Showing posts with label மல்லை. Show all posts
Showing posts with label மல்லை. Show all posts

Wednesday, 28 June 2017

Lingodhbhava at Mamallapuram Shore temple

Water-tank (dry) near Shore temple
Left to right: Varaha, Pillar temple, Spring

Left: Diving Varaha when tank has some water
Right: Rishabantika Siva in the pillar shrine


Just to the north of the twin shore temples at Mamallapuram is an excavated granite water tank (or pond) with some unusual sculptures of the Pallava era. From south to north, they are a digging (diving, rather) Varaha, a pillar temple and a natural spring with a jala-kanya sculpture. These were not discovered until the 1990s by the ASI, being buried in the sand until then. Scholars seem to have not hazarded too many guesses at what this tank could be, though it seems obvious to me. NS Ramaswamy’s book “2000 Years of Mamallapuram” summarises a paper that PL Samy published, titled “Water cult in Mahabalipuram”, in Journal of Tamil Studies, Tuticorin, 1975. Not too many new books on  Mamallapuram have appeared after the excavation of the tank. And they have concentrated on the other aspects of Mamallapuram.

The Varaha sculpture is carved out of the mother rock like the three other animal sculptures in the Five Rathas nearby. It has four birudas (titles) of Rajasimha Pallava, some of his favorites, inscribed upon the base, in Sanskrit in the Pallava Grantha script. The birudas on the side are “Sri RajasimhaH” “Sri RanajayaH” and “Sri BharaH”. The biruda on the rear, under the varaha’s tail, is “Sri Citra KaarmukaH”. Between the legs of the boar on both the and under its tail, leaves of acquatic plants are sculpted. These are similar to those at the base of the Varaha and Gajalakshmi panels in the Varaha Mandapam. These indicate that the boar which represents Vishnu, is diving under water, not merely digging.

Sanskrit inscriptions in Pallava Grantha script-
Sri RaajasimhaH Sri RaNajayaH Sri BharaH
श्री राजसिंहः श्री रणजयः श्री भरः 

The pillar temple, unique even to Mamallapuram, has a small shrine in its middle, about a foot square, with a bas-relief of Siva as Rishabantika on the back wall. The base, part of the mother rock, like the Varaha, has clearly sculpted features that are part of the adishtana, with the lowest level a sixteen sided polygon and everything above it circular. The small shrine has two dvarapalas on seated lions with raised paws. Two similar pilasters adorn the rear of this shrine. The pillar shrine clearly has a kodungai, greeva and a shikara. That it is a temple is not in question. It contrasts nicely with a seated lion shrine on the south side of the Shore temple, which features a similar excavated small shrine, with Mahishasura Mardhinion on the back wall. This lion-vahana temple has a Pallava copy in the mini-tiger cave complex a further half-a-kilometer south of the Shore temple, but the pillar temple has no Pallava imitations. The only attempts at imitation which I can think of, are the modern cement-conrete pilaster shrines in most houses and apartment complexes, all over India, which usually have Vinayaka idols.

A panoramic photo of Rishabhantika Siva
with Brahma and Vishnu flanking him

About three feet north of the pillar temple,  is a freshwater spring (called sunai in Tamil). It has a sandy base when dry, and seeps water occasionally. It has a flawless circular ring wall, about two feet in diameter, with a niche at the eastern side, which has a sculpted figure of a jala-kanya (water-maiden) and her chaamara-kanyas (whisk-bearers). 

The Spring, when dry
Sandy bed. Jalakanya sculpture

Spring under water

Clearly the whole stepped tank was designed to fill up with fresh water, either from the spring, or by rain. Notice that the topstep of the watertank is lower than the greeva of the pillar temple. If the tank ever filled up to the brim, the shikara would still be above the water level. This is quite significant and by design.

I believe the pillar temple is not merely a temple, but  a representation of Siva as Lingodhbhava and is integrated into the tank for this purpose. There is no other Lingodhbhava at Mamallapuram, but there is a magnificent Lingodhbhava on the southern wall of the Kanchi Kailasanatha temple, also built by Rajasimha Pallava. Eight armed , and encased in a rhombus like pattern of four slanted lines within a rectangular niche, neither the feet of the Lingodhbhava nor the tip of his crown (jata-makuta or matted hair) are shown, just as they were not seen by Brahma or Vishnu. To his sides below his waist are Brahma and Vishnu, standing in adoration. Above them respectively are (1) Brahma flying (b) Surya and Chandra flying, Siva’s jata-makuta raising over them. Directly under Siva, is shown a four armed boar, carrying the conch (shankha) and discus (chakra), the weapons of Vishnu.This is severaly damaged, but it is unmistakeable. In later Chola sculptures, a similar Lingodhbhava but more cylindrial, with Siva in an oval rather than rhombus-like interior, can be seen with a hamsa (swan) representing Brahma. Often Brahma himself is seated on the swan.

Lingodhbhava - Kanchi Kailasanatha temple
Varaha below Lingodhbhava
Lingodhbhava at Sivapuram
near of Coovam river

Brahma on hamsa - Sivapuram

Vishnu as Varaha, Sivapuram
Brahma on hamsa - Konerirajapuram

Living Sculptures: Water in the Bas-Relief Panels

Prof Baluswamy in his Tamil books அர்சுணன் தபசு Arjunan Tapasu (about Arjuna’s Penance) and புலிகுகையும் கிருஷ்ண மண்டபமும் Puli Kugaiyum Krishna Mandapamum (about Tiger Cave and Krishna Mandapam), showed that not only the Arjuna’s Penance bas-relief, but also the Govardhana bas-relief in Krishna Mandapam had water themes. The cleft in the middle of the Arjuna Penance indicated the Ganga, which led Victor Goloubew to propose that it is Bhagiratha’s Penance rather than that of Arjuna. And several scholars have pointed out that there existed a brick-and-mortar cistern at the top of the cleft. So when rain filled up a tank there, and water flowed out, viewers would see a torrent of water pouring down the Ganga cleft – rendering it a living sculpture, where water was integrated with the stone figures. Baluswamy argued that the Govardhana panel was also a living sculpture, before Vijayanagar kings built a mandapam preventing rain. Imagine seeing Krishna lift the Govardhana panel through the drizzle as people had for the previous seven or eight centuries!

Several of the monuments in Mallai, including Trimurthi mandapam with a well, Varaha mandapam, with a small tank, Dharamraja Ratha with water spouts, Mahishasura Mardhini Rock lapped by the sea at high tide have  obvious water integration, besides the two great bas reliefs. I believe a case could me made that Tiger Cave, Mini Tiger caves, Athiranachanda mandapam, Koneri mandapam (named after the large pond nearby called Koneri) and most likely the original Vishnu shrine in the shore temple, had themes based on water integration. Like Fermat’s theorem, those are too small to fit here in this blog.

Now imagine the Lingodhbhava water-tank filled to the brim with clear water. Imagine a swan flies in and swims along the surface, representing Brahma – but still below the top of the Lingodhbhava pillar. Peer through the water, and see a Varaha diving, but not quite reaching the bottom of the water : a Varaha with the title “Sri Bhara”, the perfect epithet for Vishnu!

A play with water and sculpture, worthy of a king who called himself IndraLeelaH? A well-measured marvel, isn't it? Or to use the Sanskrit phrase : atimaanam atiadputam! अतिमानम् अति अत्पुदम् ॥ 

Can you, like me, see Athyantakaama Pallava smiling at us, through the misty drizzle of thirteen centuries?

11 September 2024 - this photo below by Suresh Priyan, captures what I tried to portay in this essay

Same tank Water filled
Photo by Suresh Priyan 



Pond at TTDC Resort, Mamallapuram
Swans?

If you liked this essay, you may also like my other blogs on Mamallapuram or Rajasimha

1. Atyantakaama Pallava's poem - a musical experiment
2. Rajasimha's third inscription
3. An overview of Mamallapuram
4. Rajasimha’s Calligraphic Nagari script
5. Pallava Grantha alphabet in Kanchi Kailasantha temple
7. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை 

...or these videos

Prof Baluswamy on Arjuna's Penance (in Tamil)
Prof Baluswamy on Krishna Mandapam (in Tamil)
R Gopu on 2000 Years of Mamallapuram (in Tamil)

Thursday, 29 December 2016

சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ

சமீபத்தில் சென்ற அக்டோபர் 2016 வலம் முதல் இதழில் இக்கட்டுரை அச்சுக்கு வந்தது. படங்களோடு இங்கே பதிவிடுகிறேன். வலம் தளத்து சுட்டி இங்கே.
----------------------------------------------------------------

சிவன் முறுவல்

கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். வளர்பிறை தேய்பிறையாய் பக்தி வரும் நம்மில் சிலர், திருவிழா, திருமணம், பிறந்தநாள், வேண்டுதல் என்று ஏதேதோ காரணத்திற்கு பழக்கரீதியாய் கோயில் செல்கிறோம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாத வகையறாக்களே சிறுவயதில் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது… கச்சேரி, நாட்டியம் என்று கலைகளை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். ஓரிருவர் சிற்பங்களை காண செல்வதுமுண்டு.
எந்த கோயிலுக்கு போகலாம்? முருக பக்தருக்கு அறுபடை வீடும், வைணவருக்கு ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களும், சைவருக்கு நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்களும் தமிழகத்தில் புகழ்பெற்றவை. ஒரே நாளில் பஞ்ச பூத தலங்களையோ, நவகிரக தலங்களையோ காணும் வழக்கம் சமீபத்தில் புகழ் பெற்றுள்ளன. கல்கி எழுதிய பொன்னியின் “சிவகாமியின் சபதம்” கதையை படித்த ஆர்வத்தில், வந்திய தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்ற கோயில்களையும் வரலாற்று தடங்களையும், பொன்னியின் செல்வன் வரலாற்று பேரவை குழுவினர் ஆண்டுக்கொருமுறை வலம் வருகின்றனர். நான் சேர்ந்துள்ள தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் மகேந்திர வர்ம பல்லவன் பாதையில் அவன் எழுப்பிய வல்லம், சிங்காவரம், தளவானூர், மண்டகபட்டு குகை கோயில்களை சென்று களித்தோம். 

கும்பகோணம் கவின் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற நண்பர் விசுவநாதன், நாகசாமி எழுதிய ஓவியப்பாவை நூலை ஏந்தி ஓவியங்களும் சிற்பங்களும் புகழ்வாய்த்த குந்தவை ஜீனாலயம், கீழ் பழுவூர், குறிச்சி, திருப்புலிவனம், கோனேரிராஜபுரம், வேப்பத்தூர், திருவலஞ்சுழி, திருப்பருத்திக்குன்றம் என்று பயணிக்கிறார்.

கல்லூரி நாட்களில் நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கல்வெட்டு படிக்க ஆவலோடு சென்றேன். இருளில் கல்வெட்டு சரியாக தெரியவில்லை; தெரிந்தவற்றை படிக்க இயலவில்லை. 2000இல் “சிவகாமியின் சபதம்” படித்தபின் எனக்கு சிற்பத்தின் மேல் ஆர்வம் வந்தது. கேலண்டர் படங்களிலும், அமர் சித்திர கதா புத்தகங்களிலும், ஏபி நாகராஜன் திரைப்படங்களிலும் காணும்  தெய்வ வடிவங்களையே பார்த்து பழகியிருந்தேன். முனைவர் சித்ரா மாதவனின் வரலாற்று உரைகளையும் பல சிற்பங்களின் வடிவங்களை அவர் படம் காட்டி விளக்கிய பொருட்டே, பாரத சிற்ப கலையையும் அதன் நெடும் பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது.

தியானத்தில் அமர்ந்த சிவன் சடையில் நடுவே குற்றால அருவி போல் விழும் கங்கையை கேலண்டர் படங்களில் காண்கிறோம். ஆனால் பல்லவர் சோழர் கால சிற்பங்களில் அப்படியில்லை. ஈசன் தலையில் நிற்க விரும்பும் கங்கையின் அகங்தையை அடக்க, தன் சடையின் ஒருமுடியை மட்டும் விரலால் நீட்டுகிறான் பரமசிவன். அது மட்டுமா? நானிருக்க யாரிவள் என்று கங்கையை காணவும் கணவனை கடியவும் வருகிறாள் பார்வதி. உமையவள் பாவத்தில் சினமா ஊடலா? ஈசனுக்கு தேவியின் பாராமுகமா? இல்லை இது மலைமகளின் ஊடல்! உமையின் உடல் ஒருபுரமிருக்க, அவள் முகமோ கங்காதரனை காதலோடு நோக்குகிறது.

பார்க்கும் பார்வதியின் முக பாவம் ஒருபால். தாங்கும் தாணுவின் கோலமென்ன? பெரும் பாரம் தலையில் வந்து விழுந்து பூதேவிக்கு தாங்கமுடியாமல் விழுவதை தடுக்கவேண்டும் என்ற கவனமும் பொறுப்பும் கவலையும் அக்கரையும் வாட்டுகிறதா அவனை? ஒன்றுமில்லை. மிக அலட்சியமாக, இடுப்பில் ஒரு கைவைத்து, இதழில் புன்சிறிப்பு மலர திருவிளையாட்டு குறும்பு கோலத்தில் காட்சி தருகிறான். பல்லவ காலத்து சிற்பிக்கும் சமகாலத்து ஓவியனுக்கும் உள்ள பெரும் இடைவெளியை இதில் காணலாம். ஆகாயகங்கையின் அதிவேகம் சிவனின் மகிமைக்கு ஒரு சுமையல்ல என்பதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக உணர்ந்து அந்த சிற்பி இதை வடித்திருக்கவேண்டும்.

கங்காதரர் - ஆடுதுறை

ஸ்தபதிகள் கோயில் கட்டுமுன், வேத மந்திரத்தை தியானம் செய்து, அந்த தியானத்தின் பலனாய் மனக்கண்ணில் கோவிலின் வடிவத்தை கண்டபின்னரே, அதை கட்டத் தொடங்குவராம். சிற்ப சாத்திரங்களின் விதிகளுக்கிணங்கவே ஸ்தபதிகள் கோயில்களை அமைத்தாலும், அவரவர் திறமையும் கற்பனையும் கலைபாங்கும் சிற்பத்திலும் கோவிலின் கட்டுமானத்திலும் மிளிர்ந்து தெரிகிறது.

ஒரு கோயிலில் ஒரு கோஷ்டத்திலுள்ள ஒரு சிற்பத்துக்கே இத்தனை பின்கதையிருப்பின், தஞ்சை தாராசுரம் போன்ற பெருங்கோயில்களில் என்னவெல்லாம் இருக்கும்? பயணத்தால் மட்டும் சிலவற்றை அறியமுடியாது. பல கோயில்களில் பல சிற்பங்கள் புரியாத புதிராகவே உள்ளன. நம்முன் பற்பல கோயில்களுக்கு சென்று, தங்கள் கலைக்கண்களால் கண்டு களித்து, நமக்கு தெரியாத விவரங்களை ஆர்வலர்கள் நூலில் எழுதியதை படித்தால் கல்லாதது கல்லளவு என்று புரியும்.

மாமல்லபுரத்து பஞ்ச பாண்டவ ரதங்களில் பெரியது தர்மராஜ ரதம். முதலில் சென்றபோது கீழ்தளத்திலுள்ள எட்டு சிற்பங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன். கல்வெட்டுகள் தெரிந்தன. தமிழ் எழுத்து போலிருந்தாலும் சில எழுத்துக்களுக்கு அங்குமிங்கும் வாலும் கொம்பும் முளைத்தது போல் தெரிந்தது. பல்லவருக்கு ஒருவேளை ஆர்வக்கோளாரா என்ற சந்தேகமே எழுந்தது. அது தமிழே இல்லையாம். பல்லவ கிரந்தலிபியில்  எழுதிய சமஸ்கிருதமாம். “நாமும் ஏக்கிசான் ரகுதாத்தா ஹிந்தி படித்தோமே? ஹிந்தி எழுதும் தேவநாகரி லிபியில் அல்லவா சமஸ்கிருதம் எழுதுவார்கள்?” என்று குழம்பும்பொழுது, ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டுவரை வடக்கிந்தியாவில் மட்டுமே தேவநாகிரியில் எழுதுவார்களென்றும், தென்னிந்தியாவில் கிரந்த லிபியிலோ தெலுங்கு-கன்னட லிபியிலோ சமஸ்கிருதம் எழுதுவது வழக்கமென்றும் தெரியவந்தது. இது போன்ற அடிப்படை தகவல்களை பள்ளிக்கூட பாடங்களில் சொல்லவேண்டாமா? கல்வெட்டு ஆய்வோர்க்கு மட்டும் தெரியும் ரகசியமாக ஏன் இருக்கவேண்டும்?

மல்லை தர்மராஜ ரதம்
கிரந்த லிபியில் வடமொழி கல்வெட்டு
அது மட்டுமா! மலையா, கம்போடியா, பர்மா, சுமத்திரா, சாவகம், சியாமதேசம் என்னும் தாய்லாண்டு – ஏறக்குறைய தொண்ணூறு தென்கிழக்கு ஆசிய மொழிகளின் எழுத்துகள் கிரந்தத்திலிருந்து பிறந்தவை என்பது மொழிவல்லுனர் கருத்து. ஐரோப்பிய கும்பெனியார் ஆட்சி வந்தபின் அம்மொழிகள் பலவும் லத்தீன லிபியின் வடிவை தழுவிக்கொண்டன. தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் மல்லை கலை உலாவின் அறிமுக உரையில் பேராசிரியர் சுவாமிநாதன் இதை சொன்னபொழுது, எனக்கு மெய்சிலிர்த்து. சீவக சிந்தாமணியை முதலில் படிக்கும்போது உ.வே.சாமிநாத ஐயருக்கு இப்படி அல்லவா சிலிர்த்திருக்கும்?

மாமல்லபுரத்தை பற்றி முதலில் 1788இல் எழுதிய வில்லியம் சேம்பர்ஸ், இது சியாமதேச லிபி, ஒரு காலத்தில் தமிழகத்தை சியாம மன்னர்கள் ஆண்டிருக்கவேண்டும் என்றே கருதினார். அக்காலத்தில் அங்கே வாழ்ந்த பிராமணர்களுக்கும் பல்லவர் காலத்து கிரந்த லிபி தெரிந்திருக்கவில்லை. பல்லவர் என்ற மன்னர் குலத்தையே மக்கள் மறந்திருந்தினர். அந்த வரலாறை மீட்டெடுத்தது ஒரு பெரும் கதை. இந்த பின்புலத்தை அறிந்தபின் சென்று பார்த்தால், நம் சிற்பக்கலையின் மகிமையே தனி. இலக்கியத்திலும் இசையிலும் அரசியலிலும் நமக்குள்ள ஆர்வமோ ஆழமோ, சிற்ப ஓவிய கலைகளில் இல்லை. இணையம் முகநூல் டிஜிட்டல் கேமராக்களால் இது மாறிவருகிறது.

மல்லை தர்மராஜ ரதத்தை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் மேலே இரண்டு தளங்கள் இருப்பது தெரியும். அற்புதமான பல சிற்பங்கள் அங்கே உள்ளன. வீணாதர சிவன் அதில் ஒருவர். அவர் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. நமக்கு பழகிய வீணை பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயகர் உருவாக்கியதாம். சோழர் காலத்து தமிழகத்தில் மட்டுமல்ல, ஒரிசா தலைநகர் புவநேஷ்வரில் முக்தேஷ்வர் கோவிலில் வீணை வாசிக்கும் ஒரு பெண்ணின் சிற்பத்தை கண்டேன். அவள் கையிலும் அதே மெல்லிய வீணை. 

மாமல்லபுரம் தர்மராஜ ரதம்
வீணாதர சிவன்


புவனேசுவரம் - முக்தேசுவரர் கோயில்
வீணை வாதினி
ஆனால் வீணாதர கோலத்தில் என் மனதை கொள்ளை கொண்டது கும்பகோணத்தில் நாகேஷ்வரன் கோவில் வீணாதர தட்சிணாமூர்த்திதான்.

நாகசாமியின் ஓவியப்பாவை நூலில் வலம்புரம் என்னும் ஊரை அப்பர் பாடிய தேவாரத்தை எடுத்துக்காட்டுவார்.

“கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் 
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
 
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே”

என்பது அப்பரின் தேவாரம். “கொவ்வை செவ்வாயில் குமிண்சிறிப்பு” என்ற வர்ணனை பலருக்கும் தெரியும். “சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ” என்ற இந்த வர்ணனை அதையே செய்தது. கும்பகோணம் நாகேஷரன் கோவிலுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி இதழ்களிலுள்ள் சிறுமுறுவல் என் சிந்தை  வௌவியது.

தட்சிணாமூர்த்தி - குடந்தை கீழ்க்கோட்டம்
சிவன் முறுவல்

சிவன் முறுவல் - வலம் அக்டோபர் 2016 இதழ் 
கல்லிலே ஆடவல்லான்

Sunday, 18 December 2016

மாமல்லபுரம் - வரலாற்று புதிர்கள்




சிவகாமியின் சபதம் எழுதும் முன், மாமல்லபுரத்துக்கு சென்று அங்குள்ள சிற்பங்களை காணும் முன்னும், அதன் பின்னும், கல்கி கிருஷ்ணமூர்த்தி எந்த வரலாற்று நூல்களை படித்தார்? இல்லை எதையும் படிக்கவில்லையா? கற்பனையிலேயே கதை அளந்தாரா? மல்லையில் உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை காணாமல் வந்துவிட்டோம் என்று மிகவும் வருந்தினாராமே? எதுவாக இருக்கும்?

ஸ்ரீரங்கமும் சிதம்பரமும் காஞ்சி காமாட்சியும் மதுரை மீனாட்சி கோயிலும் பழனி முருகனும் ராமேஸ்வரமும் அடையாத என்ன புகழை என்ன எழிலை என்ன சிறப்பை மாமல்லபுரம் பெற்றது என கருதி, ஐநா சபையின் யுனெஸ்கோ இலாக மாமல்லபுரத்திற்கு மட்டும் உலக மரபு சின்னம் என்ற பட்டத்தை வழங்கியது?

மகாபலியா? மாமல்லனா? பஞ்ச பாண்டவர்களா? மாமல்லபுரத்து சிற்பங்களை படைக்க யார் காரணம்? யாரோ அத்யந்தகாமனாமே? அவனுக்கும் மல்லைக்கும் என்ன சம்பந்தம்?

ராஜ ராஜ சோழனின் கல்வெட்டு மாமல்லபுரத்தில் உள்ளதாமே? அவன் தஞ்சை கோயிலை அல்லவா கட்டினான்! எல்லோரா கைலாசநாதருக்கும் கடற்கரை கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? ரோமாபுரி நாணயங்கள் மாமல்லையில் கிடைத்ததா? சங்க காலத்தில் மல்லை ஒரு துறைமுகமாக இருந்ததா? பீம ரதம் ஒரு புத்த விகாரமா?

ஆழ்வார்கள் பாடிய மாமல்லபுரத்தை ஒரு ஆங்கிலேயரும் பாடியுள்ளாராமே? என்ன பாடினார்? ஏன் பாடினார்?

ஆயிரமாண்டுகளுக்கு மேல் மகேந்திர வர்ம பல்லவர் இயற்றிய ஒரு நாடகம் கேரளத்தில் அரங்கேறி வந்துள்ளதா? அதே நாட்டிய நாடகம் சென்னையில் அரங்கேறுமா? நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவருக்கு மல்லையில் சிற்பம் உள்ளதா? இந்திரனுக்கும் சிலையுள்ளதாமே – இது என்ன அதிசயம்? யுதிஷ்டிரன் சிம்மாசனம் உள்ளதா? வாமன அவதாரத்தில் ஜாம்பவான் எப்படி வந்தார்? ராவணனையும் பலராமனையும் ஒரே இடத்தில் காணமுடியுமா??!!!

இப்படி பல புதிர்களை ஒளித்து வைத்து பல குழப்பங்களை உண்டாக்கி எண்ணற்ற வரலாற்று துப்பறிஞர்களையும் கலை ஆர்வலரையும் ஓவியர்களையும் ஊக்குவித்த மாமல்லபுரத்தை பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் வரும் டிசம்பர் 24-25, 2016 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ் இணைய கல்விகழக அரங்கில் நடக்க உள்ளது. ஒன்பது உரைகள். ஒரு இயல் இசை நாட்டிய நாடகம்.

கடல் மல்லை கிடந்த கரும்பையும் பார்த்தனுக்கு பாசுபதம் அளித்த பரமனையும் மாமயிடன் செற்றறுத்த கோலத்தாளையும் கண்டு மாமல்லபுரத்திம் மர்மங்களை அறிந்து சிறப்ங்களின் கலை நுணுக்கங்களில் ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயல் போல் உகள, எல்லீரும் வாரீர்!

பல்லவ மல்லை பேச்சுக் கச்சேரி நிகழ்ச்சி நிறல்  
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் வலைத்தளம்

என்னுடைய மாமல்லபுரம் வலைப்பதிவுகள்
  1. கோயிலும் கல்கியும்
  2. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை 
  3. மல்லை சிற்பியர் வாழ்த்து
  4. பத்ரி சேஷாத்ரி - அதிரணசண்ட மண்டபத்துமூன்றாம் கல்வெட்டு
நிகழ்ச்சி நிறல் 
24.12.2016 – சனிக்கிழமை
காலை 10 மணி அத்யந்தகாமனின் அடிச்சுவட்டில்
பல்லவ சிற்பங்கள் ஒரு பார்வை
முனைவர். சித்ரா மாதவன்
காலை 11.30 மணி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை - அறிமுகம்
காலை 11.45 மணி சிற்பம் சிவம் சுந்தரம்
மாமல்லை சிற்பங்களின் உடல் மொழி
பேராசிரியர். சிவராமகிருஷ்ணன்

மதியம் 2.00 மணி புலவன் அத்யந்தகாமன்
கலைக்கடலின் இலக்கிய நயம்
முனைவர். சங்கரநாராயணன்
மதியம் 3.45 மணி சங்கம் முதல் சமீபம் வரை
மல்லை வரலாற்றை ஆய்வாளர் துப்பறிந்த கதை
திரு. கோபு ரங்கரத்தினம்
மாலை 5.30 மணி மத்தவிலாச பிரஹசனம்நாட்டிய நாடகம்
விசித்திர சித்தனின் வினோத காவியம்
முனைவர். ஸ்வர்ணமால்யா கணேஷ்

25.12.2016 – ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி கொற்கை நன்றே
மல்லையில் மகிஷாசுரமர்த்தினியின் கோல வடிவங்கள்
முனைவர்.எஸ். பாலுசாமி
காலை 11.45 மணி நவிலும் சிற்பத்தில் நான்கானவன்
ரசிகர் அகப்பொருள்கலை ஆர்வலரின் கருத்துக் கோவை
பேராசிரியர்.எஸ். சுவாமிநாதன்

மதியம் 2.00 மணி தமிழில் நனைந்த கலை
ஆழ்வார்களின் கடல்மல்லை  பாசுரங்கள்
பேராசிரியர்.மதுசூதனன்
மதியம் 2.45 மணி மல்லையின் தமிழ் கல்வெட்டுகள்
பின்தொடர்ந்த மன்னரின் குரல்
திரு.கே. ஸ்ரீதரன் 
மதியம் 3.45 மணி யார் அந்த அத்யந்தகாமன் – புத்தொளி
ஐம்பதாண்டு கால மல்லை ஆய்வுகள்

முனைவர். நாகசாமி

Monday, 18 April 2016

மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை

சென்னை மெரீனா கடற்கரை சிலைகள்


சென்னை மெரீனா கடற்கரையில், பல்கலைகழகத்துக்கு எதிரே, அண்ணாதுரை எம்ஜிஆர் சமாதிகளுக்கு அருகில், உழைப்பாளர் சிலை உள்ளது. (உழைப்பாளி சிலை என்றல்லவா அழைக்கவேண்டும்?) இச்சிலையை வடித்தவர் ராய் சௌதுரி என்ற வங்காள கலைஞர். சென்னை கவின் கலை கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர்.

சென்னை கடற்கரை - உழைப்பாளர் சிலை

கடுமையாக உடலை வருத்திக்கொண்டு நரம்பும் சதையும் பிதுங்க நால்வர் ஒரு கனமான பாறையை அகற்ற முனைவதே சிற்பத்தின் வடிவம். சிற்பத்திற்கு ஆங்கிலத்தில் Triumph of Labour அதாவது உழைப்பின் வெற்றி என்று பெயர். 

உழைப்பாளர் ஒன்றுகூடினால் கடினமான செயலிலும் வெற்றி காணலாம் என்பது சிற்பத்தின் கருத்து. இதில் மார்க்சிஸத்தின் கொள்கையும் ஜனநாயகத்தின் கொள்கையும் மிளிர்கின்றன. இச்சிலை ஒரு சாதாரண கலை வடிவம் அல்ல, ஒரு அரசியல் தத்துவத்தை முன்னிறுத்தும் கலை வடிவம்.

மெரீனா கடற்கரையில் பல சிலைகளுள்ளன. வள்ளுவன், இளங்கோ, கண்ணகி, ஔவை, கம்பன், சுப்பிரமணிய பாரதி. பாரதிதாசன் சிலைகள் அவர்களது தமிழ்பணிக்காக அவர்களை கௌரவிக்கும் சிலைகள். அன்னியராயினும், வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் செய்த தமிழ் தொண்டை பாராட்டி கௌரவிக்கும் அம்மூவரின் சிலைகளும் உள்ளன. 

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின், 1968ஆம் ஆண்டில் நடந்த உலக தமிழ் மாநாட்டை ஒட்டி இந்த சிலைகள் நிறுவப்பட்டன; கம்பர் சிலை மட்டும் 1971இல் நிறுவப்பட்டது. இவையிருக்க காந்தி, காமராஜ், சுபாஷ் சந்திர போஸ் மூவரின் சிலை மட்டும் அவர்களது அரசியல் பணிக்காக நிறுவப்பட்டவை. பெரும் வணிகருக்கோ, அறிவியல் விளையாட்டு நிர்வாகம் இயல் இசை நாடக ஓவியக் கலைகளில் சாதித்தவர் ஒருவருக்கும் கடற்கரையில் சிலை ஏதுமில்லை. நடிகர் சிவாஜி கணேசனுக்கு வைத்த சிலை ஒரு விதிவிலக்கு.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன், பொது இடங்களில் சிலை வைக்கும் வழக்கம் பாரத நாட்டில் இல்லை. இலக்கியத்தில் எந்த வரலாற்று குறிப்போ, தொல்லியல் சான்றோ இல்லை. சுதந்திரத்திற்கு பின் அரசியல் தலைவர்களின் சிலைகள் நாடெங்கும் காணலாம். சென்னை தெருக்களில் ஆங்காங்கே வேறு பல அரசியல் தலைவர்கள், புலவர்கள், சினிமா கலைஞர்களுக்கு சிலைகளுள்ளன.

மற்ற சிலைகளெல்லாம் கௌரவ சின்னங்களாக மட்டுமே திகழ உழைப்பாளர் சிலையை கலை அழகிற்கும் ரசிக்கலாம். சென்னைக்கு சுற்றுலா வருபவர் சிற்பங்களை ரசிக்க இரண்டு இடங்களுக்கு மட்டுமே செல்வதுண்டு. ஒன்று எழும்பூர் அருங்காட்சியகம். மற்றொன்று மாமல்லபுரம்.

கலைக்கூடங்கள்

கோவில்களே பாரத சிற்ப ஓவிய கட்டிட கலைகளின் சாலச்சிறந்த கூடங்கள். சென்னையில் பழம்பெரும் கோவிலகளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மட்டுமே பழைய கருங்கற் சிற்பங்கள் உள்ளன. இவையும் விஜயநகர் காலத்து சிற்பங்கள். மற்ற கோயில்களில் சுதை சிற்பங்களே ஒரளவுக்கு ரசிக்கும் படி இருக்கும்.

வரலாற்று வல்லுனர்கள் மாமல்லபுரத்தையே கருங்கற் சிற்பத்தின் பிறப்பிடமாக கருதுகின்றனர். மாமல்லபுரத்துக்கு முன் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் சில குகை கோவில்களில் சிற்பங்கள் இருப்பினும், ஓரிரண்டே இருக்கும். அவற்றை காணச்செல்பவர் வெகுச்சிலரே. பல்லவர் காலம் தொடங்கி இன்றுவரை கோயில்களே தமிழ சமூகத்தின் கலைக்கூடங்களாக திகழ்ந்துவருகின்றன. ஓரிரு மார்க்ஸிச வரலாற்று வல்லுனர் அவற்றுள் அரசியல் கண்ணோட்டத்தை புகுத்தினாலும், கோயில் கலைகள் தெய்வீகத்தை தான் பிரதானமாக பிரதிபலிப்பவை. வைணவ சைவ புராணங்களும் ராமாயண மகாபாரத இதிகாசங்களும் ஆழ்வார் நாயன்மார் சம்பவங்களும் மட்டுமே பல்லவ பாண்டிய சோழ காலத்தில் சிற்பங்களாய் உள்ளன. நாயக்கர் காலத்து கோயில்களில்தான் பாமர மனிதர்கள் குறவன் குறத்தி மற்றும் சில யதார்த்த சிற்பங்களை காணலாம்.

மல்லையில் உழைப்பாள் சிற்பங்கள்

அர்சுணன் தவம் எனும் மல்லை சிற்பத்தின் மையமாக, அர்சுனனும் அவனுக்கு பாசுபதம் வழங்கும் சிவனும் காணலாம். சிலர் இதை பகீரதன் தவமென்றும் கூறுவர். இக்காட்சியை காண தேவரும் கந்தர்வரும் நாகரும் கிம்புருடரும் பல பறவை விலங்குகளும் வருவதை காணலாம். சிவனுக்கு கீழே ஒரு முனிவரும் அவரது சீடர்களும் உள்ளனர். இடது புறத்தில் காட்டில் நடந்து வரும் நான்கு வேடர்களையும் காணலாம்.

அக்காலத்தில் பாரவி என்ற புலவர் எழுதிய கிராதார்ஜுனீயம் என்ற வடமொழி காவியம் புகழ்பெற்றிருந்தது. கிராதன் என்ற சொல்லுக்கு வேடன் என்று பொருள். அர்சுணனை சோதிக்க சிவன் வேடனாக (கிராதனாக) வேடம் போட்டு வருகிறார். அர்சுணனின் தவத்தை கலைத்த ஒரு பன்றியை அர்சுணன் அம்புவிட்டு கொல்ல, கிராதானாக வந்த சிவனோடு வேடம் தரித்த பார்வதி, தன் கணவன் கொன்ற பன்றியின் பிணத்தைதான் அர்சுணனின் அம்பு துளைத்தது என்று பரிகசிக்க, கிராதனுக்கும் அர்சுணனுக்கும் சொற்போர் மூண்டு விற்போராகவும் மற்போராகவும் மாறுவதே கிராதார்ஜுனீயம்.
அர்சுணன் தவம்
நான்கு கிராதர்
இப்பொழுது இச்சிற்பத்திலுள்ள வேடர்களை காண்க. நால்வரும் கையில் வில்லேந்தி யதார்த்தமாக காட்டில் நடந்து வருகின்றனர். வேட்டையாடி எந்த விலங்கையும் கொன்றதாக தெரியவில்லை. ஒருவர் ஒரு பலாபழத்தை சுமந்து வருகிறார்.

இவர்களும் உழைப்பாளிகள் தான். வெயிலின் தாக்கமோ முயர்ச்சியின் அழுத்தமோ வேட்டையின் களைப்போ வேர்வையோ உழைப்பின் வெற்றியோ ஏதுமில்லை. ஒற்றுமை வேற்றுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவர்கள் கந்தர்வர்கள் உணரும் விஸ்மயம் என்ற ஆச்சரியமோ, விலங்குகளின் உச்சி வெயில் அயர்வோ, யானைகளின் குதூகலமோ இவ்வேடர்களின் பாவதில் துளியுமில்லை.

அர்சுணன் தவத்திற்கு அருகே கோவர்தன மண்டபம் உள்ளது. இதில் கண்ணன் கோவர்தன மலையை ஒரு கையால் தூக்க, யாதவ குலமும் ஆநிரைகளும் மிக யதார்த்தமாக மலை நிழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் காட்சியை காணலாம். இதில் மாடு கறப்பவரும் கட்டுதரி சுமப்பவளும் உழைப்பாளர் தானே? ஆனால் சிற்பியன் நோக்கம் உழைப்பை காட்டுவதல்ல; கண்ணன் லீலையை காட்டுவதுதான்.


மாடு கறப்பவரும் கட்டுதரி சுமப்பவளும்
இந்த சிற்பத்தினையும் திருக்குறுங்குடி கோவர்தன சிற்பத்தையும் ஒப்பிட்டு பேராசிரியர் பாலுசாமியின் உரையை தவறாமல் காணவும்.

ஐந்து ரதத்தில் பெரிதான தர்மராஜ ரதம் என்றழைக்கப்படும் சிவன் கோவிலில், இரண்டாம் தளத்தில் சில உழைப்பாளர் சிலைகள் உள்ளன. வீணை ஏந்தி ஒரு ஓதுவார், கையில் மணியேந்தி ஒரு பரிசாரகர் (தொண்டர்), ஒரு ஸ்வயம்பாகி (சமையல்காரர்), கையில் நீள கூடையுடன் ஒரு அர்ச்சகர் (பூசாரி), குடத்தில் அபிஷேக நீர் ஏந்திவரும் ஒரு பணிப்பெண் இவர்களின் சிற்பங்களுள்ளன. முதல் நால்வர் கிழக்கு சுவற்றிலும், பணிப்பெண் மேற்கு சுவற்றிலும் உள்ளனர். பிற்காலத்து கோயில்களில் இதை போன்று பணியார்கள் சிற்பங்களை ஏதும் நான் கண்டதில்லை.



ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் வருடாந்திர ஆழ்கலை உலா வடகர்நாடகத்து சாளுக்கிய தலைநகரம் வாதாபிக்கு சென்ற போது சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலையை பற்றி ஓவியர் சந்துரு (இவரும் ராய் சௌதுரி போல் கவின் கலை கல்லூரியின் முன்னாள் முதல்வர்) பேசும்போது அர்சுணன் தவத்து வேடர்களும் தர்மராஜ ரதத்து தொண்டரும் கண்முன் தோன்றினர். மீண்டும் இந்த வாரம் அவர் கலைரசனை வகுப்பெடுக்கும் போது உழைப்பாளர் சிலை ராய் சௌதுரி என்று பேச்செழுந்தது. 

கலை உலா - ஐஹோளேவில் ஓவியர் சந்துரு - சிற்ப வர்ணனை
சோழரும் பாண்டியரும் சேரரும் மற்ற மன்னவரும் கோயில் சிற்பங்களில் காண்பதரிது. சில நாயக்க மன்னர்களையும் ராணிகளையும் மதுரை மீனாட்சி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் காணலாம். கம்பன் இளங்கோ ஔவை வள்ளுவராதி புலவருக்கெல்லாம் சிற்பமோ ஓவியமோ எங்குமில்லை. காளிதாசன் பாணர் தண்டி பாரவி என்ற வடமொழிப்புலவருக்கும், மற்ற கலைஞருக்கும் சிற்ப ஓவியங்கள் ஹிந்து மத மரபில் மிக அரிதானவை. அழிந்துவிட்ட கோயில்களிலோ அரண்மணைகளிலோ ஓலைச்சுவடிகளிலோ ஒருவேளை இருந்திருக்கலாம்.

மாமல்லபுரத்து வேடரும் யாதவரும் தொண்டரும் சிற்பத்தில் நாம் அரிதே காணும் பாமரர்; உழைப்பாளர்.

மாமல்லபுரம் காணொளிகள்
  1. அர்சுணன் தபசு – பேராசிரியர் பாலுசாமி உரை
  2. புலி குகையும் கிருஷ்ணமண்டபமும் – பேராசிரியர் பாலுசாமி உரை
  3. மாமல்லபுரம் – பேராசிரியர் சுவாமிநாதனின் பவர்பாய்ண்ட் இலக்கியம்
  4. இரண்டாயிரம் ஆண்டுகளாக மாமல்லபுரம் - காணொளி

மாமல்லபுரம் கட்டுரைகள்
  1. கல்கியும் கோயிலும் – சிவகாமியின் சபதம்
  2. பத்ரி சேஷாத்ரி-அதிரணசண்ட மண்டபத்து மூன்றாம் கல்வெட்டு
  3. காஞ்சிகைலாசநாதர் கோயில் வாழ்த்து
  4. மல்லை சிற்பியர் வாழ்த்து

கலை சார்ந்த கட்டுரைகள்
  1. ஞானதேவதைகள் – அமெரிக்க தேசிய நூலகத்தின் ஓவியங்கள்
  2. மாந்தாதா - அமராவதி சிற்பம்
  3. கோவில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்
  4. கல்லிலே ஆடவல்லான்
  5. கொடுங்கை குறும்பு - ஸ்ரீவைகண்டம் சிற்பங்கள்
  6. சாதா விந்தையின் ஆறா ரசிகன்
  7. பண்டைக்காலபாண்டுரங்கன் கல்வெட்டு
  8. Bharavi's Kiratarjuniyam - A Timeline of Sanskrit literature
  9. The Art and Aesthetic of Driving