Showing posts with label painting. Show all posts
Showing posts with label painting. Show all posts

Wednesday, 1 May 2024

Tiruppudaimarudur Paintings by Prof Baluswamy

 

TiruppudaiMarudur Paintings by Prof Baluswamy

On May 1, 2016 I attended the launch of a Tamil book titled “Chitrakoodam – Tiruppudai Marudur paintings.” The book was authored by Prof Baluswamy of Madras Chrisitian College, Tambaram, whose earlier books “Arjunan Tapasu” and “Krishna Mandapam” also about famous monuments in Mamallapuram are outstanding works of research. Speakers included botany professor Dayanandan of MCC, artists Trotsky Marudu, Smt of Hindu Religious and Charitable Endowments department, photographer Narasimhan and conservator and documentary film-maker MV Baskar. These are notes from their talks which I posted on Facebook, on that day, which I have now copied and edited for this blog. Prof Baluswamy himself delivered a vote of thanks, which I don’t seem to have taken notes for. The event was the Goethe Insitute auditorium, Rutland Gate, Nungambakkam, Madras.

I first heard of these paintings at the Tiruppudaimarudur temple from Prof Baluswamy himself at the 2012 Tamil Heritage Trust Pechu Kacheri on Paintings of India, which was held in the Tatvaaloka auditoirum, Eldams Road, Teynampet in Chennai. These paintings and the unusual military history they recorded were part of his talk which was about Nayak era paintings of the Tanjavur and Madurai Nayaks. It was recorded along with other talks at the Pechu Kacheri but none of these have been yet edited and made available to the public.

The book was only released last year and was available at the Chennai Book Fair in Nandanam. An earlier book on these paintings by Dr Kannan director of Chennai Egmore museum, was presented to me as a gift around this time, for my talk and guided tour about the Amaravati gallery of the Egmore museum, by the then Director, Dr Kavita Ramu. Dr Kannan who reshaped the Amaravati gallery also undertook a restoration/renovation effort of these murals and has recorded them in his book.

The notes from the talks at the 2016 book launch follow:

Prof Dayanandan, MCC

Lawrence Surendra played a major role in developing this book, "Chitrakoodam - Tiruppudaimarudur Oviyangal", by using MCC as a powerful resource to research and collate.

Baluswamy is our treasure. That others share him invokes jealousy and pride. We had a great asan at MCC in 60s Gift Siromoney, who pulled all of us into several fields. we thought he had reached a peak with Arjuna's penance, but he has breached new barriers with this book on Tiruppudaimarudur paintings. He has a wide variety of knowledge in depth.

Nagaswamy threw a bomb that Rajasimha built everything in Mallai. Gift Siromoney measured all sculptures with scales. We discovered that no male was depicted before 720. Baluswamy went beyond all this. He brought whole new theories to scholarship on Mallai. Using biology, sculpture sense etc. He discovered that the painting in Tiruppudaimarudur depicted the Tamraparni battle between Vijayanagar and Travancore. After the advent of Portuguese. I discussed Columbian exchange with Baluswamy, after which pineapple potato chili etc entered India.

Sangam Era marudu tree would have been lagerstomia. Sthala trees are not more than 200 or 300 years old, opined a botany professor in Madras University.

Baluswamy makes the distinction between mythology and history when teaching. No humans in India before sixty thousand years. So please forget Lemuria etc. When Africans settled the world. The common mother of all living humans lived in Africa 180000 years ago. Based on mitochondrial evidence.

Who ordered the paintings at Tiruppudaimarudur? Did the painters paint what they were ordered to? The book will discuss all these.

Panelists and audience - photo by VK Srinivasan


Trotsky Marudu, artist

I grew up with the Nayak paintings around poRRamarai tank in Madurai Meenakshi temple. All now eradicated. This tragedy bothered for a longtime. Western realism combined with Indian artistic tradition only in the Nayak period. My predecessors like Adimoolam worked at Weavers Institute. Government photographers captured paintings of Alagar Koil, Avudaiyar Koil etc and they used those designs in weaving textiles.

Even Adimoolam has not seen the Tiruppudaimarudur paintings. MV Baskar, Sarangan, myself and Baluswamy had the opportunity to see them after 2000. In 1990s I could not go past the first level and it was too dark to see these paintings. After the Danielles, Europe saw India in pictures. Parsi theater gave another visual perspective to Europeans. Later Ravi Varma printed his own paintings, made with costumes used by Parsi theater, most of which became popular across households in India. Marathi cinema 's look influences films of South India films now, having few Tamil identity. Dadasaheb Phalke Ravi Varma's Contemporary, and the artists who worked in Bombay film studios determined the look of Telugu and Tamil cinema. Film arts, calendar art and magazine art became the defining art of Tamil country (disconnected from the temple art of the Nayak era).

For several decades maps and images have been eradicated from Tamil books as cost cutting measure.

European books for children had paintings from Egyptian temples and pyramids and much less text. Fourteenth century venetian art decorated such books about Egypt and even Hollywood actors. Indian books do such a lousy job. Hyder Ali for example depicts him practically as a beggar though there are wonderful pictures of him. Sadly Tamil culture is mostly verbal. We pay poor attention to visual art.

Thadagam published a very visual book and they are doing this with Baluswamy's book on Tiruppudaimarudur. This is a treasure for the world at large not just Tamils.

Smt Kavitha of HR&CE

Of the thirty eight thousand temples under HR&CE about fifty temples have paintings like Tiruppudaimarudur. We have permitted several people to photograph paintings for scholarly study. Our department is blind to a lot of technology, and have inadequate in situ scholarly talent. We are now restoring temple paintings. INTACH restored kuRRalam Chitra Sabha, then another group complained that INTACH had ruined them by using very bright colors.

There are wooden panels at every level in Tiruppudaimarudur gopuram. Insect infestation and bats were big problems. Water seepage is another problem. We used to use cement, then combination mortar, and now we use lime mortar. We don't touch up the paintings. In ASI chemists do the job. Our sthapathi said Silpa Sastra shows several sources of paint including sand and stone colors, not just vegetable dye.

There are PhDs who have published with no reference to the temple or HR&CE. Why can't you give copies to the temple and our department??

Please cooperate with us. Don't have an antagonistic approach. We find it very difficult to find talent for restoration. A text called "Aalaya nirmana bimba Lakshana" shows us how to restore temples. Materials die, just preserve the monument, not just the materials. Expertise is hard to come by. Maintaining thousands of temples have to be maintain 38,000 temples with income from 2000 temples. It's not our intention to destroy, we do it out of ignorance.

Or by good intentions to save a monument or protect public from collapsing roof etc (one such attempt at Srirangam thayar shrine caused the paintings to crumble).

I hope at least Prof Baluswamy will acknowledge HR&CE

Episodes from the live of Gnanasambandar
- a slide from a PPT


A painting of Portuguese horse trade

Photographer Narasimhan -  Documenting the paintings

Our long time dream is getting fulfilled. I must acknowledge one who has not been acknowledged by other speakers. Mrs Baluswamy approved all the great expenses involved. Two types of people visit Baluswamy, those who go to learn and those who go to plagiarize.

Amutharasan came forward to publish the book. This pre publication is a special effort.

The technology to document was brought to us by Sarangan and Baskar.

Tiruppudaimarudur is a rare temple to still have original Nayak Era paintings. Most temple paintings have suffered great change. We have documented Alagar Koil paintings. They are valuable historical evidence. Baluswamy's effort to understand the paintings has been phenomenal. Investigating the Tamraparni war took four years. Lots of discussions with Sanskrit scholars to understand historical narrations of the war. Retired Supreme Court Justice Ratnavel Pandyan has been wonderfully helpful in this research.

We held several conferences to convey the importance to students and public. We ran a workshop at Srirangam for temple executive officers to our preserve sculptures and paintings.

One of the quite but wonderful servants of the documentation of this book is Mr Uthraadam, a PhD student of Baluswamy. This books is a milestone in tamil history.

MV Baskar - Visual documentation

Thirteen years of Hard labor. Documentation is not mere photography but Archaeometry. Digital cameras of 8Megapixels entered India in 2003. Now we shoot with 80Mp cameras. We composed each photo of A4 size, so a wall painting will be photographed as sixty different shots. Lighting is uneven so the same red may show up in different shades in adjacent shots. We used gray cards to give us color context.

Most people shoot the most photogenic scenes. We shot everything even the missing pieces which had only damaged wall or even graffiti, so we can reconstruct the painting. All paintings tend to be narrative paintings in temples, not pattern paintings. Vasanta mandapam of Alagar Koil has lovely Ramayana depiction. Tirugokarnam has Ramayana as we exit the temple, a structural narrative.

We had two photographers just for paintings and two for all other aspects. Digital tempts them to shoot limitlessly. We threw away two days worth of photos because we could not put them together.

So we had to shoot after planning, by mapping the pictures first. Cameras have no file structure. We had to map and key in advance and then collate photos in that order.

This is scalable vector art, machine readable. I worked with a Kalamkari artist from Andhra. We need pigment analysis and such equipment is only in Aurangabad and Bombay. We picked up all the fallen paint flecks and put them in zip lock bags.

Every painting in every temple has been over painted. They can only be seen with infrared photography. An infrared camera is twenty thousand dollars. Now it is much cheaper. We can rig one. I've shot Ladakh Buddhist monastery paintings with infrared cameras and they are also multi layered over time.

Academically, art and design schools lack tangible programs to educate students. We need multiple accredited programs at respected colleges to do this. Paintings also are accompanied by inscriptions or text.

The paintings depict several musical instruments. We recorded sounds from such musical instruments to create a multi media presentation. History can be far more engaging than only Archaeology. Money shortage is no longer an issue.

I'm delighted Art Painting has finally come to Tamilnadu. This is quite popular in Bombay Delhi etc but so far unsuccessful here. Hotels ask for paintings but haven't paid and ran some people bankrupt. But that is changing

----End of Lecture notes---

Acknowledgement I downloaded some photos of Powerpoint presentations on screen at the lecture, taken by VK Srinivasan during the book release and posted in the comments of my Facebook and added them in this blog. I presume the original photos used in the Powerpoint are by photographer Narasimhan, who was one of the speakers.

Related Links

Prof Baluswamy on Arjuna’s Penance in Mamallapuram

Prof Dayanandan’s lecture on Evolution at Varahamihira Science Forum

MV Baskar on Preserving Ramayana Murals at Tamil Heritage Trust

Index of My essays on Art

Index of  Lecture Notes in this blog

Monday, 15 April 2019

ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்


இலக்கிய தொகை
தமிழ் இலக்கியத்தில் ஐம்பெருங் காப்பியம் புகழ்பெற்றவை. ஐங்குறுங்காப்பியமும் அறிவோம். வடமொழியில் மூன்று பிருஹத்காவியங்கள், அதாவது, பெருங்காப்பியங்கள், புகழ் பெற்றவை; இவை பாரவி இயற்றிய கிராதார்ஜுனீயம்; மாகன் இயற்றிய சிசுபாலவதம்; ஸ்ரீஹர்ஷன் எழுதிய நைடதம். காளிதாசன் இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவம் இரண்டையும் சேர்த்து, வடமொழியின் ஐம்பெருங் காப்பியமாகவும் கூறுவர். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், அதாவது பதினாறாம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்டன என்று சமீபத்தில் அறிந்தேன். மற்ற இந்திய மொழிகள் இதுபோல் வரிசையை நான் கேள்விப்பட்டதில்லை.

பஞ்சபூதங்களையும் நாம் அறிவோம். உபநிடதங்களிலும் புறநாநூற்று பாடலிலும் இப் பஞ்சபூதங்களை வணங்கியும் வர்ணித்ததும் வரலாறு. பஞ்சபூத தலங்கள் என்று பாடல் பெற்ற ஐந்து சிவன் கோயில்களும் தமிழரும் மற்ற தென்னிந்தியரும் அறிந்ததே. முருகனின் அறுபடை வீடுகளை சொல்லவும் வேண்டுமா?

இசைத்தொகை
கர்நாடக இசையில் திருவாரூர் தியாகையர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. முத்துசாமி தீட்சிதரின் கமலாம்பாள் நவாவர்ணமும் சிலர் அறிவர். விக்கிரமாதித்தியன் அரசவையில் நவரத்தினங்களாக ஒன்பது புலவர் இருந்ததும் கர்ணப்பரம்பரை. எந்த விக்கிரமாதித்தியன் என்பது கேள்விக்குறி. முகலாய மன்னன் அக்பரின் அரசவையிலும் கிருஷ்ணதேவராயர் அரசவையிலும் இதுபோல் நவரத்தினங்கள் இருந்ததும் தெரியும். நவரத்தினம் என்பதே செல்வந்தர் மகிழும் ஒன்பது ரத்தினங்கள் அல்லவா?

நான்மறை, அறுசுவை, ஏழு ஸ்வரம், எட்டு திக்கு, என்றெல்லாம் பொக்கிஷங்களை எண்ணி கணித்து கொண்டாடுவது நம் வழக்கம். அகநானூறு, ஐங்குறுநூறு, இனியவை நாற்பது, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று இலக்கியத்தில் மிக தொன்மையான மரபை காண்கிறோம்.

கலைத்தொகை
ஐம்பெரும் ஓவியம் என்று நாம் கொண்டாடுகிறோமா? எனக்கு தெரிந்து அப்படி யாரும் ஒரு தொகுப்பை வழங்கவில்லை. ஓவியர்கள் கூட யாரும் இதை பற்றி பேசியோ எழுதியோ நான் கேட்டதில்லை. பண்டைக்கால ஓவியங்கள் பலவும் காலத்தின் கோலத்தால் அழிந்து ஒழிந்து விட்டன என்று  ஒரு வாதத்துக்கு ஒதுக்கிவிடுவோம். ஐம்பெரும் சிற்பம் என்றாவது நாம் புகழ்ந்து பாராட்டுகிறோமா? இல்லை. ஏன்?

மாமல்லபுரத்து ஐந்து ரதங்கள் மிகப்பிரபலம். பாரதத்தை தாண்டி உலக கலை ரசிகரின் மனதில் அவற்றுக்கு ஒரு சிறப்பிடம். அவை ரதங்கள் அல்ல, கோயில்கள். ஐந்து கோயில்கள் என்று யாரும் அழைத்ததில்லை. இருபதாம் நூற்றாண்டிற்கு முன் தமிழ் இலக்கியத்தில் அவை இடம் பெறவேயில்லை. தமிழ் சினிமா பாடல்களில் கோயில்களும் சிற்பங்களும் ஓடி விளையாடி நடனமாடும் நடிகருக்கு பின்புல களமே தவிற, திரைப்படங்களின் கதைக்கும் சிற்பக்கலைக்கும் தொடர்பிருக்காது. கல்கியின் சிவகாமியின் சபதம் உட்பட, மாமல்லபுரத்து ஐந்து ரதமும், அஜந்தா சித்தன்னவாசல் ஓவியங்களும் கதாநாயகருக்கு பின்புலமேயன்றி, கதையின் இணைந்த கலைகளல்ல. இவற்றை, இலக்கியமும் இசையும் திரைப்படத்துறையும் சிற்பக்கலைக்கு செய்த அவமரியாதை என்று கொள்வதா, அறியாமை என்று கொள்வதா, அவதூறு என்றே கொள்வதா?

என் அஜந்தா பயணம்
அஜந்தா ஓவியங்களை முதன்முதல் தை மாதம் 2006ல் நேரில் சென்று பார்த்தேன். இனம்புரியா கோவமும் சோகமும் என்னை ஆட்கொண்டன. ஒரு ஓவியத்திலுள்ள ஒரு பாத்திரமோ, அவர்களது கதையோ ஒன்றையும் அடையாளம் காணமுடியவில்லை. அவை யாவும் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களும், அதிசயங்களும், புத்தரின் முற்பிறவியான பற்பல போதிசத்துவர்களின் கதைகள் என்பதே முக்கிய காரணம். அதற்குமுன் நான் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகங்களிலும், அம்புலிமாமா பத்திரிகை கதைகளிலும் பார்த்து ரசித்த ஓவியங்களுக்கும் அஜந்தா ஓவிய பாணிக்கும் சம்பந்தமேயில்லை. மளிகை கடைகள் இலவசமாய் தரும் நாள்காட்டியிலோ, ராஜா ரவி வர்மனின் ஓவியத்திலோ, அங்கும் இங்கும் சில கோவில்களில் கண்ட ஓவியங்களிலோ காணும் கலை வடிவங்கள், உருவங்கள், அங்க இலக்கணங்கள், ஆடைகள், நிறங்கள்... இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடும் போது வேறு யுகத்து வேறு நாட்டு வேறு பண்பாட்டு கலையை பார்க்கிறோமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

அஜந்தா குகை 17
படம் - சித்தார்த் சந்திரசேகர்

அஜந்தா குகை 2 - சேதமான ஓவியம்
படம் - ர கோபு

அஜந்தா ஓவியத்தின் கலையோ, வரலாறோ, ஓவியர்களின் திறமும் நுணுக்கமும் புறிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ அடிப்படை ஞானம் கூட எனக்கு அன்று இல்லை. திகைக்கவும் திண்டாடவும் மட்டுமே ஞானம் திகழ்ந்தது. அங்கு வழிகாட்டிகள் மற்றவருக்கு சொல்லும் வர்ணனைகள் ஓரிரண்டு நிமிடம் காதில் பட்டாலும், தப்பாகவே தோன்றியது. ஏதோ ராஜா, ராணி, நாட்டிய பெண், பொறாமை, போட்டி, மரண தண்டனை, என்று அவர்கள் சினிமா தொலைகாட்சி கதைகளை அங்கே கோர்த்துவிடுவதாகவே எனக்கு தோன்றியது. அங்கும் இங்கும் சிதைந்து உடைந்து கிடந்த சில ஓவியங்களின் பரிதாப நிலையும், மிஞ்சியிருந்த சில ஓவியங்கள் மேலே சமகாலத்து கயவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தங்கள் பெயர்களை கிறுக்கியிருந்தது வெறுப்பூட்டியது. அவர்கள் மீதும் பாரத சமூகம் மீதும் நம் கல்வி மீதும், ஏன் ஆசிரியர் கல்கி மீதும் கூட கோபம் பொங்கி வழிந்தது. என் தம்பி ஜெயராமன் அருகில் வந்து, குகை பின்சுவரிலிருந்த புத்தர் சிலையை காட்டி, “அவரே இரண்டாயிரம் வருஷமா இதை எல்லாம் பார்த்து அமைதியா இருக்கார், உனக்கு ஏன் இவ்வளவு கோபம்,” என்றான். ஓரிரு நிமிடம் புத்தரை பார்த்தேன்; அவர் முகத்தில் தோன்றும் சாந்தம் ஒரு தொத்துவியாதி; அமைதியானேன்.

தன் கையிலிருந்த திராட்சை பையை திருடிய குரங்கின் மேலுள்ள கோபத்தையும், குகை குகையாய் ஏறி இறங்கிய கோபத்தையும் என் தங்கை தேவசேனா மீது அவள் மகள் சினேஹா செலுத்தினாள்; அவளுக்கு புத்தர் சாந்தம் அளிக்கவில்லை; தேவசேனா மணிமேகலையாக மாறவேண்டியிருந்தது.

சுமார் ஐந்து வருடத்திற்கு பின் ஐப்பசி மாதம் நவம்பர் 2010ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அஜந்தா எல்லோரா கலை உலாவின் பயிற்சி உரைகள் தொடங்கின. முப்பது ஆண்டுகளாக பற்பல அஜந்தா புத்தகங்களை படித்து, அவற்றின் கலையின் ஆழமும் நுணுக்கமும் வரலாறும் உணர்ந்த பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் வழிகாட்டி. வைகாசி மாதம் (ஜூன்) அவரிடம் அவர் எழுதிய அஜந்தா புத்தகத்தை வாங்கி படித்தேன். ஓரிரு மாதம் கழித்து திருப்பி கொடுக்கும் போது, நீதான் இந்த புத்தகத்தை படித்த முதல் ஆள் என்றார். சின்ன ஆனந்தமும் பெரிய ஆதங்கமும் அவர் குரலில் தொனித்தன. நான் திகைத்து நின்றேன். “உனக்கு முன்னாடி எங்க அண்ணா படிச்சார் ஆனால் அது பிழை நடை பார்த்து திருத்தும் பணி.” அவர் அண்ணா கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, வங்காள மொழியில் சாதனைகள் படைத்து பெரும் விருதுகள் பெற்ற எழுத்தாளர்.

அஜந்தாவை மட்டுமல்ல, இந்திய ஓவிய மரபை, அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ள சுவாமிநாதன் புத்தகம் ஈடற்றது. ஆனந்த குமாரசாமி, சிவராமமூர்த்தி, அரவிந்த கோஷ், ஸ்டெல்லா கிராம்ரிச் போன்ற கலைஆய்வு ஜாம்பவான்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்ல, மதன்ஜீத் சிங், பெனாய் பெஹல், லேடி ஹெர்ரிங்காம், வால்டர் ஸ்பிங்க், டெய்டர் ஷிங்லாஃப், புத்த ஜாதக கதைகள், இந்திய தொல்லியல் துறை, என்று நீண்ட வரிசையாக அஜந்தாவை மட்டும் விவரித்த நூல்களை படித்து ஆய்ந்து ஒரு நூலை படைத்துள்ளார் சுவாமிநாதன். கிட்டத்தட்ட உவேசா சங்க இலக்கியத்துக்கு எழுதிய விளக்கவுரை போல் அஜந்தா ஓவியங்களை ஒரு ஆர்வலன் புரிந்துகொள்ள உதவும் அரும்பத உரை.

அயல்நாட்டு ஓவியங்கள்
லியோனார்டோ டா வின்சியின் மோனா லிசா, கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்), மைக்கேல் ஏஞ்செலோவின் சிஸ்டைன் சேப்பல் விதான ஓவியம், பிகாஸோவின் லா குயர்ணிகா, ரெம்பிராண்டின் அல்லிமலர்கள், வேன் கோவின் சுயஓவியம் போன்ற ஐரோப்பிய ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இதைப்போல் இந்திய ஓவியங்கள் ஏதேனும் புகழ்பெற்றவையா? பண்டைய சீன பாரசீக எகிப்திய கிரேக்க ஓவியங்கள்? வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்.

வினா பட்டியல்
வாசகரே, இப்பொழுது சில கேள்விகள் கேட்கிறேன். எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரியும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

  1. அஜந்தாவில் சராசரியாக எத்தனை ஓவியங்கள் உள்ளன?
  2. அவை எந்த காலத்தவை?
  3. ஓரிரு ஓவியர்களின் பெயர் சொல்லமுடியுமா?
  4. ஐந்து அஜந்தா ஓவியங்களின் பெயர்கள் சொல்லமுடியுமா?
  5. அஜந்தவை போல் பாரத நாட்டில் வேறெங்கு அவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உள்ளன? மூன்று இடங்கள் சொன்னால் போதும், இவற்றை க,ச,ட என்று வைத்துக்கொள்வோம்
    1. க - ?
    2. ச - ?
    3. ட - ?
  6.   க, ச, ட இடங்களிலுள்ள ஒரு சில ஓவியங்களின் பெயர் என்ன (மோனா லிஸா, கடைசி விருந்து போல).
  7.  அவை எந்த காலத்தவை? நூற்றாண்டு தெரிந்தால் போதும்
  8.  வரைந்த ஓவியர்கள் யார்?
  9. அஜந்தாவை போலவோ, க,ச,ட தலங்களை போலவோ, அதே காட்சியையோ கருத்தையோ காட்டும் ஓவியங்கள், வேறு எங்காவது இந்தியாவிலோ, வெளி நாடுகளிலோ உள்ளனவா?(அருங்காட்சியகத்தில் இருப்பினும் பரவாயில்லை)
  10. ஓவியங்களை பற்றி ஏதேனும் புத்தகத்தை படித்துள்ளீர்களா?


இந்திய ஓவியக்கலை பற்றிய இந்த எளிய வினாத்தாளில் எத்தனை விடைகள் தெரிந்தன? 

பதில் தெரியாத சிலருக்கு, இந்த கேள்விகள் காழ்ப்பையோ சோர்வையோ தூண்டலாம். மன்னிக்கவும்; இந்த வினாக்காளில் ஒரு கேள்விக்கும் 2010க்கு முன் எனக்கு பதில் தெரியாது; அந்த ஆதங்கமும் அறியாமைமும் வருத்தமும் தான் இந்த கட்டுரையை எழுதத்தூண்டின. இந்த கேள்விகள் என்னை இரண்டு மூன்று வருடங்களாக என்னை வாட்டுகின்றன. 

யாம் பெற்ற கடுப்பு இவ்வையகமும் பெற…

இந்திய அறிவியல் மரபிலும் வரலாற்றிலும் இதே ஆதங்கமும் வருத்தமும் தோன்றி சில வருடங்களாகின. அது வேறு கதை.
சரி; அடுத்த துன்புறுத்தல். இதே பத்து கேள்விகளில் ஓவியம் என்ற சொல்லுக்கு பதில் சிற்பம் என்று போட்டுக்கொண்டு, அஜந்தாவுக்கு பதில் மாமல்லபுரம், எல்லோரா, கோனாரக், பாதாமி, என்று ஏதோ பிடித்த அல்லது தெரிந்த இடத்தை போட்டுக்கொண்டு, மீண்டும் விடை எழுதுங்கள். எத்தனை பதில்கள் கிடைத்தன?

அடுத்த கட்டுரையில் எனக்கு தெரிந்த பதில்களை அளிப்பேன். நான் ஐம்பெரும் ஓவியம் என்று கருதுபவை யாவை என ஓரிரு பட்டியலை தருவேன். உங்கள் விடைகளையோ மறுப்புகளையோ பிடித்த பட்டியலையோ கீழே எழுதவேண்டுகிறேன்.

கல்விக்கூடத்தில் கலைகளின் நிலைமை
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதேசி, இந்தியன் என்ற பெருமையும் ஆவலும் கொண்ட சமூகமாக இருந்தால் இந்த கேள்விகள் அனைத்திற்கும் நமக்கு விடை தெரிந்திருக்கும். மதச்சார்பின்மை என்பது இந்துமத கலைகளை பெரிதுபடுத்தாதது என்ற வைத்துக்கொள்வோம். அப்பொழுது இந்து மரபில் பெருமை, இந்துத்வா என்ற எண்ணமே இருந்தவர்களுக்காவது சமீபத்திலாவது இந்த கேள்விகளின் விடைகள் தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சுதேசி என்ற பெருமையோ ஹிந்து மரபு என்ற பெருமையோ இரண்டுமே இல்லைபோலும்.

அரசு நிர்ணயிக்கும் கல்வி திட்டங்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எண்ண ஓட்டத்திலேயே இந்த சிந்தனைகள் இல்லை. ஆர்வம் இல்லை. தாகம் இல்லை. அச்சு பத்திரிகைகளிலோ, தொலைகாட்சியிலோ, சினிமாவிலோ ஏதும் இல்லை. பாரம்பரிய ஓவிய சிற்ப கலையை ரசிக்கும் இந்தியர்கள் மிக மிக சிறிய சமூகமாகவே உள்ளனர். நாங்கள் தேசத்தின் மனசாட்சி என்று தங்களுக்கே பட்டம் வழங்கிக்கொண்ட எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மரபோடு உறவில்லா செயற்கை தீவுகளாக வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம்மை விட, இருநூறு ஆண்டுகளாய் இந்திய சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்து, பல நூல்கள் எழுதி, கற்று கற்பித்து களிக்கும் ஐரோப்பியர்களே அதிகம். கிழக்காசியாவில் ஒரு சிலர் தேரலாம். நம் கல்லூரிகளும் பள்ளிகளும் ஐரோப்பிய கலை ஆர்வலரை தான் வளர்க்கின்றனவோ?

காலனிய ஆதிக்க நாடுகளாகிய இங்கிலாந்து பிரான்சு நெதர்லேண்டு பெல்ஜியம் இவையோடு காலனி ஏதுமற்ற  இத்தாலி ஜெர்மனியில் உதித்த தொழில் புரட்சி, இந்தியாவிலும் தோன்றாத குறையை தீர்க்க, இந்திய அரசும் மக்களும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் காட்டி, நம் கல்வி திட்டத்தில் கலைகளை மிக பின்தள்ளிவிட்டோம். ஆரம்பப் பள்ளிகளிலேயே இந்த ஓரவஞ்சனை தொடங்கிவிடுகிறது. பொறியியல் மருத்துவம் சட்டம் நிர்வாகம் ஆகிய தொழில்களுக்குள்ள சமூக மரியாதையும் அந்தஸ்தும் மற்ற தொழில்களுக்கு பொதுவாக இல்லை. சமீபத்தில் சில மருத்துவர்களின் ஊழலினாலும், சில வக்கீல்களின் ரௌடித்தனத்தினாலும், சில பொறியாளர்களின் திறமையின்மையாலும் சம்பளச்சரிவினாலும் இது பிரம்மாண்டமாக மாறுகிறது. ஒருவேளை இதனால் நம் கல்வி அமைப்பும் மாறலாம். கலைக்கு பள்ளிக்கூடங்களில் கொஞ்சம் இடம் கிட்டலாம்.
ராமு அரக்கட்டாளை பேராசிரியர் பாலுசாமிக்கு வேதவல்லி விருது அளித்த நிகழ்விலும், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள அமராவதி சிற்பங்களை பற்றி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் நான் ஆற்றிய உரையிலும் இந்த கேள்விகளை கேட்டேன். தூண்டிய சலனம் அன்றே அடங்கிவிட்டது.

தொடரும்.


Tuesday, 31 May 2016

சிற்பத்தில் இந்திரன்


கோயில்களில் நாம் காணும் சிறபங்களிலும் ஓவியங்களிலும் புராணங்களில் சொல்லப்படும் சமபவங்களையே காணலாம். பிரம்மர், விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, முருகர், விநாயகர் மட்டுமே வெவ்வேறு தெய்வ வடிவங்களில் அதிகமாக காணமுடியும். இவற்களை தவிர சில இடங்களில் சூரியனுக்கு கோயில்கள் உள்ளதால் சூரியனின் சிலைகளை காணலாம்.

வெகு சில கோவில்களிலேயே இந்திராதி தேவர்களையோ, வசுக்களையோ காணலாம். மிகவும் அபூர்வம் என்றே கருதவேண்டும். இந்திரன் வருணன் அக்னி வாயு போன்ற தேவர்களுக்கு வேத காலத்தில் முக்கியத்துவம் இருந்ததாகவும் பின்னர் சைவ வைணவ நம்பிக்கைகள் ஓங்க, அவர்களின் முக்கியத்துவம் குறைந்ததால் வழிபாடும் குறைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர். வேள்வி செய்தே இந்த தேவர்கள் வழிப்பட்டதாகவும், புத்தரின் மறைவிற்கு பின்தான் கோவில்கள் கட்டும் வழக்கம் பாரதத்தில் தோன்றியதென்றும் ஒரு கருத்து உண்டு. சூரியனை தவிற முப்பத்துமூவரி எந்த தேவருக்கும் கோயில் இல்லாததும் இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது.

புதிதாக எதை கண்டாலும் லயிக்கும் எனக்கு, அஜந்தாவிலும் காஞ்சியிலும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. 2006இல் முதன்முதல் அஜந்தா சென்ற போது அது சம்பந்தமாக கல்கியின் “சிவகாமியின் சபத”த்தை எதையும் படித்திருக்கவில்லை. அங்கிருக்கும் எல்லா ஓவியங்களும் புரியா புதிராகவே விளங்கின. தொல்லியல் துறையின் சிறந்த மலிவான் அஜந்தா புத்தகம் வாங்கவேண்டுமென்றோ, மற்ற ஏதேனும் சிறந்த புத்தகங்கள் இருக்கும் என்றோ எனக்கு ஏனோ எண்ணமே உதிக்கவில்லை! இப்பொழுதும் நினைத்தால் வெட்கம் பொங்கும். பின்னர் 2010இல் பேராசிரியர் சுவாமிநாதன் எழுதிய நூலை படித்தபின்னரும் மதன்ஜீத் சிங், டீட்டர் ஷ்லிங்க்லாஃப், ஸ்டெல்லா கிராம்ரிச், போன்ற மேற்கத்திய கலை ஆர்வாளர்கள் எழுதிய நூல்களையும் படித்தபின்னும் அஜந்தாவின் ஓவியங்கள் பற்றி கொஞ்சம் ஞானோதயம் பிறந்தது. 2010இல் கலை உலா சென்ற போது அஜந்தா ஓவியங்களை ரசிக்கமுடிந்தது.
புத்த மத கதைகளிலும் இந்திரன் பிரம்மா லட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் உண்டு. புத்த ஜாதக கதைகளில் வரும் பாத்திரங்களின் பல பெயர்கள் புராணங்களிலும் மகாபாரதத்திலும் வருபவை.


சுவர்க்கலோகத்தில் வீற்றிருந்த புத்தரை பூமியில் பிறக்குமாறு தேவர்கள் வேண்டிக்கொள்ள, அவரும் அதற்கிணங்கினார். லும்பினியில் புத்தர் மாயாதேவிக்கு பிறந்த பொழுது அவரை காண இந்திரனும் பிரம்மாவும் இறங்கி வந்தனர். இச்சம்பவங்களை ஓவியமாக அஜந்தாவின் இரண்டாம் குகையில் காணலாம். கையில் குழந்தை சித்தார்த்தனை இந்திரன் ஏந்த, பேருவகையுடன் அருகே நின்று பிரம்மர் பார்க்கிறார். அவருக்கு சாமரம் வீசும் பணிப்பெண் முகத்தில் ஆச்சரியம் மிளிர்கிறது.

அஜந்தா- குழந்தை சித்தார்த்தனை ஏந்தும் இந்திரன் அருகே பிரம்மா, எதிரே மாயாதேவி
முதல் குகையிலும் பதினேழாம் குகையிலும் சிபி சக்கரவர்தியின் ஜாதக கதை ஓவியங்களை காணலாம். ஆனால் தராசில் தன் சதையை வைத்தபின் சிபிக்கு இந்திரனும் யமனும் காட்சியளிக்கும் மிகவும் சேதம் அமைந்துள்ளதால் தெளிவாக தெரிவதில்லை.

பதினேழாம் குகையின் வெளிச்சுவரில் இந்திரன் சுவர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வரும் காட்சியை காணலாம். இந்த ஓவியம் இன்றும் பிரகாசமாக இருக்கிறது. பின்புலத்தில் மேகங்கள் பஞ்சுபஞ்சாக அணிவகுக்க, இந்திரனின் இடது புறம் இரு தேவகன்னிகையர் ஜால்ராவில் தாளத்தை வாசித்து இறங்கி வர, மற்றும் ஒருத்தி நீண்ட புல்லாங்குழலூதுகிறாள். இந்திரனுக்கு வலது பக்கம் நீண்ட ஒரு கருவியையும், இந்திரனின் இடுப்புயரத்தில் வேறொருவன் ஒரு குடம் பொருத்திய கருவியையும் வாசித்தப்படி இந்திரம் பூலோகம் நோக்கி கீழே இறங்குகிறான்.

அஜந்தா : பறந்து இறங்கும் இந்திரன்
இந்திராதி தேவர்களும் முனிவரும் சூழ கைலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க, சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் சென்றடையும் ஓவியம் தஞ்சை பெரிய கோவிலிலுள்ளது. இதில் இந்திரனை மட்டும் தனியாக அடையாளம் காண்பது கடினம். டிசம்பர் 2014 தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரியில் முனைவர் நாகசாமி, இந்த ஓவியத்தை வர்ணித்து நடத்திய உரையில், ஓவியர் சந்துரு வரைந்த கோட்டோவியத்தை திரையிட்டார். சந்துருவின் கோட்டோவியத்தில் இந்த கைலாச காட்சியின் பிரம்மாண்டத்தை உணரலாம். இந்திரனை தனியாக அடையாளம் காண இயலாததை நீங்களும் உணரலாம். அடையாளம் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லவும்.

தஞ்சை பெரிய கோவில் - கைலாச காட்சி ஓவியம்

தஞ்சை கோவில் கைலாச காட்சி - சந்துருவின் கோட்டோவியம்
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ஜலந்தரன் பிறந்த சம்பவத்தின் சிற்பத்தை காணலாம். இந்திரன் சிவனை பார்க்க கைலாசம் செல்ல அவனை நுழையவிடாமல் சிவகணங்கள் தடுக்கின்றன; எள்ளி நகையாடி சேட்டைகள் செய்து, இந்திரனுக்கு கோபமூட்டுகின்றன. இந்த கணங்களில் ஒரு கணத்திற்கு மட்டும் நான்கு கைகள் உள்ளன. வாசலில் ஆரவாரம் கேட்டு சிவனே ஒரு கணமாக தோன்றி கணங்களோடு ஒருவராக இந்திரனை துன்புறுத்துகிறார். ஆத்திரம் அடைந்த இந்திரன், நான்கு கை கொண்ட பூதகணமா என்று கூட யோசிக்காமல் எல்லா கணங்களையும் தாக்க வஜ்ராயுதத்தை எடுக்க, என்ன மடைமை இந்திரா என்னும் பாவனையில் பிரம்மனும் அக்னியும் அவன் கைகளை பிடிக்கின்றனர். பின்னால் நின்று விஷ்ணு வேண்டாம் என்று தர்ஜன முத்திரையால் எச்சரிக்கை விடுக்கிறார். காமவில்லை எடுத்த மன்மதன் சாம்பலானது போதாதா சிவனை எதிர்த்து வஜ்ராயுதமெடுத்தால் நெற்றிகண் திறக்காதா என்று அவர்கள் சொல்லுமுன் நெற்றிக்கண் திறந்துவிடுகிறது. சட்டென்று ஒரு நீர் நிரைந்த குடத்தை எடுத்து அவர்கள் காட்ட நெற்றிக்கண்ணின் பொறி அக்குடத்தில் விழ, சிவனின் அம்சமாக ஜலந்தரன் பிறக்கிறான்.

இந்த சிற்பத்தை காமெராவில் எளிதில் படமெடுக்க முடியாது. முன்னிருக்கும் தூண்கள் மறைக்கும். நேரில் பார்த்தாலே முழு அழகும் சிற்ப அமைப்பு புரியும்; ரசிக்கலாம். இங்கே இரண்டு படங்களாக பார்க்கலாம்.

காஞ்சி கைலாசநாதர் கோவில் -
பிரம்மனும் அக்னியும் தடுக்கும் இந்திரன்

வில்லேந்தும் நாலு கை கணமாக சிவன்!
கீழே கைக்கூப்புவது - ஜலந்தரன்

எல்லோரா கைலாசநாதர் கோவிலில் – பதினாறாம் குகையில் – பிரம்மாண்ட வீற்றிருக்கும் சிவன் சிலை உள்ளது. சிவனை சூழ்ந்த தேவர்களில் ஒருவனாக ஒரு யானை மேல் வீற்றிருக்கும் இந்திரனை காணலாம். இந்திரனுக்கு அருகே எருமை மேல் யமனும், ஆடு மேல் அக்னியும் உள்ளனர்.

எல்லோரா கைலாசநாதர் கோவில்
சிவனுக்கு இடதுபக்கம் - இந்திரன் யமன் அக்னி

புனேவிலிருந்து மும்பை செல்லும் வழியிலுள்ள பாஜா குகை ஒன்றில் சூரியனையும் இந்திரனையும் காணலாம். குதிரை பூட்டிய தேரில் சூரியனும் ஐராவதம் என்ற யானை மேல் பவனிவரும் இந்திரனும். இவை இரண்டுமே அபூர்வ பௌத்த சிற்பங்கள். சாதவாகனர் காலத்தவை, கிபி முதல் நூற்றாண்டு.

பாஜா குடைவரை - சூரியனும் இந்திரனும்
வாதாபியிலுள்ள சாளுக்கியர் கால குடைவரை கோயில்களில், சில விதானங்களில் தெய்வ சிற்பத்தை சூழ்ந்து அஷ்ட திக்பாலர்களை காணலாம். கிழக்கு திசைக்கு திசை தெய்வம், யானை மேல் அமர்ந்துள்ள இந்திரன். வாதாபி மூன்றாம் குகையில் பெருமண்டபத்து விதானத்தில் பிரம்மனை மையமாகவும் சுற்றி அஷ்ட திக்பாலரும் அமைந்த சிற்பங்கள் காணலாம். இதேபோல் விஷ்ணுவை மையமாக வைத்து அஷ்ட திக்பாலரால் சூழ்ந்த நிலையையும் காணலாம். இதில் யானை மேல் அமர்ந்தகிழ்ககு காவலனாக இந்திரன் உள்ளான்.

வாதாபி மூன்றாம் குகை
பிரம்மனை சுற்றி திக்பாலர்

வாதாபி மூன்றாம் குகை
விஷ்ணுவை சுற்றி திக்பாலர்
படங்களுக்கு நன்றி
அஜந்தா - சித்தார்த் சந்திரசேகர்
எல்லோரா - அரவிந்த் வெங்கட்ராமன்
வாதாபி - விகே ஸ்ரீநிவாசன்
தஞ்சை - முனைவர் நாகசாமி, ஓவியர் சந்துரு

தொடர்புள்ள கட்டுரைகள்
2. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் 
5. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை 
6. குந்தவை ஜீனாலய ஓவியங்கள் 
7. Paranjothi Yathirai - Ajantha Ellora Site Seminar

Wednesday, 6 April 2016

ஞானதேவதைகள்

அமெரிக்கா ஒரு அறிவியல் நாடா ஆன்மீக நாடா? கிறுஸ்துவ நாடா மதச்சார்பற்ற நாடா? மரபு போற்றும் நாடா முற்போக்கு நாடா?

கல்லூரி காலத்து கலை ஆர்வம்

நான் 1991இல் படிக்க அமெரிக்கா செல்லும் வரை, அந்நாட்டை அறிவியல் துறையில் தலைத்தோங்கும் நாடென்றே நினைத்துவந்தேன். எடிசனின் நாடு, பெஞ்சமின் ரைட் சகோதரர்களின் நாடு, கம்ப்யூட்டர் உகம் படைத்த நாடு, நோபல் பரிசுகளை அள்ளி குவிக்கும் நாடு, மேற்படிப்புக்கு ஈடு இணையற்ற நாடு, அற்புதமான சினிமாக்களை தயாரிக்கும் நாடு, ராணுவ வல்லரசு, பொருளாதார வல்லரசு, வசதிகளும் பேச்சுரிமையும் பல வித சுதந்திரங்களும் கோலோச்சும் நாடு என்றெல்லாம் நம்பினேன். இவை முக்கால்வாசி அங்கே உண்மையாகவே இருந்தன. 

கலை ஓவியம் சிற்பம் பாரம்பரியம் பற்றி பெரிதாக அப்போது எனக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் அவற்றை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்பொழுது கணினித்துறை படிப்பில்தான் ஆர்வம். சினிமாவில் பலவிதத்தில் பார்த்திருந்தாலும், நேரில் கண்ட செல்வ கொழிப்பு பிரமிக்கவைத்தது. பெரிதாக கவர்ந்தது தொலைகாட்சி பெட்டியே. 1991இல் தூர்தர்ஷண் மட்டுமே பாரத்தில் தொலைகாட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்கும் போது அங்கே விடுதியில் இலங்கை ரூபவாஹிணியில் தமிழ் மற்றும் அமெரிக்க ஆங்கில தொடர்களை பார்க்க நேர்ந்தாலும், அமெரிக்காவில் கண்ட ஐம்பது தொலைகாட்சி சேனல்களும் மற்ற கலைகளை பற்றிய எண்ணத்தையே உருவாக்கவில்லை.

டாவின்சியும் மைக்கலேஞ்சலோவும் ஏதோ வரலாற்று நபர்கள். அவர்களது ஓவியங்கள் பெரிதும் அழகாக எனக்கு இன்றுவரை தோன்றுவதில்லை. நார்மன் மெய்லர், ஜாக்சன் பால்லாக் போன்றவர்கள் பிரபலமானாலும், அதிலும் ஈடுபாடே இல்லை. இயற்கை எழிலுக்கு அவை போட்டியே இல்லை என்பது அன்றைய மனப்பான்மை. 1999இல் டாவின்சியின் நூல்களை சியாட்டில் அருங்காட்சியகத்தில் வைத்தபோது பார்க்க ஆசையிருந்தாலும் கூட்டத்தை கண்டு மிரண்டு போகவில்லை. அந்நகரத்து ஃப்ரை அருங்காட்சியகத்தில் வேன் கோ, ராஃபாயல், ககேன், மோனே, ரெம்ப்ராண்ட் வேறு சிலரின் ஓவியங்களை கண்டேன்; நுண்கலை உணர்வே எனக்கு இல்லை; ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை; அவற்றில் ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. 

உண்மையில் குமுதம் விகடன் கல்கி கதைகளுக்காக வரையப்பட்ட படங்களும், சூப்பர்மேன் பேட்மேன் டிண்டின் ஆஸ்டெரிக்ஸ் கேல்வின் & ஹாப்ஸ் போன்ற காமிக்ஸ் எனப்படும் தூரிகை படங்கள் தந்த மகிழ்ச்சியை அந்து உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் தரவில்லை. நவீன கலை நகைச்சுவை பொருளாகவே தெரிந்தது.

அமெரிக்க தேசிய நூலகம்

சென்ற 2015இல் அமெரிக்காவுக்கு சுற்றுலாவாக சென்றேன். அறிவியல் யாத்திரை என்றே மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கங்கே கலைகளையும் பார்த்து ரசிக்க நேரந்தது. குறிப்பாக  நான்கு நாட்கள் வாஷிங்டன் நகரின் அருங்காட்சியகங்களிலும், அந்நாட்டு பாராளுமன்றத்தின் நூலகத்திலும் சிற்பங்களும் ஓவியங்களும் பல கதைகள் சொல்லின. 

காங்கிரஸ் என்ற பெயர்கொண்ட அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு தனி நூலகம் தேவை என்று கருதி, மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்ஸன் (நற்றமழில் தாமசு செப்பர்சன்) நினைத்து அதை அமைத்தார். பின்னர் அது மிக முக்கிய நூலகமாக மாறியது. தெய்வ நம்பிக்கையுள்ள மதசார்பற்ற அரசை உருவாக்கவேண்டும் என்பது அமெரிக்க குடியரசின் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை சமைத்தவர்க்கும் தோன்றிய ஒரு முக்கிய கருத்து. அவர்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாகவே இருந்தனர்; ஆனால் கிறுத்துவத்தின் பல்வேறு பிறிவுகளை சித்தாந்தங்களை சேர்ந்தவராயிருந்தனர். அரசும் சமூகமும் அமைக்க ஜூலியஸ் சீஸருக்கு முந்தைய ரோமாபுரி குடியரசும் ஏதென்ஸ் சைரக்கியூஸ் போன்ற கிரேக்க நகரங்களும் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.

முதலில் அமைத்த நூலகத்தை 1812இல் நடந்த போரில் பிரித்தானிய படை எரித்துவிட்டது. அந்தப்போரிலும் அமெரிக்காவே வென்றது. எரிந்த நூலகத்தை மீட்டமைக்க தாமசு செப்பர்சன் தன் சொந்த நூல்களை தானம் செய்தார். அதை வைத்து பல ஆண்டுகள் நடத்தினர். பெரும் நூலகம் ஒன்றைகட்ட நிதி ஒதுக்கி பின்னர் 1897 அதை கட்டி முடித்தனர். அதுவே நாம் இன்று காணும் நூலகம்.


காங்கிரஸ் நூலகம் முகப்பில் ஜெயராமன்

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. அறிவியலில் ஃப்ரான்சிஸ் பேக்கன், கெலீலியோ, ரெனே தேகார்த், ஐசக் நியூட்டன், ஜான் ஹூக், ராபர்ட் பாயில், வோல்டேர் ஆகியோர் வளர்த்த தத்துவங்கள் ஒரு ஊக்கத்தை தந்தது. அக்காலத்து மாபெரும் அறிவியல் மேதாவி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முக்கிய சுதந்திர போராளி. இந்திய விடுதலை போராளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரை போல், அவர் ஒரு வழிகாட்டி. ஜனநாயகம் செழிக்க அதன் பிரதிநிதிகளுக்கு கல்வியும் தகவலும் முக்கியம் என்பதால் இதை பிரதிபலிக்கும் விதத்தில் காங்கிரசின் நூலகத்தை அமைத்துள்ளனர்.

மகாமண்டபத்தில் ஓவியங்கள்

ஓவியப் பாவைகள்

அழகும் பிரம்மாண்டமும் செல்வமும் மிளிரும் வகையில் நூலகத்தின் கட்டட கலையும் அலங்காரமும் அமைந்துள்ளன. கண்ணாடி ஜன்னல்களின் அமைப்பும் கூறை ஜன்னல்களின் அமைப்பும், தூண்களின் கம்பீரமும், பார்ப்பவரின் கண்ணை பறிக்கும்.

இதில் கிறுஸ்துவ சின்னங்கள் ஏதும் மையமாக இல்லை. தேசிய சின்னங்கள் என்றுகூட எதையும் சொல்லமுடியாது. சுதந்திர போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களோ, தலைவர்களின் ஓவியங்களோ, நாட்டின் இயற்கை எழிலோ ஏதும் இல்லை.

மாறாக, நூலக மகாமண்டபத்தின் சுவர்களில் ஞானதேவதைகளின் ஓவியங்களை தீட்டியுள்ளனர். பல்வேறு செல்வங்களை நாம் அஷ்டலக்ஷ்மியாக ஐதீக மரபில் கொள்வது போல் தொன்மையான கிரேக்க மக்களும் ரோமாபுரியினரும் பல தெய்வங்களையும் தேவதைகளையும் வழிப்பட்டனர். அந்த தெய்வங்களை தழுவாமல், ஆனால் அந்த மரபை தழுவி, கணிதம் விண்ணியல் புவியியல் தாவரவியல் விலங்கியல் ரசாயனம் என்று தலா ஒரு பெண் வடிவம் அமைத்து சுவற்றின் மேல் ஓவியங்கள் தீட்டிப்பட்டுள்ளன. கலைகளுக்கும் பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்திய மரபில் பருவங்கள் ஆறு; ஐரோப்பாவில் நான்கு – வசந்தம், கோடை, இலையுதிர், பனிக்காலம். இவை நான்கும் சிற்பமாகவும் ஓவியமாகவும் உள்ளன.
உடற்பயிற்சியும் விளையாட்டும் கிரேக்க காலத்திலிருந்து முக்கியமாக கருதப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் நினைவாகவும் இரண்டு ஓவியங்கள் உள்ளன.

பழமொழிகளும் பொன்மொழிகளும் மரபின் அடையாளங்கள். ஷோக்ஸ்பியர் ஜெஃபெர்சன் போன்றவரின் பொன்மொழிகளை கல்வெட்டாய் செதுக்கி, அவற்றிற்கும் ஓவியப்பாவை வடிவம் அமைத்துள்ளனர்.

பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் ஓவியங்கள். பளிச்சிடும் பளிங்கு தூண்களும், வெளிச்சத்தை பரப்பும் கண்ணாடி ஜன்னல்களும், சுவரிலும் கூறையிலும் போதிகைகளிலும் வண்ண

ஒளிமயமான அஜந்தா என்றே சொல்லலாம்.


தொல்லியல் தேவதை விண்ணியல் தேவதை
ரசாயன தேவதை புவியியல் தேவதை
கணித தேவதை இயற்பியல் தேவதை
இருபுறமும் அறிவியல் தேவதை ஓவியங்கள்


ஞான தேவதைகள்

அறியாமை ஒரு சாபம், வானுலகம் எய்த ஞானமே சிறகு

ஒத்துழைப்பு வீரம்
முயற்சி தேசபக்தி

வழிகாட்டும் சான்றோர்

இவற்றையெல்லாம் விளக்க, ஆர்வமும் வரலாறும் பேச்சுத்தெளிவும் அயரா பண்பும் கொண்ட பல வழிகாட்டிகள் சுற்றுலா வந்தோரை, பத்து நிமிடத்து ஒரு சுற்றுலா குழு வீதம், வழிநடத்தினர். பல்வேறு நகரங்களில் கண்ட பெரும் சிறப்பு இது. அமெரிக்காவின் வழிகாட்டிகளை நம்மை வியக்கவைக்கின்றினர். பாரதத்தில் பெரும்பாலும் இப்படி இல்லையே என்ற ஏக்கத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள். தம் நாட்டு வரலாற்றிலும் சாதனைகளிலும் பெருமை கொண்டவர்களாயினும், அவர்களின் நடுநிலைமை புகழதக்கது. என்னாட்டவர்க்கும் எக்கலைஞர்க்கும் சான்றாக திகழ்கிறார்கள்.

நூலகத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் உள்ளன. தாளில் முதல் அச்சிடப்பட்ட விவிலிய நூல் ஒன்றுள்ளது. செவ்விந்தியரின் மரபையும், முதலில் அமெரிக்கா வந்திறங்கிய இசுபானிய தேசத்தோரின் பண்டங்களும், மற்றும் பல பிறிவுகளும் உள்ளன. அதை வேறுமுறை அலசலாம்.

கலைவாணி மினெர்வா

வெளிமண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் அற்புதமான ஒரு படிக்கும் அறை உள்ளது. இதற்கு போகும் வழியில் சுவர் உயர மினெர்வாவின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. 

மினெர்வா கலைகளின் தேவதை, சரஸ்வதிக்கும் சமம்.

கலைவாணி மினெர்வா
படிக்கும் அறையின் இரண்டாம் மாடிக்கு சென்று சுற்றுலா பார்க்க மட்டும் ஒரு பலகணி அமைத்துள்ளனர். சுற்றுலா வருவோருக்கு வட்டமான படிக்கும் அறைக்கு தரை தளத்தில் செல்ல அனுமதி இல்லை; அது ஆய்வாளர்களுக்கு மட்டுமே. அந்த வட்ட அரையின் விமானம் மசூதிகளை போல் வானியல் மையங்களைபோல் அரைகோளம். அங்கே பல சிற்பங்களும், கூரையில் ஒரு அசாத்திய ஓவியமும் உள்ளன. பின்னர் ஒரு நாள் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

ஒளிமயமான மகாமண்டபம்

சுட்டிகள்