Saturday 30 May 2015

எடிசன் வாழ்த்து


புனிதன் காந்தி நன்றிசொல்ல வாயெழா
மனிதன் நேரு புகழ்ந்து எழுத கையெழா
கவிஞன் பாரதியும் பெற்ற இன்பம் பாடிடா
கலைஞன் ஒருவன் கற்பனைக்குள் அடங்கிடா
புனிதா மனிதா கவியே கலைஞா எடிசா
இனிதே புனிதே கவியே கலைதான் மின்சாரமே

சீதை ரிஷபன் புத்தன் யேசு சுவைத்திடா
துருவர் இரண்யர் மாறர் அப்பர் வேண்டிடா
குப்தர் சீனர் யவனர் மிசிரர் நினைத்திடா
அருமை அறிந்தும் மானுடமே மலைத்திடா
மண்சாரா விண்சாரா குணஞ்சாரா குலஞ்சாரா
மின்சார வரமளித்த எடிசா நன்றி நன்றி

கவிதைகள் 

கட்டுரைகள்

No comments:

Post a Comment