Showing posts with label தொல்லியல். Show all posts
Showing posts with label தொல்லியல். Show all posts

Monday, 28 February 2022

நாகசாமி - கற்றதும் பெற்றதும்

Smt Vallabha Srinivasan has translated my tribute to Dr Nagaswamy in Madras Musings into Tamil.

மதராஸ் மியூஸிங்ஸ் இதழில் வந்த ஏன் கட்டுரை - தோழி வல்லபா சீனிவாசனின் தமிழாக்கம்

------------------------------

தினசரிகளில் வரும் தொல்லியல் வரலாற்றுக் கட்டுரைகளின் மூலமாகவே முதன் முதலாக டாக்டர் ஆர் நாகசாமியைப் பற்றி அறிந்தேன். 2009 ம் ஆண்டு மாமல்லபுரம் பற்றியதான அவரது கட்டுடைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் “மாமல்லபுரத்திலிருக்கும் அனைத்துக் கோயில்களையும் காட்சிச் சிற்பங்களையும் கட்டியது ராஜசிம்ம பல்லவனே!” என்ற கருத்தை முன் வைத்தார். அதுவரை ஜூவோ துப்ரே (Jouveau Doubreil) என்பவர் 1915 ல் முன்வைத்த, ‘மாமல்லபுரச் சின்னங்கள் முதலாம் நரசிம்ம பல்லவர், அவரது பேரன் பரமேஸ்வரன், அவரின் மகன் ராஜசிம்மன் ஆகிய மூவராலும் கட்டப்பட்டவை’ என்ற கருத்தே, ஒரு நூற்றாண்டு காலமாக வரலாற்றாசிரியர்களிடையே நிலவியது. அந்தக் கருத்தை கட்டுடைத்த இந்த ஆய்வு ஒரு மர்ம நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அதற்காக அவர் சேகரித்து முன்வைத்த,

கட்டுமானக் கலை, கல்வெட்டு, அழகியல் ரசனை, கவித் திறன், வரலாற்று ஆதாரங்கள் சார்ந்த பல்வேறு வாதங்கள் பிரமிக்கத் தக்கவை.
பொதுவாக நாகசாமியை ஒரு பெரும் முதியவராக, தமிழ்நாட்டுத் தொல்லியலின் பீஷ்ம பிதாமகராகவே நினைவு கூர்கிறோம். அது அவருக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொல்லியலில் அவரால் பெரிதும் மதிக்கப்படுகிற, T N ராமச்சந்திரன், சிவராம மூர்த்தி போன்றோரை அவமதிப்பது போலாகும். இவர்களுடன் நாகசாமியும் பணியாற்றி கற்றவை பற்பல. அவரது சாதனைகள் அவர் இளைஞராக இருந்த போதே வந்தவை என்பதையும் மறந்து விடுகிறோம். ராஜசிம்மன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதிய போது அவரது வயது 32! தென்னிந்திய வரலாறு என்ற பெரும் படைப்பின் முன்னுரையில் K A நீலகண்ட சாஸ்திரி, இளைஞர் நாகசாமியின் விலைமதிப்பற்ற ஆலோசனைக்கு நன்றி கூறி இருக்கிறார்.
நாகசாமி ஒரு பிரமிக்கத்தக்க இளைஞராக இருந்தார். அவர் பல ஆண்டுகள் உயிரோடிருந்து பல துறைகளை மேம்படுத்தியது நம் அதிர்ஷ்டமே! வரலாறு, நடனக்கலை, இசை, இலக்கியம், மதம்…தொல்லியலும் கல்வெட்டியலும் மட்டும் அல்ல. வில்லியம் ஜோன்ஸ், அலெக்சான்டர் கன்னிங்ஹாம் போன்ற சிறந்த ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி வைத்த ஒரு கலாசாரத்தின் விளக்காகத் திகழ்ந்தார் நாகசாமி. மேலும் தமிழிலும், சம்ஸ்கிருத்த்திலும் அகண்ட ஆழ்ந்த இலக்கியத் திறமை கொண்டவராகவும் இருந்தார். பகுத்தறியும் ஆராய்ச்சியில் எவ்வளவு மதிப்பு கொண்டவராக இருந்தாரோ, அவ்வளவு தன் பக்தியிலும் பெருமை கொண்டவராக எப்போதும் நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் காணப் படுவார்.
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைத் துவங்கிய, ஐஐடி டெல்லியில் பணியாற்றிய பேராசிரியர் சுவாமிநாதன் ஏற்பாடு செய்திருந்த மாமல்லபுரம் கல்விப் பயணத்திற்காக இவரது ராஜசிம்மன் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுவாமிநாதன் நாகசாமியுடன் சென்ற சித்தன்னவாசல் பயணத்தை நினைவு கூர்ந்தார். சித்தன்னவாசலில் பழைமையான சமண ஓவியமும், பாண்டியர் கால தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டும், தமிழ் பிராமியிலான சங்க காலக் கல்வெட்டும் இருக்கின்றன. நாகசாமி உற்சாகம் கொண்டவராக அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ஒரு காகித்த்தில் இந்த எழுத்துக்களை எழுதிக் காண்பிக்க ஆரம்பித்தாராம். அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு பெரும் உலகறிந்த ஆராய்ச்சியாளர் தனக்கு கல்வெட்டு சொல்லித் தருகிறார் என்று அறிந்திருப்பானா?
இவ்வாறு இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இந்நாட்டு பாரம்பரியப் பெருமையை அறிந்து பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணியவர் நாகசாமி. தொல்லியலும், கல்வெட்டியலும் சமூகத்திலிருந்து விலகி அறிவுசார் கல்வி அரங்குகளிலும், காட்சியகங்களிலும் தீவு போல இருப்பதை அவர் விரும்பவில்லை. வரலாற்றுச் சின்னங்கள் சுரண்டப்பட்டு கருங்கல் குவாரிகளாகவும், ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ஓவியங்கள் வெள்ளை அடிக்கப் பட்டும், வெங்கலச் சிலைகள் திருடி விற்கப் பட்டும், புதுப்பிக்கப்படுகிறது என்ற பெயரில் பழமையான சின்னங்கள் அழிக்கப்படுவதுமான அவல நிலையில் இருக்கும் இக்காலத்தில் இதைவிட முக்கியமானதாக எது இருக்க முடியும்?
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநிலத்தில் தொடங்கப்பட்ட தொல்லியில் துறையான தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு, 1966 ல் நாகசாமி தலைமை ஏற்றார். புத்தகங்கள் விலை மிக்கதாகவும், நூலகங்கள் அரிதாகவும் இருந்த கால கட்டத்தில் பல சிறிய விலை மலிவான துண்டுப் பிரசுரங்களை பதிப்பித்தார். பன்னிரண்டு மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க அரசாங்கத்தை வற்புறுத்தினார். இதற்கு முன் சென்னையிலும், புதுக்கோட்டையிலும் மட்டுமே அருங்காட்சியகங்கள் இருந்தன. மற்ற மாநில தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோயில் சுவர்களிலுள்ள தமிழ்க் கல்வெட்டுகளை இவரது சீடர்கள் நேரடியாகப் படிப்பதைக் கண்டு வியந்தனர். அவர்கள் மாநிலங்களில் பதிவுப் பிரதி எடுக்கப் பட்டு, பின்னர் பல நாட்கள் படித்தறியும் ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தது இது.

அவருக்கும் சில வீழ்ச்சிகளும், சர்ச்சைகளும், அரசியல் சார்ந்த கருத்துசார்ந்த மோதல்களும் இருந்தன. அவர் ஒரு முறை பதவி நீக்கம் செய்யப் பட்டார். விசாரணைக்குக் காத்திருந்த நேரத்தில் அவர் வருந்தி அமர்ந்திருக்கவில்லை. சிறையிலிருந்த போது புத்தகங்கள் எழுதிய இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களைப் போல, தன் கலை மற்றும் இலக்கியத் திறமையை முழுவதுமாக உபயோகித்து, "ராஜராஜ சோழன்," "ராஜேந்திர சோழன்," "மணிமேகலை," "அப்பர்" போன்ற வரலாற்று, சமய நாயகர்கள் மீதான பல நாட்டிய நாடகங்களை வடிவமைத்தார். கபிலா வாத்ஸ்யாயன் என்பவருடன் இணைந்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி என்ற நடன விழாவைத் தொடங்கினார். அவரது பல நாட்டிய நாடகங்கள், நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்குபெற்று இந்தியாவில் மட்டுமின்றி, ஜெர்மெனி, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் அரங்கேற்றப்பட்டன.

தமிழில் சங்க இலக்கியம் பற்றி "யாவரும் கேளிர்" என்ற நூலையும், தமிழ்நாட்டின் ஓவியம் சிற்பக் கலை பற்றி "ஓவியப் பாவை" என்ற நூலையும் பொது மக்களுக்காக எழுதினார். ஆங்கிலத்தில் பல ஆய்வுப் புத்தகங்களை எழுதினார் - "சஹ்ருதயா"; "காஞ்சிபுர விஷ்ணுக் கோயில்கள்"; "பழமையான தமிழ் சமுதாயமும் அதன் சட்டங்களும்".





"வெங்கலச் சிலைகள் (சோழர் காலம்)"; "மாமல்லபுரம்"; "கங்கை கொண்ட சோழபுரம்" - தமிழ் நூல்களையும் எழுதினார் . அவரது இணைய தளம் அவரது புத்தகங்களும், கட்டுரைகளும் கொண்ட ஒரு பல்கலைக் கழகம்.
சம்ஸ்க்ருத இலக்கிய வார்த்தைகள் பரிச்சயம் இல்லாத மக்களைக் கருத்தில் கொண்டு, பல சிற்பங்களுக்கு தேவாரம், திவ்யப் பிரப்பந்தம் சொற்றொடர்களிலிருந்து அழகான தமிழ்ப் பெயர்களை உருவாக்கினார். "மாமயிடன் செறுக்கறுத்த கோலத்தாள்" என்று மஹிஷாசுர மர்த்தினியையும், திருமங்கை ஆழ்வார் சொன்ன கடல் மல்லை கிடந்த கரும்பு என மாமல்லபுர அனந்தசயன விஷ்ணுவையும் வர்ணித்தார். வலம்புரம் என்ற இடத்தில் கிடைத்த தானம் பற்றிய கல்வெட்டில் ‘வட்டணைகள் பட நடந்த நாயர்’ என்றிருந்தது. யாருக்கும் அதன் பொருள் விளங்கவில்லை. ஆனால் நாகசாமி அப்பரின் ஒரு பாடலில் “வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வம்புறத்தே புக்கங்கே மன்னினாரே” என்று பிக்ஷாடனர் குறிப்பிடப் படுவதைக் கூறி, சோழர் கால பிக்ஷாடனர் ஐம்பொன் சிலையுடன் இதை இணைத்தார். இது அவரது தனித்துவமான திறமை.
மூன்று மொழிகளிலுமான பரந்த ஞானம், வேதம், ஸ்மிருதி, ஆகமங்கள், பரத நாட்டிய சாஸ்திரம், சம்ஸ்கிருத காவியங்கள் இவற்றில் இருந்த ஆழ்ந்த ஆளுமை, அதே போல தமிழில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், இதர தமிழ்க் காப்பியங்கள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவற்றில் இருந்த புலமை, கல்வெட்டில், வரலாற்றில் இருந்த திறமை, மூன்று நூற்றாண்டுக்கான ஆங்கில ஆராய்ச்சிக் கல்வியின் அறிவு ஆகியவை இவரை அரிதிலும் அரிதான ஆராய்ச்சியாளராக அடையாளம் காட்டியது. நாட்டில் இவ்வளவு பரந்த ஞானம் உள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிலும் திறம்பட எழுதவும், பேசவும் முடிந்தவர் சிலரே.
சில ஒற்றைப் புத்தக பண்டிதர்களும், ஒரு மொழிப் புலவர்களும் நாகசாமி மேல் ஏளனத்துடன் வசைமாறி பொழிந்தனர். சில நேரம் அவர்களுக்கும் தக்க பதிலளித்தார்.

சில தனிப்பட்ட நிகழ்வுகள் - காஞ்சி கைலாசநாதர் கோயிலை, நான் புரிந்து கொள்ளத் திண்டாடிய போது ‘அதைக் கட்டிய ராஜசிம்மன் அந்தக் கோயிலை அதிமானம் அதி அத்புதம் என்றே வர்ணிக்கிறான் என்று எடுத்துக் காட்டினார். அதாவது "சரியாக அளவிடப்பட்ட அற்புதம்" என்பது. அது என் கண்களைத் திறந்தது : அந்த ராஜசிம்மனின் வார்த்தைகளைக் கொண்டே அந்தக் கோயிலை அணுக வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 2014 ல் நாகசாமி அவர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்ட தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி நிகழ்வுக்காக நாகசாமி அவர்களின் பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளை அலசும் கௌரவத்தை சுவாமிநாதன் எனக்கு அளித்தார். கைலாசநாதர் கோயிலில் ராஜசிம்மன் தன் அழகிய எழுத்துக்களில் பொறித்து வைத்திருந்த பட்டப் பெயர்கள் - ‘அத்யந்தகாமன்’ (எல்லையில்லா விருப்புடையவன்), ‘கலாசமுத்ரன்’ (கலைக்கடல்). இரு பட்டப் பெயர்களையும் ஒரு சட்டையில் தைத்து எழுதி அவருக்குப் பரிசளித்தோம். அதை ஆனந்தமாக அடுத்த நாளே அணிந்து கொண்டார்.

சட்டையில் அத்யந்தகாமன், கலாசமுத்ரன்  


பெஞ்சமின் பாபிங்டன் 1830 ம் ஆண்டு எழுதி மறக்கப்பட்ட பல்லவ கல்வெட்டு பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை நான் கண்டறிந்த போது அவர் மிகவும் அகமகிழ்ந்து அவர் வீட்டிலேயே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதைப் பற்றிப் பேச வைத்தார். அவருடன் மேடையைப் பகிர்வது என்ன ஒரு பெருமை!

பாபிங்டன் பல்லவ கல்வெட்டு  


சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில், உத்திரமேரூர் பற்றிய ஒரு உரைக்காக ஒரு குடத்தில் சிறு காகித்த் துண்டுகளைப் போட்டு இளைஞர்களை எடுக்கச் செய்தார். இதன் மூலம் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப் பட்ட, பயம் பாகுபாடு இன்றி தலைமை வகிப்பவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை கண்கூடாக நடத்திக் காட்டினார்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோகம் அவரைத் தாக்கியது. அவரது முப்பது வயது கூட நிரம்பாத பேரன் ஒரு நோயால் மரணித்தார். அதற்கு அமெரிக்கா சென்று விட்டு திரும்பியிருந்த போது இங்கு, சொல்லிலும் பேச்சிலும் வல்ல ஆய்வாளர் ஒருவர், சமூக வலைத் தளங்கள் அவரை தூற்றியதற்காக மனமுடைந்து, இனி தான் பேசவே போவதில்லை என்று அறிவித்திருப்பதை கேள்விப் பட்டார். நாகசாமி அவரைத் தொலைபேசியில் அழைத்து அவர் விபரீத முடிவை விசாரித்துக் கொண்டே, தனக்கு நேர்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞர் புரிந்து கொண்டார். இத்தகைய தாங்க முடியாத் துயரம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவரான அவருக்கு ஏற்பட்ட போதும், அது அவரது ஆராய்ச்சியிலிருந்து அவரை விலக்கவில்லை எனும் போது எதிரிகள் வசைபாடும் காரணத்தால், அவரில் பாதி வயது கூட நிரம்பாத ஒருவர் விலகுவதா?
கலைக்கடல் நாகசாமியை நான் சந்தித்தது ஒரு வரம். அவர் செப்பும் மொழி கேட்டது ஒரு பாக்கியம். அவர் நூல்களைப் படித்தது ஈடில்லாக் கல்வி. அவருடன் உறவாடி உள்ளம் மகிழ்ந்த மணித்துணிகள் அதி அற்புதம்.

Related Essays

Nagaswamy - Beyond borders (Essays)

The third Rajasimha inscription - Babington's surprise

மயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி உரை

காஞ்சி கைலாச நாதர் கோயில் அலங்கார லிபி

Related Videos 

அத்யந்தகாமன் - நாகசாமி நினைவுகள் (தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை)

மாமல்லபுரம் 2000 ஆண்டுகள் (தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை)

New light on Mamallapuram (with Dr Nagaswamy at Tamil Arts Academy)

Monday, 6 June 2016

Keezhadi excavation

Amaranath Ramakrishnan,  archaeologist of ASI lectured about the Keeladi excavation which he initiated and is supervising. These are my notes of his speech at Tamil Virtual Academy, Kotturpuram, Chennai.

Tamilnadu Archaeology overview

No serious systematic excavation along Vaigai or Tamilnadu since Alexander Rea in 1880. Occasional expeditions in Kallupatti, Mangulam. Only major ASI dig at Kaveripoompattinam. Alagankulam is the one rare site undertaken by TN state archaeology department.

170 habitation sites found by ASI Bangalore division in the last few years. Including Keeladi, Allinagaram, Enadi, Maranadu with Buddha sculpture (but called Muniyandi), Rajagambiram, Pandikanmay. Most sites are on the South Bank of Vaigai which is lower and hence, fertile.

Burial sites also found too besides habitation sites. Burial sites are never on fertile soil.

Several sites have been lost to real estate and other development.

Stone arrangements are North-south and East-west in Vembur. This is the first such site found in Tamilnadu. Such sites have been discovered in Andhra Karnataka earlier.

Gold bars with Tamil Brahmi (with name Kothai) were found. First gold bar discovered in Tamilnadu. Deposited with Collectorate.

More recent objects

Arabic sluice gate inscription of 17th century. Hero stones, with vattezhuthu, Pandyan era Durga, Jain and Buddhist statues at Arungulam and Kilparthibanur.

Of more recent vintage, (i.e. late Pandya) Karungalakkudi stone temple on the way from Madurai to Nedungulam with Sundara Pandya inscription! Kallikottai Siva temple also discovered!!

Keezhadi

Keezhadi (or Keeladi) now in Siva Ganga district, called Kuntidevi chaturvedi mangalam, after a Pandya queen. Perhaps it is the Kondagai village nearby. 

Puliyur Nambi of 13th century Tiruvilayadal Puranam says old Madurai was near Manalur, which is near Keeladi. It is 80 acres in area.

Bricks of three sizes found. Similar bricks found in Kanchi and Arikamedu. Handmade grooved tiles probably tiled roof, found. Ring well, pottery - for utensil not burial- found in brick dwellings stratigraphically.

Lots of antiquities - all finished goods - found; also coins figurines, glass and pearl beads, iron objects, bone point stylus actually horn, ivory dice, gamesmen, discs and terracotta wheels, Brahmi on pottery sherds with the words Thisan Uthiran Adhan Iyanan Surama. Graffiti pottery sherds also found.

Tamil history is stuck at 3rd century BC. Rajan's dating of Kodumanal as fifth century BC not accepted by anyone.

Nearly one lakh students visited. We allowed them and explained things to them.

Comments by Gopu
I can't find the video of this talk by a Google search. If some one provides a link, I will post the link here. I post this blog because newspaper reports seem more sensational than informative.

Mr Amarnath Ramakrishnan's passion and earnestness came through in the talk. If Keeladi is Sangam settlement like he claims, it is fascinating and important. It is remarkable that most of the sites found earlier were burial sites, not residential areas.

His comments on real estate development are valid. Once land is built up, archaeology is unlikely. I am surpised that there isnt a more active set of excavations around Gangaikonda Cholapuram. 

I hope they commence a proper excavation at Gunduperumbedu also for the same reason. Prof Dayanandan of  MCC, Tambaram expressed this opinion to me in a recent chat.

Other Blogs on Archaeology

A Dholavira surprise
Gunduperumbedu - Creataceous site near Madras

Friday, 2 May 2014

பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு

கற்கால கல்வெட்டு கல்
கீழ்வாலை பாறை ஓவியங்களை பார்க்க போனால், அங்கு சில காட்சிகள் அடிப்படை வரலாற்றை புரட்டி போட்டன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதலில் பார்த்த அதிர்ச்சி பண்டைக்கால கல்வெட்டு.


பாண்டுரங்கன் கல்வெட்டு
பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் எல்லாம் தாண்டி நவீன தமிழில் அறியா வம்சத்தின் தெரியா அரசன் பாண்டுரங்கன் தன் பெயரை செதுக்கியுள்ளான். கற்காலத்தில் மன்னராட்சி இருந்ததா, மக்கள் நாடோடிகளாய் குழுக்களாகவே வாழ்ந்தனர், என்ற கேள்வி எழுந்தது.

 பட்டபெயரா பிறவிப்பெயரா?
சற்றே  கவனுத்துடன் பார்த்தால், ஆட்சியாண்டு 36 இல், கலியுக வருடம் 1988 இல் அரசன் பாண்டுரங்கன் இந்த கல்வெட்டை செய்வித்தான் என்று யூகிக்கத்தோன்றியது. நான் ஆர்வலன் தான், கல்வெட்டு துறையில் பட்டப்படிப்பெல்லாம் இல்லை. வல்லுனர்கள் தான் இதை உறுதி செய்ய வேண்டும். பாண்டுரங்கன் என்பதை பாண்டு - ரங்கன் என்று பிறிக்கலாம். பாண்டியர் வம்சத்திற்கு முன்னோடியாகி பாண்டு என்ற சொல்லும் (Proto-Pandya) அரங்கம் அமைத்ததால் வினையாலமையும் பெயராக ரங்கன் என்றும், மன்னனின் பட்டப்பெயர் இருந்திருக்க வேண்டும். மேலே ஜெயராமன் என்ற பெயர் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதால், அவனே அவனுக்கு பிறக்கும்போது வைத்த பெயரென்றும், அரியணை ஏறியபின் வந்த பட்டப்பெயரே பாண்டுரங்கன் என்றும் நம்பலாம். ராஜராஜன் என்பது பட்டபெயர் என்றும் அப்பெயர் கொண்ட சோழ மன்னனின் பிறவிப்பெயர் அருள்மொழி வர்மன் என்பதும் வாசகர்களுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறேன்.

கற்காலத்தில் எப்படி சமஸ்கிரத எழுத்தான “ஜெ” வந்தது என்றும், எண்களை எழுதும் பழக்கம் அப்பொழுது இருந்ததா என்றும், இரண்டு ஐயங்கள் எழலாம். கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்பதும், வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழகம் என்றும் நினைவில் வைத்தால் முதல் ஐயம் தீரும். எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்பது ஆதிமுதல் தமிழரின் அறிவியல் தொலைநோக்கு பழமொழி  என்றும், கற்கால மனிதர்களுக்கு நிச்சயம் இரண்டு கண்கள் தான் இருந்தன என்பதும், இரண்டாம் ஐயத்தை ஒழிக்கும்.




அருகே சிர்காசி-ரவேல் கல்வெட்டு இருந்தது. இந்த சொற்கள் சங்ககாலத்திற்கு முன்பு உள்ள பெயர் மரபை குறிக்கும். அமைச்சர், அரசவை புலவர் பெயர்களாக இருக்கக்கூடும். உற்று நோக்கினால், ஒரு காம்பில் இரு இலைகள் பொறிக்கபட்டதை காணலாம். இது பாண்டு வமச அரச லச்சினையென்று சந்தேகமின்றி கூறலாம். அவர்களக்கு செடிகள் மேதுள்ள காதலும், இயற்கையோடு கற்கால மனிதன் எவ்வாறு ஒன்றி வாழ்ந்தான் என்றும் காலக்கடலைத் தாண்டி நமக்கு இச்சின்னம் அறிவுறுத்துகிறது.


ரவேல் லச்சினை கல்வெட்டு


Sunday, 16 February 2014

A Dholavira Surprise

A wall at Dholavira
Dholavira is not as famous as Mohenjadaro or Harappa. But it is one of the largest cities of the Harappan civilization though not part of the Indus valley, it is in India rather than in Pakistan, it is well excavated and documented and worth viewing.


As part of our fifth Site Seminar, we visited the state of Gujarat, and Dholavira was one of the main attractions. We had three lectures in preparation –one by Badri Seshadri summarizing Michel Danino’s book on Sarasvati; one by TS Subramaniam of Frontline magazine who has written widely about it and showed some excellent photographs; and one on Harappan seals by Krishnakumar.

On the second day we visited Lothal – I’ll write about it later – the most famous sea-port of the Harappan civilization. We saw the standard sized bricks, the settlements, the large port and so on. A long strong desire fulfilled, a stroked curiosity somewhat satiated, several minor surprises.
Harbour at Lothal, made with bricks, not cut stone
Bricks at Lothal- not stones

But the major surprise was at Dholavira : not a single brick! Every reservoir or tank, every “house”, every well, the “Citadel”, the “Stadium” : every building in Dholavira was made out of cut stones. 

Cut stone at Dholavira
There seems no mention of it in the literature. The first thing we read about this massive civilization is its uniformity: uniform script, uniform roads, uniform houses, uniform drains, and most tellingly uniform bricks the uniform size in the ratio 1:2:4 height to width to length. And yet here was the largest site without a single brick, and the stones of all shapes and sizes.

Another cut stone at Dholavira - notice difference from previous one as measure by my finger
Crude stone wall at Dholavira - stones of varying sizes - contrast with first photo
Badri Seshadri, for one, shocked at this obvious neglect by scholars. Wikipedia mentions it, but in a passing line: a pity we never read it.  I thought he would have blogged about it, but since he hasn’t in two weeks, here goes.

The contrast with Lothal could not be more stark. Why was such a large harbor in Lothal made with so many bricks, when stones would have done just as well and would have been simpler, while heavy stones hauled up on the mounds and hills of Dholavira when it would have been easier to lift standard bricks?

Sunday, 6 October 2013

குந்தவை ஜீனாலயம் - ஓவியங்கள்

ஓவியங்கள் உள்ள் செங்கல் கட்டடம்
நேற்றைய பதிவில் சமவசரணம், சித்தன்னவாசல் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சித்தன்னவாசலை பற்றி நண்பர் பூஷாவலி, விஜய்குமார் எழுதியுள்ள பதிவுகள் இங்கே. குந்தவை ஜீனாலயம் சென்ற பத்ரி சேஷாத்ரியின் பதிவு இங்கே – அவர் பதிவில், நான் சிவனோ என்று ஐயம்கொண்ட ஓவியம், யக்ஷி அம்பிகை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவில் சிற்பங்களின் சிறந்த படங்கள் உள்ளன. சமணத்தை பற்றியும் சமவசரணத்தை பற்றியும் கூகிள் செய்து அறிந்து கொள்ளலாம். 

குந்தவை ஜீனாலயத்தில் கீழே ஒரு கோவிலும், மேலே பாறையில் குகையிலும், குகையை சுற்றி எழுந்துள்ள செங்கல் கட்டடத்திலும் ஓவியங்கள் உள்ளன. 

வட்டத்து நடுவில் துறவி/ஆசிரியர்
ஆசிரியரை சுற்றி துறவிகள், அரசகுலத்தோர்
கட்டடத்தின் உள்ளே ஓவியங்களில் ஒன்றை பார்ப்போம். ஒரு தீர்தங்க்கரரோ துறவியோ ஆசிரியரோ வட்டமான ஓவியத்தின் நடுவிலும், அவர் உபதேசம் கேட்க தேவர்களும் மக்களும் விலங்குகளும் அவரை சூழ்ந்து வட்டத்தின் பிறிவுகளிலும், வேறு சிலர் வட்டத்தின் வெளியிலும் தீட்டப்பட்டுள்ளனர். இங்கு காணும் ஓவியத்தில் நடுவே உள்ளது தீர்த்தங்கரர் நேமிநாதர் என்று பத்ரி பதிவில் காணலாம். விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் உறவினரே நேமிநாதர் என்று நண்பர், சமணர், தாவரவியல் பேராசிரியர் கனக அஜிததாஸ் கூறுகிறார். 
ஆசிரியரை சுற்றி அரசகுலத்தோர், மக்கள், விலங்குகள்

தரிசனம் தேடி வந்த பசுக்கள்

வட்டத்துக்கு வெளியே – தேவர் / கந்தர்வராய் இருக்கலாம்

அந்த கட்டடத்தின் வெளியிலும் உயரத்தில் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையும், அதன் அருகே சென்று பார்த்தால் மூன்று நாட்டியப்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் ஓவியமும் உள்ளன. தொல்லியல் பிதாமகன் டாக்டர் நாகசுவாமியின் “ஓவியப்பாவை” என்ற நூலை படித்து, இந்த பெண்களின் ஓவியத்தை பற்றி,  “அஜந்தா மரபின் சாயல் இங்கு தொடற்கிறது” என்று படித்துவிட்டு, ஆவலில் முன்பொரு முறை ஊரைத்தேடி வந்த நண்பர் விசுவநாதன், இங்கே என்னை அழைத்துவந்தார். அவர் பாறை ஏறி பக்கத்தில் சென்று படமெடுத்தார். மூன்று நாட்டியப்பெண்களை நெருங்கினால் என் கற்பிற்கு களங்கம் உண்டாகும் என்பதாலும், பாறை கொஞ்சம் வழுக்குவது போல் தெறிந்ததாலும், இதை விட அழகான பெண்களை அஜந்தாவில் அருகே நின்று பார்த்ததாலும், நான் கொஞ்சம் தள்ளியே நின்று விட்டேன்.

ஓவியத்தை நாடி 
பாறையில் எறும் விசுவநாதன்


வெளிச்சுவரில் நாட்டிய பெண்கள் ஓவியம்
குந்தவை ஜீனாலயம்    கூகிள் வழிகாட்டி Google map location 



Saturday, 5 October 2013

குந்தவை ஜீனாலயம்

திருமலை  அருகே - வயலும் தூரத்து மேகமும் மழையும்
 அக்டோபர் இரண்டாம் நாள், நண்பர் விசுவநாதனுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தலுக்கும், திருமலையில் உள்ள குந்தவை ஜீனாலயத்திற்கும் சென்றேன். கூழமந்தலை பற்றி மற்றொரு நாள் எழுதலாம். திருமலை, புகழ்பெற்ற திருவேங்கடம் அல்ல, ஒரு சிறு கிராமம். போளூர் ஆரணி சாலையில் வடமாதிமங்களம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் சென்றால் திருமலையை அடையலாம். போளூர் வந்தவாசி அருகேயும், ஆரணி ஆற்காடு அருகேயும் உள்ளன. வந்தவாசியும் ஆற்காடும், இன்றுவரை தமிழ்நாட்டில் உள்ளன.


திருமலை கிராமம்
சென்னை முதல் காஞ்சி வரை குளிர்சாதன பேருந்திலும், காஞ்சி முதல் கூழமந்தல் வரை விரைவு பேருந்திலும், அங்கிருந்து வந்தவாசிக்கும், வந்தவாசியிலிருந்து போளூர் வரை மெதுவாக சென்ற விரைவு பேருந்திலும் சென்றோம். வடமாதிமங்களத்திற்கு ஆரணி போகும் பேருந்தில் சென்று இறங்கி, ஆட்டோ பிடிக்கலாம் என்றார் நண்பர். ஆனால் போளூரில் திருமலை செல்லும் 3.15 மினிபஸ் வந்ததால் அதில் ஏறி பசுமை பொங்கும் வயல்களும், மேகம் முட்டும் மலைகளும் ஒரு வண்டிமட்டுமே செல்லும் சிமெண்ட் சாலைகளில் பயணித்தோம். தூரத்தில் மழை கொட்டும் காட்சி அற்புதம். முடகள் ஜன்னலை உரச காற்று உடலையும் மனதையும் சிலிர்க்க, கராஜில் டிராக்டரகளும் வாசலில் காளைகளும் உள்ள சில வண்ண சிமண்ட் வீடுகளையும், சாலையில் விரகு அடுப்பு மூட்டும் சில குடிசைகளயும் கடந்து சென்றோம்.

 
பாறை விளிம்பில் நான்
சமண துறவிகள் சங்க காலத்திலும் சோழர் காலத்திலும் மலைக்குகைகளில் வாழ்ந்தவர். சங்க கால மன்னர்களும் செல்வந்தரும் இவர்களுக்கு கல் படுக்கை செய்து கல்வெட்டு எழுதியுள்ளனர். சங்க காலத்தில் மாங்குளம் ஆனைமலை ஏழடிப்பட்டம் போன்ற இடங்களில் பிராமி எழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன – இவையே தமிழ் மொழியின் மிக பழமையான எழுத்துக்கள் ஆகும். சில இடங்களில் இவர்களுக்காக சிறு கோயில்களையும் அங்கு சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளயும் செய்து சில ஓவியங்களையும் தீட்டிவைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் கூரை ஓவியத்திற்கும் பாண்டியன் கல்வெட்டிற்கும் மிக புகழ்பெற்றது.
இடதுபுற சுவரில் சமவ சரண ஓவியம், அதற்குபின் குகை, கூரையில் பந்தல் ஓவியம், எதிர் சுவரில் சிவனோ?

குகை பாறை கூரையில் பந்தல் ஓவியம்
குந்தவை ஜீனாலயம் ராஜராஜசோழனின் அக்கா குந்தவை தந்த தானத்திற்கு பெய்ர்போனது. துறவிகள் தங்கிய குகையின் கூரையில் பந்தலைப்போல் ஓவியங்கள் உள்ளன.  குகையை சுற்றி செங்கல் சுவர் எழுப்பையுள்ளனர். சுவர்களில் சமவசரண ஓவியங்கள் உள்ளன. ஒரு சுவரில் உள்ள ஓவியம் பரமசிவனைப்போல் உள்ளது. வெளியறைகளில் ஓவியங்கள் நன்றாய் தெறிகின்றன, உள்ளறைகளில் இருளில் உள்ளன. ஆனால் என் கேமராவில் ஃப்ளாஷ் அடிக்காமல் நன்றாக சில படங்கள் வந்தன. பாதி இருளிலும் பாதி ஒளியிலும் உள்ள சிலைகளையும் ஓவியங்களையும் முழுதாக படமெடுக்க முடியவில்லை. ஓவியங்கள் விஜயநாகர் காலத்தவை, சோழர் காலத்து ஓவியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பரமசிவனா? - இல்லை யக்‌ஷி அம்பிகை

மலை உச்சியிலிருந்து கண்கொள்ளா காட்சியாய் நிலமகளின் பச்சை சேலை எழில் கொஞ்சியது. ஓரிடத்தில் குங்க்ஃபூ பாண்டா காட்சியும் ஆமை குரு ஊக்வேவின் மரமும் நினைவுக்கு வந்தன. மலை மேல் நேமிநாதர் கோவிலும், மலை நடுவே கோமதேஸ்வரரின் பெரும் சிலையும் உள்ளன.

வெளிச்சுவர்களிலும் ஓவியங்கள் உள்ளன. அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
மலை உச்சியிலிருந்து குந்தவை ஜீனாலயம்

இருட்டு குகைகூரையில் பந்தல் ஓவியம் – புகைப்படத்தில் மட்டுமே நன்றாக தெரியும்
எச்சரிக்கை: போக்குவரத்து வசதிகள் சுமார். இரவு 7.45 போளூர் செல்லும் பேருந்து வருமாம். 6.30க்கு கிளம்பி வடமாதிமங்களம் வரை விட்டில் பூச்சிகளும் தூரத்து மின்னலும் வழிகாட்ட ஐந்து கிமீ நடந்து வந்து, ஆரணி பஸ் பிடித்தோம். இரவு சென்னைக்கு இரண்டு மணிக்கே வந்தோம். 150கிமீ வர எட்டு மணிநேரம் எடுத்தது கடுப்பான அனுபவம். ஆற்காட்டில் பரோட்டா உண்ட ஓட்டலில் உணவு தேடி வந்த பசு, ஒரு கால்நடை கவிதை.

பின்குறிப்பு: நவாபினாலும் கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவினாலும் புகழ்பெற்ற ஆற்காட்டையும் வந்தவாசியையும், கோடம்பாக்கத்து ஆற்காட்டு சாலை அருகே வந்து வசிக்கும் நான் பார்க்கவில்லையே, போகும் வழியில் ஒரு பேருந்து மாரும் இடமாகவே இவை உள்ளனவே என்று சின்ன வருத்தம். ஆனால், ஒரு கணம் யோசித்தால், லண்டன், நியூ யார்க், கைரோ, பாரிஸ், டோகியோ, ஹாங்க் காங்க், பம்பாய், தில்லி, சியோல், ஏதென்ஸ், அபுதாபி, டாய்பேய், குவாலாலம்பூர் ஆகிய ஊர்களையும் விமானம் மாரும் இடங்களாகவே பார்த்திருக்கிறேன் என்று அற்ப ஆறுதல். சிதம்பரம் ராமேஸ்வரம் பார்க்காதது அற்பத்தின் அடுத்த கட்டம்.



ஆற்காடு ஆரிய பவனில் பசியுடன் பசு
குந்தவை ஜீனாலயம்    கூகிள் வழிகாட்டி Google map location 

Sunday, 29 September 2013

A temple in a river island

Nrpatunga pallava temple on island in Paalaru
On Tuesday, Sept 24, with friends, Siva, Bhusha and VSS, I visited Vaayalur near the Paalar river, to see the temple accredited to RajaSimha and see his genealogical inscription of 57 generations of the Pallavas. There was only one pillar with his inscription. I could not read it because it was not clear and the light was harsh. But the folks there pointed us to another temple on an island on the other side of the Paalar, built by the much later Nrpatunga Pallava. This is the photo onthe left, but as you can see it is completely "modernised" with cement and paint and shutters, and if there are any inscriptions, they are all gone.


Lion sculpture in Nrpatunga temple
A lion sculpture, perhaps of Pallava antiquity stands mutely there.

But the locale is still beautiful and would be more so if the river had more flowing water. This was in a village called Paramesvara mangalam, probably a Brahmin settlement, commissioned by Paramesvara Pallava, son of Narasimha Varma, conqueror of Vatapi.

After this, we moved on to the nearby Naththam Paramesvara mangalam section of the village, which had another old temple modernised by recent activity - you can see the scattered old sculptures nearby, discarded like so much trash.

Bikshatana in a koshtam


The priest said that some visitor told him that this was built by Paramesvara Pallava - if so it must have been in brick, because granite structural temples were begun by Paramesvara's son RajaSimha, as per scholars. The temple had a Chola structure, with the signature Lingodhbhava sculpture in the rear koshta.

The villagers believed that the Nrpatunga temple is older, but I told them he came 200 years after Paramesvara.

After we visited some megalithic burial site in Tirupporur and Siruthavur.

PS: Blogger seems to limit number of photos I can upload...

Saturday, 21 September 2013

Atyantakaama Ashrama Vijaya

In January 2010, as the first Site Seminar of the Tamil Heritage group, under the guidance of Prof Swaminathan, we spent three days in Mamallapuram. The following text is the email I sent in September 2009 out as an introduction to the preparatory meetings we held before our site seminar.

Atyantakaama Ashrama Vijaya
Maamallapuram is today considered a tourist spot, a quick getaway, a sleepy hamlet, and a seaside resort. In most people’s minds, its chief attraction is its proximity to Madras, and its uniqueness seems to be that it has temples without priests and sculptures without roofs.

There’s an ocean of ignorance between the history and significance of Maamallapuram and its perception in the public mind. In reality, it was a laboratory of art and sculpture, an open air museum patronized by a dynasty of dynamic monarchs, a granite canvas for grantha calligraphy, a field of stone planted with immortal monuments by artists with fertile imaginations. It stands unique in its diversity of architecture. In grace it has sometimes been equalled, but rarely surpassed. It was the epicentre of a cultural earthquake, whose aftershocks reverberated for a thousand years. Its impact spread across the land, and even crossed the oceans. It was a thriving commercial port, Kadal Mallai, for the first empire of Tamilakam, the Pallavan. But as subtle as the sculptures, are the unsolved mysteries it poses; about authorship, inspiration, incompleteness, paucity of literary references, even its influences and a later loss of imagination.

To have something so magnificent nearby and not revel in it, and share in its marvels, is akin to visiting a restaurant to merely smell the food. Today there are people across a wide spectrum of professions and backgrounds, with a thirsting curiosity to imbibe deeply of the spirit and the saga of Mallai, so that they may in turn spread such awareness among others, so history and art appreciation may come alive once more, a thousand years after they were created.

To this purpose, we propose a seminar at Mallai. This shall comprise an introduction to the history, guided visits, lectures by experts, artistic performances, sessions for feedback and free exchange of opinions. Thematically, there are four types of monuments at Mallai, the only such place in the world. These are cave temples, monoliths, structural temples and open bas-reliefs. They are scattered geographically, and there is a historical evolution with marked stylistic variations.

A proper, patient study would take at least three days, one day each for the caves, the monoliths and the structural temples (reliefs are a feature of all of the above).

As preparation for the seminar, the participants must have at least a brief knowledge of :
  • Early Tamil history
  • The Pallava dynasty, especially from Mahendra Varma to Rajasimha
  • The evolution of temple architecture
  • Bilingual nature of Tamil country
  • The invention and use of Pallava grantha
  • Abandonment and burial of monuments and rediscovery by Europeans
  • Some elements of archaeology
  • The neighbours of Pallavas – the Pandyas and the Chalukyas
  • Influence of Pallava art and architecture on India and South Asia
  • Successors of the Pallavas – Cholas, Pandyas, Vijayanagara and Nayaks – and their contributions.
  • A brief overview of Hindu mythology, especially of characters featured in Mallai sculpture
  • Mallai as a port
Balaji Dandapani, Umapathy sthapathi, Prof Swaminathan, Gopu, Prof Baluswami, Ashok Krishnaswami, R Chandrasekhar - at Great Himalayan Panel, Mamallapuram
This is a link to Prof Swaminathan's Powerpoint on Mallai.

PS: 1. Mr KRA Narasiah believes Mallai could not have been a port, because it is not a river mouth and it is too rocky for ships.
2. We only had lectures on five of the above topics.
3. Ajanta/Ellora was next, I will post my essay on that next.
4. Please remember, all this happened in 2009/2010. Our current plan is to visit Gujarat for a site seminar in January 2014

Tuesday, 27 August 2013

More grantha from Kanchi Kailasanatha temple


Some more birudas (titles) of RajaSimha Pallava at Kanchi Kailasanatha temple. (Thanks Vijay Kumar and Gift Siromoney).

காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள ராஜஸிம்ம பல்லவனின் சில விருதுகள்

श्री अजय्यः श्री गुणविनीतः श्री अवनिदिवाकरः श्री कलंकरहितः श्री कालसमुद्रः श्री आहवधीरः श्री कालकोपः
ஸ்ரீ அஜய்ய: ஸ்ரீ குணவினீத: ஸ்ரீ அவனிதிவாகர: ஸ்ரீ கலங்கரஹித: ஸ்ரீ காலஸமுத்ர: ஸ்ரீ ஆஹவதீர: ஸ்ரீ காலகோப:
sri ajayyaH sri guNavinItaH sri avanidivaakaraH sri kalankarahitaH sri kalaasamurdraH sri aahavadheeraH sri kaalakopaH

Thursday, 15 August 2013

“காணாமல் போன” திரிபுராந்தகீசுவரர் கோவில்

காஞ்சிபுரத்தில் பல கோவில்கள் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களாலோ, அடுத்த சிலநூற்றண்டில் விஜயநகர் மன்னர்களாலோ நாயக்கர்களாலோ கட்டப்பட்டவை. முற்காலத்து செங்கல் கோயிலகளை கற்றளியாய் (கருங்கல் கோயில்களாய்) இம்மன்னர்கள் மாற்றியுள்ளனர். ஆனால் சில 8,9ஆம் நூற்றாண்டு பல்லவ கோவில்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் ராபர்ட் ஸிவெல் என்ற கலெக்டரால் பாழடைந்த நிலையில் இருந்து மீட்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரியா எழுதிய “பல்லவ கட்டடக்கலை” என்ற புத்தகத்தில் இவற்றின் புகைப்படங்களும், சிற்பங்களின் ஓவியங்களும், கோவில் வரைபடங்களும் உள்ளன. நான் பலமுறை இக்கோவில்களுக்கு சென்றுள்ளேன். ஒரு முறை நண்பர் அரவிந்த் வெங்கட்ராமனுடன் சென்று, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், பூட்டியக்கோவில்களை திறக்க, பிறவாதீசுவரர், ஐராவதேசுவரர், முக்தேசுவரர் ஆகிய பல்லவ கோவில்களையும் கண்டேன்.

ரியா புத்தகத்தில் “திரிபுராந்தகீசுவரர் கோவிலை” குறிப்பிட்டு ஆறு ஓவியங்களும் ஒரு புகைப்படமும் தந்துள்ளார். அந்த கோவில் “கச்சப்பேசுவரர் கோவிலிற்கும் பெரிய சிவன் கோவிலிற்கும் (அதாவது ஏகாமரேசுவரர்)” நடுவில் உள்ளதாக குறிப்புள்ளது. ஆனால் திரிபுராந்தகீசுவரர் கோவிலை ஊர் மக்களுக்கும் தெரியாது; சில தொல்லியல் துறையினருக்கும் தெரியவில்லை. அப்பெயரில் ரியா குறிக்கும் தெருக்களில் அப்படி ஒரு கோவிலும் இல்லை. அமரீசுரர், ஜ்வரஹரேசுரர், தான் தோன்றீசுரர் ஆகிய சில சிவன் கோவில்களும், சில முருகன் கோவில், அம்மன் கோவில் போன்றவையும் உள்ளன. இவை எவற்றிலும், அலெக்ஸாண்டர் ரியா புத்தகத்தில் உள்ள சிற்பங்கள் இல்லை.

ஆகஸ்டு 5ஆம் நாள், கச்சப்பேசுரர் தொடங்கி இத்தெருக்களில் அலைய, அமரேசுரர் கோவிலை கண்டேன். இதற்குமுன், உபதலைவர் பரமசிவம் தெருவில் வாசற்கதவு மூடப்பட்ட கோவிலை கண்டு அதுவாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. சுவரை எட்டிபார்த்தால், உடற்பயிற்சி கருவிகள் கோவில் வளாகத்தில் தெரிந்தன, ஆனால் கோவில் சுவர் தெரியவில்லை. இந்த சிறுவீதியில் பல்லவரின் கோவில் இருக்காது என்று எண்ணி மேலும் கீழும் நடக்க, அமரேச்சுரர் கோவில் அடைந்தேன். வாசல் பூட்டியிருந்தது. ஆனால் கோவிலின் வடக்கு சுவரை கம்பிக்கதவு வழியாய் பார்த்தேன். கீழேயுள்ள ரியாவின் வரைப்படத்துடன் ஒப்பிட்டபொழுது, சுவரில்லுள்ள சிற்பங்கள் எல்லாம் அழிந்துவிட்டாலும், விமானம், கோஷ்டம், ஒரத்து யாளிகள், நந்தி மண்டபம், பலிபீடம் இது தான் காணாமல் போன திரிபுராந்தகீசுவரர் என்று எனக்கு தோன்றியது. புகைப்படங்களை கீழே ஆங்கிலப்பதிவில் காணவும்.   கோவில் மூடியிருந்ததால் பின்சுவரையும், தென்சுவரையும் பார்க்கவில்லை, படமெடுக்கவில்லை.

துக்காச்சிக்கோவிலில் சோழர் ஓவியத்தை கண்டுபிடித்த நண்பர் விசுவநாதனுக்கு, படங்களை காட்டினேன். பலமுறை பார்த்தபின் அவரும் அமரேசுவரர் கோவில் தான் திரிபுராந்தகீசுவரர் கோவில் என்ற கருத்தை ஏற்று, இதை வலையில் உடனே பதிவு செய்யச் சொன்னார். மணற்கல்லில் இல்லாமல் செங்கலில் இருப்பதால், தொல்லியல் துறை இதை தன் பாதுகாப்பின் கீழ் கொண்டு வராமல் இருக்கலாம் என்பது அவர் கருத்து.

சிற்பங்கள் சிதைந்தாலும், கோவிலின் அமைப்பு அற்புதம் - பல்லவர்காலத்து அழகு இன்றும் மிளிர்கிறது. அதையாவது, பாதுகாக்க வேண்டும்.