Showing posts with label குஜரத். Show all posts
Showing posts with label குஜரத். Show all posts

Friday, 3 July 2015

மசூதி பிரியர்

2006 ஆம் ஆண்டு அஜந்தா எல்லோரா சென்றபொழுது வாழ்வில் முதல்முறையாக பௌத்த சமண புராதான குகை கோயில்களை, விகாரங்களை கண்டேன். இவற்றில் பூசைகள் இல்லை, ஆனாலும் வெளிநாட்டு பிக்குகளும் மற்றசிலரும் அங்குள்ள புத்தசிலைகளை வணங்க கண்டேன். காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்பருத்திகுன்றத்து சமணக்கோவிலுக்கு 2005இல் சென்றிருந்தாலும், 2011ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஒரிசா மாநிலம் சென்றபோது, புவனேஷ்வர் நகரின் எல்லையில் உள்ள உதயகிரி மலையில் முதன் மதலில் பூசை நடக்கும் சமணக்கோயிலை பார்த்தேன். 

பௌத்த சமண ஆசிவக சீக்கிய கோயில்கள்

பிகார் சென்றபோது நாளந்தா, வைஷாலி, ராஜ்கிர், ஆகிய ஊர்களில் முதல்முதலாக பழம்பெரும் பௌத்த விகாரங்களை, அசோக தூண்களை, ஸ்தூபங்களை நேரில் கண்டேன். புத்தகயாவில் பூசை நடக்கும் பௌத்த கோவிலில் நுழைந்தேன். இந்தியாவிலேயே மிகவும் தொன்மையான கற்கோயிலாம் ஆசிவக முனிவர்கள் லோமாச ரிஷிக்கும், சுதாமா ரிஷிக்கும் மௌரியமன்னர்கள் எழுப்பிய கோயில்கள்களையும் முதலில் புத்தகயாவின் அருகிலுள்ள பராபர் மலைகளில் கண்டுமகிழ்ந்தேன். 

பட்ணா நகரில் கடைசி சீக்கிய குரு கோபிந்த்சிங் பிறப்பிடமான பட்ணா சாஹிப் குருத்வாராதான் நான் முதலில் உள்ளே சென்ற சீக்கியர்கோவில். தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஒரு சில சர்ச்சுகளுக்கு - கிறுத்துவ தேவாலயங்களுக்கு - சிறு வயதிலேயே சென்றுள்ளேன். 

ஆனால் 2014 ஆம் ஆண்டு வரை எந்த மசூதிக்கும் சென்றதில்லை.

குஜரத் மசூதிகள்

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் ஐந்தாம் கலை உலா பயணமாக குஜரத் மாநிலம் பலர் சென்றோம். சம்பானர் நகரில் முகமது பேகடா கட்டிய மசூதியையும், அகமதாபாத் நகரில் சார்கெஜ் ரோஃஸா மசூதியையும் குழுவாக சென்று பார்த்தோம். மசூதிகளையும் இஸ்லாமையும் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கலை உலா முடிந்து மற்றவர் சென்னை திரும்ப, நான் சில நாட்கள் தங்கி குஜரத்தின் வேறு இடங்களையும் கண்டேன். 2012இல் திருவரங்க கலை உலாவின் சகபயணியாக அறிமுகமாகிய ரவிசங்கருடன், அகமதாபாத் நகரில் தங்கி, நண்பர்கள் சிவா, பூஷாவலியுடன் அங்குள்ள தாதா ஹரிணி படிக்கிணறு, அதை ஒட்டிய ஒரு மசூதி, சிதி சயீது மசூதி ஆகியவற்றை சென்று அவர் விளக்க விளக்க செவிகொடுத்தேன். 
குஜரத் கலை உலா குழிவினர்

அன்று மாலை சிவா, பூஷா சென்னை திரும்பினர். அடுத்த நாள் நானும் ரவியும் தோல்கா நகருக்கு சென்று அங்கு சில மசூதிகளை கண்டோம்.

ரவிசங்கர் ஒரு மசூதிப்பிரியர். அரபு கலாச்சார ஆர்வலர். இஸ்லாமிய மதத்தின் தோற்றம், ஆரம்ப காலம், முதல் சில காலிஃப்களின் வரலாறு, அரபு பேரரசின் அசுர வளர்ச்சி, இந்தியாவை போர்களால் வென்ற திறம், இந்தியாவை ஆண்ட பல்வேறு முஸ்லிம் மன்னர் வம்சங்கள், அவர்களது வரலாறு என்று ஒரு பல்கலைகழகமாக விளங்குபவர். கிஷோர், கிருஷ்ணகுமார், ராம்கி ஆகிய கலை ஆர்வல நண்பர்களுடன் கூவம் நதிக்கரை கோயில்களை நாங்கள் காணச்செல்லும் போது, காரில் ஒரு பெரிய வகுப்பே நடத்திவிட்டார். மப்பேட்டில்லும் தக்கோலத்திலும் சிவன் கோவிலுக்குள் ”சிவாஹுஅக்பர்” என்று சொல்லாக்குறையாக நுழைந்தோம்.

அகமதாபாத் ஜம்மா மசூதி
அகமதாபாத் மசூதியின் டோம்

தோல்கா நகரில் முதலில் ஜும்மா மசூதிக்கு சென்றோம். அது மூடி இருந்தது. “ஜும்மா” என்பது வெள்ளிக்கிழமை போலும். வெள்ளி முஸ்லிம்களின் புனித நாள் என்பதால் எல்லா பெரிய ஊர்களிலும் ஒரு ஜும்மா மசூதி புகழ் பெற்றுள்ளது. ஒரு பெரியவர், ஏன் இங்கு வந்தீர்கள், உங்கள் கனவில் யாரவது வந்து இந்த மசூதியை பார்க்கச்சொன்னார்களா என்று கேட்டார். அவர் ஹிந்திமொழியில் பேசியதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

ஹிந்திமொழியில் எனக்கு இருபத்திமூன்றேமுக்கால் சொற்களே தெரியும்; இருபத்தி ஐந்து கற்றுக்கொண்டால் தில்லியில் அழைத்து கலைமாமணி பட்டம் கொடுத்துவிடுவார்களோ என்று அச்சம். அதனால் பத்திரிகைகாரர்கள் என்ன சீண்டினாலும் மயான மௌனம் காக்கும் மன்மோகன் சிங், நரேந்திர மோதி ஞானமார்கத்தில் மௌனம் காத்தேன்.

தோல்கா கான் மசூதி

ரவி சிரித்துவிட்டு காரில் ஏறிக்கொண்டு அவர் சொன்னதை விளக்கினார். மலவ் தலவ் ஏரிக்கு சென்று, அங்கே பாரம்பரிய துணித்துவைக்கும் காட்சிகளையும் ஓரிரு பாழடைந்த சிலைகளையும் பார்த்து, பின் கான் மசூதிக்கு சென்றோம். “நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பரங்கிமலைக்கு பக்கத்தில் உள்ள பாழடைந்த மண்டபதுக்கு வா,” என்று எம்ஜிஆர் படங்களில் நம்பியார் சொல்வாரல்லவா? அப்படிப்பட்ட ஆள்நடமாட்டமில்லாத ஒரு மண்டபத்தை உச்சிவெயில் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்தோம். மணி பத்து தான் இருக்கும் ஆனால் பன்னிரண்டு என்று சொன்னால் தான் நம்பியார் ஆத்மா சாந்தி அடையும்.

ரவி அசந்து விட்டார்! “இவ்வளவு பெரிய மசூதியா?” என்று அதிசயித்தார். “இந்த ஊரில் எதற்கு? மற்ற மசூதிகளை விட டோம் பிரம்மாண்டமாக இருக்கிறதே,” என்றார். “இது அகமது ஷாவிற்கோ, முகமது பேகடாவிற்கோ முக்கிய தலைநகர் அல்ல. அவர்கள தலா அகமதாபாதிலும் சம்பானரிலும் பெரிய ஜும்மா மசூதிகளை கட்டினர்.”


அவை இரண்டும் பெருங்கல் மசூதிகள். தோக்லாவில்லுள்ள கான் மசூதியோ செங்கல் கட்டுமானம். அகமாதபாது ஜும்மா மசூதியில் இன்றும் தொழுகின்றனர். சம்பானர் மசூதி மாமல்லபுரம், அஜந்தாவைப்போல் தொல்லியல்துறையின் பாதுகாப்பிலுள்ளது. நுழைவாயில் மண்டபங்கள் நல்ல நிலையில்லுள்ளன; சம்பானர் தோட்டங்கள் அழகாக இருந்தன; இரண்டிலும் கல்லில் செதுக்கிய ஜன்னலகளில் ஜாலி வேலை சிறப்பாக இருந்தது; பெரும் தூண்கள் உள்ளன. ஒரு பெரிய மத்திய டோமும், அதை சுற்றி பல சிறிய டோம்களும் உள்ளன. தொழுவோருக்கு சுத்தம் செய்து கொள்ள குளங்கள் உள்ளன (இதற்கு வாஃஸூ [wazoo] என்று பெயர் என்று நினைக்கிறேன்).



தோல்கா கான் மசூதியோ கேட்பாரற்று கிடந்தது. வாசலில் ஒரு கால்வாய் ஓடியது. சேதமடைந்த நுழைவாயில் மண்டபத்தில் எருமைகள். பெரிய புல்வெளி, ஆள்நடமாட்டமே இல்லை. தூண்கள் ஏதுமில்லை. பெரிய மத்திய டோம், சூழும் சிறு டோம் என்றில்லாமால், மூன்று மிக பிரம்மாண்டமான டோம்களே இருந்தன. இவற்றை கண்டு தான் ரவி மிகவும் வியந்தார். கட்டுமானத்திலும் காட்சியிலும் இவை பிரமிப்பூட்ட கூடியவை. மசூதியில் வாஃஸூ குளமில்லை; ஆனால் பின்னால் ஒரு மாபெரும் ஏரியே இருந்தது.

ரவிசங்கர், கான் மசூதி, கால்வாய்

தோல்கா நகர கான் மசூதி

மின்பார் மெஹ்ரப்

கான் மசூதியின் செங்கல் வட்ட விமானம் Brick dome

கான் மசூதி பின்னால் ஏரி


கண்ணுயரத்தில் கழுகு


கங்கைகொண்டசோழபுரம், விஜயநகரம், தோளவீரா போல், கான் மசூதி ஏதோ வரலாற்றின் மறக்கப்பட்ட பேரரசின் சின்னமாக தனிமையில் வெறுமையில் நின்றது. இஸ்லாமிய ஆட்சி காலத்தில் தோல்காவின் முக்கியத்துவம் என்ன என்று தெரியவில்லை. குஜரத்தை சளுக்கியர்கள் (குஜரத்தி மொழியில் “சோலாங்கி” என்று இந்த வம்சத்துக்கு பெயர்) அன்ஹில்வார் பாடணத்தை தலைநகராக கொண்டு ஆண்டபோது குறுநில மன்னர் குலமான வாகேலா வம்சத்தின் தலைநகரம் தோல்கா. பின்னர் சோலாங்கி வம்சம் சரிந்து வாகேலா வம்சம் பாடணத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தது. முகமது பேகடா 
சம்பானரிலிருந்து ஆட்சி செய்தார்; அகமது ஷா அகமதாபாதை தலைநகரமாக நிறுவினார். குஜரத்தை ஆண்ட மன்னர் குலங்களின் காலவரிசையையும், தமிழகத்தோடு ஒப்பிட்டு இங்கு காணலாம்.

ஜன்னல் சித்திரங்கள்

இரு பக்கத்திலும் இரு மினரெட்டுகள். சுவர்களில் சுதையிலேயே அங்குமிங்கும் அழகான அரபு எழுத்துக்கள், வளைவு வடிவங்கள். மசூதிகளில் உயிரினங்களை சித்தரிக்கக்கூடாது என்பது இஸ்லாமிய கொள்கையாம். செடிகொடிகள் மலர்கள் கூட சித்தரிக்க படமாட்டா. ஆனால் குரானிலுள்ள பாடல்களை அரபு மொழியில் அலங்கார எழுத்தாக வடிப்பது வழக்கமாம். அகமதாபாதில் மசூதி சுவர்களில் சாயத்தில் தீட்டியுள்ளனர். கான் மசூதியில் சுதையிலேயே செதுக்கியுள்ளனர். ஜன்னல்களில் சதுரம், வட்டம், முக்கோணம், பலக்கோணம் என்ற பல்வேறு கோலவடிவங்களை காணலாம். அங்குமிங்கும் வளைவது சில நேரங்களில் நமக்கு கொடிகளை போல் தோன்றும். சிதி சயீது மசூதியின் ஜன்னலிலும் சம்பானர் ஜன்னலிலும் உள்ள வளைவுகள் இதில் அவ்வகை சார்ந்தவை. 

இயற்கையாகவே செடிகொடிகளிலும் இலைகளிலும் இது போன்று சில வளைவுகள் 
அமைவதுண்டு.
சிதி சயீது ஜன்னல் அலங்காரம்

கான் மசூதி ஜன்னல் வடிவங்கள்

அகமதாபாத் ஜம்மா மசூதி சுவரில் வடிவம்

சம்பானர் மசூதியின் அழகிய மினரட்டும் பல டோம்களும்

சம்பானரில் கலை நுணுக்கம்

பேராசிரியர் சுவாமிநாதன் எழுத்துவடிவங்களை விவரித்த உரைத்தொடரில், தன் கல்லூரி நாட்களில் இஷ்டம் போல் அரபு எழுத்தின் தோற்றத்தில் ஏதோ கிறுக்கி விளையாட்டாக தன் முஸ்லிம் நண்பரிடம் காட்டி படிக்க சொன்னதை நினைவூட்டினார். நண்பர் படித்துவிட்டார்!! சுவாமிநாதன் மிரண்டுவிட்டார்! அரபு மொழியின் வடிவ எளிமையை புரியவைக்க அவர் சொன்ன சம்பவம் இது.

அகமதாபதில் சுவரி அரபு எழுத்து

சுதையில் அரபு எழுத்தும் கோலமும்

ஓரிரு காதல் ஜோடிகள் கல்லூரியை விட்டு அங்கே வந்தனர். செல்கேமராக்களில் தங்களை படமெடுத்துக்கொள்ள, நானும் ரவியும் கான் மசூதியில் மேலே ஏறினோம். தாதா ஹரிணி கிணற்றருகே உள்ள மசூதி டோம் இருகரம் நீட்டும் அகலம் இருந்தது. கான் மசூதி டோம் எத்தனை அகலம் என்று கீழே படத்தில் காணலாம். மிகவும் அமைதியான இடம். மினரட்டில் ஏறும் போது, கழுகு, கிளி, புறா, கொக்கு என பல பறவைகள் பறக்கும் காட்சியை கண்ணுயரத்தில் பார்த்தேன்! 

விஷ்ராந்தியாக ஒரு மணிநேரம் படமெடுத்தும் பறவைகளை ரசித்தும் அமைதி அனுபவித்தபின், தோல்கா நகரில்லுள்ள பஞ்ச பாண்டவர் மசூதிக்கு சென்றோம்.
தாதா ஹரிணி மசூதி டோம்

கான் மசூதி டோம்

பஞ்ச பாண்டவருக்கும் எப்பொழுது மசூதி கட்டினார்கள்? அதன் உண்மையான பெயர் பஹேலோல்கான் காஃஸி மசூதி. எனக்கு புரிந்த வரை அருகில் பாண்டவர் பள்ளிக்கூடம் ஒன்றுள்ளது. எழும்பூர் என்ற சொல் வாயில் நுழையாமல் அதை எக்மோர் என உச்சரித்த ஆங்கிலேயரை போல் பஹேலோல்கான் என்ற சொல் வாயில் நுழையாமல் அதை பஞ்ச பாண்டவர் மசூதி என்று ஊர்மக்கள் பட்டம் அளித்துள்ளனர்.

பஹேலோல்கான் காஃஸி மசூதி

தாராசுரத்தில் கற்களை வளைவாக வெட்டி சக்கரத்தை அமைத்ததை போல், இங்கே கற்களை வளைவாக வெட்டி டோம் அமைத்துள்ளனர். கொடும்பாளூர் மூவர் கோவில், தஞ்சை பெரிய கோயில்களில் சதுரத்தின் மேல் சதுரமாக விமானம் எழுப்பியதை போல் வட்டத்துக்கு மேல் வட்டமாக மசூதிகளில் டோம் எழுப்பியுள்ளனர். டோம் என்ற சொல்லை வட்ட விமானம் என்று சொல்லலாம்.


தூண்களும், மிகவும் துல்லியமாக நுணுக்கமாக, மூங்கில் காடு போல் காணபெற்றது. கதவின் மேல் கல்லில் தோரணம் அருமை. கான் மசூதி பெருந்தோற்ற பெருன்காவியம் எனில், பஹேலோல்கான் மசூதி கலைநுணுக்க சிறுகவிதை. மாடத்தில் ஓரத்து சிறு மண்டபங்கள் தனி அழகு அனைத்தையும் மிஞ்சியது அங்குள்ள மினரட்டின் அழகு – படத்தில் காணலாம், சொற்கள் போதாது.

மசூதிக்குள்ளே ஒருவர் நுழைய நாங்களும் பின்னே சென்றோம். ஒரு பெரியவர் குரானை பிரித்து வைத்துக்கொண்டு அதில் ஏதோ படித்தார். ரவி கேட்டபொழுது அந்நூலின் அமைப்பை விளக்கினார். நடுவில் அரபு மொழியில் குரான் எழுதியிருந்தது. அதை சுற்றி வேறு லிபியில் – இங்கே குஜராதி லிபியில் – அரபு சொற்களும், அம்மொழியில் பாடலின் பொருளும் எழுதப்பட்டிருக்குமாம். அவர் ஹிந்தியில் பேச, ரவி மொழிபெயர்த்தார். ஒரு தூணில் தொழுகை நேரங்களையும் குறித்துள்ளனர்.

பாஹ்லேல்கான் காஃஸீ மசூதி


வளைவு கற்களில் வட்ட விமானம் 

மூங்கிலை ஒத்த தூண்கள்


மினரெட் அழகு

அரபு குஜரதி லிபியில் குரான் 
பெரியவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஒட்டக அன்னை கோவிலுக்கு சென்றோம் – படிக்கிணறுகளை காண. மசூதிபிரியர் ரவியின் மற்றொரு கட்டுமான காதலி. குஜரத கலை உலா செல்லுமுன் அம்மாநில படிக்கிணறுகளை பற்றி ஒரு விரிவான வரலாற்று உரையை அவர் நடத்தினார்.

இந்த சனிக்கிழமை மசூதிகளை பற்றி டக்கர் பாபா பள்ளியில் பேசுவார். எல்லீரும் வாரீர்.

தொடர்புடைய கட்டுரைகள் 

5. Vaishali - the city that dazzled Buddha

Wednesday, 8 April 2015

ளகர ரகளை - மராட்டி குஜராதி ல ள

புசாவள் ரயில் நிலையம்

குஜரத் செல்லும் போது நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்வண்டி புசாவள் என்ற ஊரில் நின்றது. அப்பொழுது, ரயில் நிலையத்தில் மேலுள்ள படம் எடுத்துக்கொண்டேன்.

ரயில் பலகையில் ஊர் பெயர் ஹிந்தி மொழியில் இருமுறை எழுதியுள்ளது போல் தெரியும். ஆனால் கடைசி எழுத்தில் வித்தியாசம் காணலாம். மேலே பெரிய எழுத்தில் புசாவள் भुसाव என்றும், கீழே சின்ன எழுத்தில் புசாவல் भुसाव என்றும் ஊள்ளன. மேலே இருப்பது மராட்டி, கீழே இருப்பதுதான் ஹிந்தி மொழி. இரண்டு மொழிகளுக்கும் தேவநாகரியே லிபி.
மராட்டி (மராத்தி அல்ல) மொழியில் ல, ள இரண்டும் உள்ளன. பொதுவாக ஸமஸ்கிருதம் வழி வந்த ஆரிய மொழிகளில் ல என்ற மட்டுமே உள்ளது. திராவிட மொழிகளில் ல, ள இரண்டும், தமிழிலும் மலையாளத்திலும் ழகரமும் உள்ளன.

தமிழில் நாம ளகரத்தில் சரளமாக சொல்லும் பல ஸமஸ்கிருத மரபு சொற்களை, ஆரிய மொழிகளில் லகரத்தில் தான் சொல்லுவர். “காளி” தேவி ஒரு எடுத்துக்காட்டு. அவளை “காலி” என்றே வடக்கிந்தியாவில் அழைப்பர். லிபியில் கூட ल மட்டுமே உண்டு.

ஆனால் மராட்டி மொழியில் ளகரத்திற்கு லிபியில் தனி எழுத்துள்ளது – ळ. ஹிந்தி மக்கள் லகரமாய் சொல்லும் பல சொற்களை மராட்டியில் இயல்பாக ளகரமாய் உச்சரிப்பதுண்டு. ஒரு சில மராட்டிய சொற்களை பார்த்தால் ளகர ரகளை செய்து ஹிந்திக்காரரை வஞ்சிக்கின்றனரொ மராட்டியர் என்று எண்ணத்தோன்றும். இல்லையேல் கோகுல் गोकु தன் பெயரை கோகுள் गोकु என்று ஏன் எழுதவேண்டும்? இதை பஹூர் பஸ்நிலைய பலகையில் நிதி கொடுத்தோர் பட்டியல் பலகையில் பார்த்தேன்!

கோகுல் गोकु ஏன் கோகுள் गोकु ஆனார்?
அங்குள்ள தமிழருக்கு இது பழகியிருக்கும். 2011இல் அஜந்தா எல்லோரா கலை உலா சென்ற போது புசாவளில் ரயில் இறங்கி, ஔரங்காபாதிற்கு பஸ் ஏறி நால்வர் சென்றோம். பஸ் பலகையில் சிள்ளோட் (சில்லோட் அல்ல) என்ற ஊர் பெயரை பார்த்தேன். அதேபோல் ஜள்காவோன் (ஜல்காவோன் அல்ல) என்று ஒரு ஊர். ஸம்ஸ்கிருதத்தில் ஒரே ஒரு ரிக் வேத ஸ்லோகத்தில் இந்த ளகரம் இருப்பதாகவும் (அக்னிமீளே புரோஹிதம் என்று தொடங்கும் ஸ்லோகம்), மராட்டியில் ள பரவலாக உண்டு என்பதும் ஆசான் நகுபோலியன் பாடம் நடத்தும் நேரம் அடிக்கடி கூறுவார்.
मळवली மளவலீ - லள இரண்டும் பெயரில் உள்ள ஊர்
மராட்டி மொழி இப்படியென்றால், குஜராதி மொழியிலும் ளகரம் உள்ளது. குஜராதி மொழியும் ஆரிய மொழி ஆனால் அதற்கு குஜரதி லிபி இருப்பதால், தேவநாகரியில் எழுதுவதில்லை. குஜராதி மொழியோ லிபியோ எனக்கு தெரியாது ஆனாலும், நான் அங்கிருந்த பத்து நாட்களில் அவ்வப்பொழுது பலகைகளை பார்த்து படிப்பதுண்டு. ஆங்கிலத்தோடும் ஹிந்தியோடும் ஒப்பிட்டால் எளிதாய் புரிந்துவிடும். தேவநாகரி லிபியின் வழித்தோன்றலே குஜராதி லிபி. தோல்கா என்ற நகருக்கு நண்பர் ரவிசங்கருடன் சென்ற போது, ஒரு மசூதி சுவரில் தோல்கா દૉલ્કા என்றும் பஸ்நிலையத்தில் தோள்கா દૉળ્કા என்றும் எழுதியிருந்ததை பார்த்தேன். લ ળ குஜராதியில் ல ள.

மசூதி சுவரில் ”தோல்கா” દૉ કા

பஸ்நிலையத்தில் தோள்கா દૉ કા 

ஹிந்தி மராட்டி குஜராதி பெயர் பலகைகளை பற்றி தனியாக எழுதவேண்டும். அவற்றின் எழுத்துவித்தைகளை பாணினி பார்த்தால் புரண்டு புரண்டு அழுவார். அவர் தூதாண்டிகோல் கொடுக்க, தொல்கப்பியர் அகத்தியர் இந்திரர் காத்யாயனர் என்று இலக்கண நூலாசிரியரெல்லாம், வீரமாமுனிவரையும் மதச்சார்பின்மைக்கு சேர்த்துக்கொண்டு, மணிக்கொருவர் அழலாம்.

(இப்படி இந்திய மொழிகளை அவற்றின் தற்கால லிபியில் எழுதும் வசதி செய்து, அற்புதமாக என்.ஹெச்.எம் ரைட்டர் NHM Writer மென்பொருளை தயாரித்த கிழக்கு பதிப்பகத்திற்கும், அவர்களது மென்பொருள் பொறியாளருக்கும், நாத்திக பிரம்மா பத்ரி சேஷாத்ரிக்கும் மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்து).

பின் குறிப்பு 1

ரீச் நிறுவன பரிசு விழாவில் பரிசு பெற்ற கிரீத் மன்கொடியை, எனக்கு ரவிசங்கர் அறிமுகம் செய்தார். கோபு பல்லவ கிரந்தம் படிப்பார் என்று ஷாஷ்வத்தும் ஷியாமும் அவருக்கு சொன்னார். மன்கொடி என்னை பிராமி படிக்க சொன்னார். பிராமி படித்தால் எல்லா இந்திய லிபியும் எளிது என்றார். கற்கவேண்டும்.

பின் குறிப்பு 2

இன்று செய்தியில் மகாராஷ்டிரத்தில் இனிமேல் எல்லா சினிமா அரங்கிலும் ஒரு மராட்டி படம் நிச்சயம் திரையிடவேண்டும் என்று மாநில அரசு கட்டளை அலசப்பட்டது. எல்லா வடக்கிந்தியரையும் ஹிந்தி பித்தராய் ஹிந்தி அரக்கராய் நினைக்கும் சில தமிழருக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். சில வருடங்களுக்கு முன் ராஜ் தாக்கரே நடத்தும் மகாராஷ்டிர நவநிர்மண் சேனா கட்சியினர், பிஹாரிலிருந்து உத்திர பிரதேசத்திலிருந்தும் வேலைத்தேடி வந்தவரை, ஒழுக்கமில்லாதவர் என்று குற்றம் சாட்டி அவரவர் சொந்த மாநிலத்திற்கு விரட்ட முயன்றது நினைவிருக்கலாம். “வடக்கிந்தியரே வெளியேறு” என்ற தாக்கரே முழங்கினார். “ஓகோ நீங்கள் வடக்கிந்தியர் இல்லையா? அவர்கள்தான் வடக்கிந்தியாரா?” என்று தொலைகாட்சிகளில் தமிழர் பலர் வியந்ததும் குழம்பியதும் நினைவிருக்கலாம். இதை மும்பைவாழ் தமிழ் நண்பர் கணேஷிடம் சொன்னபோது அவர் தமிழரின் வியப்பை நினைத்து அதிர்ந்து போனார். ஒருகாலத்தில் தென்னிந்தியர் அனைவரையும் மதறாசி என்று வடக்கிந்தியர் அழைப்பதையும், நம்மில் ஹிந்தி தெரியாதவரை தேசதுரோகி போல் சிலர் நினைத்ததும் நடத்தியதும் 1990க்கு முன் பிறந்தவருக்கு நினைவிருக்கலாம்.
பயணம் தெளிவுக்கு ஒரு வழி.

தொடர்புடைய பதிவுகள்

1. தமிழில் பிற மொழி ஒலியும் எழுத்தும்
2. Caldwell on Dravidian and Munda languages
3. Deciphering grantha 

Thursday, 10 April 2014

Gujarat and Tamilnadu - Timelines of Political History

In preparation for the Gujarat site seminar for the Tamil Heritage Trust, I lectured on the political history of Gujarat from 3rd century BC to 13th century AD. I prepared a chart comparing the histories of Gujarat and Tamilnadu, as we consider them today. It is primarily a listing of the major dynasties that ruled, and some major invasions. But this and similar timelines may prove useful as reference frameworks.

Dynasty names like Maitraka and Chola are in black; the name of some king of each dynasty is in red; invader or battle name is in blue or green.

References
1. A History of Gujarat - From the earliest period to the Present time by Edalji Dosabhai, first published 1894, Asian Education Services reprint 1986.
2. A History of South India by Nilakanta Sastri, Oxford University Press.
3. A History of Gujarat - Including a survey of its Chief Architecturl Monuments and Inscriptions by Khan Bahadur, MS Commissariat, Longmans Green and Co., 1938.
4. Wikipedia articles on Rudradaman, Satavahanas, Kushanas, Indo-Scythians.




Sunday, 16 February 2014

A Dholavira Surprise

A wall at Dholavira
Dholavira is not as famous as Mohenjadaro or Harappa. But it is one of the largest cities of the Harappan civilization though not part of the Indus valley, it is in India rather than in Pakistan, it is well excavated and documented and worth viewing.


As part of our fifth Site Seminar, we visited the state of Gujarat, and Dholavira was one of the main attractions. We had three lectures in preparation –one by Badri Seshadri summarizing Michel Danino’s book on Sarasvati; one by TS Subramaniam of Frontline magazine who has written widely about it and showed some excellent photographs; and one on Harappan seals by Krishnakumar.

On the second day we visited Lothal – I’ll write about it later – the most famous sea-port of the Harappan civilization. We saw the standard sized bricks, the settlements, the large port and so on. A long strong desire fulfilled, a stroked curiosity somewhat satiated, several minor surprises.
Harbour at Lothal, made with bricks, not cut stone
Bricks at Lothal- not stones

But the major surprise was at Dholavira : not a single brick! Every reservoir or tank, every “house”, every well, the “Citadel”, the “Stadium” : every building in Dholavira was made out of cut stones. 

Cut stone at Dholavira
There seems no mention of it in the literature. The first thing we read about this massive civilization is its uniformity: uniform script, uniform roads, uniform houses, uniform drains, and most tellingly uniform bricks the uniform size in the ratio 1:2:4 height to width to length. And yet here was the largest site without a single brick, and the stones of all shapes and sizes.

Another cut stone at Dholavira - notice difference from previous one as measure by my finger
Crude stone wall at Dholavira - stones of varying sizes - contrast with first photo
Badri Seshadri, for one, shocked at this obvious neglect by scholars. Wikipedia mentions it, but in a passing line: a pity we never read it.  I thought he would have blogged about it, but since he hasn’t in two weeks, here goes.

The contrast with Lothal could not be more stark. Why was such a large harbor in Lothal made with so many bricks, when stones would have done just as well and would have been simpler, while heavy stones hauled up on the mounds and hills of Dholavira when it would have been easier to lift standard bricks?

Saturday, 8 February 2014

Chennai? China? Madras? Madrassa?

As part of Tamil Heritage Trust's fifth site seminar, I was one of 30 people who visited several sites in Gujarat recently. "Where are you from?" was a common question. At Sarkhej Roza mosque in Ahmedabad, a young boy asked this question. When my friend VSS Iyer replied "Chennai?", he asked "China?" "No, no, Chennai," his mother laughed "remember the Shah Rukh Khan movie Chennai express?" The boy only nodded vaguely.

At another place, an automobile museum on the outskirts of Ahmedabad, I was asked the same question. Not a boy, 25 years old, in a white uniform, in charge of showing the cars to the visitors. "Madras," I said. "Madrassa?" he asked - a madrassa is a Muslim school, often held in a mosque. "No, Chennai." No recognition. "Shah Rukh Khan, Chennai express?" I added, using a mother's trick. Continued cluelessness.

I said "Jayalalitha, Karunanidhi." No response. "Chennai Superkings? Dhoni?" Blank look. "Tamil Nadu?" Shake of the head. "Kanyakumari, Ramesvaram?" I asked in despair. Very slight nod, "Sunaa," he said, meaning "I think I have heard of those places."

He did not even know Rajini Kanth.

I must say, every other person who ever asked, even those who may have been illiterate, immediately recognized Chennai or Madras.

Mulla Mohammad ali Madrasvala

Almost as a counterpoint, we visited the house of a Bohra Muslim called Mulla Mohammadali Madrasvala in Siddhpur. His descendants -who live in Kotturpuram!- hosted us and let us roam about the place. He is called Madrasvala because in his time he spent most of his money in Madras/Chennai. Sidhdhpur is to Bohra muslims what Karaikkudi is to Chettinadu Nagaraththaars. Mr Taheri Danalivala, who gave us a presentation on Siddhpur and Bohra Muslims, and who himself is now a resident of Chennai, says that when he is called Madrasvala in Gujarat!