Saturday 31 October 2015

Henry Ford, idiot, traitor


The following is an excerpt from the book "American Tycoon", by Steven Watts. I will post a Tamil translation soon.

The words "idiot" and "traitor" in the title refer to the phrases used by Chicago Tribune.

-----------Begin Excerpt----------

The newspaper Chicago Tribune published an article describing Henry Ford as "an ignorant idealist...  an anarchist enemy of the nation" when he opposed President Wilson's use of National Guard to patrol the Mexican border against raids from Pancho Villa's guerrillas. An outraged Ford sued the paper.

The jury found abundant evidence of ignorance but none proving anarchism. Why?

During cross examination by the attorney Ford exhibited an astonishing lack of knowledge. He asserted that the American Revolution had occurred in 1812. He described chili con carne as a "large mobile army". He couldn't identify basic principles of American government. As listened cringed, Ford fumbled question after question, like a negligent schoolboy, finally respondign to one, "I admit I am ignorant about most things." The Defense Attorney asked him if he would read a book passage, or wished to leave the impression that he may be illiterate. "Yes, you can leave it that way," replied Ford calmly, "I'm not a fast reader, I have hay fever and I might botch it."

The jury awarded six cents in damages. Newspapers and magazines largely ignored the verdict and legal issues, and chortled about the crudeness and shallowness of this American hero.

Two unexpected things became apparent.

First Henry Ford seemed perfectly content to appear the provincial rube whose provocative endeavors left little time for book learning. When pressed on his lack of knowledge, he confessed that regarding newspapers, "I rarely read anything except the headlines." Also "I don't like to read books, they mess up my mind"

Second, common people, rather than being scandalized by Ford's predicament, seemed to appreciate it. They indulged his lack of learning and were amused by his answers. Asked what the United States had been originally, he replied, "Land, I guess."

The public applauded him for his refreshing lack of pretension and sympathized with his frank admission that he was too focused on work to get much formal education. Ministers around the country offered prayers for Henry Ford's deliverance from his snobby oppressors. Small town newspapers urged busy farmers, laborers and merchants to sympathetic letters of support to the car maker. Thousands did. To the shock and consternation of highbrows, Ford emerged from a seemingly embarrassing debacle, an even greater American folk hero than he had been before.

-----------End Excerpt----------

Related Links

Interview with author Steven Watts
Tom Wolfe on Intellectuals
On Mario Varghas Llosa - and writers
The Limits of Science - Peter Medawar
The Art and Aesthetic of Driving
Indians are such wonderful Drivers
Diesel Benz and Agriculture
Traffic
எமீல் லெவஸார் - கார் படைத்த தச்சன்


Thursday 29 October 2015

Deng Xiaoping and Japan

Another extract from Daniel Yergin and Joseph Stanislaw's book, The Commanding Heights. I will post a Tamil translation of this section soon. This part deals with the status of the Chinese economy, first under Mao Tse Tung, from 1949 to his death, and later, Deng's reforms beginning in 1978.

---------Start of Extract----------------

Mao's collectivization produced dismal results. Outputs in many regions was no greater than it had been three decades earlier, and in some places, actually less.

China's entire economic reform began with severe drought in 1978. The ground was so dry neither tractors nor plows could break it. Starvation became endemic. Dysentery encephalitis hepatitis and other diseases swept through the region. Hundreds of thousands fled their homes, a militia mobilized to prevent them flooding into shanghai. A film of the suffering to made Politburo members cry out, cover faces and weep. Peasants would not do hardest labour until they could benefit. They pleaded for a return to the old ways. By this they mean the household responsibility system, which allowed a family to keep some of the benefits of their labor. Even so, some of the peasants insisted upon swearing a common  oath to take care of each other's children  if they should "come to grief" by being arrested for participating in such a new program. Their fears were based on what happened during the Cultural Revolution.

But the experiment was successful. The responsibility system was adopted throughout China replacing Maoism. Over sixteen years output increased more than 50%.

The introduction of markets generated an entire trading apparatus.  Farmers involved themselves in transportation, house building, repair, private food markets, and hiring workers. In 1978, just 8% of agricultural output was sold in the open market. By 1990, the share was 80%.

Visiting Japan and seeing it's dynamism first hand shocked the Chinese economists. The head of Communist party propaganda division noticed : one out of two households in Japan owned a car; more than 95% possessed TV, fridges and washing machines. He was overwhelmed by how the people were dressed - by the variety of clothing and it's cleanliness. "on the street, of all the women we saw, no two wore the same style of clothes." Even more astonishing : "Female workers who accompanied us changed clothes every day."

---------End of Extract---------------

Gopu's Note

In China under Mao, foreign movies, magazines and television were rare. In India, we could see Hollywood movies, or those set in Singapore, Hong Kong, Japan etc., even though television was stifled by all Central Governments before Rajiv Gandhi became Prime Minister in 1984. Rajiv ushered in the color television age, and his finance minister VP Singh cancelled all licenses for radios and television sets. So we could see those people enjoying the advantages of the free market, but it was dinned into most Indians that foreigners were rich and India was a poor country.

People who wanted to enjoy any consumer goods like fridges, cameras, tape recorders, shaving gel, etc had to pay high prices (as these were luxury goods) or depend on the kindness and public service of smugglers.

But we were never subject to the insanity and horrors of the Great Leap Forward or the Cultural Revolution. And clothing and cleanliness were not problems for the middle classes, or even most of the poor. People just bought fewer clothes of poorer quality in those Nehruvian decades.

Related Posts

Mario Varghas Llosa and Gabriel Garcia Marquez - A Lack of Economic Knowledge

Tuesday 27 October 2015

என்று தணியும் இந்த மார்க்ஸிஸ மோகம்

பெரூ நாட்டின் மரியோ வர்காஸ் லோசா, இசுபானிய மொழியில் எழுதும் மிக புகழ்பெற்ற எழுத்தாளர். கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் என்ற கொலம்பிய நாட்டு எழுத்தாளரை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கினார். பின்பு மரியோ லோசாவின் நாவல்களே உலக புகழ்பெற்றன. கல்லூரி நாட்களில் பொது உடமை கொள்கையிலும் அரசியலிலும்  நம்பிக்கை கொண்ட லோசா, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை ஆதரித்துவந்தார்.

காஸ்ட்ரோ தன்னை எதிர்த்த எழுத்தாளர்களை கைது செய்த போது, மாரியோ லோசா காஸ்ட்ரோவை கண்டித்து எழுதினார். காஸ்ட்ரோவும், உலகளாவிய இடதுசாரிகளும் அறிவுஜீவிகளும், லோசாவை கண்டமேனிக்கு திட்டினர். கம்யூனிசம் என்றாலே சர்வாதிகார மனப்பான்மை என்று அவர் உணர்ந்தார். பெரும் முன்னேற்றங்களை செய்வதாக கர்ஜித்தாலும், அவற்றை கம்யூனிசத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் உணர்ந்தார். சமூக ஜனநாயகவாதியாக மாறினார். பொருளியல் நூல்களை படித்தார். தாராள பொருளாதாரமே சுதந்திரமும் செல்வமும் தருகிறதென்று உணர்ந்தார். இடதுசாரி அறிவுஜீவிகள் அவர் மேல் காழ்ப்பு மழை பொழிந்தனர். தான் பெற்று காழ்ப்பு குளியலை பெறுக அறிவுஜீவிகள், என்று அவர்கள் மேல் தன் காழ்ப்பு மழையை லோசா பொழிந்தார்.

“ஆடி தள்ளுபடி அறிவுஜீவிகள்” என்றும் பொருளாதாரத்து ஞானசூனியங்கள், என்றும் அவர்களைச் சாடினார். நவீனமானன் (முற்போக்கானவன்) மார்க்ஸிஸ்டாக இருக்க முடியாது என்று முழங்கினார். அறிவுஜீவுகள் மார்க்ஸிஸம் மீதும், அரசாங்க ஆதிக்கத்தின் மீதும் அடங்காத காதல் கொண்ட புதிரை புரிந்துகொள்ள முயன்றார். அதிகாரத்தின் ஆதரவு கொஞ்சம், அந்தஸ்து ஜம்பம் கொஞ்சம், பொருளியல் அறியாமை கொஞ்சம் என்று விளக்கினார்.

அமெரிக்காவை திட்டிக்கொண்டே, அந்நாட்டு கல்லூரிகளில் ஆசிரியர் பதவிகளுக்கு அலைந்தும், அமெரிக்க நிறுவனங்களின் பொற்கிழிகளுக்கு அலைந்தும், முரண்பட்டே வாழ்ந்த தென் அமெரிக்க அறிவுஜீவிகள், அவர் காழ்ப்பின் உச்சத்திற்கு ஆளானார்கள்.

ஒரு மாலை, மெக்சிகோ நகரத்தில், கேப்ரியல் கார்சியா மார்க்கெசை ஒரு நாடக அரங்கில் மாரியோ வர்காஸ் லோசா சந்தித்தார். மார்க்கெஸ் காஸ்ட்ரோ விசுவாசி. பேச்சோ கருத்து மோதலாகி  கசிந்து உருகி கைகலந்து குத்துச்சண்டையாய் மல்கி, லோசா மொத்த மார்க்கெஸ் வீழ்ந்தார்.

தம் முனைவர் பட்டத்து நாயகனை மொத்தும் இன்றியமையாத இறும்பூதடைய, என்ன தவம் செய்தாரோ.

குறிப்பு 

இது, டேனியல் யெர்கினும் ஜோசஃப் ஸ்டானிஸ்லாவும் எழுதிய The Commanding Heights நூலின் ஒரு சிறு பகுதியின், தமிழாக்கம். ஆங்கில மூலம் இங்கே.

Monday 26 October 2015

A Lack of Economic Knowledge


Mario Varghas Llosa, Peru's most distinguished writer, had written a doctoral thesis on Colombian novelist Gabriel Garcia Marquez. But his own novels made him an international literary figure. He began as a student communist and staunchly defended Fidel Castro's Cuban revolution.

But when he dared to criticize Castro for imprisoning writes, a hail of invective from Castro and his worldwide intellectual defenders fell upon Llosa. He came to see that communism meant repression, but also that if failed to deliver on its promises. He became a social democrat. He studied economics and concluded that liberal economics best delivers prosperity and freedom. Leftist intellectuals heaped calumny on him. And he returned it in kind. He denounced "cut rate intellectuals", who went with fashions, and were profoundly ignorant of economics. "You cannot be modern and Marxist", he declared. He mused on why intellectuals were so fascinated with state control and Marxism. Partly patronage, partly fashion, partly "lack of economic knowledge." He reserved some of his greatest contempt for Latin American intellectuals, who made a career of denouncing the USA, while finding succor from professorships in its Universities and grants from its foundations.


He encountered his old friend Gabriel Garcia Marquez, who never abandoned Castro, one evening at a theater in Mexico city. They got into an argument and Varghas Llosa ended up knocking out Marquez. Which is something that one hardly ever gets to do with the subject of one's doctoral dissertation.

This is an extract from a few paragraphs in the book "The Commanding Heights", by Daniel Yergin and Joseph Stanislaw. A translation in Tamil will follow shortly, as a separate blog post.

Other Essays

Pigs Have Wings
Vote for Google
Democracy or Free Market
South American Transport Revolution

Wednesday 21 October 2015

புரட்சி குடிமகன்

ஏப்ரகாம் லிங்கனை வெள்ளை மாளிகையில் ஒரு வெளிநாட்டு தூதுவர் பார்க்கவந்தாராம். லிங்கன் தன் காலணியை துடைத்து கொண்டிருந்தாராம். ஒரு ஜனாதிபதிக்கு இந்த சேவை செய்யக்கூடவா ஆளில்லை என்று அதிசயித்த தூதுவர், “மிஸ்டர் லிங்கன், உங்கள் ஷூவை நீங்களேவா பாலிஷ் செய்கிறீர்கள்?” என்று வினவ, “ஏன், உங்களுக்கு யார் ஷூவை பாலிஷ் செய்து பழக்கம்,” என்று லிங்கன் பதிலளித்தாராம். தன் கையே தனக்குதவி என்பது அமெரிக்க கலாச்சாரம். தன்னுடைய ஷூவுக்கு என்னை பாலிஷ் செய்ய கட்டளையிட்டுக்கொண்டே என் அப்பா இந்த கதையை பல முறை சொல்லியுள்ளார். சில சமயம் தானே பாலிஷ் செய்யும் பொழுதும் சொல்லியுள்ளார். பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் நான் ஷூ போடாமல் செருப்பை போட்டுக்கொண்டதற்கு இக்கதை ஒரு முக்கிய உளவியல் காரணமாக இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் சரித்திர எழுத்தாளர் ராமசந்திர குஹ (குகன்?) “தி ஹிண்டு” ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். முன்னாள் கம்யூனிஸ்டாக இருந்தவர் அமெரிக்கா சென்ற போது, ஒரு பெரும் பல்கலைகழகத்தின் பேராசிரியர், ஒரு பெட்டி நிரைய புத்தகங்களுடன் தன் அலுவலகத்திலிருந்து கார் வரை நடந்து சென்றதை, குறிப்பிட்டார். 

பாரதத்தில் எந்த கம்யூனிஸ்ட்டும் இதை செய்யமாட்டார் என்று மேலும் கூறி, ஓட்டுனரோ குமாஸ்தாவோ பெட்டி சுமந்து வர, கட்சி பிரமுகர்களும் கல்லூரி பேராசிரியர்களும் ஸ்டாலினிய சித்தாந்தம் பேசுவார் என்றும், பேனாவை சுமந்து சட்டைக்கு வலிக்கக்கூடாது என்பதால் மற்றவரிடம் பேனா வாங்கி எழுதுவதே இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் அறவழி என்று கொய்யாப்பழத்தில் கோணி ஊசி வைத்திருந்தார் குகன்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, தன் இல்லத்திலிருந்து நூறு மைல் தூரமுள்ள ஹ்யூஸ்டன் விமான நிலையத்திற்கு, என்னையும் எம்பி ஜெயராமனையும் கூட்டிச்செல்ல், தன் காரை ஓட்டிக்கொண்டு வந்து என் மாமா வரதராஜன். டெக்ஸாஸ் ஏ&எம் (Texas A&M University) பல்கலைகழகத்தில், மார்க்கெட்டிங் துறை பேராசிரியர். போகும் வழியில் பெட்ரோல் நிறப்பினோம். அங்கே வைக்கப்பட்டுள்ள சோப்புத்தண்ணியால் கார் கண்ணாடிகளின் அழுக்கை துடைத்தார். ராமசந்திர குகனின் கதை ஞாபகம் வந்தது. இதோ படம்.

(ஐயம்: ஹ்யூஸ்டனை கூசுடன் என்றும், டெக்ஸாஸை தெகுசாசு என்றும் தமிழில் எழுதவேண்டுமோ?)
புரட்சி குடிமகன்
நம் நாட்டில் ஓட்டுனரோ, பெட்ரோல் கடை ஊழியரோ தான், கார் கண்ணாடி துடைத்து பார்க்கமுடியும். ஆனால் அமெரிக்காவில் இது சகஜம். வீட்டில் உண்டபின், நான் என் தட்டை கழுவினால் சமையல் செய்யும் இந்திராம்மாவோ, எங்கள் இல்லத்து ஸ்வச் பாரதி மேரியம்மாவோ, “விட்டுடுங்க, நீங்க ஏன் கழுவுறீங்க, நான் செய்கிறேன்,” என்று காம்போதி ராகத்தில் பாடுவார்கள். ஏப்ரகம் லிங்கனின் மறு அவதாரமாக என்னை உணரும் அத்தருணத்தில், எந்த வெளிநாட்டு தூதுவனும் இல்லையே என்று ஜன்னல் வழியே ஏக்கத்தோடு எட்டிப்பார்பேன். கம்ப்யூட்டர் துறையிலும் பாத்திரம் தேய்ப்பதிலும், எனக்கு கிட்டத்தட்ட சமமான ஆண்டுகள் தொழில் அனுபவம்.

அமெரிக்காவில் பல வேலைகளை அவரவரே செய்துகொள்ளவேண்டும். பல மாநிலங்களில் பெட்ரோல் கடைளில் காசு வாங்குவதற்கு தவிர எந்த தொழிலாளியும் இருக்கமாட்டார். நாமே பெட்ரோல் போட்டுக்கொள்ளவேண்டும், காத்தடித்துக்கொள்ளவேண்டும், கண்ணாடி துடைக்கவேண்டும். முதன்முறை ஓரிகன் மாநிலத்திற்கு சென்றபோது அங்கே பெட்ரோல் போட தொழிலாளிகள் இருந்ததை கண்டு ஆச்சிரியப்பட்டேன். அந்த மாநிலத்தில் அது சட்டமாம். கட்டாய வேலை வாய்ப்பு திட்டம். மொழியாலும் உணவாலும் உடையாலும் அமைப்பாலும் ஒரே மாதிரி காட்சியளித்தாலும், மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர், அமெரிக்காவிலும் பல பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன. வாழ்ந்தால் தான் தெரியும். நிற்க.



கார் கழுவுவதை தவிற வேறு சில தொழில்களும் வரதராஜன் மாமா செய்கிறார். முக்கியமாக தோட்டவேலை. புல்வெளியற்ற தனிவீடு இல்லை என்று அமெரிக்காவை சோல்லலாம். வீட்டின் முன்னும் பின்னும் புல் பரவியிருக்கும். ஒரு உயருத்துக்கு மேல் வளர்ந்தால் வெட்டவேண்டும்; இதற்கு ஊராட்சி சட்டங்கள் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வாராவாரம் காசு கொடுத்து வெட்டுவோரும் உண்டு, தானே வெட்டுவோரும் உண்டு. புல் காய்ந்து விட்டால், செடிக்கடைகளில் பாய் பாயாக விற்கப்படும் புல் வாங்கிக்கொண்டு வந்து தோட்டம் அமைக்க வேண்டும். புல் வளர (நஞ்சை?) மண் வாங்குவதும் சகஜம். சில நேரம் மண்ணை இலவசமாக சிலர் தருவர். விளம்பரம் செய்து தானம் நடக்கும், வண்டி எடுத்து சென்று மண்ணை அள்ளி வந்து தோட்டத்தில் பரப்பிக்கொள்ளலாம். படம் காண்க.

Free Dirt = இலவச மண்

இருபது வருடத்திற்கு முன் அங்கு சென்ற போது, தன் தந்தைக்கு கிடைத்த மாத சம்பளத்தைவிட, தோட்டத்துக்கு மண் வாங்க செலவழித்தேன் என்று கொஞ்சம் சோகம் ததும்ப சொன்னார். சில வருடங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியில் புடலங்காய் பூசனி கத்திரி கருவேப்பிலை வளர்த்து மகிழ்ந்தார். இவற்றை கூட்டு, குழம்பு, கறியமுது என்று மாமி பிரபா சமைத்து நானும் சுவைத்துள்ளேன்; ருசியோ ருசி. அக்கம்பக்கத்தினருக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.

என்னளவு இல்லை எனினும் என்னைப்போல் நளபாக ரசிகர். இவரை போல ரசவிரும்பி யாருமில்லை. காபி டீ தரவா என்று யாராவது கேட்டால் சூடாக ஒரு கோப்பை ரசம் கேட்டு அருந்தி மகிழ்வார்.

பிரபா மாமி செய்த நளபாகம்
தமிழ் பிரியர்; ரசிகர். மகளும் மகனும் ஓட ஓட திருக்குறளும் அவ்வைத்தமிழும் பாரதியார் பாடலும் பேசுவார். பெங்களூருவில் வளர்ந்து பள்ளியில் படித்த காலத்தில், கன்னடம் வகுப்பில் பெற்றோர்கள் சேர்த்தனராம். ஒரு கன்னட ஆசிரியர், “கன்னடம் மிக கடினம். நீங்களோ தமிழ் குடும்பம், தமிழ் வகுப்பிலே மகனை சேர்த்துவிடுங்கள்”, என்று சொன்னாராம். அந்த கன்னட ஆசிரியருக்கு அடிக்கடி மானமார்ந்த நன்றி சொல்லுவார். தாங்கவே முடியாத தமிழ் படங்களை சகித்துக்கொண்டு, கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கும் டி,எம்,சௌந்தரராஜன் சுசீலா குரலினிமைக்கும் கேட்டு ரசிப்பார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். கேள்வி நேரம் என்ற சிறுகதை, தற்கொலை செய்துகொள்பவனை, அவன் பயன்படுத்த நினைக்கும் கருவிகள் கேள்விகள் கேட்டு தடுப்பதாக அமைந்திருக்கும். நான் படித்ததில்லை. அவர் சொல்லி கேட்டதுதான். நகல் கிடைத்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும்.

நாம் யாவரும் அவர் கதைகளையோ கட்டுரைகளையோ படித்திரா விட்டாலும் அவர் எழுத்தை படித்திருக்கிறோம். பல வருடங்களுகு முன் சென்ன மாநகராட்சி நடத்திய அந்த காலத்து ஸ்வச் பாரத திட்டத்தில், மக்களை குப்பைகளை தொட்டிகளில் போட ஊக்குவிக்க, சிறந்த சொற்றொடர் எழுதும் போட்டி ஒன்றை நடத்தினர். இவர் எழுதி “Use Me” ரூ.25 பரிசு பெற்றது.


எண்ணும் எழுத்தும்

தன் துறையில் அபாரமான பெயர்கொண்டவர். துறை இலக்கிய பத்திரிகைகளான ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங், ஜர்ணல் ஆஃப் மார்க்கெடிங் ரிசர்ச் இரண்டிலும் பல ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். (இவற்றை, தலா விற்பனை கலை பத்திரிகை, விற்பனை கலை ஆய்வு பத்திரிகை என்று தமிழாக்கலாமோ?) இரண்டு பத்த்ரிகைகளிலும் ஆசிரியராக பணிசெய்துள்ளார். 

மச்சச்சேத்துப்பட்டு பல்கலைகழகம் ஐம்பதாண்டில் தன் லட்சக்கணக்காண மாணவர்களில் தேர்ந்தெடுத்து கௌரவித்த தலைசிறந்த பத்தில் இவரும் ஒருவர். நூல்கள் நிரம்பி வழியும் அலமாரியை போல் வாங்கிய விருதுகள் நிரம்பி சுவரும் வழிகிறது. கார் கண்ணாடியை விட நன்றாகவே விருதுகள் மிளிர்கின்றன.



அவர் பிறந்தநாள் அக்டோபர் இருபது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், மாமா. 

Journal of Marketing
Texas A&M University டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம்

வரதராஜனின் விருதுகள் அருகில் ஜெயராமன்

தொடர்பான பதிவுகள்

அன்பளிப்பு
On Human Kindness
நான் ரசித்த சில பெயர் பலகைகள் 

Thursday 15 October 2015

ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து - கட்டட கவிதை


ஆங்கில ஜார்ஜ் மன்னனுக்கு, பன்மொழி பண்டிதர் ஆங்கிலேயன் சென்னைப்பட்டணத்து எல்லீசனின் கல்வெட்டு கவிதையை சிலர் ரசித்திருக்கலாம். முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டிய தாஜ் மகாலுக்கு, ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதை சிலருக்கு தெரிந்திருக்கும். இங்கே ஆங்கிலேயர் கட்டிய சென்னை உயர்நீதிமன்றத்து கட்ட்டத்திற்கு ஒரு தமிழ் புலவர் எழுதிய கவிதையாய் பார்ப்போம்.

அதற்கு இன்றளவும் மதறாஸ் ஹைகோர்ட் (Madras High Court) என்றே பெயர் நிலவி வருகிறது. முதன் முதலில் ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே செயல்பட்ட நீதிமன்றம், மதறாஸ் உச்சநீதிமன்றம் (Supreme Court of Madras) என்ற பெயரில் தொடங்கபட்டது. 1862இல் உயர்நீதிமன்றமாக மாற்றப்பட்டது. 1857இல் சிப்பாய் புரட்சிக்கு பின், கிழக்கிந்திய கும்பெனியின் அதிகாரத்திலிருந்து ஆங்கிலேய அரசின் அதிகாரத்திற்கு மதறாஸ் மாகாணம் கைமாறியதும், இதற்கு ஒரு காரணம். பத்தொன்பதாம் நூற்றாண்டில், கோட்டைக்கு வெளியே தனி மண்டபம் பெற்றது. அவ்விடத்தில் சட்ட கல்லூரியும் நிறுவப்பட்டது. இவை இரண்டும் அவ்விடத்தில் கட்டுமுன், அங்கே சென்னக்கேசவ பெருமாளுக்கு ஒரு கோயில் இருந்தது. இந்த கோயிலின் பெயரே, சென்னைப்பட்டணத்தின் பெயர் பிறந்த காரணம் என்று நம்புவோருண்டு. ஒரு காலத்தில் சென்னகேசவ பெருமாள் கோயில் இடிக்கப்பட்டு, பின்னர் அந்த கோயில் பூக்கடை அருகே, இன்றுள்ள இடத்தில் கட்ட, கும்பெனியார் பணம்குடுத்தனர்.

மாதாமாதம், இண்டாச் (INTACH) என்ற வரலாற்றார்வலர் குழு, ஒரு உயர்நீதிமன்ற வரலாற்று உலா நடத்துகிறது. சென்னையின் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க தொடங்கிய இக்குழுவின் சார்பில், கட்டடகலைஞர் திருமதி தாரா முரளியும், வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் நடத்திய ஒரு மாதாந்திர உலாவில், சென்ற 2014 ஜூலை மாதம் நானும் கலந்துகொண்டேன். நீதிமன்ற வளாகத்தில், முன்னாள் நீதிபதி பாஷ்யம் ஐயங்காருக்கு ஒரு சிலை உள்ளது. அச்சிலைக்கெதிரே, உயர்நீதிமன்றத்தின் அருங்காட்சியகம் உள்ளது. அங்கே சென்னை ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து என்ற நூல் உள்ளது. 

பாஷ்யம் சிலைக்கு முன் வழக்கறிஞர் ராஜா

உயர்நீதிமன்றம், பிறகாலத்தில் சூட்டப்பட்ட பெயர். அக்காலத்தில், ஐகோர்ட் என்றே தமிழில் வழங்கப்பட்டது. ஓர் கட்டடத்தை புகழ்ந்தோ நீதிமன்றத்தை புகழ்ந்தோ பாடல் ஏன் இயற்றவேண்டும்? அதுவும் தமிழில்? மரபுக்கவிதையில் எழுதிய பாடல் யாரைப்போய் சேரும்? இயற்றிய புலவர் யார்? கோட்டைக்கும் இப்படி ஏதேனும் பாடல்கள் உண்டோ? மாமல்லபுரத்து அற்புதங்களுக்கே தமிழில் இவ்வகை அற்புத பாடல்கள் இல்லையே! (எனக்கு தெரிந்து)

High Court poem ஐகோர்ட்டின் அலங்கார சிந்து
சரி பாடலை பார்ப்போம். நேரிசை வெண்பாவில் விநாயக துதியுடன் தொடங்குகிறது இச்சிந்து.
விநாயகர் துதி

அன்னை வயலாந்திருசூழ்ந் தகிலமெலாம்பேரோங்கும்
சென்னையென்னுமின்னகரில் சிறப்புரவே – உன்னிதமாம்
ஐகோர்ட்டின்கட்டடத்தை அகிலமிசைபாடுதற்கு
கையைந்துடையகணன் காப்பு.

Translation: That this song of the noble High Court building, ennobling the city of Chennai, surrounded by paddy fields and praised around the world, may be sung by all people, I invoke the blessing of the FiveHanded Gana (i.e. Ganapathy).

இதன்பின் –
ஓரடித்தங்கசிந்து

சீரோங்கும் சென்னைதனில் சிறப்புடனேயமைந்த பேரோங்கும் ஐகோர்ட்டின் பிரபலமாம்கட்டடத்தை பாரெங்கும்மிபுகழைபாடு தர்க்குமுன் கடவுள்
க(?)றானை மாமுகனே ஐங்கரா-கடவுளே துணையிரையா.

Translation O Five-handed Elephant Faced God, protect us, as we sing for the world, to praise this famous High Court building, so well built in prosperous Chennai

சீமையெழுகடலும் சிறப்புற்று தான்வாழும் அன்னைகுயின்விக்ட்டோரியாள் அரசின்மனம்போலே முன்னும் சீஸாலன் துரைமுடித்தபிளான்வேலை பார்த்துமனமகிழ்ந்து பார்லிமெண்டுதுரைகள்கட்டுதர்க்கு நல்லயிடம் கடலின்கரையோரம் கோட்டைக்கடுத்தயிடம் கூண்டுவிளக்கருகில் சித்திரம்போல் ஐகோர்ட்டை செய்துமுடித்தார்கள்யிப்பெருங்கட்டடங்கள் யெவ்வுலகில் கண்டதில்லை முந்தியுகமாண்ட முடிமன்ன ராஜர்களும்..

Translation: By the grace of Mother Queen Victoria, famous across the Seven Seas, the Members of Parliament being delighted on seeing the building plans designed by Lord Seesalan (Chisholm), of good location, along the sea, besides the fort, near the lighthouse; like paintings, built large premises the likes of which the world hasn’t seen, not even the kings of yore or the sculptors…

சீஸாலன் என்பது ராபர்ட் சிஸோல்ம் (Robert Chisholm) எனும் கட்டட கலைஞரை குறிப்பதாக, ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் அது புலவரின் தவறான கருத்து என்றும், ஐகோர்ட்டின் வடிவத்தை பிராசிங்டன், வகுத்தார் என்றும், அக்காலத்திற்கு முன்பே சிஸோல்ம் இந்தியாவை விட்டு லண்டன் சென்றுவிட்டார் என்றும், ஸ்ரீராம் கருதுகிறார். மேலும், இந்த அலங்கார சிந்து நூலை ஒரு நீதிபதியிடம் தானே தானமாக கொடுத்ததாகவும், அவர் ஃபேஸ்புக்கில் (முகநூலில்) குறிப்பிட்டுள்ளார். அவரது தானத்திற்கு நன்றி. சென்னையிலுள்ள பல்கலைகழக செனேட் கட்டடம், மத்திய ரயில் நிலையம், மத்திய தபால் நிலையம் போன்ற பல கட்டடங்களை சீஸால்ம் வடிவமைத்தார். இண்டோ-சாரசெனிக் (Indo Saracenic) என்ற கட்டட கலைக்கு முன்னோடி சிஸோல்ம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூண்டுவிளக்கு என்பது ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கருங்கல் கலங்கரை விளக்கமாகும். இந்த கருங்கல் தூண், இந்தியாவை அளக்கும் திரிகோண நிலஅளவைதிட்டத்தின் (Great Trigonometrical Survey) ஒரு அடிக்கல்லாகவும் திகழ்ந்தது. அதை குறிக்கும் கல்வெட்டும் அதன் அடித்தளத்தில் உள்ளது. ஆங்கிலேயர், கப்பல்களுக்கு எச்சரிக்கையாக விளங்க, முதலில் கோட்டைக்குள் ஒரு கூண்டுவிளக்கை கட்டினர். பின்னர் இந்த கருங்கல் கூண்டுவிளக்கை கட்டினர். அதற்கு பின்னரே, ஐகோர்ட்டிற்கு தனி கட்டட திட்டம் வகுத்தனர். அதோடு, ஐகோர்ட்டின் மிக உயர்ந்த மத்திய விமானம், மூன்றாம் கலங்கரை விளக்கமாக செயல்பட்டது. இவை, மின்சார விளக்கிற்கு முந்தைய காலத்தவை; தீப்பந்தங்கள்.

மேலும், ஐகோர்ட்டின் அலங்கார சிந்து கீழ்வருமாறு தொடர்கிறது.

ஆநந்தகளிப்பு

பல்லவி
பட்டணம் ஐகொர்ட்டை பாரும் யிந்த
பாரினிலிதற்கிணை யெதைசொல்லப்போகும்

அநுபல்லவி
கட்டடம்மதிகவிஸ்தாரம் – யதில்
கலசம்யிருக்கின்ற வேலைகள்ஜொரும்
அட்டதிசையெல்லாம் கோரும் – நல்ல
அழகாய்யமைந்திட்ட அதிசயம்பாரும்

I don’t think these require any translation.

ஆநந்தகளிப்பு


கூண்டுவிளக்கு

Related Essays

ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி
போர்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர் 
Sriram Venkatakrishnan on Madras High Court
A Hungarian mathematician's Poem about Madras
The Cooum : A Cultural Mapping - Facebook group
Madras - India's First modern city
An Evening with John and Pamela Davis
சென்னை சைனா மதறாஸ் மதறாஸா?

Saturday 3 October 2015

கோயிலும் கல்கியும் 2 - சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் படிக்கும் போது அந்த கதையும் வரலாறும் மட்டும் என்னை தாக்கவில்லை. காதலும் வீரமும் சோகமும் உவகையும் சிரிப்பும் வியப்பும் நம் உள்ளத்தில் மூளுவது விசித்திரமல்ல. ஒரு சிறந்த எழுத்தாளன், அதைவிட சிறந்த கதைசொல்லி, இதை எல்லாம் செய்வான்.

கல்கி சிறந்த கதைசொல்லி. 

ஆனால் அதையும் தாண்டி, பல்லவர் காலத்தை கண்முன்னே அவர் கொண்டுவந்த ஆளுமை அற்புதம். குதிரை வேண்டும் என்று ஆயனர் கேட்க, மகேந்திரனின் சங்கோஜமும், இங்கும் அங்கும் தூதுவர் மூலம் தகவல் செல்ல எடுத்து கொண்ட கால அவகாசமும், வியப்பூட்டின. நாம் வாழும் நவீன யுகத்தில் தொலைப்பேசியையும் ரயில்வண்டிகளையும் கார்களையும் விமானங்களையும், சாதாரணமாக கருதும்போது, நாமெல்லாம் மன்னர்களை மிஞ்சிய செல்வந்தர்கள், என்றே எனக்கு வலியுறுத்தியது. வெள்ளத்தை தாண்ட முடியாமல் சாளுக்கிய படையும் நின்றது என்று அறிந்தபோது, பாலங்களின் அருமை புரிந்தது. 

பாலங்களை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. நாடுகளின் எல்லைகளாக பெரிய நதிகளே பல நூற்றாண்டுகள் திகழ்ந்தன. அவற்றை மிஞ்சி பேரரசுகள் அமைந்தது அதிசயம். ஆங்கிலேயர் ஆட்சியில் பாலங்களால் உள்நாட்டு வணிகம் செழித்ததும், பெரும் வரம். மாபெரும் கோயில்களை கட்டிய மன்னர்களால், ஸ்தபதிகளால் பாலங்கள் செய்ய முடியாதது பெரிய புதிர். இதை ஆராயும் கட்டுரையோ நூலோ ஏதும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது அஜந்தா ஓவியம் பற்றிய தகவல் தான். ஆயிரம் ஆண்டுகளாகியும் மங்காத சிலையும், சாயாத கோயிலும், தேயாத இலக்கியமும், மாறாத சில மரபுகளும் அதுவரை யதார்த்தமாகவே தெரிந்தன. ஆனால் ஆயிரம் ஆண்டு மங்காத ஓவியம், ஆழமாகவும் அகலமாகவும் சிந்தனையை கிளறியது. பாரதநாட்டை, பக்திக்கும் இலக்கியத்திற்கும் உணவிற்கும் மட்டுமே சிறந்த நாடாக நான் அன்று வரை கருதியிருந்தேன். கலைகளிலும் விஞ்ஞானத்திலும் நாம் சாதனைகள் செய்தோம் என்று எனக்கு அன்று வரை தோன்றவில்லை. ஸ்தபதி, சிற்பி என்று சொற்கள் வழக்கில் இருப்பினும், அவர்களது கல்வியும் ஆர்வமும் மரபும் முக்கியத்துவமும் ஏனோ அறிவியல் ஆர்வமுள்ள பலருக்கும் தெரிவதில்லை. 

நாட்டில் பஞ்சம் வரும்போது அதை தீர்க்க ஏதோ கோயில் கட்டினார் என்ற வரட்டு மூடநம்பிக்கை, நம் நாட்டில் மிக பரவலாக உள்ளது. மூலிகைகளை மருந்தாக ஆய்ந்து உணர்ந்து கற்று நூல்செய்த சரகர் சுஷ்ருதர், ஜோதிட கணித நூல்களை இயற்றிய ஆரியபடர், வராஹமிஹிரர், பாஸ்கராச்சாரியர் ஆகியோரை அறிவியல் ஞானிகளாக கருதும் பாரத மக்கள், சிற்பிகளை, ஸ்தபதிகளை, விவசாயிகளை, அறிவியல் பயில்வோராக பார்ப்பதில்லை. அறிவுசார் நூல்களை படிப்பவர் சிலரே, ஓரளவேனும் இவர்களின் மரபுகளையும் திறமையும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, ஆங்கில கல்வி மரபில் வந்த பலரும் இதை உணர்வதில்லை.

கல்கி என் கண்களை திறந்துவைத்தார்.

தமிழ் இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில், கவிதையில் சுப்பிரமணிய பாரதி செய்த புரட்சியை விட, கதை உலகில் கல்கி செய்த புரட்சி அகலமானது. சரித்திர நாவல்களை எழுதிய பெரும் எழுத்தாளர் படைக்கு முன்னோடி, கல்கி.

முன்னோடிகள்

பிரெஞ்சு மொழியில் ஜூல்ஸ் வெர்ண் நிலவுக்கு செல்லும் பயணத்தையும், கடல்மூழ்கி கப்பலையும், பலூனில் ஆப்பிரிக்காவை கடக்கும் சாகசத்தையும் நாவல்களாக எழுதி அறிவியல் கதை யுகத்தை தொடங்கி வைத்தார். ஆர்த்தர் கிளார்க், ஐசாக் அசிமோவ், ரே பிராட்பரி, ஸ்டானிஸ்லாவ் லெம், லேரி நிவன், உர்சுளா லிகுயின் என்று பலரும் இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த கதைகள் எழுதினார்கள். ஜூல்ஸ் வெர்ணின் ஆழ்ந்த அறிவியல் ஞானம் அவர் கதைகளில் புலப்படும். நான் படித்ததில், ஆர்த்தர் கிளார்க், லேரி நிவன் மட்டுமே அத்தனை ஆழமாக அறிவியலை சார்ந்து நாவல்களை எழுதினார்கள். மற்றவர் கதைகளில் சமூகவியல், அரசியல், காதல், மோதல் என்றே முக்கால்வாசி போகும். இருபதாம் நூற்றாண்டில் நாவல் சிறுகதை தவிற காமிக்ஸ் என்ற சித்திரகதைகளும் (குறிப்பாக சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஃப்லாஷ் கார்டன் வகையறா), ஸைஃபை சினிமாக்களும் அறிவியல் முன்னேற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை நோக்கி, கற்பனை செய்து அற்புத காவியங்களை தந்தன.

ஆர்த்தர் கோனன் டோயில் ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற நாயகனை படைத்து துப்பறியும் கதைகளின் யுகத்தை தொடங்கி வைத்தார்; அகாத்தா க்ரிஸ்டி, ஜான் டிக்சன் கார், பெர்ரி மேசன், எல்லரி குயீன், டிக் ஃப்ரான்ஸிஸ் என்று துப்பறியும் மர்மகதை எழுத்தாளர்ப்படை பின்தொடர்ந்தது.

யாம்பெற்ற துன்பம் பெருக இவ்வுலகம் என்றே, மெகாத்தொடருக்கு முன்னோடியாய் டால்ஸ்டாய், தோஸ்தோயெவ்ஸ்கி போன்ற ருஷிய எழுத்தாளர்கள், அம்மிக்கல்லளவு நூல்களை எழுதி, புலம்பி எழுதுக கருமம், என்ற நீதியை நிறுவினார்கள்.

கல்கிக்கு முன்னரே வரலாற்று கதைகள் தமிழில் இருந்தாலும் அவரை தொடர்ந்து விக்ரமன், சாண்டில்யன், ஜகச்சிற்பியன், ஸ்ரீவேணுகோபாலன், பாலகுமாரன் என்று வரிசை நீள்கிறது. மற்றவர் கதைகளை நான் பரவலாக படித்ததில்லை. கல்கி முன்னோடி என்பதில் சந்தேகமில்லை; சமூக நாவலிலோ, பயண கட்டுரையிலோ, சிறுகதையிலோ அவருக்கு இந்த அந்தஸ்த்து இல்லை. சரித்திர நாவலில், அவரே மகேந்திர பல்லவர்.

கலை ஆர்வம்

நாவலை எழுத மட்டும் அவர் தூண்டவில்லை. சிற்பங்களின் மேலும், பக்தி இலக்கியத்தின் மேலும், மன்னர்களின் கலை ஆர்வத்தின் மேலும், ஒரு புதிய ஆர்வத்தை பல்லாயிரக்கணக்கான தமிழரிடம் அவர் தூண்டினார். பாடல் பெற்ற தலமென்றும், தீர்த்த யாத்திரைக்கும் மொட்டையடிக்கவும் பயணித்த தமிழர்களை, பல்லவர் சிற்பம் சோழர் சிற்பம் என்று தேடிச்செல்லவைத்தார்.

ஹிண்டு நாளிதழில் பலவருடங்களுக்கு முன், எழுத்தாளர் கங்காதர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டை புரிந்துகொள்ள சிவகாமியின் சபதமும் பொன்னியின் செல்வனும் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதை நான் ஆமோதிக்கிறேன்.

மலைக்கணவாயில் பரஞ்சோதி குதிரையில் செல்ல, அவனை சூழ்ந்த சிவந்த மலர்களும் பாறைகளும் அவனது மனதில் அனலாய் கொதித்த ஆர்வமும் அச்சமும் உற்சாகமும் நரம்புகளை புடைத்துக்கொண்டு மேனியெல்லாம் மின்னலாய் சிலிர்க்க, அவ்வப்போது பின் தொடரும் வேறொரு குதிரை சத்தம் கேட்பதும், இது வரை போகாத பாதையில் பரஞ்சோதி மட்டுமல்ல, நாமும் போகிறோம் என்ற ஈடில்லா உணர்ச்சி நம்மை கவ்வும். ஓவியர் மணியம் செல்வத்தை அவர் இல்லத்தில் சந்தித்தப்போது இதே உணர்வை அவர் என்னிடம் பகிர்ந்தார். அவர் தந்தை மணியம் வரைந்த வாதாபி ஓவியங்கள் சுவரிலிருந்து சிரித்தன. கல்கி ஆவியாய் என் காதில் வந்து, அப்பனே, மந்தாகினி மாதிரி மௌனமாய் இருக்காதே, வந்தியத்தேவனை போல் ஏதாவது உளரித்தள்ளு, என்றார். பல்லை இளித்து தலையசைத்தேன்.

பரஞ்சோதியோடு மனம் அஜந்தாவிற்கும் பயணம் சென்றது. அருகிலுள்ள சித்தன்னவாசலை விட தொலைவிலுள்ள அஜந்தாவே வா வா என்று அழைத்தது. அங்கே தீட்டப்பட்ட ஓவியத்தை விட, மங்காத வண்ணத்தின் ரகசியத்தின் மேல் ஆர்வம் பொங்கியது. நான் சிவகாமியின் சபதம் படித்தது 2000இல். அஜந்தாவுக்கு 2006 இல் சென்றேன். ஒரு ஓவியமும் புரியவில்லை. அங்குள்ள ஆட்கள் சொல்வது தவறான கதையெனவே உறுத்தியது. காட்சிகள் ஏதும் புரியவில்லை. ஓவியங்களின் தேய்ந்த நிலை கண்டு மனம் கசந்தது. முந்திய நாள் எல்லோராவை பார்த்ததில் மிரட்சியும் பிரமிப்பும் நிலைத்ததால், கொஞ்சம் ஆறுதல். எல்லோரா சிற்பங்கள் சொல்லும் கதைகள் புரிந்ததே? அஜந்தா ஏன் அடையாளமே தெரியவில்லை? குழப்பமான அனுபவம்.

அஜந்தாவை பற்றி நல்ல நூலிருக்கும், அதை படித்தால் விவரம் கிடைக்கும் என்று பல வருடங்களுக்கு என் மந்த புத்திக்கு தோன்றவில்லை. அங்குள்ள ஓவியங்கள் தமிழ்நாட்டு கோயிலுள்ள ஓவியங்களை விட பல மடங்கு சிறப்பானவை என்று மட்டும் புரிந்தது.

ஒரு கோவிலை தவிர்த்து : காஞ்சி கைலாசநாதர் கோவில்.  
(தொடரும்)

தொடர்புடைய கட்டுரைகள்

2. கல்லிலே ஆடவல்லான்
3. ஜல்லிக்கட்டு நடை - ஜுல்ஸ் வெர்ண்
4. Arthur C Clarke's Magic Postulate