Wednesday 30 January 2019

தேவ்கர் தல வாழ்த்து

சமீபத்தில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினருடன், மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒரு வாரம் சென்றிருந்தேன். வருடா வருடம் ஜனவரி மாதம், ஒரு பாரம்பரிய தலத்தை தேர்ந்தெடுத்து, கலை உலா செல்வது எங்கள் வழக்கம். இந்த வருடம் சாஞ்சி பிரதானமான தலம்; அதை சுற்றி பல இடங்களுக்கும் கலை உலா சென்றோம். தமிழகத்தின் வட பகுதி தொண்டை நாடு அல்லவா? அதை போல், மத்திய பிரதேசத்தின் வட பகுதி  புண்டேல்கண்ட். அதில் சில பகுதிகள் உத்திர பிரதேசத்தில் உள்ளன; குறிப்பாக தேவ்கர். தேவ்கரில் குப்தர் கால பெருமாள் கோயில் உள்ளது, அதை சமீபகாலமாக தசாவதார கோயில் என்பர்.


தேவ்கர் பெருமாள் கோயில்

உருமாறா கோயில்களில், பாரத நாட்டின் மிகப்பழமையான இந்து மத கோயில் என்பது கலைவரலாற்று  வல்லுனரின் கருத்து. அது என்ன உருமாறா கோயில்? ஒரு காலத்தில் கோயில்கள் செங்கலிலும் மரத்திலும் சுதையிலும் கட்டிவந்தனர். தமிழ்நாட்டில் சங்க கால கோயில்கள் இவ்வகை. பின்னர் குப்தர் காலத்தில் வடக்கிலும், பல்லவர் காலத்தில் தமிழகத்திலும், கடம்பர் காலத்தில் கர்நாடகத்திலும், கருங்கல், சுண்ணாம்புக்கல், மணற்கல், போன்ற பாறைகளை வெட்டி கோயில் கட்டும் மரபு தொடங்கியது.

தாம் ஆண்ட தேசங்களில் பல செங்கல் தளிகளை கற்றளியாக்கினர் சோழர்.  பிறகு இப்படி உருமாறிய கோயில்களை பாண்டியர், விஜயநகர் மன்னர்கள், நாயக்கர், மராட்டியர் ஆகியோர் புனரமைத்தனர்; விரிவாக்கினர், ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பினர். ஆனால் சில பல்லவர் கால சோழர்கால கற்றளிகள், பிற்காலத்தில் உருமாறவில்லை. அதைப்போல் தேவ்கர் கோயிலும் குப்தர் காலத்தில் உருவானபின் உருவம் மாறவில்லை. உருமாற்றாமல் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பெற்ற தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

இந்த கோவிலின் மேற்கில் கருவறையின் நுழைவாயில். மற்ற மூன்று புற சுவர்களில் மையத்தில் மிக அழகான மூன்று சிற்பங்களை காணலாம். வடக்கே கஜேந்திர மோட்சம்; கிழக்கே நர நாராயணர்; தெற்கே அனந்தசயனர்.

 இந்த மூன்று சிற்பங்களையும் வர்ணித்து, இந்த கோயிலுக்கு நான் ஒரு வாழ்த்து பாடல் இயற்றியுள்ளேன். பாடல் அறுசீர் விருத்தம். நண்பர் சுதர்சனம் இயற்றிய ஒரு பாடலின் யாப்பையும் சில் சொற்களையும் களவாடி, கழித்து கூட்டி களித்து படைத்த கவிதை. என் கவிதைக்கு வசதியாக முதல் காட்சியாக அனந்தசயனரையும், அடுத்து அவருக்கு அபய குரல் ஒலித்த கஜெந்திரனையும், கடைசியாக நரமுனியோடு உறவாடும் நாராயணனாகவும் கால வரிசை படுத்தியுள்ளேன்.

நாகத்தின் மேல்கிடந்து போகத்தில் வீற்றிருந்த ஊகத்தின் உருவானமால்
சோகத்தில் ஓலமிட்ட நாகத்தின் துயர்தீர்க்க வேகத்தின் கதியேறியே
மேகத்தை போலவெழு நாகத்தை ஆழியெடு வேகத்தில்  வென்றவழகன்
நாகத்தின் அவதாரம் யாகத்தோன் நரமுனியின் யோகத்தில் தோன்றுதலமே

அனந்தசயனர்
கஜேந்திர மோட்சம்
 நர நாராயணர்

பொழிப்புரை 
ஆதிசேடன் என்னும் நாகத்தின் மேல் போகமாக வீற்றிருந்த திருமால், சோகத்தில் ஓலமிட்ட கஜேந்திரன் எனும் நாகத்தின் துயரம் தீர்க்க, வேகம் என்ற சொல்லுக்கே விளக்கமான கருடன் மேலேறி, மேகம்போல் நீரிலிருந்து எழுந்து காட்சியளித்த நாகத்தை (கஜேந்திரனை கவ்விய மகரநாகத்தை) தன் சுதர்சன சக்கரம் (ஆழி) எடுத்து, அதன் வேகத்தில் வென்ற  அழகன் (திருமால்), பின்னர் ஆதிசேடன் என்னும் நாகத்தின் அவதாரமான நரமுனியுடன் நட்பு (யோகம்) கொண்ட நாராயண முனியாக, வதரி ஆசரமத்தில் தோன்றும், சிற்பங்கள் கொண்ட தலம், தேவ்கர்.

ஊகத்தின் உருவானமால் என்று முதல் வரி சொற்றொடர், பர்த்ருஹரியின் ஒரு சுலோகத்திலிருந்து எனக்கு தோன்றியது. திக்காலாதியனவச்சின்னானந்தசின்மாத்ரமூர்த்தயே என்ற அவரது முதல் வரியில், “ஆனந்த சித்” - “இன்ப எண்ணம்” என்பது மட்டுமே இறைவனின் வடிவம் என்கிறார். “இன்புருகு சிந்தை” என்னும் பூதத்தாழ்வார் மங்கலக்கிளவியும், இதற்கு தமிழ் உதாரணம். ஒரு ஊகம் என்பது ஒரு எண்ணம்; அதற்கு வடிவம் இல்லை. ஊகத்திற்கு வடிவமென்றால் அது திருமால் உருவமே என்று பர்த்ருஹரி, பூதத்தாழ்வாரை பின்தொடர்ந்து, இந்த சீர்கள்.

படங்கள்
க. தேவ்கர் கோயில் - ர.கோபு.
ங. மூன்று சிற்பங்கள் - வி.கே. ஸ்ரீநிவாசன்.

பாடல்களில் சிற்பங்கள்
தமிழிசையில் மிளிரும் சிற்பங்கள் - அசையும் பொருளில் இசையும் சிவனே

கவிதைகள்

தாலாட்டும் காவேரி
சலைவன்வாழ்த்து – திணை கமழும் உதகை வனம்

Thursday 17 January 2019

The story of the Stupa


In 1936, A.H. Longhurst, former Superintendent in the Archaeological Survey of India, published a book titled “The Story of the Stupa”. It traced the evolution of the stupa, far before the era of Gautama Buddha and well into modern times.

It had four chapters, three of which were seemingly unrelated to stupas. The first explained the significance of the umbrella in Indian culture,and the extremely high privilege it held symbolically, at the time of Longhurst’s writing.

Megalithic Origins

Longhurst begins not with megalithic monuments, especially in Kerala. Kodakallu is a class of monument, whose name literally means umbrella-stone in Malayalam (koda=umbrella; kallu=stone). It is aptly named for its shape. These are burial monuments. A massive stone is placed over the grave of a corpse; such pre-historic burial monuments, called dolmens, are found all over India. Usually they are merely large and crude; the umbrella shaped versions are found only in Kerala, and this one in the picture is a masterpiece for its perfection, which must have been achieved only using stone tools.

Longhurst explains that the heavy stone is to prevent the spirit of the dead from coming alive and haunting the living. Extant tribes with such animist beliefs and fears are common all over the world.

Burial sites are common among prehistoric peoples, even in India, which contrasts sharply with the Hindu custom of cremating the dead.


Dolmen, Mallachandram
Picture : Manonmani Puduezhuthu
Koda kallu



Buddhist Stupas

Buddhists and Jains constructed stupas to bury their saints, though today only excavated Buddhist stupas seem to have survived in India. Stupas are mentioned even in Vedic literature.

While the most famous stupas are for Gautama Buddha himself, hundreds of other people, mostly monks in the Buddhist sangha also had stupas. Cunningham excavated a casket in Bhilsa on which was inscribed the name of Haritiputra, a disciple of Buddha. Scattered around major stupas in places like Vaishali, Sanchi, Nalanda, Ratnagiri etc are the stupas of several monks of local monasteries.

The famous stupas of massive structure and intricate art, like Sanchi, Amaravati and Bharhut, contends Longhurst, are exceptions, rather than the rule. Sanchi is exceptional in another way. Its claim to fame is not any direct connection with Buddha, but that it was the hometown of Vidisha Devi, one of Maurya Asoka’s favorite queens.

Importance of Umbrellas

Exploring the ceremonial and social significance of umbrellas, Longhurst says they were reserved for the Gods and their human representatives, royalty. This is especially visible in the sculptures  and paintings over two millennia, as also recorded history and administrave texts. The umbrella of the enemy king was a prized possession, to be captured in battle. Temple processions often feature ceremonial umbrellas of the Gods. Chariots (rathas) are often topped by umbrellas. An inscription in Tiruvarur, Tamilnadu, speaks of the privilege of carrying an umbrella, granted to a devadasi.


Jain tirthankaras, except Parshvanatha, are always shown with triple umbrellas.  Jain acharyas have only one umbrella over them. While it is quite common to see images of Buddha featuring single umbrellas, some monuments like Pithalkora, show triple umbrella over Buddha also, in paintings.

The Hindu God Vinayaka is popularly featured with an umbrella over his head. Paper umbrellas are quite popular during Vinayaka Chathurthi. Mahishasura Mardhini is also often featured with an umbrella. The major Gods though, are rarely shown with an umbrella; Vamana is one such rarity. Unusual exceptions are a Kalyana Sundara sculpture in Kanchi Kailasanatha, a standing Brahma in Pullamangai.



The funerals of the Todas, a Nilgiri tribe, even today feature umbrellas over the funeral car. This is remarkably similar to a Gandharan sculpture showing the Buddha’s own funeral car, with umbrellas.

Toda funeral procession


The custom was so strong in India that even Muslim rulers of India adopted it as a royal emblem, even though neither the nations of their origins nor Islam gave umbrellas any social significance. Europeans of the 17th century, who had also no special status for umbrellas in their culture, were forced to stow away or surrender their common sun protection umbrellas, when entering the city of Delhi.

Evolution of Stupas

The earliest stupas of Buddha were of mud and brick, as befitting a renunciate. One such mud stupa has remnants in Vaishali. During the era of Asoka, these were dismantled, and the buried relics of Buddha apportioned and distributed to hundreds of stupas across Jambudvipa. These stupas were usually undecorated. It is only the vedikas surrounding the stupas, as in Sanchi or Amaravai, or the entrance arches, that were richly adorned in sculptures. Perhaps one exception is a brick and mortar stupa at Nalanda, which features images of the Buddha, but its age is uncertain.

The stupa slowly evolved from a mound over a burial, to a symbolic object of worship. This is best shown by the rock cut stupas of Kanheri, Karle, Ajanta, Pithalkhora etc., where the stupas are carved out of the mother rock – no monk was buried under them. Like the earlier brick stupas of Sanchi, Amaravati, etc, these too feature harmikas over them. Some but not all stupas in Kanheri and Pithalkora, have an umbrella carved on the ceiling of the cave, over the stupa. Paintings in the pillars of the large chaitya at Pithalkora, and cave 9 in Ajanta, feature Buddha with triple umbrellas. The stupa in Ajanta cave 19 is quite elaborate – it features a several bas relief images of the Buddha, and also an intricate triple umbrella.  


Mud stupa,Vaishali, Bihar

Bhaja stupa with harmika, no umbrella

Karle stupa with umbrella


Kanheri stupa with umbrella on ceiling

Ajanta Cave Nineteen
Elaborate stupa with Buddha image
and triple umbrella

A parallel evolution can be seen in stupas in Sri Lanka, the earliest ones being mainly massive brick mounds, but the later dagobas featuring more architectural triple umbrellas. Dagoba is a contraction of dhatu-garbha. Hiuen Tsang in his travels, records multi storeyed wooden temples for Buddha one of which in Rajagriha (Rajgir, Bihar), was completely burnt in a fire accident, which he witnessed. These wooden temples, notes Longhurst, continue in two regions, Kerala and the Himalayas. He specially observes that Nepal, which was never ravaged by Islamic invasions, best preserves Hindu and Buddhist temples from a millennium ago, and perhaps an even older era. 

The influence of Hiuen Tsang and other pilgrim monks who took Buddhism to China and other east Asian nations can still be felt in their architecture of their Buddhist stupas and temples. They must have been copies of what existed in India at that time, argues Longhurst, hence a snapshot in time. But the mounds got shorter and the symbolic umbrellas got more and more elaborate, as reflected in in Shwedagon Pagoda, Burma or the White Dagoba in Beijing. An even later rendition is the Yukishiji pagoda in Japan, where the upper storeys, are not functional, but decorative, being architectural versions of the umbrella.

White Dagoba, Beijing - with umbrella
Picture : Wikipedia

Shwedagon Pagoda, Burma
Picture: Wikipedia

Yakushiji Temple, Japan
Picture : Japan-Guide.com

Such umbrellas and inscribed figures, not just of Buddha, but several yakshas and yakshis, can be also seen in the votive stupas in Ratnagiri, Orissa, which were discovered only in the 1970s.

Remarks


I wonder if Longhurst’s conjecture, even the whole book, could have been proposed by a scholar today. The umbrella has been democratized.He lived and wrote in the 1920-30s, when the princely states of India and royal regalia were visible and omnipresent. Perhaps also to be kept in mind, is that, several such conjectures were made in the early days of Oriental research, that time has falsified. Still, a remarkable book.

Other related Links
Vaishali - a visit
The Art of Amaravati
Ajanta - An overview (Prof Swaminathan's slideshow)
Introduction to Amaravati sculptures (lecture video)

Photo Credits
Most of the photos in this essay are my own. Links for others here.
Kodakallu, Kerala : Miyapadavu Social Club
Thiruvarur temple chariot - Wikipedia
White Daboga, Beijing - Wikipedia
Shwedagon Pagoda, Yangon, Myanmar (Burma) - Wikipedia
Yakushiki temple, Japan - Japan Guide
Toda funeral This website (link broken)

Monday 7 January 2019

உஜ்ஜயின் தீர்கரேகை


இந்திய கணித-ஜோதிட வரலாற்றை ஐந்து பருவங்களாக பிரிக்கலாம். ஜோதி என்ற சொல் நட்சத்திரங்களை குறிக்கும். இதில் ஜோதிடம் என்று நான் சொல்வது வானியல் அல்லது விண்ணியல் என்னும் நட்சத்திர மண்டல ஞானம், சூரிய சந்திர பாதை கணிதம், பஞ்சாங்க நிர்ணயம், கிரகண கணிதம் போன்றவையே. கல்யாண பலன், ராசி பலன், மங்கள நேரம், தகும் பொழுது தகா பொழுது, ராகுகால யமகண்ட தவிர்ப்பு போன்றவை சமூகத்தையும் மக்களின் செயல்களையும் அதிகம் வழிநடத்தினாலும், அவை அறிவியல் பூர்வமானதல்ல என்ற என்னுடைய அனுமானத்தாலும், வராகமிகிரரை தவிற மற்ற முக்கிய ஜோதிட நூலாசிரியர்கள், அவற்றை கையாளவில்லை என்பதாலும், அவற்றை பற்றி நானேதும் எழுதிலேன்.

கீழேயுள்ளது, கே.வி. சர்மா போன்றோர் எழுதிய நூல்களில் நான் கற்றதை வைத்தும், ஆரியபடன், வராகமிகிரன், பிரம்மகுப்தன், பாஸ்கரன் போன்றோர் நூல்களின் மொழிப்பெயர்ப்புகளை படித்தும் நான் என் வசதிக்கும் புரிதலுக்கும் வகுத்த பிரிவே. அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் அல்ல.

வேத காலம்
வேத பருவம்
கிமு 1200 / கலியப்தம் 1900 (ஏறக்குறைய)
வேதாங்க ஜோதிட பருவம்
கிமு 500 – கிபி 500 / கலியப்தம் 2400 – 2900
சித்தாந்த பருவம்
கிபி 500 – கிபி 1700
ஆரியபடன் பருவம்
கிபி 1700 – இன்று வரை
ஐரோப்பிய பருவம்

வேத காலத்தில் நிலைத்த வேதத்தை தவிற பிற இலக்கியங்களோ வர்லாற்று தொன்மைகளோ மிஞ்சவில்லை, அதிலுள்ள வானியல் செய்திகள் மிக மிக குறைவே. வேதாங்க ஜோதிடம் என்ற நூல் லகதர் என்பவரால் இயற்றப்பட்டது. முப்பத்தைந்து சுலோகங்களே கொண்டது. ரிக், யஜுர் வேதங்கள் இரண்டிற்கும் தனித்தனியே வேதங்க ஜோதிட நூல்களிருந்தன, ஆனால் ஓரிரு சுலோகங்களில் மற்றுமே வேறுபட்டன. இதன் காலம் கிமு1200 என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நூலில் எந்த கால விகிதமோ ஆண்டு குறிபோ இல்லை. லகதரை பற்றி தகவல்களும் ஏதுமில்லை.

சித்தாந்த பருவம் என்பது, 18 ஜோதிட சித்தாந்தங்கள் நிலவிய காலம். இதில் ஐந்து சித்தாந்தங்களை ஒப்பிடும் நூலே வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தம். இவை பதினெட்டும் வானியல் சித்தாந்த நூல்கள், மத, இலக்கிய, தத்துவ சித்தாந்த நூல்களல்ல. இவை வகையே பிராம்ம சித்தாந்தம் (பைதாமஹ சித்தாந்தம் என்றும் பெயருண்டு), வாசிஷ்ட சித்தாந்தம், பௌலீச சித்தாந்தம், ரோமக சித்தாந்தம் (லோமச சித்தாந்தம் என்றும் பெயருண்டு), சூரிய சித்தாந்தம் (சௌர சித்தந்தம் என்றும் பெயருண்டு).

புராணங்களில் மேரு மலை எண்பத்திநாலாயிரம் யோஜனைகள் உயரம். தட்டையான பூமியின் நடுவே ஓங்கி நிற்கும் மலையே மேரு. தலைகீழ் கூம்பாக, அதாவது அடிவாரத்தில் கூர்மையாகவும், மேலே தட்டையாகவும் விளங்கும் மலை மேரு. அதன் உச்சியில் தேவலோகம் உள்ளது, தேவர்கள் அங்கே வசிக்கின்றனர். மேரு மலையடிவாரத்தில் தாமரை இதழ்களை போல் நாலுபுரமும் நாலு கண்டங்கள் உள்ளன; வடக்கில் குரு; கிழக்கில் பாத்ராஷ்வா, தெற்கே பரதம், மேற்கே கேதுமாலா. இந்த படத்திலுள்ளது போல் பூமியை கருதினர். இது ஒரு கருத்து; வேறு சில புராணங்கள் பூமியை வேறுவிதமாக கருதி வர்ணித்தன.


மேரு மலையும், கண்டங்களும்
புராண கால பூமியின் வர்ணனை


படம்: ர. விஸ்வநாதன்

புராண காலத்தில் யோஜனை என்பது எத்தனை தூரம் என்று தெரியவில்லை. ஆனால் ஆரியபடர் ஒரு யோஜனை எட்டாயிரம் ந்ரு [ नृ ] என்கிறார். ஒர் ந்ரு என்பது ஒரு நரன், அதாவது, மனிதனின் உயரம் என்பது உரையாசிரியர்களின் விளக்கம். இது ஒரு தெளிவான அளவில்லை; கணிதத்தில் பல புதுமைகள் தந்து, ஒரு புதிய பருவத்திற்கே காரணமாயிருந்த ஆரியபடர் ஏன் இப்படி தெளிவற்ற அளவை தருகிறார் என்று தெரியவில்லை. ஒரு மனிதனின் உயரம் ஒண்றரை மீட்டர் என்று எடுத்துக்கொண்டாலும், ஒரு யோஜனை சராசரியாக பன்னிரண்டு கிலோமீட்டர். இந்த கணக்கில் எண்பத்திநாலாயிர கிமீ உயர மேரு மலை பூமியை விட பல மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். புராணங்கள் குறிப்பிடும் ஒரு யோஜனை எவ்வளவு என்று தெரியவில்லை. [அளவுகள் காலாகாலம் மாறிவந்தன; உதாரணத்திற்கு வேதாங்க ஜோதிடத்தில் ஒரு யுகம் ஐந்து சூரிய ஆண்டுகளே; ஜோதிட நூல்களிலோ ஒரு யுகம் 4,32,000 சூரிய ஆண்டுகள்.] மேரு மலையை சூரிய சந்திர நட்சத்திரங்கள் சுற்றிவருகின்றன, இந்த மிகப்பெரிய மேருவுக்கு பின்புரம் சூரியன் செல்வதால் இரவு உண்டாகிறது என்பதும் புராண மரபு. விந்திய மலை வளர்ந்து சூரியனை தடுத்த கதையும், அகத்தியனுக்காக நின்றதும், இம்மரபை சார்ந்ததே.

இதை ஆரியபடர் கண்டுகொள்ளவே இல்லை. வட துருவத்தை அவர் மேரு என்று கூறி அது ஒரு யோஜனை உயரமே என்றும் கூறிவிட்டு, அதன் உச்சியில் தேவர்கள் வாழ்வதை மட்டும் மறுக்காமல் அவர் ஆரியபடீயத்தில் எழுதியுள்ளார். தான் புராணத்திலிருந்து மாறுபடும் விளக்கமோ, மேரு மலையை நேரில் பார்த்தாகவோ, எந்த நூலோ சாட்சியோ ஆதாரம் தரவில்லை. புராண மரபை இவ்வாறு ஆரியபடர் மறுப்பதால் நூறாண்டு பின்வந்த பிரம்மகுப்தர் இவரை மிகவும் சாடுகிறார்; ஆனால் அவரும் விளக்கமேதும் தரவில்லை.

பூமி ஒரு கோளம், அதாவது உருண்டை, தட்டையல்ல, என்பதை ஆரியபடர் ஒரு உவமையால் விளக்குகிறார். ஆரியபடீயத்தின் கோளம் என்ற மூன்றாம் அத்தியாயத்திலுருந்து நான்கு சுலோகங்களை காண்போம்.

यद्वत् कदम्बपुष्पग्रन्थिः प्रचितः समन्ततः कुसुमैः
तद्वद्धि सर्वसत्त्वैर्जलजैः स्थलजैश्च भूगोलः8
யத்³வத் கத³ம்ப³புஷ்பக்³ரந்தி² ப்ரசித ஸமந்தத குஸுமை .
தத்³வத்³திஸர்வஸத்த்வைர்ஜலஜை ஸ்த²லஜைஶ்ச பூகோ³ [8]

விளக்கம் எவ்வாறு(யத்³வத்) கதம்பபுஷ்ப கொத்து(க்ரந்தி) எங்கும் சமமாக(ஸமந்தத) விளங்கி, அதன் மொட்டுக்கள் எல்லாதிசையிலும் மேல்நோக்கி நிற்கின்றனவோ, அவ்வாறே(த்தவத்), பூகோளத்தில் நிலவாழ்(ஸ்த²லஜை:) நீர்வாழ்(ஜலஜை꞉) உயிர்கள் எல்லா திசையிலும் மேல்நோக்கி வாழ்கின்றன என்கிறார். இந்த உவமைக்கு புவியீர்ப்பு சக்தி என்று ஒரு விளக்கம் தேவையில்லை என்பதை காண்க.

ஆனால் இது உவமை தான், அறிவியல் பூர்வமான விளக்கமில்லை என்றும் காண்க. பூமி ஒரு கோளம், உருண்டை என்பதற்கு, கிரகண நிழல்களின் வட்ட வடிவத்தை கண்டும் காட்டியும், வராஹமிஹிரரே சரியான அறிவியல் ரீதியான விளக்கமளித்தார்.

கதம்ப மலர்

स्वमेरू स्थलमध्ये नरको बडवामुखं जलमध्ये
अमरामरा मन्यन्ते परस्परमधःस्थितान् नियतम्12
ஸ்வமேரூ ஸ்த²லமத்யே நரகோ ³³வாமுக²ம்ʼ ஜலமத்யே .
அமராமரா மன்யந்தே பரஸ்பரமதஸ்தி²தான் நியதம் [12]

விளக்கம் நிலம்சூழ்ந்த (ஸ்தலமத்யே) வடதுருவம் தேவலோகம்(ஸ்வ) மேரு, நீர்சூழ்ந்த (ஜலமத்யே) தென் துருவம் நரக படவாமுகம்; இது அசுரர் வாழுமிடம், என்கிறார் ஆரியபடர். இருதுருவ நிலங்களிலும் வாழும் தேவரும்(அமரா) அசுரரும்(மரா) ஒருவரை ஒருவர் (பரஸ்பரம்) தங்களை விட கீழே (அத:) இருப்பதாக (ஸ்தி²தான்) கருதுகின்றனராம் (மன்யந்தே).

उदयो यो लङ्कायां सोऽस्तमयः सवितुरेव सिद्धपुरे
मध्याह्नो यवकोट्यां रोमक विषयेऽर्धरात्रं स्यात्१३
உத³யோ யோ லங்காயாம்ʼ ஸோ()ஸ்தமய ஸவிதுரேவ ஸித்³புரே .
மத்யாஹ்னோ யவகோட்யாம்ʼ ரோமக விஷயே()ர்தராத்ரம்ʼ ஸ்யாத் [13]

விளக்கம் இலங்கையில் சவித்துர் (சூரியன்) உதிக்கும்போது, சித்தபுரத்தில் அஸ்தமனம். யவகோடியில் மத்தியானம், ரோமகவிஷயத்தில் அர்த்தராத்திரி (நள்ளிரவு மட்டுமல்ல, சரியாக நடு இரவு).
ரோமக என்பது ரோமாபுரி, விஷயம் என்பது நாடு. சித்தபுரம் யவகோடி எந்த ஊரையோ நாடையோ குறிக்கிறது என்பது காலப்போக்கில் அற்றுப்போன செய்தி. அன்னிய வணிகர், பயணிகள் சொல்லும் செவிவழி செய்தியாலோ இன்று கிட்டாத புத்தகம் போன்ற சான்றோ அக்காலத்தில் நிலவி இன்று மறைந்திருக்கலாம். 

படம் : சானக்கிய நீதி யூட்யூப் வீடியோவிலிருந்து

ஆனால் இலங்கை இன்றைய ஸ்ரீலங்கா இல்லை. இது அடுத்த வரிகளில் தெளிவு.
स्थलजलमध्याल्लङ्का भूकक्ष्याया भवेच्चतु्भागो
उज्जयिनि लङ्कायाः तच्चतुरंशे समोत्तरतः१४
ஸ்த²லஜலமத்யால்லங்கா பூகக்ஷ்யாயா வேச்சது்பாகோ³ .
உஜ்ஜயினி லங்காயா தச்சதுரம்ʼஶே ஸமோத்தரத [14 ]

விளக்கம் நிலநீர் நடுவே உள்ள இலங்கை (ஸ்த²லஜலமத்யால்லங்கா) பூகக்ஷ்யத்தை நான்கு பாகமாய் (சது்பாகோ³) பிரிக்கிறது. இலங்கை முதல் வடதுருவம் வரையுள்ள இதன் பகுதியை உஜ்ஜயின் நான்கில் ஒரு அம்சமாக (சதுரம்ʼஶே) வகுக்கிறது.

கக்ஷ்யா என்பது சுற்றுவட்டம். பூகக்ஷ்யா என்பது பூமியை சுற்றும்வட்டம். ஆங்கிலத்தில் இதன் பெயர் மெரிடியன். ஈகுவேட்டர் என்னும் பூமத்தியரேகைக்கு, வடமொழியில், குறிப்பாக ஜோதிட நூல்களில் விஷுவத் என்பது மற்றொரு பெயர்.

வடதுருவம் முதல் தென் துருவம் வரை பூகோளத்தின் மேல் ஒரு கோடு வரைந்து, அதை அந்த கோளத்தின்மேல் மறுபக்கம் மீண்டும் வடதுருவம் வரை வரைந்தால் அது பூகக்ஷ்யா எனும் மெரிடியன். இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் அருகே உள்ள கிரீன்விச் வழியாக இந்த வட்டமான் கோட்டை (வளையத்தை) வரைந்தால், அது கிரீன்விச் மெரிடியன். இதை பூஜ்ய மெரிடியன் என்று ஆங்கிலேயர்கள் நிறுவ, அதை உலகம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. பூகோளத்தின் மறுப்பக்கம், கிரீன்விச் மெரிடியனுக்கு நேர் எதிராக 180 டிகிரி தள்ளி, பசிபிக் பெருங்கடல் வழியாக வரையும் மெரிடியனுக்கு சர்வதேச தேதி கோடு என்று பெயர். ஒவ்வொரு நாளும் இங்கேயே தொடங்குவதாக உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆங்கிலேய (கிறுத்துவ) புத்தாண்டை ஜனவரி முதல் நாள் கொண்டாடும் போது, இந்த சர்வதேச தேதிக்கோட்டை மிக ஒட்டியுள்ள கிரிபாட்டி தீவுகளில் வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து தொடங்குவதும் சில ஆண்டுகளாக வழக்கம். அடுத்தடுத்த அரை மணிக்கு ஒவ்வொரு நாடாக பட்டாசு வெடித்து தொலைக்காட்சியிலும் இணையத்திலும் நாம் சகஜமாக படங்களை காண்கிறோம். ஆனால் இங்கிலாந்து ஆட்சியிலும் அறிவியிலலிலும் வல்லரசாகுமுன் எது பூஜ்ய மெரிடியன்? 

பாரத நாட்டின் ஜோதிடர்கள், உஜ்ஜயின் மெரிடியனை இந்திய நாட்டின் மைய மெரிடியனாக, பூகக்ஷ்யா என்று கருதி அதற்கேற்ப சித்த்தாந்த நூல்களையும், கரணங்களையும், பஞ்சாங்ககளையும் படைத்தனர். ஆரியபடன் காலத்துக்கு முன்பே, அதாவது, சித்தாந்த பருவம் என்று நான் குறிப்பிட்ட கிமு ஐநூற்றுக்கும் கிபி ஐநூற்றுக்கும் இடைப்படட் காலத்தில் இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம்.


இந்த இலங்கை என்பது சரியாக விஷுவத் எனும் பூமத்தியரேகையின் மேல் இருப்பதாக கருதப்படும் தீவு. அந்த இடத்தில் தீவிருப்பதாக ஒரு விவரமும் எந்த நூலிலுமில்லை. அது ஒரு குறியீடு மட்டுமே. பூஜ்ய டிகிரி தீர்க ரேகையான உஜ்ஜயின் பூகக்ஷ்யா, பூஜ்ய டிகிரி அட்ச ரேகையான விஷுவத்தை சந்திக்கும் குறியிடம் இந்த இலங்கை.



ஏன் உஜ்ஜயின்? முக்கிய முக்தி நகரம், வரலாற்று புகழ் பெற்ற நகரம் என்பது ஒரு காரணம். ஆனால் காசி, அயோத்தியை, மதுரா, இந்திரபிரஸ்தா, காஞ்சிபுரம், ராஜகிரகம் என்று பல நகரங்களுக்கு இந்த தகுதியுள்ளது. ஜோதிடர் ஒத்துக்கொள்ளும்படி என்ன முக்கியத்துவம்?

உஜ்ஜயினி லங்காயா தச்சதுரம்ʼஶே ஸமோத்தரத

என்னும் பதினாலாம் சுலோக வரியில் விளக்கம் காணலாம். லேட்டிட்யூட் எனும் அட்சரேகையில் பூமத்தியரேகை பூஜ்ய டிகிரி, துருவங்கள் தொண்ணூறு டிகிரி அல்லவா? இலங்கைமுதல் மேருவரை வடக்கே செல்லும் பூகக்ஷ்யாவில் சதுரம் (நாலில் ஒரு பங்கு) அதாவது இருபத்திரண்டரை டிகிரியில் உஜ்ஜயின் உள்ளது. டிராபிக் ஆஃப் கேன்சர் (Tropic of Cancer) எனும் 23-1/2 டிகிரி அட்சரேகை, உத்தராயணத்தினின் வட எல்லை, உஜ்ஜயின் நகரம் என்று கணித்தார் ஆரியபடர்.

சூரிய சித்தாந்ததில் வரும் ஒரே பூகக்ஷையின் நகரங்கள் ராக்ஷஸாலயம்(இலங்கை), தேவகுலசைலம்(மேரு), ரோஹிதகம், உஜ்ஜையினி, ஸந்நிஹிதஸஹ (குருக்ஷேத்திரம்). தவறான இலங்கையை பட்டியலிடுவது நோக்கத்தக்கது.

லல்லர் எழுதிய நூல் தரும் பட்டியல் இலங்கை, குமரி, காஞ்சி, பரநாட, கிருஷ்ணா நதி, ஷ்வேதஷைலம், வாத்ஸ்யகுல்மம், உஜ்ஜயினி, கர்கராத்,  ஆஷ்ரய, மாலவநகரம், சயுரிவ, ரோஹிதகம், குருக்ஷேத்திரம், ஹிமவான், மேரு. இந்த பட்டியலில் காஞ்சி இடம்பெருவது ஆச்சரியம். ஒரு முழு நதியும், மலைத்தொடரும் இடம்பெறுவதும் விசித்திரம்.

வேறு ஒரு நூல் தரும் பட்டியல் கரநகரம், சீதாருகேஹ, பாணாட, மிஸிதபுரி, தபர்ணி, சீதாவர, வாத்ஸ்யகுல்மம் (உதயணன் வாழ்ந்த கௌசாம்பி),  வனநகரி, அவந்தி என்னும் உஜ்ஜயினி, ஸ்தானேஷ, மேரு.

வேதாங்க ஜோதிடம் எனும் நூல் “காலவிதானஷாஸ்த்ரம்”, அதாவது “காலத்தை கற்பிக்கும் சாத்திரம்” என்று ஜோதிடக்கலையை வர்ணிக்கிறது. மேலும் “யோ ஜ்யோதிஷாம் வேத ஸ வேத யஞான்” என்ற சுலோகம் உள்ளது. இதன் பொருள், “எவன் ஜோதிடம் அறிவானோ அவனே வேதம் அறிவான்.” வருடம், அயனம், ருது, மாதம், பக்ஷம் (வளர்பிறை தேய்பிறை), திதி, நட்சத்திரம், முகூர்த்தம், நாடி, விநாடி யாவும் சரியாக கணித்து, தகுந்த நேரத்தில் வேள்வி, சந்தியாவந்தனம், பண்டிகை, திவசம், தர்ப்பணம், கட்டுமானம், உத்சவம், புதுமனை புகுதல், பட்டாபிஷேகம், திருமணம், பூனூல் அணிவித்தல், கல்வி ஆரம்பம், ஆகியவை தொடங்க வேண்டும். இன்றுபோல் பாரதம் முழுதும் ஒரே பூகக்ஷ்யத்தை (மெரிடியனை) நிர்ணயித்து, அந்த நேரத்தையே நாடு முழுதும் பயன்படுத்தவில்லை. அப்படி செய்ய இயந்திர கடிகாரங்கள், தொலைபேசி, தொலைதொடர்பு கருவிகள் சமீபகாலம் வரை இல்லை. உஜ்ஜயின் நகரத்திற்கு சூர்யோதயம், திதி, நட்சத்திரம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, சங்கராந்தி போன்றவை கணித்து, அதன் கிழக்கே மேற்கே உள்ள ஊர் நாடு கிராம நகரங்களுக்கு ஏற்ற முகூர்த்த, நாடி, விநாடி கூட்டியோ கழித்தோ கணித்து கரணம், பஞ்சாங்கம் தயார் செய்து, கால நேர்மை பேணப்பட்டது.

சென்னை தீர்கரேகை (மதறாஸ் மெரிடியன்)

உஜ்ஜயின் தீர்கரேகையை கைவிட்டு, உடனே பாரத நாடு மக்கள் இன்றைய இந்திய மெரிடியனை (82-1/2 டிகிரி) தழுவவில்லை. மதறாசபட்டினம் என்னும் சென்னை நகரத்தில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய சென்னை வானியல் மையத்தில், கிபி 1792 கலியப்தம் 4893 மைக்கல் டாப்பிங், கிரீன்விச் மெரிடியனை மையமாக வைத்து, சென்னையின் தீர்கரேகையை கணித்தார். இதை கணித்த நினைவுத்தூண் சென்னை நுங்கம்பாகத்தில் அந்த மையத்தில் இன்றும் உள்ளது. லத்தீனம், தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஐந்து மொழிகளிலும் கல்வெட்டை பொறிவித்தார் டாப்பிங்.
மைக்கல் டாப்பிங் நிறுவிய நினைவு தூண்
நுங்கம்பாக்கம், சென்னை 

டாப்பிங் தூணில் கல்யப்தம் 4893, கிபி 1792 கல்வெட்டு

இதன்படி நேர நிர்ணயம் செய்த கிழக்கிந்தியா கம்பெனி, புனித ஜார்ஜ் கோட்டையில் சூரிய உதயம் அஸ்தமனம் இரண்டு நேரத்திலும் பீரங்கி செலுத்தி ஊருக்கு நேரம் தெரிவித்தனர் (ஆங்கிலத்தில் கன் டைம்). பிற்காலத்தில் மணிக்கூண்டுகளை கட்டினர். சுமார் ஐம்பதாண்டுகள் இது சென்னைக்கு மட்டுமே பொருந்தியது. 1850களில் ரயில் போக்குவரத்து தொடங்கிய பின், வெவ்வேறு ஊர்களில் கடிகாரங்கள் வெவ்வேறு நேரம் காட்டியதால், ரயில் வரவு, புறப்பாட்டில் குழப்பங்கள் தோன்றின. எல்லா ஊர்களுக்கும் ஒரே நேரத்தை பேணிணால் இதை தவிர்க்கலாம், பிரிக்கப்படாத பாரதம் முழுக்க ஒரே ரயில் அட்டவணை தயாரிக்கலாம் என்று ரயில் நிர்வாகம், அரசு முடிவெடுத்து, மதறாஸ் மெரிடியனை, சென்னையின் நேரத்தை பாரத நாட்டு மைய நேரமாக அறிவித்தது.
உஜ்ஜையினியில் பாய்ந்த கால ஓடை, சில வருடங்கள் சென்னையிலும் பொசிந்தது.

படங்கள்

1. மேரு மலையும் கண்டங்களும் - சாக்கோட்டை ர.விஸ்வநாதன், ஓவிய ஆசிரியர், சென்னை கல்லூரி, ஆவடி
2. யவகோடி, ரோமக, சித்தபுர வரைபடம் - சானக்கிய நீதி யூட்யூப் வீடியோ

ஆதார நூல்கள் / செவிவழி கேள்வி

  1. “ஆரியபடீயம்”, ஸ்ரீ சாரத கல்வி கழகம், 1974, கே.வி.சர்மா, கே.சி.சுக்லா
  2. ஒலியின் வேகம் அறிய மதறாஸில் நடத்திய பரிசோதனைகள், ஜெ. கோல்டிங்காம் (Experiments for Ascertaining the velocity of Sound, at Madras in the East Indies, J. Goldingham, 1823)
  3. ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் கல்லூரி சாலை மரபு நடை, ஆகஸ்ட் 2014.

ஜோதிடம்/வானியல் கட்டுரைகள்

  1. வராகமிஹிரரின் கிரகண சான்று
  2. வராகமிஹிரரின் அகத்தியர் துதி
  3. சில விண்ணியல் ஸ்லோகங்கள் – பொருள் விளக்கம் 
  4. ஹேவிளம்ப புத்தாண்டு - சில விண்ணியல் குறிப்புகள்
  5. தமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி
  6. ஆரியபடன் - ஒரு கட்டுரை
  7. பண்டை நாகரீகங்களின் வானியலும் கணிதமும் (காணொளி)

சென்னை கட்டுரைகள்

1. சென்னை - இந்தியாவின் முதல் நவீன நகரம் (ஆங்கிலத்தில்)
2. சென்னை நகரத்து நூலகங்கள்