Showing posts with label சுதர்சனம். Show all posts
Showing posts with label சுதர்சனம். Show all posts

Tuesday, 30 November 2021

அன்னப் பறவையின் புகழ்

मत्स्यापि विजानन्ति नीर क्षीर विवेचनम्

प्रसिद्धम् राजहंसस्य पुण्यै परै: अवाप्यते

மத்ஸ்யா-அபி விஜாநந்தி நீரக்ஷீர விவேசனம்
ப்ரஸித்தம் ராஜஹம்ஸஸ்ய புண்யை: பரை: அவாப்யதே

அன்னப்பறவை ஓவியம்
துக்காச்சி கோவில், கும்பகோணம் மாவட்டம்
 

மேல்கண்ட சுபாஷிதம் (வடமொழியில் பழமொழி) நகுபோலியன் எனும் பாலு சார் கற்றுத் தந்தது. ஏனோ திடீரென்று தோன்றியது, தமிழில் ஒரு கவிதையாய் புனைந்து நண்பர் திவாகர தனயனுக்கு வாட்சாப்பில் அனுப்பினேன். இதோ என் கவிதை
பால் வேறு தண்ணீர் வேறு
பாங்கறியும் மீனும் அன்றோ
புகழ் சென்றது அன்னம் தேடி
பூர்வீக புண்ணியம் என் கொல்

பதம்பிறிப்பு
மத்ஸ்யா: மீன்
அபி: உம் விகுதி
விஜாநந்தி -அறியும்
நீர - நீர்
க்ஷீர - பால்
விவேசனம் - வேற்றுமை
ப்ரஸித்தம் - புகழ்
ராஜஹம்ஸஸ்ய - ராஜ அன்னத்திற்கு
புண்யை: -புண்ணியம்
பரை: -பூர்வீகத்தில்
அவாப்யதே - பெற்றது

பதிலுக்கு ஆசுகவி இந்த கவிதையை சில நிமிடங்களில் புனைந்து எனக்கு அனுப்பினார்.
சின்னக் கயலுந்தன் சிந்தை யறியுமாம்
இன்னவை நீரிவை பாலென்று - மென்றொடீ!
அன்னப் பறவைக்கே அப்புகழ் சேர்ந்ததும்
முன்னைப் பிறவிப் பயன்
அடடா, இதுவன்றோ கவிதை. அவர் மகேந்திர வர்மனை போல் மாறுவேடம் போட்டுக்கொண்டே மயிலையிலும் முகநூலிலும் திரிவதால், இங்கே அவர் கவிதையை பகிற்கிறேன்.

ஹம்ஸ வரி, திருவரங்கம் கோவில்

நான் மொழிபெயர்த்த சில சம்ஸ்கிருத கவிதகள்

ராஜசிம்ம பல்லவன் - கல்வெட்டு
கணகன் மகாவீரன் - கணித வாழ்த்து
வராஹமிஹிரன் - அகத்தியர் வாழ்த்து

Sunday, 8 November 2015

கல்வி – ஒரு வடமொழி பழமொழி


आचार्यात् पादं आदत्ते पादं शिष्य स्वमेधया ।
पादं सब्रह्मचारिभिः पादं कालक्रमेण च ॥
ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் ஷிஷ்யஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச
Aacaaryaat paadam adattE paadam shishyasvamEdayaa
paadam sabrahmacaariBhyaH paadam kaalakramENa ca

பாதம் – கால்
ஆசார்யாத் – ஆசாரியிடமிருந்து
ஆதத்தே - பெறப்படுகிறது
ஷிஷ்ய ஸ்வமேதயா – மாணவனின் சுய அறிவால்
ஸப்ரஹ்மசாரிப்ய: - சக மாணவனிடமிருந்து
கால க்ரமேண – அனுபவத்தால்

கல்வி எப்படி பெறுகிறோம்?

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததோர் கல்வியும் மனப்பழக்கம்”
என்றாள் ஔவை. மேல் கோளிட்ட சமஸ்கிருத பழமொழி கல்வி பெறும் முறையை நான்காய் பிரிக்கிறது.

ஒருகால் ஆசான் கற்பித்தும் ஒருகால் மாணவன் முயற்சித்தும்
ஒருகால் தோழன் சொற்பித்தும் ஒரு கால் காலம் பயணித்தும்”
என்பதே இதன் பொருள்.

நண்பர் சுதர்சனத்தின் தமிழாக்கம்
கானமாசான் காற்றம்மால் காலுடன் உற்றவரால் காலமாசான் மீதிக்கறிவு

பதம் பிரிப்பு
கால் நம் ஆசான் கால் தம்மால் கால் உடன் உற்றவரால்  
காலம் ஆசான் மீதிக்கு அறிவு

வடமொழி கவிதைகள்


கட்டுரை