Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Tuesday, 24 May 2016

Marriage - some statistics


Last year, on 22 April 2015, I attended a lecture titled "Marriage : The golden cage" by Prof K Srinivasan, 
National Fellow ( ICSSR) MIDS & Emeritus Professor, International Institute for Population Sciences, Deonar, Mumbai. The lecture was at MIDS, Adyar. This lecture was a comparative study of the statistics of marriages (1) among various states in India (2) India and a few selected countries. Statistics on marriages versus live-in relationships were also discussed. The major variables were age groups, number of children, changes over time.

I usually don’t write about social studies, at least not in the structured academic way they are discussed, but this was quite fascinating because, it was a quantitative study – actual numbers were on hand – rather than just a random discussion based on opinions. The title gives away the academically popular socially leftist prejudice against marriage, typically out of touch with the more conservative society at large, which nevertheless makes the same joke about marriage in public discussions. My perception is that social conservatives simply avoid such studies, preferring to mouth inane bromides rather than collecting statistics.

The actual paper published in Economic and Political Weekly but also available at this blog, can be studied here and has extensive statistics. The MIDS audience – only about thirty people, half of whom were MIDS students or researchers - seemed barely interested in what was being presented. They were looking for opportunities to rebel against popularity of marriage and criticise the inequalities of caste. I would perhaps have had the same mindset twenty years ago; I have changed.

The Biggest Gap
I found the statistics eye-opening. The biggest gap I could see from the statistics was between Asian and European countries – not between developed and developing economies or even between caste groups or religious groups or geographical regions in India. I suspect this is why these statistics are not discussed more often in pubic fora. The groups studying these data are abysmally dismayed by social conservatism and traditionalism in Asia.

While the age of marriage has risen across all countries, the prime drivers seem to be individual prosperity and formal women’s education.

For example, the percentage of unmarried women in the age group 15-19 has risen from 29% in 1961 to 88% in 2011. The effects of the Sarda act and the war against not just child marriage are quite visible. In fact, this has morphed into the war against teen marriage, in the last forty years, as regardless of party, all  Governments and most of society have meekly accepted that all teenagers are “children”, and that lawyers, social activists and parents have far superior judgment and jurisdiction over teenagers’ social lives than their own natural biological or social urges. This is the triumph of the Constitutional machinery over Biology, as insidious in my opinion as the forced sterilizations during the Emergency in India.

More and more Indian women get married in their twenties, and a small but growing percentage in their thirties. Indian men get married five years later than women, across age groups.

There is a steady secular rise in age of marriage in age groups 15-19 20-24 25-29 but secular decline in 30-35.

Marriage is later in Kerala for women but most do get married, in spite of higher literacy and better health conditions.

Mean age at marriage
Year Kerala TN
1961 16 16
1991 19 18
2011 22 24

The speaker listed the following as Causes for drop in marriage rates in western societies. Some of these are now coming true in urban India.
  1. Rise in individualism 
  2. Economic independence of women
  3. Skill specialization
  4. Rising gender equality 
I suspect migration and breakdown of communities are also major factors. Most jobs are not available locally, young adults prefer the adventure and social freedom of living in different cities and countries, especially out of the control and supervision of the parents and relatives. I also suspect that tremendous influence of cinemas, showcasing romantic storylines, music of the same nature, and extremely limited opportunities for socializing with the opposite gender are significant factors. But I don't know if sociologists study these. School and college offers some shot at romance, but most people prefer spouses of different age groups, and this is not possible in colleges. It sometimes happens in the workplace, but the choices are severely limited. The explosion of social dating websites and apps in western society, show that they have similar difficulties finding suitable partners, with none of the fallback options of caste and family (both of which are apparently seen as weaknesses rather than strengths by most sociologists).

Divorce Rates

Unmarried women past age 30 are 19% in Korea 26% in USA, 35% in Japan, but in France and UK  they are in high 40s, nearly 50s in percentage. These are partly because of late marriages but mostly because of high divorce rates in Western countries.

Single women at age 30-34
Year France Japan India UK USA
1961 10 10 NA NA NA
2011 48 35 4 48 36

(Note: Several of these statistics can be found in the paper published in Economic & Political Weekly and also found in this blog. But some statistics were presented at the  MIDS lecture, and I quickly jotted them down – they are not in the EPW paper as tables.)

Out of Wedlock Births
The real conservatism of Asia is shown by these statistics. Live in relationships and out of wedlock births are negligible in Asia. They are less than 1% in Japan and India. These are 9% in UK 40% in USA.

Population is below replacement rate in Korea Japan (incidentally also true of Germany Russia and Italy, as I have seen from other articles).

The primary driving force is easy cheap contraceptives.

Caste and Marriage

Contrary to popular opinion, we are quite united by caste, not necessarily divided by it, based on these statistics below.
Study by Das and Roy findings below (survey not census)
Caste very strong among Muslims and Christians even among SC/ST. (Shouldn’t Indian society be cheering this secularism?)

Same caste marriages are:
97% in TamilNadu
Low 80s in Kerala Gujarat Maharashtra Haryana
High 90s in UP, MP, Rajasthan Karnataka Chattisgarh 

Women marrying outside caste 10% India 2% Tamilnadu
Women marrying outside economic group 21% India 14% Tamilnadu
Women marrying lower caste men 12% in Kerala 1% in Tamilnadu 

Women marrying outside caste in Tamilnadu is lowest in India, said the speaker, and said this was a surprise considering the long history of the anti-caste Dravidian movement in Tamilnadu.

Postscript

I stumbled upon an unusual article, from one of the people I follow on Twitter, statistically discussing time of marriage, IQ, corruption, civic sense etc in Europe. The basic marker is called a Hajnal line that divides Eastern from  Western Europe. Based on the age at which women marry. I include this because it is relevant and fascinating.

Sunday, 6 March 2016

தோண்டாமை

பிறவாமை நன்று, பிறந்தால் உன்னை மறவாமை நன்று என்று ஔவை சிவனிடம் வேண்டுவதாக திருவிளையாடல் சினிமா வசனம் நினைவிருக்கலாம்.

தீண்டாமை  ஒழிப்பது நன்று, ஊரெங்கும் தோண்டாமை நன்று.

பாதாள குழாய்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தில் பாதாள சாக்கடைகள் கட்டி அதனால் காலரா போன்ற வியாதிகளும் குறைந்ததால்  சென்னையிலும் பாதாள சாக்கடை அமைக்க அக்காலத்து மதறாஸ் ராஜதானி அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து பாரதத்தில் எங்கும்,  முதலில்  பெருநகரங்களிலும், பின்னர் மற்ற நகரங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தொடங்கின.

இன்று 2016ஆம் ஆண்டிலும் பல நகரங்களில் தெரு ஓரங்களில் திறந்த சாக்கடைகளை பல நகரங்களில் காணலாம். மழைநீர் வடியவும் இல்லங்களின் கழிவு பொருட்களையும் இவையே அகற்றுகின்றன. சென்னையில் மட்டும், குடிநீர் கொண்டுவரும் குழாய்களும்,  மழைநீர் வடியும் குழாய்களும், தனியாக சாக்கடை  குழாய்களும் சாலைகளின் கீழே தோண்டி நிறுவப்பட்டவை. எப்பொழுதாவது இவை உடைந்து குடிநீர் குழாய்களில் சாக்கடைநீர் வரும் அவலமும் புதிதல்ல.

செய்திகளையும் வரலாற்றையும் விட நாம் கதைகளில் ஆர்வமும் ஈடுபாடுமுள்ளவர் என்பதால், அசோகமித்திரனின் தண்ணீர் கதையில் இச்சம்பவங்கள் வரும் என்றும் வாசகரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆரம்ப காலத்தில் மின்சார கம்பிகளும், தொலைப்பேசி கம்பிகளும், தெருவோர கம்பங்களில் பூட்டப்பட்டன. பின்னர் இவையும் பாதாள குழாய்களில் புதைக்கப்படன. இணையதளத்துக்கான கண்ணாடிகம்பி குழாய்களும் அவ்வாறே. கேபிள் டிவி கம்பிகள் மட்டுமே மரங்களை தழுவிக்கொண்டு கோலோச்சுகின்றன.

புதிதாக சாலை போட்டால் சில நாட்களிலேயே அங்கே மின்சாரத்துறையோ தொலைப்பேசித் துறையோ குடிநீர் சாக்கடை துறையோ அங்கும் தோண்டி சாலையை பாழாக்கும் என்பது இந்திய ஜனநாயக மரபு. ஒப்பந்த நிறுவனங்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆதியோரின் கிம்பளத்தில் இது முக்கிய பங்கு என்பது மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள யதார்த்தம்.

எந்த சாதி?

சாக்கடைகளை கழுவ துப்புறவு தொழிலார் இறங்குவதும், அவ்வப்போது ஓரிருவர் விஷவாயுகளால் இறப்பதும் சோகமான யதார்த்தங்கள். . நாவல்கள் கிடக்கட்டும், அசோகமித்திரன் எழுதாத பல சினிமாக்களிலும் இச்சம்பவங்களுள்ளன.

சில சாதி மக்களே சாக்கடையில் இறங்கி பணிசெய்வார்கள் – அவர்களை பற்றிய புள்ளிவிவரம் நாளிதழ்களிலோ பத்திரிகைகளிலோ என்றும் அச்சிடப்படாது; ஆனால் அவர்களெல்லாம் பட்டியல் சாதியகள் என்பது அனைவரின் பொது நம்பிக்கை. சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் மேல் சாதிகளை குறிப்பாக பிராமணர்களை பழி சொல்ல ஒரு முக்கிய காரணமும் இதுவே.

ஒரு கேள்வி மட்டும் எழுவதில்லை. மேலைநாடுகளில் பாதாள சாக்கடையில் யாரும் இறங்குவதோ உடல்நனைத்து வியாதியால் தவிப்பதோ விஷவாயுவால் இறப்பதோ நாம் கேள்விப்படுவதேயில்லை. அதே போல் பாரதத்தில் தோண்டுவதே என் பிறப்புரிமை என்று பலரும் நம்புவது ஏன்? கூடவே நின்று குழிபறித்தால் அவன் துரோகி. கூலி வாங்கி குழிபறித்தால் அது அரசாங்கம்.

நம் நாளிதழ்களிலும் (உலகெங்கும் தான்) தொலைகாட்சி செய்தியிலும் வரும் செய்திகளை விட வராத செய்திகளே முக்கியமானவை என்று தோன்றுகிறது. ஓரளவுக்கு மேல் மனிதர்களால் உண்மையை தாங்கிக்கொள்ளமுடியாது என்று டி.எஸ்.எலியட் சொன்னார். நாள்தோரும் உணர்கிறேன்.

காணாத காட்சிகள்

நான் அமெரிக்காவில் 1991 முதல் 2000 வரை ஒன்பது வருடங்கள் வாழ்ந்தேன். அந்நாட்டிலுள்ள சாலைகளின் தூய்மையை நாம் சினிமாவில் பார்த்துள்ளோம். அது மக்களின் ஒழுக்கம் மட்டுமல்ல. அங்கு சாலை பணி நடந்தால் சரியாக நடப்பதும், தோண்டி புதைகுழிகளை வைக்காமல் விடுவதும் ஒரு காரணம். அகலமான சாலைகளையும் அகலமான நடைபாதைகளையும் காணும் போது நம்நாட்டில் இல்லையே என்று ஒரு ஏக்கம் வரும். தலை வெட்கி குனியும்.


சான் ஃபிரான்சிஸ்கோ - அகல சாலை

ஃபிலடெல்ஃபியா - சாலையில் பாதாள மூடிகள்
சான் ஃபிரான்சிஸ்கோ - அகலமான நடைபாதை

1991-2000 காலத்தில் பெரும்பாலும் கேமரா வைத்திருக்கவில்லை. இணையதளமோ வலைப்பூவோ முகநூலோ இல்லை. 2015இல் சுற்றுலா சென்றபொழுது கையில் செல்போன், கேமரா, நடக்கும் பாதைகளில் நடைபாதைகளிலும் சாலைகளிலும் புதைக்கப்பட்ட பாதாள சாக்கடைகளின் மூடிகளை படமெடுத்தேன். அந்நாட்டில் எங்கும் கையில் கடபாரையுடன் ஒருவரையும் காணமுடியாது. சாலைகளில் கொப்பளித்து நிற்கும் சாக்கடை மூடிகளோ, அவலமான நடைபாதைகளோ, ஒன்றும் இல்லை.

இத்தனைக்கும் தொலைபேசி மின்சாரம் இணையதள குழாய்கள் எல்லாம் குடிநீர் சாக்கடை குழாய்களை போல் பாதாள வழியே உள்ளன. பல ஊர்களில் இல்லங்களுக்கு சமையல் எரிவாயு கூட பாதாள குழாய்கள் வழியாகவே வரும். உதாரணத்திற்கு, இந்த படம் – சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒரு நடைபாதையில் தண்ணீர், மின்சாரம், எரிவாயு, தொலைகாட்சி குழாய்களின் நுழைவாயில் மூடிகளை காணலாம்.


சான் ஃபிரான்சிஸ்கோ - நடைபாதையில் பாதாள குழாய்களின் மூடிகள்
SFWD – San Francsico Water Department – சான் பிரான்சிஸ்கோ குடிநீர் வாரியம்

PG&E Pacific Gas & Electric – பசிஃபிக் கேஸ் & எலெக்ட்ரிக் (தனியார் கம்பெனி)

Street Lighting – நகராட்சியின் தெருவிளக்கு வாரியம்

நகராட்சிகளும் ஊராட்சிகளும் அமெரிக்காவிலெங்கும் சிறப்பாகவே இவற்றை செய்கின்றன. நீட்டி நிற்கும் குழாய்கள், மின்சார கம்பிகள், சாலைக்கு அம்மைவந்தது போல் கொப்பளித்து நிற்கும் சிமெண்ட் மூடிகள், திறந்து வைக்கப்பட்டுள்ள மூடிகள் இதை எங்குமே காணமுடியாது. நகரங்களில் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களிலும் இதை காணலாம். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் மழைநீர் வடிகால பாதாள குழாய் மூடியில் பலகலைகழகப்பெயர் உள்ளது. இது ஒரு தனியார் பல்கலைகழகம். டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலைகழகத்தில் புல்வெளியில் கூட பாதாள குழாய் மூடிகள் சீராக உள்ளன.



இதெல்லாம் பாரதத்தில் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை யாரும் எழுப்புவதில்லை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம் - பாதாள மழைநீர் குழாய் மூடி

டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைகழகம் - புல்வெளியில் பாதாள மூடிகள்
அட்லாண்டாவில் ஒரு படம். மழைநீர் வடிய சாலையோரம் எவ்வளவு லாவகமாக நடைபாதைகளில் வழிவகுக்கப்பட்டுள்ளன.  தனியார் நிறுவனங்களும் அரசு வாரியங்களும் ஒத்துழைத்து சீராகவே செய்துள்ளனர்.


அட்லாண்டா - மழைநீர் வடிகால் வழி
அமெரிக்கா பணக்கார நாடு, இந்தியா ஏழை நாடு என்ற வாதத்தை இவ்விஷயத்தில் நான் ஏற்க தயாராகயில்லை. இந்தியாவில் செல்போன்கள் (அறுபது கோடி செல்போன்கள்) கழிவறைகளை மிஞ்சிவிட்டன என்பவர், இந்திய செல்போன்கள் அமெரிக்க செல்போன்களை மிஞ்சிவிட்டன் என்று சொல்வதில்லை. அமெரிக்க ஜனத்தொகை சுமார் முப்பது கோடி. ஆளுக்கு இரண்டு செல்போன் வைத்திருந்தால்கூட, இந்திய செல்போன் எண்ணிக்கை அமெரிக்காவை மிஞ்சிவிட்டது. அறுபது கோடி மக்களுக்கு செல்போன் வசதி செய்து தர திறனுள்ள நாட்டிற்கா கம்பிகளை புதைக்கவும், குழாய்களை பழுதாகாமல் காக்கவும் திறமையில்லை? ஊழல் அமெரிக்காவிலும் பரவியே உள்ளது. இல்லினாய் மாநிலத்து நான்கு ஆளுநர்கள் ஊழல் செய்ததால் சிறையிலுள்ளனர். முட்டாள்கள் – சட்டம்போட்டு ஊழல் செய்வதே அமெரிக்காவில் சிறந்த ஊழல் வழி. பரவலாகவே நடக்கிறது. ஆனால் என்ன ஊழல் செய்தாலும் தோண்டாமை பலமாக உள்ளது. தீண்டாமை இல்லை.

இங்கு தீண்டாமையை எதிர்த்து கர்ஜிப்போர் எவரும் தோண்டாமையை கிசுகிசுப்பதில்லை.

நரேகா - மன்ரேகா

மன்மோகன் சிங் அரசு கிராமப்புர வறுமையை ஒழிக்கவும், ஏதோ வேலை அமைக்கவும் ஜான் மேனார்ட் கீன்ஸின் கொள்கையை பின்பற்றி, ஜான் ட்ரீஸ் அறிவுறையில் தேசிய கிராமிய வேலை உறுதி சட்டமும் திட்டமும் – National Rural Employment Guarantee Act (NaREGAநரேகா - வகுத்தது. பின்னர் இதற்கு மகாத்மா காந்தியின் பெயர்வைக்கப்பட்டு, (Mahatma Gandhi NREGA = MaNREGA) மன்ரேகா ஆனது. பஞ்ச காலத்தில் இவ்வகை திட்டங்கள் நியாயமானவை – பக்கிங்ஹாம் கால்வாய் கட்டியதும் அக்காலத்து பஞ்ச நிவாரண திட்டமே. இதை பற்றி நரசையா எழுதிவருகிறார். (பக்கிங்ஹாம் கால்வாய் ஒரு ஏமாற்று வேலை என்று ஜெயமோகன் கூறுகிறார். இதை நான் ஏற்கவில்லை.) 1929 இல் அமெரிக்காவில் நடந்த பொருளாதார சரிவை ஈடுகட்ட கீன்ஸ் சித்தாந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூசவெல்ட் இவ்வழியில் பல திட்டங்களை வகுத்தார். “வெறும் குழியை தோண்டி, மீண்டும் அதை மூட வேலை கொடுத்து, அதற்கு சம்பளம் கொடுத்தும், பஞ்ச நிவாரணம் செய்யலாம்,” என்பது கீன்ஸின் வாதம். 

ஆனால் மன்ரேகா பஞ்ச நிவாரண திட்டமல்ல. வேலையின்மை நிவாரணம்; வருமான குறைவு நிவாரணம்; விலைவாசி ஏற்ற நிவாரணம். கிராம மக்கள் நகரங்களுக்கு குடிபெயராமல் கிராமங்களிலேயே வாழ ஒரு திட்டம்.

2014இல் ஆட்சிக்கு வந்தபின் இத்திட்டத்தை நரேந்திர மோதி கிண்டல் செய்தார். “அறுபது ஆண்டு சுதந்திரத்திற்கு பின் குழி தோண்ட கூலி தருவதே உங்களால் முடிந்த சாதனை அல்லவா,” என்று காங்கிரஸை மக்களவையில் கடிந்தார். ஆனால் 2016 நிதி அறிக்கையில் இந்த மன்ரேகா திட்டத்திற்கு அதிக பணம் ஒதுக்கியுள்ளார். 

வரப்புயர என்றாள் ஔவை. குழி தோண்டுக என்கிறது ஜனநாயகம்.

இது மோதியின் திறமையின்மையாக இருக்கலாம். ஆனால் அதைவிட பெரிய ஒரு கசப்பான உண்மை என்று நான் நினைக்கிறேன். ஒரு சில கோடி மக்களுக்கு இதை போன்ற கடினமான கைக்கூலி தொழிலை தவிற வேறு எதுவும் செய்ய திறமையில்லையோ என்று அஞ்சுகிறேன். இல்லை மற்ற திறமைகளை வளர்க்க பொறுமையில்லையோ? அது போன்ற திறமைகளை கற்றுக்கொள்ள வாய்ப்புகளோ வசதிகளோ இல்லையோ? தொழில்நுடபத்தின் அதிவேக முன்னேற்றங்களால், அப்படி தொழிற்கல்வி பெற்றாலும், அது குறுகிய காலத்தில் காலாவதியாகி, வீண்செலவாக மட்டுமே இருக்குமா? தெரியவில்லை.

ஆனால் நகரங்களில் சாக்கடைகளில் குளிப்பதும் விஷவாயுவில் துப்புறவு தொழிலார் உயிரிழப்பதும் சாதியினால் மட்டுமல்ல. சாதி அரசியல் செய்வோருக்கு இது வசதியற்ற உண்மை. இதை பேசாதது அரசின், செய்தியாளரின், நிர்வாகத்தின், அறிவுஜீவிகளின், சமுதாயத்தின் அபார போலித்தனம்.

சுருக்கமாக, தோண்டாமை வந்தால் தீண்டாமையின் ஒரு அம்சம் போகும் என்பது என் வாதம். ஆனால் தீண்டாமை ஒழிந்தாலும் தோண்டாமை விடியாது என்பது என் சந்தேகம். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் தோண்டி நிரப்புவரின் பெருஞ்செல்வம், 2ஜி, 3ஜி ஊழலில் பேசப்பட்டதை விட பெரும் தொகை என்பது என் கணிப்பு. 

ஊழல் எழுப்பும் ஆத்திரத்தை யதார்த்தம் தூண்டுவதில்லை.


சில கட்டுரைகள்

9. ஜெயமோகன் உரை - காணொளி - 11 நிமிட அளவில் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி அவர் கருத்து 


Sunday, 16 June 2013

ஜாதியை மாற்றும் மூலதனம்

டெல்லி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா, வாரா வாரம் “Walk the Talk” என்ற தலைப்பில் நடந்துகொண்டே நேர்காணல் நடத்துகிறார். இது NDTV சேனலில் ஞாயிறு மாலை ஒளிபரப்பாகும். இதன் சொற்பதிவு நாளிதழின் இணையதளத்தில் வருகிறது.

தமிழில் இதன் மொழிபெயர்ப்பு வருகிறதா என்று தெரியவில்லை. சந்திரபான் பிரசாத் பல ஆண்டுகளாக, பா.ஜ.க எம்.பி சந்தன் மித்ரா நடத்தும் பயோனியர் பத்திரிகையில், கருத்து கட்டுரைகள் எழுதிவந்த “தலித்” சிந்தனையாளர். இடைக்காலத்தில் ஏனோ அதை நிறுத்திவிட்டவர், மீண்டும் எழுதுகிறார். இந்திய ஆங்கில பத்திரிகைகளில் எழுதிவந்த ஒரே “தலித்” எழுத்தாளர் என்று கேள்விபட்டேன். மிலிந்த் காம்ப்ளே ஒரு “தலித்” தொழிலதிபர்.

கீழ்வருவது என் மொழிபெயர்ப்பு – கோபு.


சேகர் குப்தா  நான்  (பம்பாய்) நாரிமன்முனையில் இருக்கிறேன். இது சீர்மல்கும் கார்பரேட் இந்தியாவின் மையம். “அரவணைக்கும் வளர்ச்சி” என்று முழங்கும் இக்கால கட்டத்தில், அதை செய்யும் இருவருடன் இன்று எம் நேர்காணல். ஒருவர், தலித் இந்திய வணிக தொழிலாலை குழுமத்தின் (DICCI) நிறுவனர், மிலிந்த் காம்ப்ளே. மற்றவர், அக்குழுமத்தின் தத்துவ ஆசான், சந்திரபான் பிரசாத். நாங்கள் தாழ்த்தப்பட்ட பலிக்கடாக்கள், எங்களுக்கு மானியம் சலுகை இட ஒதுக்கீடு தாருங்கள் என்று புலம்பாதவர்கள். நீங்கள் என்ன விதிவிலக்குகளா? கதையை மாற்றி எழுதுகிறீர்களா?
சந்திரபான் பிரசாத்  இது தலித் மரபு – அம்பேத்கரும் குரு ரவிதாஸும் தன் சுயமுயற்சியில் வளர்ந்தனர். சொந்த முயற்சியால் முன் வந்த பல்லாயிரம் தலித்கள் உண்டு. நாங்கள் விசித்திரமானவர்கள் அல்ல. கடந்த 50, 60 ஆண்டுகளில் அரசின் திட்டங்களும் இடஒதுக்கீடுகளும் தவறாக புறியப்பட்டன; “தாழ்த்தப்பட்டவர்”களால் தவறாக பயன்படுத்தபட்டன.
சேகர் குப்தா “தாழ்த்தப்பட்ட”வர்களுக்கு பயனளித்ததா இல்லையா?
சந்திரபான் பிரசாத் பயன் அளித்தது. ஆனால் இம்முறைகளின் பலத்தையும் பயனையும் கடந்து வந்துவிட்டோம். இன்று வேறு முறைகள் தேவை.
சேகர் குப்தா மிலிந்த்-ஜி நீங்கள் புதிய பாதை வகுக்கிறீர்கள். தலித் தொழில் முனைவர்களை இந்த DICCI குழுமத்தில் ஒருங்கிணைக்கிறீர்கள். அத்தனை தலித் தொழில் முனைவர்கள் இந்தியாவில் உள்ளனரா?
மிலிந்த் காம்ப்ளே  ஆமாம், உள்ளனர். MSME (Micro, Small and Medium Enterprise)  அமைச்சகத்தின் கணக்கெடுப்பில், 10% MSME நிறுவனங்கள் தலித் மக்களுக்கு சொந்தம் – சுமார் 1,64,000. என்களில் பெரும்பாலோர் இவ்வகை தான். ஒரு சிலரே பெரும் நிறுவன சொந்தக்காரர்கள்.
சேகர் குப்தா யார் மிகப்பெரியவர்கள்? சில உதாரணங்களை சொல்லுங்கள்.
மிலிந்த் காம்ப்ளே மிகப்பெரியது உத்தர பிரதேசத்து சீதாப்பூர் மாவட்ட ராஜேஷ் ஸரையாவின் நிறுவனம். யுக்ரைன் நாட்டில் இருக்கிறார். லண்டன், யுக்ரைன் மற்றும் ஆறு நாடுகளில் அவர் நிறுவனம் அரசு பதிவு பெற்றது. மும்பையிலும் கிளை இருக்கிறது. ரூ. 2000 கோடி பணம் புறட்டுகிறார்.
சேகர் குப்தா  அது சுமார் அரை பில்லியன் டாலர். அவரை பற்றி சொல்லுங்கள்.
சந்திரபான் பிரசாத் இன்ஜினியரிங் (பொறியியல்) படிக்க scholarship (கல்வி உதவிநிதி) கிடைத்து, அவர் ருஷ்யா சென்றார். சோவியத் யூனியன் உடைந்த போது, சிறு கைப்பிடி வேலைகள் செய்து கல்வியை தொடர்ந்தார். பின் லக்ஷ்மி மிட்டலின் ஸ்டீல் கம்பெனியில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்தார். வணிக முறைகளையும் நுணுக்கங்களையும் கற்று, டாடா கம்பெனியுடன் வியாபாரம் செய்து வந்தார். இன்று 400 கோடி டாலருக்கு அதிபர், நான்கு மெர்ஸிடிஸ் கார் வைத்துள்ளார். நாற்பது சில்லரை வயது தான் ஆகிறது. கல்பனா சரோஜ் என்று இன்னொருவர். 1975-இல் நாளுக்கு ரூ.5 சம்பாதிக்க தொடங்கி, இன்று காமினி ட்யூப்ஸ் என்ற கம்பெனியின் அதிபர்.
சேகர் குப்தா டாடா நானோ காரின் ஸைலன்ஸரை தயாரிப்பவர் ஒடு தலித்தாமே?
மிலிந்த் காம்ப்ளே ஸைலன்ஸர் மட்டும் இல்லை, மற்ற பாகங்களும் உண்டு. இந்தியாவில் பொதுவாக எங்கள் சமுதாயத்தை பற்றிய கருத்து இருக்கிறதே….
சேகர் குப்தா ….தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தபட்டவர்கள் என்று?
மிலிந்த் காம்ப்ளே தலித்கள் எல்லோரும் அரசின் ஜமாய் (மாப்பிள்ளைகள்) என்று. இது உண்மை அல்ல. ஒருவர் நானோவிற்கு ஸைலன்ஸர் தயாரிக்கிறார்,  காஸியாபாத் நகரில் சுஷீல் குமார் என்பவர் ஹீரோ கம்பெனிக்கு மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டு தயாரிக்கிறார். பூனேவில்  கோகுல் கெயிக்வாட் டாடா இண்டிகோ காருக்கு உறுபுகள் தயாரிக்கிறார்; ஸங்கிலியில் ஸதமதே தொழிற்சாலை உள்ளது, பஜாஜிற்கும், ஃபோர்ப்ஸ் மார்ஷலுக்கும் உறுபுகள் தயாரிக்கிறார்கள்.
சந்திரபான் பிரசாத்  பஜாஜ் பல்ஸாருக்கு மூன்று உறுபுகளை தலித் கம்பெனிகள் தயாரிக்கின்றன. பஜாஜ், டாடா, ஹீரோ, ஹோண்டா கம்பெனிகளுக்கு செல்லும் உறுபுகள் தடை பட்டால்…
சேகர் குப்தா …அந்த கம்பெனிகளை இழுத்து மூட வேண்டும்…
சந்திரபான் பிரசாத் …இல்லை இல்லை. மாற்று உறுபுகள் தேவைப்படும் வண்டிகள் ஓடா.
மிலிந்த் காம்ப்ளே  மக்களின் மனப்பான்மையை மாற்ற விரும்புகிறோம்.
சேகர் குப்தா தாழ்த்தப்பட்டோம் என்ற மனநிலையை அகற்ற நினைக்கிறீர்கள், அல்லவா?
மிலிந்த் காம்ப்ளே ஆமாம். பலர் தம் சூழல்களிருந்து வெளியேறி கம்பெனிகளை தொடங்கியிருக்கிறார்கள்.
சந்திரபான் பிரசாத் உத்தர பிரதேசத்தில் மட்டுமே, தலித் மருத்துவர்கள் 50 மருத்தவமனைகளை நடத்துகிறார்கள். அவர்களில் சிலர் சிறுவயதிலும் பள்ளி கல்லூரி வயதிலும் கூலி வேலை செய்தவர்.
சேகர் குப்தா இட ஒதுக்கீட்டினால் தான் தலித்கள் மருத்துவர் ஆக முடிந்தது.
சந்திரபான் பிரசாத் ஆமாம்
சேகர் குப்தா ஆகவே இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை நீங்கள் மறுக்க முடியாது.
சந்திரபான் பிரசாத்  உண்மை. இடஒதுக்கீடு முதல் அடி. ஆனால் அங்கேயே நிற்ககூடாது. களத்தில் இறங்கி ஓட வேண்டும், பறக்க வேண்டும்.
சேகர் குப்தா பொருளாதார சீர்திருத்தங்களும், உலகமயமாக்கலும் தலித்களுக்கு பயனளித்தனவா?
மிலிந்த் காம்ப்ளே நாங்கள் இரண்டையும் வரவேற்கிறோம். இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு அவை இன்றியமையாத படிகள். முன்பு கார் ஸ்கூட்டர் போன்ற வண்டிகளை செய்ய சில ஆலைகளே இருந்தன. ஏனெனில் அவற்றிற்கு மட்டுமே உரிமை (லைஸன்ஸ்) தர பட்டது. லைஸன்ஸ் சர்வாதிகாரம் ஒழிந்தபின் புது கம்பெனிகள் உறுவாகின. பழைய கம்பெனிகளுக்கு ஒரு சில கடைக்காரர்களோடு மற்றுமே உறவு இருந்தது. புது கம்பெனிகள் வந்தபின், புது கடைகள், புது தயாரிப்பாளர்கள் (suppliers), புது பண்டச்சங்கிலிகள் (supply chains) தேவைப்பட்டன. இதனால் புது கம்பெனிகள் தொடங்க வாய்ப்புகள் உண்டாகின.
சந்திரபான் பிரசாத் முன்பு ஓரிடத்தில் ஒரு பொருள் உறுவாக்கும் நிலை இருந்தது. பொருளாதார சீர்திருத்தங்களால், உலகமயமாக்கலால், இது இனி சாத்தியமில்லை. ஒரு பண்டத் தயாரிப்பை பல பகுதிகளாய் பிரித்து வெவ்வேறு கம்பெனிகளுக்கு outsource செய்ய வேண்டும். தலித் முனைவர்களுக்கு இதனால் பல வாய்ப்புகள் கிடைத்தன.
சேகர் குப்தா பொறியியல் ஆலைகளில் outsourcing வந்ததால்?
சந்திரபான் பிரசாத்  ஆமாம். உலகமயமாக்கலால் மனுதர்மத்தை வீழ்த்த ஆடம் ஸ்மித்தின் கொள்கை வந்தது. முதன்முதலாக (இந்திய வரலாற்றில்) ஜாதியை விட பணம் பெரிதானது.
சேகர் குப்தா  சந்தை (market) ஜாதியை விட, கார்ல் மார்க்ஸை விட பெரிதாகிவிட்டதா?
சந்திரபான் பிரசாத் ஜாதியை விட, கார்ல் மார்க்ஸை விட, எல்லோரையும் விட முதனமையாகிவிட்டன. ஏனெனில், சந்தையில் ஒருவனின் திறமைக்கு மட்டுமே மதிப்பு.
சேகர் குப்தா சந்திரபான்ஜி, பணம் மார்க்ஸையும் ஜாதியையும் வீழ்த்துவதாக சொல்கிறீர்கள். ஆனால் இளமையில் நீங்கல் துப்பாக்கி ஏந்தும் நக்ஸலைட்டாக இருந்தீர்.
சந்திரபான் பிரசாத் ஆமாம். அது என் முட்டாள்தனம்.
சேகர் குப்தா உங்கள் நக்ஸலைட் பருவத்தை பற்றி சொல்லுங்கள்.
சந்திரபான் பிரசாத் தில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் (ஜேஎன்யூ) படித்துக்கொண்டிருந்தேன். இந்தியாவை மாற்ற நினைத்தேன். அதற்கு துப்பாக்கியே சிறந்த வழி என்று யாரோ சொல்ல, அவ்வழி பற்றினேன்.
சேகர் குப்தா மார்க்ஸிட் கட்சியையே ஆபத்தான வலதுசாரிகள் என்று கருதும் இடம், ஜேஎன்யூ.
சந்திரபான் பிரசாத் ஆம். களப்பணி செய்யும் பொழுது, வன்முறையால் சமுதாயம் மாறாது என்று புறிந்துகொண்டேன். ஆயுதம் ஏந்தலும், மக்கட்படையும் ஆட்சியை புரட்ட தகாதவை. அந்த மாயை தெளிந்தபின், யாவரும் சில தவறு செய்கிறோம், நானும் தவறு செய்தேன்  என்று எனக்கு தோன்றிற்று.
சேகர் குப்தா நக்ஸலைட் வாழ்வை துறந்து மீண்டும் வந்து நேர் எதிர் திசையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டீர்கள்.
சந்திரபான் பிரசாத்  ஆம். முன்பு மற்றவர் சிந்தனைகளின் பாதையில் சென்றேன். பிறகு சுயமாக யோசித்தேன். இந்தியாவில் மாற்றங்களை கவனித்தேன். பகதூர்கரில் பாலிடெக்னிக்கில் படித்த ஒரு தலித் கிரேன் கம்பெனி நடத்துவதை கண்டேன்; மாறும் இந்திய தெரிந்தது. கூர்ஜாவில் ஒரு தலித் இனிப்பு கடை வைத்தார். அவர் தலித் என்று தெறிந்தும் மக்கள் அவர் கடையில் இனிப்புகள் வாங்கினர்; மாறும் இந்திய தெரிந்தது. பல ஊர்களில் இன்று தலித் உணவகங்கள் உள்ளன;  அனைவரும் அங்கு சாப்பிடுகிறார்கள்; மாறும் இந்திய தெரிந்தது. மாற்றங்களில் நானும் கலந்துகொள்ள முடிவெடுத்தேன்.
சேகர் குப்தா மிலிந்த்ஜி, நீங்கள் பூனேவிற்கு வந்து கம்பெனி தொடங்கியிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் ஜாதியை நினைவூட்டினரா? இல்லை கண்டுகொள்ளவில்லையா?
மிலிந்த் காம்ப்ளே மகாராஷ்டிரத்தில் ஒருவரின் பெயர்  அவரது ஜாதியை காட்டிவிடும். காம்ப்ளே என்பது ஊரறிந்த தலித் பெயர். நான் செய்யும் கட்டடத் தொழிலில்…
சேகர் குப்தா  … ரூ. 80 கோடி புரட்டுது உங்கள் நிறுவனம்.
மிலிந்த் காம்ப்ளே …நான் நடத்தும் எல்லா நிறுவனங்களையும் சேர்த்தால் அந்தத் தொகை வரும். கட்டடத் தொழிலில் 80% தொழிலாளிகள்  SC ST. வேலைகளுக்கு கடினமான் உடல் உழைப்பு தேவை. அது எங்களால் தான் முடியும். அதனால் நான் ஜாதி அடிப்படையில் புறக்கணிப்பில்லை.
சேகர் குப்தா நீங்கள் இன்ஜினியரிங் படித்தது உதவியுள்ளது.
மிலிந்த் காம்ப்ளே  ஆமாம்.
சேகர் குப்தா  சந்தை சமத்துவம் உண்டாக்க மார்க்ஸை மிஞ்சுவதுபோல், சமத்துவத்தம் உண்டாக்க சந்தை மாயாவதியையும் மிஞ்சுகிறதா?
சந்திரபான் பிரசாத் நிச்சியமாக. இதுவரை ஒரு சிறந்த தலைவரால் தான் சமூக விடுதலை கிடைக்கும் என்று நினைத்தோம். இன்று பொருளாதார வழிமுறையால் சமூக விடுதலை காண்கிறோம். எந்த தலைவரையும் விட அதிகமாக, மூலதனமே இதற்கு காரணம். ஜாதியை எதிர்த்து மூலதனம் போரிடுகிறது. தலித் மக்கள் இதை புறிந்துகொண்டு மூலதன கொள்கையை ஒரு ஜாதி ஒழிப்பு சக்தி என தழுவவேண்டும். கிராமங்களில் தலித் மக்கள் முன்னேற முடியாது. பரம்பரை தொழில்களில் தலிதகள் சாதிக்க முடியாது. அதனால் தான் சில்லரை வணிகத்தில் அன்னிய மூலதனம் வரவேண்டும். தலித்தால் ஒரு படி கூட எடுத்து வைக்க முடியாத பாரம்பரிய அமைப்புகளை அது அழிக்க வேண்டும்.
சேகர் குப்தா மேல் ஜாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பணமும் வியாபார பலன்களும்…
சந்திரபான் பிரசாத் மனிதன் செய்ய தவறியதை மூலதனம் செய்கிறது. உங்கள் சமூக சீர்திருத்தங்களை விட வேகமாய் செயல்படும் மூலதனத்தை நாம் ஏற்க வேண்டும்.
சேகர் குப்தா மிலிந்த்ஜி, இன்று ஜூன் ஆறாம் நாள். இன்னாள் தலித் வளர்ச்சியில் ஒரு வரலாற்று திருப்புமுனை என்று நீங்கள் சொல்வது ஏன்?
மிலிந்த் காம்ப்ளே இன்று ரூ.500 கோடிக்கு, ஒரு venture capital நிதி தொடங்கியுள்ளோம். இதை SEBI தனி நிதியாக பதிவு செய்யும். இந்தியாவின் தலித் தொழில்முனைவோர்க்கு மட்டுமே பணிசெய்யும் முதன்முதல் சமூக வளர்ச்சி நிதி. நாட்டின் மூலதன சந்தையிலும், வணிகத்துறையிலும் லச்சினை பொறிக்கப்போகிறோம்.
சேகர் குப்தா  தலித்கள் வேலை தேடுபவராக இல்லாமல், வேலை தருபவர்ளாய் விளங்க வேண்டும் என்பது உங்கள் கொள்கை.
மிலிந்த் காம்ப்ளே அதே.
சந்திரபான் பிரசாத் பீமாராவ் அம்பேத்கரின் எல்லா சீடர்களும் அப்படி ஆக வேண்டும்.
சேகர் குப்தா நீங்கள் இருவரும் - உத்திரபிரத்து அஸம்கரிலிருந்து வரும் சந்திரபான்ஜி, மகாராஷ்டிரத்திலிருந்து வரும் மிலிந்த்ஜியும் - சந்தித்தது எப்படி?
சந்திரபான் பிரசாத் அவர் (காம்ப்ளே) DICCI அமைத்து தலித் முனைவர்களை ஒருங்கிணைப்பதை பார்த்தேன். தலித் சமுதாயத்தில் வணிக வளர்ச்சி கொள்கை பரப்ப நினைப்பவர் அவர். தலித் தொழில்முனைவர்கள் கட்டும் வரிகளை கணக்கிட்டு, தலித் நலதிட்டதிற்கு அரசு செலவிடும் பணத்தை விட, தலித்கள் அரசுக்கு கட்டும் வரிகளே அதிகம் என்று நிரூபிக்க நான் முயல்கிறேன். நான் கேட்டுகொண்டேன், அவர் சேர்த்துக்கொண்டார்.
சேகர் குப்தா என் மனதிலும் சில ருசு இல்லா கருத்துகள் நிலவுகின்றன. தலித் கட்டும் வரிப்பணம் தலித்துக்கே செலவழிக்க வேண்டும் என்று கேட்பீர்களோ என நினைத்தேன்.
சந்திரபான் பிரசாத் தலித் நலதிட்டதிற்கு அரசு செலவிடும் பணத்தை விட, தலித்கள் அரசுக்கு கட்டும் வரிகளே அதிகம். நான் வணிகன் அல்ல, எழுத்தாளன். எங்கள் ஆர்வம் எங்களை ஒன்றுசேர்த்தது. தலித் எடுத்து வாழ்பவர்கள் அல்ல, கொடுத்து வாழ்பவர் என நாடறிய வேண்டும்.
சேகர் குப்தா DICCI தொடங்கும் போது மக்கள் உங்களை ஏளனமாய் பார்த்ததுண்டா?
மிலிந்த் காம்ப்ளே ஆம். இவன் பைத்தியம் என் நினைத்தவர் உண்டு. அது என்ன SC ST வணிக குழுமம்? நம் சமூகத்தினர் வியாபாரம் செய்யக்கூடுமா? என்னை கேலி செய்தவர் உண்டு. 2003-2005 காலத்தில் DICCI உறுவாக்கினோம். 2010-இல் பூனேவில் முதல் வணிக கண்காட்சி நடத்தினோம்.   ஊடகங்களின் கவனம் எங்கள் பக்கம் திரும்பி, நாடு முழுதும் அறியப்பட்டோம். போன வருடம் பந்த்ரா-குர்லா கூடத்தில் ஒரு கண்காட்சி நடத்தினோம்.
சேகர் குப்தா பந்த்ரா-குர்லா கூடம் இந்தியாவின் புதிய வங்கி பகுதி.
மிலிந்த் காம்ப்ளே எங்கள் கண்காட்சியில் 150 தலித் கம்பெனி முதலாளிகள் கடைவிரித்தனர். ஆதி கோத்ரெஜ், ரடன் டாடா, சுஷீல்குமார் ஷிண்டே, ஷரத் பவார் ஆகியோர் கண்காட்சிக்கு வந்தனர். அதற்கு பின், என்னை பார்த்து கேலி செய்தவரும், தங்கள் ஜாதிப்பெயரை மூடிமறைத்து கம்பெனி நடத்திய தலிதகளும் மனம் மாறினர். DICCI கார்பரேட்களுடன் கூட்டணி அமைத்தது. 50 கார்பரேட்கள் கண்காட்சிக்கு வந்தன. DICCI புகழ் நாடு பரவ, இன்று 17 மாநிலங்களில் கிளைகளும், 3000 உறுப்பினர்களும் கொண்டுள்ளோம்.
சேகர் குப்தா சந்திரபான் ஜி, நீங்கள் ஒரு எழுத்தாளர், அறிஞர், பிரயாணி, ஆய்வாளர். ஆதிவாசிகளிடமும் தலிதகளிடமும் மாற்றம் உள்ளதா?
சந்திரபான் பிரசாத் பெரும் வகையில் மாற்றமுண்டு – நான் நினைக்காதது – மற்ற ஜாதிகளும் தலித்களும் அதே உணவுகளை உண்பதுதான்.முன்பு தலித் மக்கள் கம்பு வகைதான் உண்டனர். இதை தலித் உணவென்றும் மாட்டுத்தீனி என்றும் கருதினர். இன்று எல்லா ஜாதியரும் அரிசி கோதுமை உண்கிறார்கள். ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து வருகின்றனர். இவை விடுதலையின் ஆயுதங்கள். கிராமங்களில் இவை இன்று சகஜம். நல்ல உணவு, நல்ல உடை – நாட்டுபுறத்தில் ஏதோ பெரும் சம்பவம் நடக்கிறது. மும்பை, ஔரங்காபாத், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். ஓரிரு மாதத்தில், ஒரு  பெரிய இந்திய கம்பெனி ஒரு தலித் தொழில்முனைவரோடு கூட்டணி அமைத்து ஒரு பொருள் விற்கப் போகிறார். பழைய மனப்பான்மையை இது குலுக்கும். இந்தியா உலகமயமாகி, ஒரு புது வழிமுறை உண்டாகிறது.
சேகர் குப்தா  மார்க்ஸும் மாயாவதியும் செய்யாததை மூலதனம் சாதிக்கிறதா?
சந்திரபான் பிரசாத் ஆண்டான் அடிமை முறையை நசுக்கி ஜாதியை அழித்தே மூலதனம் தொடரமுடியும். விருப்பமோ இல்லையோ இது நடக்கிறது.
சேகர் குப்தா மாண்டெக் ஸிங் அஹ்லுவாலியா தான் DICCI – இன் குரு என்று நீங்கள் கூறுவது ஏன்? இது பலருக்கு அதிர்ச்சி தரும். வாஷிங்டன் ஒப்புதல் (Washington consensus) ஆசாமி என்று அவருக்கு ஒரு அடையாளம் உண்டு.
சந்திரபான் பிரசாத்  மாண்டெக் ஸிங் என்பவர் ஆடம் ஸ்மித்தின் நண்பர். ஆடம் ஸ்மித் மனுவின் எதிரி. இதனால் மாண்டெக் எங்கள் நண்பர்.
சேகர் குப்தா  எதிரியின் எதிரி உங்கள் நண்பர். வறுமை பற்றிய உரையாடலில் – வறுமையை நேராக ஒழிக்கவேண்டும், வறுமையே பிரச்சனை, வறுமை ஒழியாது, வறுமை குறையருவில்லை -போன்ற கருத்துகளில் உங்கள் நிலை என்ன?
சந்திரபான் பிரசாத்  வறுமை ஒழிப்பு ஒரு தொழில். அதில் வேலை பார்ப்பவர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். வறுமையை ஒழிக்க விமானத்தில பறப்பதும், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதும், வெளிநாட்டு வறுமை ஒழிப்பு நிதி நிறுவனங்களோடு உறவாடுவதும், அற்புதமான தொழில். வறுமையை ஒழிக்கிறேன் என்று நிரைய சம்பாதிக்கலாம்.
சேகர் குப்தா  இந்தியர் வறுமைமயமாக்கல் என்ற புது தத்துவத்தை உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படை கொள்கை – “வறுமை எந்து பிறப்புரிமை. உனக்கு அதை தருவதே என் லட்சியம்.” நீங்கள் படித்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம், இந்த கொள்கையின் தலைநகரம்.
சந்திரபான் பிரசாத்  “தன் கை மட்டுமே என்றும் உதவாது” என்பது அங்குள்ளோரின் தாரக மந்திரம்.
சேகர் குப்தா மிலிந்த்ஜி, ஜேஎன்யூ வறுமை வளர்ச்சியில் ஊரினாலும், நீங்கள் செல்வம் வளர்ப்பவர். உங்களின் தூண்டுகோல் என்ன?
மிலிந்த் காம்ப்ளே  என் முதல் தூண்டுகோல் அம்பேத்காரின் பொருளாதார் எண்ணங்கள். இரண்டாவது, அமெரிக்காவின் கருப்பின மக்களின் மூலதனம். நண்பன் ஒருவனை, பராக் ஒபாமா எப்ப்டி அமெரிக்க ஜனாதிபதி ஆக முடிந்தது என்று கேட்டேன். வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதனா!! அமெரிக்காவில் பல வணிகத்துறை ஒபாமாக்கள் இருப்பதால், அரசியலில் ஒரு ஓபாமா வந்தார் என்று என் நண்பர் பதிலளித்தார். அமெரிக்காவில் கருப்பின முனைவர்கள் உருவானதுபோல் இந்தியாவில் பல தலித் முனைவர்கள் உருவானால் மட்டுமே, இந்திய பொருளாதார வளர்ச்சித் தொடரும்.
சேகர் குப்தா நன்றாக சொன்னீர்கள். மிலிந்த்ஜி, நன்றி, இந்த உரையாடல் உற்சாகம் அளிக்கிறது. சந்திரபான்ஜி நீங்கள் ஒரு அற்புத வழிகாட்டி. நல்ல வேளை, நீங்கள் போவது சரியான பாதை. நக்ஸலைட்டாக தொடர்ந்திருந்தார் அவர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினயாய் அமைந்திருக்கலாம்.

[மொழிபெயர்ப்பு குறிப்பு: Entrepreneur, supply chain, venture capital, போன்ற பல நவீன வணிக சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் தமிழில் நல்ல சொற்கள் இல்லை. இருந்தால் புழக்கத்தில் இல்லை.


நேற்று  (ஜுன் 15)  இந்த நேர்காணலை நான் மொழிபெயர்த்தேன். டைம்ஸ் ஆஃப் இந்தியவின் பொருளாதார நிபுணர் சுவாமிநாதன் ஐயர், இதைபற்றி இன்றைய (ஜுன் 16, 2013) இதழில் எழுதியுள்ளார்.]