Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, 27 April 2021

செய்தி நோய்

 “ஜுராச்சிக் பார்க்” நாவலை எழுதி புகழ் பெற்றவர் மைக்கேல் கிரைட்டன். அவர் ஒரு மருத்துவர். ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். மருத்துவத் தொழிலை விட கதை எழுதுவதை விரும்பி ஆண்ட்ரோமீடா ஸ்ட்ரெய்ன், தி கிரேட் டிரெய்ன் ராபரி, காங்கோ, டிஸ்க்லோஷர், போன்ற நாவல்களை எழுதினார். “தி கிரேட் டிரெய்ன் ராபரி” பின்னாளில் கிரைட்டனின் இயக்கத்தில், ஜேம்ஸ் பாண்ட் புகழ் ஷான் கான்னரி நடிக்க, திரைப்படமாகியது.

அவரது நண்பர் முர்ரே ஜெல்-மன், இயற்பியல் மேதை, குவார்க்கு எனும் அணுவின் நுன்பொருளை கண்டுபிடித்தவர். மருத்தவத்தில் ஈடுபடாத மைக்கேல் கிரைட்டன், ஒரு நோயை அடையாளம் கண்டார்; அதற்கு “முர்ரே ஜெல்மன் அம்னீசியா” என்று தன் நண்பரின் பெயரை சூட்டினார்.

அம்னீசியா என்பது தலையில் அடிப்பட்டவர்களுக்கு வரும் மறதி நோய் என்று நாம் அறிவோம். முர்ரே ஜெல்மன் மறதி என்பது செய்தித்தாள் வாசிப்பவருக்கு வரும் நோய். உண்மையில் இது மருத்துவ ரீதியாக நோயே அல்ல, ஒரு விசித்திரமான மனநிலை. அமெரிக்க நாளிதழ்கள் அச்சிட்ட மருத்துவ செய்தகளில் அபத்தமான பிழைகளும் தவறான கருத்துகளும் படித்து மிரண்டு போனார். அதே போல் இயற்பியல் கட்டுரைகளும் பிழைகள் நிறம்பி, அடிப்படை புரிதலே இல்லாதவர் எழிதியது என்பதும் அவரது இயற்பியல் நண்பர் முர்ரே ஜெல்மன் சொன்னார்.

பற்பல துறை நண்பர்களும் தங்கள் துறை சார்ந்த செய்திகள் அதே விதமாக அபத்தமாக இருப்பதாக கிரைட்டன் தகவல் சேர்த்தார். ஆனால் அதே நண்பர்கள் மற்ற துறை செய்திகளை உண்மையென்றும், பிழையில்லாததென்றும், சீராக ஆராய்ந்து எழுதப்பட்டதாகவும் கருதுவதை கண்டு தான் கிரைட்டன் குழம்பி போனார். மருத்துவ செய்தி அபத்தம், ஆனால் மற்ற செய்திகளை நம்புகிறேன் என்று மருத்துவர்களும், அறிவியல் செய்தி அபத்தம் ஆனால் மற்ற செய்திகளை நம்புகிறேன் என்று அறிவியல் வல்லுனர்களும், பொருளியல் செய்தி அபத்தம் ஆனால் மற்ற செய்திகளை நம்புகிறேன் என்று பொருளியல் வல்லுனர்களும் நடந்து கொள்வதை ஒரு வித மனநோயாக, மறதி வியாதியாக கருதி அதற்கு “முர்ரே ஜெல்மன் அம்னீசிய” என்று பெயரிட்டார்.

“சாலை ஈரமானதால் மழை பெய்கிறது” (Wet streets cause rain) என்று ஒரு உவமை சொன்னார் மைக்கேல் கிரைட்டன். எது காரணம் எது விளைவு என்பதிலேயே குழப்பமாம். இவ்வளவு அபத்தமான செய்தியை படித்தும் நாம் நாளிதழ்களை ஏன் நம்புகிறோம் என்று அவருக்கு புரியவில்லை.

”உன்க்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று நடிகர் வடிவேலு காட்டிய குதர்க்க வாதம் இதன் வேறு ஒரு அவதாரம்



அவ்வப்பொழுது எனக்கும் அப்படி தோன்றுகிறது. இந்தியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரவு எட்டு மணி / ஒன்பது மணி தொலைகாட்சி செய்திகளும், அவற்றில் வரும் விவாதங்களும், வைக்கப்படும் வாதங்களும், இன்றெல்லாம் துறை வல்லுனர்கள் அல்ல, சாதாரண மனிதர்களும் எவ்வளவு அபத்தம் என்று நமக்கு தெரிந்தும் நம்மில் பலரும தொடர்ந்து பார்த்துவருகிறோம். சர்வதேச அளவிலும் இதே போல் தான் பச்சையாக வெளிச்சமாக தெரிகிறது. சமூக ஊடகங்களில் நடப்பதை சொல்லி தெரிய வேண்டாம்.

முதல் பக்கத்தில் தங்க நகைகளுக்கு முழு பக்க விளம்பரம் (லலிதா, ஜிஆர்டி, கேரளா, ஜாய் அலுக்கா), அதன் பின்பக்கம் துணிக்கடை முழு பக்க விளம்பரம் (போத்திஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, பற்பல), அடுத்து இரண்டு பக்கம் புது வீடு மனை நிலத்திற்கு விளம்பரம், அடுத்த இரண்டு பக்கம் டிவி, மைக்ரோவேவ், ஏசி, ஃப்ரிஜ், சலவை இயந்திர கடைகளின் விளம்பரம், (விவேக் அண்டு கோ, வசந்த் அண்டு கோ, கிரியா, குரோமா, பிக் பஜார், சரவணா)  இதை தவிர கார் கம்பெனிகள், கணினி கம்பெனிகள், செல்பேசி கம்பெனிகள், படுக்கை அலமாரி கடைகள் எல்லாம் விளம்பரம் செய்தாலும், “இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி” வகையரா செய்தி படித்து, அதை நம்பி, நொந்து புலம்பும் வாசகர்கள். இதற்கு ஏதாவது அமெரிக்க ஐரோப்பிய வாசி இந்திய பொருளாதார பேராசிரியரின் அரைப்பக்க நேர்காணல் வேறு.

மாய ஆடை என்று சபையே நம்பும் மாதிரி நடிக்க நிர்வாணமான ஊர்வலம் வந்த மன்னர் கதை தெரியும். கண்கூடாக பார்க்கிறோம். ஊருடன் ஒத்துவாழ்வோம்…..

முர்ரே ஜெல்மன் அம்னீசியாவிற்கு ஒரு விக்கிபீடிய பக்கம் இருந்தது. ”என்னது பத்திரிகைக்காராவது தவறாக புரிந்து கொள்வதாவது…” என்று அந்த பக்கத்தையே எடுத்துவிட்டனர். மைக்கேல் கிரைட்டன் விக்கிபீடியா பக்கத்தில் மட்டும் உள்ளது.

அட கிடக்கட்டும், மற்ற விக்கிப்பீடியா பக்கங்களில் தவறு ஏதும் இருக்காது. எல்லாரும் பாருங்க எனக்கும் முர்ரே ஜெல்மன் அம்னீசியா, எனக்கும் முர்ரே ஜெல்மன் அம்னீசியா

முயல்கர்ஜனை கட்டுரைகள்

 What is news?


Saturday, 20 February 2016

இரண்டு லட்சம் கோடி டாலர் - கச்சா எண்ணையின் விலை சரிவு


செல்போன், இணையதளம், முகநூல் கடந்த இருபதாண்டின் புரட்சிகள்; பெரும் வளர்ச்சிகள். இதற்கு சமமாக, ஷேல் கச்சா எண்ணையால் ஒரு பெரும் வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இதை விளக்கும் மேட் ரிட்லியின்கட்டுரையின் சில பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.

----தமிழாக்கம் ஆரம்பம்---

கச்சா எண்ணையின் விலை அபாரமாக சரிந்துள்ளது. 2014-இல் ஒரு பீப்பாய்க்கு 115 டாலர் இருந்த கச்சா எண்ணை 2016 பிப்ரவரியில் பீப்பாய்க்கு 30 டாலருக்கு சரிந்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. எண்ணை நிறுவனங்களும் அரசுகளும் திவாலாகும் என்றும் பங்கு சந்தை சரியும் என்றும், பொருளியல் நிபுணர்கள் அச்சுறுத்துகிறார்கள். விலைவாசி வீழும், பெட்ரோல் பருகல் பெருகும், அரசியல் கலவரம் பொங்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்கின்றனர். அவர்களெல்லாம் நுகர்வோரின் சார்பாக பேசாமல் எண்ணை தயாரிப்பாளரின் சார்பாக ஓலமிடுகின்றனர். எண்ணை பெருஞ்செல்வர்களுக்கும் சர்வாதிகாரிகளுக்கும் இது பிடிக்காமலிருக்கலாம். ஆனால் சமூகத்திற்கு இது மாபெரும் நன்மை. கச்சா எண்ணை விலை வீழ்ச்சியால் எண்ணை தயாரிப்பாளர்களிடமிருந்து நுகர்வோருக்கு இரண்டு ட்ரில்லியன் டாலர் ($ 2,000,000,000,000 = 140,000,000,000,000 ரூபாய்) கைமாறியுள்ளது.

(கோபுவின் குறிப்பு: இது ஆயிரத்து நானூற்று லட்சம் கோடி ரூபாய்க்கு சமம். ஒரு ட்ரில்லியன் டாலராக கணக்கிடப்படும், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாராம் இதில் பாதிதான் இருக்கும்)

இன்னாள் உலக சமூகத்தின் தவிர்க்கவியலாத சரக்கில் கச்சா எண்ணைக்கே முதலிடம். தினசரி செயல்களின் சக்திவேர். ஒரு வருடத்தில் உற்பத்தியாகும் நிலக்கரி, இரும்பு, கோதுமை, செம்பு, பருத்தி, இயற்கை வாயு ஆகியவற்றின் மொத்த விலைமதிப்பைவிட கச்சா எண்ணை ஒரு வருடத்து விலைமதிப்பு மிகையாம்!!!!! கச்சா எண்ணை இன்றி அனைத்து தொழில்களும் சரிந்து விழும் – விவசாயம் உட்பட. எண்ணை விலை குறைந்தால், துணிவிலை, உணவு விலை, போக்குவரத்து விலை எல்லாம் குறையும். இதனால் மிஞ்சும் செலவை நாம் மற்ற பொருட்கள் வாங்கலாம், அதனால் வேலை வாய்ப்புகள் வளரும்.

சரிந்த விலைக்கு தடுமாரும் உலக பொருளாதாரமும், (வடதிசை நாடுகளில்) மிதமான குளிர்காலமும் முக்கிய காரணங்கள். சில தயாரிப்பாளர்கள் திவாலாவார்கள். மீண்டும் எண்ணை விலை ஏறும். ஐக்கிய பிரித்தானிய ராஜ்ஜியத்திலிருந்து தனிநாடு கேட்ட ஸ்காட்லண்டு தேசியவாதிகளின் பொது நிதி திட்டங்கள் வீழ்ந்தன.

ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஷேல் புரட்சி. ”ஷேல் புரட்சியால் பொங்குவுள்ள எண்ணை கடலால் எண்ணை விலை சரியும். ஷேல் வாயு பழைய கதை. ஷேல் எண்ணை உலகை மாற்றும்.,” என்று 2013இல் நான் எழுதினேன். அப்பொழுது எண்ணை உற்பத்தி உச்சவரம்பைத் (peak oil) தொட்டுவிட்டதே பெரும்  “செய்தியாய்” இருந்தது.

டெக்ஸாஸ், வட டக்கோடா மாநிலங்களில் ஷேல் புரட்சியால் பெருகிய எண்ணையால், சவுதி அரபுதேசத்தையும் ருஷியாவையும் மிஞ்சிவிட்டது அமெரிக்கா. இது உலகின் மிக முக்கிய புதுமைகளில் ஒன்று. இப்புதுமைக்கு இது குழந்தை பருவமே, வளரந்து ஓங்க நல்ல எதிர்காலம் உள்ளதாக எண்ணையின் விலை என்ற நூலில் ஆஸ்திரேலிய பேராசிரியர் ராபெர்த்தோ அகுலேரா, ஸ்வீடன் பேராசரியர் மரியன் ரடெட்ஸ்கி விளக்குகின்றனர். ஆர்ஜண்டைனா, மெக்சிகோ, சீனா, ஆஸ்திரேலியாவிற்கு இந்த தொழில்நுட்பம் பரவுமாம். இதனால் எண்ணை விலை 2035 வரை தாழ்ந்தே இருக்குமாம். 40 முதல் 60 டாலருக்குள் நிலவுமாம். சர்வதேச எரிசக்தி கழகமும் அமெரிக்க அரசின் எரிசக்தித்துறையும் 2035இல் எண்ணைவிலை 130 டாலரை தொடும் என்பதை ஒப்பிட்டலாம்.

எண்ணை விலை இப்படி நிலையற்று மேலும் கீழும் ஊஞ்சலார்டுகிறது? ஓபெக் (எண்னை உற்பத்திக்கு நாடுகளின் சங்கம்) நிறுவனத்தின் எண்ணை கட்டுப்பாடு கொள்கை ஒரு காரணம், எண்ணை பற்றாகுறை மற்றொரு காரணம், என்று நான் நினைத்துவந்தேன். இந்நூல் பற்றாகுறையோ எண்ணைகிணறு வற்றுவதோ ஓபெக் நிர்மாணமோ எண்ணை விலையை பாதிப்பதில்லை என்கிறது.

1960கள் முதல் பல நாடுகளில் எண்ணை கம்பெனிகள் நாட்டுடைமையாகின. (அமெரிக்காவில் மட்டும் நாட்டுடைமையாகவில்லை).இன்று 90 சதவிகிதம் எண்ணை நாட்டுடைமையான கம்பெனிகளின் கையில் உள்ளது. சவுதி அரெபியா, வெனிசுவாலா, ஈரான், ஈராக், குவைத்து, அமீரகம், நைஜீரியா, ருஷியா ஆகிய நாடுகளின் தேசிய கம்பெனிகளோடு ஒப்பிட்டால் அவை திமிங்கலங்கள், எக்ஸான்மோபில், ப்ரிடிஷ் பெட்ரோலியம் போன்ற சர்வதேச தனியார் கம்பெனிகளெல்லாம், வாலமீனும் விலாங்குமீனும்தான்.

இதன் விளைவு – தேசிய கம்பெனிகளின் பணத்தை அரசியல்வாதிகள் சுரண்டுவதால் அவை தொழில்நுட்பங்களில் புத்தாய்வு செய்யவோ, வீணாக்கலை தவிர்த்து சீராக நிர்வகிக்கவோ எந்த ஊக்கமுமில்லை.

அரசியல்வாதிகள் குறுக்கிடவில்லையேல், இருபதாண்டுகளுக்கு மலிவான எண்ணை கிடைக்கும். பெட்ரோல் சர்வாதிகரிகளுக்கும், ஐசிஸ் தீவிரவாதிகளுக்கும், காற்றாலை, சூரிய சக்தி, அணுமின் சக்தி, மின்சார கார் தயாரிப்பாளருக்கும் கெட்ட காலம் தான். நுகர்வரோக்கு அது நல்ல செய்தியே.
----தமிழாக்கம் முற்றும்----

கோபுவின் பின்னுரை

செய்தி என்றால் என்ன? என்று தலைப்பிட்டு முன்பு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். வக்லவ் ஸ்மில் சொன்ன தகவல் – 2011 முதல் 2013 மூன்றாண்டில் சீனாவின் சிமெண்ட் பயன்பாடு, 1900 முதல் 2000 வரை நூறாண்டில் அமெரிக்கா பயன்படுத்திய சிமெணடை விட அதிகம் என்பது அச்செய்தி. ஆனால், அரசியல் சர்ச்சையும், லஞ்சமும், ரகசிய காதலிகளும், நடிகர் எழுத்தாளர் பித்துக்குளித்தனங்களும் ஊடகங்களில் செய்தி. இதுவே நம் விருப்பம் போல. வணிகச்செய்திகளில் இவ்வித செய்திகள் அலசப்படுகின்றன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ஊழல் என்று பேசப்பட்ட ஸ்பெக்ட்ரம் (அலைவரிசை) விவகாரத்தை விட, இந்த அளவு பெரிது. செய்திகளில் பேச்சுமூச்சு காணவில்லை! வெங்காய விலையை விட மிக அடிப்படை கச்சா எண்ணை விலை. பாமரருக்கும் ஊடகங்களுக்கு பொருளாதாரத்தை பற்றிய அறியாமையை இது காட்டுகிறது.

3டி அச்சு இயந்திரத்தால் மற்றுமொரு இயந்திர புரட்சி நடக்குமா என்றும் ஒரு முறை எழுதினேன். நடக்கலாம், நடக்க பல ஆண்டுகளாகும். ஆனால் இதுவரை பெரிதாக ஒன்றுமில்லை. ஷேல் புரட்சி சாலப்பெரிது.


தேசிய கம்பெனிகள் பெருமளவில் எண்ணை வைத்திருக்கலாம். ஆனால் எக்சான்மோபில் போன்ற தனியார் கம்பெனிகள் அவர்களுக்கு சமமாக சம்பாதிக்கின்றன. இதை மேட் ரிட்லி கட்டுரையில் சொல்லவில்லை. 

இருபதாண்டு ஆருடமெல்லாம் சந்தேகத்துக்கு உரியதே. இருபதாண்டுக்கு முன்னால் நிபுணர்கள் சொன்ன ஆருடங்களை பார்க்கவும். 

தோற்று பின்வாங்கும் நோய்கள் நற்செய்தி கட்டுரை எழுதினேன். பறவைக்காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் டெங்குவும் சிக்கன்குனியாவும் பெற்ற விளம்பரம் மருத்துவ முன்னேற்றங்களுக்கும் கிடைப்பதில்லை. நற்செய்தி மேல் ஓர் அலட்சணம் ஏன்?


தொடர்புடைய கட்டுரைகள்

Big Oil's Bigger Brothers - Economist article

செய்தி புதுமை பற்றி என் வலைப்பதிவுகள்

பொருளாதாரம் பற்றி என் வலைப்பதிவுகள் 

முன்னேற்ற சூனாமி மேட் ரிட்லி கட்டுரை - தமிழாக்கம்
உலக பொருளாதார வரலாறு - ஆலன் பீட்டி நூல் விமர்சனம்

Saturday, 31 October 2015

Henry Ford, idiot, traitor


The following is an excerpt from the book "American Tycoon", by Steven Watts. I will post a Tamil translation soon.

The words "idiot" and "traitor" in the title refer to the phrases used by Chicago Tribune.

-----------Begin Excerpt----------

The newspaper Chicago Tribune published an article describing Henry Ford as "an ignorant idealist...  an anarchist enemy of the nation" when he opposed President Wilson's use of National Guard to patrol the Mexican border against raids from Pancho Villa's guerrillas. An outraged Ford sued the paper.

The jury found abundant evidence of ignorance but none proving anarchism. Why?

During cross examination by the attorney Ford exhibited an astonishing lack of knowledge. He asserted that the American Revolution had occurred in 1812. He described chili con carne as a "large mobile army". He couldn't identify basic principles of American government. As listened cringed, Ford fumbled question after question, like a negligent schoolboy, finally respondign to one, "I admit I am ignorant about most things." The Defense Attorney asked him if he would read a book passage, or wished to leave the impression that he may be illiterate. "Yes, you can leave it that way," replied Ford calmly, "I'm not a fast reader, I have hay fever and I might botch it."

The jury awarded six cents in damages. Newspapers and magazines largely ignored the verdict and legal issues, and chortled about the crudeness and shallowness of this American hero.

Two unexpected things became apparent.

First Henry Ford seemed perfectly content to appear the provincial rube whose provocative endeavors left little time for book learning. When pressed on his lack of knowledge, he confessed that regarding newspapers, "I rarely read anything except the headlines." Also "I don't like to read books, they mess up my mind"

Second, common people, rather than being scandalized by Ford's predicament, seemed to appreciate it. They indulged his lack of learning and were amused by his answers. Asked what the United States had been originally, he replied, "Land, I guess."

The public applauded him for his refreshing lack of pretension and sympathized with his frank admission that he was too focused on work to get much formal education. Ministers around the country offered prayers for Henry Ford's deliverance from his snobby oppressors. Small town newspapers urged busy farmers, laborers and merchants to sympathetic letters of support to the car maker. Thousands did. To the shock and consternation of highbrows, Ford emerged from a seemingly embarrassing debacle, an even greater American folk hero than he had been before.

-----------End Excerpt----------

Related Links

Interview with author Steven Watts
Tom Wolfe on Intellectuals
On Mario Varghas Llosa - and writers
The Limits of Science - Peter Medawar
The Art and Aesthetic of Driving
Indians are such wonderful Drivers
Diesel Benz and Agriculture
Traffic
எமீல் லெவஸார் - கார் படைத்த தச்சன்


Wednesday, 25 February 2015

What is News?

When I first read Tom Friedman’s book “The Lexus and the Olive tree” in 1999, I was stunned. It related a set of major and historical events in the 1980s and 1990s of which I was unaware, either totally, or tangentially. I was an avid reader of newspapers and somewhat less avid consumer of television news : or so I thought. Apparently I was reading the wrong news, mostly politics, sports, entertainment or science.

TV news, I realise, is just radio with makeup. It’s practically disinformation, not news. Newspapers are hardly better. But clearly they serve some markets.

Sometimes, a single statistic or graph explains more things than a whole shelf of books or a decade of personal experience. Moore’s law, Julian Simon’s bet, the Laffer curve, linguistics maps in Jared Diamond’s book “Guns Germs and Steel”, all these explain a phenomenon, a principle or history in a way that words simply can’t. This one, on plants and animals, stunned me recently.

John Allen Paulos tries to make this point in his book A Mathematician Reads the Newspaper. I think he fails by politeness. Hans Rosling does a better job with his TED talks.

Vaclav Smil, by dealing with large significant numbers, and placing them in context is unparalleled in the small circle that I am aware of. Bill Gates, who recently endorsed Smil as the author whose book he looks forward to the most, tweets some graphs, which I find are far more newsworthy than a hundred headlines about so-called earth shattering events. In an essay that explains how the world uses 20th century materials, Gates explains Smil's book Making the Modern World, with excellent graphs.

This one on China and cement is one such. China has used more cement in the last three years 2011-13 than the United States did in the 20th century. That simply stuns me.



This graph on the benefits of vaccination in the US, is an example of a bad graph, much harder to understand. 

If only journalists would explain national budgets, industrialization, the market economy, science, or other political issues with such graphs. They only analyze - overanalzye - elections and electorate behaviour on such a scale. This is not confined to Indian media, it is a world wide phenomenon. The only channels where you see informative graphs are the sports channels : cricket, basketball, American football, tennis, these sports are analyzed with excellent statistics and very enlightening graphs. Perhaps that level of arithmetic is beyond the capacity of journalism. I doubt it. I suspect that their primary function is to misinform and keep the noise level high.

Related Posts

2. எடிசனின் வால்மீகி - வஷ்லவ் ஸ்மில்
3. A Fascinating Graph of Life
4. The Laffer Curve

Followup March 28, 2015

Vaclav Smil's graph on cement and China was irresistible to Bill Gates. After a few weeks, Gates' tweet became irresistible to a major newspaper - the Washington Post, which published a story on the graph - though only a blog. I don't know if it came out in the print edition.