Sunday 29 July 2018

தாலாட்டும் காவேரி

படம் - சண்முகப்ரியா 
கண்ணுக்கினிய காவிரி நீலச்சேலை பூண்டு நிலமளந்து பாய திருச்சி மலைக்கோட்டை மேலே வீற்றிருக்கும் கங்காதரனும் தாயுமானவரும் உச்சிப்பிள்ளையாரும் காணும் இந்த படம் இணைத்தில், சில நாட்களாக பரவி வருகிறது. நான் முதலில் பார்த்தது சண்முகப்ரியா வெங்கட் பகிர்ந்த படம். நேற்று முகநூலில் ஜடாயு ஏதோ ஒரு ஆற்றங்கரையில் பல பெண்கள் காவிரியை வணங்கும் காட்சியை பகிர்ந்தார். ரேவதி வெங்கட் உடனே ஒரு பாடலை பதிவிட்டார். உள்ளம் கொள்ளைக்கொண்ட இப்படம் இப்பாடலை எழுத தூண்டியது; நேற்று முகநூலில் பதிவிட்டேன்;  பல நண்பர்கள் பாடி பார்த்துவிட்டேன் என்று மகிழ்ந்து பின்பதிவிட்டார்கள்.
காவிரியை வணங்கும் பெண்கள் படம்- ஜடாயு
மலர்ந்து மணம்வீசும் சோலை பலகொண்ட பொன்னி நதி அன்னையே – தமிழ்
புலர்ந்து எழில்கொஞ்சும் சேலை வயல்பூண்டு சிலிர்த்த கலை அன்னமே

மலையில் விளையாடி கடலை மணம்சூட நடந்த இளந்தென்றலே - வளர்
குடகு மலை தோன்றி அரங்கன் நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

நாணல் செடி நாண நாடும் மடம் பழக பாயும் தாயல்லவா – நலம்
பேணும் பயிருயர அச்சம் தவிர்த்து வரும் புதுமை பெண்ணல்லவா

சங்க கவியாரம் சிலம்பு மணியாரம் தந்த புகழ் ஓங்குமே – உன
ங்க கரையிரண்டும் பொங்கும் கலையழகில் எங்கும் தமிழ் வீசுமே

அணைகள் அடைத்தாலும் ஆணை தடுத்தாலும் பிணைகள் உடைத்தோடுவாள்
சொல்லில் பொருள்போல அன்பில் அறம்போல அணைத்து தாலாட்டுவாள் 
காவேரி தாலாட்டுவாள்.


பரவலாக பகிரப்பட்டதால் மேலுள்ள படங்களை இங்கே சேர்த்துள்ளேன். எடுத்தவர்கள் யாராயிருப்பினும் இவ்வலைப்பூவிலிருந்து நீக்கச்சொன்னால் உடனே நீக்கிவிடுவேன்.

சலைவன்வாழ்த்துதிணை கமழும் உதகை வனம்

No comments:

Post a Comment