Showing posts with label உரை. Show all posts
Showing posts with label உரை. Show all posts

Thursday, 2 July 2026

கும்பகோணத்தில் ஒரு பாராட்டு விழா

சென்னை எழும்பூர் கவின் கலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, சமீபத்தில் ஓய்வு பெற்ற திரு சிவராமகிருஷ்ணனையும்,  கும்பகோணம் கவின் கலை கல்லூரி முன்னாள் முதல்வர்கள் திரு அருளரசன், திரு ரவி இருவரையும் கௌரவிக்கும் ஒரு பாராட்டு விழாவை இம்மூவரின் மாணவர்கள்  நடத்த உள்ளனர். வரும் சனிக்கிழமை ஜூலை 4, காலை 930 முதல் முழு நாள் நிகழ்வு. இதில் என்னையும் பேச அழைத்துள்ளனர்; காஞ்சி கைலாசநாதர் கோவிலை பற்றி ஒரு உரையாற்றுவேன். பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அஜந்தா ஓவியங்களை பற்றி உரையாற்றுவார். காலையில் நாட்டியத்துடன் விழா தொடங்கும். மதியம் மாணவர்களின் கலந்துரையாடல். நிகழ்ச்சி நிரல் இதோ.

கும்பகோணத்தில் இந்த சனிக்கிழமை இருந்தால் இந்த விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். சிவராமகிருஷ்ணன் எதை பேசினாலும் மிகவும் சுவாரசியமாக, கலை ரசனை பொங்க, கேட்போர் காதில் தேன் வந்து பாயும். அரிய வாய்ப்பு.



11-ஜுலை

விழாவிலிருந்து சில படங்கள்:

திருவாளார் அருளரசன், சிவராமகிருஷ்ணன், கோபு, ரவி
படம்: விஸ்வநாதன்

கோபுவின் உரை
படம்: விஸ்வநாதன்


Wednesday, 15 April 2020

அழகின் விதிகள்


Art and the Brain - English version of this essay


விலையனூர் ராமசந்திரன் ஒரு உலகப்புகழ் பெற்ற மருத்துவர். அமெரிக்காவின் சான் டியகோ நகரிலுள்ள கலிபோர்ணியா பல்கலைகழகத்தில் பேராசிரியர். Phantoms in the Brain (மூளையின் மாயாஜாலங்கள்) என்ற நூலை எழுதியுள்ளார் (தமிழிலும் இது கிடைக்கிறது, பாரதி புத்தகாலயம் பதிப்பு). சில மனநோயாளிகளின் விசித்திர இன்னல்களை ஆராய்ந்தார். அதில் சில் நோய்கள் மூளையின் நரம்புகளின் சேதத்தால் விளைந்தவையே அன்றி மன உளைச்சலால் அல்ல என்று கண்டுபிடித்து, சில நோய்களுக்கு தீர்வு, குணமாக்க கருவிகள், சிகிச்சை, பயிற்சி, என்ற பல புதிய யுக்திகளை படைத்தார். 

இந்த ஆய்வுகளால் மனித மூளையின் சில செயல்களுக்கும் புதிய விளக்கமளித்தார். கலையின் இயல்பும் அகழின் இயல்பும் கலைஞனின் பார்வையிலும் தத்துவத்திலும் மட்டுமில்லை; மூளை மருத்துவரின் ஆய்விலும் விளக்கத்திலும் உருவாகலாம் என்பது இவர் சித்தம். இயற்கையின் விதிகளை போல் அழகிற்கும் விதிகளை இவை என கருதி, வகுத்துள்ளார்.


தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையிலும் பல்வேறு மேடைகளிலும் இதை பேசியுள்ளார். சமீபத்தில் அப்பராவ் கலைக்கூடத்தின் மேடையில் பேசிய உரையின் புள்ளிவிவரங்களே இந்த கட்டுரை. அவர் குரலில் எழுதியுள்ளேன்.

ராமசந்திரனின் உரை

நான் சென்னைக்கும் வரும்போது மயிலை கபாலிச்சுரர் கோவிலுக்கு செல்வது வழக்கம். மற்ற பல கோவில்களுக்கும் செல்வதுண்டு. கோயில் சிற்பங்களின் அழகும் ஐம்பொன் சிலைகளின் அழகும் என் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

சி.பி.ஸ்நோ Two Cultures (இரண்டு கலாச்சாரங்கள்) என்றொரு புகழ்பெற்ற கட்டுரை எழுதினார். கலையுலகம் ஒரு புரம், அறிவியல் உலகம் ஒரு புரம். இவ்விரண்டும் ஒவ்வாமல் பிரிந்துள்ளன் என்பது அவர் வாதம். அவர் கொள்கை தவறு என்பது என் வாதம். சிலரை சாடுவது நம் கடமை என்று ரீத் துரை கூறினார். அந்த கடமையை இன்று ஆற்றுகிறேன்.

சமூக மரபுகளை கடந்த ரசனை உள்ளதா? கலை கண்ட மூளை எப்படி இயங்குகிறது? நோம் சாம்ஸ்கி சமூக மரபுகளை கடந்து மொழிக்கு ஒரு அடிப்படை கொள்கை திகழ்கிறது என்கிறார். சமூக மரபுகளை கடந்து அழகிற்கும் ரசனைக்கும் ஒரு அடிப்படை உள்ளது என்பது என் வாதம். சமூக மரபுகளை தாண்டி, ஒட்டுமொத்த விலங்கின குடும்பத்திற்கும் ஒரு அடிப்படை அழகியல் ரசனை உள்ளது என்பதே என் வாதம். மலர்கள் மனிதர்களுக்காக அழகான வடிவமும் வண்ணமும் பெறவில்லை. தேனீக்களையும் பட்டாம்பூச்சிகளை தங்கள் அழகால் ஈர்ப்பதற்கே, மலர்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழகழகாக தோன்றின. மனிதன் உருவாகியதோ சில கோடி ஆண்டுகளுக்கு முன்பே. நாம் தேனிக்களிலிருந்து பரிணமிக்கவில்லை. ஆனாலும் மலர்களின் அழகை ரசிக்கும் அதே ரசனை நமக்கும் உள்ளது.

பெருங்கூடு (பவர் -bower) பறவை சாம்பல் நிற சிறுபறவை. பாசி, குச்சி, குப்பை, இலை, சிகரட் தோல் எல்லாம் கொண்டு மாபெரும் கூடுகளை இந்த சிறிய பறவை கட்டுகிறது. அதை பார்த்தால் ஒரு பறவை படைத்தது என்றே யாரும் நம்பமாட்டார்.

நிற்க.
பார்வதி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதம் வந்த பல ஆங்கிலேயர் ஐம்பொன் சிலைகளை இகழ்ந்தனர். பார்வதியின் ஒரு சிலைகண்டு, இயற்கைக்கு மாறாக கோரமாக இருக்கிறது என்று கடிந்தனர். மெல்லிய இடை, கனத்த கொங்கை, சமகால பெண்களில் காண இயலா முகம், ஆதலால் இது கொச்சை, கொடூரம் என்றனர். இந்திய சிற்பங்களில் அங்கங்கள் எதுவும் இயற்கை அளவின்றி செயற்கையாக தெரிகிறது என்றனர். விசித்திரம் என்னவென்றால், அதே காலகட்டத்தில், சில ஆங்கிலேய பெண்கள், தங்கள் இடைகளை குறைக்க எலும்புகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டனர்! அப்படி எலும்பை அகற்றிய பெண்களின் எலும்புகூடுகளை நான் லண்டனில் பார்த்திருக்கிறேன்.

(பிக்காசோ போன் ஓவியர்களின்) நவீன மேற்கத்திய கலை. உருவத்தை நீட்டியும் குறைத்தும் வளைத்தும் சுளித்தும் சிதைக்கிறது. இந்த சிதைவுகளே “வடிவ கொடுங்கோலிலிருந்து விடுதலை” என்பது நவீன ஓவியர்களின் பெருமிதம்!

கலையின் நோக்கம் இயற்கையை படம் பிடிப்பதல்ல. ஒரு புகைப்படம் இதை செய்யலாம். எல்லா புகைப்படங்களையும் நாம் கலை என்று அழைப்பதில்லை.

சமஸ்கிருதத்தில் ரசம் என்று ஒரு சொல் இதை மொழிபெயர்ப்பது கடினம். கலை தூண்ட முயலும் உணர்ச்சியே ரசம்.

இந்த படத்தை காணவும். தொலைவை நோக்கும் ஒரு யுவதி தெரிகிறாள். இடது பக்கம் நோக்கும் ஒரு கிழவியும் தெரிகிறாள். இது ஒரு சிலேடை ஓவியம்.
சிலேடை ஓவியம் - யுவதியும் கிழவியும்

இதுவும் ஒரு சிலேடை ஓவியம். முயல் வாத்து இரண்டும் தெரியும். முயலின் காதுகள் வாத்தின் அலகாக பாவிக்கிறது.
கலையின் நுணுக்கமே பார்வையின் லீலைகள். மூளையை சீண்டி வெவ்வேறு காட்சிகளை, தரிசனங்களை காண தூண்டுவது கலையின் ஒரு முயற்சி.
சிலேடை ஓவியம் -  வாத்து முயல்

இது போன்ற ஆய்வுகளால் நான் அழகின் ஏழு விதிகளை வகுத்திருக்கிறேன். இது முற்றுபெற்ற ஆய்வல்ல. வேறு விதிகளும் இருக்கலாம்.
கலையின் ஏழு விதிகள்

ஒரு குறிப்பு. கலாச்சாரங்களில் கலை வேற்றுமைகளை பலரும் ஆராய்ந்துள்ளனர். அது கலை வரலாறு. அதை நான் இங்கு கூறவில்லை. மரபுகளை கடந்த கலையின்  உயிரியல் அடிப்படைகளை தான் தேடுகிறேன்.

குவியல் (Grouping) வேட்டை விலங்கிடம் தப்பிக்க உருவாகியது. இலைமறைவான ஒரு சிங்கத்தை நம் கண்கள் பல சிங்கத்துண்டுகளாக பார்ப்பதில்லை. முழு சிங்கமாக பார்க்கிறது. இது பரிணாம வளர்ச்சியின் பலன். இந்த விதியை ஓவியர்கள், நெசவாளர்கள் போன்றோர் கையாள்வது சகஜம்.

இந்த படத்தை காணவும். புள்ளிகளின் குவியலாக தெரிகிறதா? ஒரு டால்மேசியன் நாய் தெரிகிறதா? முதலில் சிலருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் நாய் தெரிந்துவிட்டால் அது மறையாது.
புள்ளிகலில் ஒரு டால்மேசியன் நாய்

சிகர தகற்றம் (Peak shift) ஒரு எலிக்கு முக்கோணங்களும் நீள்சதுரங்களும் காட்டி, நீள்சதுரத்தை நோக்கி செல்லும் போது ஒரு உணவு துண்டு கொடுத்தால், அது சீக்கிரம் நீள்சதுரத்தை விரும்ப பழகிவிடும். முன்பை விட நீளமான நீள்சதுரம் காட்டினால் அதைநோக்கி செல்லும். ஒரு தனிப்பட்ட நீள்சதுரத்தை அந்த எலி விரும்புவதில்லை. நீள்சதுர வடிவத்தை அது விரும்ப கற்கிறது.

கேலிசித்திரம் என்னும் தூரிகையின் அடிப்படை இதுவே. ஓபாமவையோ நிக்சனையோ வரையலாம். ஒருவரின் வேற்றுமையை பெரிதாக்கினால் அவரது இயல்பை விட அந்த சித்திரம் நமக்கு ஏதோ சொல்கிறது. நிக்சன் மூக்கையும் காதையும் பெரிதாக்கினால, நிக்சனை விட அந்த சித்திரம் நிஜமாகிறது இந்த யுக்தியை சோழ சிற்பிகள் ஐம்பொன் சிலை வடிக்க கையாண்டனர்.

(கோபுவின் குறிப்பு  இந்திய ஓவியர்கள், இந்திரா காந்தியின் மூக்கை பெரிதாக வரைந்து காட்டினர். சந்தன வீரப்பனின் மீசை, கே ஆர் விஜயாவின் புன்னகை யாவும் சிகர தகற்ற யுக்திகள்)

டிம்பர்கன் என்று ஒரு உயிரியல் அறிஞர் கடல்புறா குஞ்சுகள் தங்கள் தாயை அடையாளம் காணும் முறையை ஆராய்ந்தார். கடல்புறாக்களின் அலகு நுனியில் ஒரு சிவப்பு புள்ளியிருந்தது. அந்த புள்ளியை குஞ்சு தன் அலகால் தட்டும். தாய்பறவை தன் வாயிலிருந்து இறையை குஞ்சுக்கு தரும். செத்த பறவை ஒன்றி அலகை வைத்து டிம்பர்கன் பரிசோதனை செய்தார். ஒரு குஞ்சு அந்த அலகின் புள்ளியை தட்டி உணவு கோரியது. அடுத்து ஒரு குச்சியின் நுனியில் சிவப்பு புள்ளி வரைது ஒரு குஞ்சிடம் காட்டினார். அந்த குச்சியையும் குஞ்சு தன் அலகால் தட்டி உணவு கோரியது. ஒரு புள்ளிக்கு பதில் மூன்று புள்ளிகளை வைத்த குச்சியை டிம்பர்கன் நீட்டிய போது, அலாதியாக ஆர்வமாக அதிகாம அதை குஞ்சு தட்டியது. இதுவும் சிகர தகற்றம்.

இடக்கரடக்கலும் தனிமைபடுத்தலும் (Principles of Understatement and Isolation)

கலையில் இவற்றின் பங்கும் முக்கியம்.  ஆனால் இது சிகர தகற்றத்திற்கு நேர்மாறாக உள்ளதே? மூளை பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகிறது. ஒரு உருவத்தின் வடிவக்கோடு நிறத்தைவிட பல தகவல்களை தருகிறது. ஒரு பெண்ணின் கோட்டோவியத்தில் நம்மை வண்ணத்தை விட வடிவம் அதிகம் கவர்கிறது. ஓவிய சிற்ப கலைஞர்கள் இதை ஆழமாக உள்வாங்கி பரவலாக கையாள்வர்.

கலை உவமை (Artistic metaphor) மை ஏன் நம்மை கவர்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு பொருளை விட வெறும் வர்ணனையை விட ஒரு உவமை நம்மை ஏன் சிலிர்க்கவைக்கிறது? ஓவியர், கதாசிரியர், புலவர் யாவருக்கும் உவமை ஒரு சிறந்த கருவி. ஷேக்ஸ்பியரை போன்ற மேதை உவமைகளை தெறிக்கவிடுவார். கலைஞர் மட்டுமல்ல. பாமரரின் மொழியிலும் முப்பது சதவிகிதம் உவமைகள் இருக்கும்.

கேள்வி பதில்கள்

கேள்வி  மட்டமான கலை என்று ஏதேனும் உள்ளதா? அல்லது காண்பவன் கண்ணில்தான் அழகா?

பதில் அமெரிக்காவில் மட்டமான கலை இருக்கிறது. அதை கிஷ் என்று அழைப்போம். செவ்வியல் ஓவியம் ரசிக்க தொடங்கினால் கிஷ்ஷை ரசிக்க முடியாது. ஒருவந்து கிஷ் இன்னொருவனின் செவ்வியல் என்று நான் சொல்லமாட்டேன்.

பள்ளிக்கல்வியில் கவிதையும் கலையும் ஆரம்பத்திலேயே சேர்க்கவேண்டும். இந்தியாவில் மக்காலேவின் திட்டத்தால் இலக்கணத்தை முதலில் கற்பிக்கிறோம். அது பயனற்றது. செவ்வியல் கலைகளை ஆரம்பத்தில் அறிமுகம் செய்தால் கிஷ்ஷை தவிர்த்து நல்ல கலை ரசனை வளரும்.

கேள்வி மனிதர், விலங்கு பறவை ரசனை பற்றி கூறினீர்கள். மீன் பாம்பு ஊர்ந்து செல்லும் விலங்குகளுக்கும் ரசனை உண்டா?
பதில் பறவைகள் மனிதர்களை போல் பகலில் உலவும். அதனால் மோப்பத்தை விட பார்வை திறன் அதிகம். பாம்புகளும் ஊர்ந்து செல்லும் விலங்குகளும் மோப்ப சக்தி அதிகம் கொண்டவை. அதனால் தான் அவை பறவைகளை போல் வண்ணவண்ணமாயில்லை.

கேள்வி சிகர தகற்றம் கண்நுகரும் கலையில் மட்டும் பிரதானமா செவிவழி கலைகளிலும் உண்டா?
பதில் மூளையில் மூன்றில் ஒரு பங்கு பார்வைக்கு. நூற்றிஐம்பது வருடங்களாய் நாம் பார்வையை ஆராய்ந்துள்ளோம். மனித இனத்தின் செவித்திறன் பார்வைத்திறனுக்கு ஈடாகாது. ஆய்வுகளும் அத்துறையில் குறைவே.

ஆனால் கலையில் பொதுவான அம்சங்களுண்டு. கர்ணாடக சங்கீதம் கேட்டிறாத பல அமெரிக்கர்களுக்கு நான் கர்ணாடக் சங்கீதம் கேட்கவைத்து பரிசோதித்ததில், பத்தில் எட்டு நபருக்கு, தர்பாரி கானடா ராகம் வாசித்தால் ஒரு சோகம் உணர முடிகிறது. மோகன ராகம் கேட்டால் ஸ்ரீங்கார ரசம் உணர முடிகிறது. இதை தர்க்க ரீதியாக விளக்க முடியாது. என் கணிப்பில் பெற்றோரை பிரியும் உணர்ச்சி சிகரத்தை தகற்றி, தெய்வத்திடமிருந்து பிரியும் உணர்ச்சியை தர்பாரி கானடா தூண்டுகிறது.

மூளையில் பெரியீட்டல் லோப் என்ற பகுதி உள்ளது. ஐம்புலன்களும் அங்கே இணைகின்றன. இவற்றிற்கு பொதுவாக சில விதிகள் வேலை செய்கின்றன.
  
கேள்வி கலையில் நாம் சமபங்கத்தை ரசிக்கிறோம். ஆனால சில வேளைகளில் ஆபங்கத்தையும் ரசிக்கிறோம். இது சிகர தகற்றத்தின் செயலா?
பதில் சமபங்க பொதுவானது. ஆனால் ஒரு லேசான ஆபங்கம் ரசனையை தூண்டுகிறது. உயிரியல் அறிஞர்களின் பார்வையில் கலை என்பது உயிருள்ள பிராணிகளி அடையாளம் கண்டுகொள்ள வளர்ந்த ஒரு திறன். சமபங்கம் பொதுவாக பிராணிகளை காட்டுவதால், அதை நாம் விரும்புகிறோம்.

சுட்டிகள்
ராமசந்திரனின் இவ்வுறையின் வீடியோ (ஆங்கிலம் - வேறொரு அரங்கில்)
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் ராமசந்திரனின் உரை (ஆங்கிலம்)
சி.பி.ஸ்நோ கட்டுரை – இரண்டு கலாச்சாரங்கள் (ஆங்கிலம்)
The Heuristics of Science - VS Ramachandran lecture at VarahaMihira Science Forum
Neuroscience : A History - Nishant Chandrasekar lecture at VarahaMihira Science Forum


ராமசந்திரனோடும், அவர் மனைவியோடு
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை நண்பர்கள்

Friday, 22 March 2019

Index of lecture Notes உரை குறிப்புகள்


Literature
Science/Mathematics
  1. Life and mathematics of Paul Erdos - Krishnaswamy Alladi
  2. Faraday, GN Lewis, Chemistry - CNR Rao
  3. Sanskrit and Mathematics - Manjul Bharghava
  4. Clouds - Rama Govindarajan
  5. Art and the Brain - Vilayanur S Ramachandran
  6. Mackenzie, Lambton and Buchanan - S Muthiah
  7. 1493 The Columbian Exchange - Michael Mann
  8. Varahamihra Science Forum
  9. India Science Festival - Hyderabad Jan 2023
  10. Why does Music exist? - Alan Harvey ISF Pune Jan 2024 
Economics
  1. Renminbi as International Currency Reserve - Jacob Kurien
  2. Some statistics about Marriage - K Srinivasan
  3. Demonetization and its discontents - S Gurumurthy
  4. RBI Governor C Rangarajan on Economic Reforms 
Personal
  1. Lady and Gentlemen - Malcolm S Adiseshiah
History
    1. Madras, India's first modern city - S Muthiah
    2. Madras and its American connections - S Muthiah
    3. Keezhadi excavation - Amarnath Ramakrishnan
    4. Interesting experiences of a lawyer and a judge - AR Lakshmanan
    5. Punjabis Marwadis Parsis in Madras - Anuradha Oberoi
    6. Political Situation in Nepal - Kanakmani Dixit
    7. Parsis of Chennai - Tehnaz Bahadurji
    8. Is India secular? - Michel Danino
    Music 
    1. Kanchi Naina Pillai - V Sriram
    2. Why does Music exist? - Alan Harvey ISF Pune Jan 2024 
    3. Muthuswamy Deekshitar - V Sriram
    4. Neyveli Santhanagopalan on the Veena
    Temples
            Hindu temples in Bali - Prof Wayan Dibia
            Tiruppudai Marudur paintings - Prof Baluswamy

    தமிழ் உரைகள் - என் குறிப்புகள்
    1. ரா அ பத்மனாபன் அஞ்சலி
    2. மயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி
    3. தமிழ் நாடக இசை - TKS ilangovan 
    4. மாமல்லபுரம் - வரலாற்று புதிர்கள் - 2016 பேச்சு கச்சேரி
    5. காஞ்சி மகாமணி - 2017 பேச்சு கச்சேரி
    6. அழகின் விதிகள் - விலையனூர் ராமசந்திரன் உரை
    7. இயல் இசை மியூசியம் - 2018 கலை நிகழ்ச்சிகள்
    என் உரைகள் - என் குறிப்புகள், காணொளிகள்
      1. Guns, Germs and steel நூல் அறிமுகம்
      2. உலக பொருளாதார வரலாறு (ஆலன் பீட்டி போலிப் பொருளாதாரம்)
      3. நரசையாவின் மதராசபட்டினம் நூல் விமர்சனம் - ர கோபு
      4. சென்னை நகரத்து நூலகங்கள் - ர கோபு
      5. பண்டை நாகரிகங்களின் வானியலும் கணிதமும் - ர கோபு
      என் வலைப்பூ - பொருளடக்கம்

      Tuesday, 12 June 2018

      சென்னை நகரத்து நூலகங்கள்



      தீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த்தியும் பிரியா தியாகராசனும் பபாசி நிறுவனத்தின் சார்பில் கேட்டனர். மகிழ்ந்தே ஒப்புக்கொண்டேன். ஒரு சில நூலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலர்களோடு பேசி, சில தகவல்களை சேகரித்தேன். 

      சிறு வயதிலேயே கன்னிமாரா நூலகத்திற்கு என் தாய் புஷ்பாவுடன் சென்றுள்ளேன். அம்மா எத்திராஜ் கல்லூரியில் எம்.ஃபில். பொருளியல் படித்துவந்தாள். சில சனிஞாயிறு அன்று கன்னிமாரா செல்லும்போது என்னையும் அழைத்துச்செல்வாள்.

      கன்னிமாரா நூலக புதிய கட்டத்தில்
      கன்னிமாரா நூலக பழைய கட்டத்தில்

      மதறாஸ் இலக்கிய சங்க நூலகம்

       அக்காலத்தில் தமிழ் படிக்கும் ஆர்வமேதும் இல்லை. குமுதம் கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் வரும் துணுக்கு ஓவியங்களை (கார்ட்டூன்) மட்டும் படித்து ரசிப்பேன். எப்பொழுதாவது பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளை வாசித்து காட்டுவாள்; ரசகுண்டு பேரை கேட்டாலே சிரிப்பு வரும். எனக்கு ஒன்பது வயதிருக்கும். ஆங்கிலத்தில் படிப்பதிலும் ஆர்வமில்லை. ஆனால் சென்னையிலிருந்து புனே செல்லும் ரயிலில், பொழுது போக்க யாரோ கருடன் எனும் அமர் சித்ர கதா ஓவியக்கதையை (காமிக் புத்தகம்) வாங்கி கொடுக்க, காமிக்புக் மோகம் பிறந்தது. ஆங்கிலம் மட்டுமே. முப்பது வயது வரை தமிழில் ஆர்வம் வரவில்லை.

      சிறுவயதில் தந்தையுடன் ஓரிரு முறை மயிலை ரணாடே நூலகத்திற்கு சென்றுள்ளேன் – ஏதோ ஒரிரு மாலை வேளை ஏதாவது சில மாதாந்திர பத்திரிகை அல்ல செய்தித்தாளை படிக்க போவார். அதன் வாசலில் நிற்கும் நடமாடும் தபால்வண்டியை (சிவப்பு வேன்) ஒரு முறை அவர் காட்டினார். வாய்பிளந்தேன்.

      கடந்த சில வருடங்களாய் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திலும் அடையாறு கே.வி.சர்மா நூலக்த்திலும் பற்பல நாட்கள் நாலைந்து மணிநேரம் படிக்கும் இன்பத்தில் மூழ்கியுள்ளேன். உவேசா நூலகத்திற்கு நரசையா அழைத்து சென்று தமிழ் தாத்தாவின் கையெழுத்தும் சன்னதும் ஓலைச்சுவடிகளையும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வாழ்த்தையும் பார்த்தது மறக்க முடியாத திருநாள். அங்கு நண்பர் உத்திராடம் பணியாற்றி வருகிறார்; அவரைக் கண்டதும் ஒரு இன்ப அதிர்ச்சி. அவர் சென்னை கிறுத்துவ கல்லூரி பேராசிரியர் பாலுசாமியின் மாணவர்; பல முறை பேசி பழகியுள்ளோம். உவேசா நூலகத்தை பற்றிய பல தகவல்களை அளித்ததுடன், தே.சிவகணேஷ், ஐ.சிவகுமார் எழுதிய “சென்னை நூலகங்கள்” என்ற புத்தகத்தையும் காட்டினார். கைத்தல நிறைகனி! எல்லா நூலகத்திலும் வாசலிலே வரவேற்கும் மாவிலைத் தோரணம் போல இந்நூலை காட்சி வைக்கலாம்.

      இருளில் ஒலித்த குரல்

      ஒளிமயமான பிரதீப் உரை

      நண்பர்கள் ராம்கி, சேவாலயா முரளிதரன், காந்தி நிலையம் அண்ணாமலை ஆகியோர் அறிவுருத்தி சைதை காந்தி நூலகம் பற்றி அறிந்தேன். அதன் நிறுவனர் மகாலிங்கத்தின் மகன் நித்தியானந்தரை பலமுறை டக்கர் பாப்பா காந்தி நிலையத்தில் புதன்கிழமை நூலாய்வுகளில் சந்தித்துள்ளேன். மகாலிங்கம் ஆச்சரியமானவர். கல்கி, ராஜாஜி, மாபொசி, ராஜம் ராமசாமி, கண்ணதாசன், பரளி சு நெல்லியப்பர் என்ற பல ஜாம்பவான்கள் தன் நூலகத்திற்கு வந்த வரலாற்று சம்பவங்களை பேசி நெகிழ வைத்தார். 

      அதே போல் திருவல்லிக்கேணி கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்து நிறுவனர்கள் நரசிம்மன்னும் பார்த்தசாரதியும் அன்பாக பேசியதோடு, இதே ஜாம்பவான்கள் தங்கள் நூலகத்துக்கு வந்ததை சொல்லி அசரவைத்தனர். எம்.எஸ்.விசுவனாதனுக்கு “மெல்லிசை மன்னர்” என்ற பட்டத்தை அளித்ததே இவர்களது திருவல்லிக்கேணி கலாச்சார மன்றமே என்று தெரிந்ததும், நூலகத்தில் புத்தகத்தை தாண்டி எத்தனை அதிசயங்கள் உள்ளன என்பதை புரியவைத்தது.

      அந்நாளில் சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிய அரசு கீழ்திசை சுவடி நூலகத்திற்கு சென்றபோது, அதன் இயக்குனர் சந்திரமோகன் அவர்களே பொறுத்து பல தகவல்களை அளித்தார். இந்த சுவடி நூலகம் சமீபத்தில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு இடம் மாறியுள்ளது. வரலாற்று புகழோடு அரிதான களஞ்சியமாக திகழும் நூலகம் என்பதால், ஓலைச்சுவடிகளையும் அவற்றின் பாதுகாப்பு முறைகளையும் படமெடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார். ஆனால் தன்னுடைய கணினியில் வைத்திருந்த படங்களை படமெடுக்க அனுமதித்தார். அடுத்த நாள் அடையாறு நூலகமும் இதைப்போல் அனுமதி மறுத்தது. பின்னாளில் அடையாறு நதி வரலாற்று தேடலின் போது நண்பர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அனுமதி பெற்று, அடையாறு நூலகத்து அரிய நூல்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகமதிய நூலகத்தின் மேலாளரை பார்த்து தகவல்கள் பெற்றுக்கொள்ள நண்பர் கோம்பை அன்வர் அறிவுருத்தினார். மூன்று முறை சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை. மயிலை ராமகிருஷ்ண மடத்து நூலகத்திலும் மேலாளர் சென்ற போது இல்லை, அவர் அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியவில்லை, படம் கூட எடுக்கவில்லை.

      ஒரு மணி நேர உரைக்கு தயாரான பின் நாற்பது நிமிடமாக சுருங்கியது. கொஞ்சம் வேகவேகமாக பேசினேன். 1950களோடு நிறுத்திக்கொள்ளும் நிலமை, சில நூலகங்களை பற்றி பேச இயலவில்லை. இணையமே இன்று அனைவருக்கும் நூலகமாயினும், காகித புத்தக நூலகங்கள் வழக்கொழியவில்லை.

      காணொளி பதிவாகவில்லை என்பதால் ஒலிப்பதிவுடன் படங்களை சேர்த்து காணொளியை நான் படைத்து இணையத்தில் ஏற்றியுள்ளேன். கீழே காணலாம்.

      வத்தல்குழம்பு சம்பவம், சின்ன மழையில் தவித்தாலும் பெருவெள்ளத்தில் தப்பித்த நூலகம், ஆங்கிலேய உவேசா என்று அழைக்க தகுந்தவர் யார், எகிப்து மன்னர் கொடுத்த பரிசு, நூலகவியலின் தந்தை, அவர் வகுத்த ஐந்து விதிகள், தமிழில் மருத்துவ நூலை எழுதிய அமெரிக்கர், சிவலிங்க வடிவிலுள்ள ஓலைச்சுவடி நூல், திபெத்திய திபிதகம் என்று பல சுவையான தகவல்கள் இவ்வுரையாய்வு தேடலின் போது கிடைத்தன. இதையெல்லாம் காணொளியில் பார்க்கலாம். இந்த நூலகங்களுக்கு நேரில் சென்றும் காணலாம்.  

       சென்னை நகரத்து நூலகங்கள் - video

      உறவுடை சுட்டிகள்

      ஞானதேவதைகள்அமெரிக்க தேசிய நூலகத்து ஓவியங்கள்
      ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய உவேசா வாழ்த்து
      ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு
      இந்த உரையின் ஒலிப்பதிவு


      Wednesday, 10 December 2014

      Lady and Gentlemen


      1970. Or maybe late 1969. Evening. Ranade Library in Luz, Mylapore. Malcolm Adiseshiah was about  to deliver a lecture on economics at the Srinivasa Sastri Hall.

      Malcolm Adiseshiah and wife - photo at MIDS, Adayar, Madras
      “Ladies and Gentlemen,” he began. Then he corrected himself.

      “Lady and Gentlemen,” he said, smiling at the only lady in the room.

      After a pause, while other necks craned to glimpse the only lady in the room, he improved upon his correction.

      “Lady with a baby in her hand, and Gentlemen,” he grinned, and this time the audience broke into 
      laughter and approval.

      My father, Rangarathnam, told me this story. At that time he was an upcoming lawyer in the Madras High Court - a Mylapore vakeel in Tamil parlance; a part time lecture on Mercantile and Commercial Law at the Vivekanda College; an amateur novelist – at least one of his stories had been published in either Kumudam or Ananda Vikatan, under the pseudonym Athreyan; with a suspended career in politics – he had contested the 1967 Madras elections under a Congress ticket for post of Corporation Councillor and had lost in the DMK wave.

      The lady with the baby was Pushpa. She had written her MA (Economics) final papers in April 1969, while eight months pregnant.

      She was my mother.

      I was reminded of the incident when I attended a lecture at MIDS, in Adayar, yesterday. MIDS was founded by that very Adiseshiah.

      There is famous incident in the life of Subrahmanya Bharathi, when he went to meet Sister Nivedita and she asked him why she hadn't brought his wife.

      My dad always beamed with pride when he told me this story. I think about this when I see the rare couple attend a program together.

      The photo below is of my parents, at a School Day function in CIT Colony English Primary School, Mylapore where my sister, my brother and I studied first. This photo is from 1978 - my father was Chief Guest and my mother gave away the prizes.

      Pushpa and Rangarathnam
      Related Posts
      1. On Teacher's Day
      2. அப்பாவுக்கு பிடித்த கவிதை