விண்ணுக்கும்
அப்பால் வெறும்
கண்ணுக்கும்
அப்பால் பலரின்
எண்ணுக்கும்
அப்பால் உள்ளசில
மண்ணுலக
சிதறல்கள்
உரைந்த
பனி-மண்-கல் கலவையிவை
விரைந்தனவே!
வானைப் பிளந்தனவே!
கரைந்தனவே!
விந்தை! உருகவில்லை!
எரிந்ததுகொல்
பனி-மண்-கல் நெருப்பாக!
குறிப்பு
2013
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெர்ஸியஸ் ராசியில் தோன்றிய மீட்டியார் மழையை பற்றி மேலுள்ள்
இரு கவிதைகளை எழுதினேன்.
தூமகேதுவை
வால்நட்சத்திரம் என்றும் நாம் அழைக்கிறோம். தூம (வடமொழிச்சொல்) என்றால் புகை. கேது,
நமக்கு ராகுவோடு மட்டும் கேட்டுப்பழகியச் சொல். கேதுவை சாயாகிரகம் (நிழல் கிரகம்) என்மனார்
ஜோதிடர். புகைப்போல் ஒரு விண்ணுலக விருந்தாளி வந்தால் அதை தூமகேது என்பர்.
கிரகணங்களால்
பாம்பசுரராகவோ ராகுகேது நம் வழக்காடலில் இருப்பினும், மீட்டியார் ஆஸ்டிராயிட் போன்றவை
நம் வழக்காடலில் இல்லை.
வடமொழியில்,
சில – கல்; சைல – மலை (தமிழில் சைலம்). மீட்டியாருக்கு சைலகேது என்று வடமொழியில் இப்பதிவோடு
பெயர்சூட்டுகிறேன். ஏற்போர் தமிழிலும் அதேச்சொல்லை ஏற்கவும்.
Note
Two poems about the Perseid meteor
shower, which I wrote in August 2013.
2. VarahaMihira's poem on Agastya (in Tamil)
Related Links
1. VarahaMihira's Eclipse proof2. VarahaMihira's poem on Agastya (in Tamil)