Showing posts with label வடமொழி. Show all posts
Showing posts with label வடமொழி. Show all posts

Tuesday, 30 November 2021

அன்னப் பறவையின் புகழ்

मत्स्यापि विजानन्ति नीर क्षीर विवेचनम्

प्रसिद्धम् राजहंसस्य पुण्यै परै: अवाप्यते

மத்ஸ்யா-அபி விஜாநந்தி நீரக்ஷீர விவேசனம்
ப்ரஸித்தம் ராஜஹம்ஸஸ்ய புண்யை: பரை: அவாப்யதே

அன்னப்பறவை ஓவியம்
துக்காச்சி கோவில், கும்பகோணம் மாவட்டம்
 

மேல்கண்ட சுபாஷிதம் (வடமொழியில் பழமொழி) நகுபோலியன் எனும் பாலு சார் கற்றுத் தந்தது. ஏனோ திடீரென்று தோன்றியது, தமிழில் ஒரு கவிதையாய் புனைந்து நண்பர் திவாகர தனயனுக்கு வாட்சாப்பில் அனுப்பினேன். இதோ என் கவிதை
பால் வேறு தண்ணீர் வேறு
பாங்கறியும் மீனும் அன்றோ
புகழ் சென்றது அன்னம் தேடி
பூர்வீக புண்ணியம் என் கொல்

பதம்பிறிப்பு
மத்ஸ்யா: மீன்
அபி: உம் விகுதி
விஜாநந்தி -அறியும்
நீர - நீர்
க்ஷீர - பால்
விவேசனம் - வேற்றுமை
ப்ரஸித்தம் - புகழ்
ராஜஹம்ஸஸ்ய - ராஜ அன்னத்திற்கு
புண்யை: -புண்ணியம்
பரை: -பூர்வீகத்தில்
அவாப்யதே - பெற்றது

பதிலுக்கு ஆசுகவி இந்த கவிதையை சில நிமிடங்களில் புனைந்து எனக்கு அனுப்பினார்.
சின்னக் கயலுந்தன் சிந்தை யறியுமாம்
இன்னவை நீரிவை பாலென்று - மென்றொடீ!
அன்னப் பறவைக்கே அப்புகழ் சேர்ந்ததும்
முன்னைப் பிறவிப் பயன்
அடடா, இதுவன்றோ கவிதை. அவர் மகேந்திர வர்மனை போல் மாறுவேடம் போட்டுக்கொண்டே மயிலையிலும் முகநூலிலும் திரிவதால், இங்கே அவர் கவிதையை பகிற்கிறேன்.

ஹம்ஸ வரி, திருவரங்கம் கோவில்

நான் மொழிபெயர்த்த சில சம்ஸ்கிருத கவிதகள்

ராஜசிம்ம பல்லவன் - கல்வெட்டு
கணகன் மகாவீரன் - கணித வாழ்த்து
வராஹமிஹிரன் - அகத்தியர் வாழ்த்து

Thursday, 23 April 2020

மெக்காலே – கல்வி மொழி - சம்ஸ்கிருதமா ஆங்கிலமா?

Macaulay on Sanskrit education - This essay in English


“நான் இந்தியா முழுவதும் பயணித்தேன். ஒரு பிச்சைக்காரனையோ ஒரு திருடனையோ இந்த நாட்டில் பார்த்ததில்லை. இந்தியாவில் உள்ள செல்வமும், உயர்ந்த பண்பும், மக்களின் தரமும் கண்டபின், இந்தியாவின் முதுகெலும்பை முறித்தால் தவிற இந்த நாட்டை நாம் கைப்பற்ற மாட்டோம். இந்தியவின் கலாச்சார மரபும் ஆன்மீகமும் அதன் முதுகெலும்பு. இந்தியாவின் மிக தொன்மையான கல்விமுறையை ஒழித்து ஆங்கில கல்வியை புகுத்தி, இந்திய நாட்டின் பண்பையும் மரபையும் விட ஆங்கிலயேர் செய்தது யாவும் சிறந்தது என்று நம்பவைத்தால், இந்தியர்கள் தங்கள் சுய மரியாதையையும் கலாச்சாரத்தையும் இழந்துவிடுவர். பின்னர், நாம் விரும்புவது போல அடிமை நாடாக மாறிவிடுவர்.”
- தாமஸ் மெக்காலே துரை, பிரிட்டன் பாரளுமன்ற உரை, பிப்ரவரி 2, 1835

இப்படி ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் அனுப்பி, உண்மையா என்று கேட்டார். சென்னையில் ஸீ-டிவி Zee-TV குழுவின் நிறுவனர் சுபாஷ் சந்திரன் இதை எடுத்துக்காட்டி ஒரு முறை பேசும் போது நான் அரங்கில் இருந்தேன்.

மெக்காலே இதை சொல்லவில்லை. இந்தியாவின் தொன்மையான மரபை ஆங்கிலம் சீரழித்துவிட்டது என்று நினைக்கும் பலர், சம்ஸ்கிருதம் அவரால் தான் வழக்கொழிந்தது என்று நினைக்கும் பலர் இதை நம்பி, பகிர்வதுண்டு.

ஏன் மெக்காலே? அவர் கவர்னர் ஜெனரலாக பதவி வகிக்கவில்லை. அந்த பதவியை வகித்த ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்க்ஸ், கார்ண்வாலிஸ், டல்ஹவுசி என்று வேறு யாரும் செய்யாததை மெக்காலே எப்படி செய்யமுடியும்? மேலும், இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் கல்வி அறிக்கை எனும் புகழ் பெற்ற உரையை மெக்காலே பேசியபோது இதை சொன்னார் என்பது குற்றச்சாட்டு. ஆர்வத்தில் அந்த கட்டுரையை இணையத்தில் தேடி நான் படித்தேன். இதை எதிர்த்து பலரும் எழுதியுள்ளனர். குறிப்பாக மிச்செல் டனினோவின் கட்டுரையை படிக்கலாம்.

“ஒரு திருடன் ஒரு பிச்சைக்காரன்” என்ற சொற்றொடரே இது ஒரு புருடா என்று சிந்தித்து படிக்கும் எவருக்கும் எச்சரிக்கை. உலகில் பிச்சைக்காரரோ திருடரோ இல்லாத நாடே இல்லை, வரலாற்றில் இருந்ததும் இல்லை.
மெக்காலே ஒரு ஆங்கிலேய ஆதிக்கவாதி. இந்திய இலக்கியத்தை, மரபை, அறிவியலை காழ்ப்புடன் நோக்கினார். ஒட்டுமொத்த சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு அலமாரி அடுக்கில் உள்ள ஆங்கில நூல்களுக்கு சமமாகாது என்று நினைத்தார். அது அவரது அறியாமை. ஒரு மாமேதையின் செருக்கில் பிறந்த அறியாமை. அவர் இந்தியாவை சிறந்த நாடாகவோ ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு ஆபத்தான சக்தியாகவோ நினைக்கவில்லை. தாழ்மையான இந்திய கலாச்சாரத்தில் மேன்மையான ஆங்கில கலாச்சாரத்தால் முன்னேற்ற வேண்டும் என்பதே மெக்காலேவின் வாதம்.

இந்திய நிர்வாகத்திலும் சட்ட அமைப்பிலும் பல மாற்றங்களை அவர் அறிமுகப்படுத்தினார். இதில் இந்தியர்களுக்கு பிடிக்காவிட்டால் என்றோ நாம் தூக்கி எறிந்திருக்கவேண்டும். நாம் அதை எல்லாம் வைத்துக்கொண்டு தான் ஜனநாயக இந்தியாவை நடத்துகிறோம்.

வாரன் ஹேஸ்டிங்கஸ் ஆட்சிக்காலம் முதல் கிழக்கிந்திய கம்பெனி வேத பாடசாலைகளுக்கும் இஸ்லாமிய மதராஸா பள்ளிகளுக்கும்  பாடம் நடத்த சன்மானம் கொடுத்துவந்தது. கம்பெனி ஆட்சிக்கும் முன் மன்னர்கள் ஆட்சியில் நடந்த வழக்கத்தை கம்பெனி தொடர்ந்து வந்தது. அதை ஒழிக்கவேண்டும் என்பதே மெக்காலேவின் திட்டம். சம்ஸ்கிருத பாரசீக அரபு மொழிகளில் கல்விக்கு கம்பெனி சன்மானம் அளிக்கக்கூடாது. ஆங்கில மொழிக்கல்வியை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து ஐரோப்பிய கணிதம், அறிவியல், சட்டம் எல்லாம் நடத்த வாதிட்டார். அதனால் சென்னை, கல்கத்தா, பம்பாய் நகரங்களில் மூன்று மாநில கல்லூரிகளும் உருவாகின.

ஹோரேஸ் வில்சன், ஜேம்ஸ் பிரின்செப் போன்ற வங்காள ஏசியாடிக் சங்கத்தின் உருப்பினர்கள் மெக்காலேவின் கல்வி திட்டத்தை எதிர்த்தனர். இந்தியர்கள் தங்கள் கல்விமேலும் மொழிமேலும் கலாச்சாரத்தின்மேலும் கொண்ட அபிமானத்தை இழப்பார்கள், என்று இவர்கள் தான் எச்சரித்தனர். இவர்கள் இந்தியாவிற்கு செய்த பணி அபாரமானது, அற்புதமானது. இந்த மாமேதைகளின் பெயர்களும் பணிகளும் படைப்புகளும் எல்லா இந்திய மொழிகளிலும் பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும். கட்சி மாறினாலும் காட்சி மாறாமல் இதை மறைப்பது இந்திய அரசாங்கத்தின் போலித்தனத்தையும் குறுகிய மனப்பான்மையையும் மெக்காலே போன்ற அறியாமையையும் காட்டுகிறது.

நூறு வருடம் கழித்து மோகன்தாஸ் காந்திக்கும் ரவீந்திரநாத் தாகூருக்கும் இதை போன்று ஒரு விவாதம் நடந்தது. ஆங்கில மொழி இந்தியாவிலிருந்து அரவே ஒழியவேண்டும், ஜனநாயகம் தேர்தல் இவையாவும் இந்தியாவுக்கு தகாத ஆட்சிமுறை, ரெயில்வண்டிகளினால் இந்தியாவில் சோம்பலையும் ஒழுக்கமின்மையும் பரவுகின்றன, மேற்கத்திய மருத்துவத்தை புரக்கணிக்கவேண்டும் என்றெல்லாம் காந்தி கட்டுரைகள் எழுதினார். நீதிமன்றங்களை முழுவதும் புறக்கணிக்கவேண்டும், வக்கீல் தொழில் விபச்சாரத்துக்கு சமம், அந்த தொழிலையே இந்தியர்கள் செய்யக்கூடாது என்றும் ஆக்ரோஷமாக வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் அப்படியே செய்தனர்,. ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், மௌலானா அபுல் கலாம் ஆசாத் தங்கள் செல்வமீட்டும் வக்கீல் தொழிலை தியாகம் செய்தனர்.  ஆனால் காங்கிரசுக்கு வெளியே இருந்த இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள் இதை ஏற்கவில்லை. தங்கள் வக்கீல் தொழில்களை விடவில்லை – முகமது அலி ஜின்னாவும். பீமராவ் அம்பேத்கரும்.

தாகூர காந்தியின் வாதத்தை ஆவேசமாக எதிர்த்தார். பரந்த மனப்பான்மை வேண்டும் இப்படி குறுகிய சித்தாந்தம் தகாது என்று காந்தியை சாடினார். “அனைத்து நாட்டு கலாச்சார காற்றும் இந்தியா எனும் இல்லத்தில் ஜன்னல்கள் வழியே வீச வேண்டும். ஜன்னலடைத்த ஒரு சித்தாந்த சிறைச்சாலையாக இந்தியா மாறிவிட கூடாது,” என்றார் தாகூர்.
சுதந்திரம் கிடைக்கும் வரை காந்திவழி சென்ற நேருவும், காங்கிரசும், 1947க்கு பின் இந்த கொள்கையில் தாகூரையே பின்பற்றியது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது தேசிய மொழி ஹிந்தியா சம்ஸ்கிருதமா என்ற ஒரு வாதம் நடந்தது. சம்ஸ்கிருதத்தை ஆச்சாரமான ஹிந்துக்கள் தான் ஆதரித்தனர் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அம்பேத்கரும், நாம் மறந்துவிட்ட முஸ்லிம் ஒருவரும் சம்ஸ்கிருதமே கல்வியிலும் பாண்டித்தியத்திலும் தொன்மை மரபுள்ள மொழி, ஹிந்தி ஒரு கடைத்தெரு பேச்சு மொழி மட்டுமே, ஹிந்தியில் சட்ட நூல்கள், அறிவியல் நூல்கள் ஏதுமில்லை என்று பறைசாற்றினர். ஹிந்தியை தாய்மொழியாய் கொண்டவர்கள் மற்ற தாய்மொழி பேசுவோரை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தும் நிலைமை நாட்டில் அமையக்கூடாது என்றும் அவர்கள் வாதாடினர். சம்ஸ்கிருதம் அனைவருக்கும் கற்க கடினம் என்பதால் அதில் அந்த பிரச்சனை இல்லை என்றனர்.

தேசிய மொழி விவகாரம் அரசியலமைப்பு பேரவையில் வாக்கெடுப்பில் முடிந்தது. இரண்டு மொழிகளும் சமமாக வாக்குகள் பெற்றன. தன் தலைமை வாக்கை ஹிந்தி மொழிக்கு ராஜேந்திர பிரசாத் அளித்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியானது.

நணபர் பாலாஜி தண்டபாணி இந்த தகவலை அனுப்பினார்.

அன்புள்ள கோபு, அரசியலமைப்பு பேரவையில் சம்ஸ்கிருதத்திற்கு குரல் கொடுத்த முஸ்லிம் மேற்கு வங்காளத்தின் நிஸாமுதின் நஸிருத்தின் அகமது. அவையில் அவர் சொன்னது:

“ஒரு மொழியை தேர்ந்தெடுத்தால் உலகின் மிக சிறந்த மொழியை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவுக்கு வெளியே சம்ஸ்கிருதத்திற்கு எத்தனை மரியாதை இருக்கிறது என்பதை இந்தியர்கள் அறியாதது மிகவும் வருத்தமான நிலைமை. ‘சம்ஸ்கிருதம் ஈடு இணையில்லாத செல்வமும் தூய்மையும் கொண்ட மொழி,’ என்று டபிள்யு. சி. டெய்லர் கூறுகிறார். இதுவே உலகின் அதன் அந்தஸ்துக்கு சான்று.”

இன்னுமொரு தகவல். மதறாஸ் மாநில உறுப்பினர் டாக்டர் பி. சுப்புராயன், லத்தீன எழுத்தமைப்பில் (தேவநாகரி அல்ல) ஹிந்தி மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்று வாதிட்டார்!

ஒரு நாட்டை ஆளும் வர்கங்கள் தங்களை சிறப்பித்தும் தமக்கு முந்தியவரை தாழ்த்தியும் பேசுவது உலக வழக்கம்.
நம் பல்வேறு பிரச்சினைகளுக்கு 1947ல் பெற்ற சுதந்திரத்தின் பின்னும் ஆங்கிலேயர்களை பழி சொல்கிறோம். ஆனால் அவர்கள் செய்த மிகச்சிறந்த நற்காரியங்களை விட்டுவிடுகிறோம். நம் ஆட்சி முறை, சட்டம், நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை, மருத்துவம், ராணுவம் என்று அனைத்தும் ஆங்கில ஐரோப்பிய தழுவல்களாக வைத்துக்கொண்டு இந்த மாதிரி வாதங்கள் அபத்தமானவை.

நாம் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்கின்றன

குறிப்பு, ஏப்ரல் 29, 2020. திரு “ஒத்திசைவு” ராமசாமி அவர்களின் விளக்கத்தை இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் இன்று படித்தபின், மேற்கு வங்காள உறுப்பினரின் பெயர் நஸிருத்தின் அகமது (நிஸாமுத்தின் அல்ல) என்று தெரிந்து கொண்டேன். திருத்தி விட்டேன்.

அவரது மிக விவரமான பின்னூட்டத்தை படிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

சுட்டிகள்


Tuesday, 21 April 2020

Index of Sanskrit essays

On Education - A Sanskrit proverb

Linguistics
Mallinga, Mark Antony and Sanskrit
Macaulay - Sanskrit and English
A history of Kanchipuram

Epigraphy
The Asiatic Society of Bengal - Rediscovery of Indian History, Brahmi, Asoka
Calligraphic inscription in Kanchi Kailasanatha temple
RajaSimha Pallaveshvaram - learning Pallava grantham
Decoding Rajasimha - a stanza from Rajasimha's Kailasanatha inscription
Pallava Grantham Alphabet as found in Kanchi Kailasanatha
Atyantakaama Pallava's poem in Mamallapuram - a musical experiment
A history of the Pallava Grantham script
Atiranchanda Surprise - Babington's gift
Pallava Grantha An instructional course

Astronomy
Some slokas of Indian astronomy
Mathematics - Sanskrit vocabulary and English translation
Varahamihira's eclipse proof
Manjul Bharagava on Mathematics in Sanskrit 
My Astronomy Essays

Other
Manu Smriti, Purananuru, and Arthur Laffer's Economics 

கல்வெட்டு
காஞ்சி கைலசாநாதர் கோவிலில் பல்லவ கிரந்த லிபி
அசோகத்தூண் கண்டெடுத்த காதை 

கலை
மாந்தாதா - அமராவதி சிற்பமும் வடமொழி கவிதையும்

மொழியியல்
மெக்காலே -  கல்வி மொழி - சம்ஸ்கிருதமா ஆங்கிலமா?

இலக்கியம்
வராஹமிஹிரனின் அகத்தியர் துதி
ஸமஸ்கிருதம் புறிகிறதே
மண்ணை பிழிந்து எண்ணை எடுக்கலாம் - தமிழில் பர்த்ருஹரி கவிதை
எல்லீசனின் தமிழ்-சமஸ்கிருத கவிதை
கல்வி – ஒரு வடமொழி பழமொழி
பல்லவ கிரந்தம் வகுப்பு

Saturday, 1 February 2020

Pallava Grantham classes பல்லவ கிரந்த லிபி வகுப்பு


Announcing third batch of Pallava Grantham classes. The venue is a hall in Kodambakkam. There will not be any live webcast or video recording, you will have to attend in person.

There will be homework every week. This course only teaches the Pallava Grantham script as seen in Mamallapuram and Kanchi Kailasanatha temple, not the later Grantham scripts including that of modern era. It is a course in the script only, not the Sanskrit language.

A prerequisite for participants is knowledge of either Tamil script or Devanagari script. Contact details in the poster.
Pallava Grantham inscription in Kanchi Kailasanatha temple

பல்லவ கிரந்த லிபி வகுப்புகள் எட்டு வகுப்புகள் ஞாயிற்றுகிழமை காலைகளில் வரும் பிப்ரவரி ஒன்பதாம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் தொடங்கும். நேரலை ஒளிபரப்போ வீடியோ பதிவோ ஏதுமில்லை; நேரில் வருபவர்களுக்கு மட்டுமே பாடங்கள்.

வாராவாரம் வீட்டுப்பாடம் தரப்படும். இந்த வகுப்பில் மாமல்லபுரத்திலும் காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும் காணப்படும் பல்லவ கிரந்த லிபி மட்டுமே கற்றுவிக்கப்போம். பிற்கால கிரந்த லிபியோ, நவீன கிரந்தமும் இல்லை. இது லிபி வகுப்பு மட்டுமே, சம்ஸ்கிருத மொழி வகுப்பு அல்ல.

கற்க விரும்புவோருக்கு, தமிழ் எழுத்து அல்லது தேவநாகரி எழுத்து முறையில் ஒன்றாவது தெரிந்திருக்க வேண்டும். படத்திலுள்ள அழைப்பில் தொடர்புக்கான தகவல்களை காணலாம்.



2 Feb 2020 Edited to use far more elegant poster designed by VSS Iyer















Monday, 21 March 2016

வராகமிஹிரரின் கிரகணச் சான்று

The English version of this essay is here

வராகமிஹிரர்அறிவியல் மேதையா, பழைய கர்ணாடகமா? விவாதிக்க வேண்டிய கேள்வி. மகாராஜாக்களில் ஆரம்பித்து மாடு, குரங்கு வரை சகல ஜீவராசிகளின் தலையெழுத்தையும் கிரகங்கள்தான் நிர்ணயிக்கின்றன என்று வகுத்து சொன்ன வராகமிஹிரரையும் ஒரு மோசமான கண்கட்டி வித்தைக்காரர் என்றுதான் ஒதுக்க வேண்டியிருக்கும்.அவரும் மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன ஜோதிடரில் ஒருவர்தானோ?

எதையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்த்து பழகி, வியந்து பாராட்டும் சமகால வானியல் மற்றும் கணித ஆர்வலர்களைப்போல் நானும் ஆர்யபடரையும் பாஸ்கரரையும் மட்டும் புகழலாம். அவர்களது நுண்ணிய கணித சூத்திரங்களில் நெகிழலாம். வராகமிஹிரரைஒரு ஜாதக பட்டிக்காடு என்று நமட்டு சிரிப்புடன் ஓரங்கட்டி அவர் இயற்றிய பஞ்சசித்தாந்திகத்திலும், பிரிஹத் சம்ஹிதையிலும் செய்தவற்றை பித்தலாட்டம் என்று பகடி செய்யலாம்.

இந்திய வானியலை, குறிப்பாக ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை குறை கூறி, அறிவியலை உயர்த்திப்பிடித்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்த்து. நான் மறுத்துவிட்டேன். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் ஜோதிடத்தை நம்புவோரை காயப்படுத்துவதில் விருப்பமில்லை (நையாண்டி செய்வேன்; அது வேறு). நான் புரிந்து கொண்டதை, மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அதன் மூலம் சிலருக்கு இத்துறையில் ஆர்வம் பிறந்தால் சந்தோஷம்.

வராகமிஹிரர் சர்வ நிச்சயமாக ஒரு முழுமையான இந்திய வானியலாளர் என்று சொல்ல முடியும். வானியலில் அவரது அசாத்திய பங்களிப்பை வைத்தே இதை முடிவு செய்துவிடலாம். வராகமிஹிரர் எழுதிய ப்ரஹத் சம்ஹிதா, விரிவான ஒரு ஒரு கலைக்களஞ்சியம். சுருக்கமான விவரணைகளுக்கு பிரசித்தி பெற்ற ஆர்யப்படரின் ஆர்யபடீயம் எனும் ஆர்ய அஷ்டஷதம் போன்றதல்ல இது.

வராகமிஹிரர் வாழ்ந்த காலத்தில் புகழ்பெற்றிருந்த ஐந்து முக்கியமான வானியல் நூல்களை (சித்தாந்தங்களை) ஒப்பிடும் நூலே பஞ்ச சித்தாந்திகை. ஆனால் அவரது சம காலத்தில் வாழ்ந்த ஆரியபடர் இயற்றிய ஆரியபடீயம் இத்தகைய ஐந்து சித்தாந்தத்தில் ஒன்றல்ல!

ஆரியபடீயமே இன்றுவரை அதிகளவில் விவாதிக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட இந்தியப் புத்தகமாககருதப்படுகிறது. அதில் சொல்லப்பட்ட சூத்திரங்களும், நெறிமுறைகளும் காலாவதி ஆனபின்னரும் பதிநான்காம் நூற்றாண்டுவரை ஆரியபடத்திற்கு பல விளக்க உரைகள் எழுதப்பட்டன. அதில் சொல்லப்பட்டவற்றில் சில விஷயங்கள் தவறென்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஒருசில விஷயங்கள் பின்னாளில் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைக்காக ஆர்யபடர் கொண்டாடப்படுகிறார். ஆனால் ஆர்யபடரின் விவரணைகளில் எந்தவொரு வலுவானசான்றும் நிரூபணமும் இல்லை. ஓரிருவரை தவிர, அவருக்குப் பின்னர் வந்த இந்திய வானியலாளர்களும்  விஞ்ஞான ரீதியாக விளக்குவதற்கு முயற்சி செய்ததில்லை. ஒருவேளை தங்களுடைய மாணவர்களுக்கு மட்டும் சொல்லித் தரப்பட்டு, நூலாக எழுதப்படாமல் விடப்பட்டிருக்கலாம். கணித்த் துறையின் தேற்றங்களும் நிரூபணங்களும் கிரேக்கத்தின் கொடை என்றே சொல்லவேண்டும். 

இந்நிலையில் வராகமிஹிரரின் கிரகணச் சான்று, நண்பகல் சூரியனைப் போல் பிரகாசிக்கிறது.அவரது ப்ருஹத் சம்ஹிதையில் வர்ணித்துள்ள கிரகணச் சான்று,  பாமரனாலும் புரிந்து கொள்ள முடியும். கிரகணம் என்னும் மூடநம்பிக்கைகளில் தொலைந்து போன ஒரு வானியல் அற்புதத்தை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கியிருக்கிறார்.

கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சம்பந்தப்பட்ட புராணக்கதை என்பதல்ல. பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதாலும், பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் வருவதாலும் நிகழும் நிழல்களின் விளைவே. இதைத்தான் வராகமிஹிர   ர் தர்க்க ரீதியாக விளக்கியிருக்கிறார். பின்னர் வந்த பிரம்மகுப்தர், தன்னுடைய முன்னோடிகளான ஆர்யபடரையும் விஷ்ணுசந்திரரையும் சலிக்காமல் வெளுத்துவாங்கினார். குட்டினாலும் மோதிர குட்டு; திட்டினாலும் இலக்கிய திட்டு என்பார்கள். அதுபோல் அல்லாமல் இயல்பான நடையில், யாரையும் பழிக்காமல், மரபையும் இழிக்காமல் கூறியிருப்பதுதான் வராகமிஹிரரின் சிறப்பு.

ராஹுசாரம் என்னும் பிரிவில் வரும் ஒரு சில ஸ்லோகங்களை இங்கே மேற்கொள் காட்டியிருக்கிறேன். வடிவியல், திசை, நேரம், அளவு மாறுபாடு ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாக வைத்து கிரகண நிகழ்வை விளக்கும் ஸ்லோகங்கள் இவை.

वृक्षस्य स्वच्छाया यथैकपार्श्वे भवति धीर्घचया।
निशिनिशि तद्वद्भूमेरावरणवशाद्दिनेशस्य॥
வ்ருʼக்ஷஸ்ய ஸ்வச்சா²யா யதை²கபார்ஸ்²வே பவதி தீர்கசயா |
நிஸி² நிஸி²தத்³வத்³ பூமேராவரணவஸா²த்³ தி³னேஸ²ஸ்ய ||

பதம்பிரிப்பு வ்ருʼக்ஷஸ்ய (விருட்சத்தின்ஸ்வச்சா²யா (சொந்தநிழல்) யதா²(எவ்விதம்) ஏகபார்ஸ்²வே (ஒருபக்கம்) தீர்கசயா(நீளநிழல்வதி(ஆகிறதோ)
நிஸி²நிஸி²(இரவுக்கிரவு) தத்³வத்³(அவ்விதம்) பூமே(பூமியின்) ஆவரணவஸா²த்³(மூடுகிறதுதி³னேஸ²ஸ்ய (சூரியனுடைதை)

பொருள் விளக்கம் ஒரு மரத்தின் மீது சூரிய ஒளி படும்போது, மறுபக்கம் மரத்தின் நிழல் விழுகிறது. விழும் நிழலானது, மரத்தை விட அளவில் பெரிதாக இருக்கிறது. அதே போல் சூரியனின் வெளிச்சம் படும்போது பூமியின் நிழலும் அண்டவெளியில் வீழ்கிறது. என்னவொரு எளிமையான, ஆழமான விளக்கம்.

भूच्छायां स्वग्रहणे भास्करमर्कग्रहे प्रविशतिन्दुः।
प्रग्रहणमतःपश्च्चान्नेन्दोर्भानोश्चपूर्वार्द्धात्॥
பூச்சா²யாம்ʼ ஸ்வக்³ரஹணே பாஸ்கரமர்கக்³ரஹே ப்ரவிஸ²திந்து³​: |
ப்ரக்³ரஹணமத​: பஸ்²ச்சான்னேந்தோ³ர் பானோஸ்² ச பூர்வார்த்³தாத் ||

பதம்பிரிப்பு பூ(பூமி) சா²யாம்ʼ(நிழலை) ஸ்வக்³ரஹணே (தன்கிரகணத்தில், அதாவது, சந்திரகிரகணத்தில்) பாஸ்கரம (சூரியனை, அதாவதுசூரியனின்பிம்பத்தை) அர்கக்³ரஹே (சூரியகிரகணத்தில்) ப்ரவிஸ²த் (நுழைகிறது) இந்து (சந்திரன்)
ப்ரக்³ரஹணம(கிரகணம்) அத:(அதனால்) பஸ்²ச்சாத்(மேற்கிலிருந்து) (இல்லை) இந்தோ³(சந்திரன்) பானோ(சூரிய) (மற்றும்) பூர்வார்த்³தாத்(கிழக்கிலிருந்து)

பொருள் விளக்கம் சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் விழம் பகுதிக்குள் சந்திரன் பிரவேசிக்கிறது. அதே போல் சூரிய கிரணகத்தின்போது, சூரியனின் பிம்பவட்டத்தில் சந்திரன் பிரவேசிக்கிறது. ஆகவே சந்திர கிரகணம் மேற்குப்பகுதியில் ஆரம்பிப்பதில்லை. அதே போல் சூரிய கிரகணமும் கிழக்குப் பகுதியில் ஆரம்பிப்பதில்லை.


சந்திர கிரணகத்தின் போது கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரிய கிரகணத்தின்போது மேற்கிலிருந்து கிழக்காகவும் கிரகணங்கள் நிகழ்வதை திசைகளை அடிப்படையாக வைத்து விளக்குகிறார். சந்திர கிரகணம் கிழக்கிலிருந்து மேற்காக நிகழ்கிறது. சூரிய கிரணகத்தின்போது, மேற்கிலிருந்து கிழக்காக சந்திரன் பூமியை மையமாக வைத்து சுற்றிவருவதால் சூரியனின் மேற்குப்பகுதியிலிருந்து கிரகணம் ஆரம்பிக்கிறது. 


आवरणंमहदिन्दोः कुण्ठविषाणस्ततोऽर्द्धसञ्छन्नः।
स्वल्पं रवेर्यतोऽतस्तीक्ष्णविषाणो रविर्भवति॥
ஆவரணம்ʼ மஹதி³ந்தோ³​: குண்ட²விஷாணஸ்ததோ ()ர்த்³ஸஞ்ச²ன்ன​: |
ஸ்வல்பம்ʼ ரவேர்யதோ()தஸ்தீக்ஷ்ண விஷாணோ ரவிர் பவதி ||

பதம்பிரிப்பு ஆவரணம்ʼ(மூடுவது) மஹத்³(பெரிது) இந்தோ³​: (சந்திரனை) குண்ட²(மொக்கை) விஷாண(கொம்பு) ததோ(ஆதலால்) அர்த்³ஸஞ்ச²ன்ன​: (பாதிமூடியுள்ளது)
அல்பம்ʼ (சிறிது) ரவே (சூரியனின்) யதோ (ஏனெனில்) அத: (அதனால்) தீக்ஷ்ண (கூர்ந்த) விஷாணா: (கொம்புகள்) ரவி:(சூரிய) வதி(ஆகிறது)

பொருள் விளக்கம் சந்திரனை விட பூமியின் உருவம் பெரிதாக  இருப்பதால், கிரகணக்கொம்புகளின் விளிம்புகள் தெளிவாக இருப்பதில்லை. அதே சமயம், சூரியனை மறைக்கும்போது சந்திரனின் உருவம் சிறியது என்பதால், கிரகணக் கொம்புகளின் விளிம்புகள் பளிச்சென்று தெரிகின்றன.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் வெவ்வேறு அளவுள்ள கோள்கள் என்பதை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட விளக்கம். சூரியனையோ, சந்திரனையோ மூடும்போது வெளிப்படும் வட்டத்தின் ஓரப்பகுதியை கொம்புகள் என்கிறார் ஆசிரியர். படத்தில்காணலாம்முக்கால்வட்டம் நிழலிலிருக்க, சிவப்பாய் தெரியும் பகுதி மாட்டுக் கொம்பை போல் உள்ளதால் கொம்பு என்றே அழைக்கப்படுகிறது. குண்டவிஷானா, தீக்ஷனவிஷானா என்பவை சமஸ்கிருதத்தில் ஜோதிடர் புனைந்த அழகான அறிவியல் வார்த்தைகள். மூன்று கோள்களும் வெவ்வேறு உருவ அளவை கொண்டுள்ளன என்பதை திட்டவட்டமாக இங்கே விளக்கியிருக்கிறார். சந்திரனின் அளவு சிறியது. பூமியின் நிழலோ பெரியது. அளவு மாறாத ராகுவால் விழுங்கப்பட்டால் நிழல்களும் கொம்புகளும் வேறுபடுமா?

சூரியனின் கொம்பு - படம்: விஜய்குமார் (PoetryInStone)
இன்னொரு சுவராசியமான விஷயம். வராகமிஹிரர் கேது என்ற சொல்லை கிரகணத்திற்கு சொல்வதில்லை. தூமகேது என்று, வால்மீனுக்கு மட்டும் சொல்கிறார்.

ராகு என்னும் பாம்பை பற்றிய கதைகளுக்கு பஞ்சமில்லை. ராகுவிற்கு தலையும், வாலும் உண்டு. ராகு ஒரு உருவமுள்ள பாம்பு. கருப்பாக இருக்கும். கிரகண நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் கண்ணுக்குத் தெரியாது. இப்படி ஏராளமான கதைகள் உண்டு. சமணர்களின் வானியலில் இரண்டு ராகு உண்டு.

यदि मूर्त्तो भविचारी शिरोऽथवाभवति मणडली राहुः।
भगणार्द्धेनान्तरितौ गृह्णाति कथं नियतचारः ॥
யதி³மூர்த்தோ பவிசாரீ ஸி²ரோ ()²வா பவதி மணட³லீ ராஹு​: |
³ணார்த்³தேனாந்தரிதௌ க்³ருʼஹ்ணாதி கத²ம்ʼ  நியதசார​: ||

பதம்பிரிப்பு யதி³(ஆகுமாயின்) மூர்த்தோ (உருவம்) விசாரீ(வானில்ஊர்பவன்) ஸி²ரோ(head) ()²வா(எனின்) வதி(ஆகிறது) மணட³லீ(வட்டத்தை) ராஹு:
³ணார்த்³தே (பாதிவானத்தால்) அந்தரிதௌ(இடைவெளிபட்ட) க்³ருʼஹ்ணாதி(கவ்வுவது) கத²ம்ʼ (எவ்விதம்) நியதசார​:(விதிவழிசெல்வோன்)

பொருள் விளக்கம் ராகுவுக்கு உருவம் இருந்தால், தலையை வைத்து அடையாளம் காணமுடியும். விண்வெளியில் எதிரெதிரே இருக்கும் சூரியனையும், சந்திரனையும் கணிக்க முடிந்த நேரத்தில் எப்படி தாவிப்பிடிக்க முடியும்? அதாவது, கணிக்கக்கூடிய வட்டத்தில் மட்டும் பாம்பு ஊர்வது ஏன்?

अनियतचारः खलुचेदुपलब्धिः संख्यया कथं तस्य ।
पुच्छाननाभिधानोऽन्तरेण कस्मान्नगृह्णाति॥
அனியதசார​: ²லுசேது³பலப்³தி⁴​: ஸங்க்²யயா கத²ம்ʼ  தஸ்ய |
புச்சா²னனாபிதானோ ()ந்தரேண கஸ்மான்ன க்³ருʼஹ்ணாதி ||
பதம்பிரிப்பு அனியதசார​:(விதிவழிசெல்லாதான், அதாவதுதன்னிச்சையானவன்) ²லுசேது³பலப்³தி⁴​: (கிடைக்கும்) ஸங்க்²யயா(கணித்து) கத²ம்ʼ(எவ்விதம்) தஸ்ய(அதனை)
புச்சா²(வால்) ஆன்ன(முகம்) அபிதானோ(பெயர்களை) அந்தரேண (நடுவில்) கஸ்மாத்(எவ்விதம்) நக்³ருʼஹ்ணாதி(கவ்வுதில்லை)

பொருள் விளக்கம் கணிக்கக்கூடிய வட்டத்தில் ராகு ஊர்வதில்லை எனில் கிரகண காலங்களை எப்படி முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிகிறது? ராகுவுக்கு தலையும், வாலும் மட்டும் இருந்தால், விண்ணில் எதிரெதிராய் சூரியனும் சந்திரனும் இருக்கும்போது மட்டும் கவ்வி, வேரெங்கும் இருக்கும்போது ஏன் கவ்வுவதில்லை?

अथ तु भुजगेन्द्ररूपः पुच्छेन मुखेन वास गृह्णाति ।
मुखपुच्छान्तरसंस्थं स्थगयति कस्मान्नभगणार्द्धम्॥
அத² து புஜகே³ந்த்³ர ரூப​: புச்சே²னமுகே²ன வாஸ க்³ருʼஹ்ணாதி |
முக²புச்சா²ந்தரஸம்ʼஸ்த²ம்ʼ ஸ்த²³யதி கஸ்மான்ன ப³ணார்த்³ம் ||
பதம்பிரிப்பு அத²து(ஒருக்கால்) புஜகே³ந்த்³ரரூப​: (நாகராஜரூபன்) புச்சே²னமுகே²(வாலாலும்முகத்தாலும்) (அவன்) க்³ருʼஹ்ணாதி(கவ்வுகிறான்)
முக²புச்சா²ந்தரஸம்ʼஸ்த²ம்ʼ (முகத்திற்கும்வாலிற்கும்இடையுள்ளபகுதி) ஸ்த²³யதி(மூடுவது) கஸ்மாத்(எவ்விதம்) (அல்ல) ³ணார்த்³ம்(பாதிவானத்தை)

பொருள் விளக்கம் ராகு ஒரு முழுமையான பாம்பாக இருப்பின் வாயாலும், வாலினாலும் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் போதுசூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவிலுள்ள அனைத்து விண்மீன்களையும் ஏன் அவன் உடலின் நிழலில் மறைவதில்லை?!

राहुर्द्व्यंयदिस्याद्ग्रस्तेस्तमितेऽथवोदितेचन्द्रे।
तत्समगतिनान्येनग्रस्तः सूर्योऽपिदृश्यते॥
ராஹுர்த்³வ்யம்ʼ யதி³ஸ்யாத்³ க்³ரஸ்தேஸ்தமிதே ()²வோதி³தே சந்த்³ரே  |
தத் ஸமக³தி னான்யேன க்³ரஸ்த​: ஸூர்யோ ()பி த்³ருʼ்யதே ||
பதம்பிரிப்பு ராஹுர்த்³வ்யம்ʼ(இருராகுகள்) யதி³ஸ்யாத்³(இருப்பின்) க்³ரஸ்தே(கவ்வும்கால்) அஸ்தமிதே(சாயும்காலமோ) அத²வா(அல்ல) உதி³தே (உதிக்கும்காலமோ) சந்த்³ரே(சந்திரனை)
தத்(அந்த) ஸமக³தி(சேர்ந்துசெல்லும்) அன்யேன(மற்றதால்) (அல்ல) க்³ரஸ்த​: (கவ்வுவான்) ஸூர்ய:(சூரியன்) அபி(கூட) த்³ருʼ்யதே(காணப்படுகிறான்)

பொருள் விளக்கம் இரண்டு ராகு பாம்புகள் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். ஒரு ராகு சந்திரனை விழுங்கும்போது, வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு ஏன் இன்னொரு ராகு சூரியனை விழுங்க முயற்சிக்கக்கூடாது?

எந்த அடிப்படையில் பார்த்தாலும் கிரகணங்கள் நிகழ்வது என்பது பாம்பு விழுங்கும் கதையல்லஎன்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் வராகமிஹிரர்.

வாஸ்கோடகாமாவும் அவரைத் தொடர்ந்து ஐரோப்பியர்களும் இந்தியாவுக்குள் கரையேறும்வரை காகிதம் பற்றி இந்தியருக்கு தெரியாது. அதுவரை காகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதில்லை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் காகிதம் நம்மூரில் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது. அதுவரை எழுதுவதற்கு கிடைத்தவை வெறும் ஓலைச்சுவடிகளும், மரப்பட்டைகளும்தான்.விண்ணியலும் கணிதமும் பாடமாக குழந்தைகளுக்கு சொல்லித் தரப்பட்டதில்லை. பண்டிதருக்கும் இவற்றை புரிந்து கொள்வது எளிமையல்ல. வராகமிஹரரின் விளக்கங்கள், விண்ணியல் பண்டிதருக்கு மட்டுமே. ஆகவே,பொதுமக்கள் மத்தியில் பாம்பு விழுங்கும் கதை உயிர்ப்போடு இருந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

ஐரோப்பியர்கள் சொல்லித் தந்த பாடத்தையே திரும்பத் திரும்ப பாடநூல்களில் படிக்கிறோம். பெரும்பாலான அறிவியல் ஆசிரியர்களுக்கு சம்ஸ்கிருத அறிவியல் நூல்களின் கருத்துகள் ஏதும் தெரியாது. ஆர்யப்பட்டரை தவிர மற்ற இந்தியவிண்ணியல் பண்டிதர்கள், ஜோதிடம் வகுத்துத் தரும் மூடநம்பிக்கையாளர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். வைதீக வழிவந்த வராகமிஹிரரால்தான் கிரகணம் குறித்த விஞ்ஞான ரீதியான விளக்கம் தரப்பட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நீங்கள் அறிவியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தால் இவற்றையெல்லாம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேருங்கள்.

பிருஹத் ஸம்ஹிதத்தை புரிந்துகொள்ள ராமகிருஷ்ண பட்டரின் ஆங்கில மொழிபெயர்ப்பும், 1885இல் சிதம்பரம் ஐயர் எழுதிய மொழிபெயர்ப்பும் எனக்கு உதவியது. கணிதர் “நகுபோலியன் பாரதி பாலு” பாலசுப்ரமணியனோடு சென்னை அடையாறு கே.வி. சர்மா நூலகத்தில் இதை கலந்து பேசியது மிகவும் உதவியது.

ஆங்கிலத்தில் நான் எழுதியதை சிறப்பாக பொறுமையாக தமிழில் மொழிபெயர்த்த ஆசிரியர் “ரஜினி ராம்கி” ராமகிருஷ்ணனுக்கு நன்றி நன்றி நன்றி. சமீபத்து சூரிய கிரகணத்தின் படம் தந்த சிங்கப்பூர் விஜய்குமாருக்கும் நன்றி.

விண்ணியல் கட்டுரைகள்


சில விண்ணியல் ஸ்லோகங்கள் – பொருள் விளக்கம்
VarahaMihira's Eclipse Proof
பாதமியில் ராம்கியும் நானும் - ஜனவரி 2016

Sunday, 8 November 2015

கல்வி – ஒரு வடமொழி பழமொழி


आचार्यात् पादं आदत्ते पादं शिष्य स्वमेधया ।
पादं सब्रह्मचारिभिः पादं कालक्रमेण च ॥
ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் ஷிஷ்யஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச
Aacaaryaat paadam adattE paadam shishyasvamEdayaa
paadam sabrahmacaariBhyaH paadam kaalakramENa ca

பாதம் – கால்
ஆசார்யாத் – ஆசாரியிடமிருந்து
ஆதத்தே - பெறப்படுகிறது
ஷிஷ்ய ஸ்வமேதயா – மாணவனின் சுய அறிவால்
ஸப்ரஹ்மசாரிப்ய: - சக மாணவனிடமிருந்து
கால க்ரமேண – அனுபவத்தால்

கல்வி எப்படி பெறுகிறோம்?

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததோர் கல்வியும் மனப்பழக்கம்”
என்றாள் ஔவை. மேல் கோளிட்ட சமஸ்கிருத பழமொழி கல்வி பெறும் முறையை நான்காய் பிரிக்கிறது.

ஒருகால் ஆசான் கற்பித்தும் ஒருகால் மாணவன் முயற்சித்தும்
ஒருகால் தோழன் சொற்பித்தும் ஒரு கால் காலம் பயணித்தும்”
என்பதே இதன் பொருள்.

நண்பர் சுதர்சனத்தின் தமிழாக்கம்
கானமாசான் காற்றம்மால் காலுடன் உற்றவரால் காலமாசான் மீதிக்கறிவு

பதம் பிரிப்பு
கால் நம் ஆசான் கால் தம்மால் கால் உடன் உற்றவரால்  
காலம் ஆசான் மீதிக்கு அறிவு

வடமொழி கவிதைகள்


கட்டுரை


Tuesday, 8 September 2015

Pallava Grantha Alphabet in Kanchi Kailasanatha temple

This is a subset of the full alphabet, in the Pallava Grantha script, as inscribed in RajaSimha Pallaveshvaram, better known as the Kanchi Kailasanatha temple. Not every letter is inscribed here. I have included only vowels (swara) and consonants (vyanjana) but not conjunct consonants.

I have cut and pasted individual letters from photos that I have taken. I am neither an archaeologist nor an epigraphist, so there may be mistakes.


Pallava Grantha from mini shrines
with Devanaagari equivalents



Pallava Grantha with Roman / Tamil equivalents

Grantha Consonants Inner wall with Roman 

Pallava Grantha consonants with diacriticals 
with Devanagari equivalents

Notes

27 March 2018
Updated Minishrine grantha alphabets (Devanagari, Tamil/Roman)
Added Inner wall Grantha consonants 

Related Posts

1. Decoding Rajasimha's inscription
2. Calligraphic Nagari in Kanchi Kailasanatha temple
3. Sri RajaSimhaPallaveshvaram - श्रीराजसिंहपल्लवेश्वरम्