Showing posts with label நீலகண்டர். Show all posts
Showing posts with label நீலகண்டர். Show all posts

Saturday, 5 September 2015

ஜோதிட ஆசிரிய பரம்பரை

பண்டிதர் நூலாசிரியர் பாரத குடியரசின் இரண்டாம் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், கிரகோரிய கேலண்டர் முறைப்படி செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள், ஆசிரியர்களின் தினமாக கொண்டாட படுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என்ற பழைய வாக்கில் ஆசிரியர்களுக்கு தொன்றுதொட்டு மரியாதை செலுத்திவருகிறோம். குரு பரம்பரை என்று சிலர் கொண்டாடுவதும் உண்டு. தமிழகத்தில் சிறப்பாக, நாதமுனிகள் தொடங்கி ஆச்சார்ய வைபவமும், சமண மத ஆசிரியர்களின் வரிசையும், கர்நாடக இசை உலகில் குரு பரம்பரையும் ஓரளவு நினைவில் பேணி வருவது வழக்கம்.

இந்திய ஜோதிட (விண்ணியல், வானியல்) நூல்களையும் அதன் கருத்துக்களையும் உரைத்த கே.வி.சர்மாவின் Facets of Indian Astronomy (“இந்திய விண்ணியலின் சில கோணங்கள்”) நூலை 2010இல் படித்தேன். அதில், கேரளத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவிந்த பட்டதாரிமுதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜராஜவர்மா வரை, ஒரு தொடர்ந்த குருபரம்பரையை சர்மா வரைந்திருந்தார். இவர்கள் கைரேகை, திருமணப் பொருத்தம் பார்க்கும் சாதாரண ஜோதிடர்கள் அல்ல. அத்துறையில் மிகச்சிறந்த முக்கியமான நூல்களை இயற்றியவர்கள்.

பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோண்மனி என்ற நூலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றினார். ஏழாம் நூற்றாண்டில் பிரம்மகுப்தர் இயற்றிய பிரம்ம ஸ்பூட சித்தாந்தம் என்ற நூலை தழுவி எழுதப்பட்ட இந்நூல், பாரதம் முழுதும் புகழ்பெற்று, ஜோதிடர்களின் ஆஸ்தான நூலாக நிலவியது. ஆனால் கேரளத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரியபடர் எழுதிய ஆரியபடீயமும், அதன் வழிவந்த பரஹிதம் என்ற நூலும் கோலோச்சியது. ஆரியபடீயம், பரஹிதம் முன்மொழிந்த முறைகளின் படி கணிக்கப்பட்ட பாதைகளுக்கும், நேரங்களுக்கும், கண்வழியே காணக்கூடிய கிரகங்களின் அசலான பாதைகளுக்கும் அவை வரும் ராசியின் இடங்களுக்கும் வேறுபாடுகளை கண்டு பரபரமேஷ்வரர் என்பவர் த்ருக்கணிதம் दृग्गणितम् என்ற நூலையும், அதன் ஆதார தத்துவத்தையும் எடுத்து சொன்னவர். அதாவது, கணிதம் சொல்லும் இடத்துக்கும் கிரகத்தின் அசலான இடத்துக்கும் கண்கூட வித்தியாசம் தெரிந்தால், கணக்கிலுள்ள பிழைகளை திருத்த வேண்டுமே தவிர, ஜோதிடர்களின் கணக்கிற்கு ஏற்ப கிரகங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது, என்றார். பார்த்துக் (த்ருக்) கணக்கு (கணிதம்) செய்யும் முறையை த்ருக்கணிதம் என்று பெயரிட்டார்.

இவரது சீடர் வழியில் பின் தோன்றிய நீலகண்ட ஸோமய்யாஜியை, புகழ்பெற்ற ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கலாஸ் காபர்ணிக்கஸுக்கு (Nikolas Copernicus) சமமாக சொல்லலாம். தந்திர சங்க்ரஹம் என்ற நூலை இயற்றிய நீலகண்டர், பூமியே பிரபஞ்சத்தின் மைய கிரகம் என்ற கருத்தில் மாறுபடாவிட்டாலும், புதன் வெள்ளி கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாக கருத்து உறைத்தார்.

பின்னர் வந்த ஜேஷ்டதேவர், கணித யுக்தி பாஷா என்ற நூலை இயற்றியவர். இவர் முன்மொழிந்த சில விதிகள், குறிப்பாக infinitesimals, கால்குலஸின் விதைகளுக்கு சமம் என்று சிலர் கருதுகின்றனர். இந்த குரு பரம்பரையை கீழ்வருமாறு கே.வி.சர்மா தன் நூலில் செப்பியுள்ளார்.

                 கோவிந்த பட்டாதிரி (1237-96)
சிஷ்யன்   பரமேஸ்வரனின் (1360-1430)
மகன்        தாமோதரன் (13??)
சிஷ்யன்   நீலகண்ட ஸோமய்யாஜி (1443-1555)
சிஷ்யன்   ஜேஷ்டதேவன் (1500-1600)
சிஷ்யன்   அச்யுத பிஸாரடி (1550-1621)
சிஷ்யன்   த்ரிப்பாணிகர பொடுவால் (15??)
சிஷ்யன்   நாவாயிகுலத்து ஆளாடி (16??)
சிஷ்யன்   புலிமுகத்து பொட்டி (1686-1785)
சிஷ்யன்   ராமன் ஆசான்(17??)
சிஷ்யன்   கிருஷ்ணதாஸன் (1756-1812)
சி  மங்கலரி தக்ஷிணாமூர்த்தி மூஸ்ஸது (17??-18??)
சி  நாலேகாட்டில் பாலராமன் பிள்ளை (18??)
சி  இளவரசன் ராஜராஜவர்மா (1812-1846)

தொடர்புடைய பதிவுகள்


3. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரை – அலமேலு பெரியம்மா ஒலிப்பதிவு

Monday, 3 November 2014

ஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்

பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.

ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||

हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे 
ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते 

இது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.


“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.

ஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர்.  “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.


ஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்
குறிக்கும் எழுத்து
குறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0

க, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி!) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள் மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்! உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).

கடபயாதி
क க ङ ங च ச झ _ ञ ஞ
ट ட ण ண त த ध _ न ந
प ப म ம
य க र ர ल ல व வ श ஷ ष ஷ स ஸ ह ஹ
1 2 3 4 5 6 7 8 9 0

இந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு? வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.


அஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கண என்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு,  அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.

தான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர். 

Thursday, 30 October 2014

A Sloka, A Pun, A Number, A Date, A Book

हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे । ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते ॥ hE vishNo nihitaM kRtsnam jagat tvayyEva kaaraNE | jyOtishaaM jyotishE tasmai namO naaraayaNaaya tE || ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே | ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே || The opening verse of Nilakanta Somayaaji's work on astronomy "Tantra Sangraha" translated into English with excellent notes, by Professor K Ramasubramaniam of IIT Bombay and Professor MS Sriram of Madras University.
The verse is a salutation to Vishnu & Narayana -
"Oh Vishnu, creator of everything, you are the cause of the earth Jyothishas shine because of you, I salute you Narayana" is the meaning.

Narayana is not just a second reference to Vishnu but a reference to Netra Narayana, the king who was the benefactor of Nilakanta!!

Sloka letter हे विष् णो नि हि तं कृत्स् नं
Active letter
Number 8 4 5 0 8 6 1 0

Also, there is a hidden numerical reference - the first 8 letters हेविष्णो निहितं कृत्स्नं translated into an AhargaNaa अहर्गणा number 1680548 according to the Katapayaadi system. That is the number days that have passed since the start of the Kali Yuga in the Hindu astronomical reckoning. Kali Yuga starts on the day Mahabharatha ended, on Feb 17, 3102 BC according to a system used by Indian astronomers. So 1680548 would translate to the day March 22, 1500 AD : this is Nilakanta Somasatvan's way of encoding the date of his composition in the first sloka of his work, say the translators!!