Showing posts with label டீஸல். Show all posts
Showing posts with label டீஸல். Show all posts

Wednesday, 21 January 2015

எமீல் லெவஸார்


எமீல் லெவஸார்
இன்று ஜனவரி 21 எமீல் லெவஸாரின் பிறந்தநாள்.

யார் அவர்? கேள்விப்பட்டதேயில்லையே! 

இருக்கட்டும் : ஆசீவகம், வாலஸ் போன்று தான் இவரும். ஜனவரி 8 வாலஸின் பிறந்த நாள். புணேவில் இருந்ததால் தவறவிட்டுவிட்டேன், அடுத்த வருடம் எழுதுகிறேன்.

எமீல் லெவஸார்காரின் மூத்த முதல் தச்சன். டீஸல் எஞ்ஜினை உருவாக்கி அதற்கு பெயர் கொடுத்த ருடால்ஃப் டீஸலை அறிந்துளோம். காரை உலகிற்கு அறிமுகம் செய்த கார்ள் பென்ஸ் கூட தெரியும் – அவர் பெயரில் பொறியியல் திறனுக்கும் சொகுசுக்கும் புகழ்பெற்ற சிறந்த ஜெர்மானிய கார்களை உலகமே அறியும்.

பென்ஸ் செய்த கார் என்ன? பழைய குதிரைவண்டியில் குதிரையை கழட்டிவிட்டு மூன்றாவது சக்கரத்தை பொருத்தி, ஆசனத்துக்கு கீழே (விசையை) எஞ்ஜினை பொருத்தி, பிரேக்கில்லாத, கியரில்லாத, (அதனால் க்ளட்சும்மில்லாத) சைக்கிள் சங்கிலி வண்டியைதான் படைத்தார் கார்ள் பென்ஸ். இதை கார் என்று சொல்வது குறுநில மன்னரை திரிபுவன சக்கரவர்த்தி என்று புலவர்கள் புகழ்ந்தது போலாகும். உலகின் முதல் மீன்பாடி வண்டியை உருவாக்கினார் பென்ஸ்.

அவரை விட அவரது திறமையில் அதிக நம்பிக்கை வைத்திருந்த அவரது மனைவி பெர்த்தா, தனது வரதட்சணை செல்வத்தால் கணவர் கார்ளின் வியாபாரத்தை காப்பாற்றியது போதாது என்று, தன் மகன்களை ஏற்றி, கணவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, காரை 65 கிலோமீட்டர் ஓட்டி உலக சாதனை படைத்தார். சுவாரசியமான கதை – ஆங்கிலத்தில் இங்கு படிக்கவும்

மேடுகளில் ஏற இந்த வண்டி பட்ட கடினத்தால், அதை சரி படுத்த கியர் அமைப்பை காரில் சேர்த்தார் பென்ஸ். 

இந்த மீன்பாடி வண்டிகளையே “கார்” என்று சொல்லி பிற்காலத்தில் ஜெர்ம்னியின் டெய்மலர் கம்பெனியும் விற்று வந்தது. ஒரு வருடத்திற்கு சில நூறு கார்களே இவர்கள் தயாரித்தனர்.

லெவஸார் இன்றைய காரின் அடிப்படை வடிவம் அமைத்தவர். ஆசனத்தின் கீழே இருந்த எஞ்ஜினை முன்னே வைத்தார். இதனால் டிரான்ஸ்மிஷன் ஆகஸல் அமைப்புகள் ஒரு முக்கிய வடிவமும் மாற்றமும் பெற்றன. கியரை ஒன்றிணைத்த கியர் பெட்டியை அறிமுகம் செய்தார். கியர் அமைப்பை சரியாக வேலைப்படுத்த கிளட்ச்சை அறிமுகப்படுத்தினார்.

எஞ்ஜின் பொருத்திய குதிரைவண்டியாக நினைக்காமல் காராக முதலில் கருதி படைத்தவர் எமீல் லெவஸார் என்கிறார் வஷ்லவ் ஸ்மில், Creating the Twentieth Century என்ற நூலில். 

ஆங்கிலமும் காரும் தெறிந்தவருக்கு வஷ்லவ் ஸ்மில்லின் வாக்கியங்களை ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

Says Vaclav Smil: “Emille Levassor, designed the first vehicle which not merely a horseless carriage. He also designed the clutch, gear box and transmission which mechanism still drives cars today, and “so must be give the honor of having led the development of the motor-car”. Leavassor, moved engine from under the seats and placed it in front of the driver, a shift that placed the crankshaft parallel with the car’s principal axis rather than parallel with the axles.”



பெட்ரோல் எஞ்ஜினை படைத்த நிக்கலஸ் ஆட்டோவின் நினைவு நாள் ஜனவரி 26. 

ஒத்த பதிவுகள்

1. எடிசனின் வால்மீகீ - வஷ்லவ் ஸ்மில்
2. டிசம்பர் 31 - செல்வத் திருநாள்
3. டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி

Friday, 15 November 2013

டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி


கிமு 1900 இல் உலக ஜனத்தொகை 200 கோடியை எட்டியது. அங்கும் இங்கும் அவ்வபொழுது பஞ்சம் நிலவியது. காளையும் குதிரையும் ஏரில் பூட்டியே விவசாயமே யதார்த்தம். இதற்கு ஜப்பான் நாடு விதிவிலக்கு – 1940கள் வரை, அன்னாட்டில் மனிதர்களே ஏர் இழுத்து உழுதனர். ஏனெனில், ஜப்பானின் ஜனத்தொகை அதிகம் நஞ்சை நிலம் குறைவு. மாட்டுக்கும் தீனி போடும் அளவு நெல் வளர்க்க நிலம் போதவில்லை.

1880க்களில் ஜர்மனியில் ருடால்ஃப் டீஸல், நிக்கலோஸ் ஆட்டோ, கார்ள் பென்ஸ் ஆகியோர் டீஸல் பெட்ரோல் எஞ்ஜின்களை உருவாக்கினர். டீஸல் இஞ்ஜின் பொருத்தி டிராக்டர், ஹார்வஸ்டர், புல்டோஸர் போன்ற விவசாய துறைக்கு ஏற்ற வண்டிகள் வந்தன. காளைகளும் குதிரைகளும் ஏரிழுக்கும் காலம் தேய்ந்தது. போக்குவரத்து வண்டிகளான மாட்டுவண்டியும் குதிரைவண்டியும் வேகமாக மறைந்து கார்களும் பஸ்களும் லாரிகளும் பறவின. பொது போக்குவரத்தில் கரிப்புகை ரயில்வண்டியை விட இவையே பெரும் புரட்சி செய்தன.

நாம் அரிசியும் கோதுமையும் சோளமும் கம்பும் காய்கறிகளும் மனிதருக்கு வளர்க்கும் உணவாகவும், வைக்கோலும் புல்லுமே கால்நடை விலங்குகளின் உணவாக நினைக்கிறோம். ஆனால் கால்நடைகளுக்கு புல் வளர்க்க எத்தனை நிலம் வேண்டியிருக்கும்? அன்றைய ஜனத்தொகையான 200 கோடியில் எத்தனை நபருக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் இருந்தன? 700 கோடி மக்களுக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் தேவை பட்டால் அந்த மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் எத்தனை புல்லும் நெல்லும் வேண்டும்? அதற்கு எவ்வளவு நிலம் வேண்டும்? டீசல் பெட்ரோல் இஞ்ஜின் வாகனங்கள் வந்த பின் கோடிக்கணக்கான மாடுகளும் குதிரைகளும் தேவையற்று போயின. அவற்றிர்கு உணவு வளர்க்க தேவையான நிலமும் குறைந்தது. விளைநிலங்களின் வளர்ந்த உணவுகளில் மூன்றில் இரண்டு பகுதி கால்நடைகளுக்கு வேண்டியிருந்தன, என்கிறார் மாட் ரிட்லி, ’The Rational Optimist’ புத்தகத்தில். [கேள்வி: ’The Rational Optimist’ என்பதை தமிழில் எப்படி மொழிப்பெயர்க்கலாம்?]

டிராக்டரும் லாரியும் ஹார்வஸ்டரும் உழவை நேரடியாக மாற்றின. அதாவது கால்நடைகளால் உழ இயலும் நில அளவை பெருக்கின; உழும் வேகத்தை அதிகரித்தன; அவற்றிர்க்கு செலவாகும் உணவு வளர்க்கும் நிலதின் அளவை மிகவும் குறைத்தன. இது உணவு தயாரிக்கும் முறையில் நடந்த பெரும் புரட்சி.

ஆனால் பஞ்சமும் பசியும் தீர படைக்கும் திறன் மட்டுமே போதாது. பஞ்சம் நிலவும் ஊர்களுக்கும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் பயிர் மிகுதி உள்ள இடங்களிலுருந்து பெரும் அளவில் கொண்டு வர வேண்டும். காரும் பஸ்ஸும் லாரியும் வந்ததால் உலகெங்கும் தார் சாலைகள் போடப்பட்டன. மாத கால பயணம் சில நாளளவிலும் நாளளவு பயணம் சில மணிநேரங்களிலும் குறைந்தது டீஸல் எஞ்ஜின்களால் தான். இருபதாம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒழிக்க டீஸல் எஞ்ஜின் இன்றி அரசுகளுக்கு திறன் இருக்காது.
நல்லெண்ணமோ அறியாமையோ, கார்களின் புகையிலும் நிலக்கரி மின்சார நிலையங்களாலும் சுற்றுச்சூழல் அழிந்தது ஐயோ ஐயோ என்று புலம்பும் ஆர்வலர்களும், ஓலத்தை பெரிதாக்கும் ஊடகங்களும் ஓயாத ஒப்பாரி பாடும் போது, இவை சொகுசுகள் மட்டுமல்ல, இவையின்றி பஞ்சமும் வருமையும் உலகில் கோலோச்சும் என்று நாம் உணர வேண்டும்.

ஹாபர்பாஷ் ரசாயன முறையும், நார்மன் போர்லாக்கின் பசுமை புரட்சியும் உழவு தொழிலை நேராக மாற்றின. ருடால்ஃப் டீசலும் நிக்கலாஸ் ஆட்டோவும் கார்ள் பென்ஸும், போக்குவரத்தை மட்டுமல்ல உழவையும் பிரம்மாண்டமாக மாற்றி புரட்சி செய்தனர். இதுவே நவீன உலகின் முதல் பசுமை புரட்சி என்றும் சொல்லலாம். பெரும் கல்லணைகளாலும் நீர் குழாய்களாலும் விவசாயம் பெருகியதை நான் மறக்கவில்லை. அவற்றின் பாதிப்பின் அளவு தெரியாததால், குறிக்காமல் விடுகிறேன்.



மாட் ரிட்லியின் புத்தகமும், இணையத்தில் அவரது உரைகளும், வச்லாவ் ஸ்மில், ஹுவான் எனிர்கே ஆகியோரின் உரைகளும் படித்தும் பார்த்தும் இக்கட்டுரை எழுதினேன். ஆங்கிலத்தில் இந்த கட்டுரை இங்கே.