மோகன் ஹரிஹரன் அறிமுகமானதும் அவருடன் நட்புண்டானதும் அவரால் பல சொற்பொழிவு வாய்ப்புகளும் இச்சமயம் சவீதா கல்லூரியில் ஆசிரியனாக வேலை கிடைத்ததையும் முன்பே இவ்வலைப்பூவில் எழுதியுள்ளேன். அவரோடு முகநூலில் வாட்சாப்பில் பல உரையாடல்கள், அங்குமிங்கும் பல பயணங்கள்.
சென்ற 2024 அக்டோபர் 5 இறைவனடி சேர்ந்தார்.
2018ல் காஞ்சி கலை உலா சென்ற போது ஒரு கோயிலில் நான் பேசும் குறும் காணொளியை முகநூலில் பகிர்ந்து, என் பிறந்தநாளுக்கு வாழ்த்தாக இந்த கவிதையையும் புனைந்து பகிர்ந்தார். இரண்டு நாள் முன்பு நினைவுத்தூண்டலாக முகநூலில் வந்தது. அவர் எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். என்னை புகழும் கவிதையாயினும் “சாத்வீக அஹங்காரம்” என்ற வகையில் இதை இங்கே பதிவேற்றுகிறேன்.
-----------------
நுனிப்புல் மேயும் கிளிகள்காள்
இங்கே வம் ,யாம் இரண்டொன்று உளரிடுவேன்!
ஆழப்படிக்க அச்சமுறும் எமக்கு
தேடிப் பிடித்துக்கொடுப்பாய் உளங்கனிந்து!
கோபுயரக் கலை உள்வாங்க,அளிப்பார் !
ஓவியப் பூச்சின் அஜந்த சூட்சமங்களறிய
காவியக் கதை பலவும் களமிறங்குவார்!
அறிவியல் காட்டில் இனம் காட்டி எமை
பரிவுடன் பாதைகாட்டி பகிர்வார் !
வான்வழி அறிவியரோ வராரஹமிஹரோ இவர்!
எடிஸனுக்கும் அடிசறுக்கும், அவரின் வால்மீகி வஷ்லவ்வென்றும்
எலிஸன் எவர்ரென்றும், மனதின் வரலாறு என்றொரு நூலுளதென்றும்
நாட்டையழிக்கவந்தவரெல்லாம் வெள்ளையரேயுன்தொரு பொய்யுரை,
எத்தனைபல எழுத சொற்களின்றித் தவிக்கிறேன் என ஆணியுரை !
செங்கிஸ்கான் முதலாய், பாபிங்டன் உள்வந்து தேவன் ஈராக, மதறாஸப்பட்டணத்தில் பாட்டரையும் பாங்குடனே பகிர்ந்தவர் !
புனைவதெல்லாம் பொய்யென்பதிக் காலம்!
நினைப்பதெல்லாம் வெற்றுப் புகழ்ச்சியென
வெறும் சொற்பூவால் சாற்றுவதில்லை இப்பாமாலை
ஆண்டுயர, எம் ஆயுளில் சிலநாள் சேர்த்தளிப்பதில்
சுகமுண்டு, சிரமில்லை மனமே !
ஆண்டுயர, எம் ஆயுளில் சிலநாள் கூட்டுவது பயமில்லை மனமே !
Rangarathnam Gopu 💐💐🙏🙏
----------------
No comments:
Post a Comment