Sunday 28 July 2013

சொல்லணி கொன்றை

மரணம் :: இயற்கையின் விளங்கா புதிர்
பிறவி :  கேட்காமல் கிடைக்கும் வரம்
மோகம் : நெஞ்சுக்கு கண்ணின் மடல்
காதல் :  உள்ளத்தை பிணைக்கும் கலை
ஊடல் :  ஆசைக்கு நாணத்தின் தடை
காமம் :  உடலுக்கு உறவின் கொடை

கேள்வி : சிந்தைக்கு வழிகாட்டும் ஒளி
ஐயம் :   அறிவுக்கு அழியாத் துணை
அன்பு :   உள்ளத்தில் பெய்யும் மழை
கருணை : கொடியோரை மாற்றும் முறை
கல்வி :  வல்லோர்க்கு ஏணிப் படி
பண்பு :  நல்லோரின் வாழ்கை நெறி

கவிதை : கருத்துக்கு சொல்லில் உடை

பிப்ரவரி 3, 2008

No comments:

Post a Comment