Thursday 28 April 2016

தொட்டில் பழக்கம்

வருடம் 1970. 

மாலை வேளை. சென்னை மயிலாப்பூரில் ரணாடே நூலகம். பொருளியல் வல்லுனர் மால்கம் ஆதிசேஷையா உரையாற்றவிருந்தார்.

“லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்,” என்று தொடங்கினார். 

திருத்திக்கொண்டார்.

“லேடீ அண்டு ஜெண்டில்மென்,” கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்ணை பார்த்து புன்னகைத்தார்.
கூட்டத்தில்லுள்ளோர் கழுத்தை நீட்டி அந்த பெண்மணியை பார்த்தனர்.

திருத்தம் சீர்திருத்தமானது. 

“கைக்குழந்தையோடு வந்திருக்கும் பெண்மணியே, ஆடவரே,” என்றார். கூட்டம் சிரித்து கைத்தட்டியது.

மால்கம் ஆதிசேஷையா

MIDS

இந்த சம்பவத்தை அடிக்கடி என் தந்தை ரங்கரத்தினம் சொல்லியுள்ளார். அப்பொழுது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர். மயிலாப்பூர் வக்கீல். விவேகனந்தா கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர். வணிகவியல் மாணவர்களுக்கு வணிக சட்டத்தை பாடம் நடத்திய காலம். பொழுது போகாத நேரத்தில் சிறுகதை எழுதுவார். தன் ஒரு சிறுகதை ஆத்ரேயன் என்ற புனைப்பெயரில் ஆனந்த விகடனில் வந்தது என்று பெருமையாக சொல்லுவார். சிறுகதை பெயரோ அச்சில் வந்த வருடமோ இதழோ அவருக்கு நினைவில்லை. 1967 தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினராக அரசியலில் கால்வைத்து, திராவிட அலையில் காலை சுட்டுக்கொண்டார். உவமையை அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.

சுப்ரமணிய பாரதி நிவேதிதாவை சந்தித்த பொழுது, உன் மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்க, அவர் திருதிரு என்று விழிக்க…

ரணாடே நூலகத்தில் கைக்குழந்தை வைத்திருந்த பெண்மணி புஷ்பா. பூவிருந்தவல்லியில் பிறந்த அந்த கோயில் தாயாரின் பெயரை பெற்றவர். 1969 ஏப்ரல் மாதம் கர்பிணியாக பொருளியல் முதுகலை பட்டத் தேர்வை எழுதியிருந்தார்.

புஷ்பா என் தாய். இந்த கதை சொல்லும் ஓவ்வொரு முறையும் அப்பா முகத்தில் கம்பீரம் பொங்கும். அவருக்கு என்றும் மீசையோ முண்டாசோ கிடையாது.

திருமதி புஷ்பா, திரு ரங்கரத்தினம் -
சிஐடி காலனி பள்ளிவிழா தலைமை 1977

எங்கள் குடும்பம் - 1980

மால்கம் ஆதிசேஷையா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS - Madras Institute of Development Studies) செல்லும்போது இந்த கதை ஞாபகம் வரும். அன்று மால்கம் ஆதிசேஷையா பொருளியலை பற்றி என்ன பேசினார் என்று நான் கேட்டதேயில்லை. அப்பாவும் சொன்னதேயில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

Saturday 23 April 2016

ஹிட்லர் மகன்

ஜூன் மாதம். 2010.

“கையில் என்ன புத்தகம்?” அப்பா இரங்கரத்தினம் கேட்டார்.

“இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள். கையெழுத்து வாங்கினேன்.” ஆழ்வார்பேட்டை டேக் செண்டரில் அதிலிருந்து நான்கு சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. திருப்பூர் கிருஷ்ணன் வாசித்த கதையில் உணர்ச்சிவசம் பொங்க, “நான் எழுதியதை வி இவர் வாசித்தது பிரமாதம்,” என்று ஆசிரியர் மெய்ச்சுக்கொண்டார்.

“நாங்க திண்ணைலே உட்கார்ந்திருப்போம், என்ன நல்லா பரிகாசம் பண்ணுவாண்டா அவன்,” என்றார் அப்பா, தமிழில். தன் பள்ளி பிராயத்தை பற்றி பல கதைகள் சொல்லியிருந்தாலும், இ.பா.வுக்கும் தனக்கும் அப்பொழுதே பழக்கம் என்று அவர் சொன்னதாக ஞாபகமில்லை. “அப்பவே நண்பராப்பா?” என்று கேட்டேன். “ஆமாம், அவா சித்தப்பா பாபுவுக்கு டௌன் ஹை ஸ்கூலில் சம்ஸ்கிருத வாத்தியார். உனக்கு தெரியாது?” பாபு அப்பாவின் அண்ணன்.

1993இல் அப்பா, தம்பி ஜெயராமுடன்

சுமார் 2005இல் அப்பாவுடன்
அபார ஞாபக சக்தியுடைய அப்பாவுக்கு டிமென்ஷியா வந்து ஓரிரு வருடங்களாகிவிட்டன. ஆனாலும் பழைய நினைவுகள் பொங்கி வரும். கண்ணும் மங்கிவிட்டது. ஒரு கண்ணில் அறுவை சிக்கிச்சை செய்தாகிவிட்டது. காது சரியாக கேட்பதில்லை. சக்கரை நோயால் நாற்பது வருடம் தவித்தவர், நல்ல வேளை இன்சுலின் ஊசி அரக்கனின் பிடியிலிருந்து தப்பி சமீபமாக மாத்திரை போட்டுக்கொண்டிருந்தார்.

அப்பாவோடு பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி கோபமும் பசியும் வரும். களைப்பில் தூக்கம் வரும். திடீரென்று இந்திரா பார்த்தசாரதி புத்தகம் என்றவுடன் ஏனோ பழைய நினைவுகள் பொங்கிவந்தன. 

அது ஜூன் மாதம். அக்டோபரில் அப்பா காலமாகிவிட்டார்.

அடுத்த வருடம் மார்கழி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சு கச்சேரியை தொடங்கியது. லஸ் ராக சுதா அரங்கத்தில் ஜெயமோகன் உரை. இ.பா. வந்தார். “நான் ரங்கரத்தினம் பையன் சார், என் பேர் கோபு,” என்று அறிமுகம் செய்து கொண்டேன். “அப்படியா, ரங்கரத்தினம் நலமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். “ஐ அம் ஸாரி, போன வருடம் காலமாகிவிட்டார்,” என்றேன். அதிர்ச்சியில் மௌனமானார். சிறிது கழித்து, “நமக்கு தெரிந்தவர் இறந்தார் என்ற செய்தி எப்பவுமே அதிர்ச்சியாக தான் இருக்கிறது,” என்றார்.

ஜூலை 2012 இல் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில், கிருத்திகா எழுதிய “Finger on the Lute” என்ற பாரதி வாழ்க்கை சரித்திரத்டை பற்றி பேச, நான்கு பிரபலங்களையும் என்னையும் எழுத்தாளர் நரசையா அழைத்தார். தீர்த்த கரையினிலே செண்பகத் தோப்பினிலே பேச ஒரு கண்னம்மாவும் என்னை அழைக்கவில்லை. பாரதி பற்றி பாரதி இல்லத்தில் பேசவேண்டுமா?? மார்பு துடித்தது. நூலை படிக்கும் போது கோபுலுவின் ஓவியங்கள் கண்ணையிழுத்தது.

குறித்த நாளில் பாரதி இல்லம் சென்றேன். அங்கு கோபுலுவும் இந்திரா பார்த்தசாரதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கோபுலுவிடம் அந்த புத்தகத்தின் பிரதியை நீட்டி பேராசிரியர் சுவாமிநாதன் கையொப்பம் வாங்கிக்கொண்டிருந்தார். நானும் என் பிரதியை நீட்ட, உங்க பேர் என்ன?” என்றார். “கோபு,” என்றேன். “அப்படியா! என் பேர் கூட கோபுலு,” என்றார். கள்ளமில்ல இதயம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. கோபுலுவை தெரியாதவர்கள் இதை நம்பமாட்டார்கள். தெரிந்தவர்கள் ரசிப்பார்கள்.

இ.பா.விடம் திரும்பினேன். புன்னகைத்தார். மீண்டும் ”ரங்கரத்தினம் மகன்” என்று அறிமுகம் செய்துகொண்டேன். “உனக்கென்று ஒரு தனி அடையாளம் உண்டு,” என்று மின்னல் வேகத்தில் சொன்னார். ஆங்கிலத்தில். அவர் சொன்னது - “You have an identity of your own.”

கோபுலுவின் சொல்லில் தேன் வந்து பாய்ந்தால் இபாவின் சொல்ல்லுக்கு என்ன உவமை சொல்வேன். மூச்சு திணரியது. மேன்மக்கள் மேன்மக்களே. தந்தை சொல்லும் அறிவுரையும், செல்ல கண்டிப்பும், ஒரு ஆழ்ந்த தத்துவமும் பாலும் தெளிதேனும் பாகுமாக கலந்து சங்கத்தமிழொத்த ஆங்கில வாக்கியம். ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி ஒரு தருணம் வரவேண்டும். அப்பாவுக்கு தான் ஞாபகமறதி. பீஷ்மருக்கு இல்லை.

கிருத்திகாவின் மருமகன் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்திய வேளாண்மைக்கு பசுமை புரட்சியை தந்த ஜாம்பவான்களில் ஒருவர். அவர் மனைவியும் கிருத்திகாவின் மகளுமான திருமதி மீனா சுவாமிநாதனே, இவ்விழாவை நடத்த நரசையாவை கேட்டிருந்தார். டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகத்தில் படித்தகாலத்தில் அங்கே நார்மன் போர்லாக் பணிபுரிந்து வந்தார். அவரை போய் பார்த்து பேசவேண்டும் என்று பல முறை ஆசைப்பட்டாலும் பேச போக தைரியமெழவில்லை. என்ன சொல்வேன்? இப்பொழுது எம்.எஸ்.சுவாமிநாதனை பார்த்த பொழுதும் அதே தயக்கம்.

பாரதியின் வரிசு, பாடகர் ராஜ்குமார் பாரதி கோபுலுவோடும் நரசையாவோடும் மேடையேறினர். பாரதி திரைப்படம் எடுத்த ஞானராஜசேகரன் வந்திருந்தார். நண்பர் நாராயணசாமி படங்கள் எடுத்தார்.

பாரதி இல்லத்தில் - கோபுலு, நரசையா, ராஜ்குமார் பாரதி

2012- பாரதி இல்லம் - இ.பா. உடன்
நால்வரோடு ஐவராகி நானும் மேடையேரி பேசினேன். பேராசிரியர் சுவாமிநாதன் பாராட்டி சைகை செய்தார். இந்திரா பார்த்தசாரதி “வெளுத்து வாங்கிட்டீங்க”, என்றார். இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெற்றேன்.

“உன் அப்பாவும் நானும் கல்லூரி காலத்தில் ஒரு நாடகத்தில்,” நடித்தோம் என்றார். “கே கே பிள்ளை தெரியுமா? வரலாற்று ஆசிரியர். அவரே அந்த நாடகத்தை எழுதினார். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின், ஜெர்மானிய போர்குற்றவாளிகளை விசாரித்து நூரம்பெர்க் வழக்குகளை வெற்றிப்படைகள் நடத்தின. இதை “வென்றவர் நீதி” என்று பிள்ளை கண்டித்தார். நீதியே அல்ல, வெறும் வெற்று விசாரணை.

“நாடகம் போட்டோம். நான் அதில் public prosecutor – விசாரனை வழக்கறிஞர்.

“உங்க அப்பா அடால்ஃப் ஹிட்லராக நடித்தார்.”

நிசப்தம். அவர் குடும்பத்தார் முன் பாரதியை பற்றி பேசியாச்சு. அவர் வாழ்ந்தி வீட்டிலேயே. விக்கிரமாதித்தன் சபைபோல் ஒரு கூட்டம். இப்போ இது வேறு.

இதை அப்பா சொன்னதேயில்லை. கல்லூரி நாட்களை பத்தி அவர் பேசியதே இல்லை. அதுவும் இந்த வேடம்!! அடடா.

அப்பா கண்ணதாசனோடும் சிவாஜி கணேசனோடும் காமராஜரோடும் மேடையில் பேசியுள்ளார். ஜாவர் சீதாராமனுடன் சினிமா கதை பேசியுள்ளார்; அவருக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்தாராம். ஆனந்த விகடனில் கதை எழுதியுள்ளார். ஹிட்லர் மகிமை சொன்னதில்லையே.


2014 இல் ஜூன் மாதம் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினார் இ.பா. கூட்டம் கலைந்த பின் என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டேன். அவர் பதில்: “ஹிட்லர் மகனை எப்படி மறக்க முடியும்?” 

மற்ற கட்டுரைகள்

Monday 18 April 2016

மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை

சென்னை மெரீனா கடற்கரை சிலைகள்


சென்னை மெரீனா கடற்கரையில், பல்கலைகழகத்துக்கு எதிரே, அண்ணாதுரை எம்ஜிஆர் சமாதிகளுக்கு அருகில், உழைப்பாளர் சிலை உள்ளது. (உழைப்பாளி சிலை என்றல்லவா அழைக்கவேண்டும்?) இச்சிலையை வடித்தவர் ராய் சௌதுரி என்ற வங்காள கலைஞர். சென்னை கவின் கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர்.

சென்னை கடற்கரை - உழைப்பாளர் சிலை

கடுமையாக உடலை வருத்திக்கொண்டு நரம்பும் சதையும் பிதுங்க நால்வர் ஒரு கனமான பாறையை அகற்ற முனைவதே சிற்பத்தின் வடிவம். சிற்பத்திற்கு ஆங்கிலத்தில் Triumph of Labour அதாவது உழைப்பின் வெற்றி என்று பெயர். 

உழைப்பாளர் ஒன்றுகூடினால் கடினமான செயலிலும் வெற்றி காணலாம் என்பது சிற்பத்தின் கருத்து. இதில் மார்க்சிஸத்தின் கொள்கையும் ஜனநாயகத்தின் கொள்கையும் மிளிர்கின்றன. இச்சிலை ஒரு சாதாரண கலை வடிவம் அல்ல, ஒரு அரசியல் தத்துவத்தை முன்னிறுத்தும் கலை வடிவம்.

மெரீனா கடற்கரையில் பல சிலைகளுள்ளன. வள்ளுவன், இளங்கோ, கண்ணகி, ஔவை, கம்பன், சுப்பிரமணிய பாரதி. பாரதிதாசன் சிலைகள் அவர்களது தமிழ்பணிக்காக அவர்களை கௌரவிக்கும் சிலைகள். அன்னியராயினும், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் செய்த தமிழ் தொண்டை பாராட்டி கௌரவிக்கும் அம்மூவரின் சிலைகளும் உள்ளன. 

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின், 1968ஆம் ஆண்டில் நடந்த உலக தமிழ் மாநாட்டை ஒட்டி இந்த சிலைகள் நிறுவப்பட்டன; கம்பர் சிலை மட்டும் 1971இல் நிறுவப்பட்டது. இவையிருக்க காந்தி, காமராஜ், சுபாஷ் சந்திர போஸ் மூவரின் சிலை மட்டும் அவர்களது அரசியல் பணிக்காக நிறுவப்பட்டவை. பெரும் வணிகருக்கோ, அறிவியல் விளையாட்டு நிர்வாகம் இயல் இசை நாடக ஓவியக் கலைகளில் சாதித்தவர் ஒருவருக்கும் கடற்கரையில் சிலை ஏதுமில்லை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு வைத்த சிலை ஒரு விதிவிலக்கு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன், பொது இடங்களில் சிலை வைக்கும் வழக்கம் பாரத நாட்டில் இல்லை. இலக்கியத்தில் எந்த வரலாற்று குறிப்போ, தொல்லியல் சான்றோ இல்லை. சுதந்திரத்திற்கு பின் அரசியல் தலைவர்களின் சிலைகள் நாடெங்கும் காணலாம். சென்னை தெருக்களில் ஆங்காங்கே வேறு பல அரசியல் தலைவர்கள், புலவர்கள், சினிமா கலைஞர்களுக்கு சிலைகளுள்ளன.

மற்ற சிலைகளெல்லாம் கௌரவ சின்னங்களாக மட்டுமே திகழ உழைப்பாளர் சிலையை கலை அழகிற்கும் ரசிக்கலாம். சென்னைக்கு சுற்றுலா வருபவர் சிற்பங்களை ரசிக்க இரண்டு இடங்களுக்கு மட்டுமே செல்வதுண்டு. ஒன்று எழும்பூர் அருங்காட்சியகம். மற்றொன்று மாமல்லபுரம்.

கலைக்கூடங்கள்

கோவில்களே பாரத சிற்ப ஓவிய கட்டிட கலைகளின் சாலச்சிறந்த கூடங்கள். சென்னையில் பழம்பெரும் கோவிலகளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே பழைய கருங்கற் சிற்பங்கள் உள்ளன. இவையும் விஜயநகர் காலத்து சிற்பங்கள். மற்ற கோயில்களில் சுதை சிற்பங்களே ஒரளவுக்கு ரசிக்கும் படி இருக்கும்.

வரலாற்று வல்லுனர்கள் மாமல்லபுரத்தையே கருங்கற் சிற்பத்தின் பிறப்பிடமாக கருதுகின்றனர். மாமல்லபுரத்துக்கு முன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் சில குகை கோவில்களில் சிற்பங்கள் இருப்பினும், ஓரிரண்டே இருக்கும். அவற்றை காணச்செல்பவர் வெகுச்சிலரே. பல்லவர் காலம் தொடங்கி இன்றுவரை கோயில்களே தமிழ சமூகத்தின் கலைக்கூடங்களாக திகழ்ந்துவருகின்றன. ஓரிரு மார்க்ஸிச வரலாற்று வல்லுனர் அவற்றுள் அரசியல் கண்ணோட்டத்தை புகுத்தினாலும், கோயில் கலைகள் தெய்வீகத்தை தான் பிரதானமாக பிரதிபலிப்பவை. வைணவ சைவ புராணங்களும் ராமாயண மகாபாரத இதிகாசங்களும் ஆழ்வார் நாயன்மார் சம்பவங்களும் மட்டுமே பல்லவ பாண்டிய சோழ காலத்தில் சிற்பங்களாய் உள்ளன. நாயக்கர் காலத்து கோயில்களில்தான் பாமர மனிதர்கள் குறவன் குறத்தி மற்றும் சில யதார்த்த சிற்பங்களை காணலாம்.

மல்லையில் உழைப்பாள் சிற்பங்கள்

அர்சுணன் தவம் எனும் மல்லை சிற்பத்தின் மையமாக, அர்சுனனும் அவனுக்கு பாசுபதம் வழங்கும் சிவனும் காணலாம். சிலர் இதை பகீரதன் தவமென்றும் கூறுவர். இக்காட்சியை காண தேவரும் கந்தர்வரும் நாகரும் கிம்புருடரும் பல பறவை விலங்குகளும் வருவதை காணலாம். சிவனுக்கு கீழே ஒரு முனிவரும் அவரது சீடர்களும் உள்ளனர். இடது புறத்தில் காட்டில் நடந்து வரும் நான்கு வேடர்களையும் காணலாம்.

அக்காலத்தில் பாரவி என்ற புலவர் எழுதிய கிராதார்ஜுனீயம் என்ற வடமொழி காவியம் புகழ்பெற்றிருந்தது. கிராதன் என்ற சொல்லுக்கு வேடன் என்று பொருள். அர்சுணனை சோதிக்க சிவன் வேடனாக (கிராதனாக) வேடம் போட்டு வருகிறார். அர்சுணனின் தவத்தை கலைத்த ஒரு பன்றியை அர்சுணன் அம்புவிட்டு கொல்ல, கிராதானாக வந்த சிவனோடு வேடம் தரித்த பார்வதி, தன் கணவன் கொன்ற பன்றியின் பிணத்தைதான் அர்சுணனின் அம்பு துளைத்தது என்று பரிகசிக்க, கிராதனுக்கும் அர்சுணனுக்கும் சொற்போர் மூண்டு விற்போராகவும் மற்போராகவும் மாறுவதே கிராதார்ஜுனீயம்.
அர்சுணன் தவம்
நான்கு கிராதர்
இப்பொழுது இச்சிற்பத்திலுள்ள வேடர்களை காண்க. நால்வரும் கையில் வில்லேந்தி யதார்த்தமாக காட்டில் நடந்து வருகின்றனர். வேட்டையாடி எந்த விலங்கையும் கொன்றதாக தெரியவில்லை. ஒருவர் ஒரு பலாபழத்தை சுமந்து வருகிறார்.

இவர்களும் உழைப்பாளிகள் தான். வெயிலின் தாக்கமோ முயர்ச்சியின் அழுத்தமோ வேட்டையின் களைப்போ வேர்வையோ உழைப்பின் வெற்றியோ ஏதுமில்லை. ஒற்றுமை வேற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவர்கள் கந்தர்வர்கள் உணரும் விஸ்மயம் என்ற ஆச்சரியமோ, விலங்குகளின் உச்சி வெயில் அயர்வோ, யானைகளின் குதூகலமோ இவ்வேடர்களின் பாவதில் துளியுமில்லை.

அர்சுணன் தவத்திற்கு அருகே கோவர்தன மண்டபம் உள்ளது. இதில் கண்ணன் கோவர்தன மலையை ஒரு கையால் தூக்க, யாதவ குலமும் ஆநிரைகளும் மிக யதார்த்தமாக மலை நிழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் காட்சியை காணலாம். இதில் மாடு கறப்பவரும் கட்டுதரி சுமப்பவளும் உழைப்பாளர் தானே? ஆனால் சிற்பியன் நோக்கம் உழைப்பை காட்டுவதல்ல; கண்ணன் லீலையை காட்டுவதுதான்.


மாடு கறப்பவரும் கட்டுதரி சுமப்பவளும்
இந்த சிற்பத்தினையும் திருக்குறுங்குடி கோவர்தன சிற்பத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் பாலுசாமியின் உரையை தவறாமல் காணவும்.

ஐந்து ரதத்தில் பெரிதான தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில், இரண்டாம் தளத்தில் சில உழைப்பாளர் சிலைகள் உள்ளன. வீணை ஏந்தி ஒரு ஓதுவார், கையில் மணியேந்தி ஒரு பரிசாரகர் (தொண்டர்), ஒரு ஸ்வயம்பாகி (சமையல்காரர்), கையில் நீள கூடையுடன் ஒரு அர்ச்சகர் (பூசாரி), குடத்தில் அபிஷேக நீர் ஏந்திவரும் ஒரு பணிப்பெண் இவர்களின் சிற்பங்களுள்ளன. முதல் நால்வர் கிழக்கு சுவற்றிலும், பணிப்பெண் மேற்கு சுவற்றிலும் உள்ளனர். பிற்காலத்து கோயில்களில் இதை போன்று பணியார்கள் சிற்பங்களை ஏதும் நான் கண்டதில்லை.



ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் வருடாந்திர ஆழ்கலை உலா வடகர்நாடகத்து சாளுக்கிய தலைநகரம் வாதாபிக்கு சென்ற போது சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலையை பற்றி ஓவியர் சந்துரு (இவரும் ராய் சௌதுரி போல் கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்) பேசும்போது அர்சுணன் தவத்து வேடர்களும் தர்மராஜ ரதத்து தொண்டரும் கண்முன் தோன்றினர். மீண்டும் இந்த வாரம் அவர் கலைரசனை வகுப்பெடுக்கும் போது உழைப்பாளர் சிலை ராய் சௌதுரி என்று பேச்செழுந்தது. 

கலை உலா - ஐஹோளேவில் ஓவியர் சந்துரு - சிற்ப வர்ணனை
சோழரும் பாண்டியரும் சேரரும் மற்ற மன்னவரும் கோயில் சிற்பங்களில் காண்பதரிது. சில நாயக்க மன்னர்களையும் ராணிகளையும் மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் காணலாம். கம்பன் இளங்கோ ஔவை வள்ளுவராதி புலவருக்கெல்லாம் சிற்பமோ ஓவியமோ எங்குமில்லை. காளிதாசன் பாணர் தண்டி பாரவி என்ற வடமொழிப்புலவருக்கும், மற்ற கலைஞருக்கும் சிற்ப ஓவியங்கள் ஹிந்து மத மரபில் மிக அரிதானவை. அழிந்துவிட்ட கோயில்களிலோ அரண்மணைகளிலோ ஓலைச்சுவடிகளிலோ ஒருவேளை இருந்திருக்கலாம்.

மாமல்லபுரத்து வேடரும் யாதவரும் தொண்டரும் சிற்பத்தில் நாம் அரிதே காணும் பாமரர்; உழைப்பாளர்.

மாமல்லபுரம் காணொளிகள்
  1. அர்சுணன் தபசு – பேராசிரியர் பாலுசாமி உரை
  2. புலி குகையும் கிருஷ்ணமண்டபமும் – பேராசிரியர் பாலுசாமி உரை
  3. மாமல்லபுரம் – பேராசிரியர் சுவாமிநாதனின் பவர்பாய்ண்ட் இலக்கியம்
  4. இரண்டாயிரம் ஆண்டுகளாக மாமல்லபுரம் - காணொளி

மாமல்லபுரம் கட்டுரைகள்
  1. கல்கியும் கோயிலும் – சிவகாமியின் சபதம்
  2. பத்ரி சேஷாத்ரி-அதிரணசண்ட மண்டபத்து மூன்றாம் கல்வெட்டு
  3. காஞ்சிகைலாசநாதர் கோயில் வாழ்த்து
  4. மல்லை சிற்பியர் வாழ்த்து

கலை சார்ந்த கட்டுரைகள்
  1. ஞானதேவதைகள் – அமெரிக்க தேசிய நூலகத்தின் ஓவியங்கள்
  2. மாந்தாதா - அமராவதி சிற்பம்
  3. கோவில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
  4. கல்லிலே ஆடவல்லான்
  5. கொடுங்கை குறும்பு - ஸ்ரீவைகண்டம் சிற்பங்கள்
  6. சாதா விந்தையின் ஆறா ரசிகன்
  7. பண்டைக்காலபாண்டுரங்கன் கல்வெட்டு
  8. Bharavi's Kiratarjuniyam - A Timeline of Sanskrit literature
  9. The Art and Aesthetic of Driving

Friday 15 April 2016

Madras and it's American connections

Mr S Muthiah gave a lecture on Madras and its American connection, at CP Ramaswami Aiyar Foundation, Alwarpet, Madras on April 9, 2016. Muthiah's birthday was on April 13 - two days back; by coincidence, I reviewed Mr Narasiah's book, Madrasapattinam, for which Mr Muthiah has written the foreword, that evening.

The connection started long before the founding of the USA, he said. He covered the period from colonial America to the recent establishment of the Roja Muthiah Research Library in Taramani.

He started with Elihu Yale, Governor of Madras for the East India Company and the obelisk in Madras Law College. Yale married the widow Catherine of his friend Joseph Hymner, then sent her off to England; he then had two rich widows living with him.

There was an enquiry into his wealth. He managed to avoid the enquiry, which  was conducted in his absence. But he was acquitted. He acquired a large collection of arts with his wealth. He donated two trunks of textiles and a trunk of paintings and artifacts which were auctioned for 1200 pounds to the Collegiate School of Connecticut, which named itself Yale college; later this became Yale University. If 1200 pounds seems a small founding amount, remember that John Harvard donated 1100 pounds to the college named after him, quipped Mr Muthiah.

A sailing ship called United States was the first American ship to visit India. The most popular export from Madras was bandanas - which became the signature fashion statement of American cowboys. Second in popular was the Madras handkerchief, still a major Madras export in the 21st century, but now the major market is West Africa.

As a gift for losing America to rebels at Yorktown, Cornwallis was made Governor General of India. He launched the third Mysore war with Tipu, holding his sons as hostages.

The US consulate building in Madras, at Gemini, was inspired by Chettinad architecture, which had a murram in center. Earlier the Consulate functioned from what is now Dare House in Parry's corner, he said. Benjamin Joy was the first American consul in Calcutta, but he tried to establish a trading post.

The Americans mostly left political affairs to Britain until India became a republic. In 1950 the Indo-American association was formed. A sister city link was established with Denver, but nothing materialized besides politicians from each city touring the other.

Christian Missionaries and Medicine

John Scudder and Myron Winslow, American allopathic doctors, came to serve as missionaries in Sri Lanka. Ida Scudder his granddaughter established Christian medical college, Vellore. Winslow collaborated with Arumuga Navalar to produce first  Tamil to English dictionary with 68,000s word in 1862.
Scudder Winslow and Green

The remarkable Samuel Fisk Green, from Worcester Massachusetts, translated medical books into Tamil and taught Jaffna Tamil boys who became better doctors than English-taught Colombo boys. There is a hospital in Jaffna named after him. None of the political parties in Tamilnadu which wear Tamil linguistic pride on their sleeves has continued Green's efforts. Allopathic medicine continues to be taught entirely in English in TN.

In 1883. Col Henry Olcott, Civil  War veteran and Helena Blavatsky , a Russian countess, formed the Theosophical society. Blavatsky dreamed of a river bank, could not find such a river in Bombay, then spotted the Adyar river in Madras and decided it was perfect for the society.

Olcott built finest Indology library with twenty thousand palm leaves and two lakh books. Olcott, an ardent student of Buddhism in South east Asia, revived Buddhism in Sri Lanka which was almost dead. Coupled with Green's work in Jaffna, they created the civil strife in Sri Lanka, opined Muthiah.

Cotton and Ice

Tirunelveli was the major cotton growing district in Madras Presidency. In 1830 Madras government brought Bernard Metcalfe from USA and introduced cotton gins. Gins were a failure because no laborer was willing to work with machines , they preferred their hands. Thomas James Finnie came with planters to plant American cotton but realised that only Indian cotton plants grew well here. Robert White developed an Indian cotton in Coimbatore. The American civil war, cut off cotton supplies from the South - the Confederacy - and India filled the supply in this period.

Ice ships from Walden pond, packed in felt and sawdust, 80% were exported to Madras Bombay and Calcutta. Thoreau has written about it. Icebergs from Newfoundland were chopped up for export, when Massachusetts was too warm for ice. The Ice trade went on for a hundred years, 150 tons each year for three metros. Ice House, now the Vivekananda Illam in Triplicane, was the only building with an American flag in the city.

Ice ponds in Massachussets

US postmaster general Wannamaker donated of forty thousands dollars to construct the YMCA building in Madras. Harry Crowe Buck of Springfield, MA introduced physical education, volleyball and basketball to Madras. India's Olympic program owes everything to Harry Crowe Buck.


YMCA, Harry Buck - speaker Muthiah

The Jaffna American missionaries built American College in Madurai. In beating the heat of Madurai in the summer, the found Ooty was too snooty. So they established Kodaikanal.

In 1907 Henry Phipps started Pasteur institute in Connoor by donating one lakh dollars to Lord Curzon. At this time there was only one Pasteur institute in North India and supplies of vaccines and serums to south were sparse. Their role in the eradication of  rabies was invaluable.

In 1911 Chandler added to and compiled a Tamil dictionary, based on Winslow dictionary. He produced Tamil Lexicon now 82,000 words. Later Vaiyapuri Pillai took it up.

In 1915 WCC, the Women's christian college was founded, with funds from Rockefeller. The Founding records are in Mt Holyoke College in the USA on which it was based.

Scudder (a descendant of Ira Scudder who set up CMC Vellore) and Rottschaeffer, set up the tuberculosis sanatorium in Madanapalle. Dr Janeway set up pediatric ward in Madras.

Films and Factories

Most famous is Ellis Dungan, an American film director, who lived in Madras for fifteen years and directed several Tamil movies. He introduced camera and lighting techniques. Two of his movies starred with M.S.Subbulakshmi - Meera and Sakuntalai. He also directed Mandirikumari starring MGR, for which the script was written by M Karunanidhi, both of whom went on to become Chief Minsiters of Tamilnadu.



Ellis Dungan and MS Subbulakshmi

The Ford company built a plant in Bombay in 1916 but shut it down in the 1950s. Ford trucks were manufactured in Madras, in a collaboration with  Amalgamations, but this was a failure. But Ford came back in 1996 set up a plant to make cars on GST Road. They scouted several locations, but the clinching  factor was dinner in the Madras club!

Earliest freedom fighters - against British rule - including Sikhs granted asylum in USA. Franklin Roosevelt urged Churchill to grant India independence.

The American Consul was in attendance at the lecture.

Related blogs
Madras - India's first modern city - S Muthiah lecture
The Thames and the Cooum
An evening with John and Pamela Davis 
Paul Erdos' poem on Madras 
Ford, Lenin, Hitler and Chaplin 
America the Beautiful

Tuesday 12 April 2016

மதராசபட்டினம் நூல் விமர்சனம்


காந்தி கல்வி நிலையம் நடத்தும், இந்த வார புதன் கிழமை (13.04.2016) கூட்டத்தில் “மதராசப்பட்டினம்" என்ற திரு. நரஸய்யா அவர்களின் புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுகிறேன். சென்னை தியாகராய நகரில் வெங்கட்நாராயணா சாலையில், தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில், (நந்தனம் சிக்னல் அருகே) காந்தி கல்வி நிலையம் பல வருடங்களாக புதன்கிழமைகள் தோறும் புத்தக கலந்துரையாடல் நடத்துகிறது.

நேரம்: மாலை 6.45 முதல் 7.45 வரை

ஒரு நகரத்துக்கும் வரலாறு எழுதமுடியுமா? எழுதினால் யார் படிப்பார்கள்? இந்தியருக்கும் தமிழருக்கும் வரலாற்று உணர்ச்சி ஏதும் இல்லை என்று மேற்கத்தியர் பலரும் கருத, நெடிய வரலாற்று நூல்களை படிக்கவே ஆளில்லாத போது, இந்த ஊரில் சொல்ல என்ன உள்ளது?
வரலாற்று பேராசிரியர்களோ மற்ற எழுத்தாளர்களோ எழுதாத போது ஒரு கப்பல் துறை பொறியாளர் ஏன் இந்நகரத்து வரலாற்றை எழுதவேண்டும்?

மதறாஸ்? சென்னை? ஆங்கிலேயர்  கட்டிய நகரமா இந்திய நகரமா தமிழ நகரமா? மதுரைக்கும் தஞ்சைக்கும் காஞ்சிக்கும் இல்லாத புகழ் ஏதோ சென்னைக்கு உண்டா?
கொல்கொத்தாவும் பம்பாயும் அல்லவா உலக புகழ் பெற்ற நவீன் மாநகரங்கள் – சென்னை எம்மாத்திரம்?

என்னத்தான் இருக்கிறது சென்னையை பற்றி எழுத? 

நூலில் நரஸய்யா சொல்லும் விவரங்களை புதன்கிழமை எடுத்துச்சொல்வேன்.

மதராசபட்டினம் வலைப்பதிவுகள்

போர்க்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்
போர்க்காலத்தில் சென்னை - முதல் உலகப்போர்
ரா அ பத்மநாபன் அஞ்சலி


புத்தக விமர்சன வலைப்பதிவுகள்

Wednesday 6 April 2016

ஞானதேவதைகள்

அமெரிக்கா ஒரு அறிவியல் நாடா ஆன்மீக நாடா? கிறுஸ்துவ நாடா மதச்சார்பற்ற நாடா? மரபு போற்றும் நாடா முற்போக்கு நாடா?

கல்லூரி காலத்து கலை ஆர்வம்

நான் 1991இல் படிக்க அமெரிக்கா செல்லும் வரை, அந்நாட்டை அறிவியல் துறையில் தலைத்தோங்கும் நாடென்றே நினைத்துவந்தேன். எடிசனின் நாடு, பெஞ்சமின் ரைட் சகோதரர்களின் நாடு, கம்ப்யூட்டர் உகம் படைத்த நாடு, நோபல் பரிசுகளை அள்ளி குவிக்கும் நாடு, மேற்படிப்புக்கு ஈடு இணையற்ற நாடு, அற்புதமான சினிமாக்களை தயாரிக்கும் நாடு, ராணுவ வல்லரசு, பொருளாதார வல்லரசு, வசதிகளும் பேச்சுரிமையும் பல வித சுதந்திரங்களும் கோலோச்சும் நாடு என்றெல்லாம் நம்பினேன். இவை முக்கால்வாசி அங்கே உண்மையாகவே இருந்தன. 

கலை ஓவியம் சிற்பம் பாரம்பரியம் பற்றி பெரிதாக அப்போது எனக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் அவற்றை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்பொழுது கணினித்துறை படிப்பில்தான் ஆர்வம். சினிமாவில் பலவிதத்தில் பார்த்திருந்தாலும், நேரில் கண்ட செல்வ கொழிப்பு பிரமிக்கவைத்தது. பெரிதாக கவர்ந்தது தொலைகாட்சி பெட்டியே. 1991இல் தூர்தர்ஷண் மட்டுமே பாரத்தில் தொலைகாட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்கும் போது அங்கே விடுதியில் இலங்கை ரூபவாஹிணியில் தமிழ் மற்றும் அமெரிக்க ஆங்கில தொடர்களை பார்க்க நேர்ந்தாலும், அமெரிக்காவில் கண்ட ஐம்பது தொலைகாட்சி சேனல்களும் மற்ற கலைகளை பற்றிய எண்ணத்தையே உருவாக்கவில்லை.

டாவின்சியும் மைக்கலேஞ்சலோவும் ஏதோ வரலாற்று நபர்கள். அவர்களது ஓவியங்கள் பெரிதும் அழகாக எனக்கு இன்றுவரை தோன்றுவதில்லை. நார்மன் மெய்லர், ஜாக்சன் பால்லாக் போன்றவர்கள் பிரபலமானாலும், அதிலும் ஈடுபாடே இல்லை. இயற்கை எழிலுக்கு அவை போட்டியே இல்லை என்பது அன்றைய மனப்பான்மை. 1999இல் டாவின்சியின் நூல்களை சியாட்டில் அருங்காட்சியகத்தில் வைத்தபோது பார்க்க ஆசையிருந்தாலும் கூட்டத்தை கண்டு மிரண்டு போகவில்லை. அந்நகரத்து ஃப்ரை அருங்காட்சியகத்தில் வேன் கோ, ராஃபாயல், ககேன், மோனே, ரெம்ப்ராண்ட் வேறு சிலரின் ஓவியங்களை கண்டேன்; நுண்கலை உணர்வே எனக்கு இல்லை; ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை; அவற்றில் ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. 

உண்மையில் குமுதம் விகடன் கல்கி கதைகளுக்காக வரையப்பட்ட படங்களும், சூப்பர்மேன் பேட்மேன் டிண்டின் ஆஸ்டெரிக்ஸ் கேல்வின் & ஹாப்ஸ் போன்ற காமிக்ஸ் எனப்படும் தூரிகை படங்கள் தந்த மகிழ்ச்சியை அந்து உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் தரவில்லை. நவீன கலை நகைச்சுவை பொருளாகவே தெரிந்தது.

அமெரிக்க தேசிய நூலகம்

சென்ற 2015இல் அமெரிக்காவுக்கு சுற்றுலாவாக சென்றேன். அறிவியல் யாத்திரை என்றே மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கங்கே கலைகளையும் பார்த்து ரசிக்க நேரந்தது. குறிப்பாக  நான்கு நாட்கள் வாஷிங்டன் நகரின் அருங்காட்சியகங்களிலும், அந்நாட்டு பாராளுமன்றத்தின் நூலகத்திலும் சிற்பங்களும் ஓவியங்களும் பல கதைகள் சொல்லின. 

காங்கிரஸ் என்ற பெயர்கொண்ட அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு தனி நூலகம் தேவை என்று கருதி, மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்ஸன் (நற்றமழில் தாமசு செப்பர்சன்) நினைத்து அதை அமைத்தார். பின்னர் அது மிக முக்கிய நூலகமாக மாறியது. தெய்வ நம்பிக்கையுள்ள மதசார்பற்ற அரசை உருவாக்கவேண்டும் என்பது அமெரிக்க குடியரசின் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை சமைத்தவர்க்கும் தோன்றிய ஒரு முக்கிய கருத்து. அவர்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாகவே இருந்தனர்; ஆனால் கிறுத்துவத்தின் பல்வேறு பிறிவுகளை சித்தாந்தங்களை சேர்ந்தவராயிருந்தனர். அரசும் சமூகமும் அமைக்க ஜூலியஸ் சீஸருக்கு முந்தைய ரோமாபுரி குடியரசும் ஏதென்ஸ் சைரக்கியூஸ் போன்ற கிரேக்க நகரங்களும் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.

முதலில் அமைத்த நூலகத்தை 1812இல் நடந்த போரில் பிரித்தானிய படை எரித்துவிட்டது. அந்தப்போரிலும் அமெரிக்காவே வென்றது. எரிந்த நூலகத்தை மீட்டமைக்க தாமசு செப்பர்சன் தன் சொந்த நூல்களை தானம் செய்தார். அதை வைத்து பல ஆண்டுகள் நடத்தினர். பெரும் நூலகம் ஒன்றைகட்ட நிதி ஒதுக்கி பின்னர் 1897 அதை கட்டி முடித்தனர். அதுவே நாம் இன்று காணும் நூலகம்.


காங்கிரஸ் நூலகம் முகப்பில் ஜெயராமன்

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. அறிவியலில் ஃப்ரான்சிஸ் பேக்கன், கெலீலியோ, ரெனே தேகார்த், ஐசக் நியூட்டன், ஜான் ஹூக், ராபர்ட் பாயில், வோல்டேர் ஆகியோர் வளர்த்த தத்துவங்கள் ஒரு ஊக்கத்தை தந்தது. அக்காலத்து மாபெரும் அறிவியல் மேதாவி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முக்கிய சுதந்திர போராளி. இந்திய விடுதலை போராளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரை போல், அவர் ஒரு வழிகாட்டி. ஜனநாயகம் செழிக்க அதன் பிரதிநிதிகளுக்கு கல்வியும் தகவலும் முக்கியம் என்பதால் இதை பிரதிபலிக்கும் விதத்தில் காங்கிரசின் நூலகத்தை அமைத்துள்ளனர்.

மகாமண்டபத்தில் ஓவியங்கள்

ஓவியப் பாவைகள்

அழகும் பிரம்மாண்டமும் செல்வமும் மிளிரும் வகையில் நூலகத்தின் கட்டட கலையும் அலங்காரமும் அமைந்துள்ளன. கண்ணாடி ஜன்னல்களின் அமைப்பும் கூறை ஜன்னல்களின் அமைப்பும், தூண்களின் கம்பீரமும், பார்ப்பவரின் கண்ணை பறிக்கும்.

இதில் கிறுஸ்துவ சின்னங்கள் ஏதும் மையமாக இல்லை. தேசிய சின்னங்கள் என்றுகூட எதையும் சொல்லமுடியாது. சுதந்திர போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களோ, தலைவர்களின் ஓவியங்களோ, நாட்டின் இயற்கை எழிலோ ஏதும் இல்லை.

மாறாக, நூலக மகாமண்டபத்தின் சுவர்களில் ஞானதேவதைகளின் ஓவியங்களை தீட்டியுள்ளனர். பல்வேறு செல்வங்களை நாம் அஷ்டலக்ஷ்மியாக ஐதீக மரபில் கொள்வது போல் தொன்மையான கிரேக்க மக்களும் ரோமாபுரியினரும் பல தெய்வங்களையும் தேவதைகளையும் வழிப்பட்டனர். அந்த தெய்வங்களை தழுவாமல், ஆனால் அந்த மரபை தழுவி, கணிதம் விண்ணியல் புவியியல் தாவரவியல் விலங்கியல் ரசாயனம் என்று தலா ஒரு பெண் வடிவம் அமைத்து சுவற்றின் மேல் ஓவியங்கள் தீட்டிப்பட்டுள்ளன. கலைகளுக்கும் பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்திய மரபில் பருவங்கள் ஆறு; ஐரோப்பாவில் நான்கு – வசந்தம், கோடை, இலையுதிர், பனிக்காலம். இவை நான்கும் சிற்பமாகவும் ஓவியமாகவும் உள்ளன.
உடற்பயிற்சியும் விளையாட்டும் கிரேக்க காலத்திலிருந்து முக்கியமாக கருதப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் நினைவாகவும் இரண்டு ஓவியங்கள் உள்ளன.

பழமொழிகளும் பொன்மொழிகளும் மரபின் அடையாளங்கள். ஷோக்ஸ்பியர் ஜெஃபெர்சன் போன்றவரின் பொன்மொழிகளை கல்வெட்டாய் செதுக்கி, அவற்றிற்கும் ஓவியப்பாவை வடிவம் அமைத்துள்ளனர்.

பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் ஓவியங்கள். பளிச்சிடும் பளிங்கு தூண்களும், வெளிச்சத்தை பரப்பும் கண்ணாடி ஜன்னல்களும், சுவரிலும் கூறையிலும் போதிகைகளிலும் வண்ண

ஒளிமயமான அஜந்தா என்றே சொல்லலாம்.


தொல்லியல் தேவதை விண்ணியல் தேவதை
ரசாயன தேவதை புவியியல் தேவதை
கணித தேவதை இயற்பியல் தேவதை
இருபுறமும் அறிவியல் தேவதை ஓவியங்கள்


ஞான தேவதைகள்

அறியாமை ஒரு சாபம், வானுலகம் எய்த ஞானமே சிறகு

ஒத்துழைப்பு வீரம்
முயற்சி தேசபக்தி

வழிகாட்டும் சான்றோர்

இவற்றையெல்லாம் விளக்க, ஆர்வமும் வரலாறும் பேச்சுத்தெளிவும் அயரா பண்பும் கொண்ட பல வழிகாட்டிகள் சுற்றுலா வந்தோரை, பத்து நிமிடத்து ஒரு சுற்றுலா குழு வீதம், வழிநடத்தினர். பல்வேறு நகரங்களில் கண்ட பெரும் சிறப்பு இது. அமெரிக்காவின் வழிகாட்டிகளை நம்மை வியக்கவைக்கின்றினர். பாரதத்தில் பெரும்பாலும் இப்படி இல்லையே என்ற ஏக்கத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள். தம் நாட்டு வரலாற்றிலும் சாதனைகளிலும் பெருமை கொண்டவர்களாயினும், அவர்களின் நடுநிலைமை புகழதக்கது. என்னாட்டவர்க்கும் எக்கலைஞர்க்கும் சான்றாக திகழ்கிறார்கள்.

நூலகத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் உள்ளன. தாளில் முதல் அச்சிடப்பட்ட விவிலிய நூல் ஒன்றுள்ளது. செவ்விந்தியரின் மரபையும், முதலில் அமெரிக்கா வந்திறங்கிய இசுபானிய தேசத்தோரின் பண்டங்களும், மற்றும் பல பிறிவுகளும் உள்ளன. அதை வேறுமுறை அலசலாம்.

கலைவாணி மினெர்வா

வெளிமண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் அற்புதமான ஒரு படிக்கும் அறை உள்ளது. இதற்கு போகும் வழியில் சுவர் உயர மினெர்வாவின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. 

மினெர்வா கலைகளின் தேவதை, சரஸ்வதிக்கும் சமம்.

கலைவாணி மினெர்வா
படிக்கும் அறையின் இரண்டாம் மாடிக்கு சென்று சுற்றுலா பார்க்க மட்டும் ஒரு பலகணி அமைத்துள்ளனர். சுற்றுலா வருவோருக்கு வட்டமான படிக்கும் அறைக்கு தரை தளத்தில் செல்ல அனுமதி இல்லை; அது ஆய்வாளர்களுக்கு மட்டுமே. அந்த வட்ட அரையின் விமானம் மசூதிகளை போல் வானியல் மையங்களைபோல் அரைகோளம். அங்கே பல சிற்பங்களும், கூரையில் ஒரு அசாத்திய ஓவியமும் உள்ளன. பின்னர் ஒரு நாள் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

ஒளிமயமான மகாமண்டபம்

சுட்டிகள்