Sunday 11 January 2015

திருவேப்பம்பாவை

கார்த்திகை திங்கள் பசிநிரைந்த நன்னாளில்
ஊர்த்திரிந்து புதுசினிமா ஒன்றையும்
பார்த்துவிட்டு நான் பிறந்தகம் திரும்ப
வேர்த்தப் புருவம் ஏரார்ந்த கண்ணியாள்
சீர்பொழிந்து வளர்த்த தாயென்னை நோக்கினாள்
பார்த்தாயா என்பசி வடிந்த முகத்தை
நார்த்தங்காயும் மோர்சாதமும் கொடென்றேன்
தீர்த்து விட்டனர் உன் தம்பியும் தங்கையும்
சேர்ததனை என்றாள் பாத்திரம் காட்டி
வார்த்தை வராமல் வாயைநான் பிளக்க
கூர்வேல் பசிவலியை குடலளவு கற்றவள்
வார்த்து தருகிறேன் ஊத்தப்பம் உனக்கென்றாள்
பூர்த்தி செய்தேன் பூரித்தேன் வயிறார
தீர்த்தமும் அருந்தி திண்ணையில் பாய்விரித்தால்

கீர்த்தனமாய் விட்டது ஏப்பமே எந்தன்வாய்.

கவிதைகள்

2. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை
5. வராஹமிஹரரின் அகத்தியர் துதி 

No comments:

Post a Comment