Showing posts with label சைலகேது. Show all posts
Showing posts with label சைலகேது. Show all posts

Friday, 1 May 2015

சைலகேது


விண்ணுக்கும் அப்பால் வெறும் 
கண்ணுக்கும் அப்பால் பலரின் 
எண்ணுக்கும் அப்பால் உள்ளசில
மண்ணுலக சிதறல்கள்

உரைந்த பனி-மண்-கல் கலவையிவை
விரைந்தனவே! வானைப் பிளந்தனவே!
கரைந்தனவே! விந்தை! உருகவில்லை!
எரிந்ததுகொல் பனி-மண்-கல் நெருப்பாக! 

குறிப்பு

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெர்ஸியஸ் ராசியில் தோன்றிய மீட்டியார் மழையை பற்றி மேலுள்ள் இரு கவிதைகளை எழுதினேன்.

தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் நாம் அழைக்கிறோம். தூம (வடமொழிச்சொல்) என்றால் புகை. கேது, நமக்கு ராகுவோடு மட்டும் கேட்டுப்பழகியச் சொல். கேதுவை சாயாகிரகம் (நிழல் கிரகம்) என்மனார் ஜோதிடர். புகைப்போல் ஒரு விண்ணுலக விருந்தாளி வந்தால் அதை தூமகேது என்பர்.

கிரகணங்களால் பாம்பசுரராகவோ ராகுகேது நம் வழக்காடலில் இருப்பினும், மீட்டியார் ஆஸ்டிராயிட் போன்றவை நம் வழக்காடலில் இல்லை.

வடமொழியில், சில – கல்; சைல – மலை (தமிழில் சைலம்). மீட்டியாருக்கு சைலகேது என்று வடமொழியில் இப்பதிவோடு பெயர்சூட்டுகிறேன். ஏற்போர் தமிழிலும் அதேச்சொல்லை ஏற்கவும்.

Note

Two poems about the Perseid meteor shower, which I wrote in August 2013.

Related Links

1. VarahaMihira's Eclipse proof
2. VarahaMihira's poem on Agastya (in Tamil)