Showing posts with label Matt Ridley. Show all posts
Showing posts with label Matt Ridley. Show all posts

Saturday, 20 February 2016

இரண்டு லட்சம் கோடி டாலர் - கச்சா எண்ணையின் விலை சரிவு


செல்போன், இணையதளம், முகநூல் கடந்த இருபதாண்டின் புரட்சிகள்; பெரும் வளர்ச்சிகள். இதற்கு சமமாக, ஷேல் கச்சா எண்ணையால் ஒரு பெரும் வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதை விளக்கும் மேட் ரிட்லியின்கட்டுரையின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.

----தமிழாக்கம் ஆரம்பம்---

கச்சா எண்ணையின் விலை அபாரமாக சரிந்துள்ளது. 2014-இல் ஒரு பீப்பாய்க்கு 115 டாலர் இருந்த கச்சா எண்ணை 2016 பிப்ரவரியில் பீப்பாய்க்கு 30 டாலருக்கு சரிந்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. எண்ணை நிறுவனங்களும் அரசுகளும் திவாலாகும் என்றும் பங்கு சந்தை சரியும் என்றும், பொருளியல் நிபுணர்கள் அச்சுறுத்துகிறார்கள். விலைவாசி வீழும், பெட்ரோல் பருகல் பெருகும், அரசியல் கலவரம் பொங்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்கின்றனர். அவர்களெல்லாம் நுகர்வோரின் சார்பாக பேசாமல் எண்ணை தயாரிப்பாளரின் சார்பாக ஓலமிடுகின்றனர். எண்ணை பெருஞ்செல்வர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் இது பிடிக்காமலிருக்கலாம். ஆனால் சமூகத்திற்கு இது மாபெரும் நன்மை. கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் எண்ணை தயாரிப்பாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு இரண்டு ட்ரில்லியன் டாலர் ($ 2,000,000,000,000 = 140,000,000,000,000 ரூபாய்) கைமாறியுள்ளது.

(கோபுவின் குறிப்பு: இது ஆயிரத்து நானூற்று லட்சம் கோடி ரூபாய்க்கு சமம். ஒரு ட்ரில்லியன் டாலராக கணக்கிடப்படும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாராம் இதில் பாதிதான் இருக்கும்)

இன்னாள் உலக சமூகத்தின் தவிர்க்கவியலாத சரக்கில் கச்சா எண்ணைக்கே முதலிடம். தினசரி செயல்களின் சக்திவேர். ஒரு வருடத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி, இரும்பு, கோதுமை, செம்பு, பருத்தி, இயற்கை வாயு ஆகியவற்றின் மொத்த விலைமதிப்பைவிட கச்சா எண்ணை ஒரு வருடத்து விலைமதிப்பு மிகையாம்!!!!! கச்சா எண்ணை இன்றி அனைத்து தொழில்களும் சரிந்து விழும் – விவசாயம் உட்பட. எண்ணை விலை குறைந்தால், துணிவிலை, உணவு விலை, போக்குவரத்து விலை எல்லாம் குறையும். இதனால் மிஞ்சும் செலவை நாம் மற்ற பொருட்கள் வாங்கலாம், அதனால் வேலை வாய்ப்புகள் வளரும்.

சரிந்த விலைக்கு தடுமாரும் உலக பொருளாதாரமும், (வடதிசை நாடுகளில்) மிதமான குளிர்காலமும் முக்கிய காரணங்கள். சில தயாரிப்பாளர்கள் திவாலாவார்கள். மீண்டும் எண்ணை விலை ஏறும். ஐக்கிய பிரித்தானிய ராஜ்ஜியத்திலிருந்து தனிநாடு கேட்ட ஸ்காட்லண்டு தேசியவாதிகளின் பொது நிதி திட்டங்கள் வீழ்ந்தன.

ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஷேல் புரட்சி. ”ஷேல் புரட்சியால் பொங்குவுள்ள எண்ணை கடலால் எண்ணை விலை சரியும். ஷேல் வாயு பழைய கதை. ஷேல் எண்ணை உலகை மாற்றும்.,” என்று 2013இல் நான் எழுதினேன். அப்பொழுது எண்ணை உற்பத்தி உச்சவரம்பைத் (peak oil) தொட்டுவிட்டதே பெரும்  “செய்தியாய்” இருந்தது.

டெக்ஸாஸ், வட டக்கோடா மாநிலங்களில் ஷேல் புரட்சியால் பெருகிய எண்ணையால், சவுதி அரபுதேசத்தையும் ருஷியாவையும் மிஞ்சிவிட்டது அமெரிக்கா. இது உலகின் மிக முக்கிய புதுமைகளில் ஒன்று. இப்புதுமைக்கு இது குழந்தை பருவமே, வளரந்து ஓங்க நல்ல எதிர்காலம் உள்ளதாக எண்ணையின் விலை என்ற நூலில் ஆஸ்திரேலிய பேராசிரியர் ராபெர்த்தோ அகுலேரா, ஸ்வீடன் பேராசரியர் மரியன் ரடெட்ஸ்கி விளக்குகின்றனர். ஆர்ஜண்டைனா, மெக்சிகோ, சீனா, ஆஸ்திரேலியாவிற்கு இந்த தொழில்நுட்பம் பரவுமாம். இதனால் எண்ணை விலை 2035 வரை தாழ்ந்தே இருக்குமாம். 40 முதல் 60 டாலருக்குள் நிலவுமாம். சர்வதேச எரிசக்தி கழகமும் அமெரிக்க அரசின் எரிசக்தித்துறையும் 2035இல் எண்ணைவிலை 130 டாலரை தொடும் என்பதை ஒப்பிட்டலாம்.

எண்ணை விலை இப்படி நிலையற்று மேலும் கீழும் ஊஞ்சலார்டுகிறது? ஓபெக் (எண்னை உற்பத்திக்கு நாடுகளின் சங்கம்) நிறுவனத்தின் எண்ணை கட்டுப்பாடு கொள்கை ஒரு காரணம், எண்ணை பற்றாகுறை மற்றொரு காரணம், என்று நான் நினைத்துவந்தேன். இந்நூல் பற்றாகுறையோ எண்ணைகிணறு வற்றுவதோ ஓபெக் நிர்மாணமோ எண்ணை விலையை பாதிப்பதில்லை என்கிறது.

1960கள் முதல் பல நாடுகளில் எண்ணை கம்பெனிகள் நாட்டுடைமையாகின. (அமெரிக்காவில் மட்டும் நாட்டுடைமையாகவில்லை).இன்று 90 சதவிகிதம் எண்ணை நாட்டுடைமையான கம்பெனிகளின் கையில் உள்ளது. சவுதி அரெபியா, வெனிசுவாலா, ஈரான், ஈராக், குவைத்து, அமீரகம், நைஜீரியா, ருஷியா ஆகிய நாடுகளின் தேசிய கம்பெனிகளோடு ஒப்பிட்டால் அவை திமிங்கலங்கள், எக்ஸான்மோபில், ப்ரிடிஷ் பெட்ரோலியம் போன்ற சர்வதேச தனியார் கம்பெனிகளெல்லாம், வாலமீனும் விலாங்குமீனும்தான்.

இதன் விளைவு – தேசிய கம்பெனிகளின் பணத்தை அரசியல்வாதிகள் சுரண்டுவதால் அவை தொழில்நுட்பங்களில் புத்தாய்வு செய்யவோ, வீணாக்கலை தவிர்த்து சீராக நிர்வகிக்கவோ எந்த ஊக்கமுமில்லை.

அரசியல்வாதிகள் குறுக்கிடவில்லையேல், இருபதாண்டுகளுக்கு மலிவான எண்ணை கிடைக்கும். பெட்ரோல் சர்வாதிகரிகளுக்கும், ஐசிஸ் தீவிரவாதிகளுக்கும், காற்றாலை, சூரிய சக்தி, அணுமின் சக்தி, மின்சார கார் தயாரிப்பாளருக்கும் கெட்ட காலம் தான். நுகர்வரோக்கு அது நல்ல செய்தியே.
----தமிழாக்கம் முற்றும்----

கோபுவின் பின்னுரை

செய்தி என்றால் என்ன? என்று தலைப்பிட்டு முன்பு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். வக்லவ் ஸ்மில் சொன்ன தகவல் – 2011 முதல் 2013 மூன்றாண்டில் சீனாவின் சிமெண்ட் பயன்பாடு, 1900 முதல் 2000 வரை நூறாண்டில் அமெரிக்கா பயன்படுத்திய சிமெணடை விட அதிகம் என்பது அச்செய்தி. ஆனால், அரசியல் சர்ச்சையும், லஞ்சமும், ரகசிய காதலிகளும், நடிகர் எழுத்தாளர் பித்துக்குளித்தனங்களும் ஊடகங்களில் செய்தி. இதுவே நம் விருப்பம் போல. வணிகச்செய்திகளில் இவ்வித செய்திகள் அலசப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ஊழல் என்று பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் (அலைவரிசை) விவகாரத்தை விட, இந்த அளவு பெரிது. செய்திகளில் பேச்சுமூச்சு காணவில்லை! வெங்காய விலையை விட மிக அடிப்படை கச்சா எண்ணை விலை. பாமரருக்கும் ஊடகங்களுக்கு பொருளாதாரத்தை பற்றிய அறியாமையை இது காட்டுகிறது.

3டி அச்சு இயந்திரத்தால் மற்றுமொரு இயந்திர புரட்சி நடக்குமா என்றும் ஒரு முறை எழுதினேன். நடக்கலாம், நடக்க பல ஆண்டுகளாகும். ஆனால் இதுவரை பெரிதாக ஒன்றுமில்லை. ஷேல் புரட்சி சாலப்பெரிது.


தேசிய கம்பெனிகள் பெருமளவில் எண்ணை வைத்திருக்கலாம். ஆனால் எக்சான்மோபில் போன்ற தனியார் கம்பெனிகள் அவர்களுக்கு சமமாக சம்பாதிக்கின்றன. இதை மேட் ரிட்லி கட்டுரையில் சொல்லவில்லை. 

இருபதாண்டு ஆருடமெல்லாம் சந்தேகத்துக்கு உரியதே. இருபதாண்டுக்கு முன்னால் நிபுணர்கள் சொன்ன ஆருடங்களை பார்க்கவும். 

தோற்று பின்வாங்கும் நோய்கள் நற்செய்தி கட்டுரை எழுதினேன். பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் டெங்குவும் சிக்கன்குனியாவும் பெற்ற விளம்பரம் மருத்துவ முன்னேற்றங்களுக்கும் கிடைப்பதில்லை. நற்செய்தி மேல் ஓர் அலட்சணம் ஏன்?


தொடர்புடைய கட்டுரைகள்

Big Oil's Bigger Brothers - Economist article

செய்தி புதுமை பற்றி என் வலைப்பதிவுகள்

பொருளாதாரம் பற்றி என் வலைப்பதிவுகள் 

முன்னேற்ற சூனாமி மேட் ரிட்லி கட்டுரை - தமிழாக்கம்
உலக பொருளாதார வரலாறு - ஆலன் பீட்டி நூல் விமர்சனம்

Wednesday, 11 November 2015

செல்வம் உடல்நலம் சுகாதாரம் அன்பு அமைதி சமத்துவம் பெருகி

மேட் ரிட்லி (Matt Ridley) மூன்று உயிரியல் நூல்களும் ஒரு பொருளியல் நூலும் எழுதியுள்ளார். (நான்கையும் படித்துள்ளேன்). சமீபத்தில் இரு துறைகளையும் கலந்து எல்லாவற்றின் பரிணாம வளர்ச்சி என்று ஒரு நூல் எழுதியுள்ளார் (இதை நான் இன்னும் படிக்கவில்லை). இவர் லண்டன் எக்கானமிஸ்ட் பத்திரிகையின் முன்னார் அறிவியல் பகுதி ஆசிரியர். இங்கிலாந்தின் துரைமார்களில் ஒருவர், ராஜசபை (House of Lords) அங்கத்தினர். இவர் நிர்வகித்த ஆர்.பி.எஸ் வங்கி 2008 பொருளாதார சரிவில் திவாலானது. நிலக்கரி சுரங்க அதிபர், வயல்களும் வைத்துள்ளார். பிரபல அமெரிக்க ஆங்கிலேய நாளிதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார், இவற்றை நான் அவரது வலை தளத்தில் படித்து வருகிறேன்.

[Rational Optimist என்பதை தமிழில் “பகுத்தறிவு உகமையர்” என்று எழுதவேண்டும். ஐயோ! ஸ்டாலினிஸ்ட், மார்க்ஸிஸ்ட் போல ரிட்லியிஸ்ட், சைமனிஸ்ட் என்று எதோ பெயர் சூட்டிக்கொள்ளவேண்டும் போல]

நவம்பர் ஆறாம் தேதி, கனடா தேசத்து மங்க் பல்கலைகழக்கத்தில் மனிதகுலத்தின் எதிர்காலத்தை பற்றி ஒரு விவாதத்தில் இவர் பேசியதன் கட்டுரை வடிவத்தை தன் வலைதளத்தில் ஏற்றியுள்ளார். அதை நான் தமிழாக்கி கீழே தந்துள்ளேன்.

------------------------
அமெரிக்க சினிமா நடிகர் இயக்குனர் உடி ஆலன் ஒரு முறை சொன்னார், “மனிதக்குலம் போக இரண்டு பாதைகள் விரிந்துள்ளன. ஒரு பாதையில் சென்றால் ஓயா துன்பமும் துயரமும். மற்ற பாதையில் சென்றால் இனமே அழிந்து விடும். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் அறிவை பெற (இறைவனை) வேண்டுவோம்.”

இப்படித்தான் எதிர்காலத்தை பற்றி பலரும் பேசுகிறார். என் இளமையில் எதிர்காலம் இருண்டுகிடந்தது. மக்கட்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை; பஞ்சம் அச்சுறுத்தியது; பூச்சிமருந்துகள் புற்றுநோய் வளர்த்தன; பாலைவனங்கள் வயல்களை விழுங்கின; மண்ணெணை கிணறுகள் வற்றத்தொடங்கின; காடுகள் மறைந்தன; அமில மழை பொழிந்தது; ஓசோன் மண்டலத்து ஓட்டை வீங்கியது; என் விந்து அளவு குறைந்தது; அணு ஆயுதங்களால் அண்டமே அழிவின் வாசலில் அஞ்சித்தவித்தது.

மிகையாகச் சொல்லவில்லை. 1960களில் பொருளியல் வல்லுனர் ராபர்ட் ஹெய்ல்பிரோனர், ”மனிதக்குலத்தின் எதிர்காலம் மங்கும்; தாங்கொணா துயரம் தாண்டவமாடும்” என்று ஒரு நூலில் கட்டியங்கூறினார்.

பத்தாண்டுக்கு பின் நான் இவை எல்லாமே பூச்சாண்டி கதைகள் என்று உணர்ந்தேன். துயர்மல்கும் எதிர்காலம் இவ்வறிஞர் பயந்தபடி உதிக்கவில்லை. மக்களின் சீரும் சிறப்பும் பெருகிவருகிறது. வாழ்க்கை வளமும் நலமும் தினமும் தினமும் சிறக்கிறது.

  1.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம், ஒரு நாளுக்கு ஐந்து மணிநேரம் வளர்கிறது!
    (அதாவது ஐம்பதாண்டுகாலத்தில் சராசரி மனிதன் ஆயுட்காலம் 50*365*5=91250 மணிநேரம் நீண்டுள்ளது. இது  3802 நாட்களாகும் (91250 / 24). அதாவது பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் நீண்டுள்ளன. 1965 வாழ்ந்த சராசரி மனிதனினை விட, 2015 வாழ்பவர் பத்து ஆண்டுகள் ஐந்து மாதங்கள் அதிகம் வாழ்வார்!)
  2. பிறப்பிலேயே இறக்கும் சிசுக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக (66 சதவிகிதம்) குறைந்துள்ளது
  3. மலேரியா நோயால் இறப்பவரின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டில் அறுபது சதவிகிதம் குறைந்துள்ளது
  4. எண்ணை கப்பல்களில் சிந்தி கடலை பாழாக்கும் எண்ணை 1970 முதல் 90 தொண்ணூறு வதவிகிதம் குறைந்துள்ளது
  5. கைப்பேசி (செல் ஃபொன்) மூலம் பேசலாம், அஞ்சல் அனுப்பலாம், படம் பார்க்கலாம், வரைபடம் பார்த்து வழிசெல்லலாம், அவரவர் கருத்தை உலகுக்கு பறைச்சாற்றலாம்.

மோசமாவன என்னென்ன? போக்குவரத்து நெரிசல், உடல் பருமன். இவை செல்வத்தால் வரும் பிரச்சினைகள், வறுமையாலும் பஞ்சத்தாலும் அல்ல.

ஒரு விசித்திரம் என்னவென்றால் பல முன்னேற்றங்கள் மெதுவாக வளர்வதால் செய்தியில் அடிபடுவதில்லை. விபத்துகளே செய்தியின் சாராம்சம். விமானம் விழுந்தால் செய்தி. சிசு மரணங்கள் எண்ணிக்கையில் விழுந்தால் செய்தி இல்லை.

வருடா வருடம் சராசரி மனிதனின் செல்வம் பெருகி, உடல்நலம் பெருகி, அறிவும் பெருகி, சுகாதாரம் பெருகி, அன்பும் பெருகி, சுதந்திரம் பெருகி, பாதுகாப்பு பெருகி, அமைதி பெருகி சமத்துவம் பெருகி வாழ்கிறான்.

சமத்துவம் பெருகியா?

ஆம் உலகெங்கும் சமத்துவம் வளர்கிறது. அதிவேகமாக. ஏன்? செல்வ நாடுகளில் செல்வந்தரின் செல்வம் வளரும் வேகத்தைவிட ஏழை நாடுகளில் ஏழைகளின் செல்வம் வேகமாக வளர்கிறது.

சமீபத்தில் பொருளாதாரம் வளர்ந்துள்ள ஆசிய நாடுகளை போல், ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதாரம் அமோகமாக வளர்கிறது. 2008 முதல் மொசாம்பிக் நாட்டு பொருளாதாரம் 60% வளர்ந்துள்ளது. எத்தியோப்பிவின் பொருளாதாரம் வருடா வருடம் பத்து சதவிகிதம் வளர்கிறது.

1945 இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், 2014 வரை, ஒரே ஒரு முறை தான் உலகப்பொருளாதாரம் சரிந்துள்ளது. 2009இல் ஒரு சதவிகிதம் சரிந்து பின் ஐந்து சதவிகிதம் வளர்ந்தது. வளர்ச்சி தொடர்வது மட்டுமின்று, அது வேகத்தில் கூடுகிறது

வருவதை எண்ணி வளரும் என் நம்பிக்கை, வரலாற்றை வைத்து மட்டும் போடும் கணக்கல்ல, வளர்ச்சியை இயக்கும் காரணத்தையும் வைத்தே போட்ட கணக்கு.

சிந்தனையும் செயல்திட்டங்களும் கலந்து புணர்ந்து புதுமைகளை உருவாக்கின்றன. அதனால் மேலும் சிந்தனைகள் பிறந்து கலந்து புணர்ந்து புதுமைகளை பிறப்பிக்கின்றன. இது வற்றாத நதி. மனிதரின் அறிவே இந்த நதிமூலம். அவை கலந்து புணரும் வழிகள் எண்ணற்றவை.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றும் புதுமைகளை நம்பும் காலத்தை கடந்துவிட்டோம். சிந்தனை புணர்ச்சியின் வேகத்தை இணையதளம் மேலும் ஊக்குவிக்கும்.

வேப்பிங் என்று ஒரு புதுமை. எலக்ட்ரானிக் மின்னணு சிகரெட். இங்கிலாந்தில் வேப்பிங் வந்த பின் முப்பது லட்சம் மக்கள் புகைபிடிப்பதை கைவிட்டனர். புகைப்பழக்கத்தை கைவிட நாம் படைத்த சாலச் சிறந்து யுக்தி, இதுவே.

ரசாயனமும் மின்னணுவியலையும் அறிந்த ஹான் லிக் என்ற சீனரால் இது படைக்கப்பட்டது.

ஒரு கேள்வி எழலாம். இந்த முன்னேற்றமெத்தால் சுற்றுச்சூழல் சீரழிகிறதல்லவா? இல்லை. மாறாக, மாசுகள் குறைந்து பசுமை வளர்கிறது. நீர் நிலைகள் சுத்தமாகின்றன, காற்று மாசுப்பொருட்கள் குறைந்துள்ளன, காடுகள் வளர்கின்றன, வன விலங்குகள் பெருகிவருகின்றன.

செல்வமிகை நாடுகளில் சுற்றுச்சூழல் வேகமாகவே தூய்மையாகிறது. ஏழை நாடுகளிலே தான் மாசு கேடுகள் அதிகம்.

மக்கட்தொகை? என் வாழ்நாளில் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இரண்டு சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆப்பிரிக்காவிலும் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்துவருகிறது. இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கட்தொகை நான்கு மடங்காக பெருகியது. இருப்பத்தோராம் நூற்றாண்டில் அது இரட்டிக்குமா என்பதே சந்தேகம். ஐநா சபை மக்கட்தொகை 2080இல் வளராமல் நிற்கும் என்று கருதுகிறது.

போரும் நோயும் பஞ்சமும் பெருகியே மக்கட்தொகை தடுமாறும் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் மால்தூஸ் பயமுறுத்தினார். அவ்வாறின்றி, கல்வி செல்வம் சுகாதாரம் பெருகுவதால் மக்கட்தொகை வளர்ச்சி குன்றும். இது ஒரு அழகான எளிமையான விவரம். சிசுப்பருவத்தில் குழந்தைகள் சாகாமலிருந்தால் மக்கள் சின்ன குடும்பங்களோடு குழந்தைபேறை நிறுத்திவிடுகிறார்கள்.

மக்கட்தொகை வளர்ச்சி சுருங்க, வயல்களின் விளைச்சலும் பெருக, பஞ்சம் தவிர்ப்பது எளிமையாகிறது. ஐம்பதாண்டுக்கு முன் தேவைப்பட்ட நிலத்தில் பாதியில் இன்று 68% அறுபத்தெட்டு சதவிகிதம் அதிகமாக பயிர் வளர்க்க முடிகிறது. மீதி நிலத்தில் இயற்கையாய் காடு வளரலாம்.

கனடா நாட்டு ஒண்டாரியோ மாநிலத்தின் பரப்பளவில் உலகத்துக்கு போதுமான பயிர் வளர்த்து, மற்றதை இயற்கை நிலமாக விட்டுவிடலாம்.

பூமியின் பசும் போர்வை  வளர்கிறது. விண்ணிலிருந்து எடுக்கும் படங்களில் முப்பது வருடதுக்கு முன்னை விட இன்று பதிநான்கு சதவிகிதம் அதிகம் பசும் போர்வை விரிந்துள்ளதை காட்டுகிறது.

ஒரு வேளை நான் மிகையாக சொல்கிறேனா? நூறு மாடி கட்டடக்கூரையிலிருந்து குதித்துவிட்டு தரையில் விழுந்து சாகும் முன் “எனக்கு ஒண்ணும் ஆகவில்லை” என்னும் முட்டாள் ஜம்பத்தில் பேசுகிறேனா? இல்லை.

இந்த விவாததில் திருப்புமுனை பற்றி பேச்சு எழும். இந்த தலைமுறை தன் பெற்றோரை விட மோசமாக இருக்கும் என்று எதிர்கட்சியினர் சொல்வார்கள்.

ஒவ்வொரு தலைமுறையும் இப்படி பேசுகிறது. மெக்காலே சொன்னது : “ஒவ்வொரு காலத்திலும், அது வரை முன்னேற்றத்தை கண்டவரும், அடுத்த தலைமுறையில் முன்னேற்றம் ஏற்படாது என்று நம்புகின்றனர். நாம் ஆகவே முடியாது என்று நிரூபிக்க முடியாது. ஆனால் இதை தான் நம்முன் வந்தவர் அனைவரும் சொல்லிவந்துள்ளனர்.”

இறந்த காலத்திலிருந்து நல்ல நினைவுகளையும் எதிர் காலத்திலிருந்து பூச்சாண்டி ஆரூடங்களையும் வடிகட்டி எடுக்கிறோம்.

நம் தலைமுறைக்கு வரலாற்றில் ஈடில்லை என்பது, ஒரு விசித்திர கர்வம்.
மீண்டும் மெக்காலேவை முன்மொழிகிறேன் : “எந்த கொள்கையின் அடிப்படையில், கடந்த காலத்தில் முன்னேற்றமே தெரியும் போது, எதிர்காலத்தில் சீரழிவை மட்டும் எதிர்பார்ப்பது?”

குறிப்பு
“நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது” என்ற தலைப்பில் எழுதியிருக்கவேண்டும்.

தொடர்புள்ள கட்டுரைகள்


Sunday, 6 April 2014

தோற்று பின்வாங்கும் நோய்கள்

கடந்த 13 ஆண்டுகளில், உலகெங்கும், மலேரியா நோயால் இறந்தவர் எண்ணிக்கை 29% குறைந்துள்ளது. எனினும், 2012இல் 6,27,000 நபர்கள் மலேரியாவிற்கு பலியானர். பத்து வருடத்தில் இராக் இலங்கை ஆஃப்கானிஸ்தான் காங்கோ போர்களிலோ, ஆழிப்பேரலை நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளில் இறந்தவரை விட, மலேரியாவின் மரண எண்ணிக்கை அதிகமானது.

போலியோ ஓரிரு நாடுகளை தவிர அழிந்துவிட்டது. கினிப்புழூவின் தாக்கம் முடிவுக்கு வரப்போகிறது. எய்ட்ஸ் நோயினால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 52% குறைந்துள்ளது. காசநோய் (டுபர்குலாஸில்) மரணங்கள் 45% குறைந்துள்ளன.
2000 ஆண்டு தொடங்கி நீங்கள் முழுகம் கெட்ட செய்திகளை – தீவீரவாதம், விலைவாசி உயர்வு, ஊழல், வல்லரசு படுகொலைகள், திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு – அனைத்தையும் சேர்த்தாலும், அத்தொகையை மிஞ்சும் நல்ல செய்தி இந்த நோய்கள் பின்வாங்கும் செய்தி.

சூழ்நிலையை கவனிக்கவும்.
  1. ஜனத்தொகை பெருகினாலும்
  2. ஜனநாயகமா சர்வாதிகாரமா இரண்டாங்கெட்டானா, பேதமின்றி
  3. சாதி மத இன ஆண்பெண் பேதமின்றி

           இந்த நல்ல முன்னேற்றம் வெற்றி நடை போடுகிறது. நான் மிகவும் ரசிக்கும் மதிக்கும் உவக்கும் புகழும் மேட் ரிட்லி-யின் ஆங்கில கட்டுரை இங்கே.

ஒரு நாளிதழோ, அரசாங்கமோ, கட்சியோ, ஊடகமோ [கலைஞனோ, புலவனோ, புனிதனோ, எழுத்தாளனோ] இவ்வித நல்லச்செய்தியை கூவி பறையடிக்க மாட்டாது. நீட்டோலை வாசியா நிற்பர்.

தொடரட்டும் அவர்களின் ஓயாத ஒப்பாரி.


Friday, 3 January 2014

An End to Chinese Cruelty

A great cruelty was recently reversed! Or ended partially. China ended its One Child totalitarianism two days back. A tremendous leap forward in human rights. Whole generations have grown up with no aunts or uncles or brothers or sisters. Now that is set to change. 

I wonder why it has been met with no celebration at all. Why this deafening silence? I think the fear of Malthusian "overpopulation" has not abated. As Matt Ridley observes, the human race is the only one that gets more prosperous as we get more populous. Our population is our strength, he avers. As the economist Julian Simon has observed, most things become cheaper as technology, markets and human progress make their impact felt.

I think the cacophony of newspapers, artists, politicians, religious organizations, aid activists and philanthropists - both super rich and otherwise, who have  a strong vested interest in perennially complaining that the world is poor, are primarily to blame. The strong myth that the "Rich are getting richer, and the poor are getting poorer" in spite of all the evidence to the contrary, is primarily driving it. 


The phrase "demographic dividend" has worked wonders, as has the clear realization that in 20 years, several billion have dramatically improved their prosperity, education, health, and happiness.

2014 has had a wonderful begining. Let us hope it continues.

Friday, 22 November 2013

Democracy or Free Market

An excellent quote from Matt Ridley's latest blog. It best illustrates the differences between political and economic freedoms. Democracy is usually vastly oversold and hyped, while the free market is usually vehemently criticized. It has also been stated that the market votes every minute with its money, whereas the electorate votes once every few years. 

"Free-market economists are wont to point out that economic freedom is in one sense more tolerant than political freedom. If you like apples and I like oranges, then economic freedom means I can have one and you can have the other, and we are both happy. Political freedom means that we take a vote on whether we all should have apples or all should have oranges, and the loser is disappointed."

Note that Ridley makes this important observation in his last paragraph. Briefly it is: "The real benefit of democracy is stop the rulers using violence against you."

http://www.rationaloptimist.com/blog/when-political-tyranny-allows-economic-freedom.aspx

Monday, 11 November 2013

How Diesel and Benz transformed agriculture

In 1900, the world struggled to feed its population of 2 billion. Most farming was still done by ox and horse drawn ploughs, in most countries. The exception, until the 1940s was Japan, where human beings ploughed the field, because there was not enough farmland in Japan, to feed both humans and cattle. James Michener portrays this poignantly in his novel, Sayanora.

The internal combustion engine, was invented in 1880s by Germans Rudolf Diesel, Nicholas von Otto, Karl Benz etc primarily powered cars. It was then adapted for use in tractors, bulldozers, harvesters and other machines for the farm. These replaced the oxen and horses as plough animals, dramatically increased the amount and speed at which land could be ploughed. Cars and buses, far more than railways, dramatically reduced the need for bullock carts and horses and horse-carriages. Two-thirds of farm output, was being used to feed these animals. This dramatically reduced the amount of food needed for those animals! Which is one more reason we are able to feed 7 billion people. Another was the Haber-Bosch process which revolutionized fertilizer manufacturing and use. This process continued with Norman Borlaug's green revolution in the 1960s and 70s.

Roads were built all over the world, cutting transport times from months to days and days to hours. This meant a government could prevent famines in entire districts or states, by transporting enough food in mere days.

When people, mainly well-meaning but ignorant environmentalists and a gullible pessimistic media, say that cars and coal-fired power plants are polluting the earth, and that pesticides are ruining farm, we must be aware that we’d starve without these technologies.

This essay culled out from reading The Rational Optimist, by Matt Ridley, and his videos of talks by Ridley, Vaclav Smil and Juan Enriquez on the net.

Tuesday, 3 September 2013

Some quotes I like

Politics is the art of the possible - Otto von Bismarck
Science is the art of the soluble - Peter Medawar

Guano, while no saint, performs many miracles - Alexander von Humboldt

A cynic is someone who knows the price of everything and the value of nothing - Oscar Wilde

Self-sufficiency is just another word for poverty - Matt Ridley

Understand what a miracle a flower is - Gautama Buddha

Ordinary people admire the extra-ordinary. Extra-ordinary people admire the ordinary - Confucius

The human race is the only one that gets more prosperous, as it grows more populous - Matt Ridley
When one’s calculations disagree with planetary positions, one must revise calculations, since planet wont adjust their paths & speeds to suit your calculations - Parameshvara