Showing posts with label Rangarathnam. Show all posts
Showing posts with label Rangarathnam. Show all posts

Thursday, 28 April 2016

தொட்டில் பழக்கம்

வருடம் 1970. 

மாலை வேளை. சென்னை மயிலாப்பூரில் ரணாடே நூலகம். பொருளியல் வல்லுனர் மால்கம் ஆதிசேஷையா உரையாற்றவிருந்தார்.

“லேடீஸ் அண்டு ஜெண்டில்மென்,” என்று தொடங்கினார். 

திருத்திக்கொண்டார்.

“லேடீ அண்டு ஜெண்டில்மென்,” கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்ணை பார்த்து புன்னகைத்தார்.
கூட்டத்தில்லுள்ளோர் கழுத்தை நீட்டி அந்த பெண்மணியை பார்த்தனர்.

திருத்தம் சீர்திருத்தமானது. 

“கைக்குழந்தையோடு வந்திருக்கும் பெண்மணியே, ஆடவரே,” என்றார். கூட்டம் சிரித்து கைத்தட்டியது.

மால்கம் ஆதிசேஷையா

MIDS

இந்த சம்பவத்தை அடிக்கடி என் தந்தை ரங்கரத்தினம் சொல்லியுள்ளார். அப்பொழுது அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர். மயிலாப்பூர் வக்கீல். விவேகனந்தா கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர். வணிகவியல் மாணவர்களுக்கு வணிக சட்டத்தை பாடம் நடத்திய காலம். பொழுது போகாத நேரத்தில் சிறுகதை எழுதுவார். தன் ஒரு சிறுகதை ஆத்ரேயன் என்ற புனைப்பெயரில் ஆனந்த விகடனில் வந்தது என்று பெருமையாக சொல்லுவார். சிறுகதை பெயரோ அச்சில் வந்த வருடமோ இதழோ அவருக்கு நினைவில்லை. 1967 தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினராக அரசியலில் கால்வைத்து, திராவிட அலையில் காலை சுட்டுக்கொண்டார். உவமையை அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.

சுப்ரமணிய பாரதி நிவேதிதாவை சந்தித்த பொழுது, உன் மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்க, அவர் திருதிரு என்று விழிக்க…

ரணாடே நூலகத்தில் கைக்குழந்தை வைத்திருந்த பெண்மணி புஷ்பா. பூவிருந்தவல்லியில் பிறந்த அந்த கோயில் தாயாரின் பெயரை பெற்றவர். 1969 ஏப்ரல் மாதம் கர்பிணியாக பொருளியல் முதுகலை பட்டத் தேர்வை எழுதியிருந்தார்.

புஷ்பா என் தாய். இந்த கதை சொல்லும் ஓவ்வொரு முறையும் அப்பா முகத்தில் கம்பீரம் பொங்கும். அவருக்கு என்றும் மீசையோ முண்டாசோ கிடையாது.

திருமதி புஷ்பா, திரு ரங்கரத்தினம் -
சிஐடி காலனி பள்ளிவிழா தலைமை 1977

எங்கள் குடும்பம் - 1980

மால்கம் ஆதிசேஷையா நிறுவிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS - Madras Institute of Development Studies) செல்லும்போது இந்த கதை ஞாபகம் வரும். அன்று மால்கம் ஆதிசேஷையா பொருளியலை பற்றி என்ன பேசினார் என்று நான் கேட்டதேயில்லை. அப்பாவும் சொன்னதேயில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

Saturday, 23 April 2016

ஹிட்லர் மகன்

ஜூன் மாதம். 2010.

“கையில் என்ன புத்தகம்?” அப்பா இரங்கரத்தினம் கேட்டார்.

“இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள். கையெழுத்து வாங்கினேன்.” ஆழ்வார்பேட்டை டேக் செண்டரில் அதிலிருந்து நான்கு சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. திருப்பூர் கிருஷ்ணன் வாசித்த கதையில் உணர்ச்சிவசம் பொங்க, “நான் எழுதியதை வி இவர் வாசித்தது பிரமாதம்,” என்று ஆசிரியர் மெய்ச்சுக்கொண்டார்.

“நாங்க திண்ணைலே உட்கார்ந்திருப்போம், என்ன நல்லா பரிகாசம் பண்ணுவாண்டா அவன்,” என்றார் அப்பா, தமிழில். தன் பள்ளி பிராயத்தை பற்றி பல கதைகள் சொல்லியிருந்தாலும், இ.பா.வுக்கும் தனக்கும் அப்பொழுதே பழக்கம் என்று அவர் சொன்னதாக ஞாபகமில்லை. “அப்பவே நண்பராப்பா?” என்று கேட்டேன். “ஆமாம், அவா சித்தப்பா பாபுவுக்கு டௌன் ஹை ஸ்கூலில் சம்ஸ்கிருத வாத்தியார். உனக்கு தெரியாது?” பாபு அப்பாவின் அண்ணன்.

1993இல் அப்பா, தம்பி ஜெயராமுடன்

சுமார் 2005இல் அப்பாவுடன்
அபார ஞாபக சக்தியுடைய அப்பாவுக்கு டிமென்ஷியா வந்து ஓரிரு வருடங்களாகிவிட்டன. ஆனாலும் பழைய நினைவுகள் பொங்கி வரும். கண்ணும் மங்கிவிட்டது. ஒரு கண்ணில் அறுவை சிக்கிச்சை செய்தாகிவிட்டது. காது சரியாக கேட்பதில்லை. சக்கரை நோயால் நாற்பது வருடம் தவித்தவர், நல்ல வேளை இன்சுலின் ஊசி அரக்கனின் பிடியிலிருந்து தப்பி சமீபமாக மாத்திரை போட்டுக்கொண்டிருந்தார்.

அப்பாவோடு பேசி பல நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி கோபமும் பசியும் வரும். களைப்பில் தூக்கம் வரும். திடீரென்று இந்திரா பார்த்தசாரதி புத்தகம் என்றவுடன் ஏனோ பழைய நினைவுகள் பொங்கிவந்தன. 

அது ஜூன் மாதம். அக்டோபரில் அப்பா காலமாகிவிட்டார்.

அடுத்த வருடம் மார்கழி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சு கச்சேரியை தொடங்கியது. லஸ் ராக சுதா அரங்கத்தில் ஜெயமோகன் உரை. இ.பா. வந்தார். “நான் ரங்கரத்தினம் பையன் சார், என் பேர் கோபு,” என்று அறிமுகம் செய்து கொண்டேன். “அப்படியா, ரங்கரத்தினம் நலமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். “ஐ அம் ஸாரி, போன வருடம் காலமாகிவிட்டார்,” என்றேன். அதிர்ச்சியில் மௌனமானார். சிறிது கழித்து, “நமக்கு தெரிந்தவர் இறந்தார் என்ற செய்தி எப்பவுமே அதிர்ச்சியாக தான் இருக்கிறது,” என்றார்.

ஜூலை 2012 இல் திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில், கிருத்திகா எழுதிய “Finger on the Lute” என்ற பாரதி வாழ்க்கை சரித்திரத்டை பற்றி பேச, நான்கு பிரபலங்களையும் என்னையும் எழுத்தாளர் நரசையா அழைத்தார். தீர்த்த கரையினிலே செண்பகத் தோப்பினிலே பேச ஒரு கண்னம்மாவும் என்னை அழைக்கவில்லை. பாரதி பற்றி பாரதி இல்லத்தில் பேசவேண்டுமா?? மார்பு துடித்தது. நூலை படிக்கும் போது கோபுலுவின் ஓவியங்கள் கண்ணையிழுத்தது.

குறித்த நாளில் பாரதி இல்லம் சென்றேன். அங்கு கோபுலுவும் இந்திரா பார்த்தசாரதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கோபுலுவிடம் அந்த புத்தகத்தின் பிரதியை நீட்டி பேராசிரியர் சுவாமிநாதன் கையொப்பம் வாங்கிக்கொண்டிருந்தார். நானும் என் பிரதியை நீட்ட, உங்க பேர் என்ன?” என்றார். “கோபு,” என்றேன். “அப்படியா! என் பேர் கூட கோபுலு,” என்றார். கள்ளமில்ல இதயம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல. கோபுலுவை தெரியாதவர்கள் இதை நம்பமாட்டார்கள். தெரிந்தவர்கள் ரசிப்பார்கள்.

இ.பா.விடம் திரும்பினேன். புன்னகைத்தார். மீண்டும் ”ரங்கரத்தினம் மகன்” என்று அறிமுகம் செய்துகொண்டேன். “உனக்கென்று ஒரு தனி அடையாளம் உண்டு,” என்று மின்னல் வேகத்தில் சொன்னார். ஆங்கிலத்தில். அவர் சொன்னது - “You have an identity of your own.”

கோபுலுவின் சொல்லில் தேன் வந்து பாய்ந்தால் இபாவின் சொல்ல்லுக்கு என்ன உவமை சொல்வேன். மூச்சு திணரியது. மேன்மக்கள் மேன்மக்களே. தந்தை சொல்லும் அறிவுரையும், செல்ல கண்டிப்பும், ஒரு ஆழ்ந்த தத்துவமும் பாலும் தெளிதேனும் பாகுமாக கலந்து சங்கத்தமிழொத்த ஆங்கில வாக்கியம். ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி ஒரு தருணம் வரவேண்டும். அப்பாவுக்கு தான் ஞாபகமறதி. பீஷ்மருக்கு இல்லை.

கிருத்திகாவின் மருமகன் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்திய வேளாண்மைக்கு பசுமை புரட்சியை தந்த ஜாம்பவான்களில் ஒருவர். அவர் மனைவியும் கிருத்திகாவின் மகளுமான திருமதி மீனா சுவாமிநாதனே, இவ்விழாவை நடத்த நரசையாவை கேட்டிருந்தார். டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகத்தில் படித்தகாலத்தில் அங்கே நார்மன் போர்லாக் பணிபுரிந்து வந்தார். அவரை போய் பார்த்து பேசவேண்டும் என்று பல முறை ஆசைப்பட்டாலும் பேச போக தைரியமெழவில்லை. என்ன சொல்வேன்? இப்பொழுது எம்.எஸ்.சுவாமிநாதனை பார்த்த பொழுதும் அதே தயக்கம்.

பாரதியின் வரிசு, பாடகர் ராஜ்குமார் பாரதி கோபுலுவோடும் நரசையாவோடும் மேடையேறினர். பாரதி திரைப்படம் எடுத்த ஞானராஜசேகரன் வந்திருந்தார். நண்பர் நாராயணசாமி படங்கள் எடுத்தார்.

பாரதி இல்லத்தில் - கோபுலு, நரசையா, ராஜ்குமார் பாரதி

2012- பாரதி இல்லம் - இ.பா. உடன்
நால்வரோடு ஐவராகி நானும் மேடையேரி பேசினேன். பேராசிரியர் சுவாமிநாதன் பாராட்டி சைகை செய்தார். இந்திரா பார்த்தசாரதி “வெளுத்து வாங்கிட்டீங்க”, என்றார். இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெற்றேன்.

“உன் அப்பாவும் நானும் கல்லூரி காலத்தில் ஒரு நாடகத்தில்,” நடித்தோம் என்றார். “கே கே பிள்ளை தெரியுமா? வரலாற்று ஆசிரியர். அவரே அந்த நாடகத்தை எழுதினார். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின், ஜெர்மானிய போர்குற்றவாளிகளை விசாரித்து நூரம்பெர்க் வழக்குகளை வெற்றிப்படைகள் நடத்தின. இதை “வென்றவர் நீதி” என்று பிள்ளை கண்டித்தார். நீதியே அல்ல, வெறும் வெற்று விசாரணை.

“நாடகம் போட்டோம். நான் அதில் public prosecutor – விசாரனை வழக்கறிஞர்.

“உங்க அப்பா அடால்ஃப் ஹிட்லராக நடித்தார்.”

நிசப்தம். அவர் குடும்பத்தார் முன் பாரதியை பற்றி பேசியாச்சு. அவர் வாழ்ந்தி வீட்டிலேயே. விக்கிரமாதித்தன் சபைபோல் ஒரு கூட்டம். இப்போ இது வேறு.

இதை அப்பா சொன்னதேயில்லை. கல்லூரி நாட்களை பத்தி அவர் பேசியதே இல்லை. அதுவும் இந்த வேடம்!! அடடா.

அப்பா கண்ணதாசனோடும் சிவாஜி கணேசனோடும் காமராஜரோடும் மேடையில் பேசியுள்ளார். ஜாவர் சீதாராமனுடன் சினிமா கதை பேசியுள்ளார்; அவருக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்தாராம். ஆனந்த விகடனில் கதை எழுதியுள்ளார். ஹிட்லர் மகிமை சொன்னதில்லையே.


2014 இல் ஜூன் மாதம் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினார் இ.பா. கூட்டம் கலைந்த பின் என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டேன். அவர் பதில்: “ஹிட்லர் மகனை எப்படி மறக்க முடியும்?” 

மற்ற கட்டுரைகள்

Tuesday, 16 December 2014

Hitler’s son


My father, Rangarathnam, orator - perhaps at a Vivekananda College function.

 This was in June 2010.

“What books are those?” asked my father, Rangarathnam.

“Short stories by Indira Parthasarathy,” I replied. “He autographed them.” I was returning from a function at Tag Center, where Tiruppur Krishnan and three others performed public readings of four of the author’s short stories, from two volumes published by Kizhakku Pathippagam.


“We would sit on the same porch and he would tease me, you know,” said my father. He was suffering from dementia, and which was only diagnosed the previous year. He had some difficulties with new memories, but had excellent recollection of his earlier days. His eyesight and hearing had deteriorated, he rarely went out anymore, but at least he was off the terrible, twice daily, insulin injections, taking tablets instead.

We had not had a good conversation in a while. But something about Indira Parthasarathy triggered memories and he talked of several childhood memories, of school days in Kumbakonam (but almost never college life); of work as a lawyer in the Madras High Court, but rarely of earlier days in Madras.

This was the first time he had talked of childhood days with Indira Parthasarthy.

In October, my father passed away.

I met Indira Parthasarathy at the Tamil Teritage Trust’s Lecture Kacheri in Raga Sudha hall in December 2011, where I introduced myself as Rangarathnam’s son. “How is Rangarathnam?” he asked eagerly. “I’m sorry, he passed away last year,” I said. He was stunned into silence. After a few minutes, he said, “It’s always a shock to hear that one of your colleagues has passed away.”

In July 2012, Mr Narasiah invited me along with four others, to speak at Bharathi Illam, about Krittika’s  (pen name of Mathuram Bhuthalingam) book “Finger on the Lute” - a biography of Subramania Bharathi. You can imagine my numbness – being asked to talk about Bharathi at the house where he stayed! What an honour.

With Artist Gopulu

When I went there, I saw artist Gopulu and Indira Parthasarathi, seated side by side, socialising with admirers. Gopulu whose sketches adorned Krittika’s book, asked my name and delightedly(!!) said that his name was Gopu too! Then he autographed my book.

I turned to Indira Parthasarathi, sure that he would not remember me, and introduced myself, as “Rangarathnam’s son.” Without a beat he responded, “You have an identity of your own.”

That took my breath away. It was a reprimand, fatherly advice and a philosophical opinion, epigrammatically crisp in its phrasing. In every person’s life, there must come such a moment, better early than late. I also realized how sharp and mentally agile Indira Parthasarathi still was, in contrast to my father who had suffered from memory loss.

One of the great heroes of the Indian Republic, and architect of the Green Revolution of the 1960s, Dr MS Swaminathan, was in attendance. He is the son in law of Krittika and her daughter, Smt Mina Swaminathan, who had requested Mr Narasiah to arrange the evening’s program. I really wanted to meet him, but I had been thoroughly tongue-tied with Gopulu, and I knew I would have nothing to say to him either. When I was at Texas A&M university, I resolved many times to visit Norman Borlaug, who was an Emeritus Professor in the campus, but could never muster up the courage or overcome the diffidence to do so. It doesn’t matter, I would tell myself, just go around to his office, say “Thank you” and come back. But I could never do it.

Other celebrities like Rajumar Bharathi, the poet’s descendant, GnanaRajasekharan, the director of a Tamil movie on Bharathi were also present, as was Professor Swaminathan of Tamil Heritage Trust. Mr Narayanaswami, who had come from Palavakkam, was kind enough to take photos.

After our speeches were over, Prof Swaminathan gave me a thumbs up and a smile on his way out, Indira Parthasarathi had a word of praise (Veluthu vaangitteenga “வெளுத்து வாங்கிட்டீங்க”).

Gopulu, Narasiah, Rajkumar Bharathi on the dais
Gopu speaking about "Finger on the Lute"


“Your father and I acted in a college play,” he reminisced. “It was written by KK Pillai, the historian. The Second World War had ended, and the Nuremberg trials conducted. Several Germans and Japanese warriors were tried and convicted for war crimes. Pillai considered this “Victor’s Justice” – no justice at all, just a sham trial.

“Anyway we staged that play. I acted as a Public Prosecutor in that play. Your father also acted in it.

“He played the role of Adolf Hitler.”

Nothing, I thought, could top an evening where I had spoken on Bharathi at his house, to an audience of the poet’s family, and living legends like MSS, Gopulu and Indira Parthasarathy himself. But you can imagine how I must felt about this statement! Talk about a lightning bolts from a blue sky.

My father never told me about this. In fact, he had never spoken of his college days in Kumbakonam, never of having acted in any play, certainly not of dressing up as Der Feuhrer himself.

Me and Indira Parthasarathi at Bharathi Illam, Thiruvallikeni, Madras

This year, Indira Parthasarathi spoke on Silappadhikaram at Tamil Heritage Trust. I gave a brief introduction to our group, then mentioned this incident to the audience. At the end of his speech, I again asked him if he remembered me.

“How could I forget Hitler’s son?” he quipped. 

Mein Feuhrer!
Related Posts
1. Rangarathnam - Lady and Gentlemen
2. Teacher's Day
3. With Narasiah - Tagore and UVesa
4. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை

Wednesday, 10 December 2014

Lady and Gentlemen


1970. Or maybe late 1969. Evening. Ranade Library in Luz, Mylapore. Malcolm Adiseshiah was about  to deliver a lecture on economics at the Srinivasa Sastri Hall.

Malcolm Adiseshiah and wife - photo at MIDS, Adayar, Madras
“Ladies and Gentlemen,” he began. Then he corrected himself.

“Lady and Gentlemen,” he said, smiling at the only lady in the room.

After a pause, while other necks craned to glimpse the only lady in the room, he improved upon his correction.

“Lady with a baby in her hand, and Gentlemen,” he grinned, and this time the audience broke into 
laughter and approval.

My father, Rangarathnam, told me this story. At that time he was an upcoming lawyer in the Madras High Court - a Mylapore vakeel in Tamil parlance; a part time lecture on Mercantile and Commercial Law at the Vivekanda College; an amateur novelist – at least one of his stories had been published in either Kumudam or Ananda Vikatan, under the pseudonym Athreyan; with a suspended career in politics – he had contested the 1967 Madras elections under a Congress ticket for post of Corporation Councillor and had lost in the DMK wave.

The lady with the baby was Pushpa. She had written her MA (Economics) final papers in April 1969, while eight months pregnant.

She was my mother.

I was reminded of the incident when I attended a lecture at MIDS, in Adayar, yesterday. MIDS was founded by that very Adiseshiah.

There is famous incident in the life of Subrahmanya Bharathi, when he went to meet Sister Nivedita and she asked him why she hadn't brought his wife.

My dad always beamed with pride when he told me this story. I think about this when I see the rare couple attend a program together.

The photo below is of my parents, at a School Day function in CIT Colony English Primary School, Mylapore where my sister, my brother and I studied first. This photo is from 1978 - my father was Chief Guest and my mother gave away the prizes.

Pushpa and Rangarathnam
Related Posts
1. On Teacher's Day
2. அப்பாவுக்கு பிடித்த கவிதை

Thursday, 21 November 2013

Fred Sanger - Insulin man

Fred Sanger, who first discovered the amino acid sequence of insulin, passed away yesterday. Insulin is now familiar to most of us, as the protein whose shortage causes the onset of diabetes in human beings. Proteins are the engines of the cell, made up of amino acids, which in turn are three-nucleotide sequences of the four basic building blocks of DNA - adenine, cytosine, guanine and thymine, referred to as ACGT.

The sequencing  of a protein was as phenomenal an accomplishment as finding the structure of the DNA by Watson and Crick. The incredible patience which Sanger accomplished is told in books, but since it requires a good understanding of biology, I wont attempt it here. Everybody who has ever had diabetes or someone with diabetes, which was alleviated by insulin, must salute Fred Sanger for his phenomenal contribution to long life and better health of millions of humans.

May there be more Sangers in this world to make it a better place. My father, Rangarathnam, had diabetes and lived a long life because of people like Fred Sanger.

I salute you, sir.

Saturday, 12 October 2013

என் அப்பாவுக்கு பிடித்த கவிதை

இது நான் டிசம்பர் 2003இல் எழுதிய கவிதை. அப்பாவுக்கு படித்துக் காட்டினேன். ஒவ்வொரு வரியும் ரசித்தார். பல வருடங்கள் கவிதை படிக்காததாலும், மகன் எழுதினான் என்ற பெருமையாலும், மிகவும் ஆவர் ரசித்திருக்கலாம். அவர் நினைவில்…

           புதுமை எங்கே
அழகியை ஓவியம் வரைய நினைத்தேன்
அதிலென புதுமை அதனை தவிர்த்தேன்
குரூபியை வரைய முடிவு எடுத்தேன்
திறமை குறைவால் முயற்சி தவிர்த்தேன்
பௌர்ணமி நிலவை பாட நினைத்தேன்
உவமை அலுத்ததில் உதறி விடுத்தேன்
அமாவாசையை கவிசெய நினைத்தேன்
யாருக்கு புரியும் கூறிட மறுத்தேன்

முல்லை மருதம் புகழ்ந்திட முனைந்தேன்
நெய்தல் குறிஞ்சி நெகிழ்ந்திட முனைந்தேன்
பாலை தேனை பைந்தமிழ் அமுதை
கள்ளை மதுவை பருகிட முனைந்தேன்
நஞ்சை கவிதை கருத்தாய் வைக்க
நெஞ்சில் முனைந்தேன் வெறுத்து வெகுண்டேன்

காதல் காமம் கசப்பாய் தெறிந்தது
வீரம் பண்பு வெந்து கிடந்தது
நன்மை தீமை உண்மை பொய்மை
நமத்து கிடந்தது கற்பனை பொறிக்கு
பழைய ஆடையின் நூல்களை பிரித்து
மறுபடி நெய்வதில் மகிமை எங்கே
ஆயிரம் தலைமுறை அழகாய் சொன்னதை
புதிதாய் புனைவதில் புலமை எங்கே

கண்ணில் தெறியும் கலைகளை எல்லாம்
மண்ணில் புதைத்து மறந்திடுவோமோ
காதால் கேட்ட இசைமொழி எல்லாம்
காற்றில் சிதறி மறந்திடுவோமோ
பழையன கழிதலும் புதுவன புகுதலும்
விதைத்தபின் வளர்க்கும் அறுவடை தானோ
மனிதன் அறியா மண்ணிருந்தாலும்
கருத்து படியா களமெங்குளவோ

முற்றுப்புள்ளி மேல் மோகம் வீணோ
கேள்விக்குறிதான் கலையின் குறியோ
விடைதெறிந்தாலும் விளங்காப் போமோ
விடை ஒன்றுளதோ வினவே தவறோ


Friday, 6 September 2013

On Teachers Day

On Teachers day, I was honored to give a lecture on Indian Astronomy & Mathematics to the teachers of Hindu senior secondary school, Indira Nagar, Madras, almost one month after the same to their 9th class students. The teachers were as interested and as curious as the students. They all filled the back rows of chairs, leaving the front rows empty until the Principal asked them to move forward, they broke into excited chatter occasionally, some were excited, others sedate; in fact they behaved exactly like their students did a month back (or daily, depending on your perspective!) But the teachers showed more patience. I enjoyed it. Thanks to Tara Prasad, sanskrit teacher at the school and their principal, Ms Padmini, who was very supportive.

A special priv
ilege was having three of my gurus in attendance - Prof Swaminathan, "Nagupoliyan" Balasubramanian and Mr KRA Narasiah- along with Siva Thiagarajan, Numismatic expert & educationalist. 




My father, Rangarathnam, (on left, spectacles), with his students, Vivekananda College
ஆசிரியர் தினமன்று, சென்னை இந்திரா நகர் உயர்நிலை பள்ளியில், ”இந்திய விண்ணியலும் கணிதமும்” பற்றி பேச அழைத்தனர். சென்றமாதம் இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இதே உரையாற்ற, என்னை அழைத்திருந்தனர். மாணவர்களைப் போலவே, ஆசிரியர்களும் கடைசி வரிசைகளில் அமர்ந்தனர். பள்ளித் தலைவர் சொல்லி முன் வரிசைக்கு வந்தனர். திடீர் திடீரென்று தமக்குள் பேசிக்கொண்டனர். புதிதாய் எதுவும் சொன்னால், கிண்டலடித்தால் ஆர்வமும் சிரிப்பும் தானாக எழுந்தன. பொதுவாக தங்கள் மாணவர்கள் எப்படி நடந்துகொண்டனரோ அப்படியே நடந்துகொண்டனர். பொருமை மட்டும் கொஞ்சம் அதிகம். மிகவும் ரசித்தேன். என்னை பேச அழைத்த பள்ளியின் ஸம்ஸ்கிருத ஆசிரியர் தாரா பிரசாதிற்கும், ஊக்குவித்து ஆதரித்த பள்ளி தலைவர் பத்மினிக்கும் எனது நன்றி.

என் குருக்களான பேராசிரியர் சுவாமிநாதன், "நகுபோலியன்பாலசுப்ரமணியன், எழுத்தாளர் கே.ஆர்.ஏ நரசையா, மற்றும் மென்பொருள் கல்வித்துறை நண்பர் சிவா தியாகராஜன் முன்னிலையில் பேச வாய்ப்பு கிடைத்தது, மேலும் சிறப்பு.