Showing posts with label Kundavai. Show all posts
Showing posts with label Kundavai. Show all posts

Sunday, 6 October 2013

குந்தவை ஜீனாலயம் - ஓவியங்கள்

ஓவியங்கள் உள்ள் செங்கல் கட்டடம்
நேற்றைய பதிவில் சமவசரணம், சித்தன்னவாசல் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சித்தன்னவாசலை பற்றி நண்பர் பூஷாவலி, விஜய்குமார் எழுதியுள்ள பதிவுகள் இங்கே. குந்தவை ஜீனாலயம் சென்ற பத்ரி சேஷாத்ரியின் பதிவு இங்கே – அவர் பதிவில், நான் சிவனோ என்று ஐயம்கொண்ட ஓவியம், யக்ஷி அம்பிகை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவில் சிற்பங்களின் சிறந்த படங்கள் உள்ளன. சமணத்தை பற்றியும் சமவசரணத்தை பற்றியும் கூகிள் செய்து அறிந்து கொள்ளலாம். 

குந்தவை ஜீனாலயத்தில் கீழே ஒரு கோவிலும், மேலே பாறையில் குகையிலும், குகையை சுற்றி எழுந்துள்ள செங்கல் கட்டடத்திலும் ஓவியங்கள் உள்ளன. 

வட்டத்து நடுவில் துறவி/ஆசிரியர்
ஆசிரியரை சுற்றி துறவிகள், அரசகுலத்தோர்
கட்டடத்தின் உள்ளே ஓவியங்களில் ஒன்றை பார்ப்போம். ஒரு தீர்தங்க்கரரோ துறவியோ ஆசிரியரோ வட்டமான ஓவியத்தின் நடுவிலும், அவர் உபதேசம் கேட்க தேவர்களும் மக்களும் விலங்குகளும் அவரை சூழ்ந்து வட்டத்தின் பிறிவுகளிலும், வேறு சிலர் வட்டத்தின் வெளியிலும் தீட்டப்பட்டுள்ளனர். இங்கு காணும் ஓவியத்தில் நடுவே உள்ளது தீர்த்தங்கரர் நேமிநாதர் என்று பத்ரி பதிவில் காணலாம். விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் உறவினரே நேமிநாதர் என்று நண்பர், சமணர், தாவரவியல் பேராசிரியர் கனக அஜிததாஸ் கூறுகிறார். 
ஆசிரியரை சுற்றி அரசகுலத்தோர், மக்கள், விலங்குகள்

தரிசனம் தேடி வந்த பசுக்கள்

வட்டத்துக்கு வெளியே – தேவர் / கந்தர்வராய் இருக்கலாம்

அந்த கட்டடத்தின் வெளியிலும் உயரத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையும், அதன் அருகே சென்று பார்த்தால் மூன்று நாட்டியப்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் ஓவியமும் உள்ளன. தொல்லியல் பிதாமகன் டாக்டர் நாகசுவாமியின் “ஓவியப்பாவை” என்ற நூலை படித்து, இந்த பெண்களின் ஓவியத்தை பற்றி,  “அஜந்தா மரபின் சாயல் இங்கு தொடற்கிறது” என்று படித்துவிட்டு, ஆவலில் முன்பொரு முறை ஊரைத்தேடி வந்த நண்பர் விசுவநாதன், இங்கே என்னை அழைத்துவந்தார். அவர் பாறை ஏறி பக்கத்தில் சென்று படமெடுத்தார். மூன்று நாட்டியப்பெண்களை நெருங்கினால் என் கற்பிற்கு களங்கம் உண்டாகும் என்பதாலும், பாறை கொஞ்சம் வழுக்குவது போல் தெறிந்ததாலும், இதை விட அழகான பெண்களை அஜந்தாவில் அருகே நின்று பார்த்ததாலும், நான் கொஞ்சம் தள்ளியே நின்று விட்டேன்.

ஓவியத்தை நாடி 
பாறையில் எறும் விசுவநாதன்


வெளிச்சுவரில் நாட்டிய பெண்கள் ஓவியம்
குந்தவை ஜீனாலயம்    கூகிள் வழிகாட்டி Google map location