Showing posts with label போக்குவரத்து. Show all posts
Showing posts with label போக்குவரத்து. Show all posts

Wednesday, 21 January 2015

எமீல் லெவஸார்


எமீல் லெவஸார்
இன்று ஜனவரி 21 எமீல் லெவஸாரின் பிறந்தநாள்.

யார் அவர்? கேள்விப்பட்டதேயில்லையே! 

இருக்கட்டும் : ஆசீவகம், வாலஸ் போன்று தான் இவரும். ஜனவரி 8 வாலஸின் பிறந்த நாள். புணேவில் இருந்ததால் தவறவிட்டுவிட்டேன், அடுத்த வருடம் எழுதுகிறேன்.

எமீல் லெவஸார்காரின் மூத்த முதல் தச்சன். டீஸல் எஞ்ஜினை உருவாக்கி அதற்கு பெயர் கொடுத்த ருடால்ஃப் டீஸலை அறிந்துளோம். காரை உலகிற்கு அறிமுகம் செய்த கார்ள் பென்ஸ் கூட தெரியும் – அவர் பெயரில் பொறியியல் திறனுக்கும் சொகுசுக்கும் புகழ்பெற்ற சிறந்த ஜெர்மானிய கார்களை உலகமே அறியும்.

பென்ஸ் செய்த கார் என்ன? பழைய குதிரைவண்டியில் குதிரையை கழட்டிவிட்டு மூன்றாவது சக்கரத்தை பொருத்தி, ஆசனத்துக்கு கீழே (விசையை) எஞ்ஜினை பொருத்தி, பிரேக்கில்லாத, கியரில்லாத, (அதனால் க்ளட்சும்மில்லாத) சைக்கிள் சங்கிலி வண்டியைதான் படைத்தார் கார்ள் பென்ஸ். இதை கார் என்று சொல்வது குறுநில மன்னரை திரிபுவன சக்கரவர்த்தி என்று புலவர்கள் புகழ்ந்தது போலாகும். உலகின் முதல் மீன்பாடி வண்டியை உருவாக்கினார் பென்ஸ்.

அவரை விட அவரது திறமையில் அதிக நம்பிக்கை வைத்திருந்த அவரது மனைவி பெர்த்தா, தனது வரதட்சணை செல்வத்தால் கணவர் கார்ளின் வியாபாரத்தை காப்பாற்றியது போதாது என்று, தன் மகன்களை ஏற்றி, கணவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, காரை 65 கிலோமீட்டர் ஓட்டி உலக சாதனை படைத்தார். சுவாரசியமான கதை – ஆங்கிலத்தில் இங்கு படிக்கவும்

மேடுகளில் ஏற இந்த வண்டி பட்ட கடினத்தால், அதை சரி படுத்த கியர் அமைப்பை காரில் சேர்த்தார் பென்ஸ். 

இந்த மீன்பாடி வண்டிகளையே “கார்” என்று சொல்லி பிற்காலத்தில் ஜெர்ம்னியின் டெய்மலர் கம்பெனியும் விற்று வந்தது. ஒரு வருடத்திற்கு சில நூறு கார்களே இவர்கள் தயாரித்தனர்.

லெவஸார் இன்றைய காரின் அடிப்படை வடிவம் அமைத்தவர். ஆசனத்தின் கீழே இருந்த எஞ்ஜினை முன்னே வைத்தார். இதனால் டிரான்ஸ்மிஷன் ஆகஸல் அமைப்புகள் ஒரு முக்கிய வடிவமும் மாற்றமும் பெற்றன. கியரை ஒன்றிணைத்த கியர் பெட்டியை அறிமுகம் செய்தார். கியர் அமைப்பை சரியாக வேலைப்படுத்த கிளட்ச்சை அறிமுகப்படுத்தினார்.

எஞ்ஜின் பொருத்திய குதிரைவண்டியாக நினைக்காமல் காராக முதலில் கருதி படைத்தவர் எமீல் லெவஸார் என்கிறார் வஷ்லவ் ஸ்மில், Creating the Twentieth Century என்ற நூலில். 

ஆங்கிலமும் காரும் தெறிந்தவருக்கு வஷ்லவ் ஸ்மில்லின் வாக்கியங்களை ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

Says Vaclav Smil: “Emille Levassor, designed the first vehicle which not merely a horseless carriage. He also designed the clutch, gear box and transmission which mechanism still drives cars today, and “so must be give the honor of having led the development of the motor-car”. Leavassor, moved engine from under the seats and placed it in front of the driver, a shift that placed the crankshaft parallel with the car’s principal axis rather than parallel with the axles.”



பெட்ரோல் எஞ்ஜினை படைத்த நிக்கலஸ் ஆட்டோவின் நினைவு நாள் ஜனவரி 26. 

ஒத்த பதிவுகள்

1. எடிசனின் வால்மீகீ - வஷ்லவ் ஸ்மில்
2. டிசம்பர் 31 - செல்வத் திருநாள்
3. டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி

Saturday, 25 October 2014

Bus Stop Index

I have a fascination for buses, as some people do for trains, ships, trams, cars, motorbikes, and yes rockets. I take being a connoisseur of the commonplace seriously. Buses are perhaps the least appreciated, definitely the least glamorous, of motorized vehicles. Even bicycles are far more fashionable. Bicycle snobs abound; no bus snob exists. Part of the static infrastructure of buses is bus stops, where people wait. I believe buses and bus stops reflect a community, a government and the economy.

Buses are one of the miracles of the 20th century, far more important for freedom and prosperity than most measures dealt with by economists. Economists use such measures as Consumer Price Index(CPI), Gross National Product (GNP), inflation, growth rates and the Gini coefficient - most people understand these poorly, and journalists, bureaucrats and social activists often have such a poor understanding of these, that their ignorance might be more useful. Mathematicians, fortunately, find these so practical, that they avoid them altogether.

I think a bus index and a bus stop index may be one useful index of the economy. The former is a index for the economy, with fares, people transported, times of operation, seating capacity, and being useful information. A bus stop index would merely reflect the aesthetic standards of a community, or the degree of apathy or engagement of local government. In Madras for the last few years, there are no bus stops in most places, so no shelter from rain and sun. This is purely a contractor issue and political one-up-manship.

Here are a few regular and a few unusual bus stops, that caught my eye, usually, when I was in a bus and had my hands free.

Kerala

Politics permeates every aspect of Kerala life, bus stops are no exception.

Thiripparaiyaar
Notice the post box on one of the pillars. And the complete absence of movie or business or siddha doctor pamphlets plastering the surfaces, unlike in Tamil Nadu.

Thiru Vallam - Congresss pillar
Thiruvallam - I took the photo from inside the bus stop. These are Congress colors not India colors, there are party flag posts outside. It has 3 seats, not in photo.

Trivandrum East Fort
I found this bus stop in Trivandrum city, near the Padmanabha Swamy temple. I like the aesthetic touch of the paavai vilakku (Lady with Lamp) statue aesthetically pleasing, though orange paint would not be my choice.

TamilNadu

Thiruneelakkudi - near Mayiladuthurai
You have to admit, that the bus stop at Thiruneelakkudi is more fancy than some houses or government buildings.

Suchindram
This one at Suchindram, the bus stop for the main temple, has a roof, slight modeled on a temple vimana, with kalasams on top!

Gujarat

My bus stop index idea is a recent one, and I took a few pictures of bus stops and buses while in Gujarat. This first yellow paint square shelter, outside Bhuj, is typical of rural areas, even in TamilNadu.

Bhuj

Naroda, Ahmedabad
This is a bus stop in Naroda, a suburb of Ahmedabad, with a long bus stop, and a few seats and a tea shop. Also quite typical. The next two, are the interior and exterior of BRTS bus stops in Ahmedabad - very atypical. Pune and Delhi are two other cities with BRTS. The one in Pune is a farce; I haven't been to Delhi.

BRTS bus stop - interior - Ahmedabad

BRTS  bus stop Ahemdabad
This one below, in Baroda, is actually more typical. A simple bus stop in Baroda, one of the cleanest cities I have seen. I did not see many buses in the early mornings, though. In Tamilnadu and Kerala buses are quite common, even in the early mornings. North Indian winters are cold, those states wake up late, so that's not a surprise.

Baroda

Mehsana
Finally, Mehsana, a small town with a simple bus stop. Sadly, still better than most of Madras.

Tuesday, 21 January 2014

தென் அமெரிக்க பேருந்து புரட்சி

தென் அமெரிக்க அரசியல் புரட்சிகளால் மட்டுமே புகழ் பெற்றது. ஆனால் கத்தியின்றி ரத்மின்றி சத்தமின்றி கவனமின்றி, பல நகர மேயர்கள், அங்கொரு பேருந்து புரட்சி நடத்தியுள்ளனர். நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் தொழிலதிபர்களும் சமூகத்தொண்டு வியாபாரிகளும் சிந்தனையாளர்களும் கண்டுகொள்ளாவிட்டாலும், மற்ற நாட்டு மேயர்களும் முதலமைச்சர்களும் மாநில ஆளுநர்களும் பார்த்து ஆய்ந்து தழுவியுள்ளனர். இது ஒரு விஞ்ஞான புரட்சியோ தொழில்நுட்ப புரட்சியோ அல்ல, நிர்வாக புரட்சி; அரசியல்வாதிகள் சிந்தித்து சோதித்து நன்கு செய்தது; போக்குவரத்தில் பொதுமக்களுக்கு மாபெரும் முன்னேற்றம் தருகிறது, தந்து வருகிறது; மக்கள் பணத்தை சிக்கனமாகவும் அறிவுடனும் ஆற்றலுடனும் கையாண்டு வருகிறது.

நெரிசலில் காரும் பஸ்ஸும்
பேருந்துகளே [பஸ்கள்] சிக்கனமான, சிறப்பான, ஜனநாயகமான வண்டிகள் என்பதே அடிப்படை தத்துவம். கார்களும் ரயில்களும், மெட்ரோவானாலும், மோனோரயிலானாலும், நிலத்திலோ, சுரங்கம் செய்தோ, தரைதளத்திலோ பேருந்துகளுக்கு இணையாகா. பிரேசில் நாட்டில் குரிடிபா நகரில் தொடங்கி, பல தென் அமெரிக்க ஊர்களில் Bus Rapid Transit (BRT) - வேகப் பேருந்து முறை (வேபேமு?) பரவியுள்ளது. கொலம்பியா நாட்டு பொகோட்டா நகர மேயர் என்ரிக்கே பெனலோசா இத்திட்டத்தை உலகெங்கும் சிறப்பாக பறையடிக்கும் வியாசர். கோக்கேன், ஹெராயின் வகை போதை பொருட்களின் மூலமாக பத்திருபது ஆண்டுக்கும் முன் கொலம்பியா இகழப்பட்டது. ஓரிரு ஆண்டுமுன் பெனலோசா சென்னையில் கிண்டி பொறியியல் கல்லூரியில் உரையாற்றி நான் கேட்டேன். இதோ அவரது டெட் உரை.
பொகோட்டா நகரில் வேகப்பேருந்து முறை - தனி பாதை
சென்னை மக்களிடம் அவ்வுரை இயங்களை மட்டுமே எழுப்பியது. அரசு கல்வி பத்திரிகை துறையினர், இது பாரத நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் சாத்தியமில்லை என்றனர். பாதுகாப்பின் சாக்கில் பிரதமர் முதலமைச்சர்கள், பின் அவசர சாக்கில் தீயணைப்பு ஆம்புலன்ஸ் வண்டிகள், பின் நீதியரசர், எம்பி, சட்டசபையினர், மற்ற அதிகாரிகள் என எல்லோரும் தனிப்பாதையில் செல்ல விரும்புவர். தனிப்பாதை மீண்டும் நெருக்கமாகும் – இது சமூக அரசியல் ரீதியான எதிர்ப்பு. இந்திய சாலைகள் அகலமில்லை, மக்கட்தொகை அதிகம், பஸ் ரிப்பேர் ஆனால் என்னாகும், டிக்கெட் விலை உயர்த்த வேண்டும், காண்டிராக்டர்கள் சாலைகளை தோண்டிவிடுவார்கள், பதனிட மாட்டார்கள் என்ற நிர்வாக ரீதியாக எதிர்ப்புகளும் பேசப் பட்டன.
குரிதிபா நகரம்- சாலை மத்தியில் பஸ் நிருத்தம்
பெனலோசாவின் சிந்தனையோடம்:

சாலைகளை ஜனநாயகமாக பங்கிட வேண்டும் – 80 நபர் செல்லும் பஸ்ஸுக்கு 1 நபர் செல்லும் காரை விட 80 மடங்கு அதிக இடம் சாலையில் தரவேண்டும். சுருக்கமாக: “ஒரு சிறந்த நகரின் அறிகுறி, ஏழைகளும் காரில் செல்வது அல்ல; பணக்கரார்களும் பஸ்ஸில் செல்வதே!”

வேகமாக பேருந்துகள் செல்ல அவற்றுக்கு தனி பாதை அமைத்து (சாலையில் 24 மணி நேர இட ஒதுக்கீடு செய்து) இதை சாதிக்கலாம். ரயில் போல நிருத்ததிலேயெ பயணசீட்டு தருதல், படிகளில்லா பேருந்துகள், உயர் தளத்தில் பேருந்து ஏற மேடைகள் –பிளாட்ஃபார்ம்; அகல கதவுகள், வே.பே.மு-வின்மற்ற அம்சங்கள். இவை முக்கியமானவை  - நுழையும் வெளிவரும் சீட்டுதரும் நேரங்கள் குறைக்காவிடின் தாமதமாகி திட்டத்தை குலைத்துவிடும். இவையாவும் நிர்வாக மாற்றங்களே : புது தொழில்நுட்பம் ஏதும் தேவையில்லை. என் கண்ணுக்கு இதுவே 
இத்திட்டதின் அற்புதம், வியக்க வைக்கும் புதுமை.

மெட்ரோ ரயில், சுரங்கர ரயில் அமைக்க வேபேமு-வை விட நூறு மடங்கு அதிக பணம் செலவாகும்; அவற்றை கட்ட அதிக நேரமும் பொருட்களும் வேண்டும். சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு பாதையை தவிற, ரயில்களை விட பேருந்துகளே அதிகமான பயணிகளையும் வழிசெலுத்துவதாக பெனலோசா கூறுகிறார்.

ரயிலை வியப்பாய் நோக்குபவர் பேருந்தை சாதாரணமாய் நோக்குவதால், சில மனோதத்துவ லீலைகளையும் முன்மொழிகிறார். பேருந்து ஓட்டுனரக்கு விமான ஓட்டுனரைப் போல் பைலட் என்று பட்டம் தருதல், நிருத்தங்களுக்கு அழகு சேர்த்தல், வசதி செய்தல், ஏசி (குளிர்சாதன) வண்டி, இதில் சில யுக்திகளாம். 
குஜரத் அகமதாபாத் நகரில் வேகப்பேருந்து முறை - தனி பாதை
பல நாடுகளின் பல ஊர்களில் BRT என்னும் வேபேமு அமலாகிவிட்டாலும் இது பல மக்களும் அறியாத ரகசியமாகவே இருக்கிறது. என்ன பஸ் தானே என்ற அலட்சியமோ? மெட்ரோ ரயில்களின் அந்தஸ்த்து அதிகமோ? மக்களுக்கு இவ்வளவு ஜனநாயகம் வேண்டாமோ? பாரதத்தில் அகமதாபாதில் நன்றாகவும், டெல்லி, புனேவில் சுமாராகவும் ஓடுவதாக கேள்வி. டெல்லியில் படியுள்ள பேருந்து, குறுகிய கதவுகள், பேருந்தில் டிக்கட் விற்பனை போன்ற பழைய திட்டங்கள் இருப்பதால் வேக பேருந்து முறையாயன்றி தாமத பேருந்தாய் மட்டுமே நிலைக்கிறது. ஆரம்ப காலத்தில் டெல்லி உயர் நீதி மன்றம் கார்களும் வேகபேருந்தின் தனிப்பாதையில் செல்லலாம் என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. பின்னர் வேறு ஒரு தீர்ப்பில், “பணக்காரரும் பேருந்தில்போவதே வளர்ந்த நாடு” என்ற தத்துவத்தை ஏற்று, வேகப்பேருந்துகளுக்கும் மட்டும் தனிப்பாதையை மீண்டும் வழங்கியது.

மேலும் எழுதுகிறேன்.