Showing posts with label கேரளம். Show all posts
Showing posts with label கேரளம். Show all posts

Saturday, 5 September 2015

ஜோதிட ஆசிரிய பரம்பரை

பண்டிதர் நூலாசிரியர் பாரத குடியரசின் இரண்டாம் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், கிரகோரிய கேலண்டர் முறைப்படி செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள், ஆசிரியர்களின் தினமாக கொண்டாட படுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என்ற பழைய வாக்கில் ஆசிரியர்களுக்கு தொன்றுதொட்டு மரியாதை செலுத்திவருகிறோம். குரு பரம்பரை என்று சிலர் கொண்டாடுவதும் உண்டு. தமிழகத்தில் சிறப்பாக, நாதமுனிகள் தொடங்கி ஆச்சார்ய வைபவமும், சமண மத ஆசிரியர்களின் வரிசையும், கர்நாடக இசை உலகில் குரு பரம்பரையும் ஓரளவு நினைவில் பேணி வருவது வழக்கம்.

இந்திய ஜோதிட (விண்ணியல், வானியல்) நூல்களையும் அதன் கருத்துக்களையும் உரைத்த கே.வி.சர்மாவின் Facets of Indian Astronomy (“இந்திய விண்ணியலின் சில கோணங்கள்”) நூலை 2010இல் படித்தேன். அதில், கேரளத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவிந்த பட்டதாரிமுதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜராஜவர்மா வரை, ஒரு தொடர்ந்த குருபரம்பரையை சர்மா வரைந்திருந்தார். இவர்கள் கைரேகை, திருமணப் பொருத்தம் பார்க்கும் சாதாரண ஜோதிடர்கள் அல்ல. அத்துறையில் மிகச்சிறந்த முக்கியமான நூல்களை இயற்றியவர்கள்.

பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோண்மனி என்ற நூலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றினார். ஏழாம் நூற்றாண்டில் பிரம்மகுப்தர் இயற்றிய பிரம்ம ஸ்பூட சித்தாந்தம் என்ற நூலை தழுவி எழுதப்பட்ட இந்நூல், பாரதம் முழுதும் புகழ்பெற்று, ஜோதிடர்களின் ஆஸ்தான நூலாக நிலவியது. ஆனால் கேரளத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரியபடர் எழுதிய ஆரியபடீயமும், அதன் வழிவந்த பரஹிதம் என்ற நூலும் கோலோச்சியது. ஆரியபடீயம், பரஹிதம் முன்மொழிந்த முறைகளின் படி கணிக்கப்பட்ட பாதைகளுக்கும், நேரங்களுக்கும், கண்வழியே காணக்கூடிய கிரகங்களின் அசலான பாதைகளுக்கும் அவை வரும் ராசியின் இடங்களுக்கும் வேறுபாடுகளை கண்டு பரபரமேஷ்வரர் என்பவர் த்ருக்கணிதம் दृग्गणितम् என்ற நூலையும், அதன் ஆதார தத்துவத்தையும் எடுத்து சொன்னவர். அதாவது, கணிதம் சொல்லும் இடத்துக்கும் கிரகத்தின் அசலான இடத்துக்கும் கண்கூட வித்தியாசம் தெரிந்தால், கணக்கிலுள்ள பிழைகளை திருத்த வேண்டுமே தவிர, ஜோதிடர்களின் கணக்கிற்கு ஏற்ப கிரகங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது, என்றார். பார்த்துக் (த்ருக்) கணக்கு (கணிதம்) செய்யும் முறையை த்ருக்கணிதம் என்று பெயரிட்டார்.

இவரது சீடர் வழியில் பின் தோன்றிய நீலகண்ட ஸோமய்யாஜியை, புகழ்பெற்ற ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கலாஸ் காபர்ணிக்கஸுக்கு (Nikolas Copernicus) சமமாக சொல்லலாம். தந்திர சங்க்ரஹம் என்ற நூலை இயற்றிய நீலகண்டர், பூமியே பிரபஞ்சத்தின் மைய கிரகம் என்ற கருத்தில் மாறுபடாவிட்டாலும், புதன் வெள்ளி கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாக கருத்து உறைத்தார்.

பின்னர் வந்த ஜேஷ்டதேவர், கணித யுக்தி பாஷா என்ற நூலை இயற்றியவர். இவர் முன்மொழிந்த சில விதிகள், குறிப்பாக infinitesimals, கால்குலஸின் விதைகளுக்கு சமம் என்று சிலர் கருதுகின்றனர். இந்த குரு பரம்பரையை கீழ்வருமாறு கே.வி.சர்மா தன் நூலில் செப்பியுள்ளார்.

                 கோவிந்த பட்டாதிரி (1237-96)
சிஷ்யன்   பரமேஸ்வரனின் (1360-1430)
மகன்        தாமோதரன் (13??)
சிஷ்யன்   நீலகண்ட ஸோமய்யாஜி (1443-1555)
சிஷ்யன்   ஜேஷ்டதேவன் (1500-1600)
சிஷ்யன்   அச்யுத பிஸாரடி (1550-1621)
சிஷ்யன்   த்ரிப்பாணிகர பொடுவால் (15??)
சிஷ்யன்   நாவாயிகுலத்து ஆளாடி (16??)
சிஷ்யன்   புலிமுகத்து பொட்டி (1686-1785)
சிஷ்யன்   ராமன் ஆசான்(17??)
சிஷ்யன்   கிருஷ்ணதாஸன் (1756-1812)
சி  மங்கலரி தக்ஷிணாமூர்த்தி மூஸ்ஸது (17??-18??)
சி  நாலேகாட்டில் பாலராமன் பிள்ளை (18??)
சி  இளவரசன் ராஜராஜவர்மா (1812-1846)

தொடர்புடைய பதிவுகள்


3. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரை – அலமேலு பெரியம்மா ஒலிப்பதிவு

Sunday, 22 December 2013

Kerala - LMS

Green is the color of everything

Kerala 
where green is not the color of envy, because it is the color of everything.
where palmyra rhymes with coconut and raindrops serve for rhythm.
where water wages love and war, enriches land and redraws maps,
where roofs slope steeper than hills.

Where field is garden, garden is grove, groves are woods;
  and wood is material form function and philosophy, 
    and wood shapes thought as much as Man shapes wood.

Where custom is as rigid as attitudes are mellow; 
where tradition is pride and pride is tradition; 
and spices serve to supplement, not sublimate. 

Where oil lamps flicker in subdued splendor 
alongside the fluorescent grandeur of unabashed modernity.


Water, palmyra, coconut

Wood shapes thought
and Thought shapes wood

Similar sketches 

Chola greenery - LMS
Kumbakonam - LMS
Traffic - LMS
Landscape of Polur (Tamil)

Thursday, 19 December 2013

கேரள சுவரோவியங்கள்

கேரளக் கோவில்களில் நம்மை புகைப்படம் எடுக்க விடுவதில்லை. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள் கோயில்களில் கூட இதை அனுமதிப்பதில்லை. சன்னிதி மட்டும் அல்ல, சுற்றுப்புற சுவர்களில் உள்ள ஓவியங்களை படம் எடுக்க கூட அனுமதி இல்லை. நாட்டில் மற்ற மாநிலங்களில் இந்த கட்டுப்பாடு இல்லை.

நவம்பர் 29 திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயிலில் கருவரையை சுற்றி பல ஓவியங்களை நானும் நண்பர் சிவாவும் பார்த்து ரசித்தோம். வேறு எந்த பக்தருக்கும் இதில் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் மூலவரை தரிசனம் செய்து, ஆசிர்வாதம் வாங்கி கொண்டு, குங்குமம் பூ இத்யாதி பிராசதம் வாங்கினால் போதும் என்று கூட்டத்தோடு முட்டி மோதியபின், ஓவியத்தை கண்டுகொள்ளாமல் சென்று விட்டனர். திருச்சூர் அருகே உள்ள திரிப்பரையாறு ராமர் கோவிலிலும், திருச்சூர் பூரம் அன்று அலங்கார யானைப்படை மிரட்டும் வடக்கும்நாதன் கோவிலிலும் இதே நிலை. 


நவம்பர் 26 திரிப்பரையாறு ராமர் கோவிலில் வட்டமான கருவரையின் வெளிச்சுவரில் உள்ள நாயக்கர் பாணி ஓவியங்களை முக்கால் மணி நேரம் நின்று ரசித்து பார்த்தப்போது ஒரு அர்ச்சகர் அருகே வந்து “ஆர்க்காலஜியோ?” என்றார். அதாவது : நீ தொல்லியல் துறையில் வேலை செய்பவனா, என்று வினா; இல்லை என்றேன். வடக்கும்நாதன் கோவிலில் மூலவர் சந்நிதியும் அதனருகே சங்கரநாராயணர் சந்நிதியும் வட்டவடிவில் சுவரமைத்து, அச்சுவர்களில் நாயக்கர் காலத்து அல்லது நாயக்கர் பாணி ஓவியங்கள் இருக்கும். சிவ புராணம் தான். சதுர வடிவில் அங்கு ஒரு ராமர் சந்நிதியும் உண்டு. அதன் சுவற்றில் ரவிவர்மா பாணியில் ராமாயண ஓவியங்கள் உள்ளன. ராமரும் சகோதரர் மூவரும் மணம் செய்யும் காட்சியில் ராமருக்கும் சீதைக்கும் மட்டும் தலைக்குப்பின் வட்டபிம்பம் இருக்கும். இங்கு அர்ச்சகர் ஆர்க்காலஜியா என்று கேட்கவில்லை.

நவம்பர் 28 கொச்சி நகரில் கொச்சி மன்னருக்கு போர்ச்சுகீசியர் கட்டிக்கொடுத்த மட்டஞ்சேரி அரண்மனையின் படுக்கை அறையிலும் நாயக்கர் பாணி ராமாயண காட்சிகள் உண்டு – புகைப்பட அனுமதி இல்லை. இங்கு ஆர்க்காலஜியினர் நீ அர்ச்சகரா என்று கேட்கவில்லை. கம்பீரமாக ஸ்லோகமோ மந்திரமோ ஓதியிருக்கவேண்டும் – வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டேன்.
நாள் கணக்கில் முன்னுக்கு பின் முரணாக, அனந்தன் சந்நிதியில் பாதியில் விட்டு எழுதுவதால், இப்படியே எல்லா கட்டுரைகளும் எழுதும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் என்னை வேலைக்கெடுத்துக்கொள்ளும் என்று வாசகர் அச்சம் கொள்ள வேண்டாம். வேலை கெடுத்துக்கொள்ளாது. அங்கே இருவரும் பார்த்துக்கொண்டிருக்க, பூசைக்கு நேரமாச்சு இடத்தை காலி செய்யுங்கள் என்று ஒரு அர்ச்சகர் அன்பாக துரத்தினார். முக்கால் மணிநேரத்தில் மீண்டும் திறப்போம் சிறப்பு தரிசனம் காண எல்லீரும் வாரீர் என்று அன்புடன் வேறு ஒரு அர்ச்சகர் அன்பாக அழைத்தார். 

வேலை இருந்ததால் சிவா கான்ஃபரன்ஸுக்கும், வேலை இல்லாததால் ஊர்சுற்ற நானும் அன்புடன் நகர்ந்தோம். அன்ன்பூர்ணா என்று ஒரு சைவ உணவகத்திற்கு மதிய உணவுக்கு சென்றேன். 70 ரூபாய்க்கு இலைச்சாப்பாடு – பருப்பு, சாம்பார், மோர்குழம்பு, ரசம், தயிர், அவியல், அப்பளம், கூட்டு பொரியல்; இவற்றுடன் சூடாக பொடாசியம் பெர்மாங்கனேட் கலரில் கருங்காலி வெள்ளம். ரசித்து ருசித்து அருந்தினேன்.

அந்த உணவகத்தின் சுவர்களில் பத்மநாபசுவாமி கோவிலின் கருவறை வெளிச் சுவர்களில் உள்ள ஓவியங்களை போலவே, அதே பொலிவுடன், அதே ஓவியர் தீட்டியது போல், பல சிவ விஷ்ணு ஓவியங்கள். புகைப்படம் எடுத்தால் ஆர்க்காலஜியோ என்று வெய்ட்டர் கூட கேட்கவில்லை.

கண்டு ரசிக்கவும். உண்டும் ரசிக்கலாம்.