Showing posts with label திருப்பருத்திக்குன்றம். Show all posts
Showing posts with label திருப்பருத்திக்குன்றம். Show all posts

Sunday, 8 December 2013

வாழைத்தண்டு தோசை ராகி அடை

வாழைத்தண்டு தோசை மாவு

 இந்திராம்மா செய்த கம்பு அடை பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். போன மாதம் காலையில் “என்ன டிஃபன்” என்று கேட்டுகொண்டே மாடியிலிருந்து கீழே வந்த போது “வாழைத்தண்டு தோசை” என்ற பதிலிடி கிடைத்தது. தோனோடும் சாம்பாரோடும் தோசையும் கிடைத்தது.






தேனும் சாம்பாரும் - வாழைத்தண்டு தோசைக்கு

படம் எடுத்தேன் ஆனால் வலைப்பதிவில் போடவில்லை. சில நாட்களுக்கு பின் மாதம் ஒரு முறை ரசிக்கும் ராகி அடையும் கிடைத்தது. படம் இங்கே. பெருகு தோசை என்று தயிரிலும் அவர் தோசை செய்வார் – செய்யும் நாள் படம் காட்டுகிறேன்.

இந்திராம்மாவை காஞ்சிக்கு அழைத்துச் சென்று சன்னதியை தவிற மற்றவையும் கோயிலில் உண்டு என்று காட்டியது வேறொரு அனுபவம். திருப்பருத்திக்குன்றம் சமணர் கோயிலில் ”புத்தரா?” என்று  அவர் [அவுங்க?] திகைத்ததும், அங்கு சாதாரணமாக அவசரப்படும் பெண்மணி சாந்தமாக எங்களை அனுசரித்ததும், வேறொரு நாளுக்கு கதை.
ராகி அடை மாவு

தட்டில் ராகி அடை, இந்திரா அம்மா