Thursday 12 December 2019

நெடும் செழியர் கலைத் தென்றல்




நல்ல தமிழ் நின்னுடைத்து, என பாண்டியரை வாழ்த்தினார் புலவர். ஆனால் பாண்டியர்களின் புகழை நாம் பெரிதும் அறிவோமில்லை. ஏதோ நின்றசீர் நெடுமாரன், வரகுணபாண்டியன் என்று திருவிளையாடல் திரைப்படத்தை பார்த்து அங்குமிங்கும் கொஞ்சம் கொஞ்சம் பக்திவழி இலக்கியம் மட்டுமே நாம் அறிவோம். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் என்பது சிலருக்கு எம்ஜிஆர் தயவில் தெரியும். ஆனால் எத்தனை பாண்டிய மன்னர்களுக்கு சுந்தர பாண்டியன் என்று பெயர்? எத்தனை மன்னருக்கு வரகுண பாண்டியன் என்று பெயர்? சீதா சுயம்வரத்தில் ஒரு பாண்டியன் இருந்தானா? காளிதாசன் பாண்டியனை பற்றி ஏதோ சொன்னானா? மூன்று சங்கம், லெமூரியா, குமரிக்கண்டம், இதில் எங்கே வரலாற்று தடங்கள்? தஞ்சையில் பெரிய கோவிலை சுற்றி ஒரு கோட்டை உள்ளதே, அதை போல் மதுரையில் ஏன் கோட்டை இல்லை? திருமலை நாயக்கர மகாலை போன்று வரகுண பாண்டியன் மகால் இருக்கவேண்டாமா?

தமிழ்கர்கள் பல்லவர்களின் கலைப்பணியை ஆழந்து புரிந்துகொள்ள சிவகாமியின் சபதம் என்ற நாவலையும், சோழர்களின் கலைக்கும் வரலாற்றுக்கும் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி ஏன் பாண்டியர்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை? வரலாற்று ஆசிரியர்கள் நூல்களில் பாண்டியரை பற்றி என்ன தகவல்கள் உள்ளன நாவலாசிரியர்கள் என்ன புனைந்துள்ளனர்?

மாமல்லபுரத்து ஐந்து ரதம், அர்சுணன் தபசு, குடைவரை மண்டபங்கள், சிறப்பான சிற்பங்கள் போன்று பாண்டிய நாட்டிலும் இருக்கவேண்டுமே? எங்குள்ளன? அவை ஏன் புகழ் பெறவில்லை?

திருமலாபுரம் குடைவரை கோவில்

உலகின் மீக நீண்ட வம்சாவளிகளாம் ஜப்பானிய அரச குலமும் பாண்டியர் குலமும். ஆனால், பாரத நாட்டிலேயே குப்தர் மௌரியர் முகலாயர் அறியப்படும் அளவுக்கு ஏன் பாண்டியர்கள் அறியப்படவில்லை?

சமணர்களை கழுவேற்றிய கதைகளே பரவலாக உள்ளன. ஆனால் ஞானசம்பந்தருக்கு பின் வந்த ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டினின் கல்வெட்டு சித்தன்னவாசல் என்னும் சமண தீர்த்தங்கரர் கோவிலில் உள்ளது. அஜந்தாவை ஒத்த மிகச்சிறந்த சித்தன்னவாசல் ஓவியம் என்ன கதையை சித்தரிக்கின்றது? பாண்டிய நாட்டில் பௌத்தர் ஆசிவகர் கதைகளோ தளங்களோ வரலாறோ ஏதேனும் உள்ளனவா?

பிராமி, வட்டெழுத்து, பிறகால தமிழ் என்று மூன்று வடிவங்களில் தமிழ் கல்வெட்டுக்களும், கிரந்த வடிவத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுக்களும் பாண்டிய நாட்டில் மலைகளிலும் கோவில்களிலும் செப்பேடுகளிலும் காணலாம். அவை கூறும் தகவல்கள் என்னென்ன?

இது போன்ற பல கேள்விகளுக்கும் ஒரு சில பதில்களுக்கும் பாண்டியரின் வரலாறும் கலையும் கோயிலும் சமயமும் இலக்கியமும் தொன்மையும் விளக்கி விவரித்து பேச, தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை இரண்டு நாள் பேச்சு கச்சேரி நடத்தவுள்ளது. 

நான் பாண்டியர் குடைவரை கோவில்களை பற்றி பேசுவேன்.

அரங்கம் தமிழ் தமிழ் இணைய கல்விக்கழகம், 
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை.
நாட்கள் 14, 15 டிசம்பர் 2019










Sunday 27 October 2019

Wednesday 23 October 2019

Index of History Essays வரலாற்று கட்டுரைகள்

Madras History
Madras, India's first modern city - Notes from S Muthiah's lecture
Madras and its American connections - notes from S Muthiah's lecture
Thomas Trautmann on Francis Whyte Ellis
The Thames and the Cooum - Rivers of London and Madras
Madras Time - an essay in South First

Indian History
A temple in a river island
A Dholavira surprise 
Rabindranath Tagore on the Grand Old Man of Tamil - U Ve Swaminatha Iyer
Puranagiri - the Tantrapitha
Keezhadi excavation - Notes from Amarnath Ramakrishnan lecture
Vaishali - a travelogue
Did Macaulay destroy Sanskrit - debunking a popular rumor
Babington's Gift - on the third Atiranachanda Inscription of Mamallapuram
Samrat Asoka - notes from a book release
History - Three perspectives
British abolition of Slavery in India - India's true Independence Day
The Asiatic Society of Bengal - Rediscovery of Asoka, Brahmi, and Indian history
A history of Pallava Grantha - the Sanskrit script of South India and South East Asia
A brief history of Kanchipuram
Is India secular? - Notes from Michel Danino's lecture

Essays in South First magazine
Venkayya - a brief biography of the man who rediscovered Rajaraja Chola
Manohar Devadoss - an obituary
Arittapatti - an ancient village near Madurai
A rare Tamil Translation : Badri Seshadri's Aryabhata 



World History
The Thames and the Cooum - Rivers of London and Madras
1493 The Colombian exchange - Notes from Charles Mann's lecture
Genghis Khan - and the making of the modern world

Timelines
Gujarat and Tamilnadu - timeline of ruling dynasties
Karnataka and Tamilnadu - timeline of ruling dynasties
Orissa and Tamilnadu - timeline of ruling dynasties
A Timeline of Sanskrit literature
A Timeline of Tamil Literature (தமிழ் இலக்கியம் - ஒரு கால அட்டவணை)

Nagaswamy - beyond borders

Dr R Nagaswamy : A Tribute (Essay in Madras Musings)

History of Science and Technology

Diseases in Retreat - the phenomenal medical feat of the 20th century
Turbines - Prime Movers of the 20th century
Darwin and his doctors - The bad health of the world's most famous biologist
What did Brahmagupta do? - Our ignorance of Indian science
A brief history of Indian mathematics - notes from a lecture by Manjul Bhargava
The origin of Modern Chemistry - Antoine Lavoisier
Alfred Russel Wallace - Darwin's admirer and rival
Emile Levassor - Architect of Cars

Economic History
A Lack of Economic Knowledge - Mario Vargos Lhosa's enlightenment
Ford Lenin Hitler and Chaplin

Contents Page for my Blog, grouped by Subject

Friday 6 September 2019

VichitraChittha Swaminathan


The time has come, the Walrus said, to talk of many things
Of shoes and ships and sealing wax and cabbages and kings.
-          from The Walrus and the Carpenter, by Lewis Carroll

Unlike the walrus, few people can talk of such a variety of things. I have heard Prof Swaminathan talk of shoes and socks in Ajanta paintings, ships that sailed between England and India, the Fibonacci patterns of leaves in cabbages, and many a king including Mahendra Varma Pallava -the maverick who called himself Vichitrachitta, the innovative and exotic thinker who unleashed the era of sculptures and architecture in Tamil country. If I had studied mechanical engineering in IIT Delhi, I am sure I would have heard him speak about sealing wax, too.

To talk about such a variety of things, one must first have an abundant curiosity and the intellectual discipline to understand what they have to offer. In short he must be an AtyantaKaama and a TattvaVedi. Which he is, to our good fortune.

Our VichitraChittha Swaminathan can not only talk about them, but talk about them in interesting ways, and provoke the listener’s curiosity and instigate a sense of wonder.

Most Indians, unlike Isaac Newton, stand not on the shoulders of giants, but surrounded by the wonders wrought upon this many splendored land by innumerable generations of giants, intellectual artistic and indefatigable. Sadly most of us see this treasure trove not with eyes not always appreciative but sometimes ignorant, often apathetic, even blasé. Even the curious and the restless among us, often need a spark, a shaft of light, a steady lamp to look long and deep and absorb the essence of such wonders, waiting to be discovered. Such a spark, a lighthouse is Swaminathan.

The few paragraphs above are the introductory passages to my essay on him, which will be part of the book we, Tamil Heritage Trust, have compiled on his work and dreams, and will release on September 8, 2019 when we salute his achievements.

Of his days in Delhi and upto the recent period until I met him in 2009 or so I can say very little.I first noticed him at a lecture on history at the Musiri house in Oliver Road, by Dr Chitra Madhvan. A few months later he gave a series of talks on The Story of Scripts, about the various writing systems of the world. It was quite a dazzling and eye opening experience. I had only recently learnt of Brahmi from a lecture by Iravatham Mahadevan, and had some minor interest in linguistics after having read Guns, Germs and Steel, by Jared Diamond. This Swaminathan, I realized, was truly a scholar, and a marvelous accumulator and presenter of facts.

This series was later followed by a five part series on the Oral Tradition of Sanskrit. Not Sanskrit literature, mind you, but its orality. What does that even mean? He began with a long explanation about the power of human memory, and an account of an ashtavadani, a special kind of scholar, who can do eight (ashta) different tasks (avadaanam) simultaneously. Having established the stupendous feats the human mind can accomplish, he went on to demonstrate that the Sanskrit alphabet was a marvel, a logical, analytical organization of the sounds of the language. Then followed an explanation of Siva Sutras and how Panini used them crisply to write a grammar simply but crisply.

To say my mind was blown away at this point, is an understatement. Jared Diamond and Kalki had done it in 1999. The Kanchi Kailasanatha and Ellora Kailasanatha temples blew my mind in 2005 and 2006. And Swaminathan and Panini blew my mind then. If Sivakamiyin Sabatham was a paradigm shift about technology, the two Kailasanathas about engineering and art, Swaminathan on Sanskrit was an paradigm shift about linguistics. I started an email conversation with him about Sanskrit and its alphabet (basically arguing that the Tamil alphabet was better in someways and more sensible) and he responded point by point.

Shortly after this, I realized that he had started the Tamil Heritage Trust and I began attending its monthly lectures. Then I was pulled into THT as a potential contributor by V Chandrasekhar, for the next THT experiment, a site seminar in Mamallapuram in January 2010. The inaugural Mamallapuram lecture was another dazzler. Not only me, even Kalki was blind about Mamallapuram, I realized. I made a lot of learned friends, and became a part of the THT family – it feels more a family than an trust.

I have written earlier about two of Swaminathan’s contributions - Powerpoint Literature and Bulletpoint Literature. He has so much more in his repertoire, and so few of us to learn and carry these forward. Fortunately we are growing in strength.

I won’t talk about the various activities of THT at this point, as we do that at the beginning of every monthly lecture. But I played a useful role, and my loooong talk on Pallava Grantham as a preparatory lecture, was appreciated by KRA Narasiah. What a boost! Later in 2010, I borrowed Swaminathan’s manuscript about Ajanta, which was even more mind blowing than the Mamallapuram book. When I returned it, he said I was the first person to read it (besides his brother, the writer Calcutta Krishnamurthy, who only proof read it).

We used to meet the evenings of the last Saturdays at Gandhi center in Thakkar Bapa Vidyalaya, to discuss future programs. While most suggestions focused on art, sculpture, architecture, music, literature, etc., I suggested science and commerce, like astronomy. He immediately responded by asking me to give a talk on astronomy; and even gave a book to start my research. If I thought Sanskrit had a lot in linguistics, its astronomy and mathematics just blew me away.

My father Rangarathnam was ill, he suffered from mild dementia for a couple of years, but in the last few months of 2010 he really suffered. He was hospitalized in September, eerily on the anniversary of my mother’s death in 1981. My dad survived, but was put on severe restrictions including feeding from a Ryles tube, via his nose, rather than his mouth. It was devastating. Then on October 5, he just passed away. The next day, I joined Nagupoliyan Balasubramanian’s Sanskrit classes, which he just started, perhaps to the shock of some friends. The next month was spent preparing for the astronomy lectures, and the next hundred weekends learning Sanskrit.

Sanskrit and astronomy helped me cope with my father’s loss. Swaminathan served as a father figure. So did Balasubramanian and Narasiah…. I lost one father, and these three took their place in a fashion which I can’t explain in words. One thrill and amazing opportunity, was to spend a Teacher’s Day, giving a talk to the teachers of a school, with these three gurus in the audience.

Later in October, Jayaram and I went to Hyderabad with Swaminathan and his wife Uma. With my Hyderabad friends Balaji and Bina, we had arranged two of his talks on Sanskrit and Music. Balaji was my roommate in Texas and later, colleague in Microsoft. When we went to check on them in the train, Uma mami spotted us and returned telling her husband, “The children are here (குழந்தைகள் வந்திருக்கா).” (I was forty. Some child!) But that’s how she saw us. My first Astronomy talk in November went better than I hoped (and also, very very long).

By this time THT had become established, and steady. In December 2010, Swaminathan was requested to conduct a tour of Mamallapuram by the ASI for the local panchayat school students, and he invited myself, Ashok Krishnaswami and Selvam to accompany him. I went from student to guide practically overnight. Later in December, we also accompanied him to Pudukottai for  a dream project of his, Project Sittannavasal, along with VSS Iyer and Kanaka Ajita Doss. We met the Collector, discussed a few things, saw Sittannavasal, Kodumbalur, Kudumiyan Malai, etc. In January, we went to Ajanta and Ellora. We had frequent, almost weekly gettogethers in my house in Kodambakkam, discussing and showcasing photos of Nageshvaram and Pullamangai, Ajanta, a plan to curate a series of TED talks, record some TED like talks on Indian art, and a whole host of projects, several of which never came to fruition.
With Walter Spink,
Fardapur resort, Ajanta

He introduced me to artist Maniam Selvan, whom we visited, and who talked raptorously about the scene in Sivakamiyin Sabatham, where Paranjothi crosses the mountain ravine. Chills! He took me to meet publisher Vellayampattu Sundaram and later interview him. I missed a chance to meet Iravatham Mahadevan. Then we went to chat with Narasiah…
Uthiramerur 
Jayaram and I went with the Swaminathan and Uma mami to Uthiramerur and Kanchi, including my first guided visit to Kailasanatha temple. Swaminathan was a kid in a candy shop. A couple of years later he asked me to give a talk on the temple. Then he introduced me to Dr Nagaswamy and asked me to prepare a lecture about his selected works.

There are several stories more to tell. But I wonder if these personal remembrances would be of interest to anyone but the two of us.

I’ll wrap up with a couple: conversations with him. He kept telling me a few times that Indians were empirical while Europeans were analytical. It took me a long time to understand what he meant; I don’t entirely agree, but my God, what a bold and brilliant statement. The other is a question he asked – Is there an Indian way of thinking? It took me many years to understand what an enormously loaded and sweeping question he was asking. And no one seems to be engaging him in this conversation. Or even contemplation.

Our most recent large intellectual engagement is with Vilayanur Ramachandran, who stated in January that two persons he admires are William Jones and Swaminathan. And that he hopes that Tamil Heritage Trust can be a new Asiatic society. What could be more delightful, a more fitting cap in the feather of our Vichitrachitta?


பேராசிரிய சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல்
நம் விருந்தினர்  - பொதிகை டிவி




Thursday 22 August 2019

Index of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்

Essays about Madras / Chennai

Traffic - LMS
On Teacher's day
An evening with Pamela and John Davis
Erdos on Madras - a Hungarian mathematician's poem
Chennai? China? Madras? Madrassa?
Rabindranath Tagore and UVe Swaminatha Iyer
On human kindness
Gunduperumbedu - ancient fossil site near Madras
An Englishman's Tamil inscription (Ellis inscription part 1)
The meikeerthi of King George III (Ellis inscription part 2)
Thomas Trautmann on Francis Whyte Ellis
The Thames and the Cooum

Madras - India's first modern city (S Muthiah's lecture)
In a library - LMS
Va Ve Subramaniam on Vai Mu Kothainayagi
An interview with Sanjay Subramaniam
The Sehwag difference
Madras and its American Connection (S Muthiah's lecture)
Three Englishmen in Madras (S Muthiah's lecture)
Subrahmanya Bharathi's Essays and Short stories (KRA Narasiah lecture)
Interesting experiences of a  Lawyer and Judge
Punjabis Marwadis Parsis in Madras
A science forum in Chennai
The Parsis of Chennai

Contents Page for my Blog, grouped by Subject

மதராசபட்டினம் கட்டுரைகள்

சென்னை விமான நிலையம்
நான் ரசித்த சில பெயர் பலகைகள்
மார்கழி இசை அனுபவம்
மென்பொருள் முகவர் முனைவகம்
எல்லீசன் கல்வெட்டு - இருப்பதேழு கிணறு
எல்லீசன் கல்வெட்டு - ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி
போர்க்காலத்தில் சென்னை - அடையாறு போர்
போர்க்காலத்தில் சென்னை - பல்லவர் சோழர் காலம்
போர்க்காலத்தில் சென்னை - முதல் உலகப்போர்
போர்க்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்
மயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி உரை
ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து 
தமிழ் நாடக இசை - டிகேஎஸ் கலைவாணன் உரை
தேசபக்தனும் சுதேசமித்திரனும் - கல்கியின் கிண்டல்
தமிழ் இசை - ஆயிரம் திருதராஷ்டிரர்கள் - ஜெயராமன் கட்டுரை
மதராசபட்டினம் நூல் விமர்சனம்
சென்னை நகரத்து நூலகங்கள்
உஜ்ஜையின் தீர்கரேகையும் சென்னை தீர்கரேகையும்

இந்த வலைப்பதிவின் பொருளடக்கம்

Sunday 21 July 2019

கடலோடி


என் வாழ்வில் கிடைத்த தலை சிறந்த பாக்கியங்களில் ஒன்று, நரசையாவின் நட்பு. சிலரது அறிமுகம் கிடைத்தாலே பாக்கியம். சிலரது வழிகாட்டல் கிடைத்தால் பாக்கியம். சிலரது படைப்புக்களை ரசிக்க வாய்ப்பு கிடைத்தாலே பாக்கியம். இது எல்லாம் கிடைத்து அதற்கும் மேல், அன்பு, அக்கறை, ஆசிர்வாதம், என்று வரிசையாக மழை பெய்து, நட்பும் கிடைத்தால் என்ன சொல்வது?

ஆலவாய்

முதன் முதலில் அவரை நான் பார்த்ததும் கேட்டதும் மதறாஸ் நாள் கொண்டாட்டத்தில். 2004 அல்லது 2005 என்று நினைக்கிறேன். சேமியர்ஸ் இல்லத்தில் அவர் கணித மேதை ராமானுஜனை பற்றி உரையாற்றினார். உரைமுடிந்ததும் ஒரு பிரபல பாடகர் கேட்ட குறும்பு கிசுகிசு கேள்வியை மெள்ள சிரித்து நரசையா உதறியது தான் ஏனோ பளிச்சென நினைவிருக்கிறது. பின்னர் ரோஜா முத்தையா நூலகத்திலும் வேறோரிரு இலக்கிய கூட்டத்திலும் பார்த்திருக்கலாம். 2009ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் டக்கர் பாபா அரங்கில் தான் எழுதிய ஆலவாய் நூலின் ஆய்வுகளை பற்றி பேசினார். சென்னை பட்டணத்து எல்லீசன் என்ற ஆங்கிலேய அதிகாரியின் தமிழ் கல்வெட்டு என்னை அசத்தியது. வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் பேசும் ஆங்கிலேயர்களை மட்டுமே மனதில் கண்ட எனக்கு, எல்லிஸ் போன்ற பண்டிதர்கள் இருந்ததும், எல்லீசன் என்று தன்னை அழைத்துக்கொள்வதும் மிக விசித்தரமாக தோன்றியது. அப்பொழுது வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம், காலின் மேகன்சீ, யாரும் தெரியாது. கால்டுவெல், போப், வீரமாமுனிவர் கேள்விப்பட்டாலும், அந்த கல்வெட்டும் கவிதையும் அதிசயம். அரங்கத்தில் மேசைமேல் நரசையாவின் நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்தன.

சில மாதங்களில் (டிசம்பர் 2010 என்ற நினைவு) தபாஅ-வின் மல்லை கலை உலாவுக்கு முன் பல்லவகிரந்தம் பற்றி ஒரு உரையாற்றினேன், நரசையா வந்திருந்தார். நான் பேசிமுடித்தபின் ”நிறைய உழைதிருக்கிறாய், நன்றாக தெரிகிறது” என்று பாராட்டினார். அதன்பின் பல முறை சந்தித்தோம். ஒருமுறை சென்னை புத்தகக் கண்காட்சியில் தொல்லியல் ஆய்வாளர் பத்மாவதி, தமிழ் மரபு அறக்கட்டளையின் ஜெர்மனி வாழ் சுபாசினி இருவரையும் அறிமுகப்படுத்தினார். பத்மாவதி என்னை ஏதோ கேட்க, உங்கள் உரைகளை கேட்டுள்ளேன் மேடம், என்று நான் சொல்ல, அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, அதே சமயம் “இங்கபாரேன், ஏற்கனவே தெரிந்தும் அடக்கமா எதுவும் தெரியாத மாதிரி வாசிக்கிறத” என்றார். என் முகத்தில் நரசிம்ம ராவ் சாயல் தெரிந்ததா அர்சுணன் தபசு பூனை சாய்ல் தெரிந்ததா என்று எனக்கு இன்று வரை சந்தேகம். நரசையாவின் “கடல்வழி வணிகம்” புத்தகம் தேடி வாங்கவே அன்று புத்தக கண்காட்சியில் அன்று மேலும் அலைந்திருந்தேன். பல மாதங்களுக்கு பின் ஒரு நாள் சந்திக்க பேராசிரியர் சுவாமிநாதன் என்னை அழைத்து சென்றார். கடல்வழி வணிகம் நூலை நீட்டி கையொப்பம் வாங்கினேன். கடலோடி புத்தகத்தை பரிசளித்தார்.
சாமிநாதனுடன் நரசையவின் இல்லத்தில் 


கடலோடி

கடலோடி தமிழ் இலக்கியத்தில் ஒரு விசித்திர சம்பவம். அந்நாள் வரை அப்படி ஒரு நூலை தமிழில் யாரும் எழுதியதில்லை. செவ்விலக்கியமும் தெரியாத, சமகால தமிழ் இலக்கியமும் தெரியாத நான் இதைசொல்ல தகுதியில்லாதவன். இந்திரா பார்த்தசாரதி, தி ஜானகிராமன், போன்ற ஜாம்பவான்கள் இதை உணர்ந்து எழுதியுள்ளனர். என் கல்லூரி நண்பர் ஜோசப் ஆனந்தும் நரசையாவை பற்றி ஒரு முறை பேசி ஆச்சரியப்படுத்தினார். நாங்கள் படித்த அருள்மிகு கலசலிங்கம் கல்லூரியில் படித்த வேறு ஒருவர் கப்பல் துறையில் சேர்ந்ததாகவும், நரசையா நடத்திய கப்பல் பொறியியல் வகுப்புகளில் படித்ததாகவும் சொல்லியிருந்தார்.

நான் பிறக்கும் முன்னரே ஆனந்த விகடன் பத்திரிகையில் முத்திரை கதைகளை எழுதி தமிழக வாசகர்களின் மனதை பிடித்து, தமிழர்கள் உலகை வேறுவிதமாக பார்க்கவைத்தவர் நரசையா. அமெரிக்காவும் ரசியாயும் பிரதானமாக கற்றவர்கள சிந்தையையும் சித்தாந்தத்தையும் கோலோச்சிய காலத்தில் கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளை பற்றி ஒருவர் தமிழில் எழுதியதே அதிசயம் என்பதும், அதுவும் சுவாரசியமாக எழுதியது பேரதிசயம் என்பது அக்காலத்தில் அந்த கதைகளை படித்தவர்களின் கருத்து.

கடலோடி நரசையாவின் சுயசரிதை. இந்திய கப்பற்படையில் சேர்ந்து அவர் பணிபுரிந்த கால அனுபவங்கள். ராணுவத்தில் பணி புரிந்த பல இந்தியர் தமிழர் தங்கள் சுயசரிதையை எழுதியுள்ளனர்; ஆனால் அவை ஆங்கிலத்தில்தான் உள்ளன. தமிழில் இன்றளவும் மற்றவர் யாரேனும் எழுதியுள்ளனரா?

நிற்க.


முண்டாசு புலவன்

அவர் இல்லத்தில் சந்தித்த சில நாட்களுக்கு பின் என்னை அழைத்து, எழுத்தாளர் கிருத்திகா எழுதிய பாரதியின் வாழ்க்கை வரலாற்று நூலை கொடுத்து, இதை பற்றி பேச வேண்டிய ஐவரில் நீயும் ஒருவன் என்று ஒரு குண்டு போட்டார். நான் படிச்சதில்லை சார், என்று தயங்கினேன். படிக்க தானே இந்த புத்தகம் குடுக்கிறேன் என்றார். எங்கே நிகழ்ச்சி? திருவல்லிக்கேணியில் பாரதி இல்லத்தில்! கரும்பு தின்ன கூலியா? இந்த மாதிரி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அற்புதமான புத்தகம். தமிழர்களை தவிர பாரத நாட்டில் பலருக்கும் சுப்பிரமணிய பாரதியை பற்றி எதுவும் தெரியவில்லை என்ற ஏக்கத்தில், கிருத்திகா ஆங்கிலத்தில் எழுதிய நூல். ”வீணையடி நீ எனக்கு, மீட்டும் விரல் நான் உனக்கு” என்ற பாரதியின் பாடல் வரிகளை, யாழில் தவழும் விரல் () என்ற பெயரில் வந்த நூல். அங்குமிங்கும் ஓவியர் கோபுலுவின் கோட்டோவியங்கள்.

நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கே தொண்ணூற்றுமூன்று வயது கோபுலுவும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் அடுத்தடுத்து அம்ர்ந்திருந்தனர். என்னை அறிமுகம் செய்து கொண்டபோது, உங்கப்பெயர் என்ன என்று கோபுலு கேட்க, நான் கோபு என்று பதில் கூற, அப்படியா, என் பெயர் கோபுலு என்று அவர் மழலைப்போல் மகிழ்ந்ததில் புல், வைக்கோல், மூங்கில் எல்லாம் அரித்தது. திருவாசகத்துக்கு உருகாதார் கூட கோபுலுவின் சித்திரங்களுக்கு உருகிவிடுவார்; மாணிக்கவாசகரே நேரில் வந்தால், அப்பனே கோபுலு, என்னை ஒருசின்ன சித்திரம் வரைந்துகொடுப்பாயா என்று கேட்டிருப்பார். பாவம் மாணிக்கவாசகர் அவசரப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்துவிட்டார்.
பாரதி இல்லத்தில் என் உரை
மேடையில் கோபுலு, நரசையா, ராஜ்குமார் பாரதி

சில மாதங்களில் கோபுலு காலமானார். நெஞ்சம் வருடினாலும் நேரில் ஒருமுறையேனும் சந்தித்து சில நிமிடம் பேசினேன் என்ற ஒரு மகிழ்ச்சி.
இபா எனக்கு சொன்ன கதையோ அதிவிசித்திரம். பசுமை புரட்சி எம்.எஸ்.சுவாமிநாதன் கூட்டத்தில்; அவர் மனைவி மீனா சுவாமிநாதனே இந்த நிகழ்ச்சியை நடத்தித்தரும்படி நரசையாவைக் கேட்டுக்கொண்டார். கிருத்திகாவின் மகள் மீனா சுவாமிநாதன். கிருத்திகாவும், நரசையாவின் தாய்மாமன் சிட்டி சுந்த்ரராஜனும் பரிமாற்றிக்கொண்ட கடிதங்களை பின்னர் ஒருநூலாக நரசையா தொகுத்து நூலாக்க, கோபாலகிருஷ்ண காந்தி ஒரு விழாவில் வெளியிட்டார். அதற்கும் சென்றேன்.
கண்ணை கட்டுகிறதா?

தாகூர் கண்ட அகத்தியன்

பெசண்ட்நகர் கலாட்சேத்திரா வளாகத்தில் உள்ள உவேசா நூலகம் போகலாம் வா என்று நவம்பர் 2013ல் நரசையா அழைத்தார். உவேசாவை நம்கால அகத்தியனாக புகழ்ந்து ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வங்க மொழி கவிதையை தேடி, அவர் கணையாழியில் ஒரு கட்டுரை எழுத நோக்கம். உவேசாவின் தலைப்பாகை, எழுத்தாணி, நாள்குறிப்புகள், என்று பல்வேறு பொக்கிஷங்களை மிகச்சாதாரணமாக கண்டு… நரசையா ஒரு அலுவலருடன் பேச, செய்ய ஒன்றுமின்றி, ஒரு மேசையில் கண்சிமிட்டி அழைத்த ஆனந்தவிகடனை கையிலெடுத்து புரட்டினேன். “எங்க வந்து எதை படிக்கிற,” என்று புறங்கையை செல்லமாக ஒரு மிலிட்டரி தட்டு தட்டினார். நரசையவின் கதைகளை பதிப்பித்தாலும், உவேசாவின் என் சரிதத்தை பதிப்பித்தாலும், பத்துப்பாட்டும் எட்டுத்தொகைக்கும் ஆனந்த விகடனின் அந்தஸ்து ஒரு படி கீழே தான் என்று உணர்ந்த தருணம்.
சித்திரபாரதி நூல் எழுதிய ரா.அ. பத்மநாபனின் அஞ்சலி கூட்டத்திற்கு என்னை அழைத்தார் நரசையா. பீஷ்மர் நகுபோலியனையும் துரோணர் சாமிநாதனையும் சாரதியாய் அழைத்து சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த பலரும் ஜாம்பவான்களாயினும் மண்டையம் பார்த்தசாரதி ஐயங்கார் அசத்தினார்.

மதுரா விஜயம்

நான் ஒருவாரம் மதுரையில் இருப்பேன், நீ வந்தால் மீனாட்சி கோவிலையும் திருமலை நாயக்கர் மகாலையும் உனக்கு காட்டுகிறேன் என்று நரசையா சொல்ல… விளாடிமிர் பூடின், பராக் ஓபாமா, தங்கள் நாட்டு சிக்கலை சரிசெய்ய என்னை அழைத்த போதும், மகேந்திர சிங் தோனிக்கு வேகமாக ஓட வரவில்லை நீதான் அவருக்கு ஓட்டப்பயிற்சி தரவேண்டும் என்று இந்திய கிரிக்கட் வாரியம் அழைத்தப்போதும், ப்ளூட்டோவிற்கு கிரகம் பிடித்திருக்கிறது நீ தான் வராகமிகிரனின் பிரஹத் ஜாதகம் படித்து அதற்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லவேண்டும் என்று அனைத்துலக அஸ்ட்ரானமர் சங்கம் அழைத்தபோதும்… போதும், போதும், நண்பன் கருணாகரனுடன் நான் மதுரை சென்றேன்.
திருமலை நாயக்கர் மகாலில்

முதல் நாள் நரசையாவின் ஏற்பாட்டின்படி மதுரை தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கத்தம் என்னையும் கருணாகரனையும் மதுரையில் ஆனைமலை, அரிட்டாப்பட்டி, தென்பரங்குன்றம், சமணர் மலை என்று பல தொன்மையான இடங்களுக்கு அழைத்து சென்றார். இரண்டாம் நாள் என் தம்பி ஜெயராமனும் மதுரை வந்து சேர்ந்துகொண்டான். காலை இரண்டு மணிநேரம் மதுரை மீனாட்சிகோவிலை ஒரு சிற்பம், தலம், ஓவியம் விடாமல் நரசையா காட்டினார். அதன்பின் அருகேயிருக்கும் கூடலழகர் கோவில், மதனகோபாலசாமி கோவிலுக்கும் அழைத்துச்சென்றார். கூடலழகர் மூன்று தளங்களில் திருமால் நின்ற கிடந்த அமர்ந்த கோலங்களிலுள்ளார். உத்திரமேருர் சுந்தரவரதர் கோவிலைப்போல். மதனகோபாலசாமி கோவிலிலிருந்து ஒரு மண்டபம் அமெரிக்காவிற்கு சென்று பிலடெஃபியா நகர அருங்காட்சியத்தில் உள்ளது. ஆலவாய் உரையிலும் நூலிலும் இதை குறிப்பிட்டிள்ளார். கிணத்தை ஆட்டையப் போட்டாங்க என்று சினிமாவில் வடிவேலு வாசகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இந்த மண்டபத்தின் பயணக்கதை. பாரத நாட்டிலுள்ள பல மண்டபங்களை விட பிலடெல்ஃபியாவில் அந்த மண்டபம் நன்றாக பராமரிக்கப்படுகிறது. 

மறு நாள் கழுகுமலை, திருவில்லிபுத்தூர், அதனருகே கிருஷ்ணன்கோவில் கிராமத்தில் நான் படித்த அருள்மிக கலசலிங்கம் பொறியியற் கல்லூரி சென்று வந்தோம். ஐயா வரவில்லை. 

அதற்கடுத்த நாள் திருமலை நாயக்கர் மகாலை மூன்று மணிநேரம் சுற்றிக்காட்டினார். ஒரு பொறியாளர் பார்வையிலும், வரலாற்று ஆய்வாளர் பார்வையிலும் பல விளக்கங்கள். இந்த பதிவில் எழுத இடமில்லை. முக்கியமாக எல்லீசன் கல்வெட்டை காட்டினார். அந்த கல்வெட்டில் எல்லீசன் எழுதிய தமிழ் பாடலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். நரசையாவின் உதவியில் எல்லீனை பற்றி பல தகவல்களை நமக்கு திரட்டி தந்த அமெரிக்க பேராசிரியர் தாமஸ் டிரௌட்மனின் தொடர்பும் நட்பும் கிடைத்தது. சமீபத்தில் சென்னைக்கு அவர் வந்தபொழுது ரோஜா முத்தையா நூலகத்தில் எல்லீஸ் ஆராய்ச்சியின் அடுத்தக்கட்டத்தை பற்றி உரையாற்றி, நரசையாவின் பெரிய பங்களிப்பையும், என் சிறுதொண்டையும் குறிப்பிட்டார். என் இல்லத்திற்கு மதிய உணவுக்கு வந்து மகிழ்வித்தார்.
என் இல்லத்தில் தங்கை தேவசேனா,
டிரௌட்மன், நரசையா, நான், தம்பி ஜெயராமன் 

என் வாழ்வில் கிடைத்த தலைசிறந்த பாக்கியங்கள் என்று இந்த கட்டுரையை தொடங்கினேன். இன்னுமோர் பாக்கியம் இந்த வாரம் வருகிறது. ஜூலை 24 2019 புதன்கிழமை மாலை 6.45 சென்னை தியாகராய நகர் டக்கர் பாபா பள்ளியில், காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் கடலோடி நூலை பற்றி உரையாற்றவுள்ளேன். அவசியம் இந்த அதிசய மனிதரின் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள்.

ஆசிர்வாதம் கூட வாங்கிக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அவரது பிறந்தநாள்.

நரசையா கட்டுரைகள் 

SamratAsoka – book release function
மதராசபட்டினம் நூல் விமர்சனம்
Thomas Trautmann on Francis Whyte Ellis
Rabindranath Tagore on UVeSwaminatha Iyer




Saturday 13 July 2019

நூல் விமர்சனங்கள் Index of book reviews

தமிழ் கட்டுரைகள்

என் வலைப்பூவின் பொருளடக்கம்


English essays



Book reviews by others

Contents Page for my Blog, grouped by Subject


Videos of my book reviews (Tamil)
நூல் விமர்சன வீடியோ பதிவுகள் (தமிழ்)



Videos of my book reviews (English)
நூல் விமர்சன வீடியோ பதிவுகள் (ஆங்கிலம்)

Genghis Khan and the Making of the Modern World by Jack Weatherford 
The Importance of Being Earnest - Oscar Wilde

Saturday 4 May 2019

ஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்




பாரத நாட்டிலுள்ள எல்லா ஓவியங்களிலிருந்தும் ஐம்பெரும் ஓவியம் என்று தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல்? காலம், அளவு, இடம், மரபு, ரசம், கருப்பொருள் என்று ஆறு வகையான அளவுகோல்கள் எனக்கு தோன்றுகின்றன. இலக்கியத்திலும் இசையிலும் பயன்பட்ட அளவுகோல்களை மேலோடு பார்த்துவிட்டு, பின்னர் ஓவியக் கலையில் நிலைமையை ஆராய்வோம்.

ஒரு நூலை காப்பியம் என்று அழைக்க ஒரு தமிழகத்து சம்ஸ்கிருத புலவர் வகுத்த லக்ஷணமே மிகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரத்தில் பல்லவர்காலத்தில் வாழ்ந்த தண்டி எனும் புலவர் காவியதரிசனம் எனும் நூலில் காவியத்தின் இலக்கணத்தை, அதாவது அளவுகோல்களை வரிசைப்படுத்தியுள்ளார். இலக்கணத்தை (லக்ஷணம்) நிறைவேற்றுவது இலக்கியம் (லக்ஷ்யம்). ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டிக்கு முன்னர் கிமு இரண்டாம் நூற்றாண்டிலோ அதற்கும் முன்னோ வாழ்ந்ததாக கருதப்படும் பரதர் இயற்றிய நாட்டியசாத்திரத்தில், காவியத்தின் தகுதிகளும் காவிய நாயகனின் தகுதிகளும் காணலாம்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வேறு பல இந்திய மொழிகளிலும் புலவர்கள் இவ்விலக்கணத்தை பேணி வந்தனர். சில விதிவிலக்குகளையும் மரபு வழியாக கடைபிடித்தனர். காப்பியத்திற்கு இந்த இலக்கணமிருக்கையில் பெருங்காப்பியம் என்று ஒரு நூலை கருத என்ன தனிப்பட்ட அளவுகோல்கள் என்பதை நான் இங்கு பரிசீலிக்க முனைகிறேன்

தமிழ் இலக்கியம்

(க) கால அளவுகோல் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஐம்பெரும் காப்பியமாம். இவற்றை தேர்ந்தவர் யாரெனத் தெரியவில்லை. கிபி பதினான்காம் நூற்றாண்டில் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், ஐம்பெருங்காப்பியம் என்று முதலில் குறிப்பிடுகிறார்.

காலத்தை அளவுகோலாக நோக்கின், இவையாவும் சங்ககாலத்திற்கு பின்னும், சோழர்கால அஸ்தமனத்திற்கு முன்னுமாகும். ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும். சங்க இலக்கியங்கள் எதுவும் பெருங்காப்பியம் இல்லையா என்று எவரும் கேட்டதாக தெரியவில்லை. குண்டலகேசியும் வளையாபதியும் தொலைந்துவிட்டதாலும், அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு மிக சிறிதே என்பதாலும், அவற்றை நீக்கி, கம்ப ராமாயணமும் சேக்கிழாரின் பெரிய புராணமும் ஐம்பெருங்காப்பியத்துள் சேர்க்கவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். சற்றே காலத்தில் பின் வந்த வில்லிபாரத்தை சேர்க்கவேண்டும் என்று கோருவாருமுண்டு. கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய நந்தனார் சரித்திரம், அருணாச்சல கவியின் ராமநாடகம், சன்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி, அல்லிஅர்சுணன் போன்ற மேடை நாடகங்களை ஐம்பெருங்காப்பியமாக சேர்க்க யாரும் கோரவில்லை.


சிலப்பதிகாரத்தின் தரத்தில் நீளத்தில் இன்று ஒருவர் காப்பியம் எழுதினால் அதை படிக்கவோ கேட்கவோ யாருளர்? இருபதாம் நூற்றண்டில் தான் தமிழ் சமூகம் இயல் தமிழையும் இலக்கியமாக ஏற்றது; ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா போன்ற சரித்திர கதைகளையோ, மற்றவர் கதைகளையோ பெருங்காப்பியம் என்று புகழவோ, ஐம்பெரும்நாவல் என்று ஒரு வகுப்பையோ தொகுக்க யாரும் முனையவில்லை.

சங்க கால இருதியிலோ அதற்கு சற்று பின்னரோ இயற்றப்பட்ட சிலம்பும் மணிமேகலையும், பின்னர் சோழர் காலத்தில் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், குண்டலகேசியும் வளையாபதியும் எப்படி ஒரே தொகுப்பில் இடம்பெற்றன? அப்படி சிறப்பித்து தொகுத்தபின் ஏன் ஒரு சமூகமே மறக்கும் அளவுக்கு அத்துப்போயின? விடைகள் இல்லை. ஆதலால், காலம் ஒரு அளவுகோலல்ல.

(ச) நீள அளவுகோல் பெருங்காப்பியம் என்னில் நீளமாக இருக்கவேண்டும். சிலம்பு ஐந்தாயிரம் வரிகள், சீவக சிந்தாமணி பன்னிரண்டாயிரம் வரிகள்.
ஐங்குறுங்காப்பியம் என்று தனி ஒரு தொகை இருப்பதும் இதை காட்டுகிறது. தொள்ளாயிரம் விருத்தச்செய்யுளே கொண்டது நீலகேசி.
முல்லைப்பாட்டு 103 வரிகள், நெடுநல்வாடை 188 வரிகள், பொருனராற்றுப்படை 250 வரிகள், குறிஞ்சிப்பாட்டு 261 வரிகள், சிறுபாணாற்றுப்படை 269 வரிகள், பட்டினப்பாலை 301 வரிகள், பெரும்பாணாற்றுப்படை 500 வரிகள், மதுரைக்காஞ்சி, மலைப்படுகடாம் தலா 583 வரிகள். இவை சங்ககால காப்பியங்கள் என்று சொன்னாலும் நீளாத்தால் பெருங்காப்பியம் அல்ல.

சோழர்கால இலக்கியத்தில் நளவெண்பா ஏறத்தாழ 1600 வரிகள், கலிங்கத்து பரணி 2400 வரிகள், மூவர் உலா ஓவ்வொன்றும் தலா 600 வரிகள்.

நீளம் ஒரு அளவுகோல் என்பது தெளிவு. எத்தனை நீளம் என்பது தெளிவில்லை.

இராமாயணம், பெரிய புராணம், வில்லிபாரதம் போன்றவையும் சேர்த்து ஏன் எண்பெருங்காப்பியம் என்று பின்னாளில் ஐம்பெருங்காப்பியம் விரிவாகவில்லை? இதற்கு விடையில்லை. நீளம் மட்டுமே அளவில்லை எனத்தோன்றுகிறது.

(ட) இட அளவுகோல் ஓவியமும் சிற்பமும் கோயில், குகை, மண்டபம், கட்டடம் என்ற இடத்தை சார்ந்தவை. இலக்கியத்திற்கு பொதுவாக இது ஒரு அளவுகோலாக தெரியவில்லை.

ஆனால் இந்த ஊரிலோ நாட்டிலோ நிகழ்ந்த கதை ஏற்கலாம், மற்றவை விலக்கலாம் என்று ஏதும் தடையிருப்பதாக தெரியவில்லை.

(த) மரபு அளவுகோல் பாரத நாட்டு பலமொழிகளிலும் கவிதையே இலக்கியம் என்ற கொள்கை பத்தொன்பதாம் நூற்றண்டுவரை நிலைத்தது. கவி செய்வது காவியம். ஆற்றுப்படை, செய்யுட்தொகை, நீதி நூல், பழமொழித்தொகை, காப்பியம், புராணம், உலா, பரணி, தூது, என்று பலவகை இலக்கியம் தோன்றியுள்ளன. இலக்கணம், மருத்துவம், இசை, ஆகமம், கணிதம், கட்டிடக்கலை, ஆகியவை இதிலடங்கா; அவற்றை காப்பியமாக நாம் கருதுவதில்லை. பின் தோன்றியவை குறவஞ்சி, காவடிச்சிந்து, நாட்டிய நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்படம், நாவல். முப்பெரும் உலா, ஐம்பெரும் திரைப்படம், மேடை முப்பது, நாவல் நாற்பது என்று யாரும் தொகுக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

ஐம்பெரும் காப்பியம் என்ற ஒரு தொகை என்றோ உருவானதால், அதையும் ஒரு மரபாக தொடர்ந்து வருகிறோம்.

(ப) ரச அளவுகோல் இதுதானே பெரும்சிக்கல்? ரசனை தனிமனிதனுக்கு ஒருவிதம், சமூகத்திற்கு ஒருவிதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களுக்கு பலவிதம். மேன்மக்களாலோ, மேல்தட்டுமக்களாலோ காலத்தை வென்று நிற்கும் கலைப்பொருட்கள் ஒரு நாட்டிலோ சமூகத்திலோ தங்கி நிற்கின்றன. பாமர மக்களுக்கு அன்றாட வாழ்விலுள்ள அக்கறையும் ஈடுபாடும் செவ்வியல் கலைகளில் இருப்பதில்லை. இதை உலகெங்கும் காண்கிறோம். ஒரு சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதன் ரசனையும் கலையும் மாறுவதை காண்கிறோம். எகிப்தில் பாரோக்களின் வீழ்ச்சிக்கு பின் பிரமிடுகளும் அவர்களது மதக்கோயில்களும் கட்டுவது நின்றுபோனது. சுமேரியா, கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், மதமாற்றத்தால் மரபு மாறிவிட்டன. அமெரிக்க பழங்குடியினரின் ஒல்மெக், அஸ்டெக், இன்கா மரபுகள் யாவும் ஐரோப்பிய படையெடுப்பினாலும் இனவொழிப்பாலும் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டன. பாரதமும் சீனமும் ஜப்பானும் கொரியாவும் ஓரளவுக்கு விதிவிலக்கு.
தமிழ் இலக்கியத்திலும் இதை காணலாம். சங்க கால தமிழுக்கும் பிற்கால தமிழுக்கும் உள்ள வேறுபாடு இரண்டு வரி படித்தாலே சுள்ளென அடிக்கும். உ.வே.சாமிநாத ஐயர் சங்க இலக்கியத்தை “வேறு ஒரு தனி பாஷை” என்றே குறிப்பிடுகிறார். சொற்களும், உவமைகளும், சித்தாந்தமும், கருப்பொருளும் அவ்வளவு மாறிவிட்டன. ஆனால் அந்த மரபு தொடர்கிறது. சங்க இலக்கியங்களை தனி ஒரு தொன்மையாக கருதுகிறோம். ஆனால், ஒரு மரபு பிளவையும் உணர்கிறோம். இயற்றமிழில் இலக்கியம் உருவான இருபதாம் நூற்றாண்டில், அதே போல், ஒரு மரபு தொடர்ச்சி, ஒரு மரபு பிளவு இரண்டும் கலந்தே நிகழ்ந்தன.

ஓவிய சிற்ப கலைகளிலும் இந்த மாற்றம், தொடர்ச்சி இரண்டுமே தெள்ளந்தெளிவு. பின்னர் பார்ப்போம்.

சிலப்பதிகாரம் கதையாலும், சொல்வளத்தாலும், செய்யுள் சுவையாலும், ரசத்தில் மிக சிறந்த காப்பியம். பாத்திரங்களின் குணங்களும் ரசிக்கக்கூடியவை. ஒரு தலைவனின் வீரசாகசமோ, போரோ மையமாக அன்றி, கண்ணகியின் அறச்சீற்றமும், பாண்டியனின் அறவுணர்ச்சியும் பாரத இலக்கியத்திலேயே அதற்கு தனியிடம் பெறவைத்தவை. சேரனின் படையெடுப்பு மையக்கதையின் நீரோட்டத்தை விலகி நிற்கிறது. அதை ஒரு தனி காவியமாகவே படைத்திருக்கலாம்.

சமூகநிலை, இசை குறிப்புகள் நாட்டிய வர்ணனைகள் சிலம்பின் முக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. மணிமேகலை கதையிலோ இசைக்குறிப்பிலோ மிளிரவில்லை. இல்லற வாழ்க்கையை துறந்து துறவரம் நாடும் ஒரு பெண்ணின் கதை, பரதர் தண்டி வகுத்த இலக்கணத்தில் பொருந்தவில்லை. ஆனால் சொல்வளம், நகர வர்ணனை, பஞ்ச கால சோகம், கருணை போன்ற ரசங்களை சிறப்பாக கையாண்டுள்ளது. பல்வேறு மதங்களை விசாரிக்கும் காதை தனி ஒரு சிறப்பு.

சீவகசிந்தாமணியில் கதையே இல்லை; காதல், திருமணம், திருமணம், அப்பப்பா ஆகமொத்தம் எட்டு திருமணம், நகர வர்ணனை, இயற்கை வர்ணனை; அதனை சொல்லும் மிக அழகிய இலக்கியம்.
ரசத்தில் மூன்றும் வெவேறு நிலையில் உள்ளன; ரசம் அளவுகோலாக தெரியவில்லை.

உலகின் மற்ற அனைத்து பேரிலக்கியங்களை போல் ஒரு மன்னனின் வீரசாகசத்தை மையக்கதையாக கொள்ளாமல், தமிழிலேயே மதுரைக்காஞ்சி, பெரும்பாணற்றுப்படை, ராமாயணம், கலிங்கத்து பரணி போலுமன்றி, வணிகர்களை நாயகராகவும், அறம்தேடும் பெண்ணை நாயகியாகவும் கொண்டாடுவது ஐம்பெருங்காப்பியத்தின் தனிச்சிறப்பு.

(ற) கருப்பொருள் அளவுகோல் பன்னிரு திருமுறை சைவப் பாசுரங்கள் மட்டுமே. நாலாயிர திவ்யபிரபந்தம் வைணவப் பாசுரங்கள் மட்டுமே. ஐம்பெருங்காப்பியமோ பௌத்த சமண நூல்கள். அரசியல், வணிகம், உழவு, இவை கருப்பொருளாக இலக்கியங்கள் இல்லை. காதல், போர், பழிவாங்கல், நியாயம், பக்தி, இவைமட்டுமே இலக்கியத்தின் கருப்பொருள். நிற்க. கருப்பொருள் வேறுபடும் போது எவ்வாறு ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததென்றும், ஒன்றை தாழ்ந்ததென்றும் பிறிக்கமுடியும்? ஒரு மதத்தையோ சித்தாந்தத்தையோ சார்ந்தவர் மற்றொரு மதத்தையோ சித்தாந்தத்தையோ, அதை சார்ந்த படைப்பையோ சிறந்ததென்று ஒப்புக்கொள்ள முடியுமா? இல்லை சரிசமமாக பார்க்கமுடியுமா? பலருக்கும் இது இயலவில்லை என்பதே நிதர்சனம். மிகச்சிலரால் முடிகிறது. பன்னிரு திருமுறையும், திவ்ய பிரபந்தமும், திருப்புகழ், தேம்பவணி, சீராப்புரணம் போன்றவையும் தனியாக வைப்பதற்கும் இது ஒரு காரணம் எனத்தோன்றுகிறது. இறைமறுக்கும் அறிவியல், பொதுவுடமை, போன்ற கருத்து தளங்களும் இதில் அடங்கும்.
தமிழில் மிகச்சிறந்த அறிவியல் இலக்கியம் இல்லாதது ஒரு பெரும் குறை. அளவுகோல்களில் ரசத்தை போல், கருப்பொருளும் ஒரு சிக்கலான அளவுகோல் என்பது, இலக்கியத்திற்கு மட்டுமல்ல, மற்ற கலைகளுக்கும் பொருந்தும்.

ஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தில் பெருங்காப்பியம் என்று வகுக்க மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறியவை காட்டுகின்றன.

வடமொழி இலக்கியம்

() கால அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தில் தொன்மையானவை வேதங்கள். அவை வேத சந்தத்தில் உள்ளன; பாணினி இலக்கணத்தை வகுக்கும் முந்தைய காலத்து மொழியிலுள்ளன.
சம்ஸ்கிருதத்தில் வியாகரணம் என்பதை தமிழில் நாம் இலக்கணம் என்கிறோம். இலக்கணம் லக்ஷணம் என்பது சம்ஸ்கிருதத்தில் காவியத்தின் விதிகளை குறிப்பது, மொழியின் விதிகளை குறிப்பதல்ல என்பது நோக்கற்பாலது.

இராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள். இவை சமஸ்கிருத மொழியிலுள்ளன. பாரதம் இயற்றிய கிருஷ்ண த்வைபாயன வேதவியாசர், பதினென் புராணங்களையும் தொகுத்ததாக மரபு. வேதம், வேதாங்கம், சாத்திரம், இதிகாசம், புராணம், இவை தனி வகைகள், காப்பியம் வேறு வகை என்பது சம்ஸ்கிருத மரபு. அதன்படி, காளிதாசன், பாரவி, மாகன், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய காப்பியங்கள், ஐம்பெருங் காப்பியங்களாய் வழங்கிவருகின்றன. காளிதாசன் கிமு இரண்டாம் நூற்றாண்டு, பாரவி மாகன் ஏழாம் நூற்றாண்டு, ஸ்ரீஹர்ஷன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு.  
காலம் சம்ஸ்கிருத மொழியின் பெருங்காப்பியத்திற்கும் ஒரு அளவுகோல் அல்ல, என்பது தெளிவு.

அப்படியா? இந்தக் கட்டுரைக்கு விவரம் தேடியபோது விக்கிப்பீடியா தந்தது ஓர் அதிர்ச்சி. இருபதாம் நூற்றாண்டில் இருநூற்று பெருங்காப்பியங்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் சுந்திர போராட்டாம், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, பால கங்காதர் திலகரின் வாழ்க்கை வரலாறு, கேரளத்தின் எழுச்சி என்று பல்வேறு நவீன நிகழ்ச்சிகளும் மனிதர்களும் இந்தக்காவியங்களின் கருப்பொருள், நாயகர்கள். பல நூல்களின் கவித்திறன் காளிதாசனை மிஞ்சும் என்று ஒரு பண்டிதர் கருதுகிறார்.
சம்ஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று பலரும் கருத இந்த நாடறியா ரகசியத்தை எப்படி பார்க்கலாம்?

(ச) நீள அளவுகோல்
காளிதாசன் இயற்றிய ரகுவம்சமும் குமாரசம்பவமும் பெருங்காப்பியங்கள். ஆனால், மேகதூதம், சாகுந்தலம், விக்ரமோர்வசி லகுகாப்பியங்கள். அதாவது குறுங்காப்பியங்கள். இதிகாசங்களும் புராணங்களும் சம்ஸ்கிருத காப்பியங்களை விட பல மடங்கு நீளம். பரதர் இயற்றிய நாட்டிய சாத்திரம், வராஹமிகிர் இயற்றிய பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களும் இக்காப்பியங்கோளோடு நீளமானவையே. ஐம்பெரும் சாத்திரம், ஐம்பெரும் ஜோதிடம் என்றெல்லாம் வகைமுறை இல்லை.
கதாசரித்சாகரம் என்ற தொகை நூலும் மிகப்பெரியது. ஆனால் அது காப்பியமாக கருதப்படவில்லை போலும்.

நான் சம்ஸ்கிருத மொழி அறியேன்; அதன் இலக்கியம் மேலோட்டமாகவே தெரியும்; சாராம்சத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ சுருக்கமாகவே படித்துள்ளேன். ஆய்வு கட்டுரைகளை, உரைகளை படித்ததில்லை. அதனால் என் தகவல்களும் கருத்துக்களும் மிகவும் மேலோட்டமானவை; ஆழமில்லாதவை.

(ட) இட அளவுகோல்
தமிழ் இலக்கியங்களை போலவே சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களும் இடம் முக்கிய அளவுகோல் அல்ல. கோசலை நாட்டில் ரகுவம்சம், விதர்ப நாட்டில் நைஷத சரிதம், சேடி நாட்டில் சிசுபால வதம், இமயமலையில் குமாரசம்பவம், கிராதார்ஜுனீயம். நாடு, நகரம், நதி, காடு, மலை, புண்ணிய தலங்கள் என்று பல இடங்களில் கதைகள்.

மேலே செல்வோம்.

() மரபு அளவுகோல்
தமிழைப்போலவே சம்ஸ்கிருதத்திலும் கவிதையே இலக்கியமாக கருதப்பட்டுளது. ஆனால சம்பு என்னும் உரைநடை மரபும் இருந்தது. குறிப்பாக, ஏழாம் நூற்றாண்டில் பாணர் இயற்றிய காதம்பரி என்னும் இலக்கியம் உரைநடையே. பெருங்காப்பிய புலவர்கள் பாரவிக்கும் மாகனுக்கும் ஏறத்தாழ சமகாலத்தவர் பாணர். காதம்பரி, உலகின் முதல் நாவல் என்பது சிலரின் கருத்து. ஆனால் பாணர் வழியில் மற்ற இயல்நடையில் புலவர்கள் தொடரவில்லை. உரைகளில் இயலும் காவியத்தில் கவிதையும் என்பதே மரபு. விக்ரமோர்வசீயம், மத்தவிலாசம், போன்ற நாடகங்களில் வசனங்களுக்கு நடுநடுவே கவிதைகள் வரும்.

தெய்வத்தையோ மிகச்சிறந்த மன்னனையோ நாயகனாய் வடிக்கப்பட்ட கதைகளே காவியமாக கருதப்படும் மரபு சம்ஸ்கிருதத்தில் உண்டு. ராமனின் முன்னொற்களின் கதை ரகுவம்சம்; சிவ பார்வதி திருமணமும், முருகனின் பிறப்பும் குமாரசம்பவம். கிராதார்ஜுனியம், சிசுபாலவதம், நைஷத சரிதம் மகாபாரதத்தின் வழித்தோன்றல்கள். சாகுந்தலம், ரத்னாவலி, விக்ரமோர்வசீயம் போன்றவை துஷ்யந்தன், உதயணன், விக்ரமன் போன்ற புராணகால மன்னர்களை நாயகராய் கொண்ட கதைகள். பத்தாம் நூற்றாண்டிற்கு பின் தோன்றிய மற்ற மொழி இலக்கியங்களும் இந்த சம்ஸ்கிருத மரபையே பெரும்பாலும் பின்பற்றின.

சூத்ரகன் இயற்றிய ம்ருச்சகடிகம் என்ற ஒரு மிக அபூர்வ நூல் இதற்கு ஒரு விதிவிலக்கு. மகேந்திர வர்ம பல்லவன் இயற்றிய இரண்டு பிரஹஸனங்களாம் மத்தவிலாசமும், பகவதஜ்ஜுகமும் அவ்வாறே. இதை பற்றி மைக்கேல் லாக்வுட் சிறப்பான ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
செல்வந்தரான வணிகர், சாதனை படைத்த பாமரர், படைத்தலைவர் ஜோதிடம், கணிதம், இலக்கணம், தர்க்கம், மருத்துவம், நாட்டியம் என்று கலையோ அறிவியலோ சாலப்படைத்த புலவர், பண்டிதர் எவரும் காவிய நாயகர்களல்ல. குறிப்பாக உலகமே வியக்கும் வானளாவிய கோவில்களையும், அணைகளையும், நகரங்களையும் வகுத்த ஸ்தபதிகளோ, அஜந்தா, தஞ்சை போன்ற அற்புத ஓவியத்தொடர்களை வடித்த் கலைஞர்களோ காப்பிய நாயகர்களாக கொண்டாடப்படவில்லை. 

காளிதாசனை பற்றிய செவிவழிச் செய்திகளை மட்டுமே நாமறிவோம்; மூன்று வேறு காலத்தில் மூன்று காளிதாசர்கள் இருந்துள்ளனர்; இதுவே பலருக்கும் புதிதாக இருக்கலாம்; பராமார குல மன்னன் போஜன் காலத்து காளிதாசனை பற்றியவையே இந்த செவிவழிச் செய்திகள்; பெரும்புலவனாக கொண்டாடப்படும் காளிதாசனோ, போஜனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுங்க வம்ச காலத்தில் வாழ்ந்தவன்.
வைதீக மரபில் நிலமை இப்படி. நாட்டிய பெண்களை நாயகியாய் கொண்ட பௌத்த கதைகள் அமரபாலி, குண்டலகேசி போன்றவை. நாகாநந்தி என்ற பௌத்த முனிவரை பற்றிய நூலை மன்னன் ஹர்ஷவர்த்தன் இயற்றினான்; லலிதவிஸ்தாரம் கௌதம புத்தரின் வாழ்க்கை சரித்திரம். பிராகிருத மூலக்கதைகளை சம்ஸ்கிருதத்தில் படைத்த காலத்தில் இவை உருவாகின. சம்ஸ்கிருதத்தில் சமண ஆசிவக சார்வாக இலக்கியமேதும் நான் அறியேன்.

(ப) ரச அளவுகோல்
குறுங்காப்பியமான சாகுந்தலம் காளிதாசனின் மற்ற படைப்புகளை விட சிறப்பாக பேசப்படுகின்றன. காளிதாசனுக்கு ஒரு படி கீழாகவே மற்ற வடமொழி புலவர்களை ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு பழமொழி மட்டும், “உவமைக்கு காளிதாசன், ஆழ்ந்த பொருளுக்கு (அர்த்த கௌரவம்) பாரவி, சொல் இனிமைக்கு (பத லாலித்யம்) தண்டி, இந்த மூன்றும் கொண்டவை மாகன்” என்று பறைச்சாற்றுக்கிறது.

குமாரசம்பவத்தில் சில செய்யுட்களில், ஒரு பிரமாணத்திற்கு தலா மூன்று உவமைகளை கூறியுள்ளான் காளிதாசன். சில உவமைகள் இயற்கை சார்ந்தும், சில உவமைகள் தத்துவம் சார்ந்தும், சில உவமைகள் இலக்கணம் சார்ந்தும், சில உவமைகள் வரலாற்றை சார்ந்தும் உள்ளன. ஒரு சர்கம் (காண்டம்) முழுதும் ஒற்றை சந்த பிரயோகம், பாத்திரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற சொல்நயம், போன்றவை அவன் திறனை காட்டுகின்றன. இமய மலையை வர்ணிக்கும் போது அதன் தாவரங்கள், விலங்குகள், பருவகால மாற்றங்களும் சிறப்பும், வானிலையின் பன்மை, மூலிகைகளின் மகிமை, வந்து போகும் பாத்திரங்களின் நடத்தை பண்பு குணம் பண்பாடு என்று பல்வேறு தகவல்கள், காளிதாசனின் கள ஞானத்தை தெரிவிக்கின்றன. சிலப்ப்திகாரத்து நகர, நதி வர்ணனைக்கும் இசை நாட்டிய வணிக குறிப்புகளுக்கும் சமமாக இவற்றை கூறலாம். கதை சம்பவங்களுக்கு  ஏற்ப சிங்காரம், வீரம், ரௌத்திரம், சோகம், பயம் என்று ரசங்களை வெளிகாட்டும் மாட்சியை உரையாசிரியர்கள் சிலாகித்தும் ரசித்தும் எழுதியுள்ளனர். இதை போன்றே மற்ற காப்பியங்களிலும் பலவித ரச வெளிபாடு, இயற்கை வர்ணனை, நகர வர்ணனை போன்றவற்றை நாம் அறியலாம், அனுபவிக்கலாம்.
குப்த மன்னன் விக்கிரமாதித்யனின் அரசவையில் நவரத்தினங்களென ஒன்பது புலவர்கள் புகழ்பெற்றனர்; ஆனால் அவர்கள் இயற்றிய நூல்களுக்கு இந்த புகழில்லை.

பல ரசங்களும் உள்ள நூலே காப்பியம் என்று கருதவேண்டும்; ஒரு காப்பியம் மற்றொரு காப்பியத்தை விட சிறப்பாக சிலரும், நேரெதிராக சிலரும் கருதுவது மனித இயல்பு. மிகச்சிறந்த நூல்களே பெருங்காப்பியங்களாக நிலவுகின்றன என்பதில் ஐயமில்லை.

() கருப்பொருள் அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தின் கால அளவுகோலையும் மரபு அளவுகோலையும் சுட்டிக்காட்டுகையில் கருப்பொருள் வேற்றுமைகளையும் சுட்டிக்காட்டிவிட்டேன். மிக முக்கிய வேற்றுமை, வடமொழி ஐம்பெருங்காப்பியங்கள் வைதீக மரபு கதைகள்; பௌத்த சமண கதைகளல்ல.

ஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தைப்போலவே, சம்ஸ்கிருத இலக்கியத்திலும் மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறிய தரவுகள் காட்டுகின்றன.

அடுத்த கட்டுரையில் இசை தொகுப்புகளை காண்போம்.