Tuesday 29 March 2016

John Ambrose Fleming – Father of the Electronic Age


Edison’s Puzzle

During his experiments with the light bulb, Thomas Edison wanted to know why the filaments broke frequently. Another puzzle was uneven blackening – the filament always blackened on side. To study this, Edison introduced an extra wire or foil, into the glass tube, which became a second electrode and connected this to a galvanometer, which measured the current flowing through this foil. Neither Edison nor his assistant William Joseph Hammer, understood the blackening, but they observed a new phenomenon with the introduction of the second electrode. When the foil was connected to the positive end of a battery, current would flow from the filament to the foil, but if it was connected to the negative there was no current. Edison couldn’t explain this phenomenon either, but it was called the Edison Effect.

A British scientist John Ambrose Fleming who worked for the Edison Telephone company in England, visited Edison’s labs in the USA in the 1880s. He too studied this effect. He later joined Guglielmo Marconi’s telegraph company and helped Marconi make the first trans-Atlantic radio transmission. Marconi had launched the era of wireless transmission but a building a practical radio faced as many obstacles as building Edison’s light bulb.

Heat and Electrons

Meanwhile science had advanced in leaps and bounds. JJ Thompson had discovered electrons. Owen Richardson discovered that a heated wire emitted electrons – this phenomenon was called thermionic emission. This explained the Edison effect! Remember the incandescent light bulb glows because electricity causes the filament to become very hot. Light is the visible byproduct of heat. Thermionic emission is the invisible byproduct of heat. Invisible, but electrically detectable – the electrons given off by the filament jumped across the vacuum of the light bulb and flowed through a positive foil – Edison’s second electrode. But if the foil were connected to a battery’s negative terminal, they foil repelled electrons which were negatively charged. Edison and Hammer had discovered a device that would allow current in one direction but not another; but they could not think of any use for it.

Electronic Era

Two decades later, in Marconi’s lab in 1904, Fleming recalling this phenomenon realized that this effect, called rectification was also useful for radio detection. Fleming called it the oscillation valve – it was later called by many names, including Fleming valve, thermionic valve, diode, and significantly vacuum tube.

In 1904, Lee de Forest, introduced a third porous electrode called the grid, in between the two electrodes of the diode. Controlling the current of the grid enabled fine regulation of the current across the vacuum tube. Others later introduced fourth and fifth electrodes, producing the tetrode and the pentode. This whole class of devices are now called vacuum tubes. (Meanwhile, the discovery a filament lasts longer in the bulb filled with inert gases like neon or argon, than when a vacuum is maintained, meant that light bulbs are no longer vacuum tubes.)

Fleming and de Forest then had fought over patents and precedence, just as Edison did over the light bulb and Daimler over his engines and in stark contrast to the decency and admiration, Wallace and Darwin exhibited towards each other. The history of technology is littered with such lawsuits, as huge amounts of money are often involved. In this case, Fleming deserves credit for the vacuum tube and de Forest for the triode.

Other technologies have overtaken Fleming’s oscillation valve as a radio detector, but as diodes they are still widely used as rectifiers, most commonly to convert Alternating Current to Direct Current.
But vacuum tubes as a class effectively launched the Age of Electronics. The vacuum tube most people have used is the Cathode Ray Tube used in televisions and computer screens, until Liquid Crystal Displays (Flat screens) began to replace them by the millions. But radio, microwaves, amplifiers and whole host of such devices are fundamentally vacuum tubes. Most famously, vacuum tubes were the first practical high speed electronic memory devices used for storing binary information. The earliest computers, in the 1940s, were built with vacuum tubes! Hence some historians consider Fleming the Father of the Electronic Age. Considering how often we use suffixes like “tronic”, it is astounding that Fleming is not as famous as Edison or Einstein.

The advent of the silicon diodes and transistors, launched the Age of Semiconductor electronics. Vacuum tubes are still used in high voltage applications.

Fleming courted controversy in scientific circles, because he questioned and rejected Darwin’s Theory of Evolution. Unlike a significant number of European scientists of the Industrial Era, who were atheists or agnostics, he was a very devout Christian. Today, we think of scientists as specialists in their field, so it’s unusual to see a physicist challenge a theory in biology. Scientists gain reputations for controversy in their own fields.

Inventor, Teacher, Writer

We learnt of Fleming’s Left Hand rule, from our school physics teacher, holding out his thumb, forefinger and middle finger, each at a right angle to the other. These represented the directions of electric force magnetic force and induced motion, in an electric motor. I often wondered who Fleming was, and why it was not called Faraday’s Left hand rule. Fleming worked as a lecturer at the University College, London before his employment with Edison and Marconi. In his later days, he published several books and delivered several lectures on Electrical engineering. He formulated the Left Hand and Right Hand rules, nearly a century after Faraday discovered them. This is now a standard teaching tactic. Sometimes it takes another scientist to explain simply and lucidly, the earlier scientist’s discoveries. From Patanjali to Euclid, Parimelazhagar to Bertrand Russel, commentators have played this important role. Fleming ranks among them.

Fleming not merely launched the Electronic Age and advanced the Wireless Era, he also helped us understand several aspects of the Electric Age. Like Wallace who wrote widely on several aspects of biology, Fleming lived a long life and wrote on a vast spectrum of subjects in Electricity. Among the 100 books he wrote are The Electrical Educator, Fifty Years of Electricity, The Wonders of Wireless Electric Telegraphy, The Alternate Current Transformer in Theory and Practice.


Related Essays

சிலிகான் சிற்பி - வால்டர் பிராட்டன்
Symbiogensis - non Darwinian evolution
Shoulders of Giants - Essays on Scientists

Monday 21 March 2016

வராகமிஹிரரின் கிரகணச் சான்று

The English version of this essay is here

வராகமிஹிரர்அறிவியல் மேதையா, பழைய கர்ணாடகமா? விவாதிக்க வேண்டிய கேள்வி. மகாராஜாக்களில் ஆரம்பித்து மாடு, குரங்கு வரை சகல ஜீவராசிகளின் தலையெழுத்தையும் கிரகங்கள்தான் நிர்ணயிக்கின்றன என்று வகுத்து சொன்ன வராகமிஹிரரையும் ஒரு மோசமான கண்கட்டி வித்தைக்காரர் என்றுதான் ஒதுக்க வேண்டியிருக்கும்.அவரும் மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன ஜோதிடரில் ஒருவர்தானோ?

எதையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்த்து பழகி, வியந்து பாராட்டும் சமகால வானியல் மற்றும் கணித ஆர்வலர்களைப்போல் நானும் ஆர்யபடரையும் பாஸ்கரரையும் மட்டும் புகழலாம். அவர்களது நுண்ணிய கணித சூத்திரங்களில் நெகிழலாம். வராகமிஹிரரைஒரு ஜாதக பட்டிக்காடு என்று நமட்டு சிரிப்புடன் ஓரங்கட்டி அவர் இயற்றிய பஞ்சசித்தாந்திகத்திலும், பிரிஹத் சம்ஹிதையிலும் செய்தவற்றை பித்தலாட்டம் என்று பகடி செய்யலாம்.

இந்திய வானியலை, குறிப்பாக ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை குறை கூறி, அறிவியலை உயர்த்திப்பிடித்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்த்து. நான் மறுத்துவிட்டேன். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஜோதிடத்தை நம்புவோரை காயப்படுத்துவதில் விருப்பமில்லை (நையாண்டி செய்வேன்; அது வேறு). நான் புரிந்து கொண்டதை, மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் சிலருக்கு இத்துறையில் ஆர்வம் பிறந்தால் சந்தோஷம்.

வராகமிஹிரர் சர்வ நிச்சயமாக ஒரு முழுமையான இந்திய வானியலாளர் என்று சொல்ல முடியும். வானியலில் அவரது அசாத்திய பங்களிப்பை வைத்தே இதை முடிவு செய்துவிடலாம். வராகமிஹிரர் எழுதிய ப்ரஹத் சம்ஹிதா, விரிவான ஒரு ஒரு கலைக்களஞ்சியம். சுருக்கமான விவரணைகளுக்கு பிரசித்தி பெற்ற ஆர்யப்படரின் ஆர்யபடீயம் எனும் ஆர்ய அஷ்டஷதம் போன்றதல்ல இது.

வராகமிஹிரர் வாழ்ந்த காலத்தில் புகழ்பெற்றிருந்த ஐந்து முக்கியமான வானியல் நூல்களை (சித்தாந்தங்களை) ஒப்பிடும் நூலே பஞ்ச சித்தாந்திகை. ஆனால் அவரது சம காலத்தில் வாழ்ந்த ஆரியபடர் இயற்றிய ஆரியபடீயம் இத்தகைய ஐந்து சித்தாந்தத்தில் ஒன்றல்ல!

ஆரியபடீயமே இன்றுவரை அதிகளவில் விவாதிக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட இந்தியப் புத்தகமாககருதப்படுகிறது. அதில் சொல்லப்பட்ட சூத்திரங்களும், நெறிமுறைகளும் காலாவதி ஆனபின்னரும் பதிநான்காம் நூற்றாண்டுவரை ஆரியபடத்திற்கு பல விளக்க உரைகள் எழுதப்பட்டன. அதில் சொல்லப்பட்டவற்றில் சில விஷயங்கள் தவறென்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஒருசில விஷயங்கள் பின்னாளில் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைக்காக ஆர்யபடர் கொண்டாடப்படுகிறார். ஆனால் ஆர்யபடரின் விவரணைகளில் எந்தவொரு வலுவானசான்றும் நிரூபணமும் இல்லை. ஓரிருவரை தவிர, அவருக்குப் பின்னர் வந்த இந்திய வானியலாளர்களும்  விஞ்ஞான ரீதியாக விளக்குவதற்கு முயற்சி செய்ததில்லை. ஒருவேளை தங்களுடைய மாணவர்களுக்கு மட்டும் சொல்லித் தரப்பட்டு, நூலாக எழுதப்படாமல் விடப்பட்டிருக்கலாம். கணித்த் துறையின் தேற்றங்களும் நிரூபணங்களும் கிரேக்கத்தின் கொடை என்றே சொல்லவேண்டும். 

இந்நிலையில் வராகமிஹிரரின் கிரகணச் சான்று, நண்பகல் சூரியனைப் போல் பிரகாசிக்கிறது.அவரது ப்ருஹத் சம்ஹிதையில் வர்ணித்துள்ள கிரகணச் சான்று,  பாமரனாலும் புரிந்து கொள்ள முடியும். கிரகணம் என்னும் மூடநம்பிக்கைகளில் தொலைந்து போன ஒரு வானியல் அற்புதத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கியிருக்கிறார்.

கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சம்பந்தப்பட்ட புராணக்கதை என்பதல்ல. பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதாலும், பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் வருவதாலும் நிகழும் நிழல்களின் விளைவே. இதைத்தான் வராகமிஹிர   ர் தர்க்க ரீதியாக விளக்கியிருக்கிறார். பின்னர் வந்த பிரம்மகுப்தர், தன்னுடைய முன்னோடிகளான ஆர்யபடரையும் விஷ்ணுசந்திரரையும் சலிக்காமல் வெளுத்துவாங்கினார். குட்டினாலும் மோதிர குட்டு; திட்டினாலும் இலக்கிய திட்டு என்பார்கள். அதுபோல் அல்லாமல் இயல்பான நடையில், யாரையும் பழிக்காமல், மரபையும் இழிக்காமல் கூறியிருப்பதுதான் வராகமிஹிரரின் சிறப்பு.

ராஹுசாரம் என்னும் பிரிவில் வரும் ஒரு சில ஸ்லோகங்களை இங்கே மேற்கொள் காட்டியிருக்கிறேன். வடிவியல், திசை, நேரம், அளவு மாறுபாடு ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாக வைத்து கிரகண நிகழ்வை விளக்கும் ஸ்லோகங்கள் இவை.

वृक्षस्य स्वच्छाया यथैकपार्श्वे भवति धीर्घचया।
निशिनिशि तद्वद्भूमेरावरणवशाद्दिनेशस्य॥
வ்ருʼக்ஷஸ்ய ஸ்வச்சா²யா யதை²கபார்ஸ்²வே பவதி தீர்கசயா |
நிஸி² நிஸி²தத்³வத்³ பூமேராவரணவஸா²த்³ தி³னேஸ²ஸ்ய ||

பதம்பிரிப்பு வ்ருʼக்ஷஸ்ய (விருட்சத்தின்ஸ்வச்சா²யா (சொந்தநிழல்) யதா²(எவ்விதம்) ஏகபார்ஸ்²வே (ஒருபக்கம்) தீர்கசயா(நீளநிழல்வதி(ஆகிறதோ)
நிஸி²நிஸி²(இரவுக்கிரவு) தத்³வத்³(அவ்விதம்) பூமே(பூமியின்) ஆவரணவஸா²த்³(மூடுகிறதுதி³னேஸ²ஸ்ய (சூரியனுடைதை)

பொருள் விளக்கம் ஒரு மரத்தின் மீது சூரிய ஒளி படும்போது, மறுபக்கம் மரத்தின் நிழல் விழுகிறது. விழும் நிழலானது, மரத்தை விட அளவில் பெரிதாக இருக்கிறது. அதே போல் சூரியனின் வெளிச்சம் படும்போது பூமியின் நிழலும் அண்டவெளியில் வீழ்கிறது. என்னவொரு எளிமையான, ஆழமான விளக்கம்.

भूच्छायां स्वग्रहणे भास्करमर्कग्रहे प्रविशतिन्दुः।
प्रग्रहणमतःपश्च्चान्नेन्दोर्भानोश्चपूर्वार्द्धात्॥
பூச்சா²யாம்ʼ ஸ்வக்³ரஹணே பாஸ்கரமர்கக்³ரஹே ப்ரவிஸ²திந்து³​: |
ப்ரக்³ரஹணமத​: பஸ்²ச்சான்னேந்தோ³ர் பானோஸ்² ச பூர்வார்த்³தாத் ||

பதம்பிரிப்பு பூ(பூமி) சா²யாம்ʼ(நிழலை) ஸ்வக்³ரஹணே (தன்கிரகணத்தில், அதாவது, சந்திரகிரகணத்தில்) பாஸ்கரம (சூரியனை, அதாவதுசூரியனின்பிம்பத்தை) அர்கக்³ரஹே (சூரியகிரகணத்தில்) ப்ரவிஸ²த் (நுழைகிறது) இந்து (சந்திரன்)
ப்ரக்³ரஹணம(கிரகணம்) அத:(அதனால்) பஸ்²ச்சாத்(மேற்கிலிருந்து) (இல்லை) இந்தோ³(சந்திரன்) பானோ(சூரிய) (மற்றும்) பூர்வார்த்³தாத்(கிழக்கிலிருந்து)

பொருள் விளக்கம் சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் விழம் பகுதிக்குள் சந்திரன் பிரவேசிக்கிறது. அதே போல் சூரிய கிரணகத்தின்போது, சூரியனின் பிம்பவட்டத்தில் சந்திரன் பிரவேசிக்கிறது. ஆகவே சந்திர கிரகணம் மேற்குப்பகுதியில் ஆரம்பிப்பதில்லை. அதே போல் சூரிய கிரகணமும் கிழக்குப் பகுதியில் ஆரம்பிப்பதில்லை.


சந்திர கிரணகத்தின் போது கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரிய கிரகணத்தின்போது மேற்கிலிருந்து கிழக்காகவும் கிரகணங்கள் நிகழ்வதை திசைகளை அடிப்படையாக வைத்து விளக்குகிறார். சந்திர கிரகணம் கிழக்கிலிருந்து மேற்காக நிகழ்கிறது. சூரிய கிரணகத்தின்போது, மேற்கிலிருந்து கிழக்காக சந்திரன் பூமியை மையமாக வைத்து சுற்றிவருவதால் சூரியனின் மேற்குப்பகுதியிலிருந்து கிரகணம் ஆரம்பிக்கிறது. 


आवरणंमहदिन्दोः कुण्ठविषाणस्ततोऽर्द्धसञ्छन्नः।
स्वल्पं रवेर्यतोऽतस्तीक्ष्णविषाणो रविर्भवति॥
ஆவரணம்ʼ மஹதி³ந்தோ³​: குண்ட²விஷாணஸ்ததோ ()ர்த்³ஸஞ்ச²ன்ன​: |
ஸ்வல்பம்ʼ ரவேர்யதோ()தஸ்தீக்ஷ்ண விஷாணோ ரவிர் பவதி ||

பதம்பிரிப்பு ஆவரணம்ʼ(மூடுவது) மஹத்³(பெரிது) இந்தோ³​: (சந்திரனை) குண்ட²(மொக்கை) விஷாண(கொம்பு) ததோ(ஆதலால்) அர்த்³ஸஞ்ச²ன்ன​: (பாதிமூடியுள்ளது)
அல்பம்ʼ (சிறிது) ரவே (சூரியனின்) யதோ (ஏனெனில்) அத: (அதனால்) தீக்ஷ்ண (கூர்ந்த) விஷாணா: (கொம்புகள்) ரவி:(சூரிய) வதி(ஆகிறது)

பொருள் விளக்கம் சந்திரனை விட பூமியின் உருவம் பெரிதாக  இருப்பதால், கிரகணக்கொம்புகளின் விளிம்புகள் தெளிவாக இருப்பதில்லை. அதே சமயம், சூரியனை மறைக்கும்போது சந்திரனின் உருவம் சிறியது என்பதால், கிரகணக் கொம்புகளின் விளிம்புகள் பளிச்சென்று தெரிகின்றன.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் வெவ்வேறு அளவுள்ள கோள்கள் என்பதை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட விளக்கம். சூரியனையோ, சந்திரனையோ மூடும்போது வெளிப்படும் வட்டத்தின் ஓரப்பகுதியை கொம்புகள் என்கிறார் ஆசிரியர். படத்தில்காணலாம்முக்கால்வட்டம் நிழலிலிருக்க, சிவப்பாய் தெரியும் பகுதி மாட்டுக் கொம்பை போல் உள்ளதால் கொம்பு என்றே அழைக்கப்படுகிறது. குண்டவிஷானா, தீக்ஷனவிஷானா என்பவை சமஸ்கிருதத்தில் ஜோதிடர் புனைந்த அழகான அறிவியல் வார்த்தைகள். மூன்று கோள்களும் வெவ்வேறு உருவ அளவை கொண்டுள்ளன என்பதை திட்டவட்டமாக இங்கே விளக்கியிருக்கிறார். சந்திரனின் அளவு சிறியது. பூமியின் நிழலோ பெரியது. அளவு மாறாத ராகுவால் விழுங்கப்பட்டால் நிழல்களும் கொம்புகளும் வேறுபடுமா?

சூரியனின் கொம்பு - படம்: விஜய்குமார் (PoetryInStone)
இன்னொரு சுவராசியமான விஷயம். வராகமிஹிரர் கேது என்ற சொல்லை கிரகணத்திற்கு சொல்வதில்லை. தூமகேது என்று, வால்மீனுக்கு மட்டும் சொல்கிறார்.

ராகு என்னும் பாம்பை பற்றிய கதைகளுக்கு பஞ்சமில்லை. ராகுவிற்கு தலையும், வாலும் உண்டு. ராகு ஒரு உருவமுள்ள பாம்பு. கருப்பாக இருக்கும். கிரகண நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் கண்ணுக்குத் தெரியாது. இப்படி ஏராளமான கதைகள் உண்டு. சமணர்களின் வானியலில் இரண்டு ராகு உண்டு.

यदि मूर्त्तो भविचारी शिरोऽथवाभवति मणडली राहुः।
भगणार्द्धेनान्तरितौ गृह्णाति कथं नियतचारः ॥
யதி³மூர்த்தோ பவிசாரீ ஸி²ரோ ()²வா பவதி மணட³லீ ராஹு​: |
³ணார்த்³தேனாந்தரிதௌ க்³ருʼஹ்ணாதி கத²ம்ʼ  நியதசார​: ||

பதம்பிரிப்பு யதி³(ஆகுமாயின்) மூர்த்தோ (உருவம்) விசாரீ(வானில்ஊர்பவன்) ஸி²ரோ(head) ()²வா(எனின்) வதி(ஆகிறது) மணட³லீ(வட்டத்தை) ராஹு:
³ணார்த்³தே (பாதிவானத்தால்) அந்தரிதௌ(இடைவெளிபட்ட) க்³ருʼஹ்ணாதி(கவ்வுவது) கத²ம்ʼ (எவ்விதம்) நியதசார​:(விதிவழிசெல்வோன்)

பொருள் விளக்கம் ராகுவுக்கு உருவம் இருந்தால், தலையை வைத்து அடையாளம் காணமுடியும். விண்வெளியில் எதிரெதிரே இருக்கும் சூரியனையும், சந்திரனையும் கணிக்க முடிந்த நேரத்தில் எப்படி தாவிப்பிடிக்க முடியும்? அதாவது, கணிக்கக்கூடிய வட்டத்தில் மட்டும் பாம்பு ஊர்வது ஏன்?

अनियतचारः खलुचेदुपलब्धिः संख्यया कथं तस्य ।
पुच्छाननाभिधानोऽन्तरेण कस्मान्नगृह्णाति॥
அனியதசார​: ²லுசேது³பலப்³தி⁴​: ஸங்க்²யயா கத²ம்ʼ  தஸ்ய |
புச்சா²னனாபிதானோ ()ந்தரேண கஸ்மான்ன க்³ருʼஹ்ணாதி ||
பதம்பிரிப்பு அனியதசார​:(விதிவழிசெல்லாதான், அதாவதுதன்னிச்சையானவன்) ²லுசேது³பலப்³தி⁴​: (கிடைக்கும்) ஸங்க்²யயா(கணித்து) கத²ம்ʼ(எவ்விதம்) தஸ்ய(அதனை)
புச்சா²(வால்) ஆன்ன(முகம்) அபிதானோ(பெயர்களை) அந்தரேண (நடுவில்) கஸ்மாத்(எவ்விதம்) நக்³ருʼஹ்ணாதி(கவ்வுதில்லை)

பொருள் விளக்கம் கணிக்கக்கூடிய வட்டத்தில் ராகு ஊர்வதில்லை எனில் கிரகண காலங்களை எப்படி முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிகிறது? ராகுவுக்கு தலையும், வாலும் மட்டும் இருந்தால், விண்ணில் எதிரெதிராய் சூரியனும் சந்திரனும் இருக்கும்போது மட்டும் கவ்வி, வேரெங்கும் இருக்கும்போது ஏன் கவ்வுவதில்லை?

अथ तु भुजगेन्द्ररूपः पुच्छेन मुखेन वास गृह्णाति ।
मुखपुच्छान्तरसंस्थं स्थगयति कस्मान्नभगणार्द्धम्॥
அத² து புஜகே³ந்த்³ர ரூப​: புச்சே²னமுகே²ன வாஸ க்³ருʼஹ்ணாதி |
முக²புச்சா²ந்தரஸம்ʼஸ்த²ம்ʼ ஸ்த²³யதி கஸ்மான்ன ப³ணார்த்³ம் ||
பதம்பிரிப்பு அத²து(ஒருக்கால்) புஜகே³ந்த்³ரரூப​: (நாகராஜரூபன்) புச்சே²னமுகே²(வாலாலும்முகத்தாலும்) (அவன்) க்³ருʼஹ்ணாதி(கவ்வுகிறான்)
முக²புச்சா²ந்தரஸம்ʼஸ்த²ம்ʼ (முகத்திற்கும்வாலிற்கும்இடையுள்ளபகுதி) ஸ்த²³யதி(மூடுவது) கஸ்மாத்(எவ்விதம்) (அல்ல) ³ணார்த்³ம்(பாதிவானத்தை)

பொருள் விளக்கம் ராகு ஒரு முழுமையான பாம்பாக இருப்பின் வாயாலும், வாலினாலும் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் போதுசூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவிலுள்ள அனைத்து விண்மீன்களையும் ஏன் அவன் உடலின் நிழலில் மறைவதில்லை?!

राहुर्द्व्यंयदिस्याद्ग्रस्तेस्तमितेऽथवोदितेचन्द्रे।
तत्समगतिनान्येनग्रस्तः सूर्योऽपिदृश्यते॥
ராஹுர்த்³வ்யம்ʼ யதி³ஸ்யாத்³ க்³ரஸ்தேஸ்தமிதே ()²வோதி³தே சந்த்³ரே  |
தத் ஸமக³தி னான்யேன க்³ரஸ்த​: ஸூர்யோ ()பி த்³ருʼ்யதே ||
பதம்பிரிப்பு ராஹுர்த்³வ்யம்ʼ(இருராகுகள்) யதி³ஸ்யாத்³(இருப்பின்) க்³ரஸ்தே(கவ்வும்கால்) அஸ்தமிதே(சாயும்காலமோ) அத²வா(அல்ல) உதி³தே (உதிக்கும்காலமோ) சந்த்³ரே(சந்திரனை)
தத்(அந்த) ஸமக³தி(சேர்ந்துசெல்லும்) அன்யேன(மற்றதால்) (அல்ல) க்³ரஸ்த​: (கவ்வுவான்) ஸூர்ய:(சூரியன்) அபி(கூட) த்³ருʼ்யதே(காணப்படுகிறான்)

பொருள் விளக்கம் இரண்டு ராகு பாம்புகள் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு ராகு சந்திரனை விழுங்கும்போது, வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு ஏன் இன்னொரு ராகு சூரியனை விழுங்க முயற்சிக்கக்கூடாது?

எந்த அடிப்படையில் பார்த்தாலும் கிரகணங்கள் நிகழ்வது என்பது பாம்பு விழுங்கும் கதையல்லஎன்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் வராகமிஹிரர்.

வாஸ்கோடகாமாவும் அவரைத் தொடர்ந்து ஐரோப்பியர்களும் இந்தியாவுக்குள் கரையேறும்வரை காகிதம் பற்றி இந்தியருக்கு தெரியாது. அதுவரை காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதில்லை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் காகிதம் நம்மூரில் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது. அதுவரை எழுதுவதற்கு கிடைத்தவை வெறும் ஓலைச்சுவடிகளும், மரப்பட்டைகளும்தான்.விண்ணியலும் கணிதமும் பாடமாக குழந்தைகளுக்கு சொல்லித் தரப்பட்டதில்லை. பண்டிதருக்கும் இவற்றை புரிந்து கொள்வது எளிமையல்ல. வராகமிஹரரின் விளக்கங்கள், விண்ணியல் பண்டிதருக்கு மட்டுமே. ஆகவே,பொதுமக்கள் மத்தியில் பாம்பு விழுங்கும் கதை உயிர்ப்போடு இருந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

ஐரோப்பியர்கள் சொல்லித் தந்த பாடத்தையே திரும்பத் திரும்ப பாடநூல்களில் படிக்கிறோம். பெரும்பாலான அறிவியல் ஆசிரியர்களுக்கு சம்ஸ்கிருத அறிவியல் நூல்களின் கருத்துகள் ஏதும் தெரியாது. ஆர்யப்பட்டரை தவிர மற்ற இந்தியவிண்ணியல் பண்டிதர்கள், ஜோதிடம் வகுத்துத் தரும் மூடநம்பிக்கையாளர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வைதீக வழிவந்த வராகமிஹிரரால்தான் கிரகணம் குறித்த விஞ்ஞான ரீதியான விளக்கம் தரப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நீங்கள் அறிவியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் இவற்றையெல்லாம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேருங்கள்.

பிருஹத் ஸம்ஹிதத்தை புரிந்துகொள்ள ராமகிருஷ்ண பட்டரின் ஆங்கில மொழிபெயர்ப்பும், 1885இல் சிதம்பரம் ஐயர் எழுதிய மொழிபெயர்ப்பும் எனக்கு உதவியது. கணிதர் “நகுபோலியன் பாரதி பாலு” பாலசுப்ரமணியனோடு சென்னை அடையாறு கே.வி. சர்மா நூலகத்தில் இதை கலந்து பேசியது மிகவும் உதவியது.

ஆங்கிலத்தில் நான் எழுதியதை சிறப்பாக பொறுமையாக தமிழில் மொழிபெயர்த்த ஆசிரியர் “ரஜினி ராம்கி” ராமகிருஷ்ணனுக்கு நன்றி நன்றி நன்றி. சமீபத்து சூரிய கிரகணத்தின் படம் தந்த சிங்கப்பூர் விஜய்குமாருக்கும் நன்றி.

விண்ணியல் கட்டுரைகள்


சில விண்ணியல் ஸ்லோகங்கள் – பொருள் விளக்கம்
VarahaMihira's Eclipse Proof
பாதமியில் ராம்கியும் நானும் - ஜனவரி 2016

Wednesday 16 March 2016

காஞ்சி கைலாசநாதர் கோவில் வாழ்த்து

முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் வைணவ பாசுரங்களை பாடியவர்களில் முதல் ஆழ்வார்கள் மூவர். திருக்கோவலூரில் உள்ள விண்ணகரத்தில் பெருமாளை தரிசிக்க ஓர் மழைப்பொழிந்த இரவில் மூவரும் நோக்கிச்செல்ல, பொய்கையாழ்வார் முதலில் வந்தார். ஒரு குடிசையின் கதவை தட்டினார். யாருமில்லை. உள்ளே சென்று குளிர்காற்றுமழைக்கு ஒதுங்கி படுத்துக்கொண்டு இளப்பாரினார். யாரோ கதவைதட்டி உள்ளே மழைக்கொதுங்க இடம் கேட்டார்.  “ஒருவர் படுக்கலாம்,” என்று பொய்கை பதில்சொன்னார். “ஒருவர் படுக்கலாம் எனில் இருவர் இருக்கலாம்,” என்று மீண்டும் வேண்டுகோள் வந்தது. கதவை திறந்து அவரை பொய்கையார் அனுமதிக்க, இருவரும் இருளில் அமர்ந்தனர். வந்தவர் பூதத்தாழ்வார் என்பது பொய்கையாருக்கோ இருந்தவர் பொய்கையார் என்று பூதத்தாருக்கோ தெரியாது. அப்போழுது மூன்றாம் ஒருவர் கதவை தட்டி இடமுள்ளதா என்று வினவினார். “இருவர் இருக்கலாம்,” என்று இவர்கள் பதில் சொல்ல, “இருவர் இருக்கலாம் எனில் மூவர் நிற்கலாம்,” என்று அவர் கேட்க, கதவை திறந்து உள்ளே அழைத்தனர். இந்த மூன்றாம் மனிதர் பேயாழ்வார். மூன்று ஆழ்வாரும் மற்றொருவரை யாரென்று தெரியாமல் இருளில் நிற்க திடீரென்று, கதவு திறக்காமலே யாரோ உள்ளே வந்ததுபோலும் மூவர் நிற்கும்மிடல் நால்வர் திணிந்து திகைப்பது போல் ஒரு நெரிசலை உணர்ந்தனர். சற்றே திகைத்து குழம்பி தவித்தபின், அடடா நாம் வணங்கும் நாராயணனால் மட்டுமே கதவை திறக்காமல் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே வந்திருக்க முடியும் என்று எண்ணி மழிந்து பொய்கை ஆழ்வார் சொல்லால் விளக்கேற்றும் விதம் ஒரு பாடலை பாடினார். இப்பாடலே அது.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழியான் அடிக்கே சூடினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

வையம் உலகம். தகளி அகல் விளக்கு. ஆழி சக்கரமும் ஆகும், கடலும் ஆகும். இந்த வையத்தை அகல் விளக்காக, கடலை அவ்விளக்கிற்கு நெய்யாக, கதிரவனை அகலுக்கு சுடராக, அந்த சுதர்சனம் என்ற சக்கரமேந்திய பெருமானின் அடிக்கு, துன்பம் எனும் கடல் நீங்க, சொல் மாலை சூடுகிறேன், என்று பொய்கை ஆழ்வார் சொல்விளக்கேற்றினார்.

இதைகேட்டு, பூதத்தாழ்வார் இப்பாடலை பாடினார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்

அன்பால் அகல்செய்து ஆர்வத்தை நெய்யாக சேர்த்து சிந்தையையே திரியாக்கி நாராயணனுக்கு ஞானத்தால் சுடரேற்றினார் பூதத்தாழ்வார். இவ்விரு ஆழ்வார்களும் ஏற்றிய பாசுரவிளக்கில் இருள்நீங்க அந்த நாராயணனை கண்டேன் என்று பேயாழ்வார் பாடினார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைகண்டேன்
என் ஆழிவண்ணன்பால் இன்று


எக்கோலத்தில் நாரணனை கண்டார்? மாலவன் மார்பில் மலர்ந்தே, திரு என்று பெயர்கொண்ட இலக்குமியை (லக்ஷ்மியை) கண்டேன், நாரணனின் பொன் நிற மேனி கண்டேன், எதிரிகளின் செருக்கை அழிக்கும் பொன்நிற சக்கரம் கண்டேன், வலம்புரி சங்கையும் அவன் கையில் கண்டேன், கடலைப்போல் கருத்த நிறம் கொண்டவனிடம் (ஆழிவண்ணன்பால்) இன்று, என்றார்.

காஞ்சி கைலாசநாதர் கோவில் வாழ்த்து

இந்த பாடலின் கற்பனையை கொஞ்சம் திருடியே கைலாசநாதர் வாழ்த்தை நான் இயற்றியுள்ளேன்.

கல்மாலை தகளியா சில்பமே நெய்யாக
சொல்மாலை செதுக்கிய இடுதிரியாய் - பல்லவன்
அதியந்தகாமன் அரன்முறுவல் கச்சிவைத்தான்
அதிமானம் அதியற்புதம்

என் அலமேலு பெரியம்மா இப்பாடலை பாடியது. விவரங்கள் பின்வரும்.


கைலாசநாதரை உங்களோடு பார்க்கவேண்டும் என்று ஒருமுறை முனைவர் நாகசாமியிடம் பேராசிரியர் சுவாமிநாதனும் நானும் கேட்க, அவர் சொன்ன முதல் சொற்கள் “அதிமானம் அதி அற்புதம்.” தான் கட்டுவித்த கோயிலுக்கு ராஜசிம்மனே வடித்த சொற்றொடர். சாலப் பொருந்தும்.  அந்த கோயிலை புரிந்துகொள்ள இச்சொற்றொடரே மானசீக வாயில் கோபுரம்.

அத்யந்தகாமன் என்பது ராஜசிம்மனின் ஒரு பட்டப்பெயர். விருது. அவனுக்கு மிகவும் பிடித்த விருது. மாமல்லபுரத்திலும் காஞ்சியிலும் பல்வேறு இடங்களில் இப்பெயரால் தன்னை கல்வெட்டில் குறித்துக்கொண்டவன் ராஜசிம்மன். அந்தம் என்றால் முடிவு. அத்யந்த என்றால் முடிவற்ற. காமம் என்றால் ஆசை. முடிவற்ற ஆசைகளை கொண்டவன் ராஜசிம்மன்.

हरस्य हरहासरूपम् अतिमानम् अत्यद्भुम् “ஹரஸ்ய ஹரஹாஸரூபம் அதிமானம் அத்யத்புதம்” என்று ராஜசிம்மபல்லவேச்சுரத்தை ( காஞ்சி கைலாசநாத கோவிலை ) கல்வெட்டில் வர்ணிக்கிறான் ராஜசிம்ம பல்லவன். சிவனுக்கு ஹரன் என்றும் பெயர். ஹர என்ற வடமொழி சொல்லுக்கு திருடுதல் என்றும் ஒரு பொருள். ஹரனுடைய (ஹரஸ்ய) கள்ள புன்முறுவல் வடிவம் (ஹரஹாஸரூபம்) இக்கோயில் என்று மனம் களிந்து – அரன்முறுவல் கச்சிவைத்து, அதிமானம் அத்யத்புதம் என்று பெருமிகறான். உமையொருபங்கன் ஆலயத்திற்கு உகந்த உவமை அவன் சிரிப்பே என்று கல்லில் எழுதிய கலைக்கடலாம் ராஜசிம்மனை ரசிக்காமல் என்ன செய்வது?

மூலவரின் கோயில் அதிமானம் என்றால் அதை சுற்றி பல சிற்றாலயங்களை ஒரு மாலை போல் சூழந்து அமைத்துள்ளது. இக்கோவிலில் நுழைபவரின் கண்ணைக்கொள்ளும் முதல் காட்சி இந்த ஆலய மாலையே. கோவிலின் சுவற்றிலும் மதிமயக்கும் சிற்பங்களில் சிவனும் உமையும் மற்ற தெய்வங்களும் கணங்களும் கண்ணை பறிக்கும். 

கண்கொள்ளா காட்சி என்பது மற்ற எதற்கு பொருந்துமோ தெரியாது, நிச்சயமாக இக்கோயிலுக்கு பொருந்தும். சிற்பத்தினால் அலங்கரிப்பது மட்டும் போதுமென்றால் அவன் அத்யந்தகாமனாக இருப்பானா? ஸம்ஸ்கிருத மொழியில் கிரந்த லிபியில் ஒரு அற்புதமான கவிதையை இயற்றி, சொல்மாலையாக அதையும் செதுக்கிவைத்தான். திரி போன்று நீண்ட இச்சொல்மாலையில் அவன் சிவ பக்தி சுடர்விட்டு எரிகிறது.

சிற்றாலயங்களை சும்மாவிடவில்லை. இருநூற்றுக்கும் மேற்பட்ட தன்னுடைய பட்டபெயர்களை ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு லிபிகளில் செதுக்குவித்தான்!

கோயிலை சூழும் சிற்றாலய மாலை


விமானம் அல்ல - அதிமானம்!!

நாயன்மார்கள் யாரும் காஞ்சி கைலாசநாதரை பாடவில்லை. மிக அருகிலுள்ள அனேகதங்காபதம் எனும் கோயிலுக்கு வந்து அதை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், கைலாசநாதனை பாடவில்லையே என்று காஞ்சி பல்கலை கழக பேராசிரியர் சங்கரநாராயணன் ஒருமுறை வருத்தம் தெரிவித்தார். வேறு யாராவது கைலாசநாதனை பாடியுள்ளார்களா என்று தெரியவில்லை. நிற்க. 


அலமேலு பெரியம்மா பாடிய முதலாழ்வார் பாசுரங்கள் இங்கே 


மல்லை வாழ்த்தும் காஞ்சி வாழ்த்தும்

2010இல் தமிழ் பாரம்பரிய அறகட்டளை நடத்திய மல்லை கலை உலாவில் கலந்துகொண்டேன். அப்பொழுது மல்லை சிற்பியர் வாழ்த்து என்று ஒரு கவிதை எழுதினேன். ஓரிருவர் ரசித்தனர். உண்மையில் முதலாழ்வார்களின் பாசுரங்கள் அறிந்தவர் அக்கவிதையை கொஞ்சம் ஒரு வீசை அதிகம் ரசிக்கக்கூடும்.

மல்லை கலை உலாவில் ஓர் இரவு ஒரு நாடகம் நடத்தினர். வரலாற்றையும் சமூக அக்கரையையும் கலந்து கொஞ்சம் நவீன நையாண்டியை தூவிய நாடகம அது; தெருகூத்து பாணியில்,  நடிகை / கலைஞர் விநோதினி வைத்தியநாதனால் இயக்கப்பட்ட அந்த நாடகத்தில் அரசன் ஓரு ஓலைச்சுவடி படிப்பது போல் காட்சிவரும். அதில் இந்த கவிதையை அரசன் வேடமேற்ற நண்பர் சந்திரசேகர் வாசித்தார். யாருக்கும் புரியவில்லை. பாசுரங்களை நன்றாகவே அறிந்த திரு கண்ணன் அவர்களோ, கிறுத்துவ கல்லூரி பேராசிரியர் பாலுசாமி, பத்ரி சேஷாத்ரி  கூட அதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் ஒரு முறை தனியே சொன்னபோது கண்ணன் ரசித்தார். கலை உலாவிற்கு வந்த குடந்தைவாசி ஸ்தபதி உமாபதி ஆசாரிக்கு அதை அனுப்பினேன். அவரே அதை முதலில் மிகவும் ரசித்தவர். சமீபத்தில் மாமல்லபுரத்தில் வேரொறு தருணம் சொன்னபோது பாலுசாமியும் பத்ரியும் ரசித்தனர். சென்ற வருடம் 2015 புனே சென்றபோது, அங்கே வாழும் பெரியம்மா அலமேலுவிடம் இதை வாசிக்க மிகவும் ரசித்தார். 

பெரியம்மாவிடம் முதலாழ்வார் பாசுரங்கள், மற்ற சில பாடல்களை ஒலிஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தேன். 1920களில் அலமேலுவின் சிறுவயதில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு நடிகர் எம்.கே. தியகராஜ பாகவதர் அடிக்க வந்து பாடுவாராம். அவர் பக்தியோடு கோயிலில் பாடிய பாடல்களை அங்குள்ள மற்ற சிறுமிகள், சினிமா மோகத்திலும் சங்கீத ஆர்வத்திலும் மனப்பாடம் செய்து அடுத்தமுறை பாகவதர் வரும்போது பாடிகாட்டி அவரை அசத்துவார்கள் என்று, மலரும் நினைவகளில் பெரியம்மா திளைத்தார். பாகவதர் பாடிய சில சினிமா பாடல்களையும் பெரியம்மா பாட, நான் பதிவு செய்தேன். எண்பத்தியைந்து வயதில் என்ன ஒரு குஷி, என்ன ஒரு குறும்பு, என்ன ஒரு தமிழ் ஆர்வம். “அஞ்சரை கட்டைல பாடுவேண்டா, இப்போ அரை கட்டைலே போறது,” என்று நையாண்டி கலந்த ஒரு அலுப்பு. அலுப்பிலும் சிரிப்பு. “வேறு கவிதை எழுதினா சொல்லு, அதுக்கு மெட்டு கட்றேன்,” என்று அன்புக்கட்டளை. 

திருமணத்திற்கு வட இந்தியாவில் பல இடங்களில் வாழ்ந்தபின் பெரியப்பா நரசிம்மன் ஓய்வு பெற்றபின், சென்னையில்  1980களில் வாழ்ந்த காலத்தில் பல பஜனை குழுக்களுடன் பாடினவர் அலமேலு பெரியம்மா. வேங்கட வரதன் என்பவரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். தமிழிசை சங்கம், ஆல் இந்தியா ரேடியோவிலும் பாடியுள்ளார்.

1980 - பாட்டி, அம்மா, அலமேலு பெரியம்மா

அத்தை மகன் பார்த்தசாரதியுடன் ஒருநாள் பாடாலேஷ்வரர் குகை கோயிலுக்கு சென்றுவந்தேன். அந்த சில மணிநேரத்தில் அலமேலு பெரியம்மா இந்த கவிதையை மனப்பாடம் செய்து மெட்டும் ராகமும் கட்டி பாடிகாட்டினார். கல்லே தகளியா பாடலின் மெட்டில் பாட சரியாக அமையவில்லை என்று வேறு ராகத்தில் (கேதாரகௌளையில்) பாடினார். அடுத்தநாள் நானும் சாரதியும் பாஜா கார்லே குகைகளுக்கு சென்றுவருவதற்குள் கைலாசநாதர் வாழ்த்தையும் ஆரபியில் ராகம் கட்டி பாடிவிட்டார்.

இந்த ஆஜிவக வாலேசன் வலைப்பதிவை எழுதத்தொடங்கிய பொழுது அந்த மல்லை சிற்பியர் வாழ்த்து கவிதையை இங்கு பதிவிட்டேன். 2015ஜூன் மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளைக்காக இரண்டாயிரம் ஆண்டுகளாக மாமல்லபுரம் (Two thousand Years of Mamallapuram) என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதே தலைப்பில ஆங்கிலத்தில் ந. ராமசாமி எழுதிய ஆங்கில நூலின் சாரம்சம் அந்த உரை. மே மாதம், அவர் இல்லத்தில் பேச வாய்ப்பளித்த முனைவர் நாகசாமி, அந்நூலை இரவலாக கொடுத்தார். உரைக்கு நடுவே அலமேலு பெரியம்மா பாடிய இப்பாடலை சேர்த்தேன். பாடலிலிருந்து ஒலியை மட்டும் பிரிக்க யெஸ்ஸெல் நரசிம்மன் உதவினார். பாடலை விஜயன் ஒளிப்பதிவில் சேர்த்தார்.

மல்லை சிற்பியர் வாழ்த்து

கல்லே தகளியா கற்பனையே நெய்யாக
பல்லவன் கட்டளை இடுதிரியா – மல்லை
ஆழி கரையோரம் உளியால் விளக்கெடுத்தார்
வாழி எம் சிற்பியர் புகழ்.

இதை அலமேலு பெரியம்மா பாடிய ஒலிப்பதிவு இங்கே


தொடர்புடைய கட்டுரைகள் சுட்டிகள்

1.    காஞ்சி கைலாசநாதர் கோயில்  – காணொளி (வீடியோ)
2.    அதிமானம் அதி அற்புதம் – திருமதி ராதிகா பார்த்தசாரதி கட்டுரை
3.    ராஜசிம்ம பல்லவேச்சுரத்தின் ஓவிய எழுத்து
6.    2000 ஆண்டுகளாக மாமல்லபுரம் – காணொளி (வீடியோ)
7.  முதல் ஆழ்வார்களின் பாசுரங்கள
8.  Swaminathan Natarajan's blog on Kanchi Kailasanatha temple 

 துக்கடா - அலமேலு பாடிய மற்ற சில பாடல்கள்

 மன்மத லீலையை வென்றார் உண்டோ (படம் - ஹரிதாஸ்)


வள்ளலை பாடும் வாயால் (படம் : சிவகவி)

வள்ளலை பாடும் வாயால் தியாகராஜ பாகவதர் பாடியது

பாலும் தெளிதேனும் (விநாயகர் அகவல்)


உப்புமா கிண்டி பாரடி

Saturday 12 March 2016

Statistics on Biology - please help

Friends I'd like some help collecting statistics. This is also an experiment using my blog as a tool. (I'm also doing this on Facebook). You may remember terms like species, genera, order, phyla etc from school biology. In the comments section please answer the following.
A. What's the highest level of category of Living Things which you can remember?
B. How many subdivisions of that level are there, what are they? List them please. (Not the hierarchy from highest to lowest)
C. Now this is mainly what i want. Look up your son's or daughters science or biology text book. Now list those answers, with your 1. city/country 2. Board of education, abbreviation will do. CBSE, state etc. 3. Class in which your son or daughter is studying. 4. Answers to A and B as listed in that book.
For A & B **Please** don't look up Wikipedia, or biology websites to answer these. I want to know what *you studied* in school, NOT what you learnt afterwards
If you still have some textbook from your school, that will be fantastic.