Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Saturday, 28 March 2020

லண்டன் சுத்தமாகிய வரலாறு


The Thames and the Cooum (ஆங்கிலத்தில் இந்த கட்டுரை)


எச்சரிக்கை சாக்கடை, நோய், சாணி என்று பல விஷயங்களை அலசும் கட்டுரை. சாப்பாட்டு வேளையில் படிப்பதை தவிர்க்கவும்.

கூவம் நதி

இன்று பாரதத்தை வருமை வாடும் நாடாகவும், ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா ஜப்பான் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை தூய்மையான பணக்கார நாடுகள் என்றும் உலகம் கருதுகிறது. ஓரளவுக்கு இது நிதர்சனம். பொது இடங்களில் குப்பை, தெருவோரத்திலும் தண்டவாள ஓரத்திலும் மலஜல கழிப்புகளும் பாரதத்தில் தினசரி காட்சி.

சென்னையில் ஓடும் கூவம் ஒரு மோசமான சாக்கடை. அடையாறு நதியும் பக்கிங்காங் கால்வாயும் சாக்கடையாக திகழ்வதால் பலரால் கூவம் என்றே அழைக்கப்படுகின்றன. சென்னையில் ஓடும் மற்ற சாக்கடைகளும், கால்வாய்களும், கூவம் என்று அழைக்கப்படுகின்றன.

சினிமாவிலும் டிவியிலும் லண்டன் நகத்தை காணும் போது வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த சீர்மல்கும் நகரத்தில் நீரோடும் தேம்ஸ் நதியையும் பல பாலங்களையும் காணலாம். அந்த தூய்மை நம் நாட்டிற்கு என்று வரும் என்று ஏங்காதவரில்லை.

சென்னையில் கூவம் நதி
ஆனால்... பத்தொன்பதாம் நூற்றாண்டில் லண்டன் இன்றைய பாரதத்து நகரங்களை விட மிக அசுத்தமாக இருந்தது. இன்றைய கூவத்தை விட லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி பன் மடங்கு மோசமான சாக்கடையாக இருந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் ரோமாபுரி சீர்குலைந்தது. அதற்கு பின் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் முதல் மாநகரமாக லண்டன் வளர்ந்து வந்தது. உலகின் மிகப்பெரிய குப்பைக்கூடமாகவும் லண்டன் திகழ்ந்தது. அன்று லண்டன் நகரில் மட்டுமல்ல மேலை நாடுகள் எங்கும் இன்று போல் நவீன கழிப்பிடங்களோ, பாதாள சாக்கடையோ கிடையாது.

மன்னராயினும், செல்வந்தராயினும், வீட்டில் ஒரு பானைதான் அவர்களது கழிப்பிடம். காலைகடன்களை கழித்த பின் வீட்டு வேலைக்காரர்கள் இந்த பானைகளில் உள்ள மலஜலங்களை ஜன்னல் வழியாக தெருவில் வீசுமளவு பல மோசமான சம்பவங்கள் நடந்தன. பெரும்பான்மையாக, மலங்கள் சேகரிக்கப்பட்டு வண்டிகளில் ஏற்றி ஊருக்கு வெளியே வயல்களுக்கு எருவாக எடுத்து செல்லப்பட்டது.

மற்றவரெல்லாம் வீட்டுக்கு வெளியே வயலிலோ தோப்பிலோ மலம் கழிக்கவேண்டும். காகிதம் இல்லை. வருடத்தில் ஆறு மாதங்கள் கடும் குளிர் காலம், உரைந்து போன நீரால் சுத்தம் செய்துகொள்ள முடியாது. குளிப்பதே அபூர்வம். பதினாறாம் நூற்றாண்டு வரை நிலக்கரி கிடைக்கவில்லை. விறகு வாங்கி நீரை கொதிக்கவைத்து தான் குளிக்கவே முடியும். குளிர்காலம் ஆறு மாசம் பெரும்பான்மையான மக்கள் குளிக்கவே மாட்டார்கள். பதினாங்காம் நூற்றாண்டிலும், பதினேழாம் நூற்றாண்டிலும் ஐரோப்பா முழுவதும் பரவிய பிளேக் என்னும் மகாமாரி தொற்றுநோய்க்கு இதுவும் ஒரு காரணம். (சிற்சில சுகாதார முன்னேற்றங்களால் எப்படி ஐரோப்பாவின் சுகாதாரம் முன்னேறியது என்று ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் எனும் விஞ்ஞானி “வேக்சினேஷன் - ஒரு மாயை” என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். தடுப்பூசியை கண்டிக்கும் புத்தகம் என்பதால் அது அச்சிலும் இல்லை, விஞ்ஞானிகள் படிப்பதும் இல்லை).

சுகாதாரத்தின் வரலாற்றையோ மேற்கத்திய நாகரிகத்தின் வருமையையோ நாம் யாரும் படிப்பதில்லை.
லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி

தேம்ஸ் நதியின் நிலை

மீண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டனுக்கு வருவோம். குறிப்பாக 1850கள். உலகின் கால் பகுதியை கிழக்கு இந்தியா கம்பெனி ஆண்ட காலம். விக்டோரியா இங்கிலாந்துக்கு ராணியாகவும் இந்தியாவுக்கு சக்கரவர்த்தினி என்றும் பட்டம் பெற்ற காலம். சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சியை பரிந்துரைத்து நூல் எழுதிய காலம். மங்கள் பாண்டே, ஜான்சி ராணி, போன்றோர் தூண்டுதலில் சிப்பாய் கலவரம் நடந்த காலம். இந்த வரலாற்று சம்பவங்கள் நடந்தபோது இங்கிலாந்தின் பாராளுமன்றம் லண்டனில் இல்லை. தேம்ஸ் நதியின் துர்நாற்றம் தாங்கமுடியாமல் லண்டனை விட்டே ஓடிவிட்டனர். “மாபெரும் துர்நாற்றம் ”The Great Stink" (தி கிரேட் ஸ்டிங்க்) என்று இதற்கு ஆங்கிலேய பத்திரிகைகள் பெயர் வைத்தன. 
லண்டன் சுத்தமாகிய வரலாறு
ஆம்! சென்னை, பம்பாய், கல்கட்டா வெய்யில் தாங்க முடியாமல், ஊட்டி, லோனாவ்லா, சிம்லா என்று கோடைக்கால தலைநகரங்களை இந்தியாவில் உறுவாக்கிய ஆங்கிலேயர், லண்டனின் துர்நாற்றம் தாங்காமல் மாற்று தலைநகரை இங்கிலாந்தில் அமைத்தனர். தேம்ஸ் நதியையும் லண்டனையும் சுத்தம் செய்ய பல திட்டங்கள் வடிக்கப்பட்டன. எதிர்ப்புகளும் பலமாக எழுந்தன. சாட்விக் என்பவர் ஒரு திட்டம் வகுத்து பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தார். லண்டன் டைம்ஸ் நாளிதழ் அதை கடுமையாக எதிர்த்தது. “இங்கிலாந்து சுத்தமாக விரும்புகிறது ஆனால் சாட்விக் எங்களை சுத்தம் செய்ய வேண்டாம்” என்றது ஒரு தலையங்கம்.

மைக்கேல் ஃபாரடே எனும் அறிவியல் மேதையிடம் இந்த துர்நாற்றத்தை போக்க வழிகேட்கும் சித்திரங்கள் அச்சில் வெளியாகின (படத்தில் காணலாம்).
மைக்கேல் ஃபாரடேவின் திட்டம்
ஒரு அழுக்கு ஆணாக தேம்ஸ் நதி

“நம்மால் இந்தியாவை கைப்பற்ற முடிந்தது; உலகின் எல்லைகளுக்கு கப்பலகளை அனுப்ப முடிகிறது, நாட்டின் ஓயாத கடன்களுக்கு வட்டி கட்ட முடிகிறது, பெரும் செல்வத்தை உருவாக்கி, உலகையே ஆள முடிகிறது, ஆனால இந்த தேம்ஸ் நதியை மட்டும் சுத்தம் செய்ய முடியவில்லை” என்று 1858 இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ் பத்திரிகை புலம்பியது.

“செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுகிறோம், மலிவாக இணைய செல்போன் வசதிகள் செய்கிறோம், பற்பல கணினி மென்பொருள் கம்பெனி நடத்துகிறோம், கூவத்தை சுத்தம் செய்யமுடியவல்லை,” என்று இந்தியாவில் இதே போல் புலம்பலாம்.

இறந்தாலும் ஆயிரம் பொன்

காலரா தொற்றுநோய் லண்டனில் பரவி பல உயிர்களை பலி வாங்கியது. லண்டன் சேரிகளில் மாண்ட ஏழைகள் அதிகம். ஆனால் இறந்தவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. உலகின் மிக வல்லமை படைத்த விக்டோரியா ராணியின் கணவர், இளவரசர் ஆல்பர்ட்டும் இறந்தார். நாற்பத்தி இரண்டு சாக்கடைகள் சூழ்ந்த அரண்மனையில் ஆல்பர்ட் இறந்தார், என்று எழுதுகிறார் பீட்டர் மெடாவர் (நூல் : அறிவியலின் எல்லை – The Limits of Science தி லிமிட்ஸ் ஆஃப் சயனஸ்). விதவையான விக்டோரிய தாங்கமுடியாத வருத்தத்தில் லண்டனை சுத்தம் செய்ய ஆணையிட்டார். உலக வரலாற்றிலேயே மனித சமூகத்திற்கு மிகவும் பயனளித்த மரணம், இளவரசர் ஆல்பர்ட்டின் மரணம். இதனால் தான் லண்டனில்  நவீன உலகின் முதல் பாதாள சாக்கடை அமைப்பு அறங்கேறியது. பின்னர் உலகெங்கும் நவீன கழிப்பிட வசதிகள் பரவின. இந்தியாவில் கழிப்பிடங்களை லண்டன் என்று அழைக்கும் வழக்கமிருந்தது; சமீபகாலமாக இல்லை.

பல சட்டங்கள் இயற்றி பெரும் பாடு பட்டு, தேம்ஸ் நதியில் கழிவுகள் நுழைவதை குறைத்தனர். பாதாள சாக்கடைகள் கட்டப்பட்டன. கழிவுகளை ஏற்ற இறக்கம் செய்யும் பம்புகள் தயாரிக்கப்பட்டன. ஜோசப் பால்சாகட் என்ற பொறியாளரின் தலைமையில் இது நடந்தது. முதல் சாக்கடை பம்பு மையத்தை இளவரசர் எடுவர்ட் திறந்து வைத்தார்.

கிராஸ்நெஸ் பம்பு மையம், இங்கிலாந்து

மாசை ஒழித்த மோட்டார் வண்டிகள்

இங்கே குதிரைகளையும் குறிப்பிட வேண்டும். குதிரைச்சாணியை குறிப்பிடவேண்டும். சமீபத்தில் அமெரிக்க பொருளியல் வல்லுனர் ஸ்டீவன் லெவிட்ட எழுதிய சூப்பர்ஃப்ரீக்கனாமிக்ஸ் (SuperFreakonomics) நூலில் 1890களில் நியூயார்க் நகரத்து குதிரைச்சாணி பிரச்சனையை பற்றி விரிவாக எழுதியிருந்தார். 

மாஜி அமெரிக்க துணை ஜனாதிபதி ஆல் கோர் முதல், ஸ்வீடன் நாட்டு மாணவி கிரெடா தார்ண்பெர்க் வரை, கார்பன்-டை-ஆக்ஸைட் காற்று மாசையே பெரும் மாசு பொருளாக ஊடகங்கள் ஊதிப் பெருக்கிவந்தன. ஆனால பெட்ரோல் டீசல் எஞ்சின் பொருந்திய கார்களும் பேருந்துகளும் மோட்டார்வண்டிகள் தோன்றும் முன், குதிரைச்சாணியே மேல்நாடுகளில் பரவலான மாசு பொருளாய் திகழ்ந்தது. 

பாரத நாட்டில், வெள்ளைக்காரர் வருகைக்கு முன்னர் படைகளும் பணக்காரர்களும் மட்டுமே குதிரைகள் வைத்திருந்தனர். பாரதத்தில் மாடுகளே அதிகம். மாடுகளை கூட்டம் கூட்டமாக மாலை நேரங்களில் ஊருக்குள் ஓட்டிவந்து கோவில்களிலும் வீடுகளிலும் உள்ள கோசாலைகளில் கட்டிவைப்பது பழக்கம். அப்பொழுது தெருவில் மாடுகள் சாணி போட்டுக்கொண்டே போகும். மாட்டு சாணத்தை பஞ்சகவ்யத்தில் ஒன்றாக, புனிதப்பொருளாக ஹிந்து மக்கள் கருதியதால், எல்லா ஜாதி மக்களும் அந்த மாட்டுச்சாணியை அள்ளி தங்கள் வீட்டுப்பயனுக்கு சேகரித்து வைப்பது பழக்கம். 1980கள் வரை கிராமத்து வீதிகள் மட்டுமல்ல, நகரத்து மண் வீதிகளையும், வீட்டு வாசல்களையும் காலை எழுந்தவுடன் மாட்டுச்சாண நீரால் தெளித்து சுத்தம் படுத்துவார்கள். திராவிட மொழி குடும்பத்தை கண்டுபிடித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ், சென்னையில் தடுப்பூசி முறையை அறிமுகம் செய்த போது, அதை ஆறாம் பஞ்சகவ்யம் என்று பட்டம் சூட்டி பிரச்சாரம் செய்தார். 

பாரதத்தை தவிர எங்கும் பசுக்களுக்கோ மாட்டுச்சாணிக்கோ இந்த புனித மரியாதை கிடையாது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கோச்சுவண்டிகளை இழுக்கும் குதிரைகளின் சாணிக்கும், தனி நபர் ஓட்டிய குதிரைகளின் சாணிக்கும் எந்த புனிதமும் கிடையாது. 

மழைபெய்து அந்த சாணியை கால்வாய்களிலும் நதிகளிலும் தள்ளிக்கொண்டு போனால் தான் ஊர் தெருக்கள் எல்லாம் சுத்தமாகும். ஒரு காலத்தில் குதிரைச்சாணியை எருவாக விற்றார்கள். பின்னர் இலவசமாக வயல்களுக்கு அனுப்பினார்கள். ஒரு கால கட்டத்தில் எங்களுக்கு இவ்வளவு மலை மலையாய் குதிரைச்சாணி வேண்டாம் என்று விவசாயிகள் தடுத்தார்கள். இதற்கு ஒரு தீர்வுகாண நியூயார்க் நகராட்சி ஒரு பத்து நாள் மாநாடு கூட்டி, எங்களால் தீர்க்க முடியாது என்று மூன்றாம் நாளே மாநாட்டை இழுத்து மூடி விட்டனர்.

அதிஷ்டானத்தின் ரகசியம்

இந்த சாணி கலந்த சகுதி தங்கள் தெருவிலிருந்து இல்லத்தில் புகாமல் தடுக்க, பணம்படைத்தவர்கள் நாலைந்து படியேறும் அளவு அதிஷ்டானம் கொண்ட வீடுகளை கட்டினர். இன்றும் நியு யார்க், லண்டன் போன்ற நகரங்களுக்கு சென்றால் இந்த மாதிரி நூறு வருடத்திற்கும் முன் கட்டப்பட்ட வீடுகளை பார்க்கலாம். அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ் எனும் பல மாடி குடியிருப்புகள், 1950களில் தான் இந்த நாடுகளில் தோன்றின. 1920களிலேயே மோட்டார் வாகனங்களின் வருகையால் குதிரைவண்டிகள் மலியத்தொடங்கின. குஜராத் மாநிலத்தில் சித்தபுரம் என்று ஒரு ஊர் உள்ளது. போஹ்ரா முஸ்லிம்கள் இந்த ஊரில் அதிகம். அவர்கள் பதினேழாம் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து கட்டிய வீடுகள் என்பதால், அந்த காலத்து ஐரோப்பிய வீடுகளை போலவே உயர்ந்த அதிஷ்டானம் கொண்டவை. ( இக்காலத்தில் பாரத நாட்டிலோ சாலை ஒப்பந்தகாரர்கள் வருடாவருடம் சாலைகளை உயர்த்துவதால், எல்லா வீட்டு அதிஷ்டானங்களும் உயர்கின்றன. வரப்புயர என்றுரைத்த ஔவை சிரிப்பாள்).

சித்தபுரம் குஜராத் - போஹ்ரா முஸ்லிம் வீடுகள் 

மோட்டார் வண்டி வருகையால் குதிரைச்சாணி பிரச்சனை தீர்ந்தது. அரசு நடவடிக்கையாலோ சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலோ அல்ல.
இன்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பசுமை போராளிகளும் பெட்ரோல் டீசல் எஞ்ஜின்களை வன்மையாக கண்டித்து அதை ஒழிக்கவேண்டும் என நினைக்கின்றனர். கார்பன்-டை-ஆக்ஸைட் புகையை உலகின் பெரும் சாபமாக சித்தரிப்பது வழக்கம். குதிரைச்சாணி வரலாறு தெரிந்தால் கொஞ்சம் கூச்சல் குறையலாம்.

தென் அமெரிக்க கப்பல்கள்

வேறு ஒரு தகவலும் இங்கே பொருந்தும். ஆல்கெமி ஆஃப் ஏர் Alchemy of Air (காற்றின் ரசாயனம்) எனும் நூலில் தாமஸ் ஹாகர் தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வௌவால் சாணியும் பறவைகள் சாணியும் கப்பல் கப்பலாக வந்ததை வர்ணிக்கிறார். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் மலைமலையாய் தென் அமெரிக்க தீவுகளில் வௌவால் சாணியும் பறவைச்சாணியும் குவிந்திருந்தன. மாட்டுச்சாணம் ஆட்டுச்சாணம் பற்றாக்குறையாலும் யூரியா போன்ற செயற்கை எரு அக்காலத்தில் இல்லாததாலும், இந்த தென் அமெரிக்க வௌவால் சாணம், ஐரோப்பிய விவசாயிகளால் ஆவலுடன் வரவேற்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சென்ற மிளகுக்கும் காபிக்கும் சக்கரைக்கும் ஜவுளித் துணிகளுக்கும் போட்டியாக ஐரோப்பிய துறைமுகங்களில் வரவேற்கப்பட்டன. கடலில் கப்பல் வரும்போதே, துறைமுகத்தில் சாணிக்கு ஏலம் நடத்தப்பட்டது.

இருக்கிற தேம்ஸ் நதியின் துர்நாற்றம் போதாதோ? இந்த கப்பலகளின் சுமை அதை அதிகரித்தன. ஈக்களும் கொசுக்களும் பெருகி வந்தன. காற்றின் துர்நாற்றம் நோய்களை உண்டாக்கியது என்று தவறாக விஞ்ஞானிகளும் நம்பிய காலம் அது. மலேரியா நோய்க்கு இப்படிதான் பெயர் உருவானது. மல் என்றல் தீயது. ஏர் என்பது காற்று. தீயகாற்றால் வரும் நோய் மல்+ஏர் மலேரியா என்று பெயரிடப்பட்டது. அது கொசுக்கடியால் வரும் நோய் என்று பின்னர் தான் தெரிந்தது.

லண்டனில் காலரா நோய் பரவியதிற்கு கொசுக்களோ, துர்நாற்ற காற்றோ காரணமில்லை. தெருவிலேயே லட்சக்கணக்கான மக்கள் மலம் கழித்துவந்ததால், நிலத்தடி நீர் மாசுபட்டு வந்தது. பம்புகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து மக்கள் குடிநீராகவும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். ஜான் ஸ்னோ என்ற மருத்துவர் இந்த பம்புகள் ஏற்றிய நீரை ஆய்வு மேற்கொண்டு, இந்த மாசுபட்ட நீரே காலராவுக்கு காரணம் என்று முடிவுக்கு வந்தார். நீராய் காய்ச்சி குடிக்கவேண்டும், வடிகட்டி குடிக்கவேண்டும், இவ்விரண்டும் செய்தால் காலராவை கட்டுப்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார். இந்த வரலாற்றை ஸ்டீவன் ஜான்சனின் வீடியோவில் நீங்களே கண்டு புரிந்துகொள்ளலாம்.

எதிர்மறையாக தமிழ்நாட்டில் ஊருணி போன்ற நீர்நிலைகள் எப்படி பாதுகாக்கப்பட்டன என்பதை பத்ரி சேஷாத்ரியின் இந்த வலைப்பதிவில் படிக்கலாம் 

லண்டனை தொடர்ந்து பம்பாய் கல்கத்தாவிலும், பின்னர் மதறாஸ் ராஜதானியிலும், குறிப்பாக தலைநகர் மதறாஸில், ஆளுனர் ஹோபார்ட் துரை ஆட்சி காலத்தில் பாதாள சாக்கடை, நவீன நீர் விநியோக திட்டம் எல்லாம் வகுக்கப்பட்டது. சென்னைக்கு செயலாளராக பதவியேற்க வந்த ராபர்ட் எல்லிஸை அவர் இங்கிலாந்திலிருந்து கிளம்புமுன் ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் சந்தித்து, சென்னைக்கு பாதாள சாக்கடை திட்டம் அமைத்தால் தான் காலராவின் தாக்கம் குறையும் என்று அறிவுரித்தினார். ஆளுனர் ஹோபார்ட்டுக்கும் அவர் பல கடிதங்கள் எழுதினார். பரிதாபம்! இளவரசர் ஆல்பர்ட்டை போல் ஆளுனர் ஹோபார்ட்டும் நோய்பட்டு இறந்தார். அடுத்த கவர்னர் தலைமையில் வந்த அரசாங்கம் இந்த திட்டங்களை சுருசுருப்பாக செய்ய ஹோபார்ட்டின் மரணம் தூண்டியது. 

1864-இல், லூயி பாஸ்ச்சூர் எனும் பிரெஞ்சு விஞ்ஞானி பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளினால் பல நோய்கள் உண்டாகின என்று நிரூபித்தார். அதை மற்ற விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள ஒரு பத்தாண்டுகள் ஆனது. 

இதற்கு முன்பே 1840களில் வியன்னா நகரத்து மருத்துவர் இக்னேஷியஸ் செம்மல்வெய்ஸ், மருத்துவர்கள் கைகழுவாமல் மருத்துவம் செய்வதால் பல நோயாளிகள் மருத்தவமனைகளில் இறக்கிறார்கள் என்று எச்சரிக்கை எழுப்பினார். கை கழுவுவதை கௌரவ குறைவாக் கருதிய மருத்துவர்கள் அவரை நிராகரித்தனர், ஒதுக்கினர். சாதிபிரஷ்டத்துக்கு சமமாக தொழில் பிரஷ்டம் செய்தனர். அவர் அரைக்கூவலை எழுப்பி, அச்சில் பல பிரச்சாரங்கள் செய்து, அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து, எதிர்ப்பை அதிகரித்தார். நீங்களெல்லாம் கொலை செய்கிறீர்கள் என்று பொதுமன்றத்தில் குற்றம் சாட்டியபின் அவரை 1865இல் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்தனர். அங்கேயே இறந்தார். அவருடைய கருத்தை ஏற்க ஐரோப்பிய மருத்துவர்களுக்கு ஒரு சில ஆண்டுகள் தேவைப்பட்டது. 

லண்டனை தொடர்ந்து மற்ற ஊர்களில் குடிநீர் விநியோகம் தூய்மை பெற்று, கழிப்பிடங்கள் நவீனமாகி, ஒரு பெரும் சுகாதார முன்னேற்றமும் சுற்றுச்சூழல் புரட்சி நடக்க பல வருடங்களாயின. தெருவிலே மலம் வீசுவது குறைந்தது. ஆனால் குதிரைச்சாணி குறைய இன்னும் ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டன – மோட்டார் வாகனங்கள் புழங்கி தெருவெல்லாம் இன்று நாம் பாராட்டும் தூய்மை எய்த டீசல் பென்ஸ் டைம்லர் ஹென்றி ஃபோர்ட் ஆகியோரின் மோட்டார் வாகன புரட்சி வர அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன.

லோத்தல் தோலவீரா
லோத்தல் - கழிப்பிடம்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளியில் (சிந்து சரஸ்வதி சமவெளியில்) மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நகரங்களில் நீர் விநியோக வசதியும், சாக்கடை வெளியேற்று கால்வாய்களும் சிறப்பாக இருந்ததாக நாம் வரலாற்று பாடநூல்களில் படிக்கிறோம். குஜராத் மாநிலத்துல் உள்ள லோத்தல், தோலவீரா எனும் தொன்மையான நகரங்களில் இதை நேரில் பார்த்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நவீன சாக்கடைகள் அமைக்கும் முன் உலகின் மிகச்சிறந்த சாக்கடை திட்டம் என்று புகழ் பெற்றவை.

சுட்டிகள்

The Thames and the Cooum (ஆங்கிலத்தில் இந்த கட்டுரை)
காலராஸ்டீவன் ஜான்சன் வீடியோ (ஆங்கிலம்) 
Vaccination - A Delusion by Alfred Russel Wallace
ஊருணி – பத்ரி சேஷாத்ரி கட்டுரை 
சென்னையில் பாதாள சாக்கடை – ஸ்ரீராம் கட்டுரை (ஆங்கிலம்
 Vaccination in Madras - சென்னையில் தடுப்பூசிஎன் உரை வீடியோ (ஆங்கிலம்


Thursday, 22 August 2019

Index of Madras essays மதராசபட்டினம் கட்டுரைகள்

Essays about Madras / Chennai

Traffic - LMS
On Teacher's day
An evening with Pamela and John Davis
Erdos on Madras - a Hungarian mathematician's poem
Chennai? China? Madras? Madrassa?
Rabindranath Tagore and UVe Swaminatha Iyer
On human kindness
Gunduperumbedu - ancient fossil site near Madras
An Englishman's Tamil inscription (Ellis inscription part 1)
The meikeerthi of King George III (Ellis inscription part 2)
Thomas Trautmann on Francis Whyte Ellis
The Thames and the Cooum

Madras - India's first modern city (S Muthiah's lecture)
In a library - LMS
Va Ve Subramaniam on Vai Mu Kothainayagi
An interview with Sanjay Subramaniam
The Sehwag difference
Madras and its American Connection (S Muthiah's lecture)
Three Englishmen in Madras (S Muthiah's lecture)
Subrahmanya Bharathi's Essays and Short stories (KRA Narasiah lecture)
Interesting experiences of a  Lawyer and Judge
Punjabis Marwadis Parsis in Madras
A science forum in Chennai
The Parsis of Chennai

Contents Page for my Blog, grouped by Subject

மதராசபட்டினம் கட்டுரைகள்

சென்னை விமான நிலையம்
நான் ரசித்த சில பெயர் பலகைகள்
மார்கழி இசை அனுபவம்
மென்பொருள் முகவர் முனைவகம்
எல்லீசன் கல்வெட்டு - இருப்பதேழு கிணறு
எல்லீசன் கல்வெட்டு - ஜார்ஜ் மன்னன் மெய்கீர்த்தி
போர்க்காலத்தில் சென்னை - அடையாறு போர்
போர்க்காலத்தில் சென்னை - பல்லவர் சோழர் காலம்
போர்க்காலத்தில் சென்னை - முதல் உலகப்போர்
போர்க்காலத்தில் சென்னை - இரண்டாம் உலகப்போர்
மயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி உரை
ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து 
தமிழ் நாடக இசை - டிகேஎஸ் கலைவாணன் உரை
தேசபக்தனும் சுதேசமித்திரனும் - கல்கியின் கிண்டல்
தமிழ் இசை - ஆயிரம் திருதராஷ்டிரர்கள் - ஜெயராமன் கட்டுரை
மதராசபட்டினம் நூல் விமர்சனம்
சென்னை நகரத்து நூலகங்கள்
உஜ்ஜையின் தீர்கரேகையும் சென்னை தீர்கரேகையும்

இந்த வலைப்பதிவின் பொருளடக்கம்

Monday, 7 January 2019

உஜ்ஜயின் தீர்கரேகை


இந்திய கணித-ஜோதிட வரலாற்றை ஐந்து பருவங்களாக பிரிக்கலாம். ஜோதி என்ற சொல் நட்சத்திரங்களை குறிக்கும். இதில் ஜோதிடம் என்று நான் சொல்வது வானியல் அல்லது விண்ணியல் என்னும் நட்சத்திர மண்டல ஞானம், சூரிய சந்திர பாதை கணிதம், பஞ்சாங்க நிர்ணயம், கிரகண கணிதம் போன்றவையே. கல்யாண பலன், ராசி பலன், மங்கள நேரம், தகும் பொழுது தகா பொழுது, ராகுகால யமகண்ட தவிர்ப்பு போன்றவை சமூகத்தையும் மக்களின் செயல்களையும் அதிகம் வழிநடத்தினாலும், அவை அறிவியல் பூர்வமானதல்ல என்ற என்னுடைய அனுமானத்தாலும், வராகமிகிரரை தவிற மற்ற முக்கிய ஜோதிட நூலாசிரியர்கள், அவற்றை கையாளவில்லை என்பதாலும், அவற்றை பற்றி நானேதும் எழுதிலேன்.

கீழேயுள்ளது, கே.வி. சர்மா போன்றோர் எழுதிய நூல்களில் நான் கற்றதை வைத்தும், ஆரியபடன், வராகமிகிரன், பிரம்மகுப்தன், பாஸ்கரன் போன்றோர் நூல்களின் மொழிப்பெயர்ப்புகளை படித்தும் நான் என் வசதிக்கும் புரிதலுக்கும் வகுத்த பிரிவே. அங்கீகரிக்கப்பட்ட வகுப்புகள் அல்ல.

வேத காலம்
வேத பருவம்
கிமு 1200 / கலியப்தம் 1900 (ஏறக்குறைய)
வேதாங்க ஜோதிட பருவம்
கிமு 500 – கிபி 500 / கலியப்தம் 2400 – 2900
சித்தாந்த பருவம்
கிபி 500 – கிபி 1700
ஆரியபடன் பருவம்
கிபி 1700 – இன்று வரை
ஐரோப்பிய பருவம்

வேத காலத்தில் நிலைத்த வேதத்தை தவிற பிற இலக்கியங்களோ வர்லாற்று தொன்மைகளோ மிஞ்சவில்லை, அதிலுள்ள வானியல் செய்திகள் மிக மிக குறைவே. வேதாங்க ஜோதிடம் என்ற நூல் லகதர் என்பவரால் இயற்றப்பட்டது. முப்பத்தைந்து சுலோகங்களே கொண்டது. ரிக், யஜுர் வேதங்கள் இரண்டிற்கும் தனித்தனியே வேதங்க ஜோதிட நூல்களிருந்தன, ஆனால் ஓரிரு சுலோகங்களில் மற்றுமே வேறுபட்டன. இதன் காலம் கிமு1200 என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நூலில் எந்த கால விகிதமோ ஆண்டு குறிபோ இல்லை. லகதரை பற்றி தகவல்களும் ஏதுமில்லை.

சித்தாந்த பருவம் என்பது, 18 ஜோதிட சித்தாந்தங்கள் நிலவிய காலம். இதில் ஐந்து சித்தாந்தங்களை ஒப்பிடும் நூலே வராகமிகிரரின் பஞ்சசித்தாந்தம். இவை பதினெட்டும் வானியல் சித்தாந்த நூல்கள், மத, இலக்கிய, தத்துவ சித்தாந்த நூல்களல்ல. இவை வகையே பிராம்ம சித்தாந்தம் (பைதாமஹ சித்தாந்தம் என்றும் பெயருண்டு), வாசிஷ்ட சித்தாந்தம், பௌலீச சித்தாந்தம், ரோமக சித்தாந்தம் (லோமச சித்தாந்தம் என்றும் பெயருண்டு), சூரிய சித்தாந்தம் (சௌர சித்தந்தம் என்றும் பெயருண்டு).

புராணங்களில் மேரு மலை எண்பத்திநாலாயிரம் யோஜனைகள் உயரம். தட்டையான பூமியின் நடுவே ஓங்கி நிற்கும் மலையே மேரு. தலைகீழ் கூம்பாக, அதாவது அடிவாரத்தில் கூர்மையாகவும், மேலே தட்டையாகவும் விளங்கும் மலை மேரு. அதன் உச்சியில் தேவலோகம் உள்ளது, தேவர்கள் அங்கே வசிக்கின்றனர். மேரு மலையடிவாரத்தில் தாமரை இதழ்களை போல் நாலுபுரமும் நாலு கண்டங்கள் உள்ளன; வடக்கில் குரு; கிழக்கில் பாத்ராஷ்வா, தெற்கே பரதம், மேற்கே கேதுமாலா. இந்த படத்திலுள்ளது போல் பூமியை கருதினர். இது ஒரு கருத்து; வேறு சில புராணங்கள் பூமியை வேறுவிதமாக கருதி வர்ணித்தன.


மேரு மலையும், கண்டங்களும்
புராண கால பூமியின் வர்ணனை


படம்: ர. விஸ்வநாதன்

புராண காலத்தில் யோஜனை என்பது எத்தனை தூரம் என்று தெரியவில்லை. ஆனால் ஆரியபடர் ஒரு யோஜனை எட்டாயிரம் ந்ரு [ नृ ] என்கிறார். ஒர் ந்ரு என்பது ஒரு நரன், அதாவது, மனிதனின் உயரம் என்பது உரையாசிரியர்களின் விளக்கம். இது ஒரு தெளிவான அளவில்லை; கணிதத்தில் பல புதுமைகள் தந்து, ஒரு புதிய பருவத்திற்கே காரணமாயிருந்த ஆரியபடர் ஏன் இப்படி தெளிவற்ற அளவை தருகிறார் என்று தெரியவில்லை. ஒரு மனிதனின் உயரம் ஒண்றரை மீட்டர் என்று எடுத்துக்கொண்டாலும், ஒரு யோஜனை சராசரியாக பன்னிரண்டு கிலோமீட்டர். இந்த கணக்கில் எண்பத்திநாலாயிர கிமீ உயர மேரு மலை பூமியை விட பல மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். புராணங்கள் குறிப்பிடும் ஒரு யோஜனை எவ்வளவு என்று தெரியவில்லை. [அளவுகள் காலாகாலம் மாறிவந்தன; உதாரணத்திற்கு வேதாங்க ஜோதிடத்தில் ஒரு யுகம் ஐந்து சூரிய ஆண்டுகளே; ஜோதிட நூல்களிலோ ஒரு யுகம் 4,32,000 சூரிய ஆண்டுகள்.] மேரு மலையை சூரிய சந்திர நட்சத்திரங்கள் சுற்றிவருகின்றன, இந்த மிகப்பெரிய மேருவுக்கு பின்புரம் சூரியன் செல்வதால் இரவு உண்டாகிறது என்பதும் புராண மரபு. விந்திய மலை வளர்ந்து சூரியனை தடுத்த கதையும், அகத்தியனுக்காக நின்றதும், இம்மரபை சார்ந்ததே.

இதை ஆரியபடர் கண்டுகொள்ளவே இல்லை. வட துருவத்தை அவர் மேரு என்று கூறி அது ஒரு யோஜனை உயரமே என்றும் கூறிவிட்டு, அதன் உச்சியில் தேவர்கள் வாழ்வதை மட்டும் மறுக்காமல் அவர் ஆரியபடீயத்தில் எழுதியுள்ளார். தான் புராணத்திலிருந்து மாறுபடும் விளக்கமோ, மேரு மலையை நேரில் பார்த்தாகவோ, எந்த நூலோ சாட்சியோ ஆதாரம் தரவில்லை. புராண மரபை இவ்வாறு ஆரியபடர் மறுப்பதால் நூறாண்டு பின்வந்த பிரம்மகுப்தர் இவரை மிகவும் சாடுகிறார்; ஆனால் அவரும் விளக்கமேதும் தரவில்லை.

பூமி ஒரு கோளம், அதாவது உருண்டை, தட்டையல்ல, என்பதை ஆரியபடர் ஒரு உவமையால் விளக்குகிறார். ஆரியபடீயத்தின் கோளம் என்ற மூன்றாம் அத்தியாயத்திலுருந்து நான்கு சுலோகங்களை காண்போம்.

यद्वत् कदम्बपुष्पग्रन्थिः प्रचितः समन्ततः कुसुमैः
तद्वद्धि सर्वसत्त्वैर्जलजैः स्थलजैश्च भूगोलः8
யத்³வத் கத³ம்ப³புஷ்பக்³ரந்தி² ப்ரசித ஸமந்தத குஸுமை .
தத்³வத்³திஸர்வஸத்த்வைர்ஜலஜை ஸ்த²லஜைஶ்ச பூகோ³ [8]

விளக்கம் எவ்வாறு(யத்³வத்) கதம்பபுஷ்ப கொத்து(க்ரந்தி) எங்கும் சமமாக(ஸமந்தத) விளங்கி, அதன் மொட்டுக்கள் எல்லாதிசையிலும் மேல்நோக்கி நிற்கின்றனவோ, அவ்வாறே(த்தவத்), பூகோளத்தில் நிலவாழ்(ஸ்த²லஜை:) நீர்வாழ்(ஜலஜை꞉) உயிர்கள் எல்லா திசையிலும் மேல்நோக்கி வாழ்கின்றன என்கிறார். இந்த உவமைக்கு புவியீர்ப்பு சக்தி என்று ஒரு விளக்கம் தேவையில்லை என்பதை காண்க.

ஆனால் இது உவமை தான், அறிவியல் பூர்வமான விளக்கமில்லை என்றும் காண்க. பூமி ஒரு கோளம், உருண்டை என்பதற்கு, கிரகண நிழல்களின் வட்ட வடிவத்தை கண்டும் காட்டியும், வராஹமிஹிரரே சரியான அறிவியல் ரீதியான விளக்கமளித்தார்.

கதம்ப மலர்

स्वमेरू स्थलमध्ये नरको बडवामुखं जलमध्ये
अमरामरा मन्यन्ते परस्परमधःस्थितान् नियतम्12
ஸ்வமேரூ ஸ்த²லமத்யே நரகோ ³³வாமுக²ம்ʼ ஜலமத்யே .
அமராமரா மன்யந்தே பரஸ்பரமதஸ்தி²தான் நியதம் [12]

விளக்கம் நிலம்சூழ்ந்த (ஸ்தலமத்யே) வடதுருவம் தேவலோகம்(ஸ்வ) மேரு, நீர்சூழ்ந்த (ஜலமத்யே) தென் துருவம் நரக படவாமுகம்; இது அசுரர் வாழுமிடம், என்கிறார் ஆரியபடர். இருதுருவ நிலங்களிலும் வாழும் தேவரும்(அமரா) அசுரரும்(மரா) ஒருவரை ஒருவர் (பரஸ்பரம்) தங்களை விட கீழே (அத:) இருப்பதாக (ஸ்தி²தான்) கருதுகின்றனராம் (மன்யந்தே).

उदयो यो लङ्कायां सोऽस्तमयः सवितुरेव सिद्धपुरे
मध्याह्नो यवकोट्यां रोमक विषयेऽर्धरात्रं स्यात्१३
உத³யோ யோ லங்காயாம்ʼ ஸோ()ஸ்தமய ஸவிதுரேவ ஸித்³புரே .
மத்யாஹ்னோ யவகோட்யாம்ʼ ரோமக விஷயே()ர்தராத்ரம்ʼ ஸ்யாத் [13]

விளக்கம் இலங்கையில் சவித்துர் (சூரியன்) உதிக்கும்போது, சித்தபுரத்தில் அஸ்தமனம். யவகோடியில் மத்தியானம், ரோமகவிஷயத்தில் அர்த்தராத்திரி (நள்ளிரவு மட்டுமல்ல, சரியாக நடு இரவு).
ரோமக என்பது ரோமாபுரி, விஷயம் என்பது நாடு. சித்தபுரம் யவகோடி எந்த ஊரையோ நாடையோ குறிக்கிறது என்பது காலப்போக்கில் அற்றுப்போன செய்தி. அன்னிய வணிகர், பயணிகள் சொல்லும் செவிவழி செய்தியாலோ இன்று கிட்டாத புத்தகம் போன்ற சான்றோ அக்காலத்தில் நிலவி இன்று மறைந்திருக்கலாம். 

படம் : சானக்கிய நீதி யூட்யூப் வீடியோவிலிருந்து

ஆனால் இலங்கை இன்றைய ஸ்ரீலங்கா இல்லை. இது அடுத்த வரிகளில் தெளிவு.
स्थलजलमध्याल्लङ्का भूकक्ष्याया भवेच्चतु्भागो
उज्जयिनि लङ्कायाः तच्चतुरंशे समोत्तरतः१४
ஸ்த²லஜலமத்யால்லங்கா பூகக்ஷ்யாயா வேச்சது்பாகோ³ .
உஜ்ஜயினி லங்காயா தச்சதுரம்ʼஶே ஸமோத்தரத [14 ]

விளக்கம் நிலநீர் நடுவே உள்ள இலங்கை (ஸ்த²லஜலமத்யால்லங்கா) பூகக்ஷ்யத்தை நான்கு பாகமாய் (சது்பாகோ³) பிரிக்கிறது. இலங்கை முதல் வடதுருவம் வரையுள்ள இதன் பகுதியை உஜ்ஜயின் நான்கில் ஒரு அம்சமாக (சதுரம்ʼஶே) வகுக்கிறது.

கக்ஷ்யா என்பது சுற்றுவட்டம். பூகக்ஷ்யா என்பது பூமியை சுற்றும்வட்டம். ஆங்கிலத்தில் இதன் பெயர் மெரிடியன். ஈகுவேட்டர் என்னும் பூமத்தியரேகைக்கு, வடமொழியில், குறிப்பாக ஜோதிட நூல்களில் விஷுவத் என்பது மற்றொரு பெயர்.

வடதுருவம் முதல் தென் துருவம் வரை பூகோளத்தின் மேல் ஒரு கோடு வரைந்து, அதை அந்த கோளத்தின்மேல் மறுபக்கம் மீண்டும் வடதுருவம் வரை வரைந்தால் அது பூகக்ஷ்யா எனும் மெரிடியன். இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் அருகே உள்ள கிரீன்விச் வழியாக இந்த வட்டமான் கோட்டை (வளையத்தை) வரைந்தால், அது கிரீன்விச் மெரிடியன். இதை பூஜ்ய மெரிடியன் என்று ஆங்கிலேயர்கள் நிறுவ, அதை உலகம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. பூகோளத்தின் மறுப்பக்கம், கிரீன்விச் மெரிடியனுக்கு நேர் எதிராக 180 டிகிரி தள்ளி, பசிபிக் பெருங்கடல் வழியாக வரையும் மெரிடியனுக்கு சர்வதேச தேதி கோடு என்று பெயர். ஒவ்வொரு நாளும் இங்கேயே தொடங்குவதாக உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுவிட்டன. ஆங்கிலேய (கிறுத்துவ) புத்தாண்டை ஜனவரி முதல் நாள் கொண்டாடும் போது, இந்த சர்வதேச தேதிக்கோட்டை மிக ஒட்டியுள்ள கிரிபாட்டி தீவுகளில் வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து தொடங்குவதும் சில ஆண்டுகளாக வழக்கம். அடுத்தடுத்த அரை மணிக்கு ஒவ்வொரு நாடாக பட்டாசு வெடித்து தொலைக்காட்சியிலும் இணையத்திலும் நாம் சகஜமாக படங்களை காண்கிறோம். ஆனால் இங்கிலாந்து ஆட்சியிலும் அறிவியிலலிலும் வல்லரசாகுமுன் எது பூஜ்ய மெரிடியன்? 

பாரத நாட்டின் ஜோதிடர்கள், உஜ்ஜயின் மெரிடியனை இந்திய நாட்டின் மைய மெரிடியனாக, பூகக்ஷ்யா என்று கருதி அதற்கேற்ப சித்த்தாந்த நூல்களையும், கரணங்களையும், பஞ்சாங்ககளையும் படைத்தனர். ஆரியபடன் காலத்துக்கு முன்பே, அதாவது, சித்தாந்த பருவம் என்று நான் குறிப்பிட்ட கிமு ஐநூற்றுக்கும் கிபி ஐநூற்றுக்கும் இடைப்படட் காலத்தில் இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம்.


இந்த இலங்கை என்பது சரியாக விஷுவத் எனும் பூமத்தியரேகையின் மேல் இருப்பதாக கருதப்படும் தீவு. அந்த இடத்தில் தீவிருப்பதாக ஒரு விவரமும் எந்த நூலிலுமில்லை. அது ஒரு குறியீடு மட்டுமே. பூஜ்ய டிகிரி தீர்க ரேகையான உஜ்ஜயின் பூகக்ஷ்யா, பூஜ்ய டிகிரி அட்ச ரேகையான விஷுவத்தை சந்திக்கும் குறியிடம் இந்த இலங்கை.



ஏன் உஜ்ஜயின்? முக்கிய முக்தி நகரம், வரலாற்று புகழ் பெற்ற நகரம் என்பது ஒரு காரணம். ஆனால் காசி, அயோத்தியை, மதுரா, இந்திரபிரஸ்தா, காஞ்சிபுரம், ராஜகிரகம் என்று பல நகரங்களுக்கு இந்த தகுதியுள்ளது. ஜோதிடர் ஒத்துக்கொள்ளும்படி என்ன முக்கியத்துவம்?

உஜ்ஜயினி லங்காயா தச்சதுரம்ʼஶே ஸமோத்தரத

என்னும் பதினாலாம் சுலோக வரியில் விளக்கம் காணலாம். லேட்டிட்யூட் எனும் அட்சரேகையில் பூமத்தியரேகை பூஜ்ய டிகிரி, துருவங்கள் தொண்ணூறு டிகிரி அல்லவா? இலங்கைமுதல் மேருவரை வடக்கே செல்லும் பூகக்ஷ்யாவில் சதுரம் (நாலில் ஒரு பங்கு) அதாவது இருபத்திரண்டரை டிகிரியில் உஜ்ஜயின் உள்ளது. டிராபிக் ஆஃப் கேன்சர் (Tropic of Cancer) எனும் 23-1/2 டிகிரி அட்சரேகை, உத்தராயணத்தினின் வட எல்லை, உஜ்ஜயின் நகரம் என்று கணித்தார் ஆரியபடர்.

சூரிய சித்தாந்ததில் வரும் ஒரே பூகக்ஷையின் நகரங்கள் ராக்ஷஸாலயம்(இலங்கை), தேவகுலசைலம்(மேரு), ரோஹிதகம், உஜ்ஜையினி, ஸந்நிஹிதஸஹ (குருக்ஷேத்திரம்). தவறான இலங்கையை பட்டியலிடுவது நோக்கத்தக்கது.

லல்லர் எழுதிய நூல் தரும் பட்டியல் இலங்கை, குமரி, காஞ்சி, பரநாட, கிருஷ்ணா நதி, ஷ்வேதஷைலம், வாத்ஸ்யகுல்மம், உஜ்ஜயினி, கர்கராத்,  ஆஷ்ரய, மாலவநகரம், சயுரிவ, ரோஹிதகம், குருக்ஷேத்திரம், ஹிமவான், மேரு. இந்த பட்டியலில் காஞ்சி இடம்பெருவது ஆச்சரியம். ஒரு முழு நதியும், மலைத்தொடரும் இடம்பெறுவதும் விசித்திரம்.

வேறு ஒரு நூல் தரும் பட்டியல் கரநகரம், சீதாருகேஹ, பாணாட, மிஸிதபுரி, தபர்ணி, சீதாவர, வாத்ஸ்யகுல்மம் (உதயணன் வாழ்ந்த கௌசாம்பி),  வனநகரி, அவந்தி என்னும் உஜ்ஜயினி, ஸ்தானேஷ, மேரு.

வேதாங்க ஜோதிடம் எனும் நூல் “காலவிதானஷாஸ்த்ரம்”, அதாவது “காலத்தை கற்பிக்கும் சாத்திரம்” என்று ஜோதிடக்கலையை வர்ணிக்கிறது. மேலும் “யோ ஜ்யோதிஷாம் வேத ஸ வேத யஞான்” என்ற சுலோகம் உள்ளது. இதன் பொருள், “எவன் ஜோதிடம் அறிவானோ அவனே வேதம் அறிவான்.” வருடம், அயனம், ருது, மாதம், பக்ஷம் (வளர்பிறை தேய்பிறை), திதி, நட்சத்திரம், முகூர்த்தம், நாடி, விநாடி யாவும் சரியாக கணித்து, தகுந்த நேரத்தில் வேள்வி, சந்தியாவந்தனம், பண்டிகை, திவசம், தர்ப்பணம், கட்டுமானம், உத்சவம், புதுமனை புகுதல், பட்டாபிஷேகம், திருமணம், பூனூல் அணிவித்தல், கல்வி ஆரம்பம், ஆகியவை தொடங்க வேண்டும். இன்றுபோல் பாரதம் முழுதும் ஒரே பூகக்ஷ்யத்தை (மெரிடியனை) நிர்ணயித்து, அந்த நேரத்தையே நாடு முழுதும் பயன்படுத்தவில்லை. அப்படி செய்ய இயந்திர கடிகாரங்கள், தொலைபேசி, தொலைதொடர்பு கருவிகள் சமீபகாலம் வரை இல்லை. உஜ்ஜயின் நகரத்திற்கு சூர்யோதயம், திதி, நட்சத்திரம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, சங்கராந்தி போன்றவை கணித்து, அதன் கிழக்கே மேற்கே உள்ள ஊர் நாடு கிராம நகரங்களுக்கு ஏற்ற முகூர்த்த, நாடி, விநாடி கூட்டியோ கழித்தோ கணித்து கரணம், பஞ்சாங்கம் தயார் செய்து, கால நேர்மை பேணப்பட்டது.

சென்னை தீர்கரேகை (மதறாஸ் மெரிடியன்)

உஜ்ஜயின் தீர்கரேகையை கைவிட்டு, உடனே பாரத நாடு மக்கள் இன்றைய இந்திய மெரிடியனை (82-1/2 டிகிரி) தழுவவில்லை. மதறாசபட்டினம் என்னும் சென்னை நகரத்தில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய சென்னை வானியல் மையத்தில், கிபி 1792 கலியப்தம் 4893 மைக்கல் டாப்பிங், கிரீன்விச் மெரிடியனை மையமாக வைத்து, சென்னையின் தீர்கரேகையை கணித்தார். இதை கணித்த நினைவுத்தூண் சென்னை நுங்கம்பாகத்தில் அந்த மையத்தில் இன்றும் உள்ளது. லத்தீனம், தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஐந்து மொழிகளிலும் கல்வெட்டை பொறிவித்தார் டாப்பிங்.
மைக்கல் டாப்பிங் நிறுவிய நினைவு தூண்
நுங்கம்பாக்கம், சென்னை 

டாப்பிங் தூணில் கல்யப்தம் 4893, கிபி 1792 கல்வெட்டு

இதன்படி நேர நிர்ணயம் செய்த கிழக்கிந்தியா கம்பெனி, புனித ஜார்ஜ் கோட்டையில் சூரிய உதயம் அஸ்தமனம் இரண்டு நேரத்திலும் பீரங்கி செலுத்தி ஊருக்கு நேரம் தெரிவித்தனர் (ஆங்கிலத்தில் கன் டைம்). பிற்காலத்தில் மணிக்கூண்டுகளை கட்டினர். சுமார் ஐம்பதாண்டுகள் இது சென்னைக்கு மட்டுமே பொருந்தியது. 1850களில் ரயில் போக்குவரத்து தொடங்கிய பின், வெவ்வேறு ஊர்களில் கடிகாரங்கள் வெவ்வேறு நேரம் காட்டியதால், ரயில் வரவு, புறப்பாட்டில் குழப்பங்கள் தோன்றின. எல்லா ஊர்களுக்கும் ஒரே நேரத்தை பேணிணால் இதை தவிர்க்கலாம், பிரிக்கப்படாத பாரதம் முழுக்க ஒரே ரயில் அட்டவணை தயாரிக்கலாம் என்று ரயில் நிர்வாகம், அரசு முடிவெடுத்து, மதறாஸ் மெரிடியனை, சென்னையின் நேரத்தை பாரத நாட்டு மைய நேரமாக அறிவித்தது.
உஜ்ஜையினியில் பாய்ந்த கால ஓடை, சில வருடங்கள் சென்னையிலும் பொசிந்தது.

படங்கள்

1. மேரு மலையும் கண்டங்களும் - சாக்கோட்டை ர.விஸ்வநாதன், ஓவிய ஆசிரியர், சென்னை கல்லூரி, ஆவடி
2. யவகோடி, ரோமக, சித்தபுர வரைபடம் - சானக்கிய நீதி யூட்யூப் வீடியோ

ஆதார நூல்கள் / செவிவழி கேள்வி

  1. “ஆரியபடீயம்”, ஸ்ரீ சாரத கல்வி கழகம், 1974, கே.வி.சர்மா, கே.சி.சுக்லா
  2. ஒலியின் வேகம் அறிய மதறாஸில் நடத்திய பரிசோதனைகள், ஜெ. கோல்டிங்காம் (Experiments for Ascertaining the velocity of Sound, at Madras in the East Indies, J. Goldingham, 1823)
  3. ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன் கல்லூரி சாலை மரபு நடை, ஆகஸ்ட் 2014.

ஜோதிடம்/வானியல் கட்டுரைகள்

  1. வராகமிஹிரரின் கிரகண சான்று
  2. வராகமிஹிரரின் அகத்தியர் துதி
  3. சில விண்ணியல் ஸ்லோகங்கள் – பொருள் விளக்கம் 
  4. ஹேவிளம்ப புத்தாண்டு - சில விண்ணியல் குறிப்புகள்
  5. தமிழ் புத்தாண்டு - சித்திரா பௌர்ணமி
  6. ஆரியபடன் - ஒரு கட்டுரை
  7. பண்டை நாகரீகங்களின் வானியலும் கணிதமும் (காணொளி)

சென்னை கட்டுரைகள்

1. சென்னை - இந்தியாவின் முதல் நவீன நகரம் (ஆங்கிலத்தில்)
2. சென்னை நகரத்து நூலகங்கள்

Tuesday, 12 June 2018

சென்னை நகரத்து நூலகங்கள்



தீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த்தியும் பிரியா தியாகராசனும் பபாசி நிறுவனத்தின் சார்பில் கேட்டனர். மகிழ்ந்தே ஒப்புக்கொண்டேன். ஒரு சில நூலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலர்களோடு பேசி, சில தகவல்களை சேகரித்தேன். 

சிறு வயதிலேயே கன்னிமாரா நூலகத்திற்கு என் தாய் புஷ்பாவுடன் சென்றுள்ளேன். அம்மா எத்திராஜ் கல்லூரியில் எம்.ஃபில். பொருளியல் படித்துவந்தாள். சில சனிஞாயிறு அன்று கன்னிமாரா செல்லும்போது என்னையும் அழைத்துச்செல்வாள்.

கன்னிமாரா நூலக புதிய கட்டத்தில்
கன்னிமாரா நூலக பழைய கட்டத்தில்

மதறாஸ் இலக்கிய சங்க நூலகம்

 அக்காலத்தில் தமிழ் படிக்கும் ஆர்வமேதும் இல்லை. குமுதம் கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் வரும் துணுக்கு ஓவியங்களை (கார்ட்டூன்) மட்டும் படித்து ரசிப்பேன். எப்பொழுதாவது பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளை வாசித்து காட்டுவாள்; ரசகுண்டு பேரை கேட்டாலே சிரிப்பு வரும். எனக்கு ஒன்பது வயதிருக்கும். ஆங்கிலத்தில் படிப்பதிலும் ஆர்வமில்லை. ஆனால் சென்னையிலிருந்து புனே செல்லும் ரயிலில், பொழுது போக்க யாரோ கருடன் எனும் அமர் சித்ர கதா ஓவியக்கதையை (காமிக் புத்தகம்) வாங்கி கொடுக்க, காமிக்புக் மோகம் பிறந்தது. ஆங்கிலம் மட்டுமே. முப்பது வயது வரை தமிழில் ஆர்வம் வரவில்லை.

சிறுவயதில் தந்தையுடன் ஓரிரு முறை மயிலை ரணாடே நூலகத்திற்கு சென்றுள்ளேன் – ஏதோ ஒரிரு மாலை வேளை ஏதாவது சில மாதாந்திர பத்திரிகை அல்ல செய்தித்தாளை படிக்க போவார். அதன் வாசலில் நிற்கும் நடமாடும் தபால்வண்டியை (சிவப்பு வேன்) ஒரு முறை அவர் காட்டினார். வாய்பிளந்தேன்.

கடந்த சில வருடங்களாய் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திலும் அடையாறு கே.வி.சர்மா நூலக்த்திலும் பற்பல நாட்கள் நாலைந்து மணிநேரம் படிக்கும் இன்பத்தில் மூழ்கியுள்ளேன். உவேசா நூலகத்திற்கு நரசையா அழைத்து சென்று தமிழ் தாத்தாவின் கையெழுத்தும் சன்னதும் ஓலைச்சுவடிகளையும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வாழ்த்தையும் பார்த்தது மறக்க முடியாத திருநாள். அங்கு நண்பர் உத்திராடம் பணியாற்றி வருகிறார்; அவரைக் கண்டதும் ஒரு இன்ப அதிர்ச்சி. அவர் சென்னை கிறுத்துவ கல்லூரி பேராசிரியர் பாலுசாமியின் மாணவர்; பல முறை பேசி பழகியுள்ளோம். உவேசா நூலகத்தை பற்றிய பல தகவல்களை அளித்ததுடன், தே.சிவகணேஷ், ஐ.சிவகுமார் எழுதிய “சென்னை நூலகங்கள்” என்ற புத்தகத்தையும் காட்டினார். கைத்தல நிறைகனி! எல்லா நூலகத்திலும் வாசலிலே வரவேற்கும் மாவிலைத் தோரணம் போல இந்நூலை காட்சி வைக்கலாம்.

இருளில் ஒலித்த குரல்

ஒளிமயமான பிரதீப் உரை

நண்பர்கள் ராம்கி, சேவாலயா முரளிதரன், காந்தி நிலையம் அண்ணாமலை ஆகியோர் அறிவுருத்தி சைதை காந்தி நூலகம் பற்றி அறிந்தேன். அதன் நிறுவனர் மகாலிங்கத்தின் மகன் நித்தியானந்தரை பலமுறை டக்கர் பாப்பா காந்தி நிலையத்தில் புதன்கிழமை நூலாய்வுகளில் சந்தித்துள்ளேன். மகாலிங்கம் ஆச்சரியமானவர். கல்கி, ராஜாஜி, மாபொசி, ராஜம் ராமசாமி, கண்ணதாசன், பரளி சு நெல்லியப்பர் என்ற பல ஜாம்பவான்கள் தன் நூலகத்திற்கு வந்த வரலாற்று சம்பவங்களை பேசி நெகிழ வைத்தார். 

அதே போல் திருவல்லிக்கேணி கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்து நிறுவனர்கள் நரசிம்மன்னும் பார்த்தசாரதியும் அன்பாக பேசியதோடு, இதே ஜாம்பவான்கள் தங்கள் நூலகத்துக்கு வந்ததை சொல்லி அசரவைத்தனர். எம்.எஸ்.விசுவனாதனுக்கு “மெல்லிசை மன்னர்” என்ற பட்டத்தை அளித்ததே இவர்களது திருவல்லிக்கேணி கலாச்சார மன்றமே என்று தெரிந்ததும், நூலகத்தில் புத்தகத்தை தாண்டி எத்தனை அதிசயங்கள் உள்ளன என்பதை புரியவைத்தது.

அந்நாளில் சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிய அரசு கீழ்திசை சுவடி நூலகத்திற்கு சென்றபோது, அதன் இயக்குனர் சந்திரமோகன் அவர்களே பொறுத்து பல தகவல்களை அளித்தார். இந்த சுவடி நூலகம் சமீபத்தில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு இடம் மாறியுள்ளது. வரலாற்று புகழோடு அரிதான களஞ்சியமாக திகழும் நூலகம் என்பதால், ஓலைச்சுவடிகளையும் அவற்றின் பாதுகாப்பு முறைகளையும் படமெடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார். ஆனால் தன்னுடைய கணினியில் வைத்திருந்த படங்களை படமெடுக்க அனுமதித்தார். அடுத்த நாள் அடையாறு நூலகமும் இதைப்போல் அனுமதி மறுத்தது. பின்னாளில் அடையாறு நதி வரலாற்று தேடலின் போது நண்பர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அனுமதி பெற்று, அடையாறு நூலகத்து அரிய நூல்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகமதிய நூலகத்தின் மேலாளரை பார்த்து தகவல்கள் பெற்றுக்கொள்ள நண்பர் கோம்பை அன்வர் அறிவுருத்தினார். மூன்று முறை சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை. மயிலை ராமகிருஷ்ண மடத்து நூலகத்திலும் மேலாளர் சென்ற போது இல்லை, அவர் அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியவில்லை, படம் கூட எடுக்கவில்லை.

ஒரு மணி நேர உரைக்கு தயாரான பின் நாற்பது நிமிடமாக சுருங்கியது. கொஞ்சம் வேகவேகமாக பேசினேன். 1950களோடு நிறுத்திக்கொள்ளும் நிலமை, சில நூலகங்களை பற்றி பேச இயலவில்லை. இணையமே இன்று அனைவருக்கும் நூலகமாயினும், காகித புத்தக நூலகங்கள் வழக்கொழியவில்லை.

காணொளி பதிவாகவில்லை என்பதால் ஒலிப்பதிவுடன் படங்களை சேர்த்து காணொளியை நான் படைத்து இணையத்தில் ஏற்றியுள்ளேன். கீழே காணலாம்.

வத்தல்குழம்பு சம்பவம், சின்ன மழையில் தவித்தாலும் பெருவெள்ளத்தில் தப்பித்த நூலகம், ஆங்கிலேய உவேசா என்று அழைக்க தகுந்தவர் யார், எகிப்து மன்னர் கொடுத்த பரிசு, நூலகவியலின் தந்தை, அவர் வகுத்த ஐந்து விதிகள், தமிழில் மருத்துவ நூலை எழுதிய அமெரிக்கர், சிவலிங்க வடிவிலுள்ள ஓலைச்சுவடி நூல், திபெத்திய திபிதகம் என்று பல சுவையான தகவல்கள் இவ்வுரையாய்வு தேடலின் போது கிடைத்தன. இதையெல்லாம் காணொளியில் பார்க்கலாம். இந்த நூலகங்களுக்கு நேரில் சென்றும் காணலாம்.  

 சென்னை நகரத்து நூலகங்கள் - video

உறவுடை சுட்டிகள்

ஞானதேவதைகள்அமெரிக்க தேசிய நூலகத்து ஓவியங்கள்
ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய உவேசா வாழ்த்து
ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு
இந்த உரையின் ஒலிப்பதிவு