Showing posts with label humour. Show all posts
Showing posts with label humour. Show all posts

Wednesday, 1 March 2017

ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயகம்

ஆல் இந்தியா ரேடியோ போலவே, அமெரிக்காவில் நேஷனல் பப்ளிக் ரேடியோ (National Public Radio) என்று ஒரு வானொலி நிலையமுள்ளது. 1990களில் நான் சியாட்டிலில் வாழ்ந்த காலம். காரில் போகும் பொழுது அதை கேட்பேன். குறிப்பாக மதியம் “ஃப்ரெஷ் ஏர்” Fresh Air (புதிய தென்றல்) என்ற ஒரு நிகழ்ச்சியை ரசிப்பேன். டெரி கிராஸ் (Teri Gross) என்ற பெண்மணியின் நேர்காணல்கள் சிறப்பானவை.

ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டருடன் டெரி கிராசின் நேர்காணல். 1976 முதல் 1980 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர், 1960களில் ஜார்ஜியா மாநிலத்து தேர்தலில் போட்டியிட்டார். மாநில சட்டசபையில் மேலவைக்கு நடந்த அந்த தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் நடந்த சம்பவங்களை டெரி கிராசிடம் வானொலியில் நினைவு கூறிவந்தார்.

ஒரு சின்ன ஊர், அதில் ஒரு தொழிர்சாலை. அவ்வூரின் முக்கால்வாசி குடிமக்கள் அந்த தொழிர்சாலையில் தொழிலாளிகள். அதனால் அதன் வாசலிலேயே வாக்குச்சாவடி. தொகுதியிலுள்ள பல வாக்குச்சாவடிகளுக்கு சென்று கண்காணிக்கும் போது, அங்கே கொஞ்சம் எதிர்கட்சியின் ஆதிக்கம் அதிகம் என்று தெரிந்துகொண்டாராம். தொழிற்சங்கத் தலைவரும் எதிர்கட்சியின் முக்கிய புள்ளி, வாக்குச்சாவடியில் கண்காணிக்க உட்கார்ந்திருந்தாராம்.

தன் கட்சிக்காரர் யாரும் அங்கில்லை. வாக்குப்பெட்டியின் வாய் கொஞ்சம் அகலமானதாய் கவனித்தார் கார்ட்டர். ஏனென்று யோசிக்கும்போதே, ஒருவர் வாக்கை பதிவிட்டு சென்றார். சங்கத்தலைவர் கை அசைத்தார். அவரது தொண்டர் வாக்குப்பெட்டியில் கையைவிட்டு அந்த வாக்குச்சீட்டை எடுத்து தலைவருக்கு காட்டினார். நம்ம கட்சிக்கு தான் அந்த ஆள் வாக்களித்தான் என்று தலைவர் அமைதியானார். வாக்குசீட்டு மீண்டும் வாக்குப்பெட்டிக்குள்ளே சென்றது. என்ன அநியாயம் என்று கார்ட்டர் பொங்கியெழுந்தாராம்.

வானொலியில் டெரி கிராசும் தவளை போல் விக்கினார். லேசாக சிரித்தபடி நான் வண்டியோட்டினேன்.

கார்ட்டர் பாதி பொங்கும் பொழுதே அடுத்த வாக்காளர் வந்தாரம். அவர் ஒரு பெண்மணி. அவரிடம் தேர்தல் பணியாளர் ஒரு வாக்குச்சீட்டை தர அவர் இன்னொரு சீட்டை கேட்டாராம். எதற்கு என்று கேட்டால், என் கணவருக்கு உடல் சரியில்லை அவருக்கும் சேர்த்து வாக்குசீட்டு வேண்டும் என்றாராம். கேட்பதில் ஒரு நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட தேர்தல் பணியாளரும், இரண்டாம் சீட்டை கொடுத்தாராம். வட்டச்செயலாளர் வண்டுமுருகனை போல் அன்று தவித்த கார்ட்டர், இன்று கொஞ்சம் நிதானமாகவே இதை சொன்னார். டெரி கிராஸ் ஆச்சரியத்தில் ஜேஎன்யூ மாணவரை போல் அலறினார். எனக்கு சிரிப்பு தாளாமல் வண்டியை ஓரம் கட்டினேன்.

இரண்டு வாக்கையளித்த பெண்மணி சரியான கட்சிக்கு தான் வாக்களித்தாரா என்று தொண்டருக்கோ தலைவருக்கு பெரிதும் ஆர்வமில்லை. பெண்ணாச்சே!! ஒரு கண்ணியம்தான்.

அடுத்து ஒருவர் வந்தாராம். அவரும் இரண்டு வாக்குசீட்டு கேட்டாராம். கோவத்தோடு கார்ட்டர் அவரை பார்த்து, “என்ன உங்கள் மனைவிக்கு உடல் சரியில்லை அவருக்கும் சேர்த்து ஒரு வாக்கா?” என்றாராம். அவர் சாந்தமாக, “இல்லை அப்பாவுக்காக,” என்றாரம். “அப்பாவின் உடலுக்கு என்னவாம்?” என்று கார்ட்டர் வினவ, “இல்லை, அவர் இறந்து ஆறு மாதமாகிவிட்டது, அவர் எப்படி வந்து வாக்களிப்பார்?” என்றாராம்.

டெரியைவிட கொஞ்சம் நான் அதிகமாக சிரித்திருக்கலாம். நல்ல வேளை ஏற்கனவே வண்டியை ஓரங்கட்டிவிட்டேன்.

மந்தகாசமாக புன்னகை செய்த எதிர்கட்சி பெரிசை பார்த்து, “இந்த வாக்குச்சாவடியில் எத்தனை வாக்காளர்கள்?” என்று கார்ட்டர் கேட்க, அவர் “சுமார் 300 இருக்கும்,” என்றாராம்.

“உங்கள் கட்சிக்கு எத்தனை கிடைக்கும்?” – கார்ட்டர்.

“410 முதல் 420 வரை.”

நவரசத்தில் நான்கைந்து ரசங்கள் கார்ட்டரின் முகத்தில் கடுகு தாளித்திருக்கும். ஆனால் அதுவல்ல கதை. இதை யாவையும் மீறி அந்த தேர்தலில் கார்டர் வென்று சட்டசபை உறுப்பினர் ஆனார். சும்மாவா அமெரிக்கா வல்லரசாய் மிளிர்கிறது?

மற்ற தொகுதி கதைகளை அவர் பேசவில்லை. சட்டசபையில் இந்த பிரச்சனையை எழுப்பி, இறந்தவர் சார்ப்பில் மக்கள் வாக்களிக்கும் வழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் என்று ஒரு மசோதாவை கார்ட்டர் பிறப்பித்தாராம். இதற்கு மற்ற உறுப்பினர்கள் எளிதில் சம்மதிக்கவில்லை. ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களை அவ்வளவு சாதாரணமாக மாற்றிவிட கூடாது. காரசாரமான விவாதத்திற்கு பின், ஜார்ஜியா சட்டசபை ஒரு சமரசத்துக்கு வந்து புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி, ஒருவர் இறந்தபின் மூன்று வருடம் வரை மட்டுமே அவரது குடும்பத்தார் அவர் சார்ப்பில் வாக்களிக்கலாம்.

இணையத்தில் தேடிப்பார்த்தால் இந்த் நேர்காணலின் ஒலிப்பதிவு கிடைக்கவில்லை. மசோதா சட்டம் தேட எனக்கு பொறுமையில்லை. நீங்கள் இதெல்லாம்  உண்மையா என்று சந்தேகப்படலாம். ஜிம்மி கார்ட்டர் சிவப்பாக இருப்பார். சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது தமிழர் அனைவருக்கும் தெரியும். நான் மாநிறம். இந்த மாதிரி பொய் சொல்லத்தெரிந்தால் எங்கேயோ போயிருப்பேன்.

பின்குறிப்பு 1  ஜூல்ஸ் வெர்ண் எழுதிய அற்புதமான நாவல் “எண்பது நாட்களில் உலகை சுற்றி” (Around the World in 80 days) – இதில் சான் பிரான்சிஸ்கோ நகரின் ஒரு தேர்தல் காட்சி சுவாரசியமாக நடைபெறும்.

கார்ட்டர் அருங்காட்சிகம் - செய்தி துண்டு

பின்குறிப்பு 2  கார்ட்டரின் கட்சி ஓபாமாவும் கிளிண்டனும் சேர்ந்த ஜனநாயக கட்சி. இக்கட்சிக்கே ஒரு நூற்றாண்டாக தொழிற்சங்கங்கள் வாக்களித்து வருகின்றன. என் நினைவில் வானொலியில் தன் கட்சிக்கே தொழிற்சங்க வாக்குகள் விழுந்ததாக கார்ட்டர் சொல்லியதாக நினைவு. 2015இல் அட்லாண்டா சென்றபோது படத்தில் காணும் செய்தி துண்டு கார்ட்டர் அருங்காட்சியகத்தில் கண்பட்டது.

மற்றும் சில முயல்  கர்ஜனைகள்


Thursday, 10 November 2016

தடை கேளு தடை கேளு

நேற்று இரவு எட்டுமணி முதல் தமிழி மொழியில் இரண்டு சுழி ண மூன்று சுழி ன தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இவ்விறு எழுத்துக்களையும் ஆதார் அட்டையில்லாத எழுத்தாளர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், தமிழ் இலக்கியத்தில் பிண்ணவீணத்துவம், மாயணிலைமெய்த்துவம், வநிகபேராசைத்துவம், மதச்சார்ப்பற்ற ஆண்மீகம், முற்போக்கு பெண்மீகம் போன்ற இலக்கிய சீரழிப்பு நடைகளை பாகிஸ்தான் ராணுவமும் ஏகாதிப்பத்திய அமெரிக்க கார்ப்பரேட் சக்திகளும், பாரதநாடு முழுக்க அவிழ்த்துவிடுவதாகவும், அந்த சதியை முறிக்கவே இத்திட்டம் என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது. தற்காலிகமாக ணகரமும் னகரமும் நவீன தமிழிலன்றி, சுழியில்லாத தமிழ் பிராம்மி என்னும் சங்க கால தமிழ் லிபியில் எழுதவேண்டும் என்றும் மேலும் மோடி அறிவித்துள்ளார்.

இந்த அதிரடி அறிவிப்பிற்கு தமிழ் படிப்போர் சிலர் ஆதரித்தும் சிலர்  எதிர்த்தும் பேசியுள்ளனர். ஆனால் கொஞ்சம் கூட தமிழே படிக்காதவர்களிடம் இது பிரம்மாண்ட சச்சரவை கிளப்பியுள்ளது. ஹிந்திக்காரன் மோடிக்கு தமிழை திருத்த எந்த அதிகாரமும் கிடையாது என்று கொந்தளித்த சிலரை மறுத்து, காசியில் சாகித்ய அகாடமி விருதை வாபஸ் செய்யாத சில ஹிந்தி புலவர்கள் “மோடி பேசும் குஜராத்தியை ஹிந்தியென்று நினைப்பது மிகவும் தவறு. அவர் ஆங்கிலத்தில் ஈஜ் அப் டூயிங் பிஜினஜ் என்று சொல்வது கூட குஜராத்தி எழுத்தில் தான்,” என்று பதிவு செய்துள்ளனர்.  இந்திய பிரதமரை அவமதிப்பது போல் இந்த கருத்து உள்ளது என, மோடியின் ஆதரவாளர்கள் கொந்தளிக்க, ஒரு அமெரிக்க நிருபர், “ஜார்ஜ் புஷ் பேசும் ஆங்கிலமே பல நேரம் குஜராத்தி மாதிரி தான் இருக்கும், இதுவே அதிபர்களுக்கு அழகு,” என்று சொன்னதால், சச்சரவு அடங்கியது.

“மோடிக்கு என் அரசியல் ஆதரவு இல்லை எனினும், இதை நான் வரவேற்கிறேன்,” என்று எதிர்பாரமால் அப்போலோவுக்கு வந்த அன்னா ஹசாரே கருத்து கூறியுள்ளார். அங்கு வந்திருந்த புலவர் கீழ்பாக்கம் கிளவிவளவன், ஹசாரேவை சும்மா விடவில்லை. “அண்ணா என்ற மராட்டியிலும் தமிழிலும் உள்ள சொல்லை விட்டுவிட்டு அன்னா என்று இரண்டு சுழியில் எழுதுவது தானே காரணம்? அதற்கு பழிவாங்கத்தானே இந்த னண ஒழிப்பை ஆதரிக்கிறீர்கள்?” என்று கேள்விக்கணைக்களை போன வருடத்து மழைப்போல் மாரியாய் பொழிந்தார். அண்ணா ஹசாரேவுக்கு மூன்று சுழியா என்று சில் பத்திரிகை நிருபர்களும், தமிழகத்தில் ஒரு மூன்று சுழி அண்ணாவுக்கு தான் இடமுண்டு என்று, வேறு சிலரும், பத்திரிகையை படிக்கிறதே ஜாஸ்தி இதுல சுழியெல்லாம் எவன்டா எண்ணுவான் என்று வாசகர்களும் வெவ்வேறு விதம் பேசிக்கொல்கிறார்கள். ஆனால் இது மேட்டுக்குடி மனப்பான்மை என்று கண்டித்து இனிமேல் கச்சேரிகளிலும் எச்சேரிகளிலும் சரிகமபதநி என்பதற்கு பதில் சரிகமபதனி என்றே பாடப்போவதாக பிரபல பாடகர் கிருட்டிநந் செந்நையில் அறிவுத்துள்ளார்.

இரண்டு என்ற சொல்லில் மூன்று சுழி ணவும் மூன்று என்ற சொல்லில் இரண்டு சுழி னவும் இருப்பதே தமிழில் எண்ணும் எழுத்தும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று கணித நிபுணர் நகுபோலியன் முகநூலில் சொல்ல, நகுபோலியன் யார் என்று சிலர் கூகிளில் தேட, கங்கைக்கொண்டசோழபுரத்து கலங்கரை விளக்கை நோக்கி ஒரு வரலாற்று ஆர்வல படை புறப்பட்டுள்ளது.

இந்த தடைக்கு பொருளாதார காரணங்களும் உண்டா என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் அருந் ஜெட்லீ ஆமோதித்து பதிலளித்துள்ளார். தமிழக அச்சுகளின் மை சீனதேசத்தில் தயாரிப்பதாகவும், சுழிகளால் மை மிகவும் அதிகமாக செலவாகிறதென்றும், வெளிநாட்டில் இருந்து கருப்பு பணம் மட்டுமே பாரதம் வரவேண்டுமே தவிற கருப்பு மை வரக்கூடாது என்ற தேசபக்தி உள்ளோர் சுழியில்லாத எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேக் இன் இண்டியா, மந்நிக்கவும், மேக் இந் இந்திய திட்டத்தில் இந்தியாவிலேயே மார்ச் 2017 முதல் தயார் செய்யப்படும் என்றும், அதன்பின் மீண்டும் சுழித்த ணன அறிமுகமாகும் என்று ஜெட்லீ கூறினார். இதை கேட்டு கோடம்பாக்கம் புருடாபாடியபெருங்கடுங்கோ ஒரு நியாயமான கேள்வியை எழுப்பின்னார். நான்கு சுழி ஐந்து சுழியுள்ள கன்னட தெலுங்கு மொழிகளுக்கும் இந்த தடைவிதிக்கப்படுமா என்பதே அக்கேள்வி. வெறும் கேள்வியாக கேட்காமல் ஒரு கட்டுரையாக எழுதி பத்தாயிரம் பிரதி எடுத்து தமிழகமெங்கும் பலச்சுவர்களில் மார்ட்டின் லூத்துர் போல் அறிவிப்பாகவே ஒட்டிவிட்டார். கேள்வி நியாயமாக இருந்தாலும், அதற்கு ஏன் “மூலம் விரைவீக்கம்” என்று தலைப்பிடபட்டுள்ளது என்று சிலர் ஐயம் எழுப்ப, அது ஒரு பசைசெய்தபிசை (paste-orical blunder) என்று பெருங்கடுங்கோ பெருங்கடுங்கோபத்தில் கர்ஜித்தார். தமிழக மீநவர்களையும் அந்றாடண்காச்சிகளையும் இது எப்படி பாதிக்கும் என்பதே முக்கியமென்றும் அசம்பாவிதமான தலைப்பு முக்கியமில்லை என்றும் அவர் கடிந்துள்ளார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு சூடான பதிலை கிரிஷ் கர்நாடு கூறியுள்ளார். தான் கன்னடத்தில் நேராக எழுதினால் அதுக்கு யாருக்கும் புரியாதென்றும் சுழித்து சுழித்து எழுதுவதே இலக்கியம் என்றும் கூறியுள்ளார். கேள்வியையும் பதிலையும் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் யாரும் கண்டுகொள்ளாவிடினும், மலையாளத்தில் இந்த உரையாடல் எட்டாயிரம் பிரதிகள் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கிய மன்றங்களிலும் பத்திரிகைகளிலும் தர்க்கவாதம் செய்ய வேண்டிய கருத்தை போஸ்டர்வாதம் செய்யலாமா என்று வாசகர் ஒருவர் தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கடிதம் அனுப்ப, இரண்டு தமிழ் எழுத்தார்களையாவது தமிழ் துரோகி என்று திட்டினால்தான் அந்த விவாதத்தையே எங்கள் இதழ்களில் அனுமதிப்போம் என்று பதிப்பாளர்கள் கண்டிப்பாக பதிலளித்துள்ளனர்.

சர்வதேச அளவுக்கு சர்ச்சை நீடித்துள்ளது. இரண்டு சுழி மட்டுமே தன் பெயரிலிருந்தாலும், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் ஆதரவினால் மூன்று சுழியை தன் பெயரில் வைத்துக்கொண்ட ஹிலரி கிள்ண்டனை வீழ்த்தியது தன்னுடைய பேச்சுத்திறமைக்கும் நிர்வாக ஆற்றலுக்கும் சான்று என்று அமெரிக்க தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

(தொடரும்)

மற்ற முயல் கர்ஜனைகள்
1. எழுத்தாளர்களின் குத்துச்சண்டை
2. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு
3. லகள ரகளை
4. முயல்கர்ஜனை
5. ஹிட்லர் மகன்

Thursday, 1 September 2016

Interesting Experiences of a Lawyer and a Judge

Caution I’ve used quotes in places for narrative style. These are my phrasing of what I remember the speaker saying, not verbatim reports.There was a video recording of the  program, for those who want more accuracy.

---

The Hindustan Chamber of Commerce hosted a program titled Interesting Experiences of a Lawyer and a Judge yesterday, August 31, 2016 at Greams Dugar building on Greams Road, Chennai.

The speakers were retired Justice AR Lakshmanan, who served on the Supreme Court of India (also former Chairman, Law Commission of India) and Mr R Gandhi, Senior Advocate, Madras High Court (also former President, Bar Federation of Tamilnadu and Pondicheri).

They were welcomed by Mr V Murali, President of HCC.
Justice Lakshmanan spoke about allowing a student to write an exam, whom his university said had insufficient attendance. But the student asked that additional classes be counted, which the judge accepted, and ordered the university to allow him to write the exams, to avoid suffering a year's loss. Since a normal judicial order would take ten days to be delivered, the judge ordered the Registrar to read out the order to the Vice Chancellor and Controller of Examinations of the University (by telephone, I presume). This was in the Madras High Court.

He was then transferred to Kerala High Court. Inone case there, he ordered compulsory helmets for two wheelers in Kerala. Similarly, he ordered a ban on the sale of gutka in Andhra Pradesh, as a matter of public health. No court can order that manufacture of gutka be stopped, he said.  When the Mullaiperiyar case came up, I ruled that the dam is structurally, hydrologically and seismologically safe. The Supreme Court in a later hearing used this very phrase.

He was asked to move to Delhi High Court, but he refused as it was a smaller court than Kerala, though it had visibility as the national capital, as it would effectively imply a de-promotion (sic). But later he was appointed Chief Justice of the Rajasthan high court. There, several charges of corrupt subordinate judges were brought to his attendtion. There was a judicial investigation team, but it was headed by a subordinate judge, so he had private investigators look into the matter and ordered disimissal of several judges. The Chief Minister and Governor, accepted his actions, he said and did not raise political issue with them. No such thing happens in the southern states, he quips. And the helmet bans are merrily ignored too, he laments. We only pass these laws for public benefit, should not the public follow them?

He also said a case came up where the Income Tax department owed someone Rs 44 lakhs which had not been paid for about 17 years. There was a provision to order the IT department to refund not just the amount but also pay interest at a rate of 15%. “Being from the Nagarathar community,  I know how quickly interest can accumulate he said. The interest amount in this case exceeded due refund, it was around Rs.72 lakh. Now if I order that, I knew that accusations would fly that perhaps the judge also got a cut. So I chose a more appropriate interest rate, around 9%, and ordered payment. I asked the department to deposit the money right away, with a court pending an appeal. Concerned that interest payments could skyrocket on refunds that the department had been sitting on for years, they moved quickly and refund several tax payers in the next few months. At that time, the Finance Minister was P Chidambaram, who is also from the Nagarathar community, and he made an announcement that such refunds would be expedited, and it was prominently reported in the press. But after a few months, I think the situation went back to what it used to be,”  he said. There was both amused and resigned laughter from the businessmen in the audience.

Even I had trouble getting a tax refund and wanted to file a writ petition, Justice Lakshmanan continues, but several people felt it would cause a media sensation. The Commissioner of Tax ordered an immediate settlement, he says. {This reminded me of early 1900s and Madras Governor Lawley losing his money in the Arbuthnotbank failure...}

He regrets that there is no Supreme Court bench in South India. What expense, what difficulty and what high lawyer fees, citizens suffer, because of the distance of Delhi, he laments.

Referring to the Collegium appointing judges, he said, that there is no such word as Collegium in the dictionary. Justice Bhagawati coined the word.

(Gopu’s Note: Collegium is a Latin word, not English in origin. One got the feeling that Justice Lakshmanan was against the Judiciary appointing its own members. Markandeya Kadju, another retired judge of the Supreme Court, has written more critically about this judicial power grab. But, I think even the gutka sale ban, helmet rule judgment are judicial power grabs. Legislatures and executives are happy to let the judiciary make such laws and regulations, because they are protected from popular resentment.)

Rajasthan is extremely beautiful and I urge all of you to visit, he says. I enjoyed my stay in all the places I stayed. I've passed judgment of 1,37,000 cases.

Then advocate Gandhi spoke: “I have terrible handwriting but I answered exams voluminously in college. I can barely read my own handwriting, it is a miracle anyone else can read it. Others wrote five or six pages for their law exams but I wrote eighty pages, most of it illegible. But when I had a good point I would write it in bold letters and quote some Professor Iyer or Iyengar because the north Indian examiners had never heard of Gounders...

“I came second in the University. My brother said it can't be a very good University if you came second.

“Justice Lakshmanan has very beautiful handwriting, unlike me. He is very funny, if we travel together he'd joke and then at the end of the trip he'd say we laughed for 12km today or 18km today.

“I was member of the Syndicate. The syndicate wanted to punish students who copied or cheated in exams. One student who was caught came to me. I used to copy in exams and I knew some judges also copied. Copying is hard, only those who have copied know how hard it is. Syndicate wanted to pass a law barring students for three years for copying, I demanded that it should be reduced to one year. I copied and I'm now a Syndicate member, have I become a bad person? This was my argument. In the spirit of youth, copying is a form of adventure and rebellion, like smoking.” 

The crowd roared with appreciation at this candor and earthiness.

He narrated a case where an innocent man was framed by police for murdering four people. The investigating officer begged me to get the accused off the hook, because he framed the person because he couldn't find the murderer and there was pressure from superiors. The man was hanged. He wrote a book in Tamil, where he decried “The Law is an ass’. This of course, is a famous expression, from the legal community in England. “If I called a judge an ass, it would be contempt of court, but calling the Law is an ass is acceptable form of condemnation,” he quipped.

Gandhi narrated the incident when the DMK government renamed Thilakar Thidal, a segment of the Madras Marina beach, as Seerani Arangam. This was just a ploy to remove Balagangadhar Tilak's name, he averred. Tilak was the first patriotic voice that roared, “Independence is my birthright.” Outraged, that a place where Gandhi and Nehru and Subramanya Bharathi and such great freedom fighters delivered public speeches for India’s indpendence movement should be so contemptuously renamed, he fought in court for the name to be restored. A few years back, when the statue of actor Sivaji Ganeshan was installed on the beach, near Queen Mary’s college, “even though Sivaji was a good friend of mine, and distantly related, I couldn't stand that his statue would show its back to Mahathma Gandhi statue, and I filed a case to change that. How could they try to humiliate the memory of Gandhiji like that?”

He recollected when advocate VL Ethiraj, who founded Ethiraj college in Egmore, asked for a murder case to be dismissed five minutes before a guilty sentence was to about be passed on a person, because he realized that the FIR of the murder had been filed an hour before the actual murder was committed. Ethiraj was the Public Prosector at that time, and even the Defence Counsel had missed this detail, for which he apologized in Court and thanked Ethiraj for his uprightness.

Someone asked about entrance with veshti / dhoti at the Tamilnadu cricket club, which Gandhi fought for. The Club rules only say that members and guest must be decently dressed, Gandhi retorted. Do the clubs argue that dhothis are indecent dress? Tamilnadu legislative assembly passed a law that dhotis must be allowed in club and any club refusing will be fined and its license revoked. This was the only law passed by the TN Assembly, where all political parties were united, he said

Similar essays


  1. Henry Ford's trial
  2. On Macaulay  
  3. A poem about the Madras High Court (Tamil)
  4. Lady and Gentlemen

Saturday, 31 October 2015

Henry Ford, idiot, traitor


The following is an excerpt from the book "American Tycoon", by Steven Watts. I will post a Tamil translation soon.

The words "idiot" and "traitor" in the title refer to the phrases used by Chicago Tribune.

-----------Begin Excerpt----------

The newspaper Chicago Tribune published an article describing Henry Ford as "an ignorant idealist...  an anarchist enemy of the nation" when he opposed President Wilson's use of National Guard to patrol the Mexican border against raids from Pancho Villa's guerrillas. An outraged Ford sued the paper.

The jury found abundant evidence of ignorance but none proving anarchism. Why?

During cross examination by the attorney Ford exhibited an astonishing lack of knowledge. He asserted that the American Revolution had occurred in 1812. He described chili con carne as a "large mobile army". He couldn't identify basic principles of American government. As listened cringed, Ford fumbled question after question, like a negligent schoolboy, finally respondign to one, "I admit I am ignorant about most things." The Defense Attorney asked him if he would read a book passage, or wished to leave the impression that he may be illiterate. "Yes, you can leave it that way," replied Ford calmly, "I'm not a fast reader, I have hay fever and I might botch it."

The jury awarded six cents in damages. Newspapers and magazines largely ignored the verdict and legal issues, and chortled about the crudeness and shallowness of this American hero.

Two unexpected things became apparent.

First Henry Ford seemed perfectly content to appear the provincial rube whose provocative endeavors left little time for book learning. When pressed on his lack of knowledge, he confessed that regarding newspapers, "I rarely read anything except the headlines." Also "I don't like to read books, they mess up my mind"

Second, common people, rather than being scandalized by Ford's predicament, seemed to appreciate it. They indulged his lack of learning and were amused by his answers. Asked what the United States had been originally, he replied, "Land, I guess."

The public applauded him for his refreshing lack of pretension and sympathized with his frank admission that he was too focused on work to get much formal education. Ministers around the country offered prayers for Henry Ford's deliverance from his snobby oppressors. Small town newspapers urged busy farmers, laborers and merchants to sympathetic letters of support to the car maker. Thousands did. To the shock and consternation of highbrows, Ford emerged from a seemingly embarrassing debacle, an even greater American folk hero than he had been before.

-----------End Excerpt----------

Related Links

Interview with author Steven Watts
Tom Wolfe on Intellectuals
On Mario Varghas Llosa - and writers
The Limits of Science - Peter Medawar
The Art and Aesthetic of Driving
Indians are such wonderful Drivers
Diesel Benz and Agriculture
Traffic
எமீல் லெவஸார் - கார் படைத்த தச்சன்


Tuesday, 27 October 2015

என்று தணியும் இந்த மார்க்ஸிஸ மோகம்

பெரூ நாட்டின் மரியோ வர்காஸ் லோசா, இசுபானிய மொழியில் எழுதும் மிக புகழ்பெற்ற எழுத்தாளர். கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் என்ற கொலம்பிய நாட்டு எழுத்தாளரை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கினார். பின்பு மரியோ லோசாவின் நாவல்களே உலக புகழ்பெற்றன. கல்லூரி நாட்களில் பொது உடமை கொள்கையிலும் அரசியலிலும்  நம்பிக்கை கொண்ட லோசா, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை ஆதரித்துவந்தார்.

காஸ்ட்ரோ தன்னை எதிர்த்த எழுத்தாளர்களை கைது செய்த போது, மாரியோ லோசா காஸ்ட்ரோவை கண்டித்து எழுதினார். காஸ்ட்ரோவும், உலகளாவிய இடதுசாரிகளும் அறிவுஜீவிகளும், லோசாவை கண்டமேனிக்கு திட்டினர். கம்யூனிசம் என்றாலே சர்வாதிகார மனப்பான்மை என்று அவர் உணர்ந்தார். பெரும் முன்னேற்றங்களை செய்வதாக கர்ஜித்தாலும், அவற்றை கம்யூனிசத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் உணர்ந்தார். சமூக ஜனநாயகவாதியாக மாறினார். பொருளியல் நூல்களை படித்தார். தாராள பொருளாதாரமே சுதந்திரமும் செல்வமும் தருகிறதென்று உணர்ந்தார். இடதுசாரி அறிவுஜீவிகள் அவர் மேல் காழ்ப்பு மழை பொழிந்தனர். தான் பெற்று காழ்ப்பு குளியலை பெறுக அறிவுஜீவிகள், என்று அவர்கள் மேல் தன் காழ்ப்பு மழையை லோசா பொழிந்தார்.

“ஆடி தள்ளுபடி அறிவுஜீவிகள்” என்றும் பொருளாதாரத்து ஞானசூனியங்கள், என்றும் அவர்களைச் சாடினார். நவீனமானன் (முற்போக்கானவன்) மார்க்ஸிஸ்டாக இருக்க முடியாது என்று முழங்கினார். அறிவுஜீவுகள் மார்க்ஸிஸம் மீதும், அரசாங்க ஆதிக்கத்தின் மீதும் அடங்காத காதல் கொண்ட புதிரை புரிந்துகொள்ள முயன்றார். அதிகாரத்தின் ஆதரவு கொஞ்சம், அந்தஸ்து ஜம்பம் கொஞ்சம், பொருளியல் அறியாமை கொஞ்சம் என்று விளக்கினார்.

அமெரிக்காவை திட்டிக்கொண்டே, அந்நாட்டு கல்லூரிகளில் ஆசிரியர் பதவிகளுக்கு அலைந்தும், அமெரிக்க நிறுவனங்களின் பொற்கிழிகளுக்கு அலைந்தும், முரண்பட்டே வாழ்ந்த தென் அமெரிக்க அறிவுஜீவிகள், அவர் காழ்ப்பின் உச்சத்திற்கு ஆளானார்கள்.

ஒரு மாலை, மெக்சிகோ நகரத்தில், கேப்ரியல் கார்சியா மார்க்கெசை ஒரு நாடக அரங்கில் மாரியோ வர்காஸ் லோசா சந்தித்தார். மார்க்கெஸ் காஸ்ட்ரோ விசுவாசி. பேச்சோ கருத்து மோதலாகி  கசிந்து உருகி கைகலந்து குத்துச்சண்டையாய் மல்கி, லோசா மொத்த மார்க்கெஸ் வீழ்ந்தார்.

தம் முனைவர் பட்டத்து நாயகனை மொத்தும் இன்றியமையாத இறும்பூதடைய, என்ன தவம் செய்தாரோ.

குறிப்பு 

இது, டேனியல் யெர்கினும் ஜோசஃப் ஸ்டானிஸ்லாவும் எழுதிய The Commanding Heights நூலின் ஒரு சிறு பகுதியின், தமிழாக்கம். ஆங்கில மூலம் இங்கே.

Monday, 26 October 2015

A Lack of Economic Knowledge


Mario Varghas Llosa, Peru's most distinguished writer, had written a doctoral thesis on Colombian novelist Gabriel Garcia Marquez. But his own novels made him an international literary figure. He began as a student communist and staunchly defended Fidel Castro's Cuban revolution.

But when he dared to criticize Castro for imprisoning writes, a hail of invective from Castro and his worldwide intellectual defenders fell upon Llosa. He came to see that communism meant repression, but also that if failed to deliver on its promises. He became a social democrat. He studied economics and concluded that liberal economics best delivers prosperity and freedom. Leftist intellectuals heaped calumny on him. And he returned it in kind. He denounced "cut rate intellectuals", who went with fashions, and were profoundly ignorant of economics. "You cannot be modern and Marxist", he declared. He mused on why intellectuals were so fascinated with state control and Marxism. Partly patronage, partly fashion, partly "lack of economic knowledge." He reserved some of his greatest contempt for Latin American intellectuals, who made a career of denouncing the USA, while finding succor from professorships in its Universities and grants from its foundations.


He encountered his old friend Gabriel Garcia Marquez, who never abandoned Castro, one evening at a theater in Mexico city. They got into an argument and Varghas Llosa ended up knocking out Marquez. Which is something that one hardly ever gets to do with the subject of one's doctoral dissertation.

This is an extract from a few paragraphs in the book "The Commanding Heights", by Daniel Yergin and Joseph Stanislaw. A translation in Tamil will follow shortly, as a separate blog post.

Other Essays

Pigs Have Wings
Vote for Google
Democracy or Free Market
South American Transport Revolution

Saturday, 12 September 2015

அமெரிக்காவின் தலை சிறந்த காபி

தமிழ்நாட்டு ஃபில்டர் காபி அருந்தி பழகியவர்களுக்கு அதன் மேல் அதிக பிரியம் மட்டுமில்லை, ஒரு தனிவிதமான கர்வமும் உண்டு. காபி பழக்கம் வரலாற்றில் மிக சமீபமானதே என்று நம்மில் பலர் அறிவோமில்லை. அறிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனமிறாது; கொஞ்சம் கர்வம்தான். ஃபில்டர் காபி என்றில்லை, எந்த காபியை பற்றியும் இந்த கர்வமுண்டு. தென்னாடுடைய சிவன் மட்டுமா? காபி உடைய தென்னாடு அல்லவா?

காபி, ஒரு அரபிய பானம். நதிமூலம் ரிஷிமூலத்தை போல, காபிமூலம் கேள்விக்குறியது. தேநீரின் சீன வரலாற்றை போல, காபிக்கு ஒரு வரலாறு உருவாகவில்லை. போதிதர்மரின் கண்ணிமை போல் ஒரு வட்டார கதையும் இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன் மத்திய ஐரோப்பாவில் அறிவாளிகளின் பானமாக மாறியது. சக்கரை யுகத்திற்கு முன்னரே காபி யுகம் தொடங்கிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தில் காவிரிக்கு போட்டியாய் காபிநதி பாயத்தொடங்கியது. பிராமண சமூகத்தில் ஆசாரங்களை மீறி, உடைத்து, கௌரவத்தை குறைக்காமல், அந்தஸ்த்தை கொஞ்சம் வளர்க்கும் பொருளானது. வடக்கிந்தியாவை காபி வெல்லவில்லை. தமிழனைக் கேட்டால் பன்ருட்டி பலா, மணப்பாரை முறுக்கு, கும்பகோணம் காபி என்பான். ஆனால் மயிலாப்பூரில் மானமுள்ள மாமா மாமி ஒருத்தரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காபி மயிலையின் ஆஸ்தான பானம்.

பால பால் காண்டம்

நான், காபி அருந்தும் தாய்க்கும் டீ அருந்தும் தந்தைக்கும், மயிலையில் பிறந்த போர்ண்வீட்டா பயில்வான். ஹார்லிக்ஸ் வீவா நியூட்ரமுல் பூஸ்ட் என்ற பால்ய பருவத்து பான பெருங்கடலை கடந்து, பதிமூன்று வயதுக்குள் காபி பழக்கத்தை கற்றுக்கொண்டு, தொண்டைக்கு மஞ்சள் நீராட்டுவிழா கண்ட வித்தகருக்கு நடுவே, பசும்பால் சப்பாணியாக பலவருடம் வளர்ந்துவந்தேன். மற்றவர் இல்லத்தில் வெங்கடேச சுப்ரபாதமோ விவித் பாரதி சஹஸ்ரநாமமோ ஒலிக்க எங்கள் வீட்டில், “கோபு, காபி போட்டு தா, டா”, என்று என் தம்பி ஜெயராமனின் உரிமை குரல் கர்ஜிக்க, கூவம் நதிமிசை வெயிலிலே, சேர நன்னாட்டு டீ புரக்கணித்தே, அரபுவிதை டிகாஷன் கொதித்திடவே, ஆவின் பாலாற்றி அளித்திடுவேன். ராமன் எஃபெக்ட்டை காபியில் பார்க்காவிட்டாலும், காபியின் விளைவை ஜெயராமனில் பார்த்து களித்தேன். ஆனால் கல்லூரி காலத்திலும் சரி, தொழில் செய்த காலத்திலும் சரி, நான் என்றோ எப்பொழுதோ அருந்திய அபூர்வ பானமாகவே காபி விளைந்தது. 

டெக்ஸாஸ் மாகாணத்தில் படிக்க சென்றபோது, சூடாக பால் அருந்தும் பழக்கம் போனது.  அமெரிக்காவில் பாலை சுடவைத்து குடித்தால், கொமட்டும். ஜில்லென்ற பாலில் சீரியோஸ், கார்ன் ஃப்லேக்ஸ் வகையறா சீரியல் சாப்பிட கற்றுக்கொண்டேன்.

காரும் காபியும்

பின் 1994இல் தொழில் செய்ய சியாட்டில் நகருக்கு சென்றேன். சியாட்டில் அமெரிக்காவின் காபி தலநகரம். விமானம் செய்யும் போயிங் கம்பெனி, பின்னர் மைக்ரோஸாஃப்ட், பின்னர் அமேசான், எல்லாம் பிரபலமாகுமுன், அது மரம் வேட்டும், காகிதம் செய்யும் நகரமாக தொடங்கியது. துறைமுகமும் முக்கியம். அங்கே என்றோ காபி கலாச்சாரம், அமெரிக்காவில் எந்த ஊரிலும் இல்லாத அளவு, பெரிதாக தொடங்கிவிட்டது.

முதல் ஸ்டார்பக்ஸ் காபி கடை நிறுவபட்ட ஊர் சியாட்டில். மைக்ரோஸாஃப்ட் சியாட்டில் நகருக்கு அரிசோனாவிலிருந்து இடம் மாறிய பின், உள்ளே அடைந்து கம்ப்யூட்டரை 15 மணிநேரம் பேந்த பேந்த விழித்து பார்க்கும் ஊராக மாறியதை கண்டு, இத்தாலியில் காபி கலாச்சாரத்தையும், அதனால் செழித்திருந்த சமூக உறவுகளையும் கண்ட ஹொவர்ட் ஷுல்ட்ஸ் (கேள்வி: இவர் பெயரை கிரந்த எழுத்தின்றி, தூய தமிழில் எழுதமுடியுமா? சுலுசு? சுலசன்? சூலசேய காபி நாயனார்?), ஒற்றை கடையாய் நின்ற ஸ்டார்பக்ஸை வாங்கி பல கடைகளாக பெருக்கினார்.


எனக்கு பிடிக்காத காபி வகைகள்


காபி கிட்டிய கிட்கிந்தா காண்டம்

Starbucks ஸ்டார்பக்ஸ், Seattle's Best Coffee சியாட்டிலின் பெஸ்ட் காபி, போன்ற கடைகளுள்ள சியாட்டிலுக்கு நான் 1994இல் வந்தேன். ஒரு கார் வாங்கினேன். கல்லூரி காலத்தில் இல்லாத சம்பளமும், காரும் கிட்டியதால் அக்கம் பக்கம் சில நண்பர்களோடு சனி ஞாயிறு பயணங்கள் செய்ய தொடங்கினேன். நீண்ட பயணங்களின் போது மட்டும் பெட்ரோல் கடைகளில் நிறுத்தும் போது, தலைவலி களைப்பு குறைய, காபி அருந்துவேன். வருடம் இரண்டோ மூன்றோ. அவ்வளவே. 

அப்பொழுதெல்லாம் மாலை நேரம் சில நண்பர்களோடும், சக அலுவலர்களோடும் கூடைபந்து ஆடும்பழக்கமிருந்தது. 1997 இல் ஸீக்வெல் ஸெர்வர் SQL Server குழுவிலிருந்து எம்.எஸ்.என் MSN குழுவுக்கு மாறினேன். அங்கே மதியம் கூடைபந்து ஆடும் பழக்கம் வந்தது. சியாட்டிலில் வெயில் இல்லை, மதியம் சுகமாக ஆடலாம். விளையாடுவோருக்கு குளியல் அறையை மைக்ரோஸாஃப்ட் செய்திருந்தது. அங்கேயே குளித்து, மதியம் உணவு அருந்தி, அலுவலகம் சென்றால் திடீரென்று அடித்து தள்ளிக்கொண்டு தூக்கம் வரும். அதை போக்க, காபி அருந்துவேன். வாரம் நான்கு நாள். சுமாரான காபி தான். ஆனால் பழகிவிட்டது.

அதே நேரம், திடீரென்று சியாட்டில் கடையாக இருந்த ஸ்டார்பக்ஸ் அமெரிக்கவெங்கும் பரவி புகழ்பெற்றது. பிறகு உலகெங்கும் பரவியது. ஆனால் அவர்களுடைய காப்புசினோ, மோக்கா, லாட்டே, எஸ்ப்ரெஸ்ஸோ எந்த காபியும் எனக்கு பிடிக்கவில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஃபில்டர் காபி தான் மதச்சார்பற்ற ஆறெழுத்து மந்திரம்.

சுந்தர ஃபில்டர் காபி காண்டம்

அடுத்த வருடம் என் காபி பிரியன் தம்பி ஜெயராமன் டெக்ஸாஸுக்கு படிக்க வந்தான். அதற்கு முன் ஒரு மாசம் என்னுடன் சியாட்டில் வாசம். ஊர் சுற்றி பார்க்க தான். அவன் நல்ல காபி போட்டு அந்த பழக்கத்தை வளர்த்துவிட்டான். நான் மீண்டும் இந்தியா வந்த பின், கூடை பந்தும், கார் பயணங்களும் மறைந்துவிட்டன, ஆனால் காபி பழக்கம் தங்கிவிட்டது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, கலிஃபொர்ணியாவில் காபி மட்டுமே பெரிய குறை. ஜெயராம், டிஸ்னிலாண்ட், ஸீ வர்ல்ட், யூனிவர்சல் ஸ்டூடியோ, விமான் நிலயத்து ஸ்டார்பக்ஸ் கடைகளில் வாளி அளவு காபி வாங்கி, தசரதர் பாயசம் பிரித்தது போல் பிரித்து அனைவருக்கும் கொடுத்து வந்தான். எனக்கோ, அமெரிக்கா, ஃபில்டர் காபியில்லா சபரி மலையாக தோற்றமளித்தது.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில், சித்தி மகன் விவேக் வீட்டில் தங்கினோம். அவனும் அவன் மனைவி டாமியும் காலையில் தொண்டைகளை தலா ஒரு வாளி கருப்பு காபியில் குளிக்கவைத்துவிட்டே சிற்றுண்டியில்லா சித்தர்களாய் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் ஓடின; நகர்ந்தன.

மூன்றாம் நாள் மட்டும் என்ன நடக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால், நானும் சாண்டில்யன் நாவல் சத்திரியர்களை போல நம்பியிருக்கவே மாட்டேன். யவன ராணிகளும், கடல்புறாக்களும், சீன மாலுமிகளும், வெண்புரவிகளும், பாய்மர கலங்களும், ஜலக்கிரீடைகளும்… அதாவது கன்னிமாடத்தை தவிற எல்லாம் உள்ள சான் ஃபிரான்ஸிஸ்கோவில்….மாலை வேளையில்… இதை எல்லாவற்றையும் விட அதிசயமான…. சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் சீன ஹோட்டல். லவிங் ஹட் (அன்பான் குடிசை) அதன் பெயர்.

ஆஹா, சைவ ஃப்ரென்க்சு ஃப்ரைஸ் கிடைக்குமாம், என்ன சந்தோஷம் என்று நான் கேட்க, ஜெயராம் காபி கேட்க, அவர்களும் ஒரு வாளி காபி கொண்டுவர, எனக்கு கைகேயி பகுதி காபி கிடைக்க… தேனோடு கலந்த தெள்ளமுது! கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்! ஃபில்டர் காபியை மிஞ்சும் சுவை!



சாய் மில்க் காபியுடன், என் தம்பி ஜெயராமன்


டவுன் பஸ்ஸிலிருந்து ஹீரோ இறங்கினாலும் மிரண்டு மிரண்டு மயங்குவாளே பஞ்சாபி தேன்மொழி பேசும் தமிழ்ப்பட ஹீரோயின், அதை போல் அண்ணலும் மிரண்டேன்; அம்பியும் ருசித்து ரசித்தான். “உங்கள் அஜந்தா ரகசியம் என்ன?” என்று ஆயன சிற்பி போல நாங்கள் வினவ, “சாய் மில்க்” என்றாள் சீன மங்கை. சாய் பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். ஸாய் மில்க்! என்ன டிகாஷண், என்ன பொடி என்றெல்லாம் வீணாக நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. யாம் பெற்ற காபி, பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணதில் இதை பகிற்கிறேன். அமெரிக்காவின் நான் ருசித்த தலை சிறந்த காபி, லவிங் ஹட் கடையில்தான்.

சைவ உணவை பரப்பும் கொள்கையுடன், சில சைவ பிரபலங்களின் படங்களை - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் - லவிங் ஹட் நிர்வாகம், தங்கள் கடை சுவர்களில் பதித்துள்ளது. பார்த்த இடங்களெல்லாம் ஃப்ராங்க்ளின்…



லவிங் ஹட் கடையின் சின்னம்


உலக சைவ உணவு பிரியர்கள் - Loving Hut wall

இதை ஒத்த பதிவுகள்

1. சுவைத்ததும் ரசித்ததும்
2. எழில் மல்கும் அமெரிக்கா (ஆங்கிலத்தில் )
3. SQL Server ஸீக்வெல் செர்வர் நாட்கள் - எண்ணெழுத்தும் கையெழுத்தும்
4. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு 
5. முயல் கர்ஜனை 
6திருவேப்பம்பாவை




Sunday, 11 January 2015

திருவேப்பம்பாவை

கார்த்திகை திங்கள் பசிநிரைந்த நன்னாளில்
ஊர்த்திரிந்து புதுசினிமா ஒன்றையும்
பார்த்துவிட்டு நான் பிறந்தகம் திரும்ப
வேர்த்தப் புருவம் ஏரார்ந்த கண்ணியாள்
சீர்பொழிந்து வளர்த்த தாயென்னை நோக்கினாள்
பார்த்தாயா என்பசி வடிந்த முகத்தை
நார்த்தங்காயும் மோர்சாதமும் கொடென்றேன்
தீர்த்து விட்டனர் உன் தம்பியும் தங்கையும்
சேர்ததனை என்றாள் பாத்திரம் காட்டி
வார்த்தை வராமல் வாயைநான் பிளக்க
கூர்வேல் பசிவலியை குடலளவு கற்றவள்
வார்த்து தருகிறேன் ஊத்தப்பம் உனக்கென்றாள்
பூர்த்தி செய்தேன் பூரித்தேன் வயிறார
தீர்த்தமும் அருந்தி திண்ணையில் பாய்விரித்தால்

கீர்த்தனமாய் விட்டது ஏப்பமே எந்தன்வாய்.

கவிதைகள்

2. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை
5. வராஹமிஹரரின் அகத்தியர் துதி 

Friday, 25 July 2014

மழநாட்டு மகுடம்

மழநாட்டு மகுடம்
அத்தியாயம் 303

கோப்பெருந்தேவி எங்கே?

     அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின்  அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது  ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை - பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!

சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின்  பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் - ''கோப்பெருந்தேவி எங்கே?''

கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ''கோப்பெருந்தேவி எங்கே?'' - அந்தக் கஹனாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது; அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.

அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது - பீறிட்டுக் கொண்டு!

அது போகட்டும் - அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!

அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் - இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.

என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில், விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.

அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!

மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணபடுக்கையிலே கிடக்கிறான்! ''மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்'' என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!

திருமழபாடியிலே  திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (த தி கி ட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ''திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்'' என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!

(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான், இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)

சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ''முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்'' இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ''முக்குடுமி கொண்ட முதுபல்லவன்'' இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும், அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம், தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய், வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. 'எக்ஸ்' போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே - சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? - சமண சுந்தரியேதான்!!)

அத்தியாயம் 305

திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம்.  (தொடரும்)                                                                     
பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.

தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ''மழநாட்டு மகுடம்'' - வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இதுபற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ''அரபு நாட்டு அரசுரிமை''யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ''கடாரத்துக் கன்னி'' என்றாவது மாற்றிப்போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்துகொண்டு அதற்காவனசெய்வதுதான்.
தங்கள் ''நகுபோலியன்''
                                                                            
பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா. அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக் கீற்றும் நாமக் கீற்றும் சேர்ந்த (18 - ம் புள்ளி ஆடு புலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்கு விழி மங்கை படத்தையும் மறக்காமல் 'லா.சு.ர.' வைப் போடச் சொல்லுங்கள். – பாலு



கோபுவின் குறிப்பு: “மழநாட்டு மகுடம்” சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன் கணையாழி பத்திரிகையில் வந்தது. ஆசிரியர் நகுபோலியன் என்ற பாலசுப்ரமணியன் இதை இந்த வராஹமிஹிராகோபு வலைத்தளத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தார். கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று எழுத்தாளர் அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தார். 

அப்பொழுது நகுபோலியன் யார்  என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு அவர் யார் என்று தெரியாமல் மறந்திருந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தில்லியிலிருந்து சென்னை மனை மாறி இவர் வந்தபொழுது, தானே நகுபோலியன் என்று ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் தெரிவித்து, ஒரு மர்மத்தை முடிச்சவித்து, இன்ப அதிர்ச்சி தந்தார்.

இவரிடம் நான் நான்கு வருடங்களாக ஸமஸ்கிருதம் பயின்று வருகிறேன்.  “பாரதி பாலு” என்று தில்லியல் இவர் பிரபலம். இப்பத்திவின் இறுதியில் இவரை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  இவர் கணித நிபுணர், பன்முக புலவர். கே.வி.சர்மா நூலகத்திலும் அவர் இல்லத்திலும் இவருடன் ஆரியபடீயம், லீலாவதி, பஞ்சசித்தாந்திகம், ப்ரிஹத் சம்ஹிதை, வேதாங்க ஜ்யோதிஷம், கணித சார சங்க்ரஹம் போன்ற விண்ணியல் நூல்களை திக்கி திக்கி தடுமாறி படித்து கலந்து பேசி பொருள்கேட்டு ரசித்து ருசித்த சுவையான நாட்கள்  பற்பல.