை
பார்த்திட்ட மாந்தரெல்லாம்
கார்மழை நனைந்து நொந்தர்
கண்ணனை கண்டிலர், பாவம்!

கவிதைகள்


Sunday 15 November 2015

சீன பொருளாதார சீர்திருத்தம் – வழிகாட்டிய ஜப்பான்

டேனியல் யெர்கினும் ஜோசஃப் ஸ்டானிஸ்லாவும் எழுதிய The Commanding Heights எனும் நூலிலிருந்து இன்னுமோர் பகுதி. இதில், சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் மாவோ சேதுங்கின் ஆட்சிக்குப்பின், அதிபரான டெங்க் சாவோபிங்கின் ஆட்சியில், மாவோயிச பொது உடைமை கொள்கைகளை அவர் தகர்த்து மூலதன பொருளியல் கொள்கைகளை வரவேற்று நடத்திய சீர்திருத்தங்களை விவரிக்கிறார்கள்.

-----நூல் பகுதி ஆரம்பம்----

மாவோ அமல்செய்த பொது உடைமையின் விளைவுகள் ஏமாற்றம் தந்தன. அவரது முப்பது ஆண்டு ஆட்சியின் இறுதியில், சீன பொருளாதாரம் வளரவில்லை. சில இடங்களில் தேய்ந்தது.

மாவோ இறந்த பின், 1978ஆம் ஆண்டில் நாடே வரட்சியில் வாடியது. வற்றிப்போன மண்ணை ஏராலும் டிராக்டராலும் உழ முடியவில்லை. பஞ்சம் நாட்டை வாட்டியது. வயிற்றுப்போக்கு, என்சிஃபலாட்டீஸ், ஹெபடைடிஸ் என்று பல நோய்கள பறவி மக்களை வாட்டின. லட்ச கணக்கிள் பஞ்சம் பிழைக்க மக்கள் நாடோடி நகரம் தேடி அலைந்தனர். ஷாங்காய் நகரத்திற்குள் இந்த லட்சங்கள் வரமல் தடுக்க படைகள் திரண்டன. பஞ்சத்தின் காட்சிகளை படத்தில் பார்த்து, ஆளும் கட்சியின் செயற்குழு கண்ணீர் விட்டு கதரி அழுதனர்.

மிகக்கடுமையாக உழைத்து உழுதாலே பயிர் வளரும் நிலமை. தம் உழைப்பில் தலைவர்கள் வாழ்ந்து லாபம் பெறுவதை சீன உழவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கு லாபமின்றி உழைக்க மறுத்தனர். பழைய வழிமுறைகள் வேண்டும் என்று கோரினர். பொது உடைமையும் மாவோயிசமும் சட்டமானதற்கு முன், சீன தேசத்தில் நிலவிய வழிமுறைக்கு “குடும்ப பொறுப்பு” முறை என்று பெயர். அதன் படி விளைச்சலில் ஒரு பகுதியை அவர்களே வைத்துக்கொள்ளலாம், விற்று லாபம் பெரலாம். பஞ்சத்தின் கடுமையால் அரசு அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர். ஆயினும், தமக்கு ஏதாவது நிகழ்ந்தால் தம் பிள்ளைகளை மற்றவர் பேணி வளர்க்க சபதம் எடுக்கவேண்டும் என்று பல உழவர்கள் வலியுறுத்தினர். அவ்வாறே ஊர்கட்டுப்பாடாக உழவர் சமூகங்கள் சபதம் செய்தன.

[கோபுவின் வரலாற்று குறிப்பு ஏன் இந்த பயம்? 1960களில் மாவோ தற்காலிகமாக சர்வாதிகாரத்தை தளர்த்தி ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சுதந்திர சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தார். சில மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் மனதில் உறுதி கொண்டு மார்க்ஸிஸத்திற்கும் மாவோயிஸத்திற்கும் மாற்றுக்கருத்துக்களை சொன்னார்கள். டெங்க் சாவோபிங் போன்ற கட்சி தளபதிகளும் இக்கருத்துக்களை உரைத்தனர். தன் சர்வாதிகாரத்திற்கு ஆபத்தை உணர்ந்த மாவோ, அவர்கள் அனைவரையும் புரட்சிக்கு துரோகிகள் என்று பழித்து, மாணவர்களிடம் பெரும் கிளர்ச்சியூட்டி, பெற்றோரை முதியோரையும் தாக்கும் வெறிச்செயலை தூண்டினார். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆசிரியர்களும் எழுத்தாளரும் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு பயிற்சியே இல்லாத உழவு மற்றும் பட்டரை வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இதை கலாச்சார புரட்சி என்று பெயரிட்டார் மாவோ. அந்த கசப்பான நினைவுகள் பல உழவர்களின் நினைவில் இருந்தது. இந்த அரசு தளர்த்தலும் அது போலாகிவிடுமா என்ற அச்சம் உழவர்களை வதைத்தது.]

நிற்க. சபதம் செய்த உழவர், தம் கடும் உழைப்பில் பஞ்சத்தை ஓரளவு தவிர்த்தனர். மாவோயிசத்தை நீக்கி, குடும்ப பொறுப்பு முறை சீனமெங்கும் அமலுக்கு வந்தது. முப்பது ஆண்டுகளில் மாவோயிசத்தில் வளர்ச்சி பெறாத வேளான்மை, குடும்ப பொறுப்பு முறையில், பதினாறு ஆண்டுகளில் ஐம்பது சதவிகித வளர்ச்சி கண்டது.
[ இந்தியாவில் இதற்குமுன் பசுமை புரட்சி பரவியது. சீனாவில் பசுமை புரட்சியின் தாக்கத்தை பற்றி நூலாசிரியர்கள் ஏதும் குறிப்பிடவில்லை ]

தாம் வளர்த்த பயிரை தாமே விற்கலாம் என்ற உரிமை கிடைத்தபின், அதாவது, சந்தை பொருளாதாரம் மீண்டும் அறிமுகமான பின், வணிகத்தின் பல தரவுகள் தானாக உருவாகின. உழவர்கள தாமாக மற்ற பணிகளை தொடங்கினர். வீடுகட்டுவதும், பழுது பார்ப்பதும், காய்கனி பயிரை சந்தைக்கு எடுத்துசெல்வதும், வேலைக்கு ஆள் சேர்ப்பதும் சகஜமாயின. 1978இல் விளைச்சலில் எட்டு சதவிகிதமே சந்தைகளில் விற்கப்பட்டன. 1990இல் இது எண்பது சதவிகிதமாக கூடின.

(1978இல்) ஜப்பானின் வளர்ச்சியை காணவும் அங்குள்ள திட்டங்களை புரிந்துகொள்ளவும் சில சீன பொருளியல் பண்டிதர்கள் சென்று, அந்நாட்டின் வளர்ச்சியும் செல்வமும் கண்டு அதிர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பரப்பு குழுத்தலைவர் குறித்துக்கொண்ட புள்ளிவிவரங்கள் - இரண்டில் ஒரு வீட்டில் கார் இருந்தது. 95% மேல் வீடுகளில் தொலைகாட்சி, ஃப்ரிட்ஜ், துணிதோய்க்கும் விசை இருந்தன. மக்கள ஆடைகளை கண்டே அசந்து போனார்; எத்தனை வகை ஆடைகள், எவ்வளவு சுத்தமாக இருந்தன! “நாம் பார்த்த பெண்களில் ஒருவரை போல் இன்னொருவரின் ஆடை இல்லை,” என்று எழுதினார். அதைவிட பெரிய அதிசயம் : “பெண்கள் தினமும் ஆடைகளை மாற்றிக்கொள்கின்றனர்”

-------நூல் பகுதி முற்றும்-------

கோபுவின் குறிப்பு

மாவோவின் சீனாவில், வெளிநாட்டு சினிமா, பத்திரிகை, தொலைகாட்சி எல்லாம் தடைப்பட்டிருந்தன. பாரதத்தில் நாம் ஹாலிவுட் சிங்கப்பூர் ஹாங்காங் படங்களை திரையரங்குகளில் பார்த்துவந்தோம். ஆனால் 1984இல் ராஜீவ காந்தி பிரதமர் ஆகும் வரை, “ஜனநாயகமான” இந்திய அரசுகள் தொலைகாட்சிகளை தடை செய்துவந்தன. சென்னை, கல்கட்டா, பம்பாய், தில்லி, நான்கு மாநகரங்களில் மட்டுமே கருப்பு வெள்ளை தொலைகாட்சி இருந்தது. 1960களில் அமெரிக்காவில் வந்த கலர் டிவியை, 1980களில் அனுமதித்து ராஜீவ் காந்தியின் நிதி அமைச்சர் விபி சிங் வானொலிக்கும் தொலைகாட்சிக்கும் அதுவரை கட்டாயமான லைசன்ஸை ரத்து செய்தார். நம்மால் அன்னாட்டு செல்வத்தை சினிமாவிலும் டிவியிலும் பார்க்க முடிந்தது. ஆனால் அவை பணக்கார நாடு இந்தியா ஏழை நாடு என்ற பிரச்சாரம் ஓயவேயில்லை.

இன்றைய யதார்த்த தேவைகளாக நினைக்கும் கேமரா, டேப் ரிக்கார்டர், ஃப்ரிட்ஜ், ஷேவிங் க்ரீம் போன்ற பொருள்களை வாங்க, அந்நாட்களில் அதிகம் வரிகளால் அதிக விலை கொடுத்தோ, இல்லை கடத்தல்காரர்களின் வணிகத்தையோ வள்ளல்குணத்தையோ நம்பி வாங்கவேண்டும்.

ஆனால் ஜனநாயக நாடாக இருந்ததால், மாவோவின் மாபெருந்தாவல், கலாச்சார புரட்சி போன்ற கொடுங்கோல் தீவினைகளில் நாம் சிக்கவில்லை. ஆடையும் தூய்மையும் நடுத்தரவர்கத்தினருக்கோ பல ஏழைகளுக்கோ கூட பெரும் பிரச்சனையில்லை. நேரு-இந்திரா முப்பத்தைந்து ஆண்டுகளில் சுமாரான ஆடைகளை வாங்கி வாழ்ந்து வந்தோம்.


The English version of this essay is here - Deng Xiaoping and Japan

தொடர்புடைய பதிவுகள்

Wednesday 11 November 2015

செல்வம் உடல்நலம் சுகாதாரம் அன்பு அமைதி சமத்துவம் பெருகி

மேட் ரிட்லி (Matt Ridley) மூன்று உயிரியல் நூல்களும் ஒரு பொருளியல் நூலும் எழுதியுள்ளார். (நான்கையும் படித்துள்ளேன்). சமீபத்தில் இரு துறைகளையும் கலந்து எல்லாவற்றின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு நூல் எழுதியுள்ளார் (இதை நான் இன்னும் படிக்கவில்லை). இவர் லண்டன் எக்கானமிஸ்ட் பத்திரிகையின் முன்னார் அறிவியல் பகுதி ஆசிரியர். இங்கிலாந்தின் துரைமார்களில் ஒருவர், ராஜசபை (House of Lords) அங்கத்தினர். இவர் நிர்வகித்த ஆர்.பி.எஸ் வங்கி 2008 பொருளாதார சரிவில் திவாலானது. நிலக்கரி சுரங்க அதிபர், வயல்களும் வைத்துள்ளார். பிரபல அமெரிக்க ஆங்கிலேய நாளிதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார், இவற்றை நான் அவரது வலை தளத்தில் படித்து வருகிறேன்.

[Rational Optimist என்பதை தமிழில் “பகுத்தறிவு உகமையர்” என்று எழுதவேண்டும். ஐயோ! ஸ்டாலினிஸ்ட், மார்க்ஸிஸ்ட் போல ரிட்லியிஸ்ட், சைமனிஸ்ட் என்று எதோ பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும் போல]

நவம்பர் ஆறாம் தேதி, கனடா தேசத்து மங்க் பல்கலைகழக்கத்தில் மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றி ஒரு விவாதத்தில் இவர் பேசியதன் கட்டுரை வடிவத்தை தன் வலைதளத்தில் ஏற்றியுள்ளார். அதை நான் தமிழாக்கி கீழே தந்துள்ளேன்.

------------------------
அமெரிக்க சினிமா நடிகர் இயக்குனர் உடி ஆலன் ஒரு முறை சொன்னார், “மனிதக்குலம் போக இரண்டு பாதைகள் விரிந்துள்ளன. ஒரு பாதையில் சென்றால் ஓயா துன்பமும் துயரமும். மற்ற பாதையில் சென்றால் இனமே அழிந்து விடும். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் அறிவை பெற (இறைவனை) வேண்டுவோம்.”

இப்படித்தான் எதிர்காலத்தை பற்றி பலரும் பேசுகிறார். என் இளமையில் எதிர்காலம் இருண்டுகிடந்தது. மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பஞ்சம் அச்சுறுத்தியது; பூச்சிமருந்துகள் புற்றுநோய் வளர்த்தன; பாலைவனங்கள் வயல்களை விழுங்கின; மண்ணெணை கிணறுகள் வற்றத்தொடங்கின; காடுகள் மறைந்தன; அமில மழை பொழிந்தது; ஓசோன் மண்டலத்து ஓட்டை வீங்கியது; என் விந்து அளவு குறைந்தது; அணு ஆயுதங்களால் அண்டமே அழிவின் வாசலில் அஞ்சித்தவித்தது.

மிகையாகச் சொல்லவில்லை. 1960களில் பொருளியல் வல்லுனர் ராபர்ட் ஹெய்ல்பிரோனர், ”மனிதக்குலத்தின் எதிர்காலம் மங்கும்; தாங்கொணா துயரம் தாண்டவமாடும்” என்று ஒரு நூலில் கட்டியங்கூறினார்.

பத்தாண்டுக்கு பின் நான் இவை எல்லாமே பூச்சாண்டி கதைகள் என்று உணர்ந்தேன். துயர்மல்கும் எதிர்காலம் இவ்வறிஞர் பயந்தபடி உதிக்கவில்லை. மக்களின் சீரும் சிறப்பும் பெருகிவருகிறது. வாழ்க்கை வளமும் நலமும் தினமும் தினமும் சிறக்கிறது.

  1.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம், ஒரு நாளுக்கு ஐந்து மணிநேரம் வளர்கிறது!
    (அதாவது ஐம்பதாண்டுகாலத்தில் சராசரி மனிதன் ஆயுட்காலம் 50*365*5=91250 மணிநேரம் நீண்டுள்ளது. இது  3802 நாட்களாகும் (91250 / 24). அதாவது பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் நீண்டுள்ளன. 1965 வாழ்ந்த சராசரி மனிதனினை விட, 2015 வாழ்பவர் பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் அதிகம் வாழ்வார்!)
  2. பிறப்பிலேயே இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக (66 சதவிகிதம்) குறைந்துள்ளது
  3. மலேரியா நோயால் இறப்பவரின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டில் அறுபது சதவிகிதம் குறைந்துள்ளது
  4. எண்ணை கப்பல்களில் சிந்தி கடலை பாழாக்கும் எண்ணை 1970 முதல் 90 தொண்ணூறு வதவிகிதம் குறைந்துள்ளது
  5. கைப்பேசி (செல் ஃபொன்) மூலம் பேசலாம், அஞ்சல் அனுப்பலாம், படம் பார்க்கலாம், வரைபடம் பார்த்து வழிசெல்லலாம், அவரவர் கருத்தை உலகுக்கு பறைச்சாற்றலாம்.

மோசமாவன என்னென்ன? போக்குவரத்து நெரிசல், உடல் பருமன். இவை செல்வத்தால் வரும் பிரச்சினைகள், வறுமையாலும் பஞ்சத்தாலும் அல்ல.

ஒரு விசித்திரம் என்னவென்றால் பல முன்னேற்றங்கள் மெதுவாக வளர்வதால் செய்தியில் அடிபடுவதில்லை. விபத்துகளே செய்தியின் சாராம்சம். விமானம் விழுந்தால் செய்தி. சிசு மரணங்கள் எண்ணிக்கையில் விழுந்தால் செய்தி இல்லை.

வருடா வருடம் சராசரி மனிதனின் செல்வம் பெருகி, உடல்நலம் பெருகி, அறிவும் பெருகி, சுகாதாரம் பெருகி, அன்பும் பெருகி, சுதந்திரம் பெருகி, பாதுகாப்பு பெருகி, அமைதி பெருகி சமத்துவம் பெருகி வாழ்கிறான்.

சமத்துவம் பெருகியா?

ஆம் உலகெங்கும் சமத்துவம் வளர்கிறது. அதிவேகமாக. ஏன்? செல்வ நாடுகளில் செல்வந்தரின் செல்வம் வளரும் வேகத்தைவிட ஏழை நாடுகளில் ஏழைகளின் செல்வம் வேகமாக வளர்கிறது.

சமீபத்தில் பொருளாதாரம் வளர்ந்துள்ள ஆசிய நாடுகளை போல், ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதாரம் அமோகமாக வளர்கிறது. 2008 முதல் மொசாம்பிக் நாட்டு பொருளாதாரம் 60% வளர்ந்துள்ளது. எத்தியோப்பிவின் பொருளாதாரம் வருடா வருடம் பத்து சதவிகிதம் வளர்கிறது.

1945 இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், 2014 வரை, ஒரே ஒரு முறை தான் உலகப்பொருளாதாரம் சரிந்துள்ளது. 2009இல் ஒரு சதவிகிதம் சரிந்து பின் ஐந்து சதவிகிதம் வளர்ந்தது. வளர்ச்சி தொடர்வது மட்டுமின்று, அது வேகத்தில் கூடுகிறது

வருவதை எண்ணி வளரும் என் நம்பிக்கை, வரலாற்றை வைத்து மட்டும் போடும் கணக்கல்ல, வளர்ச்சியை இயக்கும் காரணத்தையும் வைத்தே போட்ட கணக்கு.

சிந்தனையும் செயல்திட்டங்களும் கலந்து புணர்ந்து புதுமைகளை உருவாக்கின்றன. அதனால் மேலும் சிந்தனைகள் பிறந்து கலந்து புணர்ந்து புதுமைகளை பிறப்பிக்கின்றன. இது வற்றாத நதி. மனிதரின் அறிவே இந்த நதிமூலம். அவை கலந்து புணரும் வழிகள் எண்ணற்றவை.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றும் புதுமைகளை நம்பும் காலத்தை கடந்துவிட்டோம். சிந்தனை புணர்ச்சியின் வேகத்தை இணையதளம் மேலும் ஊக்குவிக்கும்.

வேப்பிங் என்று ஒரு புதுமை. எலக்ட்ரானிக் மின்னணு சிகரெட். இங்கிலாந்தில் வேப்பிங் வந்த பின் முப்பது லட்சம் மக்கள் புகைபிடிப்பதை கைவிட்டனர். புகைப்பழக்கத்தை கைவிட நாம் படைத்த சாலச் சிறந்து யுக்தி, இதுவே.

ரசாயனமும் மின்னணுவியலையும் அறிந்த ஹான் லிக் என்ற சீனரால் இது படைக்கப்பட்டது.

ஒரு கேள்வி எழலாம். இந்த முன்னேற்றமெத்தால் சுற்றுச்சூழல் சீரழிகிறதல்லவா? இல்லை. மாறாக, மாசுகள் குறைந்து பசுமை வளர்கிறது. நீர் நிலைகள் சுத்தமாகின்றன, காற்று மாசுப்பொருட்கள் குறைந்துள்ளன, காடுகள் வளர்கின்றன, வன விலங்குகள் பெருகிவருகின்றன.

செல்வமிகை நாடுகளில் சுற்றுச்சூழல் வேகமாகவே தூய்மையாகிறது. ஏழை நாடுகளிலே தான் மாசு கேடுகள் அதிகம்.

மக்கட்தொகை? என் வாழ்நாளில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இரண்டு சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆப்பிரிக்காவிலும் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துவருகிறது. இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கட்தொகை நான்கு மடங்காக பெருகியது. இருப்பத்தோராம் நூற்றாண்டில் அது இரட்டிக்குமா என்பதே சந்தேகம். ஐநா சபை மக்கட்தொகை 2080இல் வளராமல் நிற்கும் என்று கருதுகிறது.

போரும் நோயும் பஞ்சமும் பெருகியே மக்கட்தொகை தடுமாறும் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மால்தூஸ் பயமுறுத்தினார். அவ்வாறின்றி, கல்வி செல்வம் சுகாதாரம் பெருகுவதால் மக்கட்தொகை வளர்ச்சி குன்றும். இது ஒரு அழகான எளிமையான விவரம். சிசுப்பருவத்தில் குழந்தைகள் சாகாமலிருந்தால் மக்கள் சின்ன குடும்பங்களோடு குழந்தைபேறை நிறுத்திவிடுகிறார்கள்.

மக்கட்தொகை வளர்ச்சி சுருங்க, வயல்களின் விளைச்சலும் பெருக, பஞ்சம் தவிர்ப்பது எளிமையாகிறது. ஐம்பதாண்டுக்கு முன் தேவைப்பட்ட நிலத்தில் பாதியில் இன்று 68% அறுபத்தெட்டு சதவிகிதம் அதிகமாக பயிர் வளர்க்க முடிகிறது. மீதி நிலத்தில் இயற்கையாய் காடு வளரலாம்.

கனடா நாட்டு ஒண்டாரியோ மாநிலத்தின் பரப்பளவில் உலகத்துக்கு போதுமான பயிர் வளர்த்து, மற்றதை இயற்கை நிலமாக விட்டுவிடலாம்.

பூமியின் பசும் போர்வை  வளர்கிறது. விண்ணிலிருந்து எடுக்கும் படங்களில் முப்பது வருடதுக்கு முன்னை விட இன்று பதிநான்கு சதவிகிதம் அதிகம் பசும் போர்வை விரிந்துள்ளதை காட்டுகிறது.

ஒரு வேளை நான் மிகையாக சொல்கிறேனா? நூறு மாடி கட்டடக்கூரையிலிருந்து குதித்துவிட்டு தரையில் விழுந்து சாகும் முன் “எனக்கு ஒண்ணும் ஆகவில்லை” என்னும் முட்டாள் ஜம்பத்தில் பேசுகிறேனா? இல்லை.

இந்த விவாததில் திருப்புமுனை பற்றி பேச்சு எழும். இந்த தலைமுறை தன் பெற்றோரை விட மோசமாக இருக்கும் என்று எதிர்கட்சியினர் சொல்வார்கள்.

ஒவ்வொரு தலைமுறையும் இப்படி பேசுகிறது. மெக்காலே சொன்னது : “ஒவ்வொரு காலத்திலும், அது வரை முன்னேற்றத்தை கண்டவரும், அடுத்த தலைமுறையில் முன்னேற்றம் ஏற்படாது என்று நம்புகின்றனர். நாம் ஆகவே முடியாது என்று நிரூபிக்க முடியாது. ஆனால் இதை தான் நம்முன் வந்தவர் அனைவரும் சொல்லிவந்துள்ளனர்.”

இறந்த காலத்திலிருந்து நல்ல நினைவுகளையும் எதிர் காலத்திலிருந்து பூச்சாண்டி ஆரூடங்களையும் வடிகட்டி எடுக்கிறோம்.

நம் தலைமுறைக்கு வரலாற்றில் ஈடில்லை என்பது, ஒரு விசித்திர கர்வம்.
மீண்டும் மெக்காலேவை முன்மொழிகிறேன் : “எந்த கொள்கையின் அடிப்படையில், கடந்த காலத்தில் முன்னேற்றமே தெரியும் போது, எதிர்காலத்தில் சீரழிவை மட்டும் எதிர்பார்ப்பது?”

குறிப்பு
“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” என்ற தலைப்பில் எழுதியிருக்கவேண்டும்.

தொடர்புள்ள கட்டுரைகள்


Sunday 8 November 2015

கல்வி – ஒரு வடமொழி பழமொழி


आचार्यात् पादं आदत्ते पादं शिष्य स्वमेधया ।
पादं सब्रह्मचारिभिः पादं कालक्रमेण च ॥
ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் ஷிஷ்யஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச
Aacaaryaat paadam adattE paadam shishyasvamEdayaa
paadam sabrahmacaariBhyaH paadam kaalakramENa ca

பாதம் – கால்
ஆசார்யாத் – ஆசாரியிடமிருந்து
ஆதத்தே - பெறப்படுகிறது
ஷிஷ்ய ஸ்வமேதயா – மாணவனின் சுய அறிவால்
ஸப்ரஹ்மசாரிப்ய: - சக மாணவனிடமிருந்து
கால க்ரமேண – அனுபவத்தால்

கல்வி எப்படி பெறுகிறோம்?

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததோர் கல்வியும் மனப்பழக்கம்”
என்றாள் ஔவை. மேல் கோளிட்ட சமஸ்கிருத பழமொழி கல்வி பெறும் முறையை நான்காய் பிரிக்கிறது.

ஒருகால் ஆசான் கற்பித்தும் ஒருகால் மாணவன் முயற்சித்தும்
ஒருகால் தோழன் சொற்பித்தும் ஒரு கால் காலம் பயணித்தும்”
என்பதே இதன் பொருள்.

நண்பர் சுதர்சனத்தின் தமிழாக்கம்
கானமாசான் காற்றம்மால் காலுடன் உற்றவரால் காலமாசான் மீதிக்கறிவு

பதம் பிரிப்பு
கால் நம் ஆசான் கால் தம்மால் கால் உடன் உற்றவரால்  
காலம் ஆசான் மீதிக்கு அறிவு

வடமொழி கவிதைகள்


கட்டுரை


Tuesday 3 November 2015

Fujimori - Peru's Japanese President

One more excerpt from Daniel Yergin and Joseph Stanislaw's book The Commanding Heights

Most Indians have not heard of Alberto Fujimori, a person of Japanese descent, who became President of Peru. Barack Obama of Kenyan descent and Italian-born Sonia Gandhi are much more famous.

--------Begin excerpt------------

During the 1960s Peru had built up a fishing fleet larger than Japan's. A left-wing military dictatorship nationalized this and it collapsed. Post military Democrat Alan Garcia,  captivating orator imposed price controls, severed Peru form global economy, cut taxes, gave wage increases and opened floodgates of government spending. The economy contracted 25% and inflation hit 3000%.

Shining Path, a terrible terrorist group led a civil war. In the 1980s, another option El Otro Sendero, the Other Path, written by Hernando de Soto, discussed Milton Friedman and  Friedrich von Hayek. The researchers said there were five lakh laws and executive orders affecting the economy. It took 289 days and 1231$ over 30 monthly minimum wages to register a simple sewing company. This group only attracted a small circle.

In 1987, Alan Garcia announce he would nationalize all banks and financial institutions. Maria Llosa led Libertad, launched a tirade against Garcia in an article, "Towards a totalitarian Peru" and a demonstration in Lima which was expected to draw a few thousand professionals, attracted a hundred thousand people.

In 1990 Llosa was front runner for President. He traveled to Taiwan which had $1000 per capita in 1960,same as Peru but in 1990 rose to 7530. Also stopped by Margaret Thatcher in England who advised him to press on but warned he would be very lonely.

Alberto Fujimori, an agricultural engineer and University rector, of Peru very small Japanese community ran, criticizing Llosa 's shock therapy. His coalition had evangelists, dispossessed, who campaigned for him in slums. He was attacked because his mother did not speak Spanish, none of his relatives was buried in Peru. He contrasted Llosa's aristocratic European, evoking Spanish conquerors, looks with his own Inca looking Asian features. He won and applied Fuji shock. He also said he was better prepared to emulate Asian countries than someone of European descent.

But when he won, he unleashed  shock therapy more far reaching than Vargas Llosa had proposed. He slashed public spending and devalued the currency. Llosa called this Fujishock.

"It was very difficult to fight violence and implement economic reforms simultaneously" he said. "But my mind worked like an engineer's, even on Shining Path. People advised fighting poverty before violence. That was a fallacy. We had to fight violence before poverty. Businesspeople had no hope. But I was sure, I had Oriental patience, I waited for results. I was firm. Even stubborn. "

The campaign against Shining Path was reorganized and intensified. It took two years. A house in Lima was found to produce more trash than expected for the two people living there. In a raid, they found it was a safe house for Shining Path, including its leader Abimael Guzman. He was paraded on the streets. No longer a fearsome guerilla, he implored his colleagues to lay down arms.

With violence tamed, Fujimori deregulated financial and labor markets, reduced and simplified tariffs, enabled privatization and reopened Peru to foreign investment. Peru  became a puma economy but it was not fast enough for Fujimori. He changed his cabinet ending up with advisers who had been against him once.

"The situation was a mess with many controls against poor consumers and favoring political power. I was independent, and I thought like an engineer, not a politician. Once an engineer sees a problem, he finds a solution, even if a limited solution."

He won two more elections, though he was accused of becoming a strongman when he dissolved parliament and suspended the Constitution and dismissed much of the judiciary. He was finally brought down by  corruption. Much of Peru's power elite was discovered to be involved in a stunning Web of corruption, revealed on videotapes made by Montesino, his powerful minister, on Peruvian television. Fujimori escaped and sought asylum in Japan.

His successor Alejandro Toledo ran against Alan Garcia, Fujimori's ultra leftist predecessor, who had devastated the country economically and politically. Toledo's victory signaled the final break of Peruvian public with Marxist economics.

--------End excerpt------------


Related Links


Llosa and Marquez - A Lack of Economic Knowledge
The end of Maoism in China - Deng Xiaoping and Japan
Science and Writers - Peter Medawar
Ludwig von Mises - The AntiCapitalistic Mentality