Thursday 23 April 2020

மெக்காலே – கல்வி மொழி - சம்ஸ்கிருதமா ஆங்கிலமா?

Macaulay on Sanskrit education - This essay in English


“நான் இந்தியா முழுவதும் பயணித்தேன். ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இந்த நாட்டில் பார்த்ததில்லை. இந்தியாவில் உள்ள செல்வமும், உயர்ந்த பண்பும், மக்களின் தரமும் கண்டபின், இந்தியாவின் முதுகெலும்பை முறித்தால் தவிற இந்த நாட்டை நாம் கைப்பற்ற மாட்டோம். இந்தியவின் கலாச்சார மரபும் ஆன்மீகமும் அதன் முதுகெலும்பு. இந்தியாவின் மிக தொன்மையான கல்விமுறையை ஒழித்து ஆங்கில கல்வியை புகுத்தி, இந்திய நாட்டின் பண்பையும் மரபையும் விட ஆங்கிலயேர் செய்தது யாவும் சிறந்தது என்று நம்பவைத்தால், இந்தியர்கள் தங்கள் சுய மரியாதையையும் கலாச்சாரத்தையும் இழந்துவிடுவர். பின்னர், நாம் விரும்புவது போல அடிமை நாடாக மாறிவிடுவர்.”
- தாமஸ் மெக்காலே துரை, பிரிட்டன் பாரளுமன்ற உரை, பிப்ரவரி 2, 1835

இப்படி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் அனுப்பி, உண்மையா என்று கேட்டார். சென்னையில் ஸீ-டிவி Zee-TV குழுவின் நிறுவனர் சுபாஷ் சந்திரன் இதை எடுத்துக்காட்டி ஒரு முறை பேசும் போது நான் அரங்கில் இருந்தேன்.

மெக்காலே இதை சொல்லவில்லை. இந்தியாவின் தொன்மையான மரபை ஆங்கிலம் சீரழித்துவிட்டது என்று நினைக்கும் பலர், சம்ஸ்கிருதம் அவரால் தான் வழக்கொழிந்தது என்று நினைக்கும் பலர் இதை நம்பி, பகிர்வதுண்டு.

ஏன் மெக்காலே? அவர் கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கவில்லை. அந்த பதவியை வகித்த ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்க்ஸ், கார்ண்வாலிஸ், டல்ஹவுசி என்று வேறு யாரும் செய்யாததை மெக்காலே எப்படி செய்யமுடியும்? மேலும், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் கல்வி அறிக்கை எனும் புகழ் பெற்ற உரையை மெக்காலே பேசியபோது இதை சொன்னார் என்பது குற்றச்சாட்டு. ஆர்வத்தில் அந்த கட்டுரையை இணையத்தில் தேடி நான் படித்தேன். இதை எதிர்த்து பலரும் எழுதியுள்ளனர். குறிப்பாக மிச்செல் டனினோவின் கட்டுரையை படிக்கலாம்.

“ஒரு திருடன் ஒரு பிச்சைக்காரன்” என்ற சொற்றொடரே இது ஒரு புருடா என்று சிந்தித்து படிக்கும் எவருக்கும் எச்சரிக்கை. உலகில் பிச்சைக்காரரோ திருடரோ இல்லாத நாடே இல்லை, வரலாற்றில் இருந்ததும் இல்லை.
மெக்காலே ஒரு ஆங்கிலேய ஆதிக்கவாதி. இந்திய இலக்கியத்தை, மரபை, அறிவியலை காழ்ப்புடன் நோக்கினார். ஒட்டுமொத்த சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு அலமாரி அடுக்கில் உள்ள ஆங்கில நூல்களுக்கு சமமாகாது என்று நினைத்தார். அது அவரது அறியாமை. ஒரு மாமேதையின் செருக்கில் பிறந்த அறியாமை. அவர் இந்தியாவை சிறந்த நாடாகவோ ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு ஆபத்தான சக்தியாகவோ நினைக்கவில்லை. தாழ்மையான இந்திய கலாச்சாரத்தில் மேன்மையான ஆங்கில கலாச்சாரத்தால் முன்னேற்ற வேண்டும் என்பதே மெக்காலேவின் வாதம்.

இந்திய நிர்வாகத்திலும் சட்ட அமைப்பிலும் பல மாற்றங்களை அவர் அறிமுகப்படுத்தினார். இதில் இந்தியர்களுக்கு பிடிக்காவிட்டால் என்றோ நாம் தூக்கி எறிந்திருக்கவேண்டும். நாம் அதை எல்லாம் வைத்துக்கொண்டு தான் ஜனநாயக இந்தியாவை நடத்துகிறோம்.

வாரன் ஹேஸ்டிங்கஸ் ஆட்சிக்காலம் முதல் கிழக்கிந்திய கம்பெனி வேத பாடசாலைகளுக்கும் இஸ்லாமிய மதராஸா பள்ளிகளுக்கும்  பாடம் நடத்த சன்மானம் கொடுத்துவந்தது. கம்பெனி ஆட்சிக்கும் முன் மன்னர்கள் ஆட்சியில் நடந்த வழக்கத்தை கம்பெனி தொடர்ந்து வந்தது. அதை ஒழிக்கவேண்டும் என்பதே மெக்காலேவின் திட்டம். சம்ஸ்கிருத பாரசீக அரபு மொழிகளில் கல்விக்கு கம்பெனி சன்மானம் அளிக்கக்கூடாது. ஆங்கில மொழிக்கல்வியை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து ஐரோப்பிய கணிதம், அறிவியல், சட்டம் எல்லாம் நடத்த வாதிட்டார். அதனால் சென்னை, கல்கத்தா, பம்பாய் நகரங்களில் மூன்று மாநில கல்லூரிகளும் உருவாகின.

ஹோரேஸ் வில்சன், ஜேம்ஸ் பிரின்செப் போன்ற வங்காள ஏசியாடிக் சங்கத்தின் உருப்பினர்கள் மெக்காலேவின் கல்வி திட்டத்தை எதிர்த்தனர். இந்தியர்கள் தங்கள் கல்விமேலும் மொழிமேலும் கலாச்சாரத்தின்மேலும் கொண்ட அபிமானத்தை இழப்பார்கள், என்று இவர்கள் தான் எச்சரித்தனர். இவர்கள் இந்தியாவிற்கு செய்த பணி அபாரமானது, அற்புதமானது. இந்த மாமேதைகளின் பெயர்களும் பணிகளும் படைப்புகளும் எல்லா இந்திய மொழிகளிலும் பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும். கட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இதை மறைப்பது இந்திய அரசாங்கத்தின் போலித்தனத்தையும் குறுகிய மனப்பான்மையையும் மெக்காலே போன்ற அறியாமையையும் காட்டுகிறது.

நூறு வருடம் கழித்து மோகன்தாஸ் காந்திக்கும் ரவீந்திரநாத் தாகூருக்கும் இதை போன்று ஒரு விவாதம் நடந்தது. ஆங்கில மொழி இந்தியாவிலிருந்து அரவே ஒழியவேண்டும், ஜனநாயகம் தேர்தல் இவையாவும் இந்தியாவுக்கு தகாத ஆட்சிமுறை, ரெயில்வண்டிகளினால் இந்தியாவில் சோம்பலையும் ஒழுக்கமின்மையும் பரவுகின்றன, மேற்கத்திய மருத்துவத்தை புரக்கணிக்கவேண்டும் என்றெல்லாம் காந்தி கட்டுரைகள் எழுதினார். நீதிமன்றங்களை முழுவதும் புறக்கணிக்கவேண்டும், வக்கீல் தொழில் விபச்சாரத்துக்கு சமம், அந்த தொழிலையே இந்தியர்கள் செய்யக்கூடாது என்றும் ஆக்ரோஷமாக வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் அப்படியே செய்தனர்,. ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தங்கள் செல்வமீட்டும் வக்கீல் தொழிலை தியாகம் செய்தனர்.  ஆனால் காங்கிரசுக்கு வெளியே இருந்த இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. தங்கள் வக்கீல் தொழில்களை விடவில்லை – முகமது அலி ஜின்னாவும். பீமராவ் அம்பேத்கரும்.

தாகூர காந்தியின் வாதத்தை ஆவேசமாக எதிர்த்தார். பரந்த மனப்பான்மை வேண்டும் இப்படி குறுகிய சித்தாந்தம் தகாது என்று காந்தியை சாடினார். “அனைத்து நாட்டு கலாச்சார காற்றும் இந்தியா எனும் இல்லத்தில் ஜன்னல்கள் வழியே வீச வேண்டும். ஜன்னலடைத்த ஒரு சித்தாந்த சிறைச்சாலையாக இந்தியா மாறிவிட கூடாது,” என்றார் தாகூர்.
சுதந்திரம் கிடைக்கும் வரை காந்திவழி சென்ற நேருவும், காங்கிரசும், 1947க்கு பின் இந்த கொள்கையில் தாகூரையே பின்பற்றியது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது தேசிய மொழி ஹிந்தியா சம்ஸ்கிருதமா என்ற ஒரு வாதம் நடந்தது. சம்ஸ்கிருதத்தை ஆச்சாரமான ஹிந்துக்கள் தான் ஆதரித்தனர் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அம்பேத்கரும், நாம் மறந்துவிட்ட முஸ்லிம் ஒருவரும் சம்ஸ்கிருதமே கல்வியிலும் பாண்டித்தியத்திலும் தொன்மை மரபுள்ள மொழி, ஹிந்தி ஒரு கடைத்தெரு பேச்சு மொழி மட்டுமே, ஹிந்தியில் சட்ட நூல்கள், அறிவியல் நூல்கள் ஏதுமில்லை என்று பறைசாற்றினர். ஹிந்தியை தாய்மொழியாய் கொண்டவர்கள் மற்ற தாய்மொழி பேசுவோரை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தும் நிலைமை நாட்டில் அமையக்கூடாது என்றும் அவர்கள் வாதாடினர். சம்ஸ்கிருதம் அனைவருக்கும் கற்க கடினம் என்பதால் அதில் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

தேசிய மொழி விவகாரம் அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பில் முடிந்தது. இரண்டு மொழிகளும் சமமாக வாக்குகள் பெற்றன. தன் தலைமை வாக்கை ஹிந்தி மொழிக்கு ராஜேந்திர பிரசாத் அளித்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியானது.

நணபர் பாலாஜி தண்டபாணி இந்த தகவலை அனுப்பினார்.

அன்புள்ள கோபு, அரசியலமைப்பு பேரவையில் சம்ஸ்கிருதத்திற்கு குரல் கொடுத்த முஸ்லிம் மேற்கு வங்காளத்தின் நிஸாமுதின் நஸிருத்தின் அகமது. அவையில் அவர் சொன்னது:

“ஒரு மொழியை தேர்ந்தெடுத்தால் உலகின் மிக சிறந்த மொழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவுக்கு வெளியே சம்ஸ்கிருதத்திற்கு எத்தனை மரியாதை இருக்கிறது என்பதை இந்தியர்கள் அறியாதது மிகவும் வருத்தமான நிலைமை. ‘சம்ஸ்கிருதம் ஈடு இணையில்லாத செல்வமும் தூய்மையும் கொண்ட மொழி,’ என்று டபிள்யு. சி. டெய்லர் கூறுகிறார். இதுவே உலகின் அதன் அந்தஸ்துக்கு சான்று.”

இன்னுமொரு தகவல். மதறாஸ் மாநில உறுப்பினர் டாக்டர் பி. சுப்புராயன், லத்தீன எழுத்தமைப்பில் (தேவநாகரி அல்ல) ஹிந்தி மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்று வாதிட்டார்!

ஒரு நாட்டை ஆளும் வர்கங்கள் தங்களை சிறப்பித்தும் தமக்கு முந்தியவரை தாழ்த்தியும் பேசுவது உலக வழக்கம்.
நம் பல்வேறு பிரச்சினைகளுக்கு 1947ல் பெற்ற சுதந்திரத்தின் பின்னும் ஆங்கிலேயர்களை பழி சொல்கிறோம். ஆனால் அவர்கள் செய்த மிகச்சிறந்த நற்காரியங்களை விட்டுவிடுகிறோம். நம் ஆட்சி முறை, சட்டம், நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவம், ராணுவம் என்று அனைத்தும் ஆங்கில ஐரோப்பிய தழுவல்களாக வைத்துக்கொண்டு இந்த மாதிரி வாதங்கள் அபத்தமானவை.

நாம் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்கின்றன

குறிப்பு, ஏப்ரல் 29, 2020. திரு “ஒத்திசைவு” ராமசாமி அவர்களின் விளக்கத்தை இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் இன்று படித்தபின், மேற்கு வங்காள உறுப்பினரின் பெயர் நஸிருத்தின் அகமது (நிஸாமுத்தின் அல்ல) என்று தெரிந்து கொண்டேன். திருத்தி விட்டேன்.

அவரது மிக விவரமான பின்னூட்டத்தை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

சுட்டிகள்


Tuesday 21 April 2020

Index of Sanskrit essays

On Education - A Sanskrit proverb

Linguistics
Mallinga, Mark Antony and Sanskrit
Macaulay - Sanskrit and English
A history of Kanchipuram

Epigraphy
The Asiatic Society of Bengal - Rediscovery of Indian History, Brahmi, Asoka
Calligraphic inscription in Kanchi Kailasanatha temple
RajaSimha Pallaveshvaram - learning Pallava grantham
Decoding Rajasimha - a stanza from Rajasimha's Kailasanatha inscription
Pallava Grantham Alphabet as found in Kanchi Kailasanatha
Atyantakaama Pallava's poem in Mamallapuram - a musical experiment
A history of the Pallava Grantham script
Atiranchanda Surprise - Babington's gift
Pallava Grantha An instructional course

Astronomy
Some slokas of Indian astronomy
Mathematics - Sanskrit vocabulary and English translation
Varahamihira's eclipse proof
Manjul Bharagava on Mathematics in Sanskrit 
My Astronomy Essays

Other
Manu Smriti, Purananuru, and Arthur Laffer's Economics 

கல்வெட்டு
காஞ்சி கைலசாநாதர் கோவிலில் பல்லவ கிரந்த லிபி
அசோகத்தூண் கண்டெடுத்த காதை 

கலை
மாந்தாதா - அமராவதி சிற்பமும் வடமொழி கவிதையும்

மொழியியல்
மெக்காலே -  கல்வி மொழி - சம்ஸ்கிருதமா ஆங்கிலமா?

இலக்கியம்
வராஹமிஹிரனின் அகத்தியர் துதி
ஸமஸ்கிருதம் புறிகிறதே
மண்ணை பிழிந்து எண்ணை எடுக்கலாம் - தமிழில் பர்த்ருஹரி கவிதை
எல்லீசனின் தமிழ்-சமஸ்கிருத கவிதை
கல்வி – ஒரு வடமொழி பழமொழி
பல்லவ கிரந்தம் வகுப்பு

Wednesday 15 April 2020

அழகின் விதிகள்


Art and the Brain - English version of this essay


விலையனூர் ராமசந்திரன் ஒரு உலகப்புகழ் பெற்ற மருத்துவர். அமெரிக்காவின் சான் டியகோ நகரிலுள்ள கலிபோர்ணியா பல்கலைகழகத்தில் பேராசிரியர். Phantoms in the Brain (மூளையின் மாயாஜாலங்கள்) என்ற நூலை எழுதியுள்ளார் (தமிழிலும் இது கிடைக்கிறது, பாரதி புத்தகாலயம் பதிப்பு). சில மனநோயாளிகளின் விசித்திர இன்னல்களை ஆராய்ந்தார். அதில் சில் நோய்கள் மூளையின் நரம்புகளின் சேதத்தால் விளைந்தவையே அன்றி மன உளைச்சலால் அல்ல என்று கண்டுபிடித்து, சில நோய்களுக்கு தீர்வு, குணமாக்க கருவிகள், சிகிச்சை, பயிற்சி, என்ற பல புதிய யுக்திகளை படைத்தார். 

இந்த ஆய்வுகளால் மனித மூளையின் சில செயல்களுக்கும் புதிய விளக்கமளித்தார். கலையின் இயல்பும் அகழின் இயல்பும் கலைஞனின் பார்வையிலும் தத்துவத்திலும் மட்டுமில்லை; மூளை மருத்துவரின் ஆய்விலும் விளக்கத்திலும் உருவாகலாம் என்பது இவர் சித்தம். இயற்கையின் விதிகளை போல் அழகிற்கும் விதிகளை இவை என கருதி, வகுத்துள்ளார்.


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையிலும் பல்வேறு மேடைகளிலும் இதை பேசியுள்ளார். சமீபத்தில் அப்பராவ் கலைக்கூடத்தின் மேடையில் பேசிய உரையின் புள்ளிவிவரங்களே இந்த கட்டுரை. அவர் குரலில் எழுதியுள்ளேன்.

ராமசந்திரனின் உரை

நான் சென்னைக்கும் வரும்போது மயிலை கபாலிச்சுரர் கோவிலுக்கு செல்வது வழக்கம். மற்ற பல கோவில்களுக்கும் செல்வதுண்டு. கோயில் சிற்பங்களின் அழகும் ஐம்பொன் சிலைகளின் அழகும் என் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

சி.பி.ஸ்நோ Two Cultures (இரண்டு கலாச்சாரங்கள்) என்றொரு புகழ்பெற்ற கட்டுரை எழுதினார். கலையுலகம் ஒரு புரம், அறிவியல் உலகம் ஒரு புரம். இவ்விரண்டும் ஒவ்வாமல் பிரிந்துள்ளன் என்பது அவர் வாதம். அவர் கொள்கை தவறு என்பது என் வாதம். சிலரை சாடுவது நம் கடமை என்று ரீத் துரை கூறினார். அந்த கடமையை இன்று ஆற்றுகிறேன்.

சமூக மரபுகளை கடந்த ரசனை உள்ளதா? கலை கண்ட மூளை எப்படி இயங்குகிறது? நோம் சாம்ஸ்கி சமூக மரபுகளை கடந்து மொழிக்கு ஒரு அடிப்படை கொள்கை திகழ்கிறது என்கிறார். சமூக மரபுகளை கடந்து அழகிற்கும் ரசனைக்கும் ஒரு அடிப்படை உள்ளது என்பது என் வாதம். சமூக மரபுகளை தாண்டி, ஒட்டுமொத்த விலங்கின குடும்பத்திற்கும் ஒரு அடிப்படை அழகியல் ரசனை உள்ளது என்பதே என் வாதம். மலர்கள் மனிதர்களுக்காக அழகான வடிவமும் வண்ணமும் பெறவில்லை. தேனீக்களையும் பட்டாம்பூச்சிகளை தங்கள் அழகால் ஈர்ப்பதற்கே, மலர்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழகழகாக தோன்றின. மனிதன் உருவாகியதோ சில கோடி ஆண்டுகளுக்கு முன்பே. நாம் தேனிக்களிலிருந்து பரிணமிக்கவில்லை. ஆனாலும் மலர்களின் அழகை ரசிக்கும் அதே ரசனை நமக்கும் உள்ளது.

பெருங்கூடு (பவர் -bower) பறவை சாம்பல் நிற சிறுபறவை. பாசி, குச்சி, குப்பை, இலை, சிகரட் தோல் எல்லாம் கொண்டு மாபெரும் கூடுகளை இந்த சிறிய பறவை கட்டுகிறது. அதை பார்த்தால் ஒரு பறவை படைத்தது என்றே யாரும் நம்பமாட்டார்.

நிற்க.
பார்வதி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதம் வந்த பல ஆங்கிலேயர் ஐம்பொன் சிலைகளை இகழ்ந்தனர். பார்வதியின் ஒரு சிலைகண்டு, இயற்கைக்கு மாறாக கோரமாக இருக்கிறது என்று கடிந்தனர். மெல்லிய இடை, கனத்த கொங்கை, சமகால பெண்களில் காண இயலா முகம், ஆதலால் இது கொச்சை, கொடூரம் என்றனர். இந்திய சிற்பங்களில் அங்கங்கள் எதுவும் இயற்கை அளவின்றி செயற்கையாக தெரிகிறது என்றனர். விசித்திரம் என்னவென்றால், அதே காலகட்டத்தில், சில ஆங்கிலேய பெண்கள், தங்கள் இடைகளை குறைக்க எலும்புகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்! அப்படி எலும்பை அகற்றிய பெண்களின் எலும்புகூடுகளை நான் லண்டனில் பார்த்திருக்கிறேன்.

(பிக்காசோ போன் ஓவியர்களின்) நவீன மேற்கத்திய கலை. உருவத்தை நீட்டியும் குறைத்தும் வளைத்தும் சுளித்தும் சிதைக்கிறது. இந்த சிதைவுகளே “வடிவ கொடுங்கோலிலிருந்து விடுதலை” என்பது நவீன ஓவியர்களின் பெருமிதம்!

கலையின் நோக்கம் இயற்கையை படம் பிடிப்பதல்ல. ஒரு புகைப்படம் இதை செய்யலாம். எல்லா புகைப்படங்களையும் நாம் கலை என்று அழைப்பதில்லை.

சமஸ்கிருதத்தில் ரசம் என்று ஒரு சொல் இதை மொழிபெயர்ப்பது கடினம். கலை தூண்ட முயலும் உணர்ச்சியே ரசம்.

இந்த படத்தை காணவும். தொலைவை நோக்கும் ஒரு யுவதி தெரிகிறாள். இடது பக்கம் நோக்கும் ஒரு கிழவியும் தெரிகிறாள். இது ஒரு சிலேடை ஓவியம்.
சிலேடை ஓவியம் - யுவதியும் கிழவியும்

இதுவும் ஒரு சிலேடை ஓவியம். முயல் வாத்து இரண்டும் தெரியும். முயலின் காதுகள் வாத்தின் அலகாக பாவிக்கிறது.
கலையின் நுணுக்கமே பார்வையின் லீலைகள். மூளையை சீண்டி வெவ்வேறு காட்சிகளை, தரிசனங்களை காண தூண்டுவது கலையின் ஒரு முயற்சி.
சிலேடை ஓவியம் -  வாத்து முயல்

இது போன்ற ஆய்வுகளால் நான் அழகின் ஏழு விதிகளை வகுத்திருக்கிறேன். இது முற்றுபெற்ற ஆய்வல்ல. வேறு விதிகளும் இருக்கலாம்.
கலையின் ஏழு விதிகள்

ஒரு குறிப்பு. கலாச்சாரங்களில் கலை வேற்றுமைகளை பலரும் ஆராய்ந்துள்ளனர். அது கலை வரலாறு. அதை நான் இங்கு கூறவில்லை. மரபுகளை கடந்த கலையின்  உயிரியல் அடிப்படைகளை தான் தேடுகிறேன்.

குவியல் (Grouping) வேட்டை விலங்கிடம் தப்பிக்க உருவாகியது. இலைமறைவான ஒரு சிங்கத்தை நம் கண்கள் பல சிங்கத்துண்டுகளாக பார்ப்பதில்லை. முழு சிங்கமாக பார்க்கிறது. இது பரிணாம வளர்ச்சியின் பலன். இந்த விதியை ஓவியர்கள், நெசவாளர்கள் போன்றோர் கையாள்வது சகஜம்.

இந்த படத்தை காணவும். புள்ளிகளின் குவியலாக தெரிகிறதா? ஒரு டால்மேசியன் நாய் தெரிகிறதா? முதலில் சிலருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் நாய் தெரிந்துவிட்டால் அது மறையாது.
புள்ளிகலில் ஒரு டால்மேசியன் நாய்

சிகர தகற்றம் (Peak shift) ஒரு எலிக்கு முக்கோணங்களும் நீள்சதுரங்களும் காட்டி, நீள்சதுரத்தை நோக்கி செல்லும் போது ஒரு உணவு துண்டு கொடுத்தால், அது சீக்கிரம் நீள்சதுரத்தை விரும்ப பழகிவிடும். முன்பை விட நீளமான நீள்சதுரம் காட்டினால் அதைநோக்கி செல்லும். ஒரு தனிப்பட்ட நீள்சதுரத்தை அந்த எலி விரும்புவதில்லை. நீள்சதுர வடிவத்தை அது விரும்ப கற்கிறது.

கேலிசித்திரம் என்னும் தூரிகையின் அடிப்படை இதுவே. ஓபாமவையோ நிக்சனையோ வரையலாம். ஒருவரின் வேற்றுமையை பெரிதாக்கினால் அவரது இயல்பை விட அந்த சித்திரம் நமக்கு ஏதோ சொல்கிறது. நிக்சன் மூக்கையும் காதையும் பெரிதாக்கினால, நிக்சனை விட அந்த சித்திரம் நிஜமாகிறது இந்த யுக்தியை சோழ சிற்பிகள் ஐம்பொன் சிலை வடிக்க கையாண்டனர்.

(கோபுவின் குறிப்பு  இந்திய ஓவியர்கள், இந்திரா காந்தியின் மூக்கை பெரிதாக வரைந்து காட்டினர். சந்தன வீரப்பனின் மீசை, கே ஆர் விஜயாவின் புன்னகை யாவும் சிகர தகற்ற யுக்திகள்)

டிம்பர்கன் என்று ஒரு உயிரியல் அறிஞர் கடல்புறா குஞ்சுகள் தங்கள் தாயை அடையாளம் காணும் முறையை ஆராய்ந்தார். கடல்புறாக்களின் அலகு நுனியில் ஒரு சிவப்பு புள்ளியிருந்தது. அந்த புள்ளியை குஞ்சு தன் அலகால் தட்டும். தாய்பறவை தன் வாயிலிருந்து இறையை குஞ்சுக்கு தரும். செத்த பறவை ஒன்றி அலகை வைத்து டிம்பர்கன் பரிசோதனை செய்தார். ஒரு குஞ்சு அந்த அலகின் புள்ளியை தட்டி உணவு கோரியது. அடுத்து ஒரு குச்சியின் நுனியில் சிவப்பு புள்ளி வரைது ஒரு குஞ்சிடம் காட்டினார். அந்த குச்சியையும் குஞ்சு தன் அலகால் தட்டி உணவு கோரியது. ஒரு புள்ளிக்கு பதில் மூன்று புள்ளிகளை வைத்த குச்சியை டிம்பர்கன் நீட்டிய போது, அலாதியாக ஆர்வமாக அதிகாம அதை குஞ்சு தட்டியது. இதுவும் சிகர தகற்றம்.

இடக்கரடக்கலும் தனிமைபடுத்தலும் (Principles of Understatement and Isolation)

கலையில் இவற்றின் பங்கும் முக்கியம்.  ஆனால் இது சிகர தகற்றத்திற்கு நேர்மாறாக உள்ளதே? மூளை பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகிறது. ஒரு உருவத்தின் வடிவக்கோடு நிறத்தைவிட பல தகவல்களை தருகிறது. ஒரு பெண்ணின் கோட்டோவியத்தில் நம்மை வண்ணத்தை விட வடிவம் அதிகம் கவர்கிறது. ஓவிய சிற்ப கலைஞர்கள் இதை ஆழமாக உள்வாங்கி பரவலாக கையாள்வர்.

கலை உவமை (Artistic metaphor) மை ஏன் நம்மை கவர்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு பொருளை விட வெறும் வர்ணனையை விட ஒரு உவமை நம்மை ஏன் சிலிர்க்கவைக்கிறது? ஓவியர், கதாசிரியர், புலவர் யாவருக்கும் உவமை ஒரு சிறந்த கருவி. ஷேக்ஸ்பியரை போன்ற மேதை உவமைகளை தெறிக்கவிடுவார். கலைஞர் மட்டுமல்ல. பாமரரின் மொழியிலும் முப்பது சதவிகிதம் உவமைகள் இருக்கும்.

கேள்வி பதில்கள்

கேள்வி  மட்டமான கலை என்று ஏதேனும் உள்ளதா? அல்லது காண்பவன் கண்ணில்தான் அழகா?

பதில் அமெரிக்காவில் மட்டமான கலை இருக்கிறது. அதை கிஷ் என்று அழைப்போம். செவ்வியல் ஓவியம் ரசிக்க தொடங்கினால் கிஷ்ஷை ரசிக்க முடியாது. ஒருவந்து கிஷ் இன்னொருவனின் செவ்வியல் என்று நான் சொல்லமாட்டேன்.

பள்ளிக்கல்வியில் கவிதையும் கலையும் ஆரம்பத்திலேயே சேர்க்கவேண்டும். இந்தியாவில் மக்காலேவின் திட்டத்தால் இலக்கணத்தை முதலில் கற்பிக்கிறோம். அது பயனற்றது. செவ்வியல் கலைகளை ஆரம்பத்தில் அறிமுகம் செய்தால் கிஷ்ஷை தவிர்த்து நல்ல கலை ரசனை வளரும்.

கேள்வி மனிதர், விலங்கு பறவை ரசனை பற்றி கூறினீர்கள். மீன் பாம்பு ஊர்ந்து செல்லும் விலங்குகளுக்கும் ரசனை உண்டா?
பதில் பறவைகள் மனிதர்களை போல் பகலில் உலவும். அதனால் மோப்பத்தை விட பார்வை திறன் அதிகம். பாம்புகளும் ஊர்ந்து செல்லும் விலங்குகளும் மோப்ப சக்தி அதிகம் கொண்டவை. அதனால் தான் அவை பறவைகளை போல் வண்ணவண்ணமாயில்லை.

கேள்வி சிகர தகற்றம் கண்நுகரும் கலையில் மட்டும் பிரதானமா செவிவழி கலைகளிலும் உண்டா?
பதில் மூளையில் மூன்றில் ஒரு பங்கு பார்வைக்கு. நூற்றிஐம்பது வருடங்களாய் நாம் பார்வையை ஆராய்ந்துள்ளோம். மனித இனத்தின் செவித்திறன் பார்வைத்திறனுக்கு ஈடாகாது. ஆய்வுகளும் அத்துறையில் குறைவே.

ஆனால் கலையில் பொதுவான அம்சங்களுண்டு. கர்ணாடக சங்கீதம் கேட்டிறாத பல அமெரிக்கர்களுக்கு நான் கர்ணாடக் சங்கீதம் கேட்கவைத்து பரிசோதித்ததில், பத்தில் எட்டு நபருக்கு, தர்பாரி கானடா ராகம் வாசித்தால் ஒரு சோகம் உணர முடிகிறது. மோகன ராகம் கேட்டால் ஸ்ரீங்கார ரசம் உணர முடிகிறது. இதை தர்க்க ரீதியாக விளக்க முடியாது. என் கணிப்பில் பெற்றோரை பிரியும் உணர்ச்சி சிகரத்தை தகற்றி, தெய்வத்திடமிருந்து பிரியும் உணர்ச்சியை தர்பாரி கானடா தூண்டுகிறது.

மூளையில் பெரியீட்டல் லோப் என்ற பகுதி உள்ளது. ஐம்புலன்களும் அங்கே இணைகின்றன. இவற்றிற்கு பொதுவாக சில விதிகள் வேலை செய்கின்றன.
  
கேள்வி கலையில் நாம் சமபங்கத்தை ரசிக்கிறோம். ஆனால சில வேளைகளில் ஆபங்கத்தையும் ரசிக்கிறோம். இது சிகர தகற்றத்தின் செயலா?
பதில் சமபங்க பொதுவானது. ஆனால் ஒரு லேசான ஆபங்கம் ரசனையை தூண்டுகிறது. உயிரியல் அறிஞர்களின் பார்வையில் கலை என்பது உயிருள்ள பிராணிகளி அடையாளம் கண்டுகொள்ள வளர்ந்த ஒரு திறன். சமபங்கம் பொதுவாக பிராணிகளை காட்டுவதால், அதை நாம் விரும்புகிறோம்.

சுட்டிகள்
ராமசந்திரனின் இவ்வுறையின் வீடியோ (ஆங்கிலம் - வேறொரு அரங்கில்)
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் ராமசந்திரனின் உரை (ஆங்கிலம்)
சி.பி.ஸ்நோ கட்டுரை – இரண்டு கலாச்சாரங்கள் (ஆங்கிலம்)
The Heuristics of Science - VS Ramachandran lecture at VarahaMihira Science Forum
Neuroscience : A History - Nishant Chandrasekar lecture at VarahaMihira Science Forum


ராமசந்திரனோடும், அவர் மனைவியோடு
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை நண்பர்கள்

Thursday 9 April 2020

Modi’s Lights Out – and a signalling challenge to end the lockdown


In 1999, I was working for the MSN team in Microsoft, and decided I wanted to look for opportunities in a different group. My boss Brad Thomson, said ok, and allowed me to look for other jobs within Microsoft.  I was interested in a job as a programmer or developer – designation Software Design Engineer.  At that time, the hiring group still conducted multiple interviews where I had to demonstrate my skills in programming, analytical thinking, problem solving, and communication.

Seattle days - 1999, in my apartment
I actually enjoyed the interview processes. I interviewed with four different groups. It was challenging, very different, and exposed some gaps in my abilities and knowledge. Some of the interview questions were easy, some were hard, some were above my level. I realized I didn’t want to join one of those groups, I failed badly in one set of interviews, and I did moderately well in the other two. Oddly the head of the group where I failed badly, called me for a personal interview where he grilled me with a software challenge, which I passed. Then he offered me a different job, which I didn’t take. Eventually I wallowed in the MSN group, then I was fired (for incompetence at programming) and went on to a dotcom company in California. I realized that I was really bored of software, and so quit and returned to India. Also, at that time, I had a deep interest in writing, especially screenwriting, I missed my dad and my family, I missed India and so on.

But what remained with me from the Microsoft interviews were two things. In one of the interviews I failed, the interviewer expressed enormous passion for writing software; he waxed eloquent about what new things he could do with code,what the new internet paradigms, object oriented code, and some software and hardware novelties promised. He made me realize that I simply wasn’t that excited about software or even computers, at that point. After a few months in the California company I realized that a career in computers was an intellectual and creative dead end for me, even though the financial prospects in the software industry were quite excellent. (Actually, the big dotcom crash happened shortly after I returned to India, but by that time it was irrelevant to me).

The other interview question is the soul of this essay. This was the problem set by the interviewer: “There is a long line of soldiers standing along a hill. The line starts at the base of one side of the hill, continues over the hill and out of sight and ends at the base of the other side. None of them has watches or clocks. The commander tells his soldiers that on his signal all the soldiers must fire their guns simultaneously. But not immediately after the signal. They must develop a signalling mechanism among themselves, so that all of them, even the ones on the other side must fire. The critical aspect is that they all fire simultaneously.”

You might wonder what this has to do with computers or software or Microsoft. Also this seems like one bizarre army unit and weird commander. But this is not an unusual question in the software industry. The problem is signalling. A computer system problem may involve one hundred printers connected to a single main computer, all of which have to start printing simultaneously. Or a controlling computer in a sports stadium, where all the lights must be turned on or off simultaneously. Or coordinating a bunch of satellites in space, thousands of miles apart, which must perform a synchronized action, like photograph a nova. The solution is an algorithm that solves this signalling problem.

Lights out

The interview question relates also to Prime Minister Narendra Modi’s two requests to the public, first to assemble in our balconies at 5pm on March 23 and clap for the medical and other public servants who were fighting the CoronaVirus, and then to switch off electric lights and light candles or oil lamps or cellphones for nine minutes at 9pm on April 5. A huge section of India’s population did both. There are two aspects. One is broadcast communication to almost the entire. This was not possible twenty years ago, when most Indians didn’t have television, only some had cable TV, dish antennas were new, cellphones were new, the internet was in its early stages, and smartphones had not been invented. Narasimha Rao or Vajpayee could not have communicated to so many people.


Modi lights a lamp - April 5
Even the poorest Indians lit lamps

The second aspect is synchronicity. Ubiquity of cellphones means now everyone has a clock. In the 1800s the British army at Fort St George in Madras (and presumably the forts in Bombay and Calcutta) fired a cannon, at 8am and 8pm everyday – hence the phrase gun-time. In several places across the world, clock towers were installed. Temple bells served this function in pre-Colonial India, though not everywhere.

So we had a whole country lighting lamps, clapping, ringing bells, banging on plates and pots in unison, all solving my Microsoft interview question in  a national light and sound show. But you had people acting according to their wishes, assembling in groups, not maintaining minimal physical distance, etc., all of which were severely lampooned. We already had incidents of bad coordination, when bus stands were crowded, huge numbers of people had to walk hundreds of miles to hometowns, people crowded ration shops. People abused even simple mechanisms like circles to stand in, by putting their bags or markers there, missing the whole point.

Wrong way to maintain social distance
May be just avoiding the heat
The right way to maintain social distance
Villagers show the way

But civilians are like that, they are independent actors not a disciplined force like an army. Consider that soldiers spend about four years practicing marching, before they get it right. Just getting a thousand people to walk together takes years of training, practice, discipline and punishment.

But India (and the world) now has a few more questions and signalling issues like this to deal with, once the national lockdown is lifted. Most probably only certain sectors of the economy and the public will be allowed to come out and do some things. Currently in my home state, Tamilnadu, pharmacies are the only shops allowed to be open all day long. Grocery stores and vegetable shops are allowed to open in the mornings. Some restaurants are open, but only for pick up or delivery, not for dining at the restaurants. In the next few weeks, different categories of shops, like electrical equipment suppliers, hardware stores, petrol bunks, will probably be allowed to work one or two days a week – but governments have to evolve a mechanism whereby people don’t crowd them all at once, like the ration shops. Simply because India has far more family operated stores unlike the West, where the large supermarkets have replaced these in huge numbers, we don’t have the same problems, until now.

Similarly personal care services like barbershops, beauty salons, small clinics, laundry services, will also have to open at least on a trial basis. Since these involve personal contact, and great risk of spread, they may actually take quite a while to be allowed.

When eventually other services are allowed to reopen, they will all need phased reopening and closing, and operation time. Absence of public and very limited private transport will be a nightmare. 

Every service is dependent on a large network of other services, most of which is impossible to comprehend by an individual, or even an institution like a company or a government. This will be a logistical challenge of gigantic proportions, with no protocols, no training, a scared public, and a bureaucracy and security apparatus with no training for such challenges. Communicating a lot of these will be a huge challenge for Indians. We have a large workforce of computer programmers, people managers, event managers, logistic coordinators  and communicators, most of whom are working from home now. Perhaps they can be of good help in these upcoming challenges.

Crowding at Koyambedu bus stand
A Microsoft memory (in Tamil)

Additional Pictures
Almost all pictures taken from internet
Athletes light lamps on April 5

Soldiers in Siachen light lamps April 5

People clapping on Balconies March 23

Crowding at the Koyambedu intercity Bus terminus, Madras
March 24
Bad signalling, lack of planning