Showing posts with label food. Show all posts
Showing posts with label food. Show all posts

Tuesday, 10 August 2021

அளிந்தது நெல்லளவு

ஆறு மாதமாக மதிய சாப்பாட்டுக்கு அரிசி அளிந்து, ஊரவைத்து, குக்கரில் பொங்க வைக்கிறேன். அம்மா இருக்கும்போதே சொல்லிக்கொடுத்த பழக்கம். சமையலுக்கு வீட்டில் ஆளில்லாத போது பள்ளி காலத்திலேயே பழகிவிட்டது. கூடவே, பாத்திரம் கழுவவும், துணி தோய்க்கவும் என் பத்து வயதிலேயே அம்மா கற்றுக்கொடுத்தாள். அமெரிக்கா வாழ்க்கையில் இதெல்லாம் உதவியது. 

அரிசியை அளிந்து, அழுக்கு நீரை வடிகட்டும் போது அவ்வப்போது, தூசி, மணல், ஓரிரு சிறு கற்கள், வழி தவறிய தானியம் எல்லாம் மாட்டும். அவ்வப்போது ஓரிரு புழு பூச்சி கூட மாட்டும். ஆனால அமெரிக்காவில் அரிசியில் புழு பூச்சி எதுவும் இருந்த ஞாபகமில்லை. 

பள்ளி பருவத்தில் பாலோ, பாலில் கலந்த போர்ண்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ் அருந்துவோம். அவ்வப்போழ்து சக்கரையிலிருந்த எறும்பு பாலில் மிதக்கும். எறும்பிருந்தால் எறும்பை தூக்கிப்போட்டு விட்டு பாலை குடித்த ஞாபகம். ஈ இருந்தால் பாலையே கொட்டிவிடுவோம், குடிக்கமாட்டோம். பள்ளிக்கால நண்பர்கள், குறிப்பாக அசைவம் சாப்பிடும் நண்பர்கள், இதை நான்வெஜிடேரிய பால், நான்வெஜிடேரியன் காபி, பூஸ்ட் என்று கிண்டலடிப்பார்கள். ஒரு முறை நூட்ரமுல் பொடியில் கறப்பு செத்துகிடந்து. எனக்கு போட்டுக்கொடுத்து நான் குடிக்கும் போது என் தங்கை தம்பிக்கு நூட்ரமுல் பொடி எடுக்கும் போது அம்மா செத்த கறப்பான்பூச்சியை பார்த்து அலரி என்னிடம் குடிக்காதே என்று எச்சரித்தாள். அதன் பிறகு ஒரு வாரம் பாலே குடிக்கவில்லை. ஒரு வருடம் நூட்ரமுல் பார்த்தாலே கொமட்டும், இன்னொருவர் வீடு என்றாலும். 

கல்லூரிகாலத்தில் நான்காம் ஆண்டில் முதல் முதலாக சில நண்பர்கள் நான் அவர்களுக்க பிராஜக்டிற்கு உதவியதற்கு நன்றியாக ராஜபாளையத்தில் கந்தர்வா ஹோட்டலில் விருந்துக்கு அழைத்தார்கள். அனைவரும் அசைவம் நான் மட்டும் சைவம். முதன் முதலில் ஒரு அசைவ ஹோட்டலில் கால் வைத்தேன். நான் ஒரு மேசை, சைவம் சாப்பிட்டேன், அவர்கள் அடுத்த மேசை; அசைவம். நூட்ரமுல் அளவுக்கு மோசமில்லை எனினும், இனிமேல் அசைவ ஹோட்டல் வாசப்படி மிதிப்பதில்லை என்று மனதளவு சொல்லிக்கொண்டேன்.

ஒரு வருடம் கழித்து மேல்படிப்பு படிக்க அமெரிக்கா பயணம். வாரம் மூன்று நாளாவது சப்வே, பிட்சா, பரிட்டோ என்று அசைவமும் விற்கும் கடைக்கு சென்று சாப்பிடவேண்டும். வாங்குவது சாப்பிடுவது சைவமானாலும், அதே மேடையில் அசைவ உணவும் இருக்கும். ஏன் காந்தி, ராமானுஜனெல்லாம் பாரதம் திரும்பிய பின் ஜாதிப்ரஷ்டம் செய்யப்பட்டனர் என்று புரிந்தது. ஒரு வாரம் மாமா பழக்கிவிட்டார். பிறகு நானும் பழகிவிட்டேன். 

ஆனால் அமெரிக்காவில் அசைவ உணவகத்திலும் அசைவ வாசனை வராது. அவர்கள் உணவில் சமைக்கும் போது உப்பை கூட போடமாட்டார்கள் (அதனால் தான் டேபிளில் உப்பு மிளகு தனியாய் இருக்கும்). இந்திய அசைவ சமையலில் முக்கால் வாசனை அதில் சேர்க்கும் மசாலா வகைகள் என்று தெரிந்து கொண்டேன். அதனால் பெரும்பாலும் சகித்து கொள்ள முடிந்தது. மாறாக நம் சைவ உணவுகளின் வாசனை, பல அமெரிக்கர்களை திகைக்க வைத்தன என்று புரிந்தது. நியு யார்க் ஏர்போர்ட்டில் மாமாவின் பெருங்காய டப்பியை மோந்து பார்த்து திணரிப்போன கஸ்டம்ஸ் அதிகாரி, “இதையா உங்கள் சாப்பாட்டில் கலக்கிறீர்கள்?” என்று பரிதாபமும் வியப்பும் கலந்து கேட்டாராம். 

இந்திய உணவுகளை பல நகரங்களில் அமெரிக்கர்கள் விரும்பியே அருந்துகின்றனர். சீன உணவை தவிற, மற்றபடி இத்தாலிய, மெக்சிக, பாரசீக, தாய்லாண்டு, முக்கியமாக எத்தியோப்பிய உணவை.... எல்லாவற்றிலும் சைவம் உண்டு... மிக சுவையாக இருக்கும்... அமெரிக்காவில் தான் எனக்கு அறிமுகம். வடக்கு இந்திய உணவு என்றால் சோளே பட்டூரா, நான், பனீர் பட்டர் மசாலா என்ற ஞான சூனியமாக இருந்தேன். கலிபோர்ணியாவில் தான் முதல் முறை குஜராத்தி உணவு ருசித்தேன். 

பற்பல இடங்களில் இது சைவமா இல்லையா என்று யோசித்து சாப்பிடவேண்டியதும், மதுபானங்கள் காபி டீ போன்ற அன்றாட பண்பாட்டு சின்னங்கள் என்பதும், நான் மீண்டும் பாரதம் திரும்ப பல காரணங்களில் ஒரிரு காரணங்கள். அதற்குள் இந்தியாவிற்கு பிட்சா, சப்வே, பரிட்டோவில்லாம் வந்துவிட்டன. நிற்க. 

இந்த வருடம் ஜனவரி முதல் அரிசி அளிந்து சாதம் வைக்கும் போது ஓரிரு பூச்சி சிக்கும். எறும்பு மிதந்த நான்வெஜிடெரியன் காபி போல் பூச்சி மிதந்த நான்வெஜிடேரியன் அரிசியோ? 

ஒரு மாசத்தில் பூச்சித்தொகை பிரம்மாண்டமாக பெருகிவிட்டது. ஒரு சின்ன டம்பளரில் அரிசி எடுத்து அதை தண்ணீரில் அலம்பும் முன், ஒரு தட்டில் போட்டு, பூச்சி புழுக்களை கொல்லாமல், ஒதுக்கி ஜன்னல்மேல் விட்டுவிட்டு, அரிசி அலம்பலாம் என்று முடிவெடுத்தேன். டம்ப்ளர் அரிசியை ஏழு எட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாக தட்டில் பரப்பி, பூச்சிகளை புழுக்களை ஓரம் தள்ளி, பாக்கி அரிசியை பாத்திரத்தில் கொட்டி... ஒவ்வொரு தட்டு குவியலிலும் ஒரிரு பூச்சி அல்லது புழு என்று ஜூலை மாத ஆரம்பம் சென்றது. ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு தட்டு குவியலிலும் நாலைந்து பூச்சி. புழுக்களெல்லாம் கடைசி இரண்டு தட்டில் மட்டும். அந்த ஜன்னலில் விட்ட பூச்சி எல்லாம் எங்கோ மாயமாக சென்றுவிடுகின்றன. அந்த பூச்சகிள்ளுக்கு முதல் வாரம் ஓரிரு நெல்லை ஜன்னலில் வைத்தேன். ஒரு முறை ஒரு புழுவை மூன்று எறும்புகள் இழுத்து செல்வதை கவனித்தேன். சிபிச்சக்கரவர்த்தி பிரச்சனை. 

எத்தனை பூச்சிகளை விடுவித்தாலும் எப்படியேனும் மிகமிகச்சிறிதான ஓரிரு பூச்சி அலசலில் தப்பித்து, அலம்பும் நீரில் மூழ்கி சாகும். 

சமீபத்தில் சங்கரநாராயணன் ஒரு பதிவில், உழவு பார்க்குமுன் நம் உழவர்கள் செய்யும் அறக்களவேள்வி பற்றி புறநானூற்று குறிப்பும் பராசர ஸ்மிரிதி குறிப்பும் பகிந்ர்ந்தார். இந்த வேள்வி செய்தால் ஏரிட்டு மண்ணை உழும்போது புழுபூச்சிகளை துன்புருத்திய பாவத்திலிந்து விடுபடுவார்களாம். 

கொன்னா பாவம் தின்னா போகும் என்று ஒரு பழமொழி. கோழி ஆடு மாடுக்கு மட்டுமா, புழுபூச்சிக்கும் இது ஒவ்வுமா என்று தெரியவில்லை.

பின் குறிப்பு, ஆகஸ்ட் 12, 2021. அளிந்து என்ற சொல்  புதிது என்று தோழி வல்லபா ஸ்ரீநிவாசன் முகநூலில் கேட்க, பத்ரி சேஷாத்ரி இந்த பதில் எழுதியுள்ளார்:
அளைந்து => அளிந்து. அளைதல் = துழாவுதல். அரிசியை நீரிலிட்டுத் துழாவி, அதில் உள்ள அழுக்குகளையும் பூச்சிகளையும் களைதல். ஐயங்கார் வழக்கு

உதாரணம் ”வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு” - என்ற பெரியாழ்வார் பாசுரம்













Thursday, 10 December 2015

வான் மழை பொய்ப்பினும்


சென்னையில் வெள்ளம். ஆனால் பாரதத்தில் வரட்சி. பிகார் தேர்தல், பசு வதை, ஆமிர் கான், டிப்பு சுல்தான் நாடக அவலங்களில் இது செய்தி இல்லைதான். ஆனால் ஏன் செய்தி இல்லை? டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை விளக்குகிறது. நல்ல செய்தி என்றாலே அலறி ஓடுவோர் படிக்கவேண்டாம். இது என் மொழிபெயர்ப்பு

-------கட்டுரை மொழிபெயர்ப்பு ஆரம்பம்-----
பருப்பு விலை இப்படி அபாரமாக ஏறிவிட்டதே,” என்று என்னை கேட்கும்போது எனக்கு ஆச்சரியம் பொங்குகிறது. மழையின்றி இரண்டு வருடங்கள் வரண்டு வாடியுள்ளது பாரதம். வரட்சி இருந்தும் ஏன் உணவு விலை ஏன் மலை ஏறவில்லை என்றல்லவா மக்கள் கேட்கவேண்டும்!

1965 நான் பத்திரிகை நிருபரானேன். அன்றும் பாரதம் இரண்டாண்டு தொடர்ந்து மழையின்றி வரண்டது. தானிய உற்பத்தி இருபது சதவிகிதம் குறைந்தது; பஞ்சம் பட்டினி நாட்டை வாட்டியது; விலைவாசி விண்ணை முட்டியது. வெட்கக்கேடாக, இந்தியா பரிதாபமாக அமெரிக்காவிடம் உணவுக்கு கெஞ்சியது. “கையிலிருந்து வாய்” வருமை போல் “கப்பலிலிருந்து வாய்” வருமை என்று பேசப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் – இரண்டு தொடர் வரட்சிகளின் பாதிப்பே தெரியாமல், பஞ்சம் பட்டினியில் வாடாமல், பருப்பு விலை ஏறியுள்ளதே என்று கேட்கும் நிலைமைக்கு பிரம்மாண்டமாக முன்னேறியுள்ளோம். 2014-15 புள்ளிவிவரப்படி, 12% குறைந்த மழை பெய்தாலும், வரட்சி இருந்தும், அதை மீறி விவசாய விளைச்சல் சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 14.3% குறைந்த மழை பெய்தாலும் ஆறு மாதங்களில் விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது. தொலைகாட்சி நிருபர் நாடெங்கும் தேடியும் பட்டினியில் வாடும் கிராமவாசிகள் யாருமில்லை. வரட்சி செய்தியே இல்லை!

மழை பொய்ப்பின், விவசாயம் மட்டும் அல்ல, மற்ற உற்பத்தியும் சேவைகளும் அடிபடுவது வழக்கம். நெசவு, சணல், சக்கரை, சமையல் எண்ணை இவை யாவும் விவசாயத்தை நம்பும் துறைகள். விதைத்தல், அருவடை, சாகுபடி, போக்குவரத்து, செக்கு, பொட்டலம், போன்றதொழில்கள் விவசாயம் சார்ந்தவை. பாரதம் சுதந்திரம் வாங்கிய முதல் ஐம்பது ஆண்டில் 45% ஜிடிபி மாற்றம் மழையால் பாதிக்கபட்டது என்று பொருளியலாளர் அரவிந்த வீர்மணி காட்டியுள்ளார்.

1965, 1966 ஆண்டு வரட்சிகளும் பஞ்சமும் கண்ட மேலை நாட்டு நிபுணர்கள், இந்தியா என்றுமே சோற்றுக்கு கையேந்தி வாடும் என்று ஆரூடம் சொன்னார்கள். வில்லியம் பேட்டாக்கும் பால் பேட்டாக்கும் எழுதிய “பஞ்சம் 1975” அந்த வருடம் (எழுதிய பத்து ஆண்டுகளுக்கு பின்) உலகமே பஞ்சத்தில்  வாடும் என்றனர். மேலை நாடுகளின் தானியங்கள் காப்பாற்ற முடிந்த நாடுகளுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும், இந்தியாவை போன்ற காப்பாற்ற முடியாத நாடுகள், அவர்களின் விதிக்கு விடப்படவேண்டும் என்று கூறினர். இந்தியர்கள் கொதித்து குமைந்தாலும், மேற்கத்திய சமூகங்களில் பலர் இக்கருத்தை பாராட்டினர். ”ஜனத்தொகை வெடிகுண்டு” என்ற நூல் எழுதிய பசுமை போராளி பால் எர்லிக், இந்த பேட்டாக் சகோதரர்களை வானளாவி புகழ்ந்தார்.

இன்றோ! இரண்டு வரட்சிகளை அலட்சியமாக கையாளுகிறோம். இந்த மாற்றத்தின் காரணம் என்ன? பசுமை புரட்சியால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தானியங்கள் அதிகரித்தது என்று சிலர் கருதினாலும், உண்மையில் தனிநபர் தானிய அளவு1964 இல் உச்சத்தை எட்டியது; அதன் பின் சரிந்தது. உணவு வினியோகத்தை சரியாக செய்ததால் பஞ்சங்களை தவிர்த்தோம். பஞ்சம் நிலவிய மாவட்டங்களில் அரசின் கிராம வேலை வாய்ப்பு திட்டங்களால், உணவு பொருட்களை வாங்கும் அளவுக்காவது மக்களிடம் செல்வம் வளர்ந்தது. பசியிருந்தாலும் பட்டினியில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வருமானம் ஏறியது. தானியங்களை தாண்டி, மற்ற உணவுகள் புழக்கமாயின. தனி நபர் தானிய பருகல் குன்றி, எதிர்பாராமல் தானிய மிகுதி உண்டானது. 1990களில் இந்தியா தானியங்கள் வெளிநாடுகளுக்கு விற்கும் அளவு விவசாயம் செழுந்தது. அரிசி ஏற்றுமதியில் இன்று உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது! வரட்சி ஆண்டுகளிலும் உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. ஒரு கையேந்தி நாடு கண்ட மாபெரும் முன்னேற்றம் இது.

பசுமை புரட்சியால் வரப்புக்கு வரப்பு வயலுக்கு வயல் நெல் உயர்ந்தது. குழாய்க்கிணறுகளால் நீர்பாசன வசதி பெருகி, ராபி பயிர், கரிஃப் பயிருக்கு நிகராக விளைச்சல் தந்தது. பாசன நிலங்கள் அறுபது சதவிகிதம் பெருகின. வான் பொய்ப்பினும் பஞ்சம் தவிர்க்கும் திறன் பெற்றோம்!

முக்கியமாக, இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு லயமாக சரிந்தது. 1950இல் இந்திய பொருளாதாரத்தில் 52% நிலவிய விவசாயம், இன்று 2015இல் 14% ஆக சரிந்தது. சேவைத்தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில்  60% ஆக கோலோச்சுகின்றன. இத்தொழில்கள் பருவமழையை நம்பி செழிப்பவை அல்ல. தொழிற்சாலை உற்பத்தியும் நெசவு சக்கரை சணல் என்று விவசாயத்தை நம்பும் தொழிலாக இல்லாமல், பொறியியல் ரசாயனம் என்று அகலமாக பரவியுள்ளன.

1970களில் வருமானம் உயர, விவசாய முறைகள் மாறின. தனிநபர் நெல் உற்பத்தி சரிந்து, பால, பருப்பு, எண்ணைகள், சக்கரை, தேயிலை, முட்டை, காய், கனி போன்ற உணவுகளின் உற்பத்தி உயர்ந்தது. சமூகத்தின் அடுத்தக்கட்ட தேவைகளையும் பூர்த்தி செய்தன; உழவர்களின் வருமானத்தையு வளர்த்தன.

மூன்றில் இரண்டாக நிலவிய பாரம்பரிய பயிர்களின் உற்பத்தி பாதியாக சரிந்தது. கறும்பு, நாறு, எண்ணைவிதைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். காய் கனி கோழி மீன் கால்நடை போன்ற மற்ற பாதி, பயிரளவு மழையை நம்பி இல்லை. இதுவே வரட்சியிருந்தும் இவ்வாண்டு விவசாயம் வளர்ச்சி கண்டதன் ரகசியம்.

ஆனால் இதற்கு ஒரு விலை கொடுத்துள்ளோம் - சுற்றுசூழலின் சீரழிவு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து நிலத்தடி நீர் அபாயகரமாக குறைந்துள்ளது. அரசியல்வாதிகள் உழவருக்கு மின்சார கட்டணம் வசூலிக்க மறுக்கின்றனர். செய்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது அவர்களது கணிப்பு. சூரிய ஒளி பம்புகளை உழவருக்கு கொடுத்து, மற்ற மின் தேவைகளுக்கு வசூல் செய்தால் இந்த சீரழிப்பு  குறையலாம்.

-------கட்டுரை மொழிபெயர்ப்பு முற்றும்-----


பின்குறிப்பு

செவ்வாய் கிரகணத்திற்கு மங்கள்யான் ராக்கெட் விடுவதை விட, இந்தியர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் கோலோச்சுவதை விட, ஜனநாயகம் ஓங்கியதை விட, அணுகுண்டு ஏவுகணை சாதனைகளை விட, ஆஸ்கார் நோபல் கிரிக்கட் உலக கோப்பை வென்றதை விட, இது ஒரு மாபெரும் சாதனை.

உழவர் தற்கொலை, வெள்ளச் சேத உயிரிழப்பு, சாலை விபத்தில் உயிரிழப்பு எல்லாம் துன்பக்கேடுகள். ஆனால் கோடிக்கணக்கில் பஞ்சம் பலிவாங்கிய நாட்டில் இந்த முன்னேற்றம் ஈடு இணையற்ற இதிகாச தொடர்ச்சி.

ஜகத்தினில் பசியில்லை, களித்திடுவோம்.


உழவர் தற்கொலை - சுவாமிநாதன் ஐயர் கட்டுரை


பசுமை புரட்சி கட்டுரைகள்

முதல் பசுமை புரட்சி - செயற்கை எரு
இரண்டாம் பசுமை புரட்சி - டீசல் வண்டிகள்
நான்காம் பசுமை புரட்சி - வரப்புயர்த்திய வல்லவன் 

அணைகளும் நீர்பாசன முன்னேற்றங்களும் மூன்றாம் பசுமை புரட்சி என்பது என் கருத்து. அதை பற்றி நான் எழுதவில்லை

Saturday, 12 September 2015

அமெரிக்காவின் தலை சிறந்த காபி

தமிழ்நாட்டு ஃபில்டர் காபி அருந்தி பழகியவர்களுக்கு அதன் மேல் அதிக பிரியம் மட்டுமில்லை, ஒரு தனிவிதமான கர்வமும் உண்டு. காபி பழக்கம் வரலாற்றில் மிக சமீபமானதே என்று நம்மில் பலர் அறிவோமில்லை. அறிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனமிறாது; கொஞ்சம் கர்வம்தான். ஃபில்டர் காபி என்றில்லை, எந்த காபியை பற்றியும் இந்த கர்வமுண்டு. தென்னாடுடைய சிவன் மட்டுமா? காபி உடைய தென்னாடு அல்லவா?

காபி, ஒரு அரபிய பானம். நதிமூலம் ரிஷிமூலத்தை போல, காபிமூலம் கேள்விக்குறியது. தேநீரின் சீன வரலாற்றை போல, காபிக்கு ஒரு வரலாறு உருவாகவில்லை. போதிதர்மரின் கண்ணிமை போல் ஒரு வட்டார கதையும் இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன் மத்திய ஐரோப்பாவில் அறிவாளிகளின் பானமாக மாறியது. சக்கரை யுகத்திற்கு முன்னரே காபி யுகம் தொடங்கிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தில் காவிரிக்கு போட்டியாய் காபிநதி பாயத்தொடங்கியது. பிராமண சமூகத்தில் ஆசாரங்களை மீறி, உடைத்து, கௌரவத்தை குறைக்காமல், அந்தஸ்த்தை கொஞ்சம் வளர்க்கும் பொருளானது. வடக்கிந்தியாவை காபி வெல்லவில்லை. தமிழனைக் கேட்டால் பன்ருட்டி பலா, மணப்பாரை முறுக்கு, கும்பகோணம் காபி என்பான். ஆனால் மயிலாப்பூரில் மானமுள்ள மாமா மாமி ஒருத்தரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காபி மயிலையின் ஆஸ்தான பானம்.

பால பால் காண்டம்

நான், காபி அருந்தும் தாய்க்கும் டீ அருந்தும் தந்தைக்கும், மயிலையில் பிறந்த போர்ண்வீட்டா பயில்வான். ஹார்லிக்ஸ் வீவா நியூட்ரமுல் பூஸ்ட் என்ற பால்ய பருவத்து பான பெருங்கடலை கடந்து, பதிமூன்று வயதுக்குள் காபி பழக்கத்தை கற்றுக்கொண்டு, தொண்டைக்கு மஞ்சள் நீராட்டுவிழா கண்ட வித்தகருக்கு நடுவே, பசும்பால் சப்பாணியாக பலவருடம் வளர்ந்துவந்தேன். மற்றவர் இல்லத்தில் வெங்கடேச சுப்ரபாதமோ விவித் பாரதி சஹஸ்ரநாமமோ ஒலிக்க எங்கள் வீட்டில், “கோபு, காபி போட்டு தா, டா”, என்று என் தம்பி ஜெயராமனின் உரிமை குரல் கர்ஜிக்க, கூவம் நதிமிசை வெயிலிலே, சேர நன்னாட்டு டீ புரக்கணித்தே, அரபுவிதை டிகாஷன் கொதித்திடவே, ஆவின் பாலாற்றி அளித்திடுவேன். ராமன் எஃபெக்ட்டை காபியில் பார்க்காவிட்டாலும், காபியின் விளைவை ஜெயராமனில் பார்த்து களித்தேன். ஆனால் கல்லூரி காலத்திலும் சரி, தொழில் செய்த காலத்திலும் சரி, நான் என்றோ எப்பொழுதோ அருந்திய அபூர்வ பானமாகவே காபி விளைந்தது. 

டெக்ஸாஸ் மாகாணத்தில் படிக்க சென்றபோது, சூடாக பால் அருந்தும் பழக்கம் போனது.  அமெரிக்காவில் பாலை சுடவைத்து குடித்தால், கொமட்டும். ஜில்லென்ற பாலில் சீரியோஸ், கார்ன் ஃப்லேக்ஸ் வகையறா சீரியல் சாப்பிட கற்றுக்கொண்டேன்.

காரும் காபியும்

பின் 1994இல் தொழில் செய்ய சியாட்டில் நகருக்கு சென்றேன். சியாட்டில் அமெரிக்காவின் காபி தலநகரம். விமானம் செய்யும் போயிங் கம்பெனி, பின்னர் மைக்ரோஸாஃப்ட், பின்னர் அமேசான், எல்லாம் பிரபலமாகுமுன், அது மரம் வேட்டும், காகிதம் செய்யும் நகரமாக தொடங்கியது. துறைமுகமும் முக்கியம். அங்கே என்றோ காபி கலாச்சாரம், அமெரிக்காவில் எந்த ஊரிலும் இல்லாத அளவு, பெரிதாக தொடங்கிவிட்டது.

முதல் ஸ்டார்பக்ஸ் காபி கடை நிறுவபட்ட ஊர் சியாட்டில். மைக்ரோஸாஃப்ட் சியாட்டில் நகருக்கு அரிசோனாவிலிருந்து இடம் மாறிய பின், உள்ளே அடைந்து கம்ப்யூட்டரை 15 மணிநேரம் பேந்த பேந்த விழித்து பார்க்கும் ஊராக மாறியதை கண்டு, இத்தாலியில் காபி கலாச்சாரத்தையும், அதனால் செழித்திருந்த சமூக உறவுகளையும் கண்ட ஹொவர்ட் ஷுல்ட்ஸ் (கேள்வி: இவர் பெயரை கிரந்த எழுத்தின்றி, தூய தமிழில் எழுதமுடியுமா? சுலுசு? சுலசன்? சூலசேய காபி நாயனார்?), ஒற்றை கடையாய் நின்ற ஸ்டார்பக்ஸை வாங்கி பல கடைகளாக பெருக்கினார்.


எனக்கு பிடிக்காத காபி வகைகள்


காபி கிட்டிய கிட்கிந்தா காண்டம்

Starbucks ஸ்டார்பக்ஸ், Seattle's Best Coffee சியாட்டிலின் பெஸ்ட் காபி, போன்ற கடைகளுள்ள சியாட்டிலுக்கு நான் 1994இல் வந்தேன். ஒரு கார் வாங்கினேன். கல்லூரி காலத்தில் இல்லாத சம்பளமும், காரும் கிட்டியதால் அக்கம் பக்கம் சில நண்பர்களோடு சனி ஞாயிறு பயணங்கள் செய்ய தொடங்கினேன். நீண்ட பயணங்களின் போது மட்டும் பெட்ரோல் கடைகளில் நிறுத்தும் போது, தலைவலி களைப்பு குறைய, காபி அருந்துவேன். வருடம் இரண்டோ மூன்றோ. அவ்வளவே. 

அப்பொழுதெல்லாம் மாலை நேரம் சில நண்பர்களோடும், சக அலுவலர்களோடும் கூடைபந்து ஆடும்பழக்கமிருந்தது. 1997 இல் ஸீக்வெல் ஸெர்வர் SQL Server குழுவிலிருந்து எம்.எஸ்.என் MSN குழுவுக்கு மாறினேன். அங்கே மதியம் கூடைபந்து ஆடும் பழக்கம் வந்தது. சியாட்டிலில் வெயில் இல்லை, மதியம் சுகமாக ஆடலாம். விளையாடுவோருக்கு குளியல் அறையை மைக்ரோஸாஃப்ட் செய்திருந்தது. அங்கேயே குளித்து, மதியம் உணவு அருந்தி, அலுவலகம் சென்றால் திடீரென்று அடித்து தள்ளிக்கொண்டு தூக்கம் வரும். அதை போக்க, காபி அருந்துவேன். வாரம் நான்கு நாள். சுமாரான காபி தான். ஆனால் பழகிவிட்டது.

அதே நேரம், திடீரென்று சியாட்டில் கடையாக இருந்த ஸ்டார்பக்ஸ் அமெரிக்கவெங்கும் பரவி புகழ்பெற்றது. பிறகு உலகெங்கும் பரவியது. ஆனால் அவர்களுடைய காப்புசினோ, மோக்கா, லாட்டே, எஸ்ப்ரெஸ்ஸோ எந்த காபியும் எனக்கு பிடிக்கவில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஃபில்டர் காபி தான் மதச்சார்பற்ற ஆறெழுத்து மந்திரம்.

சுந்தர ஃபில்டர் காபி காண்டம்

அடுத்த வருடம் என் காபி பிரியன் தம்பி ஜெயராமன் டெக்ஸாஸுக்கு படிக்க வந்தான். அதற்கு முன் ஒரு மாசம் என்னுடன் சியாட்டில் வாசம். ஊர் சுற்றி பார்க்க தான். அவன் நல்ல காபி போட்டு அந்த பழக்கத்தை வளர்த்துவிட்டான். நான் மீண்டும் இந்தியா வந்த பின், கூடை பந்தும், கார் பயணங்களும் மறைந்துவிட்டன, ஆனால் காபி பழக்கம் தங்கிவிட்டது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, கலிஃபொர்ணியாவில் காபி மட்டுமே பெரிய குறை. ஜெயராம், டிஸ்னிலாண்ட், ஸீ வர்ல்ட், யூனிவர்சல் ஸ்டூடியோ, விமான் நிலயத்து ஸ்டார்பக்ஸ் கடைகளில் வாளி அளவு காபி வாங்கி, தசரதர் பாயசம் பிரித்தது போல் பிரித்து அனைவருக்கும் கொடுத்து வந்தான். எனக்கோ, அமெரிக்கா, ஃபில்டர் காபியில்லா சபரி மலையாக தோற்றமளித்தது.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில், சித்தி மகன் விவேக் வீட்டில் தங்கினோம். அவனும் அவன் மனைவி டாமியும் காலையில் தொண்டைகளை தலா ஒரு வாளி கருப்பு காபியில் குளிக்கவைத்துவிட்டே சிற்றுண்டியில்லா சித்தர்களாய் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் ஓடின; நகர்ந்தன.

மூன்றாம் நாள் மட்டும் என்ன நடக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால், நானும் சாண்டில்யன் நாவல் சத்திரியர்களை போல நம்பியிருக்கவே மாட்டேன். யவன ராணிகளும், கடல்புறாக்களும், சீன மாலுமிகளும், வெண்புரவிகளும், பாய்மர கலங்களும், ஜலக்கிரீடைகளும்… அதாவது கன்னிமாடத்தை தவிற எல்லாம் உள்ள சான் ஃபிரான்ஸிஸ்கோவில்….மாலை வேளையில்… இதை எல்லாவற்றையும் விட அதிசயமான…. சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் சீன ஹோட்டல். லவிங் ஹட் (அன்பான் குடிசை) அதன் பெயர்.

ஆஹா, சைவ ஃப்ரென்க்சு ஃப்ரைஸ் கிடைக்குமாம், என்ன சந்தோஷம் என்று நான் கேட்க, ஜெயராம் காபி கேட்க, அவர்களும் ஒரு வாளி காபி கொண்டுவர, எனக்கு கைகேயி பகுதி காபி கிடைக்க… தேனோடு கலந்த தெள்ளமுது! கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்! ஃபில்டர் காபியை மிஞ்சும் சுவை!



சாய் மில்க் காபியுடன், என் தம்பி ஜெயராமன்


டவுன் பஸ்ஸிலிருந்து ஹீரோ இறங்கினாலும் மிரண்டு மிரண்டு மயங்குவாளே பஞ்சாபி தேன்மொழி பேசும் தமிழ்ப்பட ஹீரோயின், அதை போல் அண்ணலும் மிரண்டேன்; அம்பியும் ருசித்து ரசித்தான். “உங்கள் அஜந்தா ரகசியம் என்ன?” என்று ஆயன சிற்பி போல நாங்கள் வினவ, “சாய் மில்க்” என்றாள் சீன மங்கை. சாய் பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். ஸாய் மில்க்! என்ன டிகாஷண், என்ன பொடி என்றெல்லாம் வீணாக நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. யாம் பெற்ற காபி, பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணதில் இதை பகிற்கிறேன். அமெரிக்காவின் நான் ருசித்த தலை சிறந்த காபி, லவிங் ஹட் கடையில்தான்.

சைவ உணவை பரப்பும் கொள்கையுடன், சில சைவ பிரபலங்களின் படங்களை - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் - லவிங் ஹட் நிர்வாகம், தங்கள் கடை சுவர்களில் பதித்துள்ளது. பார்த்த இடங்களெல்லாம் ஃப்ராங்க்ளின்…



லவிங் ஹட் கடையின் சின்னம்


உலக சைவ உணவு பிரியர்கள் - Loving Hut wall

இதை ஒத்த பதிவுகள்

1. சுவைத்ததும் ரசித்ததும்
2. எழில் மல்கும் அமெரிக்கா (ஆங்கிலத்தில் )
3. SQL Server ஸீக்வெல் செர்வர் நாட்கள் - எண்ணெழுத்தும் கையெழுத்தும்
4. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு 
5. முயல் கர்ஜனை 
6திருவேப்பம்பாவை




Friday, 10 July 2015

சுவைத்ததும் ரசித்ததும்


சமையல் கலைஞர் வாழ்த்து 

தின்ற உளவாத தின்னாத கூறல்
நன்றிஅல சமைப்போர் கலைக்கு

மென்றதும் தின்றதும் 

(என்று தலைப்பிட்டு, பின்னர் மாற்றிக்கொண்டேன்)

இன்று காலை  பொங்கல், மெது வடை, குழம்பு, சட்டினி
வியாழன் காலை  ராகி கூழ், வடு மாங்காய்
புதன் இரவு கொட்டுபிண்டி ரோட்டா
புதன் காலை மொடக்கத்தான் கீரை தோசை

செவ்வாய் மதியம் கத்திரிக்காய் ரசவாங்கி, தக்காளி ரசம், அவரைக்காய் பொரியல்


இந்திராம்மாவும் கொட்டுபிண்டி மாவும்

கொட்டுபிண்டி ரோட்டா, குருமா 


திங்கள் மதியம் மணிதக்காளி வற்றல்குழம்பு, சக்கரவள்ளிகிழங்கு கறியமுது, நூல்கோல் கறியமுது, பருப்பு துவையல், சீரக சாற்றமுது (ரசம்)

ஞாயிறு மதியம் சிறுகீரை கூட்டு, சேப்பங்கிழங்கு வறுத்த கறியமுது

இவையாவும் இந்திராம்மா கைவரிசை. இதை தவிர, 
செவ்வாய் இரவு  நண்பர் சரத்ராம் தாயார் செய்த அடை, அவியல், மாங்கா வெல்லப்பச்சடி, பைங்கன் பர்தா
திங்கள் இரவு தம்பி ஜெயராமன் மாமியார் செய்த ஃபுல்கா, பன்னீர் பட்டர் மசாலா.
சனிக்கிழமை காலை வாழைப்பழ தோசை, கோதுமை தோசை  

வாழைப்பழ தோசை
நடு நடுவே இட்லி தோசை தயிர் வகையராக்களும் உண்டு...

Monday, 11 November 2013

How Diesel and Benz transformed agriculture

In 1900, the world struggled to feed its population of 2 billion. Most farming was still done by ox and horse drawn ploughs, in most countries. The exception, until the 1940s was Japan, where human beings ploughed the field, because there was not enough farmland in Japan, to feed both humans and cattle. James Michener portrays this poignantly in his novel, Sayanora.

The internal combustion engine, was invented in 1880s by Germans Rudolf Diesel, Nicholas von Otto, Karl Benz etc primarily powered cars. It was then adapted for use in tractors, bulldozers, harvesters and other machines for the farm. These replaced the oxen and horses as plough animals, dramatically increased the amount and speed at which land could be ploughed. Cars and buses, far more than railways, dramatically reduced the need for bullock carts and horses and horse-carriages. Two-thirds of farm output, was being used to feed these animals. This dramatically reduced the amount of food needed for those animals! Which is one more reason we are able to feed 7 billion people. Another was the Haber-Bosch process which revolutionized fertilizer manufacturing and use. This process continued with Norman Borlaug's green revolution in the 1960s and 70s.

Roads were built all over the world, cutting transport times from months to days and days to hours. This meant a government could prevent famines in entire districts or states, by transporting enough food in mere days.

When people, mainly well-meaning but ignorant environmentalists and a gullible pessimistic media, say that cars and coal-fired power plants are polluting the earth, and that pesticides are ruining farm, we must be aware that we’d starve without these technologies.

This essay culled out from reading The Rational Optimist, by Matt Ridley, and his videos of talks by Ridley, Vaclav Smil and Juan Enriquez on the net.

Monday, 25 March 2013

Fritz Haber and Carl Bosch


Two German scientists, Fritz Haber and Carl Bosch, devised chlorine gas weapons that were used against French and British troops, in the First World War. Haber’s first wife committed suicide. Then they went on to invent new forms of explosives. During the Second World War, they worked for Hitler, developing a coal based substitute for petroleum that fuelled Nazi planes and trucks.

I had never heard of them until last year. I suspect you, the reader, are reading about them for the first time.

These two men are my heroes - more than Einstien, Salk, Fleming, Bardeen, Rutherford.

Why?

In 1900, the world had two billion people. In 2013, it has seven billion. How did this population explosion happen? Why has there been no famine due to food shortage? All famines in the last two hundred years have been because of wars, lack of access or poor administration. Food deficit has NEVER been an issue.

80% of the food humans eat, by weight, comes from only 12 species of plants – rice, wheat, corn, barley, sorghum, soybean, manioc, potato, sweet potato, sugarcane, sugar-beet and banana. They need the right soil and water, but also a vital fertilizing element – nitrogen. The Earth’s atmosphere is 80% nitrogen, but in this form, plants cannot use it. They need something called fixed nitrogen, which is produced by lightning, natural nitrates in the soil, animal dung, decaying plant material and certain legumes.

Crucially, the amount of fixed nitrogen available by these natural processes limits the amount of food crops 
humans can grow, regardless of the land and water available. In the 19th century, this problem was circumvented by expanding the area of land under cultivation and utilizing mountains of guano (bat and bird dung) and saltpeter discovered in South America. Europe imported guano from South America like they imported spices and clothes from India, silk and tea from China and slaves from Africa – in ship loads.

In the twentieth century, these South American supplies ran out. So, nitrogen shortage threatened food supply; unless somebody discovered a way to manufacture artificial fertilizer, using the nitrogen in the atmosphere. This is exactly what Haber and Bosch did. They invented the Haber-Bosch process, ammonia fertilizers, massive factories that would produce them in vast quantities.

They won Nobel prizes for this – Haber in 1920 and Bosch in 1932. France was hunting for Haber as a war criminal, and he was hiding in Switzerland, but after he was awarded the Nobel, France gave up the hunt. For the next decade, France and England used their armies to try to steal the industrial secret that the Haber-Bosch process was; but it was too complex to be copied or stolen and too vital to be destroyed. The great fear was that it not only produced ammonia fertilizer, but also explosives for Hitler’s army.

Today all nitrogen fertilizer is produced by the Haber-Bosch process. Four billion people owe their existence to their invention, but are ignorant that such men lived and what they gave the world.

I will stop here, since it is already three paragraphs more than I planned to write. I read about them in a book called “The Alchemy of Air”, by Thomas Hager. Another excellent resource is Vaclav Smil.