Sunday 27 December 2015

தமிழ் நாடக இசை


டி.கே.எஸ் கலைவாணன்  இசைக்குழுவினருடன்
இன்றைய கர்நாடக சங்கீதம் ஒரு சில இடங்களில் கச்சேரிகள் என்ற மிக குறுகிய ரசிகர் சமூகம் கொண்ட கலையாக சுருங்கி உள்ளது. நூற்றில் ஒரு சினிமா பாடலிலும், தொலைகாட்சி போட்டிகளிலும், ஒலித்து, ராகத்திற்கும் மெட்டிற்கும் வேற்றுமை தெரியாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.
சினிமா யுகம் தொடங்கும்முன் தமிழகத்தில் மேடை நாடகங்களும் தெருக்கூத்துக்களும் வெகுஜன கலைகளாக கோலோச்சின. ஐரோப்பியரின் நாடகங்கள் இந்திய நாடகங்களில் ஒரு புது யுகத்தை தொடங்கின. பல ஆங்கிலேய நாடகங்கள் தமிழில் உருமாறி வந்தன. ஆனால் வள்ளித்திருமணம், ராமாயணம், மகாபாரத கதைகள், திருவிளையாடல், பழைய புராண கதைகள், காளிதாசன் தெனாலி ராமன் போன்ற கதைகளையே மக்கள் பெரிதும் வரவேற்றனர். முக்கியமாக பாடல்களின்றி நாடகமில்லை என்ற காலம் நிலவியது. 1960கள் வரை நிலவிய இச்சூழ்நிலை இன்று மிகவும் மாறிவிட்டது. தெருக்கூத்தில் தொடர்ந்து வரும் பாடல்கள், தமிழக நகரங்களில் மேடை நாடகங்களில் இருப்பதில்லை. இருபதாண்டுகளாக மெகா தொடர்களே கோலோச்சுகின்றன.

நாடக இசை பாடல்களில் கர்நாடக சங்கீதமும் பரவலாக இருந்தது. கேபி சுந்தராம்பாள், எம் கே தியாகராஜ பாகவதர், டி ஆர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் மேடை நாடக உலகிலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர்களே. பாகவதர் சின்னப்பா காலத்தில் படத்திற்கு நாற்பது பாட்டு சாதாரணம். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் வசனமும் சண்டைகாட்சிகளும் முன்னுக்கு வந்து பாட்டு பின்சென்றது. பின்னணி பாடகர் உதயமானார்.

பழைய சினிமாக்களில் நாம் கேட்கும் பாடல்களுக்கும் பழைய நாடகங்களில் பாடப்பட்ட ஒற்றுமையும் வேற்றுமையும் ஏராளம். சென்னை சங்கீத சபைகளில் மார்கழி மாதம் மேடை கச்சேரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து வரும் சூழ்நிலையில், இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி(Indian Fine Arts Society) பத்து வருடகங்களாக நாடக இசைக்கும் ஒரு சில மணித்துளிகள் ஒதுக்கிவருகிறது. புகழ்பெற்ற நாடக மேதை ஔவை சண்முகத்தின் மகன் டி.கே.எஸ்.கலைவாணன் அவர்கள் வருடா வருடம் ஒரு நாள், அவர்களது அரங்கத்தில், சங்கரதாஸ் சுவாமிகள் முதல் ஔவை சண்முகம் வரை பாடப்பட்ட பல பாடல்களை பாடி காட்டி, அவற்றின் நுணுக்கங்கள், நாடக உலகிற்கு ஏற்ற விசித்திரங்கள், அவர்கள் பட்ட இன்ப துன்பங்கள், கலைஞர்களும் புலவர்களும் தங்களுக்கு அமைத்து கொண்ட பாணிகள், மக்களின் வரவேற்பு, எதிர்பார்ப்பு, போன்றவற்றை விளக்கி, தன் இசை குழுவுடன் பல பாடல்களை பாடி வருகிறார்.

ஒலிப்பெருக்கிகள் வருவதற்கு முன் பாடும் திறமையே நடிகருக்கு முக்கியமான தகுதி. அதுவும் ஆயிரம் பேர்கூடிய அரங்கில் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும் நாடகங்களில் அயராமல் பாடவேண்டும். பெண்குரல்களை போல் உச்சஸ்தாயியில் பாடும் ஆண்கள் தேவைபட்டனர். எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் இவற்றில் முக்கியமானவர்கள். பெண்கள் பலரும் ஆடவர் வேடத்தில் நடிப்பதும், ஆண்கள் பெண் வேடத்தில் நடிப்பதும் சகஜம். கேபி சுந்தராம்பாளின் குரலும் வீச்சும் அவர் செல்வத்தின் மூலதனம். கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் சேர்ந்து நடிக்க, ஒரே நாளில் மாலை நாடகத்தில் கிட்டப்பா முருகனாகவும் சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடிக்க, இரவு நாடகத்தில் சுந்தராம்பாள் முருகனாகவும் கிட்டப்பா வள்ளியாகவும் வேடமேற்ற நாட்களும் உண்டு!

புராண நாடகங்கள் மிகவும் பிரபலமாக இருந்ததால், “காயாத கானகத்தே”, “தசரத ராஜ குமாரா” போன்ற சில பாடல்கள் மிக பிரபலமாயின.

மான் வேட்டை காட்சியில் மான் துள்ளும் வேகத்தில் பாடப்படும் பாடலை கலைவாணன் சொல்லி பாடி காட்ட எத்தனை முறைகேட்டாலும் சுவையும் சிரிப்பும் குறைவதில்லை.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனை விட்டுவிடுவாரா கலைவாணன்? இதோ அவரை பற்றி.

நாடக கம்பெனிகள், நாடக சபைகள், போன்ற அமைப்புகள் முளைத்து வளர்ந்தன. இவைகளின் பெயர்கள் கூட சுவையானவ – கேளுங்கள்.

எல்லாம் இங்கே எழுதிவிட்டால் எப்படி?

டிசம்பர் 28 2015, திங்கள் காலை 10.30 மணிமுதல் 12.30 மணி வரை, டிடிகே சாலையிலுள்ள எத்திராஜ கல்யாண மண்டபத்தில் கலைவாணன் தமிழ் நாடக இசை பற்றி பேசி பாடுவார். வந்து ரசிக்கவும்.

பாடல்களின் சுட்டிகள்


போகுதுபார் அதிவேகமதாய் ஒரு மான்
அவ்வை சண்முகம்
எஸ் ஜி கிட்டப்பா
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்
நாடக சபைகளின் பெயர்கள்

தொடர்பான கட்டுரைகள்

Friday 18 December 2015

மாந்தாதா Mandhata

மாந்தாதா - அமராவதி சிற்பம் 
Mandhata panel - Amaravati gallery


मान्धाता च महीपतिः कृतयुगालङ्कारभूतो गतः
सेतुर्येन महोदधौ विरचितः क्वासौ दशास्यान्तकः।
अन्ये चापि युधिष्ठिरप्रभृतयो याता दिवं भूपते
नैकेनापि समं गता वसुमती मुञ्ज त्वया यास्यति।।

பொன்னியின் செல்வன் நாவலின் மணிமகுடம் அத்தியாயத்தில், கடம்பூர் அரண்மணையில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை கட்டியக்காரன் அறிவிக்கும்போது மநுமாந்தாதா என்று தொடங்க, “மநு சரி, அது யார் மாந்தாதா?” என்று ஐயம் எழுந்தது. சென்னை எழும்பூர் அமராவதி சிற்பங்களை காணுகையில் மாந்தாதா என்ற மாமன்னன் பெயர் கண்டு, இம்மன்னனுக்கும் பௌதத்திற்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் வளர்ந்தது. போஜ ராஜன் தன் ஒரு பாடல், இதே மாந்தாதாவின் பெயரில் தொடங்கியதை கண்டு, ஐயம் வெடித்தது. மகேந்திர வர்ம பல்லவனுக்கு கற்பனையிலும் கலை ஆர்வத்திலும் படைப்பாற்றலிலும் விசித்திர சிந்தனையிலும் போஜ ராஜனை மட்டுமே ஒப்பிடலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதன் முதல் கலை உலாவின் தொடக்கத்தில் சொன்னதும், நினைவுக்கு வந்தது.

நகுபோலியன் பாரதி பாலு இந்த கவிதையை விளக்கினார். போஜன் சிறுவனாக இருந்த பொழுது அவன் சித்தப்பன் முஞ்சன் அவனை கொன்று சிம்மாசனம் சிம்மாசனம் பறிக்க முயன்றதாக ஒரு கதை உண்டு. சூழ்ச்சியை அறிந்துகொண்ட போஜன், தப்பிவிட்டு, இந்த கவிதையை புனைந்தானாம். இதன் பொருள்: “அரசகுல திலகங்கள் மாந்தாதாவும் ராமனும் யுதிஷ்டிரனும் இறந்தபொழுது இந்த பூமி அவர்களோடு போகவில்லை, அட முஞ்சா உன்னோடு போவாள் என்று நினைத்தாயோ?” அழுத்தமான கேள்வி. சொல்லமைப்பும் அற்புதம். துக்கமும் காழ்ப்பும் நீரில் கலந்த உப்பை போன்ற கலந்த தாக்கம்.

பாடலை தமிழில் படித்து, சொல் பொருள் பார்ப்போம்.

மாந்தா⁴தா ச மஹீபதி​: க்ருʼதயுகா³லங்காரபூ⁴தோ க³த​:
ஸேதுர்யேன மஹோத³தௌ⁴ விரசித​: க்வாஸௌ த³ஸா²ஸ்யாந்தக​:|
அன்யே சாபி யுதி⁴ஷ்டி²ரப்ரப்⁴ருʼதயோ யாதா தி³வம்ʼ பூ⁴பதே
நைகேனாபி ஸமம்ʼ க³தா வஸுமதீ முஞ்ஜ த்வயா யாஸ்யதி||

ராமனும் யுதிஷ்டிரனும் இதிகாச புருஷர்கள். இவர்களோடு ஒப்பிட மாந்தாதா யார்? இதுவே பாடலின் மற்றொரு பெருஞ்சுவை. நாம் மறந்து போன வரலாற்றின் ஆழமும் இங்கே மிரட்டுகிறது. துவாபர யுகத்தின் இதிகாச மன்னன் யுதிஷ்டிரன்; திரேதா யுகத்தின் இதிகாச மன்னன் ராமன்; கிருதாயுகத்தின் புராண மன்னன் மாந்தாதா.
கிருதாயுக அலங்கார மஹிபதி (மகாராஜன்) மாந்தாதாவின் உடலும்(பூத) சென்றுவிட்டது(கத). பெருங்கடலில் (மஹோததி) சேது படைத்து தசமுகன் (தஷாஸ்ய) ராவணனை அந்தகம் (மரணம்) செய்தவன் எங்கே (க்வா)?  யுதிஷ்டிரனும் சொர்கம் (திவம்) சென்றான் (யாதா). ஒருவனோடும் (ஏகேன) சேர்ந்து (ஸமம்) ந கதா (போகவில்லை) வஸுமதீ (பூமி). முஞ்சா உன்னோடு (த்வயா) யாஸ்யதி (போவாளோ?)
{ந + ஏகேன + அபி = நைகேனாபி}

ராமாயணம் மகாபாரதம் தெரிந்த அளவு நமக்கு புராணக்கதைகள் தெரிந்திருப்பதில்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் அமராவதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டில் போஜன் காலத்திலும் மாந்தாதா நினைவிலிருந்தான்.

இந்த கவிதையும், அந்த முஞ்சன் சம்பவமும் நம்பத்தகாதது என்கிறார் காஞ்சி விஷ்வ வித்யாபீட வடமொழி பேராசிரியர் சங்கரநாராயணன். அதாவது போஜன் இக்கவிதை எழுதினான் என்பதே சந்தேகமானது. இருந்தாலும் மாந்தாதவை பற்றிய அழகான கவிதை என்பதால் எழுதியுள்ளேன். மாந்தாதாவின் பிறவி கதை இதைவிட நம்பகத்தன்மை குறைவானது. இருக்கட்டும்.

சிற்ப வடிவம் மிகவும் அழகு. சபை நடுவே கொலுவீற்றியுள்ள மாந்தாதாவின் கம்பீரமும், செருக்கும், மன்னனுக்கே உரிய தன்னம்பிக்கையும் மிளிர்கின்றன. அவனே பின்னே உள்ள அரசகுல மகளிரும் சாமரம் வீசுவோரும் கூட அதே செருக்கில் மிதக்கின்றினர்; அவன் வலது பக்கமுள்ள பெண்டிர் முகங்களில் மோகமோ காதலோ வியப்போ பொங்குகிறது. அவன் காலடியில் அமர்ந்து பரிசுகொடுப்போரின் மிகவும் தாழ்ந்த நிலையும் மன்னனின் செருக்குக்கு நேர்மாறாக பணிவு ததும்புகின்றன. அதிகாரத்திற்கும் அரசகம்பீரத்திற்கும் கிடைக்கும் மரியாதை இவை. மன்னனின் வலது பக்கத்தில் காணும் ஊரோர் செல்வந்தர் கூனிகுறுகாமலிருப்பினும், பவ்யமாகவே உள்ளனர்.

வேறோரு சிற்பத்தில் புத்தர் போதிமரத்துக்கடியில் சிம்மாசனத்தில் (!) கொலு வீற்றிருக்க அவரை தரிசிக்க வந்த மற்றவர் யாவரும் அச்சமோ மோகமோ இன்றி பக்தியோடு மட்டும் காட்சியளிக்கின்றினர். பெண்டிரை காணவில்லை.

புத்தருக்கும் மாந்தாதாவிற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டவே அமராவதி சிற்பிகள் இரண்டையும் வடித்துள்ளனரோ?

அமராவதி சிற்பங்கள் இந்திய கலை வரலாற்றில் முன்னோடிகள். அவற்றின் அமைப்புக்கு பல்லவ சிற்பங்கள் கூட போட்டியில்லை என்கிறார் ஓவியர் சந்துரு. இவர்  சென்னை கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்.


தொடர்புடைய பதிவுகள்


அமராவதியின் நளகிரி சிற்பம் - ஓவியர் சந்துரு (காணொளி)
நகுபோலியன் சிறுகதை - மழ நாட்டு மகுடம்
கல்லிலே ஆடவல்லான் 
பர்த்ருஹரியின் ஒரு கவிதை
Purnagiri - a Tantrapitha
Vaishali

திருத்தம் இதை 18-12-2015இல் முதலில் எழுதிய போது, பாந்துகா சிற்பத்தை மாந்தாதா சிற்பம் என்று தவறாக குறிப்பிட்டிறுந்தேன். இன்று 21-12-2016 திருத்திவிட்டேன்.
பாந்துகா - ஷாஷ்வத் எடுத்த படம்

Tuesday 15 December 2015

Ford Lenin Hitler Chaplin


Lenin admired Ford as one of the great contributors to the twentieth century revolution and it was not unusual to see portraits of  Ford and Lenin hanging side by side in Soviet Union factories.

Adolf Hitler also revered Ford. He proclaimed, "I shall do my best to put his theories into practice in Germany" and modeled the Volkswagen, the people's car, on the model T. In the USA, capitalists like John Rockefeller acclaimed Ford and described his production facilities as the "Industrial Marvel of the Age ." US President Woodrow Wilson asked him to run for Senate as a progressive Democrat.

Leftist artists denounced his impact on  society. Charlie Chaplin satirized mechanical labor in the movie, "Modern Times." Aldous Huxley dated the beginning of "degeneration" on "the year of our Ford."

Yet a survey of American workers found they ranked him above Franklin Roosevelt and Walter Reuther as the modern American leader "most helpful to labor."

--------
The above extract is from the book The Peoples Tycoon by Steven Watts.

The contrast between how intelligentsia (journalists, artists, writers) perceived him - as an idiot and a traitor - and how capitalists, politicians and workers perceived him, is striking. Today, Henry Ford is mostly ignored. Most writers and artists continue think of the car as a perverse polluting dinosaur while ungratefully and hypocritically wanting their own.

I have also been reading Henry Ford's autobiography My Life and Work. It is stunning for its insights on three different fields - engineering, economics and human psychology. I will blog on them shortly. From his autobiography, it seems that Ford was keen on making farming simpler and less brutal and wanted to make efficient machines like tractors for the job. But farmers took no interest in his efforts. It was the general public buying cars in large numbers that eventually persuaded farmers, that internal combustion engines were good for farming. It is Ford, not Diesel and Benz, therefore who should get the credit for what I call the Second Green Revolution.

Related Blogs

Henry Ford - idiot, traitor
Traffic - LMS
On Charles Parsons and turbines

Thursday 10 December 2015

வான் மழை பொய்ப்பினும்


சென்னையில் வெள்ளம். ஆனால் பாரதத்தில் வரட்சி. பிகார் தேர்தல், பசு வதை, ஆமிர் கான், டிப்பு சுல்தான் நாடக அவலங்களில் இது செய்தி இல்லைதான். ஆனால் ஏன் செய்தி இல்லை? டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை விளக்குகிறது. நல்ல செய்தி என்றாலே அலறி ஓடுவோர் படிக்கவேண்டாம். இது என் மொழிபெயர்ப்பு

-------கட்டுரை மொழிபெயர்ப்பு ஆரம்பம்-----
பருப்பு விலை இப்படி அபாரமாக ஏறிவிட்டதே,” என்று என்னை கேட்கும்போது எனக்கு ஆச்சரியம் பொங்குகிறது. மழையின்றி இரண்டு வருடங்கள் வரண்டு வாடியுள்ளது பாரதம். வரட்சி இருந்தும் ஏன் உணவு விலை ஏன் மலை ஏறவில்லை என்றல்லவா மக்கள் கேட்கவேண்டும்!

1965 நான் பத்திரிகை நிருபரானேன். அன்றும் பாரதம் இரண்டாண்டு தொடர்ந்து மழையின்றி வரண்டது. தானிய உற்பத்தி இருபது சதவிகிதம் குறைந்தது; பஞ்சம் பட்டினி நாட்டை வாட்டியது; விலைவாசி விண்ணை முட்டியது. வெட்கக்கேடாக, இந்தியா பரிதாபமாக அமெரிக்காவிடம் உணவுக்கு கெஞ்சியது. “கையிலிருந்து வாய்” வருமை போல் “கப்பலிலிருந்து வாய்” வருமை என்று பேசப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் – இரண்டு தொடர் வரட்சிகளின் பாதிப்பே தெரியாமல், பஞ்சம் பட்டினியில் வாடாமல், பருப்பு விலை ஏறியுள்ளதே என்று கேட்கும் நிலைமைக்கு பிரம்மாண்டமாக முன்னேறியுள்ளோம். 2014-15 புள்ளிவிவரப்படி, 12% குறைந்த மழை பெய்தாலும், வரட்சி இருந்தும், அதை மீறி விவசாய விளைச்சல் சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 14.3% குறைந்த மழை பெய்தாலும் ஆறு மாதங்களில் விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது. தொலைகாட்சி நிருபர் நாடெங்கும் தேடியும் பட்டினியில் வாடும் கிராமவாசிகள் யாருமில்லை. வரட்சி செய்தியே இல்லை!

மழை பொய்ப்பின், விவசாயம் மட்டும் அல்ல, மற்ற உற்பத்தியும் சேவைகளும் அடிபடுவது வழக்கம். நெசவு, சணல், சக்கரை, சமையல் எண்ணை இவை யாவும் விவசாயத்தை நம்பும் துறைகள். விதைத்தல், அருவடை, சாகுபடி, போக்குவரத்து, செக்கு, பொட்டலம், போன்றதொழில்கள் விவசாயம் சார்ந்தவை. பாரதம் சுதந்திரம் வாங்கிய முதல் ஐம்பது ஆண்டில் 45% ஜிடிபி மாற்றம் மழையால் பாதிக்கபட்டது என்று பொருளியலாளர் அரவிந்த வீர்மணி காட்டியுள்ளார்.

1965, 1966 ஆண்டு வரட்சிகளும் பஞ்சமும் கண்ட மேலை நாட்டு நிபுணர்கள், இந்தியா என்றுமே சோற்றுக்கு கையேந்தி வாடும் என்று ஆரூடம் சொன்னார்கள். வில்லியம் பேட்டாக்கும் பால் பேட்டாக்கும் எழுதிய “பஞ்சம் 1975” அந்த வருடம் (எழுதிய பத்து ஆண்டுகளுக்கு பின்) உலகமே பஞ்சத்தில்  வாடும் என்றனர். மேலை நாடுகளின் தானியங்கள் காப்பாற்ற முடிந்த நாடுகளுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும், இந்தியாவை போன்ற காப்பாற்ற முடியாத நாடுகள், அவர்களின் விதிக்கு விடப்படவேண்டும் என்று கூறினர். இந்தியர்கள் கொதித்து குமைந்தாலும், மேற்கத்திய சமூகங்களில் பலர் இக்கருத்தை பாராட்டினர். ”ஜனத்தொகை வெடிகுண்டு” என்ற நூல் எழுதிய பசுமை போராளி பால் எர்லிக், இந்த பேட்டாக் சகோதரர்களை வானளாவி புகழ்ந்தார்.

இன்றோ! இரண்டு வரட்சிகளை அலட்சியமாக கையாளுகிறோம். இந்த மாற்றத்தின் காரணம் என்ன? பசுமை புரட்சியால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தானியங்கள் அதிகரித்தது என்று சிலர் கருதினாலும், உண்மையில் தனிநபர் தானிய அளவு1964 இல் உச்சத்தை எட்டியது; அதன் பின் சரிந்தது. உணவு வினியோகத்தை சரியாக செய்ததால் பஞ்சங்களை தவிர்த்தோம். பஞ்சம் நிலவிய மாவட்டங்களில் அரசின் கிராம வேலை வாய்ப்பு திட்டங்களால், உணவு பொருட்களை வாங்கும் அளவுக்காவது மக்களிடம் செல்வம் வளர்ந்தது. பசியிருந்தாலும் பட்டினியில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வருமானம் ஏறியது. தானியங்களை தாண்டி, மற்ற உணவுகள் புழக்கமாயின. தனி நபர் தானிய பருகல் குன்றி, எதிர்பாராமல் தானிய மிகுதி உண்டானது. 1990களில் இந்தியா தானியங்கள் வெளிநாடுகளுக்கு விற்கும் அளவு விவசாயம் செழுந்தது. அரிசி ஏற்றுமதியில் இன்று உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது! வரட்சி ஆண்டுகளிலும் உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. ஒரு கையேந்தி நாடு கண்ட மாபெரும் முன்னேற்றம் இது.

பசுமை புரட்சியால் வரப்புக்கு வரப்பு வயலுக்கு வயல் நெல் உயர்ந்தது. குழாய்க்கிணறுகளால் நீர்பாசன வசதி பெருகி, ராபி பயிர், கரிஃப் பயிருக்கு நிகராக விளைச்சல் தந்தது. பாசன நிலங்கள் அறுபது சதவிகிதம் பெருகின. வான் பொய்ப்பினும் பஞ்சம் தவிர்க்கும் திறன் பெற்றோம்!

முக்கியமாக, இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு லயமாக சரிந்தது. 1950இல் இந்திய பொருளாதாரத்தில் 52% நிலவிய விவசாயம், இன்று 2015இல் 14% ஆக சரிந்தது. சேவைத்தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில்  60% ஆக கோலோச்சுகின்றன. இத்தொழில்கள் பருவமழையை நம்பி செழிப்பவை அல்ல. தொழிற்சாலை உற்பத்தியும் நெசவு சக்கரை சணல் என்று விவசாயத்தை நம்பும் தொழிலாக இல்லாமல், பொறியியல் ரசாயனம் என்று அகலமாக பரவியுள்ளன.

1970களில் வருமானம் உயர, விவசாய முறைகள் மாறின. தனிநபர் நெல் உற்பத்தி சரிந்து, பால, பருப்பு, எண்ணைகள், சக்கரை, தேயிலை, முட்டை, காய், கனி போன்ற உணவுகளின் உற்பத்தி உயர்ந்தது. சமூகத்தின் அடுத்தக்கட்ட தேவைகளையும் பூர்த்தி செய்தன; உழவர்களின் வருமானத்தையு வளர்த்தன.

மூன்றில் இரண்டாக நிலவிய பாரம்பரிய பயிர்களின் உற்பத்தி பாதியாக சரிந்தது. கறும்பு, நாறு, எண்ணைவிதைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். காய் கனி கோழி மீன் கால்நடை போன்ற மற்ற பாதி, பயிரளவு மழையை நம்பி இல்லை. இதுவே வரட்சியிருந்தும் இவ்வாண்டு விவசாயம் வளர்ச்சி கண்டதன் ரகசியம்.

ஆனால் இதற்கு ஒரு விலை கொடுத்துள்ளோம் - சுற்றுசூழலின் சீரழிவு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து நிலத்தடி நீர் அபாயகரமாக குறைந்துள்ளது. அரசியல்வாதிகள் உழவருக்கு மின்சார கட்டணம் வசூலிக்க மறுக்கின்றனர். செய்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது அவர்களது கணிப்பு. சூரிய ஒளி பம்புகளை உழவருக்கு கொடுத்து, மற்ற மின் தேவைகளுக்கு வசூல் செய்தால் இந்த சீரழிப்பு  குறையலாம்.

-------கட்டுரை மொழிபெயர்ப்பு முற்றும்-----


பின்குறிப்பு

செவ்வாய் கிரகணத்திற்கு மங்கள்யான் ராக்கெட் விடுவதை விட, இந்தியர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் கோலோச்சுவதை விட, ஜனநாயகம் ஓங்கியதை விட, அணுகுண்டு ஏவுகணை சாதனைகளை விட, ஆஸ்கார் நோபல் கிரிக்கட் உலக கோப்பை வென்றதை விட, இது ஒரு மாபெரும் சாதனை.

உழவர் தற்கொலை, வெள்ளச் சேத உயிரிழப்பு, சாலை விபத்தில் உயிரிழப்பு எல்லாம் துன்பக்கேடுகள். ஆனால் கோடிக்கணக்கில் பஞ்சம் பலிவாங்கிய நாட்டில் இந்த முன்னேற்றம் ஈடு இணையற்ற இதிகாச தொடர்ச்சி.

ஜகத்தினில் பசியில்லை, களித்திடுவோம்.


உழவர் தற்கொலை - சுவாமிநாதன் ஐயர் கட்டுரை


பசுமை புரட்சி கட்டுரைகள்

முதல் பசுமை புரட்சி - செயற்கை எரு
இரண்டாம் பசுமை புரட்சி - டீசல் வண்டிகள்
நான்காம் பசுமை புரட்சி - வரப்புயர்த்திய வல்லவன் 

அணைகளும் நீர்பாசன முன்னேற்றங்களும் மூன்றாம் பசுமை புரட்சி என்பது என் கருத்து. அதை பற்றி நான் எழுதவில்லை

Monday 7 December 2015

The few and the many


There are no chosen few
It is that there are but few who choose themselves
There are no silent many
It is that many choose to stay silent
And speak their voice another day.

They also serve who only stand and wait
They also grieve who do not cry at death
Their tears are simply not for public view
They also laugh whose faces seldom smile
Their laughs are sadly few and far between

They also have their dignity
Whom food and shelter lack
They also have their divinity
Whom the Gods and grace have shunned
They also have their several wealths
Whom only poverty has clothed
They also have their several arts
Whom only ignorance has lettered
They also have their honour
Who are humbled by the mighty

The greatest heights that mankinds's thoughts may soar
The awful depths these self-same thoughts might delve
The noblest deeds that by plan or not be done
The basest acts that by force or consent be decreed
These are but tidal lines drawn upon the shore
Till later waves erase and redraw lines anew

There are no finished flows of thought
There are no finished works of art
There are but seeds that people sow
That their sons and daughters may one day know
What they loved and loathed and admired and feared
What was awesome, bold or petty, what inspired, what weird.

Note
I wrote this poem in July 2003. The other poems in my blog are in Tamil.

Erdos on Madras 
An Englishman's tamil inscription 
On human kindness 
Gift of a Magus 
Traffic - LMS 
எடிசன் வாழ்த்து

Monday 23 November 2015

சென்னையில் அடைமழை - கவிதை

கூடையில் குழந்தையோடு
குறுக்கே ஒருவன் சென்றான்
கூடவே குடைபிடித்தவர்க்கே
குளித்தே சேடனும் சென்றான்
பாடவோ புலவர் இல்லை
பார்த்திட்ட மாந்தரெல்லாம்
கார்மழை நனைந்து நொந்தர்
கண்ணனை கண்டிலர், பாவம்!

கவிதைகள்


Sunday 15 November 2015

சீன பொருளாதார சீர்திருத்தம் – வழிகாட்டிய ஜப்பான்

டேனியல் யெர்கினும் ஜோசஃப் ஸ்டானிஸ்லாவும் எழுதிய The Commanding Heights எனும் நூலிலிருந்து இன்னுமோர் பகுதி. இதில், சீன கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் மாவோ சேதுங்கின் ஆட்சிக்குப்பின், அதிபரான டெங்க் சாவோபிங்கின் ஆட்சியில், மாவோயிச பொது உடைமை கொள்கைகளை அவர் தகர்த்து மூலதன பொருளியல் கொள்கைகளை வரவேற்று நடத்திய சீர்திருத்தங்களை விவரிக்கிறார்கள்.

-----நூல் பகுதி ஆரம்பம்----

மாவோ அமல்செய்த பொது உடைமையின் விளைவுகள் ஏமாற்றம் தந்தன. அவரது முப்பது ஆண்டு ஆட்சியின் இறுதியில், சீன பொருளாதாரம் வளரவில்லை. சில இடங்களில் தேய்ந்தது.

மாவோ இறந்த பின், 1978ஆம் ஆண்டில் நாடே வரட்சியில் வாடியது. வற்றிப்போன மண்ணை ஏராலும் டிராக்டராலும் உழ முடியவில்லை. பஞ்சம் நாட்டை வாட்டியது. வயிற்றுப்போக்கு, என்சிஃபலாட்டீஸ், ஹெபடைடிஸ் என்று பல நோய்கள பறவி மக்களை வாட்டின. லட்ச கணக்கிள் பஞ்சம் பிழைக்க மக்கள் நாடோடி நகரம் தேடி அலைந்தனர். ஷாங்காய் நகரத்திற்குள் இந்த லட்சங்கள் வரமல் தடுக்க படைகள் திரண்டன. பஞ்சத்தின் காட்சிகளை படத்தில் பார்த்து, ஆளும் கட்சியின் செயற்குழு கண்ணீர் விட்டு கதரி அழுதனர்.

மிகக்கடுமையாக உழைத்து உழுதாலே பயிர் வளரும் நிலமை. தம் உழைப்பில் தலைவர்கள் வாழ்ந்து லாபம் பெறுவதை சீன உழவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கு லாபமின்றி உழைக்க மறுத்தனர். பழைய வழிமுறைகள் வேண்டும் என்று கோரினர். பொது உடைமையும் மாவோயிசமும் சட்டமானதற்கு முன், சீன தேசத்தில் நிலவிய வழிமுறைக்கு “குடும்ப பொறுப்பு” முறை என்று பெயர். அதன் படி விளைச்சலில் ஒரு பகுதியை அவர்களே வைத்துக்கொள்ளலாம், விற்று லாபம் பெரலாம். பஞ்சத்தின் கடுமையால் அரசு அதிகாரிகள் ஒத்துக்கொண்டனர். ஆயினும், தமக்கு ஏதாவது நிகழ்ந்தால் தம் பிள்ளைகளை மற்றவர் பேணி வளர்க்க சபதம் எடுக்கவேண்டும் என்று பல உழவர்கள் வலியுறுத்தினர். அவ்வாறே ஊர்கட்டுப்பாடாக உழவர் சமூகங்கள் சபதம் செய்தன.

[கோபுவின் வரலாற்று குறிப்பு ஏன் இந்த பயம்? 1960களில் மாவோ தற்காலிகமாக சர்வாதிகாரத்தை தளர்த்தி ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சுதந்திர சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தார். சில மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் மனதில் உறுதி கொண்டு மார்க்ஸிஸத்திற்கும் மாவோயிஸத்திற்கும் மாற்றுக்கருத்துக்களை சொன்னார்கள். டெங்க் சாவோபிங் போன்ற கட்சி தளபதிகளும் இக்கருத்துக்களை உரைத்தனர். தன் சர்வாதிகாரத்திற்கு ஆபத்தை உணர்ந்த மாவோ, அவர்கள் அனைவரையும் புரட்சிக்கு துரோகிகள் என்று பழித்து, மாணவர்களிடம் பெரும் கிளர்ச்சியூட்டி, பெற்றோரை முதியோரையும் தாக்கும் வெறிச்செயலை தூண்டினார். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆசிரியர்களும் எழுத்தாளரும் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டு பயிற்சியே இல்லாத உழவு மற்றும் பட்டரை வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இதை கலாச்சார புரட்சி என்று பெயரிட்டார் மாவோ. அந்த கசப்பான நினைவுகள் பல உழவர்களின் நினைவில் இருந்தது. இந்த அரசு தளர்த்தலும் அது போலாகிவிடுமா என்ற அச்சம் உழவர்களை வதைத்தது.]

நிற்க. சபதம் செய்த உழவர், தம் கடும் உழைப்பில் பஞ்சத்தை ஓரளவு தவிர்த்தனர். மாவோயிசத்தை நீக்கி, குடும்ப பொறுப்பு முறை சீனமெங்கும் அமலுக்கு வந்தது. முப்பது ஆண்டுகளில் மாவோயிசத்தில் வளர்ச்சி பெறாத வேளான்மை, குடும்ப பொறுப்பு முறையில், பதினாறு ஆண்டுகளில் ஐம்பது சதவிகித வளர்ச்சி கண்டது.
[ இந்தியாவில் இதற்குமுன் பசுமை புரட்சி பரவியது. சீனாவில் பசுமை புரட்சியின் தாக்கத்தை பற்றி நூலாசிரியர்கள் ஏதும் குறிப்பிடவில்லை ]

தாம் வளர்த்த பயிரை தாமே விற்கலாம் என்ற உரிமை கிடைத்தபின், அதாவது, சந்தை பொருளாதாரம் மீண்டும் அறிமுகமான பின், வணிகத்தின் பல தரவுகள் தானாக உருவாகின. உழவர்கள தாமாக மற்ற பணிகளை தொடங்கினர். வீடுகட்டுவதும், பழுது பார்ப்பதும், காய்கனி பயிரை சந்தைக்கு எடுத்துசெல்வதும், வேலைக்கு ஆள் சேர்ப்பதும் சகஜமாயின. 1978இல் விளைச்சலில் எட்டு சதவிகிதமே சந்தைகளில் விற்கப்பட்டன. 1990இல் இது எண்பது சதவிகிதமாக கூடின.

(1978இல்) ஜப்பானின் வளர்ச்சியை காணவும் அங்குள்ள திட்டங்களை புரிந்துகொள்ளவும் சில சீன பொருளியல் பண்டிதர்கள் சென்று, அந்நாட்டின் வளர்ச்சியும் செல்வமும் கண்டு அதிர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பரப்பு குழுத்தலைவர் குறித்துக்கொண்ட புள்ளிவிவரங்கள் - இரண்டில் ஒரு வீட்டில் கார் இருந்தது. 95% மேல் வீடுகளில் தொலைகாட்சி, ஃப்ரிட்ஜ், துணிதோய்க்கும் விசை இருந்தன. மக்கள ஆடைகளை கண்டே அசந்து போனார்; எத்தனை வகை ஆடைகள், எவ்வளவு சுத்தமாக இருந்தன! “நாம் பார்த்த பெண்களில் ஒருவரை போல் இன்னொருவரின் ஆடை இல்லை,” என்று எழுதினார். அதைவிட பெரிய அதிசயம் : “பெண்கள் தினமும் ஆடைகளை மாற்றிக்கொள்கின்றனர்”

-------நூல் பகுதி முற்றும்-------

கோபுவின் குறிப்பு

மாவோவின் சீனாவில், வெளிநாட்டு சினிமா, பத்திரிகை, தொலைகாட்சி எல்லாம் தடைப்பட்டிருந்தன. பாரதத்தில் நாம் ஹாலிவுட் சிங்கப்பூர் ஹாங்காங் படங்களை திரையரங்குகளில் பார்த்துவந்தோம். ஆனால் 1984இல் ராஜீவ காந்தி பிரதமர் ஆகும் வரை, “ஜனநாயகமான” இந்திய அரசுகள் தொலைகாட்சிகளை தடை செய்துவந்தன. சென்னை, கல்கட்டா, பம்பாய், தில்லி, நான்கு மாநகரங்களில் மட்டுமே கருப்பு வெள்ளை தொலைகாட்சி இருந்தது. 1960களில் அமெரிக்காவில் வந்த கலர் டிவியை, 1980களில் அனுமதித்து ராஜீவ் காந்தியின் நிதி அமைச்சர் விபி சிங் வானொலிக்கும் தொலைகாட்சிக்கும் அதுவரை கட்டாயமான லைசன்ஸை ரத்து செய்தார். நம்மால் அன்னாட்டு செல்வத்தை சினிமாவிலும் டிவியிலும் பார்க்க முடிந்தது. ஆனால் அவை பணக்கார நாடு இந்தியா ஏழை நாடு என்ற பிரச்சாரம் ஓயவேயில்லை.

இன்றைய யதார்த்த தேவைகளாக நினைக்கும் கேமரா, டேப் ரிக்கார்டர், ஃப்ரிட்ஜ், ஷேவிங் க்ரீம் போன்ற பொருள்களை வாங்க, அந்நாட்களில் அதிகம் வரிகளால் அதிக விலை கொடுத்தோ, இல்லை கடத்தல்காரர்களின் வணிகத்தையோ வள்ளல்குணத்தையோ நம்பி வாங்கவேண்டும்.

ஆனால் ஜனநாயக நாடாக இருந்ததால், மாவோவின் மாபெருந்தாவல், கலாச்சார புரட்சி போன்ற கொடுங்கோல் தீவினைகளில் நாம் சிக்கவில்லை. ஆடையும் தூய்மையும் நடுத்தரவர்கத்தினருக்கோ பல ஏழைகளுக்கோ கூட பெரும் பிரச்சனையில்லை. நேரு-இந்திரா முப்பத்தைந்து ஆண்டுகளில் சுமாரான ஆடைகளை வாங்கி வாழ்ந்து வந்தோம்.


The English version of this essay is here - Deng Xiaoping and Japan

தொடர்புடைய பதிவுகள்

Wednesday 11 November 2015

செல்வம் உடல்நலம் சுகாதாரம் அன்பு அமைதி சமத்துவம் பெருகி

மேட் ரிட்லி (Matt Ridley) மூன்று உயிரியல் நூல்களும் ஒரு பொருளியல் நூலும் எழுதியுள்ளார். (நான்கையும் படித்துள்ளேன்). சமீபத்தில் இரு துறைகளையும் கலந்து எல்லாவற்றின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு நூல் எழுதியுள்ளார் (இதை நான் இன்னும் படிக்கவில்லை). இவர் லண்டன் எக்கானமிஸ்ட் பத்திரிகையின் முன்னார் அறிவியல் பகுதி ஆசிரியர். இங்கிலாந்தின் துரைமார்களில் ஒருவர், ராஜசபை (House of Lords) அங்கத்தினர். இவர் நிர்வகித்த ஆர்.பி.எஸ் வங்கி 2008 பொருளாதார சரிவில் திவாலானது. நிலக்கரி சுரங்க அதிபர், வயல்களும் வைத்துள்ளார். பிரபல அமெரிக்க ஆங்கிலேய நாளிதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார், இவற்றை நான் அவரது வலை தளத்தில் படித்து வருகிறேன்.

[Rational Optimist என்பதை தமிழில் “பகுத்தறிவு உகமையர்” என்று எழுதவேண்டும். ஐயோ! ஸ்டாலினிஸ்ட், மார்க்ஸிஸ்ட் போல ரிட்லியிஸ்ட், சைமனிஸ்ட் என்று எதோ பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும் போல]

நவம்பர் ஆறாம் தேதி, கனடா தேசத்து மங்க் பல்கலைகழக்கத்தில் மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றி ஒரு விவாதத்தில் இவர் பேசியதன் கட்டுரை வடிவத்தை தன் வலைதளத்தில் ஏற்றியுள்ளார். அதை நான் தமிழாக்கி கீழே தந்துள்ளேன்.

------------------------
அமெரிக்க சினிமா நடிகர் இயக்குனர் உடி ஆலன் ஒரு முறை சொன்னார், “மனிதக்குலம் போக இரண்டு பாதைகள் விரிந்துள்ளன. ஒரு பாதையில் சென்றால் ஓயா துன்பமும் துயரமும். மற்ற பாதையில் சென்றால் இனமே அழிந்து விடும். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் அறிவை பெற (இறைவனை) வேண்டுவோம்.”

இப்படித்தான் எதிர்காலத்தை பற்றி பலரும் பேசுகிறார். என் இளமையில் எதிர்காலம் இருண்டுகிடந்தது. மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பஞ்சம் அச்சுறுத்தியது; பூச்சிமருந்துகள் புற்றுநோய் வளர்த்தன; பாலைவனங்கள் வயல்களை விழுங்கின; மண்ணெணை கிணறுகள் வற்றத்தொடங்கின; காடுகள் மறைந்தன; அமில மழை பொழிந்தது; ஓசோன் மண்டலத்து ஓட்டை வீங்கியது; என் விந்து அளவு குறைந்தது; அணு ஆயுதங்களால் அண்டமே அழிவின் வாசலில் அஞ்சித்தவித்தது.

மிகையாகச் சொல்லவில்லை. 1960களில் பொருளியல் வல்லுனர் ராபர்ட் ஹெய்ல்பிரோனர், ”மனிதக்குலத்தின் எதிர்காலம் மங்கும்; தாங்கொணா துயரம் தாண்டவமாடும்” என்று ஒரு நூலில் கட்டியங்கூறினார்.

பத்தாண்டுக்கு பின் நான் இவை எல்லாமே பூச்சாண்டி கதைகள் என்று உணர்ந்தேன். துயர்மல்கும் எதிர்காலம் இவ்வறிஞர் பயந்தபடி உதிக்கவில்லை. மக்களின் சீரும் சிறப்பும் பெருகிவருகிறது. வாழ்க்கை வளமும் நலமும் தினமும் தினமும் சிறக்கிறது.

  1.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம், ஒரு நாளுக்கு ஐந்து மணிநேரம் வளர்கிறது!
    (அதாவது ஐம்பதாண்டுகாலத்தில் சராசரி மனிதன் ஆயுட்காலம் 50*365*5=91250 மணிநேரம் நீண்டுள்ளது. இது  3802 நாட்களாகும் (91250 / 24). அதாவது பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் நீண்டுள்ளன. 1965 வாழ்ந்த சராசரி மனிதனினை விட, 2015 வாழ்பவர் பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் அதிகம் வாழ்வார்!)
  2. பிறப்பிலேயே இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக (66 சதவிகிதம்) குறைந்துள்ளது
  3. மலேரியா நோயால் இறப்பவரின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டில் அறுபது சதவிகிதம் குறைந்துள்ளது
  4. எண்ணை கப்பல்களில் சிந்தி கடலை பாழாக்கும் எண்ணை 1970 முதல் 90 தொண்ணூறு வதவிகிதம் குறைந்துள்ளது
  5. கைப்பேசி (செல் ஃபொன்) மூலம் பேசலாம், அஞ்சல் அனுப்பலாம், படம் பார்க்கலாம், வரைபடம் பார்த்து வழிசெல்லலாம், அவரவர் கருத்தை உலகுக்கு பறைச்சாற்றலாம்.

மோசமாவன என்னென்ன? போக்குவரத்து நெரிசல், உடல் பருமன். இவை செல்வத்தால் வரும் பிரச்சினைகள், வறுமையாலும் பஞ்சத்தாலும் அல்ல.

ஒரு விசித்திரம் என்னவென்றால் பல முன்னேற்றங்கள் மெதுவாக வளர்வதால் செய்தியில் அடிபடுவதில்லை. விபத்துகளே செய்தியின் சாராம்சம். விமானம் விழுந்தால் செய்தி. சிசு மரணங்கள் எண்ணிக்கையில் விழுந்தால் செய்தி இல்லை.

வருடா வருடம் சராசரி மனிதனின் செல்வம் பெருகி, உடல்நலம் பெருகி, அறிவும் பெருகி, சுகாதாரம் பெருகி, அன்பும் பெருகி, சுதந்திரம் பெருகி, பாதுகாப்பு பெருகி, அமைதி பெருகி சமத்துவம் பெருகி வாழ்கிறான்.

சமத்துவம் பெருகியா?

ஆம் உலகெங்கும் சமத்துவம் வளர்கிறது. அதிவேகமாக. ஏன்? செல்வ நாடுகளில் செல்வந்தரின் செல்வம் வளரும் வேகத்தைவிட ஏழை நாடுகளில் ஏழைகளின் செல்வம் வேகமாக வளர்கிறது.

சமீபத்தில் பொருளாதாரம் வளர்ந்துள்ள ஆசிய நாடுகளை போல், ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதாரம் அமோகமாக வளர்கிறது. 2008 முதல் மொசாம்பிக் நாட்டு பொருளாதாரம் 60% வளர்ந்துள்ளது. எத்தியோப்பிவின் பொருளாதாரம் வருடா வருடம் பத்து சதவிகிதம் வளர்கிறது.

1945 இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், 2014 வரை, ஒரே ஒரு முறை தான் உலகப்பொருளாதாரம் சரிந்துள்ளது. 2009இல் ஒரு சதவிகிதம் சரிந்து பின் ஐந்து சதவிகிதம் வளர்ந்தது. வளர்ச்சி தொடர்வது மட்டுமின்று, அது வேகத்தில் கூடுகிறது

வருவதை எண்ணி வளரும் என் நம்பிக்கை, வரலாற்றை வைத்து மட்டும் போடும் கணக்கல்ல, வளர்ச்சியை இயக்கும் காரணத்தையும் வைத்தே போட்ட கணக்கு.

சிந்தனையும் செயல்திட்டங்களும் கலந்து புணர்ந்து புதுமைகளை உருவாக்கின்றன. அதனால் மேலும் சிந்தனைகள் பிறந்து கலந்து புணர்ந்து புதுமைகளை பிறப்பிக்கின்றன. இது வற்றாத நதி. மனிதரின் அறிவே இந்த நதிமூலம். அவை கலந்து புணரும் வழிகள் எண்ணற்றவை.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றும் புதுமைகளை நம்பும் காலத்தை கடந்துவிட்டோம். சிந்தனை புணர்ச்சியின் வேகத்தை இணையதளம் மேலும் ஊக்குவிக்கும்.

வேப்பிங் என்று ஒரு புதுமை. எலக்ட்ரானிக் மின்னணு சிகரெட். இங்கிலாந்தில் வேப்பிங் வந்த பின் முப்பது லட்சம் மக்கள் புகைபிடிப்பதை கைவிட்டனர். புகைப்பழக்கத்தை கைவிட நாம் படைத்த சாலச் சிறந்து யுக்தி, இதுவே.

ரசாயனமும் மின்னணுவியலையும் அறிந்த ஹான் லிக் என்ற சீனரால் இது படைக்கப்பட்டது.

ஒரு கேள்வி எழலாம். இந்த முன்னேற்றமெத்தால் சுற்றுச்சூழல் சீரழிகிறதல்லவா? இல்லை. மாறாக, மாசுகள் குறைந்து பசுமை வளர்கிறது. நீர் நிலைகள் சுத்தமாகின்றன, காற்று மாசுப்பொருட்கள் குறைந்துள்ளன, காடுகள் வளர்கின்றன, வன விலங்குகள் பெருகிவருகின்றன.

செல்வமிகை நாடுகளில் சுற்றுச்சூழல் வேகமாகவே தூய்மையாகிறது. ஏழை நாடுகளிலே தான் மாசு கேடுகள் அதிகம்.

மக்கட்தொகை? என் வாழ்நாளில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இரண்டு சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆப்பிரிக்காவிலும் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துவருகிறது. இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கட்தொகை நான்கு மடங்காக பெருகியது. இருப்பத்தோராம் நூற்றாண்டில் அது இரட்டிக்குமா என்பதே சந்தேகம். ஐநா சபை மக்கட்தொகை 2080இல் வளராமல் நிற்கும் என்று கருதுகிறது.

போரும் நோயும் பஞ்சமும் பெருகியே மக்கட்தொகை தடுமாறும் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மால்தூஸ் பயமுறுத்தினார். அவ்வாறின்றி, கல்வி செல்வம் சுகாதாரம் பெருகுவதால் மக்கட்தொகை வளர்ச்சி குன்றும். இது ஒரு அழகான எளிமையான விவரம். சிசுப்பருவத்தில் குழந்தைகள் சாகாமலிருந்தால் மக்கள் சின்ன குடும்பங்களோடு குழந்தைபேறை நிறுத்திவிடுகிறார்கள்.

மக்கட்தொகை வளர்ச்சி சுருங்க, வயல்களின் விளைச்சலும் பெருக, பஞ்சம் தவிர்ப்பது எளிமையாகிறது. ஐம்பதாண்டுக்கு முன் தேவைப்பட்ட நிலத்தில் பாதியில் இன்று 68% அறுபத்தெட்டு சதவிகிதம் அதிகமாக பயிர் வளர்க்க முடிகிறது. மீதி நிலத்தில் இயற்கையாய் காடு வளரலாம்.

கனடா நாட்டு ஒண்டாரியோ மாநிலத்தின் பரப்பளவில் உலகத்துக்கு போதுமான பயிர் வளர்த்து, மற்றதை இயற்கை நிலமாக விட்டுவிடலாம்.

பூமியின் பசும் போர்வை  வளர்கிறது. விண்ணிலிருந்து எடுக்கும் படங்களில் முப்பது வருடதுக்கு முன்னை விட இன்று பதிநான்கு சதவிகிதம் அதிகம் பசும் போர்வை விரிந்துள்ளதை காட்டுகிறது.

ஒரு வேளை நான் மிகையாக சொல்கிறேனா? நூறு மாடி கட்டடக்கூரையிலிருந்து குதித்துவிட்டு தரையில் விழுந்து சாகும் முன் “எனக்கு ஒண்ணும் ஆகவில்லை” என்னும் முட்டாள் ஜம்பத்தில் பேசுகிறேனா? இல்லை.

இந்த விவாததில் திருப்புமுனை பற்றி பேச்சு எழும். இந்த தலைமுறை தன் பெற்றோரை விட மோசமாக இருக்கும் என்று எதிர்கட்சியினர் சொல்வார்கள்.

ஒவ்வொரு தலைமுறையும் இப்படி பேசுகிறது. மெக்காலே சொன்னது : “ஒவ்வொரு காலத்திலும், அது வரை முன்னேற்றத்தை கண்டவரும், அடுத்த தலைமுறையில் முன்னேற்றம் ஏற்படாது என்று நம்புகின்றனர். நாம் ஆகவே முடியாது என்று நிரூபிக்க முடியாது. ஆனால் இதை தான் நம்முன் வந்தவர் அனைவரும் சொல்லிவந்துள்ளனர்.”

இறந்த காலத்திலிருந்து நல்ல நினைவுகளையும் எதிர் காலத்திலிருந்து பூச்சாண்டி ஆரூடங்களையும் வடிகட்டி எடுக்கிறோம்.

நம் தலைமுறைக்கு வரலாற்றில் ஈடில்லை என்பது, ஒரு விசித்திர கர்வம்.
மீண்டும் மெக்காலேவை முன்மொழிகிறேன் : “எந்த கொள்கையின் அடிப்படையில், கடந்த காலத்தில் முன்னேற்றமே தெரியும் போது, எதிர்காலத்தில் சீரழிவை மட்டும் எதிர்பார்ப்பது?”

குறிப்பு
“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” என்ற தலைப்பில் எழுதியிருக்கவேண்டும்.

தொடர்புள்ள கட்டுரைகள்


Sunday 8 November 2015

கல்வி – ஒரு வடமொழி பழமொழி


आचार्यात् पादं आदत्ते पादं शिष्य स्वमेधया ।
पादं सब्रह्मचारिभिः पादं कालक्रमेण च ॥
ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் ஷிஷ்யஸ்வமேதயா
பாதம் ஸப்ரஹ்மசாரிப்ய: பாதம் காலக்ரமேண ச
Aacaaryaat paadam adattE paadam shishyasvamEdayaa
paadam sabrahmacaariBhyaH paadam kaalakramENa ca

பாதம் – கால்
ஆசார்யாத் – ஆசாரியிடமிருந்து
ஆதத்தே - பெறப்படுகிறது
ஷிஷ்ய ஸ்வமேதயா – மாணவனின் சுய அறிவால்
ஸப்ரஹ்மசாரிப்ய: - சக மாணவனிடமிருந்து
கால க்ரமேண – அனுபவத்தால்

கல்வி எப்படி பெறுகிறோம்?

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததோர் கல்வியும் மனப்பழக்கம்”
என்றாள் ஔவை. மேல் கோளிட்ட சமஸ்கிருத பழமொழி கல்வி பெறும் முறையை நான்காய் பிரிக்கிறது.

ஒருகால் ஆசான் கற்பித்தும் ஒருகால் மாணவன் முயற்சித்தும்
ஒருகால் தோழன் சொற்பித்தும் ஒரு கால் காலம் பயணித்தும்”
என்பதே இதன் பொருள்.

நண்பர் சுதர்சனத்தின் தமிழாக்கம்
கானமாசான் காற்றம்மால் காலுடன் உற்றவரால் காலமாசான் மீதிக்கறிவு

பதம் பிரிப்பு
கால் நம் ஆசான் கால் தம்மால் கால் உடன் உற்றவரால்  
காலம் ஆசான் மீதிக்கு அறிவு

வடமொழி கவிதைகள்


கட்டுரை


Tuesday 3 November 2015

Fujimori - Peru's Japanese President

One more excerpt from Daniel Yergin and Joseph Stanislaw's book The Commanding Heights

Most Indians have not heard of Alberto Fujimori, a person of Japanese descent, who became President of Peru. Barack Obama of Kenyan descent and Italian-born Sonia Gandhi are much more famous.

--------Begin excerpt------------

During the 1960s Peru had built up a fishing fleet larger than Japan's. A left-wing military dictatorship nationalized this and it collapsed. Post military Democrat Alan Garcia,  captivating orator imposed price controls, severed Peru form global economy, cut taxes, gave wage increases and opened floodgates of government spending. The economy contracted 25% and inflation hit 3000%.

Shining Path, a terrible terrorist group led a civil war. In the 1980s, another option El Otro Sendero, the Other Path, written by Hernando de Soto, discussed Milton Friedman and  Friedrich von Hayek. The researchers said there were five lakh laws and executive orders affecting the economy. It took 289 days and 1231$ over 30 monthly minimum wages to register a simple sewing company. This group only attracted a small circle.

In 1987, Alan Garcia announce he would nationalize all banks and financial institutions. Maria Llosa led Libertad, launched a tirade against Garcia in an article, "Towards a totalitarian Peru" and a demonstration in Lima which was expected to draw a few thousand professionals, attracted a hundred thousand people.

In 1990 Llosa was front runner for President. He traveled to Taiwan which had $1000 per capita in 1960,same as Peru but in 1990 rose to 7530. Also stopped by Margaret Thatcher in England who advised him to press on but warned he would be very lonely.

Alberto Fujimori, an agricultural engineer and University rector, of Peru very small Japanese community ran, criticizing Llosa 's shock therapy. His coalition had evangelists, dispossessed, who campaigned for him in slums. He was attacked because his mother did not speak Spanish, none of his relatives was buried in Peru. He contrasted Llosa's aristocratic European, evoking Spanish conquerors, looks with his own Inca looking Asian features. He won and applied Fuji shock. He also said he was better prepared to emulate Asian countries than someone of European descent.

But when he won, he unleashed  shock therapy more far reaching than Vargas Llosa had proposed. He slashed public spending and devalued the currency. Llosa called this Fujishock.

"It was very difficult to fight violence and implement economic reforms simultaneously" he said. "But my mind worked like an engineer's, even on Shining Path. People advised fighting poverty before violence. That was a fallacy. We had to fight violence before poverty. Businesspeople had no hope. But I was sure, I had Oriental patience, I waited for results. I was firm. Even stubborn. "

The campaign against Shining Path was reorganized and intensified. It took two years. A house in Lima was found to produce more trash than expected for the two people living there. In a raid, they found it was a safe house for Shining Path, including its leader Abimael Guzman. He was paraded on the streets. No longer a fearsome guerilla, he implored his colleagues to lay down arms.

With violence tamed, Fujimori deregulated financial and labor markets, reduced and simplified tariffs, enabled privatization and reopened Peru to foreign investment. Peru  became a puma economy but it was not fast enough for Fujimori. He changed his cabinet ending up with advisers who had been against him once.

"The situation was a mess with many controls against poor consumers and favoring political power. I was independent, and I thought like an engineer, not a politician. Once an engineer sees a problem, he finds a solution, even if a limited solution."

He won two more elections, though he was accused of becoming a strongman when he dissolved parliament and suspended the Constitution and dismissed much of the judiciary. He was finally brought down by  corruption. Much of Peru's power elite was discovered to be involved in a stunning Web of corruption, revealed on videotapes made by Montesino, his powerful minister, on Peruvian television. Fujimori escaped and sought asylum in Japan.

His successor Alejandro Toledo ran against Alan Garcia, Fujimori's ultra leftist predecessor, who had devastated the country economically and politically. Toledo's victory signaled the final break of Peruvian public with Marxist economics.

--------End excerpt------------


Related Links


Llosa and Marquez - A Lack of Economic Knowledge
The end of Maoism in China - Deng Xiaoping and Japan
Science and Writers - Peter Medawar
Ludwig von Mises - The AntiCapitalistic Mentality

Saturday 31 October 2015

Henry Ford, idiot, traitor


The following is an excerpt from the book "American Tycoon", by Steven Watts. I will post a Tamil translation soon.

The words "idiot" and "traitor" in the title refer to the phrases used by Chicago Tribune.

-----------Begin Excerpt----------

The newspaper Chicago Tribune published an article describing Henry Ford as "an ignorant idealist...  an anarchist enemy of the nation" when he opposed President Wilson's use of National Guard to patrol the Mexican border against raids from Pancho Villa's guerrillas. An outraged Ford sued the paper.

The jury found abundant evidence of ignorance but none proving anarchism. Why?

During cross examination by the attorney Ford exhibited an astonishing lack of knowledge. He asserted that the American Revolution had occurred in 1812. He described chili con carne as a "large mobile army". He couldn't identify basic principles of American government. As listened cringed, Ford fumbled question after question, like a negligent schoolboy, finally respondign to one, "I admit I am ignorant about most things." The Defense Attorney asked him if he would read a book passage, or wished to leave the impression that he may be illiterate. "Yes, you can leave it that way," replied Ford calmly, "I'm not a fast reader, I have hay fever and I might botch it."

The jury awarded six cents in damages. Newspapers and magazines largely ignored the verdict and legal issues, and chortled about the crudeness and shallowness of this American hero.

Two unexpected things became apparent.

First Henry Ford seemed perfectly content to appear the provincial rube whose provocative endeavors left little time for book learning. When pressed on his lack of knowledge, he confessed that regarding newspapers, "I rarely read anything except the headlines." Also "I don't like to read books, they mess up my mind"

Second, common people, rather than being scandalized by Ford's predicament, seemed to appreciate it. They indulged his lack of learning and were amused by his answers. Asked what the United States had been originally, he replied, "Land, I guess."

The public applauded him for his refreshing lack of pretension and sympathized with his frank admission that he was too focused on work to get much formal education. Ministers around the country offered prayers for Henry Ford's deliverance from his snobby oppressors. Small town newspapers urged busy farmers, laborers and merchants to sympathetic letters of support to the car maker. Thousands did. To the shock and consternation of highbrows, Ford emerged from a seemingly embarrassing debacle, an even greater American folk hero than he had been before.

-----------End Excerpt----------

Related Links

Interview with author Steven Watts
Tom Wolfe on Intellectuals
On Mario Varghas Llosa - and writers
The Limits of Science - Peter Medawar
The Art and Aesthetic of Driving
Indians are such wonderful Drivers
Diesel Benz and Agriculture
Traffic
எமீல் லெவஸார் - கார் படைத்த தச்சன்